என் மலர்
நீங்கள் தேடியது "தீவு"
- நிலநடுக்கம் இன்று மாலை 5.48 மணியளவில் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
- நிலநடுக்கத்தின் எதிரொலியால் சுனாமி ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
தென் பசிபிக் பெருங்கடலில் டோங்கா தீவு அருகே இன்று மாலை 5.48 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில், 20.06 டிகிரி தெற்கு அட்சரேகையிலும், 174.04 டிகிரி மேற்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.
இதனால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து தகவலும் வெளியாகவில்லை.
- பூமியில் புத்தாண்டைக் கொண்டாடும் முதல் இடம் கிரிட்டிமாட்டி [Kiritimati] தீவு.
- இந்த தீவு இந்தியாவை விட துல்லியமாக 8.5 மணி நேரம் முன்னால் உள்ளது.
366 நாட்களை நிறைவு செய்து இன்றுடன் 2024 ஆம் ஆண்டு முடிவுக்கு வருகிறது. 2025 புத்தாண்டை வரவேற்க உலகம் தயாராகி வருகிறது. பலருக்கு, புத்தாண்டின் தொடக்கமானது ஒரு வருடத்திற்கு விடைகொடுத்து மற்றொரு வருடத்தை வரவேற்கும் உணர்ச்சிகரமான தருணம்.
தீர்க்கரேகையின் அடிப்படையில், பூமி 24 நேர மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது, அவை ஒவ்வொன்றும் ஒரு நிலையான நேரத்தைக் கொண்டுள்ளன. எனவே இரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறக்கிறது என்றாலும் உலகம் முழுவதும் வெவ்வேறு நேரம் பின்பற்றப்படுவதன் காரணமாக சில நாடுகள் முதலாவதாகவும், சில நாடுகள் தாமதமாகவும் புத்தாண்டை வரவேற்கின்றன.
இந்திய நேரப்படி (IST) இந்தியா இயங்குகிறது. இது ஒருங்கிணைந்த உலகளாவிய நேரத்தை விட 5 மணிநேரம் 30 நிமிடங்கள் முன்னதாக உள்ளது (UTC +5:30).
பூமியில் புத்தாண்டைக் கொண்டாடும் முதல் இடம் கிரிட்டிமாட்டி [Kiritimati] தீவு. இது கிறிஸ்மஸ் தீவு என்றும் அழைக்கப்படுகிறது, இது மத்திய பசிபிக் பெருங்கடல் பவளப்பாறை மற்றும் கிரிபாட்டி குடியரசின் ஒரு பகுதியாகும். இங்கு இந்திய நேரப்படி இன்று மதியம் 3.30 மணியளவில் கிரிட்டிமாட்டி தீவில் 2025 ஆம் வருடம் பிறந்துள்ளது.

இந்த தீவு இந்தியாவை விட துல்லியமாக 8.5 மணி நேரம் முன்னால் உள்ளது. இந்தச் சிறிய தீவில் உலகின் முதல் 2025 புத்தாண்டு பிறந்ததை ஒட்டி உள்ளூர் வாசிகள் பட்டாசுகள், இசை மற்றும் மகிழ்ச்சியான கொண்டாட்டங்களுடன் அதை வரவேற்றனர்.
தீவு முழுவதும் உற்சாகமான மனநிலை பரவியுள்ளது. கிரிபாட்டி, சமோவா, டோங்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பப்புவா நியூ கினியா, ரஷ்யாவின் சில பகுதிகள், மியான்மர், ஜப்பான் மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட 41 நாடுகள் இந்தியாவுக்கு முன்னதாகவே புத்தாண்டை வரவேற்கிறது.