என் மலர்
நீங்கள் தேடியது "திக்வேஷ் சிங் ரதி"
- முதல் 2 போட்டிகளில் திக்வேஷ் ரதிக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
- கிரிக்கெட் வாரியத்தை சீண்டும் வகையில் திக்வேஷ் ரதி 3-வது முறையாக சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
கொல்கத்தா:
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் முன்னணி சுழற்பந்து வீரர் திக்வேஷ் ரதி. இவரது பந்து வீச்சு எதிர் அணி பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலாக இருக்கிறது.
25 வயதான திக்வேஷ் ரதி இந்த ஐ.பி.எல்.லில் அறிமுகமாகி 5 ஆட்டத்தில் 7 விக்கெட் வீழ்த்தியுள்ளார். ரன்களை விட்டுக் கொடுக்காமல் மிகவும் நேர்த்தியாக வீசி வருகிறார்.
அவர் விக்கெட்டுகளை கைப்பற்றும்போது வித்தியாசமான கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். பஞ்சாப் அணிக்கு எதிராக பிரியான்ஷ் ஆர்யாவை அவுட் செய்தபோது திக்வேஷ் ரதி அருகே வந்து கையில் நோட்புக்கில் கையெழுத்திடுவது போல் கொண்டாடினார். இதற்காக அவருக்கு போட்டி கட்டணத்தில் 25 சதவீத அபராதம் விதிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து மும்பைக்கு எதிராகவும் இதே மாதிரியான நோட்புக் கொண்டாட்டத்துக்காக 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் மொத்தமாக 2 தகுதி குறைப்பு புள்ளிகளை பெற்றார்.
இந்த நிலையில் அபராதத்துக்கு அஞ்சாத திக்வேஷ் ரதி மீண்டும் சர்ச்சையான கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். நேற்றைய ஆட்டத்தில் அவர் கொல்கத்தா தொடக்க வீரர் நரைனை அவுட் செய்தார். அப்போது அவர் தனது வழக்கமான லெட்டர் பேட் கொண்டாட்டத்தை தற்போது திடலில் கொண்டாடினார். ஆடுகளத்தில் கையெழுத்திடுவது போல சைகை செய்தார்.
கிரிக்கெட் வாரியத்தை சீண்டும் வகையில் திக்வேஷ் ரதி 3-வது முறையாக சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதனால் அவருக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- கடந்த 2 போட்டிகளில் விக்கெட் வீழ்த்திய போது 'notebook' கொண்டாட்டத்தில் திக்வேஷ் ஈடுபட்டார்.
- கொண்டாடியதற்காக போட்டி கட்டணத்தில் இருந்து 25 மற்றும் 50 சதவீதம் அபராதம் பெற்றிருந்தார்.
கொல்கத்தா:
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. பரபரப்பான இந்த போட்டியில் லக்னோ 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 238 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 234 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் லக்னோ 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் லக்னோ சுழற்பந்து வீச்சாளரான திக்வேஷ் ரதி, சுனில் நரைனின் விக்கெட்டை கைப்பற்றினார். அதனை மைதான தரையில் எழுதி வித்தியாசமான முறையில் கொண்டாடினார்.
கடந்த 2 போட்டிகளில் விக்கெட் வீழ்த்தியதை கையில் எழுதுவது போல் வித்தியாசமான முறையில் (நோட் புக் செலிபிரேஷன்) கொண்டாடியதற்காக போட்டி கட்டணத்தில் இருந்து 25 மற்றும் 50 சதவீதம் அபராதம் பெற்றிருந்தார். தற்போது 3-வது முறையாக தரையில் எழுதி கொண்டாடியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
தனது கைகளில் எழுதியதால் தான அபராதம் விதிச்சாங்க தரையில் எழுதுறேன் என்ன பண்றாங்கனு பார்க்கலாம் என்பது போல இருந்துச்சு அவரது செயல் என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
- ரிஷப் பண்ட் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் திக்வேஷ் சிங் ரதி ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
- மெதுவாக பந்து வீசியதாக லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்டுக்கு ரூ. 12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது.
ஐ.பி.எல். தொடரில் லக்னோவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 203 ரன்கள் எடுத்தது. லக்னோ தரப்பில் அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 60 ரன் எடுத்தார்.
தொடர்ந்து 204 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த மும்பை 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 12 ரன் வித்தியாசத்தில் லக்னோ த்ரில் வெற்றி பெற்றது.
லக்னோ அணி வெற்றி பெற்றிருந்தாலும் அந்த அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் திக்வேஷ் சிங் ரதி ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மெதுவாக பந்து வீசியதாக லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்டுக்கு ரூ. 12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது. விக்கெட் எடுத்துவிட்டு Notebook Celebration-க்காக திக்வேஷ் சிங் ரதிக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதற்குமுன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் இதே விதமான Notebook Celebration-க்காக 25% அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.