என் மலர்
நீங்கள் தேடியது "Edappadi Palaniswmai"
- அ.தி.மு.க.வில் உள்ள அனைத்து அணிகளும் கூடி தனித்தனியாக ஆலோசனை நடத்துவதற்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார்.
- அ.தி.மு.க. தலைமை கழகத்தில் கடந்த சில நாட்களாக ஒவ்வொரு அணிகளின் சார்பிலும் கூட்டம் நடைபெற்று வருகிறது.
சென்னை:
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் தேர்தலை சந்திப்பதற்கு தயாராகி வருகிறார். சட்டமன்றத் தேர்தலில் எப்படி செயல்படுவது என்பது பற்றி அ.தி.மு.க.வில் உள்ள அனைத்து அணிகளும் கூடி தனித்தனியாக ஆலோசனை நடத்துவதற்கு அவர் அறிவுறுத்தி உள்ளார்.
இதன்படி ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் கடந்த சில நாட்களாக ஒவ்வொரு அணிகளின் சார்பிலும் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் அனைத்து உலக எம்.ஜி.ஆர்.மன்ற ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
முன்னாள் அமைச்சரும் எம்.ஜி.ஆர். மன்ற மாநில செயலாளருமான பொன்னையன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. அவை தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர் வளர்மதி மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் தி.மு.க. அரசுக்கு எதிரான விஷயங்களை மக்கள் மத்தியில் கொண்டு சென்று மீண்டும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது.