என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கார் ரேஸ் பந்தயம்"

    • நடிப்பு மட்டுமில்லாமல் ரேசிங்கிலும் தரிப்பது அஜித் கவனம் செலுத்தி வருகிறார்.
    • ஆத்விக்கிற்கு அஜித் கார் ரேஸ் பயிற்சி அளித்து வரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

    தமிழின் முன்னணி நடிகரான அஜித் குமார் கலைத்துறையில் ஆற்றிய சேவையை பாராட்டி அவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.

    ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவாஜி கணேசன், விஜயகாந்த் ஆகியோருக்கு அடுத்தபடியாக பத்ம விருது பெறும் தமிழ் நடிகர் என்கிற பெருமையை அஜித்குமார் பெற்றுள்ளார்.

    நடிப்பு மட்டுமில்லாமல் ரேசிங்கிலும் தரிப்பது அஜித் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், பிரபல கார் ரேஸர் நரேன் கார்திகேயனிடம் அஜித்குமாரின் மகன் ஆத்விக் பேசும் புகைப்படம் அஜித்குமார் ரேஸிங் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    ஆத்விக் குட்டி ரேஸ் காரில் அமர்ந்திருக்க அவருக்கு பக்கத்தில் அஜித்குமார், ஷாலினி இருக்கும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. ஆத்விக்கிற்கு அஜித் கார் ரேஸ் பயிற்சி அளித்து வரும் இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

    • துபாய் மற்றும் இத்தாலியில் நடைபெற்ற போட்டியில் அஜித்குமார் அணி 3-வது இடத்தை பிடித்திருந்தது.
    • உங்களின் ஆதரவின்றி ஜிடி4 ரேஸில் வென்றிருக்க முடியாது.

    தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாகவும் கார் ரேஸராகவும் அஜித்குமார் வலம் வருகிறார். சமீபத்தில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், அஜித் நடிப்பில் உருவான குட் பேட் அக்லி படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கி கார் ரேஸில் அஜித் கவனம் செலுத்தி வந்தார். அதன் காரணமாக பெல்ஜியமில் நடைபெற்ற போட்டியில் அஜித்குமார் ரேஸிங் அணி 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்தது.

    இந்நிலையில் இது குறித்து நடிகர் அஜித் கூறியதாவது:- ரேஸிங் பயிற்சி முதல் வெற்றி வரை உங்களின் ஆதரவின்றி ஜிடி4 ரேஸில் வென்றிருக்க முடியாது. இதனை சாத்தியமாக்கிய அனைவருக்கும் நன்றி என அஜித் கூறினார்.

    ஏற்கனவே துபாயில் நடைபெற்ற போட்டியிலும் இத்தாலியில் நடைபெற்ற போட்டியிலும் 3-வது இடத்தை அஜித்குமார் கார் ரேஸிங் அணி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • GBU படத்தை ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நடிகர் அஜித் குமார் அடுத்த கார் ரேசில் கலக்கி உள்ளார்.
    • ரேசிற்கு தயாராகும் வீடியோவையும் இணையத்தில் அஜித்தின் நிறுவனம் வெளியிட்டிருந்தது.

    ஜிடி 4 ஐரோப்பிய கார் பந்தயத்தில் பெல்ஜியமில் நடைபெற்ற ரேஸில் நடிகர் அஜித் குமாரின் அணி 2வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது.

    குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நடிகர் அஜித் குமார் அடுத்த கார் ரேசில் கலக்கி உள்ளார்.

    முன்னதாக, அஜித் ஜிடி4 யூரோபியன் சீரிஸ் கார் பந்தயத்தில் கலந்துக் கொள்ளவுள்ளதாகவும், இதுதொடர்பாக அவர் ரேசிற்கு தயாராகும் வீடியோவையும் இணையத்தில் அஜித்தின் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    அந்த வீடியோவில் அஜித் காரை சுற்றி பார்த்து அதில் உள்ள விஷயங்களை பார்க்குமாறு அந்த வீடியோ இடம்பெற்றிருந்தது.

    இந்நிலையில், ஜிடி 4 ஐரோப்பிய கார் பந்தயத்தில் அஜித்தின் அணி 2வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • 'குட் பேட் அக்லி' இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
    • நடிகர் அஜித் குமார் அடுத்த கார் ரேசிற்கு தயாராகி வருகிறார்.

    ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அஜித் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

    இதனிடையே, அஜித்துடன் நடித்தது குறித்து அவருடன் பணியாற்றிய நடிகர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். அஜித்துடன் மீண்டும் பணியாற்ற விரும்புவதாக நடிகர் அர்ஜுன் தாஸ் தெரிவித்து இருந்தார். மேலும் படத்தில் நடித்த அனுபவத்தை நடிகர் பிரசன்னாவும் பகிர்ந்து இருந்தார். ஆதிக் ரவிச்சந்திரன் முழுக்க முழுக்க ஒரு ஃபேன் பாய் சம்பவமாக படத்தை உருவாக்கியுள்ளார்.

    திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நடிகர் அஜித் குமார் அடுத்த கார் ரேசிற்கு தயாராகி வருகிறார். அவர் தற்பொழுது ஜிடி4 யூரோபியன் சீரிஸ் கார் பந்தயத்தில் கலந்துக் கொள்ளவுள்ளார். இவர் ரேசிற்கு தயாராகும் வீடியோவை இணையத்தில் அஜித்தின் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் அஜித் காரை சுற்றி பார்த்து அதில் உள்ள விஷயங்களை பார்க்குமாறு அந்த வீடியோ இடம்பெற்றுள்ளது.

    • சென்னையில் உள்ள கோ கார்ட் சர்க்யூட்டில் அஜித்தின் மகன் கார் ரேஸில் பயிற்சி பெற்றார்.
    • குடும்பத்தினருடன் சென்று நடிகர் அஜித் மகனை உற்சாகப்படுத்தினார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் அஜித்குமார், நடிப்பை தொடர்ந்து கார் பந்தயத்திலம் அசத்தி வருகிறார்.

    இந்த ஆண்டு தொடக்கத்தில் துபாயில் நடந்த கார் பந்தய போட்டியில் அவரது அணி 3-ம் இடம் பிடித்து அசத்தியது.

    அதேவேளை கலைத்துறையில் ஆற்றி வரும் சிறந்த பங்களிப்புக்காக அஜித்குமாருக்கு, மத்திய அரசு பத்மபூஷண் விருது அறிவித்தது. கார் பந்தயங்களை முடித்துக்கொண்டு, அஜித் சென்னை திரும்பியுள்ளார்.

    இந்நிலையில், தந்தை வழியில் கார் ரேஸில் நடிகர் அஜித்தின் மகன் ஆத்விக் களமிறங்கியுள்ளார்.

    சென்னையில் உள்ள கோ கார்ட் சர்க்யூட்டில் அஜித்தின் மகன் கார் ரேஸில் பயிற்சி பெற்றார்.

    குடும்பத்தினருடன் சென்று நடிகர் அஜித் மகனை உற்சாகப்படுத்தினார்.

    • 60 வயதான கீனு ரீவ்ஸ் முதல் முறையாக தொழில்முறை கார் பந்தயத்தில் பங்கேற்றுள்ளார்.
    • கார் பந்தயத்தில் 25 ஆவது இடம் பிடித்த கீனு ரீவ்ஸ் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

    மேட்ரிக்ஸ், ஜான்விக் போன்ற படங்களில் நடித்து உலக புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் கீனு ரீவ்ஸ் இண்டியானாபோலிஸ் மோட்டார் ஸ்பீட்வேயில், டொயோட்டா ஜிஆர் கோப்பையில் பங்கேற்றார். இதன்மூலம் தொழில்முறை கார் பந்தயத்தில் அவர் அறிமுகமானார்.

    60 வயதான கீனு ரீவ்ஸ் பந்தயத்தின் 45 ஆவது நிமிடத்தில் ரேஸ் தடத்திலிருந்து வெளியேறி புல் தரைக்குள் சென்றார். பின்னர் சுதாரித்து கொண்டு மீண்டும் ரேஸ் தடத்திற்குள் நுழைந்தார். இதனால் அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.

    35 போட்டியாளர்களின் முதல் 31 இடங்களை பிடிக்கும் போட்டியாளர்கள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவர். அவ்வகையில் இப்போட்டியில் 25 ஆவது இடம் பிடித்த கீனு ரீவ்ஸ் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

    • வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
    • கார் ரேஸ் தொடர் நடைபெறாத மாதங்களான அக்டோபர் முதல் மார்ச் வரை திரைப்படங்களில் நடிப்பேன் என கூறி இருந்தார்.

    நடிகர் அஜித் 'அஜித்குமார் ரேஸிங்' என்ற பெயரில் புதிய கார் ரேஸ் அணியை உருவாக்கியுள்ளார். தற்போது கார் பந்தயத்திற்கான பயிற்சியில் ஈடுபட்டு வரும் அவர் கார் பந்தயத்தில் கலந்துகொள்வதற்காக துபாய் சென்றுள்ளார்.

    சில தினங்களுக்கு முன் தீவிர பயிற்சியில் ஈடுபட்ட அஜித் ஓட்டிய கார் விபத்துக்குள்ளானதில் இருந்து காயமின்றி உயிர் தப்பினார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனை தொடர்ந்து நேற்று அஜித் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று வெளியானது. அதில், திரைப்படங்களில் நடிக்க வேண்டியிருந்ததால் இடையில் போட்டிகளில் பங்கேற்கவில்லை.

    நடப்பு கார் ரேஸ் தொடர் முடியும் வரை திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை. கார் பந்தய ஓட்டுநராக மட்டுமல்ல அணியின் உரிமையாளராகவும் வந்துள்ளேன். கார் ரேஸ் தொடர் நடைபெறாத மாதங்களான அக்டோபர் முதல் மார்ச் வரை திரைப்படங்களில் நடிப்பேன் என கூறி இருந்தார். இந்த வீடியோவும் வைரலானது.



    இந்த நிலையில், கார் ரேசில் பங்கேற்றுள்ள அஜித்துக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    அன்புள்ள அஜித் சார், துபாயில் நடைபெறும் 24H தொடருக்கு வாழ்த்துகள்! உங்கள் அசைக்க முடியாத ஆர்வமும் அர்ப்பணிப்பும் தொடர்ந்து எங்களுக்கு ஊக்கமளிக்கிறது. இதிலும் நீங்கள் மகத்தான வெற்றியைப் பெற வாழ்த்துகிறேன் சார் என்று கூறியுள்ளார்.



    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    • கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங் அணி மூன்றாவது இடம் பிடித்து அசத்தியுள்ளது.
    • அஜித் குமாரின் வெற்றிக்கு ரசிகர்கள், திரைத்துறையை சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    துபாயில் நடந்த 24H சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங் அணி மூன்றாவது இடம் பிடித்து அசத்தியுள்ளது. தனது அணி மூன்றாவது இடம்பிடித்த நிலையில், நடிகர் அஜித் குமார், இந்திய தேசியக் கொடியுடன் வலம் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

    மேலும், மகிழ்ச்சியில் அஜித் குமார் சக அணியினருடன் துள்ளி குதித்து வெற்றியை கொண்டாடினார். இவரது வெற்றிக்கு ரசிகர்கள், திரைத்துறையை சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் அஜித் குமாருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ரஜினி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    என் அன்பான அஜித்குமாருக்கு வாழ்த்துகள். நீங்க சாதிச்சிட்டீங்க. கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார். லவ் யூ.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • நடிகர் அஜித்குமார் அடுத்ததாக 'தெற்கு ஐரோப்பிய போர்ஷே ஸ்பிரிண்ட் தொடர் 2025' ரேஸில் பங்கேற்றுள்ளார்.
    • தகுதி சுற்றில் 1.41 நிமிடத்தில் லேப்சை நடிகர் அஜித் குமார் நிறைவு செய்தார்.

    துபாயில் நடந்த 24H சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங் அணி மூன்றாவது இடம் பிடித்து அசத்தியது. தனது அணி மூன்றாவது இடம்பிடித்த நிலையில், நடிகர் அஜித் குமார், இந்திய தேசியக் கொடியுடன் வலம் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இவரது வெற்றிக்கு ரசிகர்கள், திரைத்துறையை சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

    இந்நிலையில், நடிகர் அஜித்குமார் அடுத்ததாக 'தெற்கு ஐரோப்பிய போர்ஷே ஸ்பிரிண்ட் தொடர் 2025' ரேஸில் பங்கேற்றுள்ளார்.

    ஐரோப்பாவில் நடைபெறும் போர்ஷே ஸ்ப்ரிண்ட் தொடரின் தகுதி சுற்றில் 1.41 நிமிடத்தில் லேப்சை நடிகர் அஜித் குமார் நிறைவு செய்தார்.

    இதன்மூலம், கார் ரேஸின் முதல் தகுதி சுற்றில் நடிகர் அஜித்குமார் தேர்வாகியுள்ளார்.

    பந்தயத்தில் பங்கேற்பதற்காக நடிகர் அஜித் குமார் போர்ச்சுக்கல் சென்றுள்ள நிலையில், கார் ரேஸின் முதல் தகுதி சுற்றில் தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நடிகர் அஜித்குமார் அடுத்ததாக 'ஐரோப்பிய போர்ஷே ஸ்பிரிண்ட் தொடர் 2025' ரேஸில் பங்கேற்றுள்ளார்.
    • கார் ரேஸின் முதல் தகுதி சுற்றில் நடிகர் அஜித்குமார் தேர்வாகியுள்ளார்.

    துபாயில் நடந்த 24H சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங் அணி மூன்றாவது இடம் பிடித்து அசத்தியது. தனது அணி மூன்றாவது இடம்பிடித்த நிலையில், நடிகர் அஜித் குமார், இந்திய தேசியக் கொடியுடன் வலம் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இவரது வெற்றிக்கு ரசிகர்கள், திரைத்துறையை சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

    இந்நிலையில், நடிகர் அஜித்குமார் அடுத்ததாக 'தெற்கு ஐரோப்பிய போர்ஷே ஸ்பிரிண்ட் தொடர் 2025' ரேஸில் பங்கேற்றுள்ளார்.

    ஐரோப்பாவில் நடைபெறும் போர்ஷே ஸ்ப்ரிண்ட் தொடரின் தகுதி சுற்றில் 1.41 நிமிடத்தில் லேப்சை நடிகர் அஜித் குமார் நிறைவு செய்தார். இதன்மூலம், கார் ரேஸின் முதல் தகுதி சுற்றில் நடிகர் அஜித்குமார் தேர்வாகியுள்ளார்.

    தெற்கு ஐரோப்பிய போர்ஷே ஸ்பிரிண்ட் தொடர் 2025 ரேஸின்போது, "ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?" என ஆங்கிலத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு அஜித் தமிழில் பதில் அளித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

    அந்த வீடியோவில், "எல்லாரும் ஆரோக்கியமா சந்தோசமா வாழுங்க. LOVE YOU ALL" என்று அஜித் தெரிவித்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    • துபாயில் நடந்த 24H சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங் அணி மூன்றாவது இடம் பிடித்து அசத்தியது.
    • நடிகர் அஜித் குமாருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது.

    நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் "விடாமுயற்சி." இந்தப் படத்தில் அஜித் குமாருடன், ஆரவ், அர்ஜுன், திரிஷா, ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் வருகிற 6-ந்தேதி வெளியாகவுள்ளது.

    முன்னதாக துபாயில் நடந்த 24H சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங் அணி மூன்றாவது இடம் பிடித்து அசத்தியது. இதனிடையே நடிகர் அஜித் குமாருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், விவேகம் படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் நடிகர் விவேக் ஓப்ராய், அஜித் குறித்து உருக்கமாக பேசியுள்ள வீடியோ வெளியாகியுள்ளது.

    அந்த வீடியோவில், "அஜித் அண்ணா எப்படி இருக்கீங்க? உங்களுக்கு எப்போதும் நல்லதே நடக்கவேண்டும். உங்கள் வழியைதான் நான் பின்பற்றி வருகிறேன். கடந்தமுறை நீங்கள் ரேஸில் பங்கேற்றபோது உங்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்காமல் போய்விட்டது. அடுத்தமுறை எனக்கு போன் செய்தால் உங்களுக்காக விசில் அடித்து கொண்டாட நான் ஓடோடி வருவேன்" என்று தெரிவித்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர் அஜித்குமார் துபாயில் நடைபெற்ற கார் பந்தய போட்டிகளில் கடந்த மாதம் பங்கேற்றார்.
    • எங்களுக்கு மீண்டும் நல்ல நேரமாக அமைந்துள்ளது.

    கார் பந்தயத்தில் ஈடுபடுவதில் அதிக ஆர்வம் கொண்டவரான நடிகர் அஜித்குமார் துபாயில் நடைபெற்ற கார் பந்தய போட்டிகளில் கடந்த மாதம் பங்கேற்றார். சர்வதேச அளவிலான இந்த போட்டியில் அஜித்குமார் 3-வது பரிசை வென்றார். முன்னதாக இதற்கான பயிற்சியில் ஈடுபட்ட அஜித்குமாரின் கார் விபத்தில் சிக்கியது.

    இதில் அவர் உயிர் தப்பிய நிலையில்தான் போட்டியில் பங்கேற்று 3-வது இடத்தை பிடித்தார்.

    இந்த நிலையில் போர்ச்சுக்கல் நாட்டில் நடைபெற்று வரும் கார் பந்தய போட்டிகளில் அஜித்குமார் கலந்து கொண்டுள்ளார். இதற்கான பயிற்சியில் அவர் ஈடுபட்டிருந்தபோது கார் விபத்தில் சிக்கியது. 2-வது முறையாக ஏற்பட்ட இந்த விபத்திலும் அஜித்குமாரின் உயிருக்கு ஆபத்து எதுவும் ஏற்படவில்லை. அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார்.

    போர்ச்சுக்கல் நாட்டில் கார் பந்தய மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அஜித்குமார் விபத்தில் சிக்கியதுடன் உடனடியாக அவரை பத்திரமாக மீட்டுள்ளனர். இதில் காரில் மட்டும் சேதம் ஏற்பட்டு உள்ளது.

    இந்த விபத்து தொடர்பாக அஜித்குமார் அளித்துள்ள பேட்டி வருமாறு:-

    எங்களுக்கு மீண்டும் நல்ல நேரமாக அமைந்துள்ளது. எனது கார் சிறிய அளவிலான விபத்தில் சிக்கியது. யாருக்கும் எதுவும் நடக்கவில்லை. மீண்டும் பெருமையை நிலை நாட்டுவோம் என்கிற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

    விபத்து ஏற்பட்டவுடன் எங்களுக்கு உறுதுணையாக இருந்த நண்பர்களுக்கு இந்த நேரத்தில் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×