search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95718"

    • தோசை, இட்லி, சப்பாத்திக்கு ருசியாக இருக்கும்.
    • உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்லாமல் மேனியின் அழகையும் பராமரிக்க உதவும்.

    தேவையான பொருட்கள் :

    கேரட் துருவல் - 1 கப்,

    கொள்ளு - 30 கிராம்,

    வெங்காயம் - 1

    பூண்டு - 4 பல்,

    காய்ந்த மிளகாய் -10,

    உளுந்தம் பருப்பு - 1 கைப்பிடி,

    கடலைப் பருப்பு - 1 கைப்பிடி,

    கடுகு, கறிவேப்பிலை,

    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை :

    வெங்காயத்தை அரிந்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம், கேரட் துருவல், பூண்டை போட்டு வதக்கவும்.

    பின்பு மிளகாய் வற்றல், கொள்ளு, உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு ஆகியவற்றைத் தனியாக வறுக்கவும்.

    அனைத்தும் சூடு ஆறியவுடன் வதக்கிய கலவையுடன் உப்பு, புளி தண்ணீர் சேர்த்து நைசாக மிக்சியில் அரைக்கவும்.

    இத்துடன் வறுத்த பருப்புகள், மிளகாய் சேர்த்து கொர கொரப்பாக அரைக்கவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து துவையலில் சேர்த்து கலக்கவும்.

    சுவையான கொள்ளு கேரட் துவையல் ரெடி.

    கடையில் விற்கும் உருளைக்கிழங்கு சிப்ஸ் ஆரோக்கியமானதாக இருக்காது. இன்று வீட்டிலேயே எளிய முறையில் உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    உருளைக்கிழங்கு - 1/2 கிலோ.
    தனி மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்.
    எண்ணெய் - 150 கிராம்.

    செய்முறை:

    உருளைக்கிழங்கை முதலில் நன்றாக கழுவி எடுத்து அதனை சீவி வைத்துக் கொள்ளவும்.

    ஒரு சிறிய கிண்ணத்தில் உப்பு மற்றும் மிளகாயைத் தூளை சேர்த்து கலக்கி வைக்கவும்.

    அடுப்பினில் கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் சீவிய உருளைக் கிழங்கைப் போட்டு, பொரித்து எடுக்கவும்.

    பொரித்த உருளைக் கிழங்கு சிப்ஸை பாத்திரத்தில் போட்டு அதன் மீது மிளகாய் மற்றும் உப்பு தூள் கலந்த கலவையை தூவி எல்லா சிப்ஸ்களிலும் படும்படி கலக்கி கொள்ளவும்.

    சுவையான உருளைக் கிழங்கு சிப்ஸ் தயார்.

    காற்று புகாத பாத்திரத்தில் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளவும்.

    ஒரு வாரம்வரை பயன்படுத்தலாம்.

    குறிப்பு: உருளைக் கிழங்கை சீவி துணியின் மேல் பரப்பிவிடவும். அதிக நேரம் வைக்கக்கூடாது. அப்படி வைத்தால் உருளைக்கிழங்கு கருத்து விடும். இதனால் ஈரம் உறிஞ்சப்பட்டு மொறு மொறுப்பான உருளைக்கிழங்கு சிப்ஸ் கிடைக்கும். மிளகாய் தூளுக்கு பதில் மிளகு தூள் பயன்படுத்தலாம்..

    காரம் அதிகம் விரும்புபவர்களுக்கு இந்த மிளகாய் சப்ஜி பிடிக்கும். மேலும் சப்பாத்தி, நாண், தோசை, தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த ரெசிபி.
    தேவையான பொருட்கள்

    பச்சை மிளகாய் - 10
    வெங்காயம் - 10
    புளி - நெல்லிக்காய் அளவு

    வறுத்து அரைக்க

    வேர்க்கடலை - 2 தேக்கரண்டி
    எள்ளு - ஒரு தேக்கரண்டி
    கடலைபருப்பு - 2 தேக்கரண்டி
    காய்ந்த மிளகாய் - 5

    செய்முறை

    வறுத்து அரைக்க வேண்டிய பொருட்களை வறுத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

    புளியை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்துகொள்ளவும்.

    வெங்காயம், மிளகாயை (விதையை நீக்கிவிட்டு) பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் பச்சை மிளகாயை போட்டு வதக்கவும்.

    மிளகாய் நன்றாக வதங்கியதும் அரைத்த விழுதை சேர்த்து உப்பு போட்டு புளித் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்..

    கலவை கொதித்து கெட்டியாகி எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கவும்.

    சுவையான மிளகாய் சப்ஜி தயார்.

    இதையும் படிக்கலாம்...பேபி கார்ன் ப்ரோக்கோலி சாலட்
    தினமும் வெள்ளரிக்காயை சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறைவதைப் பார்ப்பீர்கள். பித்தம் மிகுந்து கல்லீரல் பிரச்சினைகளை எதிர்கொள்ளாமல் இருக்க வெள்ளரியை அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும்.
    தேவையான பொருட்கள் :

    வெள்ளரிக்காய் - 2
    தக்காளி - 1 சிறியது
    வறுத்த வேர்க்கடலை - 1 மேஜைக்கரண்டி
    துருவிய தேங்காய் - 1 மேஜைக்கரண்டி
    ப.மிளகாய் - 2
    உப்பு - ருசிக்கேற்ப  

    தாளிக்க :

    எண்ணெய்,
    கடுகு,
    கறிவேப்பிலை,
    பெருங்காயம்

    செய்முறை :


    வெள்ளரிக்காயை தோல், விதையை நீக்கி சதைப்பகுதியை மட்டும் தனியாக எடுத்துவைக்கவும்.

    வெள்ளரிக்காய், வேர்க்கடலை, தேங்காய்த் துருவல், ப.மிளகாய், தக்காளி, உப்பு ஆகியவைகளை ஒன்றாக மிக்சியில் போட்டு அரைக்கவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு தாளித்து அதை அரைத்த கலவையில் கொட்டவும்.

    மனதுக்கும், வயிற்றுக்கும் நல்ல திருப்தியான உணர்வைக் கொடுக்கும் இந்தப் புது விதமான சட்னி.

    நாண், பரோட்டா, தோசை, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள இந்த பைங்கன் பர்த்தா பஞ்சாபி சப்ஜி அருமையாக இருக்கும் இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பெரிய கத்தரிக்காய் - 2
    வெங்காயம் - 1
    தக்காளி - 1
    இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
    சீரகம் - தாளிக்க
    கரம் மசாலா - 1 தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
    மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
    காய்ந்த வெந்தயக்கீரை - சிறிதளவு
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு

    செய்முறை

    வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கத்தரிக்காயில் நிறைய எண்ணெய் தடவி அடுப்பில் சுட்டு எடுத்து தோலுரித்து கொள்ளுங்கள்.

    தோலுரித்த கத்தரிக்காயை லேசாக மசித்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் தாளித்து வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

    அடுத்து அதில் துருவிய இஞ்சி, பூண்டை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து தக்காளி, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் பொடி, சேர்த்து சுருள வதக்கவும்.

    அடுத்து அதில் மசித்து வைத்துள்ள கத்தரிக்காயை சேர்த்து கொள்ளுங்கள்.

    கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடுங்கள்.

    கெட்டியாக வந்ததும் இறக்கி விடலாம்.

    தனியாக ஒரு கரண்டியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கரம் மசாலா பொடி சேர்த்து சப்ஜியின் மேலே கொட்டி கொள்ளுங்கள்.

    காய்ந்த வெந்தயக்கீரை நன்றாக கசக்கி அதன் மேல் தூவி சப்பாத்திக்கு சைடிஷ்ஷாக பரிமாறலாம்.

    ஒவ்வொரு காய்கறிகளிலும் ஒவ்வொரு விதமான சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று நாட்டு காய்கறிகளை வைத்து சுவையான கூட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பீர்க்கங்காய் - 100 கிராம்,
    புடலங்காய் - 100 கிராம்,
    சுரைக்காய் - 100 கிராம்,
    தேங்காய் துருவல் - 1 கப்,
    நீர் பூசணிக்காய் - 100 கிராம்,
    மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி,
    மிளகாய்தூள் - தேவையான அளவு,
    பெரிய வெங்காயம் - 1,
    உப்பு - தேவையான அளவு
    நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்

    தாளிக்க

    கடுகு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை

    செய்முறை:

    காய்கள் அனைத்தையும் சமமான அளவில் நறுக்கிக்கொள்ளுங்கள்.

    பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.

    தேங்காயை அரைத்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.

    அத்துடன் பீர்க்கங்காய், புடலங்காய், சுரைக்காய், பூசணிக்காய் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் உப்பும், மிளகாய்தூளும் சேர்த்து கிளறவும்.

    காய்களில் உள்ள நீர் போதுமானது. தண்ணீர் தனியாக சேர்க்க வேண்டியதில்லை.

    கடைசியாக அரைத்த தேங்காயை சேர்த்து 5 நிமிடம் அடுப்பை மிதமான தீயில் வைத்து வைக்கவும்.

    அடுத்து தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்து கூட்டில் சேர்த்த பின்னர் இறக்கவும்.

    சூப்பரான நாட்டு காய்கறி கூட்டு ரெடி.

    இதையும் படிக்கலாம்...சூப்பரான ஸ்நாக்ஸ் முட்டை பேஜோ
    தயிர் சாதம், சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும் இந்த முட்டை பிரை. 10 நிமிடத்தில் இந்த ரெசிபியை செய்து விடலாம்.
    தேவையான பொருட்கள்

    முட்டை - 6
    எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
    பூண்டு - 4 பல்
    பெரிய வெங்காயம் - 1
    உப்பு - தேவையான அளவு
    மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
    மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
    சீரகத்தூள் - அரை தேக்கரண்டி
    மிளகு தூள் - அரை தேக்கரண்டி
    கறிவேப்பிலை கொத்தமல்லி - சிறிதளவு

    செய்முறை

    வெங்காயம், கொத்தமல்லி, பூண்டை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    முட்டையை வேக வைத்து ஓட்டை உடைத்து முட்டையை சற்று கீறி வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பூண்டை போட்டு வதக்கவும்.

    அடுத்து வெங்காயம், கறிவேப்பிலையை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத்தூள், மிளகுத்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிய பின்னர் வேக வைத்த முட்டையை சேர்த்து கிளறவும்.

    மசாலா முட்டையில் நன்றாக பரவியதும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்,

    சூப்பரான முட்டை பிரை ரெடி.

    இறாலில் புரதம், கால்சியம், பொட்டசியம் மற்றும் பல வைட்டமின்கள் நிறைந்துள்ளன. உணவில் வாரம் ஒரு முறை இறாலை சேர்த்துக் கொண்டால், பல நோய்களுக்கு மருந்தாகும்.
    தேவையான பொருட்கள்

    இறால் - 100 கிராம்
    முட்டை - 2
    மிளகு தூள் - சிறிதளவு
    உப்பு - அரை ஸ்பூன்
    இஞ்சி, பூண்டு பேஸ்ட் - அரை ஸ்பூன்
    மஞ்சள் தூள் - சிறிது
    மிளகாய் தூள் - சிறிதளவு
    வெங்காயம் - 2
    கறிவேப்பிலை - சிறிதளவு
    வெங்காயத்தாள் - சிறிதளவு
    கொத்தமல்லி - சிறிதளவு
    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    முதலில் இறாலை சுத்தம் செய்து சிறிது மிளகாய் தூள், உப்பு, இஞ்சி, பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்துசுமார் அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

    பின்னர் அதனை தோசை கல்லையில் போட்டு நன்றாக வறுத்து கொள்ளவும். வறுத்த இறாலை பொடியாக நறுக்கி கொள்ளவும். வெங்காயத்தாள், வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பின்னர் பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், வெங்காயத்தாள் போட்டு வதக்கவும். வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகு தூள், மிளகாய் தூள், கறிவேப்பிலை, உப்பு போட்டு வதக்கவும். அடுத்ததாக அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கிளறவும்.

    முட்டை நன்றாக வெந்து உதிரி உதிரியாக வந்ததும் பொடியாக நறுக்கிய இறால், வெங்காயத்தாள் சேர்த்து நன்றாக கலந்து இறக்கி பரிமாறலாம்.

    இப்போது சுவையான இறால் முட்டை பொடிமாஸ் ரெடி.
    சப்பாத்தி, நாண், சாதம், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் மீல் மேக்கர் கிரேவி. இன்று மீல் மேக்கர் கிரேவியை எப்படி எளிய முறையில் செய்வதென்று பார்ப்போம்.
    தேவையான பொருட்கள்:

    மீல் மேக்கர் - 1/2 கப்
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
    பெரிய வெங்காயம் - 1/2
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
    கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
    தண்ணீர் - தேவையான அளவு
    கொத்தமல்லி - சிறிதளவு
    பால் - 1 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    அரைப்பதற்கு...


    தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
    மிளகு - 1/2 டீஸ்பூன்
    சோம்பு - 1 டீஸ்பூன்
    வெங்காயம் - 1 (சிறியது)
    தக்காளி - 2 (சிறியது)

    தாளிப்பதற்கு...

    எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
    சீரகம் - 1/2 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிது



    செய்முறை:

    கொத்தமல்லி, பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அடுப்பில் தண்ணீர் ஊற்றி சூடானதும் அதில் மீல் மேக்கரைப் போட்டு சில நிமிடங்கள் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மீல் மேக்கரை எடுத்து, குளிர்ந்த நீரில் 2 முறை அலசி, தனியாக வைத்துக் கொள்ளவும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கி இறக்கி, மிக்ஸியில் போட்டு, அத்துடன் அரைப்பதற்கு கொடுத்துள்ள எஞ்சிய பொருட்களையும் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

    குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும்.

    இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனவுடன் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி சில நிமிடங்கள் வதக்க வேண்டும்.

    பின் அதில் மீல் மேக்கரை சேர்த்து, 3/4 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி மிதமான தீயில் 1 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரைத் திறந்து, கிரேவியை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொத்தமல்லியைத் தூவினால், மீல் மேக்கர் கிரேவி ரெடி!!!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சப்பாத்தி, நாண், சாம்பார் சாதம், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த முட்டை பட்டாணி பொரியல். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    முட்டை - 4
    பட்டாணி - 100 கிராம்
    பெரிய வெங்காயம் - 1
    தக்காளி - 1
    பச்சை மிளகாய் - 1
    சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
    மிளகுப்பொடி - 1 டேபிள் ஸ்பூன்
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு
    கறிவேப்பிலை - சிறிது



    செய்முறை :

    பட்டாணியை உப்பு போட்டு வேக வைத்துக் கொள்ளவும்.

    தக்காளி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வெந்தும் தக்காளி, மிளகு தூள், சீரகத்தூள் சேர்த்து வதக்கவும்.

    தக்காளி குழைய வதங்கியதும் வேக வைத்த பட்டாணி, உப்பு சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கிளறவும்.

    முட்டை நன்றாக வெந்து உதிரியாக வந்தவுடன் கொத்தமல்லித்தழை தூவி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான முட்டை, பட்டாணி பொரியல் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சப்பாத்தி, நாண், சூடான சாதத்துடன் சாப்பிட முள்ளங்கி பருப்புப் பச்சடி அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முள்ளங்கி - 2
    துவரம்பருப்பு - 100 கிராம்
    தக்காளி, பச்சை மிளகாய் - தலா ஒன்று
    சீரகம் - ஒரு டீஸ்பூன்
    சாம்பார் பொடி - தேவையான அளவு
    கறிவேப்பிலை - சிறிதளவு
    கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்
    பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை
    மஞ்சள்தூள் - சிறிதளவு
    எண்ணெய் - 3 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    முள்ளங்கியை தோல் நீக்கி பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் துவரம்பருப்புடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி, இரண்டு விசில்விட்டு இறக்கவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, சீரகம் தாளிக்கவும்.

    அதனுடன் முள்ளங்கி, தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து லேசாக வதக்கவும்.

    பிறகு வேகவைத்த பருப்பு, சாம்பார் பொடி, மஞ்சள்தூள், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு வேகவிட்டு இறக்கவும்.

    சூப்பரான முள்ளங்கி பருப்புப் பச்சடி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தயிர் சாதம், சாம்பார் சாதம், தோசை, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் கோழி வெப்புடு. இன்று அதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    எலும்பில்லாத சிக்கன் - கால் கிலோ
    தட்டிய பூண்டு - 30 கிராம்
    வெங்காயம் - 50 கிராம்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    மஞ்சள்தூள் - 2 சிட்டிகை
    காய்ந்த மிளகாய் - 3
    மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு
    சீரகம் - அரை டீஸ்பூன்
    எண்ணெய் - 2 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை:

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிகொள்ளவும்.

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும காய்ந்த மிளகாய், சீரகம், பூண்டு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் சிக்கன் துண்டுகள், மஞ்சள்தூள் சேர்த்து, தேவையான அளவு உப்பு, சிறிதளவு தண்ணீர் விட்டு வேகவிடவும்.

    சிக்கன் வெந்து தண்ணீர் எல்லாம் வற்றியதும் மிளகுத்தூள் தூவிக் கிளறவும்.

    கடைசியாக மேலே கொத்தமல்லித்தழை தூவி இறக்கிப் பரிமாறவும்.

    ஆந்திரா ஸ்டைல் கோழி வெப்புடு ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×