search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண் இமைகள் அடர்த்தியாக"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அடர்த்தியான கண் புருவங்கள், கண் இமைகள் முகத்தை அழகாக காட்டுகிறது.
    • கண் இமைக்கு தேங்காய் எண்ணெய் ஒரு சிறந்த வீட்டு வைத்தியப் பொருள்.

    இன்று பலரும் நீண்ட அடர்த்தியான புருவங்கள், இமை போன்றவற்றை வைத்துக் கொள்ள விரும்புவர். நீண்ட அடர்த்தியான கண் புருவங்கள் மற்றும் கண் இமைகள் முகத்தை அழகாக காட்டுகிறது. இதனை இயற்கையாகவே வீட்டு வைத்தியங்களை பயன்படுத்தி செய்யலாம். இதனால் எந்த பக்கவிளைவுகளும் இருக்காது.


    கற்றாழை

    கற்றாழை ஜெல்லில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது. இந்த ஊட்டச்சத்தானது கண் இமை வளர்ச்சியை தூண்ட உதவுகிறது. இதற்கு கற்றாழை ஜெல்லை எடுத்து அதனை இரவில் கண் இமைகளில் தடவ வேண்டும். பின்னர் காலையில் கழுவும் போது இமைகளை நீரேற்றமாக வைத்து ஊட்டச்சத்துகளை அதிகரிக்க உதவுகிறது.


    தேங்காய் எண்ணெய்:

    கண் இமைக்கு தேங்காய் எண்ணெய் ஒரு சிறந்த வீட்டு வைத்தியப் பொருளாக அமைகிறது. மேலும் கண்களை அழகாக வைத்திருப்பதற்கு உதவுகிறது. இதன் ஊட்டமளிக்கும் பண்புகள் முடியின் புரதங்களை பாதுகாக்கிறது. இதற்கு தூங்குவதற்கு முன்பு தேங்காய் எண்ணெயை மஸ்காராவை பயன்படுத்தி கண் இமைகளில் லேசாக தடவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வரும் போது இமை முடி தடிமனாகவும், வலுவாகவும் வளர்வதை பார்க்கலாம்.


    வைட்டமின் ஈ:

    வைட்டமின் ஈ எண்ணெயைப் பயன்படுத்துவது இமைகளை வலுப்படுத்துவதுடன், அவை உடைவதைத் தடுக்க உதவுகிறது. இதற்கு சுத்தமான தூரிகை அல்லது விரலை பயன்படுத்தி சில துளிகள் வைட்டமின் ஈ எண்ணெயை கண்களில் தடவ வேண்டும். இது கண் இமை வளர்ச்சியை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், கண் இமைகளை ஈரப்பதமாக மற்றும் பளபளப்பாக வைக்க உதவுகிறது.


    ஆமணக்கு எண்ணெய்:

    முடி ஆரோக்கியத்திற்கு ஆமணக்கு எண்ணெய் மிகவும் சிறந்த தேர்வாக அமைகிறது. முடி வளர்ச்சியை ஊக்குவிக்க விரும்புபவர்களுக்கு ஆமணக்கு எண்ணெய் ஒரு சிறந்த விஷயமாகும். ஆமணக்கு எண்ணெயில் கொழுப்பு அமிலங்கள் நிறைந்து காணப்படுகிறது. இது வேர்களிலிருந்து கண் இமைகளுக்கு ஊட்டமளிக்கவும், வலுப்படுத்தவும் உதவுகிறது.

    மேலும் இது முழுமையான தோற்றத்தைத் தருகிறது. ஒரு சத்தான மஸ்காரா அல்லது பருத்தி துணியை எண்ணெயில் தோய்த்து, படுக்கைக்கு முன்னதாக கண் இமையில் தடவ வேண்டும். பிறகு இதை காலையில் கழுவி விடலாம். இப்போது தடிமனான, ஆரோக்கியமான கண் இமைகளைப் பெறலாம்.

    ×