என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆட்டோ கட்டணம் உயர்வு"

    • ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • புதிய செயலியை உருவாக்க ஆட்டோ ஓட்டுனர்கள் அரசிடம் கோரிக்கை.

    சென்னை:

    சென்னையில் ஓடும் ஆட்டோக்களுக்கு முதல் 1.8 கிலோ மீட்டர் தூரத்திற்கான ஆட்டோ கட்டணம் 25 ரூபாய் என்றும் அடுத்த ஒவ்வொரு கி.மீட்டருக்கும் தலா 12 ரூபாய், காத்திருப்பு கட்டணம் 5 நிமிடத்துக்கு ரூ.3.50 என 2013-ம் ஆண்டு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.

    இரவு நேரத்தில் இந்த கட்டணத்தை இரட்டிப்பாக வசூலிக்க அனுமதிக்கப்பட்டது.

    ஆனாலும் இதில் பல ஆட்டோ டிரைவர்களுக்கு உடன்பாடு இல்லை என்பதால் மீட்டர் போடாமல் குத்து மதிப்பாக பணம் கேட்கும் நடைமுறை சென்னையில் பரவலாகி விட்டது.

    ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், கோவில்கள் கடை வீதிகள் என எல்லா பகுதிகளிலும் ஸ்டாண்டு ஆட்டோக்களை அழைத்தால் அவர்கள் ஒரு தொகை கேட்பார்கள். நாம் ஒரு தொகை சொல்ல வேண்டும். இதற்கு மத்தியில் பேரம் பேசிதான் ஆட்டோவில் பயணிக்க முடியும். எந்த ஆட்டோவிலும் மீட்டர் போடுவது கிடையாது.

    ஓலா, ஊபர் ஆட்டோக்களில் கூட காண்பிக்கும் தொகையை விட 20 ரூபாய், 30 ரூபாய் அதிகம் தாருங்கள் என கேட்கும் வழக்கம் உருவாகிவிட்டது.

    இதனால் பல இடங்களில் ஆட்டோ டிரைவர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. இதில் பாதிக்கப்படும் பயணிகள் அரசுக்கு புகார்கள் தெரிவிக்கின்றனர்.

    இந்த புகார் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவதால் இதற்கு முடிவு காண அரசு தற்போது முயற்சி எடுத்து வருகிறது.

    இந்த நிலையில் தமிழ் நாட்டில் ஓலா, ஊபர் செயலிக்கு மாற்றாக அரசு ஒரு புதிய செயலியை உருவாக்க வேண்டும் என ஆட்டோ ஓட்டுனர்கள் சார்பில் அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

    இதை நிறைவேற்றும் வகையில் தமிழக போக்குவரத்து துறையின் சார்பில் ஸ்டார்ட் அப் மற்றும் தனியார் நிறுவனத்துடன் இணைந்து செயலி உருவாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

    இது தொடர்பாக முதல் கட்டமாக கிண்டியில் உள்ள தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவன பயிற்சி மையத்தில் ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் போக்குவரத்து துணை ஆணையர் தலைமையில் நடைபெற்றது.

    ஆட்டோக்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட பழைய கட்டணத்திற்கு பதிலாக குறைந்தபட்ச கட்டணமாக ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.50-ம், அதற்கு மேல் கிலோ மீட்டருக்கு ரூ.25-ம் நிர்ணயம் செய்ய வேண்டும் என ஆட்டோ தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தியதாக தெரிகிறது.

    இதுகுறித்து போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் கூறும் போது, ஆட்டோக்களுக்கு டிஜிட்டல் மீட்டருக்கு பதிலாக பிரத்யேக செயலி கொண்டு வர உள்ளோம். அதற்காக இதுவரை 1.70 லட்சம் தொழிலாளர்களின் விவரங்களை சேகரித்துள்ளோம்.

    புதிய கட்டண விவரத்தை அரசுக்கு பரிந்துரைத் துள்ளோம். அது பரிசீலனையில் இருக்கிறது. விரைவில் ஆட்டோ கட்டணத்தை அரசு அறிவிக்கும் என்றனர்.

    • காத்​திருப்பு கட்டணம் நிமிடத்​துக்கு ரூ.1.50 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    • 2 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க ரூ.54 கட்டணம் ஆகும்.

    சென்னை:

    ஆட்டோ கட்டணம் வருகிற 1-ந்தேதி முதல் உயருகிறது. புதிய கட்டணம் தொடர்பான விரிவான பட்டியலை அனைத்து ஆட்டோ சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.

    அதன்படி, குறைந்தபட்ச கட்டணமாக முதல் 1.8 கிலோ மீட்டருக்கு ரூ.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.18 கட்டணம் ஆகும். காத்திருப்பு கட்டணம் நிமிடத்துக்கு ரூ.1.50 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரவு 11 முதல் அதிகாலை 5 மணி வரை பயணம் செய்ய, பகல் நேர கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் அதிகம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    2 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க ரூ.54 கட்டணம் ஆகும். 3 கி.மீ.க்கு ரூ.72, 4 கி.மீ.க்கு ரூ.90, 5 கி.மீ.க்கு ரூ.108, 6 கி.மீ.க்கு ரூ.126, 7 கி.மீ.க்கு ரூ.144, 8 கி.மீ.க்கு ரூ.162, 9 கி.மீ.க்கு ரூ.180, 10 கி.மீ.க்கு ரூ.198 கட்டணம் ஆகும்.

    11 கி.மீ.க்கு ரூ.216, 12 கி.மீ.க்கு ரூ.234, 13 கி.மீ.க்கு ரூ.252, 14 கி.மீ.க்கு ரூ.270, 15 கி.மீ.க்கு ரூ.288, 16 கி.மீ.க்கு ரூ.306, 17 கி.மீ.க்கு ரூ.324, 18 கி.மீ.க்கு ரூ.342, 19 கி.மீ.க்கு ரூ.360, 20 கி.மீ.க்கு ரூ.378 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    21 கி.மீ.க்கு ரூ.396, 22 கி.மீ.க்கு ரூ.414, 23 கி.மீ.க்கு ரூ.432, 24 கி.மீ.க்கு ரூ.450, 25 கி.மீ.க்கு ரூ.468, 26 கி.மீ.க்கு ரூ.486, 27 கி.மீ.க்கு ரூ.504, 28 கி.மீ.க்கு ரூ.522, 29 கி.மீ.க்கு ரூ.540, 30 கி.மீ.க்கு ரூ.558 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    31 கி.மீ.க்கு ரூ.576, 32 கி.மீ.க்கு ரூ.594, 33 கி.மீ.க்கு ரூ.612, 34 கி.மீ.க்கு ரூ.630, 35 கி.மீ.க்கு ரூ.648, 36 கி.மீ.க்கு ரூ.666, 37 கி.மீ.க்கு ரூ.684, 38 கி.மீ.க்கு ரூ.702, 39 கி.மீ.க்கு ரூ.720, 40 கி.மீ.க்கு ரூ.738 கட்டணம் ஆகும்.

    41 கி.மீ.க்கு ரூ.756, 42 கி.மீ.க்கு ரூ.774, 43 கி.மீ.க்கு ரூ.792, 44 கி.மீ.க்கு ரூ.810, 45 கி.மீ.க்கு ரூ.828, 46 கி.மீ.க்கு ரூ.846, 47 கி.மீ.க்கு ரூ.864, 48 கி.மீ.க்கு ரூ.882, 49 கி.மீ.க்கு ரூ.900, 50 கி.மீ.க்கு ரூ.918 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    51 கி.மீ.க்கு ரூ.936, 52 கி.மீ.க்கு ரூ.954, 53 கி.மீ.க்கு ரூ.972, 54 கி.மீ.க்கு ரூ.990, 55 கி.மீ.க்கு ரூ.1,008, 56 கி.மீ.க்கு ரூ.1,026, 57 கி.மீ.க்கு ரூ.1,044, 58 கி.மீ.க்கு ரூ.1,062, 59 கி.மீ.க்கு ரூ.1,080, 60 கி.மீ.க்கு ரூ.1,098 கட்டணம் ஆகும்.

    • ஆட்டோ கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான முடிவுகள் அரசின் பரிசீலனையில் உள்ளது.
    • ஆட்டோ ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

    ஆட்டோ கட்டணம் வருகிற 1-ந்தேதி முதல் உயருகிறது. புதிய கட்டணம் தொடர்பான விரிவான பட்டியலை அனைத்து ஆட்டோ சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டது.

    அதன்படி, குறைந்தபட்ச கட்டணமாக முதல் 1.8 கிலோ மீட்டருக்கு ரூ.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.18 கட்டணம் ஆகும். காத்திருப்பு கட்டணம் நிமிடத்துக்கு ரூ.1.50 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரவு 11 முதல் அதிகாலை 5 மணி வரை பயணம் செய்ய, பகல் நேர கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் அதிகம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், ஆட்டோ கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான முடிவுகள் அரசின் பரிசீலனையில் உள்ளது என்றும் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

    மேலும், ஆட்டோ சங்கங்கள் தன்னிச்சையாக கட்டணத்தை உயர்த்த முடியாது. சில ஆட்டோ சங்கங்கள் வரும் பிப்ரவரி மாதம் 1ம் தேதி முதல் கட்டணத்தை உயர்த்த உள்ளதாக போக்குவரத்து துறை கவனத்திற்கு வந்துள்ளது.

    அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணத்தை மீறி கூடுதல் கட்டணம் வசூலித்தால் வட்டார போக்குவரத்து அலுவலர்களிடம் புகார் அளிக்கலாம்.

    புகாரின் அடிப்படையில் கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

    • தன்னிச்சையாக கட்டணத்தை உயர்த்தக் கூடாது என போக்குவரத்து ஆணையர் எச்சரித்திருந்தார்.
    • ஓலா, உபர் போன்ற நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் நிலையில் ஆட்டோ ஓட்டுநர் சங்கங்களும் முடிவு.

    வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் கூடுதல் கட்டணம் வசூலிப்போம் என ஆட்டோ ஓட்டுநர் சங்கங்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

    தன்னிச்சையாக கட்டணத்தை உயர்த்தக் கூடாது என போக்குவரத்து ஆணையர் எச்சரித்திருந்த நிலையில் ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தினர் கூட்டாக அறிவித்துள்ளனர்.

    ஓலா, உபர் போன்ற நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் நிலையில் அவற்றின் மீது அரசு நடவடிக்கை எடுப்பதில்லை என ஆட்டோ ஓட்டுநர் சங்கங்கள் தெரிவித்துள்ளது.

    ஆட்டோ தொழிற்சங்கத்தினரை போக்குவரத்து துறை அமைச்சர் அழைத்து பேசி கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிட வேண்டும்.

    அழைத்து பேசாவிட்டால் திட்டமிட்டபடி பிப்ரவரி 1ம் தேதி ஆட்டோ கட்டணங்களை உயர்த்தியே வசூலிப்போம் என அறிவித்துள்ளது.

    ×