என் மலர்
நீங்கள் தேடியது "இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்"
- ஆடுஜீவிதம் திரைப்படம் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
- கேரள அரசின் சிறந்த நடிகருக்கான விருதை ஆடுஜீவிதம் திரைப்படத்திற்காக பிரித்விராஜ் வென்றார்.
இயக்குநர் பிளெஸ்சி இயக்கத்தில் பிருத்விராஜ் , அமலாபால் நடிப்பில் கடந்த மார்ச் 28 ஆம் தேதி வெளிவந்த படம் ஆடு ஜீவிதம். இப்படம் மிகப் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
ஏ.ஆர். ரகுமான் இசையில் வெளியான இப்படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்நிலையில், சிறந்த பின்னணி இசைக்கான வெளிநாட்டு படப்பிரிவில் ஹாலிவுட் இசை மீடியா விருதை (HMMA) 'ஆடுஜீவிதம்' படத்திற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் வென்றுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பிரதமர் மோடி தீபாவளி பண்டிகையை கார்கில் பகுதியில் உள்ள ராணுவ வீரர்களுடன் கொண்டாடினார்.
- இதயம் இதயம் துடிக்கின்றதே, எங்கும் உன்போல் பாசம் இல்லை, ஆதலால் உன் மடி தேடினேன். தாய் மண்ணே வணக்கம்" என்று ஏ.ஆர்.ரகுமான் பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடி தீபாவளி பண்டிகையை கார்கில் பகுதியில் உள்ள ராணுவ வீரர்களுடன் கொண்டாடினார். அப்போது தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர்கள், 'சுராங்கனி' என்ற பாடலை பாடி பிரதமர் மோடியை வரவேற்றனர். இந்த வீடியோவை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, "தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் இந்த அற்புதமான செயலால் நம்மை வியக்க வைத்தனர்" என்று நெகிழ்ச்சியுடன் கூறியிருந்தார்.

ஏ.ஆர்.ரகுமான்
மேலும் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்த தாய் மண்ணே வணக்கம் பாடலின் இந்தி பதிப்பான மா துஜே சலாம் பாடலை ராணுவ வீரர்கள் பாடினர். இதனை பிரதமர் மோடி பதிவிட்டிருந்தார். பிரதமர் மோடியின் இந்த பதிவை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ரீ-டுவிட் செய்துள்ளார். அதில், இதயம் இதயம் துடிக்கின்றதே, எங்கும் உன்போல் பாசம் இல்லை, ஆதலால் உன் மடி தேடினேன். தாய் மண்ணே வணக்கம்" என்று கூறியுள்ளார். ஏ.ஆர்.ரகுமானின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
- இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கிரிக்கெட் வீரர் சச்சினை சந்தித்துள்ளார்.
- இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான். இவர் இசையில் சமீபத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன் -1' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், உலகம் முழுவதும் ரூ.400 கோடிக்குமேல் வசூல் சாதனை செய்து வருகிறது.

ஏ.ஆர்.ரகுமான்
இதனைத் தொடர்ந்து ஏ.ஆர்.ரகுமான் தமிழில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் 'பத்து தல', சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'அயலான்', உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி வரும் 'மாமன்னன்' உள்ளிட்ட சில படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை சந்தித்துள்ளார்.
இது தொடர்பான புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், "நண்பர்களின் இலக்கு" என பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பகிர்ந்துள்ள சச்சின், "இசைப்புயலுடன் ஒரு அருமையான நாள்" என்று குறிப்பிட்டுள்ளார். இவர்களின் இந்த புகைப்படத்தை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
A Sunday well spent with இசைப்புயல்! ♥️🎶 https://t.co/nDB5m3Bh5R
— Sachin Tendulkar (@sachin_rt) October 17, 2022
- மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
- நேற்று நடைபெற்ற டிரைலர் வெளியீட்டு விழாவில் ரஜினி, கமல் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.
கல்கி எழுதிய புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்னம் திரைப்படமாக இயக்கி உள்ளார். இரண்டு பாகங்களாக தயாராகி உள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

பொன்னியின் செல்வன்
இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. இதற்காக அங்கு பிரமாண்ட அரங்கு அமைத்து இருந்தனர். விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் கலந்துகொண்டு பாடல் மற்றும் டிரைலரை வெளியிட்டனர்.

ஏ.ஆர்.ரகுமான்
இவ்விழாவில் கலந்துக் கொண்ட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பேசும்போது, "இந்த படத்துக்காக தோடி உள்பட எத்தனையோ ராகத்தில் பாடலும், இசையும் அமைத்து மணிரத்னத்திடம் போட்டு காண்பித்தேன். ஆனால் அவர் அதை ஏற்கவே இல்லை. சில விஷயங்களை கற்பனை செய்து, தமிழ் மற்றும் தென்னிந்திய கலாசாரத்தை நினைத்து இசையமைத்தேன். இடையிடையே சின்ன சின்ன அரபிக் டச் கொடுத்து இசையமைத்தேன். மணிரத்னத்திடம் போட்டு காட்டினேன். ஒரு மாதம் கழித்து அவர் ஓ.கே. என்றார். அப்படி இந்த படத்துக்கு பார்த்து பார்த்து இசை வடிவம் கொடுத்திருக்கிறோம்" என்றார்.
- நடிகர் சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வெந்து தணிந்தது காடு'.
- பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவாகி வரும் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் செப்டெம்பர் மாதம் 15-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'வெந்து தணிந்தது காடு' படத்தில் சிம்பு நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்குமுன் இந்த கூட்டணியில் வெளியான 'விண்ணைத் தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' ஆகிய படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது உருவாகி வரும் இந்த கூட்டணியின் படத்திற்கு ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்து இருக்கின்றனர். இப்படத்தில் கதாநாயகிகளாக கயாடு லோகர் மற்றும் சித்தி இட்னானி நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். 'வேல்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ்' சார்பில் ஐசரி கணேஷ் இப்படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால், ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படம் வருகிற செப்டெம்பர் மாதம் 15-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

ஐசரி கணேஷ் - ஏ.ஆர்.ரகுமான்
இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் படம் குறித்து புதிய தகவலை தனது வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், "மொஸார்ட் ஆஃப் தி மெட்ராஸ் ஏ.ஆர் ரஹ்மானை சந்தித்ததில் மகிழ்ச்சி. அவரின் எளிமை கண்டு வியந்தேன். வெந்து தணிந்தது காடு படம் குறித்து நிறைய பேசினோம். ரசிகர்களுக்கான சிறப்பான இசை விருந்து வந்து கொண்டிருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
Happy to have met the Mozart of Madras himself, Mr @arrahman . Amazed by his simplicity and astonished by his vision. We had a little chat on our new movie together "#VendhuThanindhathuKaadu ". A beautiful movie coming up for you with a stunning musical treat.#DrIshariKGanesh pic.twitter.com/hFY0092hMY
— Dr Ishari K Ganesh (@IshariKGanesh) June 29, 2022
- நடிகர் சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'வெந்து தணிந்தது காடு'.
- பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவாகி வரும் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.
கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'வெந்து தணிந்தது காடு' படத்தில் சிம்பு நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்குமுன் இந்த கூட்டணியில் வெளியான 'விண்ணைத் தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' ஆகிய படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது உருவாகி வரும் இந்த கூட்டணியின் படத்திற்கு ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்து இருக்கின்றனர். இப்படத்தில் கதாநாயகிகளாக கயாடு லோகர் மற்றும் சித்தி இட்னானி நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். 'வேல்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ்' சார்பில் ஐசரி கணேஷ் இப்படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால், ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. அதன்படி வெந்து தணிந்தது காடு திரைப்படம் வருகிற செப்டம்பர் 15-ஆம் தேதி வெளியாகும் என வீடியோ பதிவின் மூலம் படக்குழு அறிவித்துள்ளது.
#VendhuThanindhathuKaadu
— Gauthamvasudevmenon (@menongautham) June 28, 2022
🔗 https://t.co/UJ3X0aSZFG
We have a date with all of you.#VTKOnSep15th in theatres! @SilambarasanTR_ @arrahman
Produced by VelsFilmIntl @IshariKGanesh

Dear KK ..what’s the hurry buddy ..gifted singers and artists like you made this life more bearable..#RIPKK
— A.R.Rahman (@arrahman) June 1, 2022


The FIFTH FORCE is coming! #2point0Trailer#2point0TrailerOnNov3pic.twitter.com/f4dBcA9fms
— Shankar Shanmugham (@shankarshanmugh) October 28, 2018
The FIFTH FORCE is coming! #2point0Trailer#2point0TrailerOnNov3pic.twitter.com/f4dBcA9fms
— Shankar Shanmugham (@shankarshanmugh) October 28, 2018