search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறப்பு காவல் ஆய்வாளர்"

    • தினமும் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எங்களது ஓட்டலில் உணவு சாப்பிட வருவது வழக்கம்.
    • சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காவேரி முத்தமிழை தகாத வார்த்தையால் பேசியதாக கூறப்படுகிறது.

    தருமபுரி:

    தருமபுரி நேதாஜி பைபாஸ் சாலையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு உள் நோயாளிகள், வெளி நோயாளிகள் என தினந்தோறும் 3000-க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இங்கு புறக்காவல் நிலையம் அமைந்துள்ளது.

    இந்த போலீஸ் நிலையத்தில் போலீசார் சுழற்சி முறையில் பணி செய்து வருகின்றனர். இந்த நிலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காவேரி தினமும் மருத்துவமனைக்கு எதிரே உள்ள ஓட்டலில் உணவு சாப்பிடுவது வழக்கம். அவ்வாறு சாப்பிடும் உணவிற்கு கையில் உள்ள பணத்தை கொடுத்துவிட்டு மீதியை பின்பு தருகிறேன் என கூறிவிட்டு சென்று விடுவார் என கூறப்படுகிறது.

    இதேபோன்று நேற்று சாப்பிட்ட உணவிற்கு பணம் கொடுக்காமல் பின்பு தருவதாக கூறி உள்ளார். அதேபோல் மாலை உணவு சாப்பிட வந்த காவேரி உணவை சாப்பிட்டுவிட்டு சென்றபோது கடை உரிமையாளர் முத்தமிழ் நேற்று சாப்பிட்ட உணவிற்கும் சேர்த்து பணம் கேட்டு உள்ளார். இதனால் கோபமடைந்த சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காவேரி முத்தமிழை தகாத வார்த்தையால் பேசியதாக கூறப்படுகிறது.

    மேலும் பணத்தை தூக்கி வீசிவிட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. மேலும் ஆத்திரமடைந்த சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காவேரி தனது காலில் அணிந்திருந்த ஷூவை கழற்றி அடிக்க சென்ற சி.சி.டி.வி. வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து கடை உரிமையாளரை தொடர்பு கொண்டு பேசியபோது அவர் கூறியதாவது:-

    தினமும் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எங்களது ஓட்டலில் உணவு சாப்பிட வருவது வழக்கம். இவர் உணவு சாப்பிட்டு விட்டு பாக்கி வைத்து விட்டு சென்று விடுவார். மேலும் சாப்பிட்ட உணவிற்கு முழு தொகையை தராமல் கையில் இருப்பதை மட்டும் கொடுத்துவிட்டு செல்வார்.

    நேற்று முன்தினம் சாப்பிட்ட உணவிற்கும் சேர்த்து பணம் கேட்டதற்காக தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து காலில் அணிந்திருந்த ஷூவை கழற்றி என்னை தாக்க வந்தார்.

    இது குறித்து தருமபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு அளிக்க உள்ளேன் என தெரிவித்தார்.

    இந்நிலையில் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஷூவை கழற்றி ஓட்டல் உரிமையாளரை தாக்க முயன்ற  சி.சி.டி.வி. காட்சி வெளியானதை அடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் உத்தரவின்பேரில் தருமபுரி உதவி போலீஸ் சூப்பிரண்டு சிவராமன் விசாரணை நடத்தினர்.

    சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காவேரியை பணியிடை நீக்கம் செய்து எஸ்பி மகேஸ்வரன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

    ×