என் மலர்
நீங்கள் தேடியது "சென்னை ஐகோர்ட்"
- அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது.
- பண்டிகை நேரத்தில் இந்த வேலை நிறுத்தம் அவசியமா? இந்த போராட்டத்தால் பொதுமக்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள்.
சென்னை:
ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று சோழிங்கநல்லூரைச் சேர்ந்த பால் கிதியோன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, ''போக்குவரத்து ஊழியர்களிடம் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் சுமூக முடிவு ஏற்படவில்லை.
அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் தற்போது சட்டவிரோதமாக இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் போக்குவரத்து ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்'' என்று கூறினார்.
தொழிற்சங்கங்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள், ''6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை அறிவித்திருந்தாலும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை ஜனவரி மாதத்திற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசு ஏற்காததால் தான் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம். சட்டபடி அரசுக்கு முன்பே போராட்டம் குறித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது'' என்று வாதிட்டனர்.
அப்போது நீதிபதிகள், ''போராட்டம் நடத்த உரிமை இல்லை என்று கூறவில்லை. தற்போதைய பண்டிகை நேரத்தில் அந்த போராட்டத்தை நடத்துவது முறையற்றது என்று தான் கூறுகிறோம்.
பண்டிகை நேரத்தில் இந்த வேலை நிறுத்தம் அவசியமா? இந்த போராட்டத்தால் பொதுமக்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் மிகப்பெரிய பண்டிகையான பொங்கல் பண்டிகையின் போது பொதுமக்களுக்கு ஏன் இடையூறு ஏற்படுத்த வேண்டும்? நகரங்களில் உள்ள மக்கள் அதிகம் பாதிக்கப்படவில்லை என்றாலும், கிராமத்திற்கு செல்லக்கூடிய மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அரசும் சரி, போக்குவரத்து தொழிற்சங்கங்களும் சரி ஏன் இந்த விவகாரத்தில் பிடிவாதமாக இருக்கிறீர்கள்? இந்த விவகாரத்தில் தீர்வு காண்பதில் என்ன பிரச்சனை உள்ளது? என்று கேள்வி எழுப்பினர்.
பின்னர் ஓய்வூதியதாரர்களுக்கும், ஊழியர்களுக்கும் ஜனவரி மாத பண பலன்களை அளிக்க முடியுமா? ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி வழங்குவது குறித்து தமிழ்நாடு அரசு பிற்பகலில் 2.15 மணிக்குள் பதில் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை பிற்பகலுக்கு தள்ளிவைத்தனர்.
- அரசு ஊழியர்களின் பணியை பாதிக்கச் செய்யும் தகவல்கள்தான் பாதுகாக்கப்பட்டவை.
- வழக்கை 2 மாதங்களில் பரிசீலித்து முடித்துவைக்க மாநில தகவல் ஆணையத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்ட நீர்வளத்துறை உதவிப் பொறியாளர் காளிப்பிரியனின் சொத்து விபரங்களை குறித்து தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து காளிப்பிரியனின் சொத்து விபரங்களை தெரிவிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன், அரசு ஊழியர்களின் பணியை பாதிக்கச் செய்யும் தகவல்கள்தான் பாதுகாக்கப்பட்டவை. ஆனால், சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட வேண்டும். அரசு ஊழியரின் சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்த விவரங்கள், தனிப்பட்ட விவரங்கள் அல்ல என்று கூறிய நீதிபதி இந்த வழக்கை 2 மாதங்களில் பரிசீலித்து முடித்துவைக்க மாநில தகவல் ஆணையத்திற்கு உத்தரவிட்டார்.
- அரசியல் தலைவர்கள் குறித்து நிதானத்துடன் பேச வேண்டும்.
- தொடர்ந்து நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏறினால்தான் நிதானம் வரும்.
சென்னை:
மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து கடந்த 2019-ம் ஆண்டு விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தில் அவதூறாக பேசி வன்முறையை தூண்டியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதனிடையே, விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, அடுத்தவரை எரிச்சலூட்டும் விதமாகப் பேசுவதுதான் சீமானின் வழக்கமாக உள்ளது. அரசியல் தலைவர்கள் குறித்து நிதானத்துடன் பேச வேண்டும். தொடர்ந்து நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏறினால்தான் நிதானம் வரும். வன்முறை தூண்டும் வகையில் பேசக்கூடாது என சீமானுக்கு அறிவுரை வழங்குமாறு வழக்கறிஞருக்கு அறிவுறுத்தினார்.
இதனை தொடர்ந்து நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என்ற சீமானின் கோரிக்கை நிராகரித்ததுடன், இந்த வழக்கில் இருந்து சீமானை விடுவிக்க முடியாது. குற்றச்சாட்டில் முகாந்திரம் உள்ளதால் வழக்கை தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.