search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94423"

    தேய்பிறை அஷ்டமி தினத்தன்று இத்துதியை முடிந்த அளவு பாராயணம் செய்து பைரவரை தரிசித்தால் எல்லா வகையான ஆபத்துகளும் நீங்கும். கண் திருஷ்டிகள் அகலும்.
    ரக்த ஜ்வால ஜடாதரம் ஸுவிமலம் ரக்தாங்க தேஜோமயம்
    த்ருத்வா சூல கபால பாச டமருத் லோகஸ்ய ரக்ஷாகரம்
    நிர்வாணம் கந வாஹனம் த்ரிநயனம் ஆனந்த கோலாஹலம்
    வந்தே ஸர்வ பிசாசநாத வடுகம் க்ஷேத்ரஸ்ய பாலம் சிவம்.

    பொதுப்பொருள்: சிவந்த சிகையும் ஒளிமிகுந்த தேகத்தையும் கொண்ட பைரவரே, நமஸ்காரம். சூலம், கபாலம், உடுக்கை ஆகியன தரித்து உலகத்தைக் காப்பவரே, நன்றியின் வடிவமான நாயை வாகனமாகக் கொண்டவரே, நமஸ்காரம். முக்கண்கள் கொண்டவரே, ஆனந்த வடிவினரே, பூத, பிரேத, பிசாசுக் கூட்டங்களைக் கட்டுப்படுத்தும் தலைவரே, அனைத்து புண்ணிய க்ஷேத்திரங்களையும் ரக்ஷிப்பவரே, பைரவரே, நமஸ்காரம்.
    தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் உள்ளது வைரவன் கோவில். இந்த கோவில் பைரவரின் வரலாற்றை விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    தென் கயிலாயம் என்று அழைக்கப்படுவது திருவையாறு. இங்கிருந்து சுவாமி மலைக்கு சிவபெருமான் புறப்பட்டார். ‘ஓம்’ என்னும் பிரணவத்தின் உட்கருத்தை உபதேசமாக பெறுவதற்காகத் தான், சிவபெருமான் இந்தப் பயணத்தை மேற்கொண்டார். அவரோடு மற்ற தெய்வங்களும் புறப்பட்டார்கள். வழியில் வைரவன் கோவில் என்னும் தலம் வந்த போது, பைரவரிடம் அங்கேயே தங்கியிருந்து அருள்புரியும் படி சிவபெருமான் கட்டளையிட்டார்.

    அதன்படி பைரவர், வைரவன் கோவில் தலத்தில் காவிரி நதியின் வடகரையில் தெற்கு நோக்கி அமர்ந்தார். பழமையான இந்த ஆலயத்தின் வலதுபுறம் ஒரு வாய்க்கால் உத்திரவாகினியாக ஓடுகிறது. பைரவர் நோக்கிய தெற்கு முகத்தில் மயானம் உள்ளது. இது காசிக்கு சமமான பெருமையைப் பெற்ற இடமாகும்.

    முன் முகப்பைத் தாண்டியதும் விசாலமான மகா மண்டபம் உள்ளது. நடுவே நந்தியம்பெருமான் வீற்றிருக்கிறார். அடுத்துள்ள அர்த்த மண்டபத்தை அடுத்து கருவறை உள்ளது. காசியில் உள்ள கால பைரவரின் அத்தனை சக்திகளையும் உள்ளடக்கியவராக இங்குள்ள பைரவர் அருள்கிறார்.

    சிவபெருமானால் ஸ்தாபிதம் செய்யப்பட்ட இத்தல கால பைரவருக்கு, ஒவ்வொரு மாத தேய்பிறை அஷ்டமியிலும் அர்த்த ஜாமத்தில் உலக நலன் கருதி சுவர்ண ஆகர்ஷண பைரவ மூலமந்திரம் ஜபித்து சிறப்பு ஹோமம் நடைபெறுகிறது. அத்துடன் அன்று 108 வலம்புரி சங்காபிஷேகமும் கலசாபிஷேகமும் நடக்கிறது. இந்த ஹோமத்தில் கலந்து கொண்டு அர்த்த ஜாமத்தில் காலபைரவரை வழிபட அஷ்டலட்சுமிகளின் ஆசியும், கால பைரவரின் வரங்களும் ஒருங்கே கிடைக்கும் என்கின்றனர் பக்தர்கள்.

    இந்த கால பைரவரை அஷ்டமி திதியிலும், திருவாதிரை நட்சத்திரத்திலும் ஞாயிறு மற்றும் வியாழக் கிழமை உச்சி காலத்திலும், ஞாயிறு, செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களின் ராகு காலத்திலும் வணங்குவது நல்ல பலனைத் தரும்.

    நவக்கிரகங்களை தன்னுடைய சரீரத்தின் சிரம் முதல் பாதம் வரை உள்ளடக்கியவர் கால பைரவர். எனவே இவருக்கு செய்யப்படும் அனைத்து பூஜைகளும் நவக்கிர கங்களின் தோஷங்களை நிவர்த்தியாக்கும் பூஜைக்கு நிகரானதாகும்.

    ராகுகால நேரத்தில் பைரவருக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொண்டு, அவரை வணங்கினால் பல நன்மைகள் கிடைக்கும். வர வேண்டிய பணம் வந்து சேரும். தர வேண்டிய பணத்தை திருப்பித் தர வேண்டிய சூழ்நிலை உருவாகும். சனியின் தாக்கம் தீரும். கடுமையான கர்மவினைகள் தீர்ந்து விடும். திருமண தடைகள் விலகும். புத்திரபாக்கியம் கிட்டும். பைரவரை பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் தீரும்.

    பஞ்சதீபம் என்பது இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், நல்லெண்ணெய், பசு- நெய் ஆகியவை ஆகும். இவற்றை தனித்தனி தீபமாக ஏற்ற வேண்டும். அகல் விளக்கில் ஏற்றலாம். ஒன்றிலிருந்து ஒன்றை ஏற்றாமல் தனித்தனி தீபமாக ஏற்றி வழிபட்டால் எண்ணிய காரியங்கள் நிறைவேறும். மேலும் அஷ்டமி நாளில் பைரவரை சிவப்பு நிற அரளியால் வழிபட்டால் நல்ல மக்கள் செல்வங்களைப் பெறலாம்.

    இந்த ஆலயம் காலை 11 மணி முதல் 12 மணி வரையிலும், ஞாயிறு மட்டும் மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    அமைவிடம்

    தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு- கும்பகோணம் சாலையில் திருவையாறில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது வைரவன் கோவில். இந்த சிற்றூரில் சாலை ஓரத்திலேயே ஆலயம் இருக்கிறது. பஸ் வசதிகள் உள்ளன.
    ஆதி மகா பைரவர் தோன்றியபோது, அவரது கோப அக்னியில் இருந்து அஷ்ட பைரவர்கள் தோன்றினர். இவரை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    ஆதி மகா பைரவர் தோன்றியபோது, அவரது கோப அக்னியில் இருந்து அஷ்ட பைரவர்கள் தோன்றினர். அசிதாங்க பைரவர், குரு பைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர், பீஷண பைரவர், சம்ஹார பைரவர் என்னும் அந்த அஷ்ட பைரவர்களுக்கும், பிராஹ்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி, சண்டிகை என்னும் அஷ்ட மாதர்கள் துணைகளாக உள்ளனர்.

    அஷ்ட பைரவர்களுக்கும் அன்னம், ரிஷபம், மயில், கருடன், குதிரை, யானை, சிம்மம், நாய் என்னும் எட்டு வாகனங்கள் அளிக்கப்பட்டுள்ளது. இந்த எட்டு பைரவர்களும் எண்திசைகளில் இருந்து எட்டுவிதமான கடமைகளை செய்த படியால், அறுபத்து நான்கு பைரவர்களாக உருப்பெற்றனர். திருவண்ணாமலை ஆலயத்தில் உள்ள கால பைரவரின் மண்டபத்தில், எட்டு பைரவர்களின் சுதைச் சிற்பங்களை தரிசிக்கலாம்.

    சீர்காழி சட்டநாதர் ஆலய தெற்கு பிராகாரத்தில் உள்ள வலம்புரி மண்டபத்தில் அஷ்ட பைரவர்கள் வீற்றிருப்பார்கள். அஷ்ட பைரவர்களும் வழிபட்ட எட்டு லிங்கங்கள் கொண்ட கோவில் காஞ்சீபுரம் அருகிலுள்ள பிள்ளையார்பாளையம் என்ற இடத்தில் உள்ளது. விழுப்புரம் - புதுச்சேரி சாலையில் உள்ள வடுவூர் சிவன் கோவிலில் எட்டு வடிவங்களில் உள்ள பைரவர்களைக் காணலாம். இதேபோல் அறுபத்து நான்கு பைரவர்களுக்கும் தனித்தனி பெயர் உள்ளது. இவர்கள் அனைவரின் திருவுருவங்களும், கங்கை நதிக்கரையில் உள்ள ஒரு ஆலயத்தில் காணப்படுகிறது.
    அழிவிடை தாங்கி பைரவபுரம் கால பைரவரை வணங்கினால் முன்னோர்களின் சாபமும், பெற்றோர்களின் பாவமும், பிறப்பின் கர்ம வினைகளும் அகலும். பில்லி சூனியம் விலகும்.
    பைரவரின் எட்டு விதமான தோற்றங்களை, ஒரே ஆலயத்தில் வழிபடும் சிறப்பு மிக்கதாக விளங்குகிறது, பைரவபுரம் திருத்தலம். இதனை ‘அழிவிடை தாங்கி பைரவபுரம்’ என்றும் அழைக்கிறார்கள்.

    சுமார் 500 வருடங்கள் பழைமையானது இந்த ஆலயம். கோவிலில் அருள்பாலிக்கும் பைரவர் தெற்கு நோக்கி காட்சி தந்து, அருள்பாலிக்கிறார். பொதுவாக பைரவரின் வாகனம் மேற்கு நோக்கி இருக்கும். ஆனால் இங்குள்ள நாய் வாகனம் கிழக்கு நோக்கி இருப்பது வித்தியாசமாக உள்ளது. காசியிலிருக்கும் கால பைரவருக்கு நிகரான ஆலயம் இது என்று சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டில் பல பைரவர் கோவில்கள் இருந்தாலும், சொர்ணகால பைரவருக்கான தனி ஆலயம் வேறு எங்கும் இல்லை என்று சொல்லப்படுகிறது. இந்த ஆலய இறைவன் விக்கிரகம், ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.

    வாஸ்து பகவானுக்கு குரு, கால பைரவர் என்பதால், இவரை வணங்கினால் நிலம் சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் விலகும். பைரவர் சனி பகவானுக்கு குருவாக இருக்கிறார். எனவே சனியில் துன்பங்களில் இருந்து விடுபடலாம். மேலும் திருமணத்தடை நீங்கும். பிரிந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வர். பில்லி சூனியம் விலகும். வியாபார அபிவிருத்தி பெரும். வீட்டில் சண்டை சச்சரவுகள் விலகும். பூர்வீக தோஷம் அனைத்தும் நிவர்த்தி ஆகும். முன்னோர்களின் சாபமும், பெற்றோர்களின் பாவமும், பிறப்பின் கர்ம வினைகளும் அகலும். மனதுக்கு நிம்மதி கிடைக்கும்.

    தேய்பிறை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை ஆலயம் திறந்திருக்கும்.

    திருவண்ணமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகாவில் உள்ளது அழிவிடைதாங்கி கிராமம் என்னும் மதுரா பைரவபுரம். காஞ்சீபுரத்தில் இருந்து வெம்பாக்கம் வழியாக அழிவிடைதாங்கி வந்தடையலாம், வெம்பாக்கத்திலிருந்து ஷேர் ஆட்டோ மூலமாகவும் வரலாம்.
    நெல்லை அருகே உள்ள அருகன்குளம் ராமலிங்கசுவாமி கோவிலில் மகாதேவ அஷ்டமியையொட்டி அன்னாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    நெல்லை அருகே உள்ள அருகன்குளம் பழைய கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த ராமலிங்கசுவாமி சமேத பர்வதவர்தினி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் தாமிரபரணி நதிக்கரையில் இயற்கை சூழல் நிறைந்த இடத்தில் உள்ளது. இந்த கோவில் ராமபிரான் வழிபட்ட கோவிலாகும். இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கான வேலைகள் நடந்து வருகிறது.

    இந்த கோவில் நேற்று காலை 10 மணிக்கு மகாதேவ அஷ்டமியையொட்டி ராமலிங்கசுவாமி, சிறப்பு கும்ப பூஜை நடந்தது. மதியம் 12 மணிக்கு அன்னாபிஷேகமும், இதைத்தொடர்ந்து சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அங்குள்ள பிண்டம் போட்ட ராமருக்கும் சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. மதியம் 2 மணிக்கு அன்னதானம் நடந்தது.

    கார்த்திகை மாதம் தேய்பிறையில் வருகின்ற அஷ்டமி திதி, மகாதேவ அஷ்டமியாகும். இந்த தேய்பிறை அஷ்டமியில் தான் கால பைரவர் தோன்றினார். இதனால் அனைத்து சிவன் கோவில்களிலும் உள்ள காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெறும். நெல்லையப்பர் கோவிலில் மகாதேவ அஷ்டமியையொட்டி சுவாமிக்கும், அம்பாளுக்கும், காலபைரவருக்கும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இதையொட்டி காலபைரவருக்கு பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர்.

    பாளையங்கோட்டை திரிபுராந்தீசுவரர் கோவிலில் உள்ள மகாதேவருக்கு நேற்று மாலையில் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 
    அஷ்டமி திதியில் உள்ளம் உருகி பைரவரை நினைத்து காலையில் இருந்து விரதமிருந்து ஒருவேளை உணவு உண்டு பைரவருக்கு நம்மால் முடிந்தவரை பூஜை செய்தால் நினைத்தது எல்லாம் நடக்கும்.
    அஷ்டமி திதியில் பைரவரை வணங்கினால் ஐஸ்வர்யம், சுகம், பொன், பொருளையும் தருவார். காரணம் அஷ்டமி திதியில் அஷ்டலட்சுமிகளும் பைரவரை வணங்கி பைரவரின் அருளால் தன்னை வணங்கும் பக்தர்களுக்கு அஷ்டலட்சுமிகள் அருள் புரிவதால் நாமும் அஷ்டமி திதியில் உள்ளம் உருகி பைரவரை நினைத்து காலையில் இருந்து விரதமிருந்து ஒருவேளை உணவு உண்டு பைரவருக்கு நம்மால் முடிந்தவரை பூஜை செய்தால் நினைத்தது எல்லாம் நடக்கும்.

    ஸ்ரீ பைரவருக்கு பவுர்ணமிக்குப் பின்வரும் தேய்பிறை அஷ்டமி யில் பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும்.
    கால பைரவர் உடலில் பூமியைத் தாங்கும் எட்டு நாகங்களும் மாலையாக இருந்து அலங்கரிப்பதால் இவரை வழிபட்டால் சர்ப்ப தோஷங்கள் நீங்கும்.

    ஆறு தேய்பிறை அஷ்டமிகளில் பைரவரை சிவப்பு நிற அரளியால் வழிபட்டால் நல்ல மக்கள் செல்வங்களைப் பெறலாம். அஷ்டமி திதியில் மற்றும் பிரதி தமிழ் மாதம் எல்லாத் தேதியிலும் ஆயில்யம், சுவாதி, மிருகசீரிஷம் நட்சத்திர தினங்களிலும் பைரவரை வழிபட்டால் உத்தியோகத்தில் மதிப்பும், பதவி உயர்வும் கிட்டும். தொழிலில் லாபம் கிட்டும்.

    சனி பிரதோஷத்தன்று பைரவருக்கு தயிர் அன்னம் படைத்து வழிபட்டால் வழக்குகளில் வெற்றி கிட்டும். தேய்பிறை அஷ்டமியில் பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். நல்லருள் கிட்டும். பஞ்ச தீபம் என்பது இலுப்பை எண்ணெய், விளக்கு எண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணை, பசு நெய் ஆகும். இவற்றைத் தனித்தனி தீபமாக ஏற்ற வேண்டும்.
    இன்று தேய்பிறை அஷ்டமி திதியில் இந்த 108 போற்றியை சொல்லி பைரவர் வழிபாடு செய்தால் கஷ்டங்கள் படிப்படியாக குறையும். அந்த 108 போற்றியை கீழே பார்க்கலாம்.
    தேய்பிறை அஷ்டமி திதியில் பைரவர் வழிபாடு செய்வது பயத்தைப் போக்கி, வாழ்வில் தன்னம்பிக்கையைத் தரும். இந்த நாளில் மாலை 4.30- 6 மணிக்குள் திருவிளக்கேற்றி வீட்டிலேயே இந்த போற்றியைச் சொல்லலாம். பைரவர் சன்னதி முன்பு கூட்டாக அமர்ந்து, ஒருவர் சொல்ல மற்றவர்கள் திருப்பிச் சொல்லலாம்.

    01. ஓம் பைரவனே போற்றி
    02. ஓம் பயநாசகனே போற்றி
    03. ஓம் அஷ்டரூபனே போற்றி
    04. ஓம் அஷ்டமித் தோன்றலே போற்றி
    05. ஓம் அயன்குருவே போற்றி

    06. ஓம் அறக்காவலனே போற்றி
    07. ஓம் அகந்தையழிப்பவனே போற்றி
    08. ஓம் அடங்காரின் அழிவே போற்றி
    09. ஓம் அற்புதனே போற்றி
    10. ஓம் அசிதாங்க பைரவனே போற்றி

    11. ஓம் ஆனந்த பைரவனே போற்றி
    12. ஓம் ஆலயக்காவலனே போற்றி
    13. ஓம் இன்னல் பொடிப்பவனே போற்றி
    14. ஓம் இடுகாட்டில் இருப்பவனே போற்றி
    15. ஓம் உக்ர பைரவனே போற்றி

    16. ஓம் உடுக்கை ஏந்தியவனே போற்றி
    17. ஓம் உதிரம் குடித்தவனே போற்றி
    18. ஓம் உன்மத்த பைரவனே போற்றி
    19. ஓம் உறங்கையில் காப்பவனே போற்றி
    20. ஓம் ஊழ்வினை தீர்ப்பவனே போற்றி

    21. ஓம் எல்லை தேவனே போற்றி
    22. ஓம் எளிதில் இரங்குபவனே போற்றி
    23. ஓம் கபாலதாரியே போற்றி
    24. ஓம் கங்காளமூர்த்தியே போற்றி
    25. ஓம் கர்வ பங்கனே போற்றி

    26. ஓம் கல்பாந்த பைரவனே போற்றி
    27. ஓம் கதாயுதனே போற்றி
    28. ஓம் கனல்வீசும் கண்ணனே போற்றி
    29. ஓம் கருமேக நிறனே போற்றி
    30. ஓம் கட்வாங்க தாரியே போற்றி

    31. ஓம் களவைக் குலைப்போனே போற்றி
    32. ஓம் கருணாமூர்த்தியே போற்றி
    33. ஓம் கால பைரவனே போற்றி
    34. ஓம் காபாலிகர் தேவனே போற்றி
    35. ஓம் கார்த்திகையில் பிறந்தவனே போற்றி

    36. ஓம் காளாஷ்டமிநாதனே போற்றி
    37. ஓம் காசிநாதனே போற்றி
    38. ஓம் காவல்தெய்வமே போற்றி
    39. ஓம் கிரோத பைரவனே போற்றி
    40. ஓம் கொன்றைப்பிரியனே போற்றி

    41. ஓம் சண்ட பைரவனே போற்றி
    42. ஓம் சட்டை நாதனே போற்றி
    43. ஓம் சம்ஹார பைரவனே போற்றி
    44. ஓம் சங்கடம் தீர்ப்பவனே போற்றி
    45. ஓம் சிவத்தோன்றலே போற்றி

    46. ஓம் சிவாலயத்து இருப்போனே போற்றி
    47. ஓம் சிக்ஷகனே போற்றி
    48. ஓம் சீர்காழித்தேவனே போற்றி
    49. ஓம் சுடர்ச்சடையனே போற்றி
    50. ஓம் சுதந்திர பைரவனே போற்றி

    51. ஓம் சிவ அம்சனே போற்றி
    52. ஓம் சுவேச்சா பைரவனே போற்றி
    53. ஓம் சூலதாரியே போற்றி
    54. ஓம் சூழ்வினை அறுப்பவனே போற்றி
    55. ஓம் செம்மேனியனே போற்றி

    56. ஓம் க்ஷேத்ரபாலனே போற்றி
    57. ஓம் தட்சனை அழித்தவனே போற்றி
    58. ஓம் தலங்களின் காவலனே போற்றி
    59. ஓம் தீது அழிப்பவனே போற்றி
    60. ஓம் துர்சொப்பன நாசகனே போற்றி

    61. ஓம் தெற்கு நோக்கனே போற்றி
    62. ஓம் தைரியமளிப்பவனே போற்றி
    63. ஓம் நவரச ரூபனே போற்றி
    64. ஓம் நரசிம்ம சாந்தனே போற்றி
    65. ஓம் நள்ளிரவு நாயகனே போற்றி

    66. ஓம் நரகம் நீக்குபவனே போற்றி
    67. ஓம் நாய் வாகனனே போற்றி
    68. ஓம் நாடியருள்வோனே போற்றி
    69. ஓம் நிமலனே போற்றி
    70. ஓம் நிர்வாணனே போற்றி

    71. ஓம் நிறைவளிப்பவனே போற்றி
    72. ஓம் நின்றருள்வோனே போற்றி
    73. ஓம் பயங்கர ஆயுதனே போற்றி
    74. ஓம் பகையளிப்பவனே போற்றி
    75. ஓம் பரசு ஏந்தியவனே போற்றி

    76. ஓம் பலிபீடத்து உறைவோனே போற்றி
    77. ஓம் பாபம் தீர்ப்பவனே போற்றி
    78. ஓம் பால பைரவனே போற்றி
    79. ஓம் பாம்பணிந்த தெய்வமே போற்றி
    80. ஓம் பிரளயகாலனே போற்றி

    81. ஓம் பிரம்ம சிரச்சேதனே போற்றி
    82. ஓம் பூஷண பைரவனே போற்றி
    83. ஓம் பூதங்களின் நாதனே போற்றி
    84. ஓம் பெரியவனே போற்றி
    85. ஓம் பைராகியர் நாதனே போற்றி

    86. ஓம் மல நாசகனே போற்றி
    87. ஓம் மகோதரனே போற்றி
    88. ஓம் மகா பைரவனே போற்றி
    89. ஓம் மலையாய் உயர்ந்தவனே போற்றி
    90. ஓம் மகா குண்டலனே போற்றி

    91. ஓம் மார்த்தாண்ட பைரவனே போற்றி
    92. ஓம் முக்கண்ணனே போற்றி
    93. ஓம் முக்தியருள்வோனே போற்றி
    94. ஓம் முனீஸ்வரனே போற்றி
    95. ஓம் மூலமூர்த்தியே போற்றி

    96. ஓம் யமவாதனை நீக்குபவனே போற்றி
    97. ஓம் யாவர்க்கும் எளியவனே போற்றி
    98. ஓம் ருத்ரனே போற்றி
    99. ஓம் ருத்ராட்சதாரியே போற்றி
    100. ஓம் வடுக பைரவனே போற்றி

    101. ஓம் வடுகூர் நாதனே போற்றி
    102. ஓம் வடகிழக்கு அருள்வோனே போற்றி
    103. ஓம் வடைமாலைப் பிரியனே போற்றி
    104. ஓம் வாரணாசி வேந்தே போற்றி
    105. ஓம் வாமனர்க்கு அருளியவனே போற்றி

    106. ஓம் விரும்பியதை அருள்வோனே போற்றி
    107. ஓம் விபீஷண பைரவனே போற்றி
    108. ஓம் வீழாமல் காப்பவனே போற்றி போற்றி! 
    ஜாதகத்தில் பல்வேறு பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் அந்தந்த பிரச்சனைகளுக்கு உகந்த பரிகாரங்களை பைரவருக்கு செய்து வந்தால் பிரச்சனைகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.
    நவக்கிரகங்களால் ஏற்படும் துன்பம் நீங்க

    பைரவருக்கு தயிர் அன்னம் நைவேத்தியம் செய்து ஏழைகளுக்கு வழங்கி, நெய்தீபம் ஏற்றி, சகஸ்ரநாம அர்ச்சனை செய்ய வேண்டும்.

    குழந்தைப் பேறு கிடைக்க

    தேய்பிறை அஷ்டமி திதியில் நெய் தீபம் ஏற்றி பைரவருக்கு சிவப்பு அரளியால் அர்ச்சனை செய்து ஏழைக் குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்க வேண்டும்.

    வறுமை நீங்க

    நெய்தீபம் ஏற்றி வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் பைரவருக்கு வில்வம், அரளி பூவினால் அர்ச்சனை செய்தால் வறுமை நீங்கும்.

    திருமணம் நடக்கும்

    ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகால நேரத்தில் பைரவரை வணங்க வேண்டும். அதனால் உடனே நன்மை உண்டாகும். பில்லி, சூனியம், ஏவல் அகலும். திருமணம் கைகூடும். 6 சனிக் கிழமைகளில் 6 எண்ணை தீபம் ஏற்றி வழிபட்டால் தடைப்பட்ட அனைத்து காரியங்களும் நிறைவேறும். தடைபட்ட திருமணம் கை கூடும்.
    பனிரெண்டு ராசிகளும் பைரவருடைய உடலின் அங்கங்களாக உள்ளன. எந்த ராசியைச் சேர்ந்தவராயினும் நவக்கோள்களில் எந்த கோளின் தாக்கத்தால் பாதிப்பு வந்தாலும் கெடுதல்கள் அனைத்திலிருந்தும் விடுவிப்பார்.
    பிருஹத்ஜாதகம் என்ற நூலில் பனிரெண்டு ராசிகளும் பைரவருடைய உடலின் அங்கங்களாக இருப்பதாகவும், அவை

    மேஷம்-சிரசு,
    ரிஷபம்-வாய்,
    மிதுனம்-இரு கைகள்,
    கடகம்-மார்பு,
    சிம்மம்-வயிறு,
    கன்னி-இடை,
    துலாம்-புட்டங்கள்,
    விருச்சிகம்-மர்ம ஸ்தானங்கள்,
    தனுசு-தொடை,
    மகரம்-முழங்கால்கள்,
    கும்பம்-காலின் கீழ்பகுதி,
    மீனம்-கால்களின் அடிப்பாகம் என பனிரெண்டு ராசிகளும் நிறைந்துள்ளன.

    மேலும் பைரவரின் சேவர்களாக நவக்கோள்களும் இருப்பதால் தன்னை வணங்கக் கூடிய அன்பர். எந்த ராசியைச் சேர்ந்தவராயினும் நவக்கோள்களில் எந்த கோளின் தாக்கத்தால் பாதிப்பு வந்தாலும் கெடுதல்கள் அனைத்திலிருந்தும் விடுவிப்பார்.

    மகா பைரவர்- மகாபைரவியுடன் அருள்பாலிக்கும் தலமாகவும், பைரவப் பெருமான் சிவலிங்க ரூபமாக காட்சியளிக்கும் தலமாகவும் இந்த ஆலயம் திகழ்கிறது.
    ஆதியும் அந்தமும் இல்லாதவர் சிவபெருமான். இந்த பிரபஞ்சத்திலுள்ள ஜீவராசிகள் மட்டுமின்றி ஏனைய பிற இறை வடிவங்களையும் படைத்தவரும் அவரே. அசுரர்களால் உலகம் துன்பமடையும் பொழுதெல்லாம், சிவபெருமான் தனது அம்சமாகவும், வலிமைமிக்க ஞானமூர்த்தியாகவும் பைரவரை உருவாக்கினார் என்றும், எட்டுதிசைகளிலும் அவரை குடிகொள்ளச் செய்து உலகினைக் காக்கும் பொறுப்பை அளித்து, அதன் மூலம் அசுரர்களை வென்று உயிர்களுக்கு அமைதியளித்தார் என்றும் பைரவர் தோற்றத்தைப் பற்றி புராணங்கள் கூறுகின்றன.

    ‘பைரவர்’ என்றால் ‘பயத்தைப் போக்குபவர்’, ‘பாபத்தையும் இன்னல்களையும் நீக்குபவர்’ என்று பொருள். படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் ஒடுக்குதல் ஆகிய முத்தொழில்களின் மூலமாக, பல கோடி உயிர்களை காப்பதற்காக படைக்கப்பட்ட பைரவருக்கு, சிவபெருமானின் கையில் இருக்கும் திரிசூலமே ஆயுதமாக வழங்கப்பட்டிருக்கிறது.

    படைத்தல் தொழிலை உடுக்கையும், காத்தல் தொழிலை கையில் உள்ள கபாலமும், அழித்தல் தொழிலை உடலில் பூசிய விபூதியும் குறிக்கும். பைரவரை, பூஜை செய்தால் மட்டுமே ஆபத்துகளில் இருந்து காப்பாற்றுவார் என்றில்லை. இக்கட்டான நேரத்தில் முழு மனதுடன் அவரை நினைத்தாலே போதும். நம்மை துன்பங்களில் இருந்து உடனடியாக காப்பார்.

    பைரவர் தோற்றம் :
     
    பைரவர் தோன்றியது பற்றி இருவிதமான வரலாறுகள் கூறப்படுகின்றன. பெண்கள் பலவீனமானவர்கள் என்று கருதிய தானகாசுரன் என்னும் அசுரன், ‘பெண்களால் மட்டுமே எனக்கு மரணம் நிகழ வேண்டும்’ என்ற வரத்தைப் பெற்றான்.

    அந்த வரத்தின் காரணமாக, பிரம்மதேவன் முதலான தேவர்களை அவன் துன்புறுத்தினான். அவனது கொடுமையில் இருந்து விடுபட, தேவர்கள் அனைவரும் சிவபெருமானை வேண்டினர். சிவபெருமானும் தனது அம்சமான காளியைத் தோற்றுவித்து, தானகாசுரனை அழிக்க கட்டளையிட்டார். அதன்படியே அசுரனை அழித்த காளி, அதன் பிறகும் கோபத் தீயுடன் உலகெங்கும் சுற்றித் திரிந்தாள். அவளது கோபத் தீயினால், உலக உயிர்கள் அனைத்தும் துன்பமடைந்தன.

    இதையடுத்து மாயையை, ஒரு பாலகன் உருவில் இடுகாட்டில் கிடந்து அழும்படி செய்தார் ஈசன். அங்கு வந்த காளி, குழந்தையை தூக்கி அணைத்து பால் கொடுத்தாள். காளியிடம் பால் குடித்த அந்தக் குழந்தை, பாலுடன் காளியின் கோபத் தீயையும் சேர்த்து பருகியது. அதனால் காளியின் கோபம் தணிந்து, உலக உயிர்கள் காப்பாற்றப்பட்டன.

    காளியின் கோபத்தைத் தணித்த குழந்தை ‘ஷேத்திரபாலர்’ என்று அழைக்கப்பட்டது. ‘ஷேத்திரம்’ என்றால் ‘மண்’ என்று பொருள். மண்ணில் கிடந்த பாலகன் என்பதால், ‘ஷேத்திரபாலர்’ அதாவது ‘மண்ணின் மைந்தர்’ என்று அழைக்கப்பட்டார். நாய் வாகனத்தின் மீது அமர்ந்திருக்கும் அந்த ஷேத்திரபாலரே, பைரவர் திருவடிவம் என்று லிங்க புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அந்தகாசுரன் என்னும் அசுரன், சிவபெருமானை நினைத்து பஞ்சாக்கினி வளர்த்து கடுந்தவம் செய்தான். அதன் வாயிலாக சிவபெருமானிடம் இருந்து எண்ணற்ற வரங்களைப் பெற்றான். பின்னர் தேவர்களை வென்றான். தோல்வியுற்ற தேவர்களை, பெண்களின் ஆடையை அணிந்து கொண்டு தனக்கு சேவகம் செய்யும்படி கூறி அவமதித்தான்.

    அசுரனின் கொடுமையை தாங்க முடியாத தேவர்கள், பெண் வேடத்துடனேயே சிவபெருமானைச் சந்தித்து, தங்கள் இன்னல்களை அகற்றும்படி வேண்டினர். அவர்களின் துயரம் கேட்டு சிவபெருமான் கோபம் கொண்டார். அவர் அடைந்த உக்கிரத்தால் உடல் வெப்பமாகி, நெற்றியில் வியர்வை உருவானது. அந்த வியர்வையில் இருந்து மகா பைரவர், அதிஉக்கிரத்துடன் தோன்றினார். அந்தகாசுரன் மீது போர் தொடுத்து, தனது சூலாயுதத்தில் அவனை குத்தித் தூக்கியவாறு, மூன்று உலகங்களிலும் வலம் வந்தார் என்பது மற்றொரு வரலாறு.



    இதுபோல் அநேக அசுரர்கள் தோன்றும் போதெல்லாம், சிவ பெருமான் அநேக பைரவர்களைத் தோற்றுவித்து அவர்களை அழித்தார். பொதுவாக சிவாலயங்களில் பைரவரின் திருவுருவம் ஆலயத்தின் வடகிழக்கு திசையில் இடம்பெற்றிருக்கும். தவிர அஷ்ட பைரவர்கள் தனித்தனியாகவும், ஒன்றாகவும் பல ஆலயங்களில் இடம்பிடித்திருப்பார்கள். இருப்பினும் சிவபெருமானால் முதன்முதலாக உருவாக்கப்பட்டவரும், அஷ்ட பைரவர்களை உருவாக்கியவருமான ஆதி மகாபைரவ மூர்த்திக்கான ஆலயம் சோழவரம் என்ற ஊரில் இருக்கிறது.

    இவ்வாலயம் பல சிறப்புகளைக் கொண்டுள்ளது. மகாபைரவர் பூவுலகில் முதன்முதலில் தம் திருவடிகளை எடுத்து வைத்த புண்ணிய பூமியாகவும், மகா பைரவர்- மகாபைரவியுடன் அருள்பாலிக்கும் தலமாகவும், பைரவப் பெருமான் சிவலிங்க ரூபமாக காட்சியளிக்கும் தலமாகவும் இந்த ஆலயம் திகழ்கிறது.

    மூலவரின் திருநாமம் மகா பைரவேஸ்வரர் என்பதாகும். அம்பாளின் திருநாமம் மகா பைரவேஸ்வரி. உற்சவர்களின் திரு நாமம் கல்யாண பைரவர், கல்யாண பைரவி. எட்டு அல்லது அதற்கு மேலான எண்ணிக்கை கொண்ட இலைகள் கொண்ட வில்வ மரம் தல விருட்சமாக உள்ளது. ஆலய தீர்த்தம் ‘பைரவ அமிர்த தீர்த்தம்’ ஆகும். திராவிட கட்டிடக் கலையம்சத்துடன் கட்டப்பட்டுள்ள இந்த ஆலயம், ராஜராஜசோழன் காலத்தில் கட்டப்பட்டதாக சொல்லப்பட்டாலும், அதற்கான ஆதாரம் எதுவும் இல்லை.

    அகத்திய மகரிஷி இந்த ஆலய மகா பைரவரை வணங்கி வழிபட்டுள்ளார். அஷ்டதிக்கு பாலகர்களும், அஷ்டவசுக்களும் இவ்வாலய இறைவனை வணங்கி பேறு பெற்றள்ளனர். இந்தத் திருத்தலம் உள்ள சில பகுதிகளை தாங்கியும், புறவெளி சுத்திகரிப்பு பணியையும் அஷ்டதிக்கு பாலகர்களும், அஷ்ட வசுக்களும் செய்து வருகின்றனர். எனவே இத்தலம் வாஸ்து சக்தி நிறைந்ததாக விளங்குகிறது. வாராந்தி வாஸ்து நாளான செவ்வாய்க்கிழமைகளிலும், வருடத்தின் எட்டு வாஸ்து நாட்களிலும் இந்த ஆலயத்தில் வாஸ்து பூஜை செய்யப்படுகிறது. புதிய வீடு கட்டுபவர்கள் அதுபோன்ற நாட்களில் இங்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.

    ஆலய அமைப்பு :

    கிழக்கு நோக்கிய இந்த ஆலயம், தரைமட்டத்தில் இருந்து உயர்த்தப்பட்ட பீடத்தில் விமானம் வரை கருங்கல்லால் கட்டப்பட்ட கற்றளி ஆகும். செப்புக்காப்பு செய்யப்பட்ட படிக்கட்டு வழியே மேலேச் சென்றால், மகாநந்தி, உச்சிஷ்ட கணபதியும், வள்ளி - தெய்வானை சமேத முருகப்பெருமானும் உள்ளனர். இவர்களுக்குப் பின்புறம் சிவலிங்க ரூபத்தில் மகா பைரவர் அருள்பாலிக்கிறார். மூலவருக்கு இடதுபுறத்தில் மகா பைரவி தென்திசை நோக்கி வீற்றிருந்து அருள்புரிகிறார்.

    பிரகார சுற்றில் தெற்கில் விநாயகர், பிரளய காலமூர்த்தி, நடராஜர், முருகப்பெருமான், தட்சிணாமூர்த்தி ஆகியோரும், மேற்கில் லிங்கோத்பவர், வடக்கில் பிரம்மா, காலபைரவர், அர்த்த நாரீஸ்வரர், துர்க்கை, கங்காவிஜர்ணமூர்த்தி ஆகியோரது திருவுருவங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

    ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று, இவ்வாலயத்தில் சிறப்பு பூஜை வெகு விமரிசையாக நடைபெறுகிறது. கார்த்திகை மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி காலபைரவ அஷ்டமியாக கொண்டாடப்படுகின்றது. அன்றையதினம் எட்டுவிதமான அபிஷேகங்களுடன் சிறப்பு பூஜைகளும், திருக்கல்யாணமும், வீதியுலாவும் நடத்தப்பெறுகிறது.

    அமைவிடம் :

    விக்கிரவாண்டியில் இருந்து தஞ்சாவூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திருப்பனந்தாளில் இருந்து 6 கிலோமீட்டர் தெற்காகவும், கும்பகோணத்தில் இருந்து 12 கிலோமீட்டர் வடக்காகவும் உள்ளது சோழவரம். இந்த ஊரின் சாலையோரத்திலேயே ஆலயம் இருக்கிறது. சென்னை, கும்பகோணம், வடலூர், காட்டுமன்னார்கோயில், ஜெயங்கொண்டம் ஆகிய ஊர்களிலிருந்து அடிக்கடி பேருந்து வசதிகள் உள்ளன. ஆலயத்தின் அருகில் உள்ள ரெயில் நிலையம் கும்பகோணம் ஆகும்.
    அழிவிடைதாங்கி பைரவர் கோவிலில் 30-ம் தேதி (வெள்ளிக்கிழமை) கால பைரவாஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகமும், பூஜையும் நடைபெற உள்ளது.
    திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அருகே உள்ள அழிவிடைதாங்கியில் சொர்ணகால பைரவர் ஆலயம் அமைந்துள்ளது. சுமார் 500 வருடங்கள் பழமையானது இந்த திருக்கோயில். 

    இத்திருக்கோயில் பைரவர் தெற்கு நோக்கி காட்சிதந்து, சுனவாகனம் கிழக்கு நோக்கி தனிக்கோயிலாக அருள்பாலிக்கிறார், பொதுவாக பைரவரின் வாகனம் மேற்கு நோக்கி இருக்கும். காசியிலிருக்கும் ஸ்ரீ கால பைரவருக்கு நிகரான ஷேத்திரம், தமிழ்நாட்டில் பல பைரவர் கோயில்கள் இருந்தாலும் ஸ்ரீசொர்ணகால பைரவர் போன்ற தனி ஆலயம் வேறு எங்கும் இதுபோன்று கிடையாது. ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    இந்த ஆலயத்தில் வரும் 30-ம் தேதி (வெள்ளிக்கிழமை) கால பைரவாஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அலங்காரம், சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. சிறப்பு யாகமும் நடத்தப்பட உள்ளது. பக்தர்கள் திரளாக பங்கேற்று பைரவரின் அருள் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    ஸ்ரீசொர்ணகால பைரவரை வழிபடுவதினால் பலன்

    வாஸ்து பகவானுக்கு குரு என்பதால் நிலம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் விலகும். சனி பகவானுக்கு குரு என்பதால் சனி பகவான் தொல்லையிலிருந்து விடுபடலாம். திருமணத்தடை, பிரிந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வர். பில்லி சூனியம் விலகும். வியாபார அபிவிருத்தி, வீட்டில் சண்டை சச்சரவுகள் விலகும். பூர்வீக தோஷம் அனைத்தும் நிவர்த்தி ஆகும். முன்னோர்களின் சாபமும், பெற்றோர்களின் பாவமும், பிறப்பின் கர்ம வினைகள் அகலும். குழந்தைகள் நன்றாக படிப்பர். கடன் பிரச்சினை விலகும். மனநிலை பாதிப்பு விலகும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். மனதுக்கு நிம்மதி கிடைக்கும்.

    பரிகாரங்களும்.... தீர்வும்....

    வறுமை நீங்க :

    வெள்ளிக்கிழமை மாலை வில்வத்தினால் அர்ச்சனை செய்ய அஷ்ட தரித்திரம் விலகும்.

    பிள்ளைப்பேறு உண்டாக :

    தேய்பிரை அஷ்டமியில் விரதம் இருந்து,செவ்வரளிப் பூவாள் 11 அஷ்டமிகளில் அர்ச்சித்தால் கைமேல் பலன்.

    வழக்குகளில் வெற்றி பெற, வியாபார லாபம் அடைய :

    பைரவருக்கு ஸஹஸ்ர நாம அர்ச்சனை செய்து வடை, சர்க்கரைப் பொங்கல், தேன் முதலியன படைக்கவேண்டும்.

    இழந்த பொருட்களை திரும்ப பெற :

    7 மிளகுகளை துணியில் மூட்டை கட்டி, நல்லெண்ணைய் தீபம் ஏற்ற இழந்தவற்றை திரும்ப பெறலாம்.

    திருமண தடை நீங்க :

    ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால வேளையில் பைரவருக்கு விபூதி அபிஷேகம் செய்ய மிக விரைவில் பலன்.

    நவக்கிரக தோஷம் விலக :

    சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை மாலை ராகுகால வேளையில் பைரவருக்கு விபூதி அபிஷேகம் செய்ய மிக விரைவில் பலன். ஸ்ரீ பைரவரை தொடர்ந்து இடைவிடாமல் வழிபடுவோருக்கு சிறந்த குருநாதர் அல்லது சித்தர் அருள் தன்னால் கிடைக்கும்.

    அமைவிடம் :

    திருவண்ணமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுக்கா அழிவிடைதாங்கி கிராமம் மதுரா பைரவபுரம்.

    கோவில் திறந்திருக்கும் நேரம்:

    தேய்பிறை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் காலை 9.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.

    வழித்தடம்:

    காஞ்சிபுரத்தில் இருந்து வெம்பாக்கம் வழியாக அழிவிடைதாங்கி வந்தடையலாம், வெம்பாக்கத்திலிருந்து ஷேர் ஆட்டோ மூலமாகவும் வரலாம்.

    தொகுப்பு :

    ஸ்ரீராஜசேகர்.பு
    தொடர்புக்கு - 8248815001


    4/43, இரன்டாவது மெயின் தெரு
    அண்ணா நகர், செய்யார் - 604407
    திருவண்ணாமலை மாவட்டம்
    தமிழ்நாடு.

    Mail id:-sreerajasekarp@gmail.com. 
    தேய்பிறை அஷ்டமி திதியில் இந்த 108 போற்றியை சொல்லி பைரவர் வழிபாடு செய்தால் கஷ்டங்கள் படிப்படியாக குறையும். அந்த 108 போற்றியை கீழே பார்க்கலாம்.
    தேய்பிறை அஷ்டமி திதியில் பைரவர் வழிபாடு செய்வது பயத்தைப் போக்கி, வாழ்வில் தன்னம்பிக்கையைத் தரும். இந்த நாளில் மாலை 4.30- 6 மணிக்குள் திருவிளக்கேற்றி வீட்டிலேயே இந்த போற்றியைச் சொல்லலாம். பைரவர் சன்னதி முன்பு கூட்டாக அமர்ந்து, ஒருவர் சொல்ல மற்றவர்கள் திருப்பிச் சொல்லலாம்.

    01. ஓம் பைரவனே போற்றி
    02. ஓம் பயநாசகனே போற்றி
    03. ஓம் அஷ்டரூபனே போற்றி
    04. ஓம் அஷ்டமித் தோன்றலே போற்றி
    05. ஓம் அயன்குருவே போற்றி

    06. ஓம் அறக்காவலனே போற்றி
    07. ஓம் அகந்தையழிப்பவனே போற்றி
    08. ஓம் அடங்காரின் அழிவே போற்றி
    09. ஓம் அற்புதனே போற்றி
    10. ஓம் அசிதாங்க பைரவனே போற்றி

    11. ஓம் ஆனந்த பைரவனே போற்றி
    12. ஓம் ஆலயக்காவலனே போற்றி
    13. ஓம் இன்னல் பொடிப்பவனே போற்றி
    14. ஓம் இடுகாட்டில் இருப்பவனே போற்றி
    15. ஓம் உக்ர பைரவனே போற்றி

    16. ஓம் உடுக்கை ஏந்தியவனே போற்றி
    17. ஓம் உதிரம் குடித்தவனே போற்றி
    18. ஓம் உன்மத்த பைரவனே போற்றி
    19. ஓம் உறங்கையில் காப்பவனே போற்றி
    20. ஓம் ஊழ்வினை தீர்ப்பவனே போற்றி

    21. ஓம் எல்லை தேவனே போற்றி
    22. ஓம் எளிதில் இரங்குபவனே போற்றி
    23. ஓம் கபாலதாரியே போற்றி
    24. ஓம் கங்காளமூர்த்தியே போற்றி
    25. ஓம் கர்வ பங்கனே போற்றி

    26. ஓம் கல்பாந்த பைரவனே போற்றி
    27. ஓம் கதாயுதனே போற்றி
    28. ஓம் கனல்வீசும் கண்ணனே போற்றி
    29. ஓம் கருமேக நிறனே போற்றி
    30. ஓம் கட்வாங்க தாரியே போற்றி

    31. ஓம் களவைக் குலைப்போனே போற்றி
    32. ஓம் கருணாமூர்த்தியே போற்றி
    33. ஓம் கால பைரவனே போற்றி
    34. ஓம் காபாலிகர் தேவனே போற்றி
    35. ஓம் கார்த்திகையில் பிறந்தவனே போற்றி

    36. ஓம் காளாஷ்டமிநாதனே போற்றி
    37. ஓம் காசிநாதனே போற்றி
    38. ஓம் காவல்தெய்வமே போற்றி
    39. ஓம் கிரோத பைரவனே போற்றி
    40. ஓம் கொன்றைப்பிரியனே போற்றி

    41. ஓம் சண்ட பைரவனே போற்றி
    42. ஓம் சட்டை நாதனே போற்றி
    43. ஓம் சம்ஹார பைரவனே போற்றி
    44. ஓம் சங்கடம் தீர்ப்பவனே போற்றி
    45. ஓம் சிவத்தோன்றலே போற்றி

    46. ஓம் சிவாலயத்து இருப்போனே போற்றி
    47. ஓம் சிக்ஷகனே போற்றி
    48. ஓம் சீர்காழித்தேவனே போற்றி
    49. ஓம் சுடர்ச்சடையனே போற்றி
    50. ஓம் சுதந்திர பைரவனே போற்றி

    51. ஓம் சிவ அம்சனே போற்றி
    52. ஓம் சுவேச்சா பைரவனே போற்றி
    53. ஓம் சூலதாரியே போற்றி
    54. ஓம் சூழ்வினை அறுப்பவனே போற்றி
    55. ஓம் செம்மேனியனே போற்றி

    56. ஓம் க்ஷேத்ரபாலனே போற்றி
    57. ஓம் தட்சனை அழித்தவனே போற்றி
    58. ஓம் தலங்களின் காவலனே போற்றி
    59. ஓம் தீது அழிப்பவனே போற்றி
    60. ஓம் துர்சொப்பன நாசகனே போற்றி

    61. ஓம் தெற்கு நோக்கனே போற்றி
    62. ஓம் தைரியமளிப்பவனே போற்றி
    63. ஓம் நவரச ரூபனே போற்றி
    64. ஓம் நரசிம்ம சாந்தனே போற்றி
    65. ஓம் நள்ளிரவு நாயகனே போற்றி

    66. ஓம் நரகம் நீக்குபவனே போற்றி
    67. ஓம் நாய் வாகனனே போற்றி
    68. ஓம் நாடியருள்வோனே போற்றி
    69. ஓம் நிமலனே போற்றி
    70. ஓம் நிர்வாணனே போற்றி

    71. ஓம் நிறைவளிப்பவனே போற்றி
    72. ஓம் நின்றருள்வோனே போற்றி
    73. ஓம் பயங்கர ஆயுதனே போற்றி
    74. ஓம் பகையளிப்பவனே போற்றி
    75. ஓம் பரசு ஏந்தியவனே போற்றி

    76. ஓம் பலிபீடத்து உறைவோனே போற்றி
    77. ஓம் பாபம் தீர்ப்பவனே போற்றி
    78. ஓம் பால பைரவனே போற்றி
    79. ஓம் பாம்பணிந்த தெய்வமே போற்றி
    80. ஓம் பிரளயகாலனே போற்றி

    81. ஓம் பிரம்ம சிரச்சேதனே போற்றி
    82. ஓம் பூஷண பைரவனே போற்றி
    83. ஓம் பூதங்களின் நாதனே போற்றி
    84. ஓம் பெரியவனே போற்றி
    85. ஓம் பைராகியர் நாதனே போற்றி

    86. ஓம் மல நாசகனே போற்றி
    87. ஓம் மகோதரனே போற்றி
    88. ஓம் மகா பைரவனே போற்றி
    89. ஓம் மலையாய் உயர்ந்தவனே போற்றி
    90. ஓம் மகா குண்டலனே போற்றி

    91. ஓம் மார்த்தாண்ட பைரவனே போற்றி
    92. ஓம் முக்கண்ணனே போற்றி
    93. ஓம் முக்தியருள்வோனே போற்றி
    94. ஓம் முனீஸ்வரனே போற்றி
    95. ஓம் மூலமூர்த்தியே போற்றி

    96. ஓம் யமவாதனை நீக்குபவனே போற்றி
    97. ஓம் யாவர்க்கும் எளியவனே போற்றி
    98. ஓம் ருத்ரனே போற்றி
    99. ஓம் ருத்ராட்சதாரியே போற்றி
    100. ஓம் வடுக பைரவனே போற்றி

    101. ஓம் வடுகூர் நாதனே போற்றி
    102. ஓம் வடகிழக்கு அருள்வோனே போற்றி
    103. ஓம் வடைமாலைப் பிரியனே போற்றி
    104. ஓம் வாரணாசி வேந்தே போற்றி
    105. ஓம் வாமனர்க்கு அருளியவனே போற்றி

    106. ஓம் விரும்பியதை அருள்வோனே போற்றி
    107. ஓம் விபீஷண பைரவனே போற்றி
    108. ஓம் வீழாமல் காப்பவனே போற்றி போற்றி! 
    ×