என் மலர்
நீங்கள் தேடியது "கார் தொழிற்சாலை"
- தமிழகத்தைப் புறக்கணித்து தெலுங்கானாவுக்கு சென்றிருப்பது கவலை அளிக்கிறது.
- முதலீடுகளை ஈர்க்கும் விஷயத்தில் தமிழ்நாடு எங்கு பின் தங்கியிருக்கிறது?
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சீனாவைச் சேர்ந்த மின் சார மகிழுந்து நிறுவனமான பி.ஒய்.டி ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டில் இந்தியாவில் அதன் முதலாவது மகிழுந்து உற்பத்தி ஆலையை தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் அமைக்க முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகி யுள்ளன.
தமிழ்நாட்டிற்கு இந்த மகிழுந்து ஆலையைக் கொண்டு வருவதற்கான அனைத்து வாய்ப்புகளும் இருந்தும் கூட, அந்த வாய்ப்புகளை தமிழக அரசு கோட்டை விட்டிருக்கிறது.
பி.ஒய்.டி மகிழுந்து ஆலையை தங்கள் மாநிலத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று தமிழ்நாடு, குஜராத், மராட்டியம், தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் போட்டியிட்டன.
இந்த மாநிலங்களில் தமிழ்நாட்டுக்குத் தான் அதிக வாய்ப்புகள் இருந்தன.
ஆசியாவின் டெட்ராய்ட் சென்னை தான் என்று தமிழக அரசு பெருமிதம் தெரிவித்து வரும் நிலையில், உலகின் மிகப்பெரிய மின்னனு வாகனங்கள் உற்பத்தி நிறுவனம் தமிழகத்தைப் புறக்கணித்து விட்டு தெலுங்கானாவுக்கு சென்றிருப்பது உண்மையாகவே கவலை அளிக்கிறது.
தமிழ்நாட்டிற்கான தொழில் முதலீடுகள் பிற மாநிலங்களுக்கு செல்வது ஏன்? தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விஷயத்தில் தமிழ்நாடு எங்கு பின் தங்கியிருக்கிறது? முதலீடுகளை ஈர்க்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன? என்பது குறித்தெல்லாம் தமிழக அரசு ஆராய வேண்டும். அதனடிப்படையில் தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்கான தமிழ்நாட்டின் திறனை அரசு அதிகரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- ராணிப்பேட்டை மாவட்டத்தின் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்.
- லேண்ட் ரோவர் மற்றும் ஜாகுவார் சொகுசு கார்களை தயாரிக்க ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொழி ற்சாலையை அமைக்கிறது.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் புதிய சிப்காட் தொழிற்பேட்டை 1231 ஏக்கர் பரப்பளவில் அமைகிறது.
தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை வகையான வாகன உற்பத்தி தொழிற்சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு அரசு மற்றும் டாடா மோட்டார்ஸ் குழுமத்திற்கும் இடையே ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி தாலுகா துறையூர், அகவலம், பெருவளையம் ,நெடும்புலி ஆகிய கிராமங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் சிப்காட் மூலம் நிலம் கையகப்படுத்தப்பட்டது.
இந்த தொழில் பூங்காவில் 470 ஏக்கர் பரப்பளவில் இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த 470 ஏக்கர் பரப்பில் ரூ.9000 கோடி முதலீட்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அமைகிறது.
புதியதாக அமைய உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவன கட்டுமான பணிக்கு இன்று அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு கார் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
புதியதாக அமைய உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மூலமாக 5 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாக 15 ஆயிரம் பேருக்கு என மொத்தம் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் ராணிப்பேட்டை மாவட்டத்தின் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ் தற்போது மக்களுக்கு பிடித்தமான கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில் லேண்ட் ரோவர் மற்றும் ஜாகுவார் சொகுசு கார்களை தயாரிக்க ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொழி ற்சாலையை அமைக்கிறது.
இங்கு எலக்ட்ரிக் சொகுசு கார்கள் தயாரிக்கப்பட உள்ளன.இந்த வகையான கார்களுக்கு உதிரி பாகங்கள் அனைத்தும் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்து இந்தியாவில் உள்ள தொழிற்சாலையில் தயார் செய்து விற்பனை செய்யப்பட்டு வந்தது.
தற்போது இங்கு அமைய உள்ள தொழிற்சாலையில் கார்களின் அனைத்து பாகங்களும் இங்கேயே தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. எலக்ட்ரிக் கார்கள் மட்டுமின்றி இங்கு பெட்ரோல் மற்றும் டீசல் கார்களும் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இங்கு தயாரிக்கப்படும் வாகனங்கள் உள்நாட்டில் விற்பனை செய்வதோடு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. இதற்கான தொழிற்சாலை கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு பணிகள் நிறைவு செய்யப்பட்டு விரைவாக தொழிற்சாலை செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் வேலைவாய்ப்புகள் உருவாக்குவதில் மட்டுமின்றி தொழில் வளர்ச்சியில் புதிய இலக்கை நோக்கி பயணத்தை தொடங்கி உள்ளதால் அனைத்து தரப்பினரிடமும் இந்த திட்டம் வரவேற்பை பெற்றுள்ளது.
அடிக்கல் நாட்டு விழாவில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி, தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மற்றும் எம். பி. எம். எல்.ஏ.க்கள், டாடா மோட்டார்ஸ் நிறுவனத் தலைவர் என்.சந்திரசேகரன், டாடா மோட்டார்ஸ் நிறுவன உயர் அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வருகையை யொட்டி வேலூர் சரக டிஐஜி தேவராணி தலைமையில் போலீஸ் சூப்பிரண்டுகள் கிரண் சுருதி, மதிவாணன், ஸ்ரேயா குப்தா ஆகியோர் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- தமிழகம் மீது டாடா வைத்துள்ள நம்பிக்கைக்கு பெருமிதம் கொள்கிறோம்.
- பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் தொழிற்பூங்காவில் டாடா கார் உற்பத்தி தொழிற்சாலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து அவர் பேசியதாவது:
* தொழில் நிறுவனத்தை விரிவுபடுத்தும் டாடாவின் பணியை பார்த்து மகிழ்ச்சியடைகிறோம்.
* டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மேம்பட்ட வாகன உற்பத்தி திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
* ரூ.9,000 கோடி முதலீட்டில் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் டாடா கார் உற்பத்தி தொழிற்சாலை அமைய உள்ளது.
* உலகின் மிகப்பெரிய நிறுவனங்களின் முதல் முகவரியாக தமிழ்நாடு திகழ்கிறது. இந்திய நிறுவனங்களுக்கும் தமிழகம் தான் முதல் முகவரியாக உள்ளது.
* தமிழகம் மீது டாடா வைத்துள்ள நம்பிக்கைக்கு பெருமிதம் கொள்கிறோம்.
* தமிழகத்தில் தொழில் நிறுவனங்களை மேம்படுத்தும்போது உங்களுடன் சேர்ந்து நாங்களும் பெருமைபடுகிறோம்.
* இந்தியாவின் தொழில் நிறுவனங்களில் முக்கியமான டாடா நிறுவனம் உலகளவில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்படுகிறது.
* டாடா நிறுவனத்திற்கும் தமிழகத்திற்கும் பல ஆண்டு கால தொடர்பு உள்ளது.
* உலகளவில் செயல்படும் டாடா நிறுவனம் தமிழகத்தின் ராணிப்பேட்டையில் அமைவது கூடுதல் மகிழ்ச்சி.
* பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
* எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது என்று கூறினார்.
- ராணிப்பேட்டையில் இடம் தேர்வு செய்யப்பட்டு 190 ஹெக்டேர் பரப்பளவில் தொழிற்சாலையை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- இந்த ஆலைக்கு செப்டம்பர் 28-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி இருந்தார்.
சென்னை:
இந்தியாவில் பிரீமியம் வகை கார்கள் பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படும் நிலையில், தமிழ்நாட்டிலேயே ஜாகுவார் லேண்ட்ரோவர் காரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளது. இதற்காக ராணிப்பேட்டையில் இடம் தேர்வு செய்யப்பட்டு 190 ஹெக்டேர் பரப்பளவில் தொழிற்சாலையை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக ராணிப்பேட்டையில் உள்ள பணப்பாக்கம் சிப்காட் தொழில் பூங்காலில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 5 ஆண்டுகளில் ரூ.9 ஆயிரம் கோடி முதலீடு மற்றும் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் கார் தொழிற்சாலையை அமைக்க ஏற்கனவே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இப்போது முதல்கட்டமாக ரூ.914 கோடியில் தொழிற்சாலைக்கான கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு ஜாகுவார் லேண்ட்ரோவர் வகை கார்களை உற்பத்தி செய்வதற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த ஆலைக்கு செப்டம்பர் 28-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி இருந்தார்.
இதைத் தொடர்ந்து கட்டுமான பணிகளை மேற்கொள்ள சுற்றுச்சூழல் அனுமதி கோரி டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
இந்த ஆலையில் முதல் கட்டமாக 1650 பேர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.