என் மலர்
நீங்கள் தேடியது "சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ்"
- சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கோட்டூர்புரத்தில் நடந்தது.
- இதில் அரவிந்த சிதம்பரம் சாம்பியன் பட்டம் வென்றார்.
சென்னை:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2-வது சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடந்து வருகிறது.
இதில் 7 சுற்றுகள் முடிவில் மாஸ்டர்ஸ் பிரிவில் தமிழக வீரர் அரவிந்த சிதம்பரம் சாம்பியன் பட்டம் வென்றார்.
டைபிரேக்கர் முறையில் நடந்த இறுதிச்சுற்றில் அமெரிக்காவின் லெவோனை அரவிந்த் வீழ்த்தி சாம்பியன் ஆனார். கடும் போட்டிக்கு இடையே அரவிந்த் சிதம்பரம் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.டைபிரேக்கர் முறையில் நடைபெற்ற போட்டியில் 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனார்.
சேலஞ்சர்ஸ் பிரிவில் பிரணவ் மகுடம் சூடினார். அரவிந்த் சிதம்பரத்துக்கு பரிசுத் தொகையாக ரூ.15 லட்சமும், பிரணவுக்கு பரிசுத் தொகையாக ரூ.6 லட்சமும் வழங்கப்படுகிறது.
- 7 சுற்றுகள் முடிவில் மாஸ்டர்ஸ் பிரிவில் தமிழக வீரர் அரவிந்த சிதம்பரம் சாம்பியன் பட்டம் வென்றார்.
- அரவிந்த் சிதம்பரத்துக்கு பரிசுத் தொகையாக ரூ.15 லட்சமும், பிரணவுக்கு பரிசுத் தொகையாக ரூ.6 லட்சமும் வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2-வது சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடந்தது.
இதில், 7 சுற்றுகள் முடிவில் மாஸ்டர்ஸ் பிரிவில் தமிழக வீரர் அரவிந்த சிதம்பரம் சாம்பியன் பட்டம் வென்றார்.
இதேபோல், சேலஞ்சர்ஸ் பிரிவில் பிரணவ் மகுடம் சூடினார். அரவிந்த் சிதம்பரத்துக்கு பரிசுத் தொகையாக ரூ.15 லட்சமும், பிரணவுக்கு பரிசுத் தொகையாக ரூ.6 லட்சமும் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அரவிந்த் சிதம்பரத்திற்கும், சேலஞ்சர்ஸ் பிரிவில் மகுடம் சூடிய பிரணவ் ஆகியோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில், தனது வியூகப் புத்திசாலித்தனத்துடன், குறிப்பாக இறுதிச் சுற்றில், தீர்க்கமானதாக நிரூபித்த கிராண்ட் மாஸ்டர் அரவிந்த் சிதம்பரத்திற்கு அவரது குறிப்பிடத்தக்க பட்டம் வென்றதற்கு வாழ்த்துகள்.
கிராண்ட் மாஸ்டர் பிரணவ்-க்கு கைதட்டல், சேலஞ்சர்ஸ் பிரிவில் அவரது சிறப்பான செயல்திறன் எதிர்காலத்திற்கான மகத்தான நம்பிக்கையை காட்டுகிறது.
உலக செஸ் அரங்கில் சென்னையின் அந்தஸ்தை மேலும் உயர்த்தும் நிகழ்விற்காக தமிழக விளையாட்டுத் துறைக்கும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் பாராட்டுகள்
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தமிழக வீரர் அரவிந்த் சிதம்பரத்திற்கு 15 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
- செஸ் போட்டியில் 16 வீரர்களுக்கு ரூ. 70 லட்சம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
முதலமைச்சரின் வழிகாட்டுதல்படி தமிழகத்தில் விளையாட்டுத்துறை பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் திறமையான தலைமையின் கீழ் நமது திராவிட முன்மாதிரி அரசு, இந்தியாவின் வலிமையான கிளாசிக்கல் செஸ் போட்டியான சென்னை கிராண்ட் மாஸ்டர் 2024 வெற்றிகரமாக தொகுத்து வழங்கியது.
முதல் பரிசாக ரூ.1000 ஐ வழங்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. போட்டியில் முதலிடத்தை பிடித்ததற்காக தமிழக வீரர் அரவிந்த் சிதம்பரத்திற்கு 15 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. அரவிந்தின் குறிப்பிடத்தக்க வெற்றிக்கு வாழ்த்துகள், இது நிச்சயமாக அவரை மேலும் சர்வதேச செஸ் போட்டிகளில் பங்கேற்க ஊக்குவிக்கும்.
அதேபோல், தமிழகத்தைச் சேர்ந்த பிரணவ் என்பவருக்கு செஸ் கிராண்ட் மாஸ்டர்ஸ் சேலஞ்சர்ஸ் பிரிவில் முதல் இடத்தைப் பெற்றதற்காக ரூ. 6 லட்சம் வழங்கப்பட்டது.
இந்த செஸ் போட்டியில் 16 வீரர்களுக்கு ரூ. 70 லட்சம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அனைத்து வீரர்களுக்கும் பிரகாசமான எதிர்காலத்திற்காக நாங்கள் வாழ்த்துகிறோம், மேலும் அவர்கள் நமது தேசத்திற்கு மேலும் பெருமை சேர்க்க வேண்டும் என்று நம்புகிறோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.