search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கன்னட சினமா"

    • சுகந்த் ஷர்மா இன்ஸ்டாகிராமில் ஒரு டிராவல் விலாக்கர் ஆவார்.
    • அவரது சமீபத்திய வீடியோவில் பெங்களூருவை பற்றி கூறிய வார்த்தை சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

    சுகந்த் ஷர்மா இன்ஸ்டாகிராமில் ஒரு டிராவல் விலாக்கர் ஆவார். அவரது சமீபத்திய வீடியோவில் பெங்களூருவை பற்றி கூறிய வார்த்தை சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

    அவரது வீடியோவில் அவர் " வட இந்திய மக்களே பெங்களூரு ஊரை உருவாக்கினார்கள். இந்த ஊர் வட இந்தியாவில் இருந்து புலம் பெயர்ந்தவர்கள் இல்லையென்றால் பெங்களூரு மக்களால் வாழ முடியாது. வட இந்தியர்கள் பெங்களூருவை காலி செய்தால். என்ன நடக்கும் எப்படி பிஜி மற்றும் ஹாஸ்டல் ஓனர்ஸ் எப்படி பணம் சம்பாதிப்பார்கள். மது விடுதியில் யார் நடனம் ஆடுவார்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

    இந்த வீடியோ தற்பொழுது பேசும் பொருளாகியுள்ளது. இதனை கண்டித்து பல கன்னட திரையுலக நடிகர்கள் எதிர்த்து பதிவிட்டு வருகின்றனர். பிரபல நடிகை சைத்ரா ஆசார் " நீங்கள் தயவு செய்து போய்விடுங்கள் பெங்களூரு ஊரை விட்டு. எப்படி பெங்களூர் காலியாக இருக்கிறது நாங்கள் பார்க்க ஆசைப்படுகிறோம். நீங்கள் இல்லாமல் எங்களால் வாழ முடியும்." என கூறியுள்ளார்.

    நடிகை வர்ஷ பொல்லாம்மா " தயவு செய்து கிளம்புங்கள்" என பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கன்னட திரை உலகிலும் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக நடிகைகள் புகார்.
    • கன்னட திரை உலகிலும் பாலியல் புகார் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மலையாள திரை உலகில் பாலியல் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட நடிகைகள் பற்றி ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மலையாள திரை உலகை தொடர்ந்து தமிழ் திரை உலகிலும் பாலியல் தொந்தரவு நடந்ததாக சில நடிகைகள் கூறினர்.

    தமிழ், மலையாள சினிமாவை தொடர்ந்து கன்னட திரை உலகிலும் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக நடிகைகள் சஞ்சனா, நீது ஆகியோர் பரபரப்பு புகார் கொடுத்துள்ளனர்.

    கன்னட சினிமா உலகில் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது. இதுபற்றி கர்நாடக சினிமா வர்த்தக சபை கூட்டத்தில் தங்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் தொல்லை பற்றிய புகார்கள் குறித்து பேசவிடாமல் தடுத்துவிட்டனர்.

    இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

    இந்நிலையில் கர்நாடக முதல்மந்திரி சித்தராமையாவுக்கு கன்னட இயக்குனர் கவிதாலங்கேஷ் தலைமையிலான குழுவினர் சினிமா உலகில் பாலியல் தொல்லை பற்றி விசாரிக்க குழு அமைக்க வேண்டும் என கடிதம் அனுப்பினார். கன்னட திரை உலகிலும் பாலியல் புகார் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×