என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசியான் உச்சி மாநாடு"

    • இந்தியா - ஆசியான் அமைப்பின் 21வது உச்சி மாநாடு லாவோசில் நடைபெற்றது
    • இளைஞர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் உண்டாக்கும் கடமை நமக்கு உள்ளது என்றார் பிரதமர் மோடி.

    லாவோஸ்:

    வியட்நாமின் லாவோஸ் நகரில் நடந்த ஆசியான்- இந்தியா அமைப்பின் 21வது உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    ஆசியான் நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து நேரடி விமான சேவை உள்ளது. புருனேவிற்கும் விரைவில் துவங்க உள்ளது.

    கிழக்கு தைமூரில் இந்திய தூதரகம் திறக்கப்பட்டுள்ளது.

    நாளந்தா பல்கலையின் ஸ்காலர்ஷிப் திட்டம் மூலம் ஆசியான் நாடுகளை சார்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பலனடைந்து உள்ளனர்.

    கோவிட் பெருந்தொற்று ஆகட்டும், இயற்கை பேரிடர் ஆகட்டும் நாம் ஒருவருக்கு ஒருவர் உதவி வருகிறோம்.

    பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு வழங்குவதற்காக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிதி, டிஜிட்டல் நிதி மற்றும் பசுமை நிதி ஆகியன ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக இந்தியா சார்பில் 3 கோடி அமெரிக்க டாலர் நிதி அளிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 10 ஆண்டுகளில் ஆசியான் பிராந்தியத்துடன் ஆன இந்தியாவின் வர்த்தகம் 1,300 கோடி டாலர் ஆக அதிகரித்துள்ளது.

    நமது இளைஞர்கள் அனைவருக்கும் பிரகாசமான எதிர்காலத்தை உண்டாக்கி தரவேண்டிய கடமை நமக்கு உள்ளது. இந்தியா அதை கண்டிப்பாக செய்யும்.

    21-ம் நூற்றாண்டானது இந்தியா மற்றும் ஆசியான் நாடுகளுக்கானது என நம்புகிறேன். இன்று உலகின் பல பகுதிகளில் மோதல் மற்றும் பதற்றமான சூழ்நிலை இருக்கும்போது, இந்தியா மற்றும் ஆசியான் நாடுகளின் நட்பு, ஒத்துழைப்பு மிக முக்கியமானது என தெரிவித்தார்.

    • லாவோஸ் நாட்டில் ஆசியான் பாதுகாப்புத்துறை மந்திரிகள் கூட்டம் நடைபெறுகிறது.
    • சீன பாதுகாப்புத்துறை மந்திரியுடன் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    வியன்ட்டியன்:

    இந்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் லாவோஸ் நாட்டிற்கு 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு நடைபெறும் ஆசியான் பாதுகாப்புத்துறை மந்திரிகள் கூட்டத்தில் அவர் கலந்துகொள்ள உள்ளார். இதற்காக இன்று லாவோஸ் நாட்டின் தலைநகர் வியன்ட்டியனுக்கு ராஜ்நாத் சிங் சென்றடைந்தார்.

    இதேபோல், ஆசியான் பாதுகாப்புத்துறை மந்திரிகள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வியன்ட்டியன் நகருக்கு சீனாவின் பாதுகாப்புத்துறை மந்திரி டாங் ஜுன் சென்றுள்ளார். இதையடுத்து சீன பாதுகாப்புத்துறை மந்திரியை, மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது ராஜ்நாத் சிங் கூறுகையில், வருங்காலங்களில் கல்வானில் ஏற்பட்ட மோதல் போன்ற சம்பவங்கள் தவிர்க்கப்பட வேண்டும். மோதலுக்கு பதில் ஒத்துழைப்பில் கவனம் செலுத்தவேண்டும். 2020 மோதலில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களை பற்றி சிந்திக்கவும், இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்கவும், எல்லையில் அமைதி நிலவுவதை உறுதிசெய்ய வேண்டும் என தெரிவித்தார்.

    சமீபத்தில் இந்தியா-சீனா படைகள் டெப்சாங், டெம்சோக் பகுதிகளில் இருந்து வாபஸ் பெறப்பட்ட நிலையில், தற்போது இருநாட்டு பாதுகாப்பு மந்திரிகள் இடையே நடந்த இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    ×