search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96001"

    • பெரும்பாலும் திருமணமாகாத இளம் பெண்கள்தான் தாவணி அணிகிறார்கள்.
    • டீன் ஏஜ் தோற்றத்தை தக்கவைக்கக்கூடியது.

    அன்றைய காலகட்டத்தில் பருவம் அடைந்த பெண்கள் தாவணி அணியும் வழக்கத்தை பின்பற்றினர். நவ நாகரிக மோகம் மேற்கத்திய ஆடைகளை நாட வைத்ததன் காரணமாக தாவணி அணியும் வழக்கம் மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருக்கிறது. சடங்கு, சம்பிரதாயத்திற்காக மட்டும் தாவணி அணியும் வழக்கம் நடைமுறையில் இருக்கிறது.

    இன்றும் கிராமங்களில் தாவணி அணியும் இளம் பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். பாரம்பரிய ஆடையான இதனை சுப நிகழ்வுகளின்போது அணிந்து கொள்வதற்கு சில இளம் பெண்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்கள் சவுகரியமாக உடுத்துவதற்கு ஏற்ப தாவணிகள் தயாரிக்கப்படுகின்றன. இன்றைய பேஷன் உலகில் தாவணி ஏன் அணிய வேண்டும் என்பதற்கான காரணங்கள்:

    இளமை : பெரும்பாலும் திருமணமாகாத இளம் பெண்கள்தான் தாவணி அணிகிறார்கள். அதற்கேற்ப இது இளமை உணர்வை வெளிப்படுத்தக்கூடியது. டீன் ஏஜ் தோற்றத்தை தக்கவைக்கக்கூடியது. சேலையை போல் தாவணி முதிர்ச்சியான தோற்றத்தை கொண்டிருக்காது. நடிகைகள் கூட பல சந்தர்ப்பங்களில் தாவணி அணிய விரும்புகிறார்கள்.

    சவுகரியம் : சேலையை விட தாவணி அணிந்து கொண்டு நடப்பதற்கு சவுகரியமாக இருக்கும். நவ நாகரிக உடையை போல் இறுக்கமாக உடுத்த வேண்டியதிருக்காது. தாவணிக்கு பொருத்தமாக உடுத்தப்படும் பாவாடை தளர்வாக இருக்கும். துப்பட்டாவும் அசவுகரியத்தை கொடுக்காது. நேர்த்தியாக இருக்கும். இப்போது படங்களில் நடிகைகள் தாவணி அணிவது பேஷனாகி இருக்கிறது. சமந்தா, ரகுல் ப்ரீத்சிங் போன்ற நடிகைகள் விருது விழாக்கள், ஆடியோ வெளியீட்டு விழாக்களில் தாவணியில் உலா வந்திருக்கிறார்கள்.

    ஸ்டைல் : தாவணி பாரம்பரியமான பழைய ஆடை என்றாலும், தற்போதைய டிரெண்டுக்கு ஏற்ப உருமாற்றி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால் தாவணியை ஸ்டைலாக அணியலாம். நேர்த்தியான தோற்றத்தையும் பெற முடியும். பாவாடை, ரவிக்கையின் நிறம், தாவணியின் நிறம் என ஒவ்வொன்றின் தேர்விலும் இன்றைய பேஷன் உலகுக்கு ஈடு கொடுக்கும் அம்சங்கள் உள்ளன. பேஷன் டிசைனர்களும் நடிகைகள் உடுத்துவதற்கு ஏற்ப ஸ்டைலிஷான வடிவமைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

    பாரம்பரியம் :திருமண விழாவிலோ அல்லது கோவில் திருவிழாவிலோ பாரம்பரிய உடை உடுத்த விரும்பும் இளம் பெண்களுக்கு தாவணி பொருத்தமான தேர்வாக இருக்கும். பட்டு துணிகளிலும் தாவணிகள் தயாரிக்கப்படுகின்றன. உடுத்தும் ஆடைக்கு ஏற்ப ஒப்பனை செய்வதன் மூலம் பளிச் தோற்றத்தில் மிளிரலாம். பாரம்பரிய நகைகள் அணிவதும் கூடுதல் பொலிவு சேர்க்கும்.

    தனித்துவம் : சுப நிகழ்வுகளுக்கு சுடிதார், லெஹெங்கா போன்ற ஆடைகளுக்கு மாற்றாக நேர்த்தியாக தாவணி அணிந்து சென்றால் கூட்டத்தில் நீங்கள் தனித்து தெரிவீர்கள். நவ நாகரிக ஆடைகள் பிரமாண்டமாக காட்சி அளித்தாலும் தாவணியுடன் ஒப்பிடும்போது மற்றவர்களின் கவனம் உங்கள் பக்கம் ஈர்க்கப்படும். தங்களை தனித்துவமாக காட்டிக்கொள்ள ஆப் சாரி (Half Saree) என்று அழைக்கப்படும் தாவணி எப்போதுமே சிறந்த தேர்வாக அமையும்.

    மணப்பெண் பிளவுஸ்களுக்கென்றே பிரத்யேகமான டிசைன்களும், அதைத் தைப்பதற்கென்றே சிறப்பான தையல் கலைஞர்களும் உள்ளனர் என்பதைக் கேட்கும்போதே அதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறதல்லவா?
    கடந்த சில வருடங்களாகவே புடவைக்கு அணியும் பிளவுஸ்களுக்கென்று தனிக்கவனத்தை பெண்கள் கொடுத்து வருகிறார்கள்.

    விதவிதமான வேலைப்பாடுகளுடன் அருமையாகத் தைத்து அதற்கேற்றாற்போல் கான்ட்ராஸ்டாக சேலைகளை அணிந்து செல்வதே இன்றைய ட்ரெண்ட் என்று சொல்லலாம்.

    மணப்பெண் பிளவுஸ்களுக்கென்றே பிரத்யேகமான டிசைன்களும், அதைத் தைப்பதற்கென்றே சிறப்பான தையல் கலைஞர்களும் உள்ளனர் என்பதைக் கேட்கும்போதே அதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறதல்லவா?

    மிகச் சமீபத்திய பிளவுஸ் டிரெண்ட் என்று பட்டன் ரோ பேக் மாடலைச் சொல்லலாம். இவை பட்டு சேலைகளுக்கு அணிந்து கொள்ள சூட்டானவையாகும். இந்த பிளவுஸ்களில் க்ளோஸ் நெக் வைத்து, முதுகுப்புறம் பட்டன்களைத் தொடர்ச்சியாகவோ அல்லது இடைவெளி விட்டோ தைக்கிறார்கள். ப்ளவுஸ் நிறத்திற்கு கான்ட்ராஸ்டாக பட்டன்களை வைப்பது இன்னும் அழகைக் கூட்டுகின்றது.

    ட்ரெடிஷனல் மற்றும் மாடர்ன் லுக்காக இருக்க வேண்டுமென்றால் அதற்கு ஆஃப் ஹோல்டர் பிளவுஸ் டிசைன் மிகவும் ஏற்றதாக இருக்கும். அம்மா, பாட்டியின் பட்டுப் புடவைகளை இதுபோன்ற பிளவுஸ்களுடன் போடும்பொழுது மிகவும் மாடர்னான தோற்றத்தையே தரும்.

    மக்காம் வேலைப்பாடுகளுடன் முக்கால் கை வரை வைத்துத் தைக்கப்படும் இவ்வகை பிளவுஸ்களையே தென்னிந்திய மணப்பெண்கள் மிகவும் விரும்புகிறார்கள்.

    ஃபுல் ஸ்லீவ்ஸ் பிளவுஸ் டிசைன்களை அனைவருமே பட்டுச் சேலைகளுடன் அணிந்து கொள்ள விரும்புகிறார்கள். இந்த மாடல் பிளவுஸ்கள் மறுபடியும் இன்றைய டிரெண்டில் தனக்கென ஒரு இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளும்.

    அதேபோல் ப்ரோகேட் பிளவுஸ்களை எந்தச் சேலையுடனும் மேட்ச் செய்து அணிந்து கொள்வதற்கு ஏற்றாற்போல் பலவித நிறங்களை ஒரே பிளவுஸில் இருப்பது போல் தேர்ந்தெடுக்க வேண்டும். இவற்றை மிக்ஸ் அண்டு மேட்ச் செய்தோ அல்லது பல சேலைகளுக்கு ஒரே பிளவுஸை அணிந்து கொள்ளவோ வாய்ப்புகளை அதிகமாக வழங்குகிறது. இவற்றின் ரிச்சான லுக்கானது அனைத்து பெண்களின் வாட்ரோப்களிலும் இடம் பெறும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.

    நெட் துணிகளை பிளவுஸ்களின் கைப் பகுதிக்கு மட்டும் வைத்து தைக்க டிசைன் மாறி இப்பொழுது முதுகுப்புரம் முழுவதும் வைத்துத்தைத்து அதில் பேட்ச் வொர்க் அல்லது சிக்கி, குந்தன் வேலைப்பாடுகளுடன் தைத்து அணிவது இப்பொழுது டிரெண்ட் என்று சொல்லலாம்.

    முக்கால் கை வைத்து ஹை நெக்குடன் தைக்கப்படும் பிளவுஸ்களை டிசைனர் சேலைகளுடன் அணியும் போது அவை கூடுதல் கம்பீரத்தை தருகின்றது.

    நார்மல் ஷர்ட்டுகளின் மாடல்களில் பிளவுஸ்களை அணிந்து கொள்வது இன்றைய டீன் ஏஜ் பெண்களின் விருப்பமாக உள்ளது.

    ஹை நெக் முக்கால் கை வைத்து முழுக்கழுத்தும் நகை அணிந்தது போல தங்க நிற நூல்களால் எம்ப்ராய்டரி செய்யப்பட்டிருக்கும் பிளவுஸ்களை பிளெயின் சேலைகளுடன் அணிந்தால் ஒரு சின்ன நகையைக் கூட அணிய வேண்டிய அவசியமில்லை.

    பட்டர்ஃபிளை கட் பேக் நெக் பிளவுஸ்கள் ஒரு தனித்துவமான பாணியில் பூசிய உடல் வாகுடன் இருக்கும் பெண்கள் அணிந்தால் பார்ப்பதற்கு மிகவும் அழகான தோற்றத்தைத் தருவதாக உள்ளது. இவ்வகை பிளவுஸ்கள் டிசைனர் சேலைகளுடன் அணிய ஏற்றவை.

    சோளி ஸ்டைல் ஃபேஷன் பிளவுஸ்களில் பின்புறம் முடிந்து கொள்வது போல் வந்திருக்கும் மாடலும் இன்றைய டிரெண்ட் எனலாம்.

    ஒரு ஷோல்டர் மாடல், ட்யூப் ஸ்டைல் மாடல், க்நாட்டட் மாடல், பெப்லம் ஸ்டைல், சைனீஸ் காலர் மாடல், பெப்லம் ஸ்டைல், சைனீஸ் காலர் மாடல் என பிளவுஸ்களை விதவிதமாகத் தைத்து அணிவதிலும், தைத்த பிளவுஸ்களில் டிசைன் செய்து அணிவதிலும் இன்றைய இளைம் பெண்கள் அதிகமாக ஆர்வம் காட்டுகிறார்கள். அதேபோல், சில ஆயிரம் முதல் பல ஆயிரம் வரையிலும் பிளவுஸ்களுக்குச் செலவு செய்யத் தயாராகவும் இருக்கிறார்கள்.
    பெண்கள் விரும்பி அணிய எற்றவாறு கண்கவர் உருவகங்கள் அச்சிடப்பட்ட பிரிண்டட் டெனிம் குர்தீஸ் வருகின்றன. பிரிண்டட் எனும்போது பெண்மைக்கு அழகூட்டும் அம்சங்கள் அதிகமாகவே சேர்க்கப்படுகின்றன.
    இளம்பெண்கள் விரும்பி அணியக்கூடிய குர்தீஸ் எனப்படும் மேல்சட்டைகள் அனைத்து இடங்களுக்கும் அணிந்து செல்ல ஏற்றதாக உள்ளது. பல்வேறு ரகங்களில் உருவாகும் குர்தீஸ்கள் தற்போது புதுமையும், நவீனமும் கலந்தவாறு டெனிம் குர்தீஸ்கள் வருகின்றன. இவை ஒரு நாள் முழுவதும் அணிய ஏற்ற கச்சிதமான ஆடையாகவும், பலரும் பார்த்து வியக்கும் மேம்பட்ட தையல் அமைப்புகளை உள்ளடக்கியவாறு தைக்கப்படுகின்றன. விழாக்கள் மற்றும் பார்ட்டிகளில் செல்வதற்கு ஏற்ற ஆடையாக திகழ்வதுடன், வெளியூர் மற்றும் சுற்றுலா பயண்களிலும் அணிய ஏற்றதாக உள்ளது. இளவயது பெண்கள் கல்லூரிகள் மற்றும் வகுப்புகளுக்கு அணிந்து செல்ல ஏதுவான ஆடையாகவும் திகழ்கிறது.

    விதவிதமான பிரிண்டட் டெனிம் குர்தீஸ்

    பெண்கள் விரும்பி அணிய எற்றவாறு கண்கவர் உருவகங்கள் அச்சிடப்பட்ட பிரிண்டட் டெனிம் குர்தீஸ் வருகின்றன. பிரிண்ட் செய்யப்பட்டது எனும்போது சாதாரண டெனிம் குர்தீஸ்-யை விட கூடுதல் பொலிபை தரக்கூடியவை. டெனிம் துணியின் அடர்த்தி நீலத்திற்கு மேற்புறம் மென்மையான வெளிர் நீல நிற சாயலில் இலைகள், பூக்கள், கொடிகள் மற்றும் கணித உருவங்கள் அச்சிடப்பட்டு டெனிம் குர்தீஸ் வருகின்றன. பிரிண்டட் எனும்போது பெண்மைக்கு அழகூட்டும் அம்சங்கள் அதிகமாகவே சேர்க்கப்படுகின்றன.

    அழகிய வெட்டுகளுடன் கூடிய குர்தீஸ்

    டெனிம் குர்தீஸ் என்பது ஒவ்வொரு விதமாக மாறுபட்ட வடிவமைப்புடன் உருவாக்கப்படுகின்றன. இதன் தோற் அமைப்பு பலவிதமான பெண்களின் விருப்பங்களை பொருத்து அமையும் விதமாக உருவாக்கப்படுகின்றன. கழுத்து மற்றும் கை பகுதிகளில் சில மாறுபட்ட வடிவமைப்பு வெட்டுகளுடன் டெனிம் குர்தீஸ் வருகின்றன. அதாவது கை பகுதி என்பது முக்காலி கை பகுதி மற்றும் முழு நீள கைப்பகுதி கொண்டவாறு உருவாகின்றன.

    அதிலும் இந்த முக்கால் கைப்பகுதி என்பது நடுவில் வளைவு உள்ளவாறு வெட்டப்பட்டு அதில் சில எம்பிராய்டரி செய்யப்பட்டு தரப்படுகிறது. இந்த வெட்டு துலிப் மலர் போன்ற மேல், கீழ் சுழல் பகுதி உள்ளவாறு உள்ளன. கழுத்து பகுதி வி-நெக், வட்டம், டூம் நெக் மற்றும் சில பூ வடிவ கழுத்துக்கள் கொண்டவாறு வடிவமைப்பு செய்யப்படுகிறது.

    இதில் கழுத்து பகுதியிலும், நடு நாயக பகுதியிலும் பட்டன்கள் மற்றும் எம்பிராய்டரி அமைப்பு உருவாக்கம் செய்யப்படுகின்றன. இதில் பட்டன் அமைப்பு நூல் மற்றும் சில பட்டு நூல்களால் அழகுற பொருத்தப்படுகின்றன. மேன்டிரின் காலர், வி-நெக் கொண்ட நீளமான குர்தீஸ் அதிகமாக விரும்பப்படுகிறது. அதுபோல் சில மாடல்கள் ஷார்ட் காலர் அமைப்புடன் வித்தியாசமாக பெரிய அளவுள்ள டெனிம் குர்தீஸ்கள் வருகின்றன. இவை வெளிர்நிற சாயலுடன் அதிக கவனத்தை ஈர்க்கும் குர்தீஸ்களாக உள்ளன.

    ஏற்ற-இறக்க குர்தீஸ்கள்

    அதாவது குர்தீஸ்கள் கீழ் பகுதி என்பது முன்புறம் சற்று எற்றமாகவும், பின்புற கீழ்பகுதி சற்று இறக்கம் உள்ளவாறும் வடிவமைக்கப்படும். இந்த டெனிம் வகை குர்தீஸ்களில் இந்த வடிவமைப்பு குர்தீஸ் அதிகம் வருகின்றன. பதானி வகை ஹை-லோ குர்தீஸ், ஏ-லைன் குர்தீஸ், டியூனிக் குர்தீஸ் என்ற பலவகை குர்தீஸ்கள் டெனிம் ரகத்தில் வருகின்றன. ஹை-லோ குர்தீஸ் என்பதில் சில முன்புற கீழ் பகுதி வித்தியாசமான வளைவுகள் கொண்டவாறு வெட்டப்பட்டு தைத்து தரப்படுகின்றன. பூக்கள் மற்றும் கைப்பை அமைப்புகள் வேறு வகை நூல்கள் மூலம் எம்பிராய்டரி செய்யப்பட்டு குர்தீஸ்ன் அழகை மேம்படுத்துகின்றன.

    டெனிம் ரக துணிகள் ஒரே அடர் நீலம் மற்றும் வெளிர் நீல வகை சார்ந்தவையாகவே இருக்கும். அதனை குர்தீஸ் தயாரிக்க பயன்படுத்தும்போது பெண்களுக்கு உரியவாறு அதிக பொலிவும், வனப்பும் உள்ளவாறு மேம்பட்ட வகையில் வடிவமைப்பு செய்யப்படுகிறது. இதன் மூலம் டெனிம் ரக துணியின் நிற சாயல் என்பதின் குறை நீங்கி அதுவே அந்த டெனிம் துணிக்கு கூடுதல் மவுசு தரும் வகையில் உருவாக்கம் செய்யப்படுகிறது. அதாவது பிரிண்ட், டை, எம்பிராய்டரி, வெட்டுகள் என்றவாறு டெனிம் துணியில் குர்தீஸ் அழகுடன் மாறுபட்ட வகையில் உருவாகின்றன.
    பிற மாநில புடவைகளை அவற்றின் பாரம்பரிய நகை மற்றும் புடவையை கட்டும் முறையுடன் அணியும்போது அது மிகவும் அழகாகவும், வித்தியாசமாகவும் இருக்கும்.
    இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் பாரம்பரியமும், கலாசாரமும், ரசனை மற்றும் கலைநயத்தில் மாறுபட்டு இருக்கிறது. இருந்தாலும் அந்தந்த மாநிலத்தில் உருவாகும் பாரம்பரிய சேலைகளை மற்ற மாநிலப் பெண்களும் விரும்பி அணிகின்றனர். பிற மாநில புடவைகளை அவற்றின் பாரம்பரிய நகை மற்றும் புடவையை கட்டும் முறையுடன் அணியும்போது அது மிகவும் அழகாகவும், வித்தியாசமாகவும் இருக்கும். அந்தவகையில் சில மாநில சேலை வகைகளை கீழ்வாறு காணலாம்.

    கேரளாவின் கசவு

    செட்டு புடவை என்றழைக்கப்படும் இந்த புடவையை வெறும் துண்டு முண்டு மற்றும் கச்சையாகவே கேரளப் பெண்கள் உடுத்தி வந்தனர். இன்று அது புடவை வடிவில் கிடைக்கிறது. இப்புடவை வெள்ளை அல்லது ஆப்ப் வொயிட் நிறத்தில் அடர்த்தியான ஜரிகை பார்டருடன் கிடைக்கும். இதில் தற்காலங்களில் வேறு நிறங்களிலும் உடலில் பூக்கள் மற்றும் புட்டா போட்டும் கிடைக்கிறது. இப்பபுடவைக்கு வெள்ளை, பச்சை மற்றும் சிவப்பு நிறத்தில் ப்ளவுஸ் அணிவது வழக்கம்.

    ஒடிசாவின் பொம்காய், சம்பல்புரி

    சோன்புரி சில்க், பொம்காய் சில்க் என்றழைக்கப்படும் இப்புடவை இகத் எம்ப்ராய்டரி மற்றும் நுணுக்கமான நூல் வேலைப்பாட்டுடன் பொதுவாக 9 கஜம் புடவையாக நெய்யப்படுகிறது. இப்புடவைகள் காட்டன் மற்றும் பட்டில் மட்டுமே பெரும்பாலும் நெய்யப்படுகிறது.

    ஒடிசாவின் மற்றொரு பாரம்பரிய புடவை சம்பல்புரி புடவைகள். பலவித நுணுக்கமான நெய்யும் கலைகளை உள்ளடக்கியது இப்புடவைகள். இப்புடவையின் நூல்கள் முதலில் நிறமூட்டப்பட்டு பின்பே புடவையாக நெய்யப்படுகிறது. அதனால் புடவையின் நிறம் அடர்த்தியாகவும், நேர்த்தியாகவும் கிடைக்கிறது.

    அசாமின் முகா

    அசாமில் நெய்யப்படும் இந்த பட்டுப்புடவைகளுக்கு ஒரு தனி சிறப்பு உண்டு. இந்த பட்டு நூலை உண்டாக்கும் பட்டுப்பூச்சிகள் குறிப்பிட்ட இரண்டு வகை இலைகளை மட்டும் உண்ணும். இதனால் இந்தப்பட்டு தனித்துவமான தரத்துடன் இருக்கிறது. இப்புடவையின் ஜரிகை தங்கத்தினால் ஆனது என்பது இதன் தனிச்சிறப்பு.

    லெஹரியா - ராஜஸ்தான்

    லெஹரியா என்பது ராஜஸ்தான் மாநில பாந்தினி புடவையை சேர்ந்த வகையாகும். இந்த புடவையின் ‘டை அண்ட் டை’ முறை பாந்தினியை விட வித்தியாசமானது.

    பஞ்சாபின் ஃபூல்காரி

    பூக்களால் ஆன டிசைன் கொண்டது தான் ஃபூல்காரி புடவைகள். இந்த புடவை முழுவதும் நூலினால் ஆன பூக்களின் வடிவில் நெய்யப்பட்டிருக்கும். ஃபூல்காரி என்பதே அதன் எம்ப்ராய்டரி வேலைப்பாட்டை குறிப்பாகும். அழகிய அடர்த்தியான வண்ணத்தில் நூல்கள் கொண்டு புடவையின் பார்டர் மற்றும் தலைப்பில் பூ வேலைப்பாடு செய்யப்படும் இப்புடவைகள் பெரும்பாலும் காட்டன் மற்றும் காதி துணிகளால் ஆனது.

    தெலுங்கானாவின் போச்சம்பள்ளி

    நம்ம ஊர் பெண்களை அதிகம் கவரக்கூடிய டிசைன் தான் போச்சம்பள்ளி டிசைன்கள். ஆந்திராவின் பூதன் என்ற ஊரில் தயாராவது தான் போச்சம்பள்ளி சில்க். இந்த புடவைகளின் டிசைன் ஜியாமெட்ரிக் இகட் டிசைனில் மிக நுணுக்கமான வடிவங்கள் கொண்டதாக இருக்கும். இப்புடவைகள்அழகான நிறக்கலவைகளில் பளிச்சென்று இருக்கும். இவை காட்டன் மற்றும் பட்டிலும் தற்காலங்களில் சில்க் காட்டன் புடவைகளாகவும் கிடைக்கிறது.

    புடவைகளில் தினந்தோறும் புதுவரவுகள் வந்து கொண்டே இருக்கின்றன. புடவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்று சொல்லுமளவுக்கு புது வரவுகள் ஏராளமாக வந்துள்ளன.
    புடவைகளில் தினந்தோறும் புதுவரவுகள் வந்து கொண்டே இருக்கின்றன. புடவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்று சொல்லுமளவுக்கு புது வரவுகள் ஏராளமாக வந்துள்ளன.

    அதிகம் குறிப்பாகச் சொல்வதென்றால் பார்வைக்கு மிகவும் அட்டகாசமான தோற்றத்துடன் அனைவராலும் வாங்கக்கூடிய விலையில் வந்திருக்கும் பனாராஸ் காட்டன் சேலைகளின் அழகை வர்ணிக்க ஒரு நாள் போதாது என்றே சொல்லலாம். அகலமான தங்கநிற ஜரிகையுடன் காண்ட்ராஸ்ட் வண்ணத்தில் உடல் மற்றும் பார்டருடன் வரும் கோட்டா பனாராஸ் புடவைகள் அழகோ அழகு என்று சொல்லலாம். உடலில் ஆங்காங்கே புட்டாக்கள் இருப்பதுடன் அதன் பல்லுவானது மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. திருமணம் வரவேற்பு மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளுக்கு உடுத்த ஏற்ற புடவை என்று இவற்றைச் சொல்லலாம்.

    வெள்ளி நிற ஜரிகையுடன் அழகிய வண்ணங்களில் அணிவகுப்பில் வந்திருக்கும் பனாராஸ் கோரா சேலைகள் மற்றுமொரு புது வரவாகும். பாரம்பரிய வேலைப்பாடுகள் மற்றும் கண்ட்ராஸ்ட் வண்ணங்களில் நியாயமான விலையில் வந்திருக்கும் இந்தப் புடவைகள் பெண்களின் துணி அலமாரியில் கட்டாயம் இடம் பிடிக்கக் கூடிய ஒன்று என்று சொல்லலாம். செல்ஃப் எம்போஸ்டு உருவங்கள் இந்தப் புடவைகளில் இடம் பெற்றிருப்பது அதன் அழகை மேலும் கூட்டுகின்றது என்றே சொல்லலாம்.

    மிகவும் குறைந்த எடையுடன் பார்வைக்குப் பளிச்சென்றிருக்கும் ஜரி பார்டருடன் வந்திருக்கும் செமிரா சில்க் புடவைகள் சிறிய நிகழ்ச்சிகள் மற்றும் அலுவலகப் பயன்பாட்டிற்கு ஏற்றவையாக இருப்பதோடு நியாயமான விலையிலும் கிடைக்கின்றன. சில்வர் மற்றும் தங்க நிற ஜரிகை பார்டர்களில் உடல் முழுவதும் ஒரே நிறத்தில் வரும் செமிரா சில்க் சேலைகள் மிகவும் அசத்தலாக இருக்கின்றன. நூல் பார்டர் மற்றும் கான்ட்ராஸ்ட் வண்ணத்திலும் இந்த செமிரா சில்க் புடவைகள் அழகாக உள்ளன.

    தினசரிப் பயன்பாட்டிற்கு மிகவும் ஏற்றவை என்று பிரிண்டட் செமி ஷிஃபான் புடவைகளைச் சொல்லலாம். பலவித வண்ணங்களில் அழகான டிசைன்களுடன் மிகவும் இலகுவாகவும் ஷேட்டின் பார்டர்களுடன் வந்திருக்கும் செமி ஷிஃபான் புடவைகள் அணிவதற்கு மிகவும் வசதியாக உள்ளன. இந்தப் புடவைகளில் இடம் பெறும் பூ டிசைன்கள் மிகவும் தனித்துவமான உள்ளன. இந்தப் புடவைகளுக்கு ஏற்றாற்போல் அவற்றுடனேயே இணைந்து வரும் பிளவுஸ்கள் நமது செலவையும், பிளவுஸ் தேடும் நேரத்தையும் மிச்சப்படுத்துகின்றன.

    புடவையின் அழகும் அதன் விலையும் சிலிர்ப்பூட்டுமா ஆமாம் என்று சொல்லுமளவுக்கு இருப்பவை செமிலினன் மற்றும் செமி ஆர்சன்ஸா புடவைகள். ஜரி பார்டருடன் பைப்பிங் பார்டர்கள் இணைந்து புடவையில் எம்பிராய்டரி வேலைப்பாட்டுடன் மென்மையான வண்ணங்களில் வரும் செமிலினன் புடவைகள் அணிபவருக்கு கௌரவமான தோற்றத்தைத் தருபவையாக உள்ளன. புடவையின் மேற்புறம் எளிமையான எம்பிராய்டரி டிசைனும் புடவையின் கீழ்ப்புறம் அடர்த்தியான எம்பிராய்டரி வேலைப்பாட்டுடன் கூடிய ஜரி பார்டர் மிகவும் ரிச்சான தோற்றத்தைத் தருகின்றன. இவற்றில் வரும் பாவன்ஜி பார்டர் மற்றும் ப்ரோகேட் பிளவுஸ்கள் இந்தப் புடவையின் அழகிற்கு மேலும் வலு சேர்க்கின்றன.

    இலகுவான மிகவும் இலகுவான சில்க் காட்டன் சேலைகள் இப்பொழுது புது வரவாக வந்துள்ளன. எலுமிச்சை மஞ்சள் நிறத்திற்கு காப்பர் சல்பேட் நீல வண்ண பைப்பிங் பார்டர், கடி ஜரி பார்டரில் மரூன் மற்றும் மஞ்சள் வண்ணம், பெயிஜ் மற்றும் பச்சை வண்ணத்தில் கோபுர பார்டருடன் வரும் புடவைகள், ஜரிகையே இல்லாமல் முற்றிலும் நூல் வேலைப்பாடு மற்றும் பார்டர்களுடன் வரும் இலகுரக சில்க் காட்டன் சேலைகள் மிகவும் பிரமாதமாக உள்ளன. அடர் பச்சைக்கு சிவப்பு பார்டர், அடர் மஞ்சளுக்கு அடர்த்தியான பச்சை பார்டர், மஜந்தா வண்ணத்திற்கு மஞ்சள் பார்டர், நீலத்திற்கு சிவப்பு, வெளிர் மஞ்சள் நிறத்திற்கு மஜந்தா என இந்தப் புடவைகளில் இடம் பெறும் வண்ணங்கள் நம் கண்களுக்கு அருமையான விருந்தாக இருப்பதுடன் அணிவதற்கும் அருமையாக உள்ளன.

    குறைந்த விலை புடவைகளில் புதுவரவுகள் ஏரரளமாக வந்திருக்கின்றன. மெல்லிய பார்டரில் சின்ன கற்கள் பதித்து உடல் முழுவதும் பூ டிசைன்களில் வரும் செமி ஜியார்ஜட் சேலைகள் அணிவதற்கு ஏற்றவையாக உள்ளன. இந்தப் புடவைகளுக்கு பீகோ அடிக்க அவசியமில்லாமல் அந்தப் புடவைகளிலேயே குஞ்சம் தொங்குவது போல் வடிவமைக்கப்பட்டுள்ளன.

    கௌரவமான தோற்றத்தைத் தரும் புடவைகளின் வரிசையில் வாழை நார் பட்டுப் புடவைகளும் தனக்கென ஒரு தனி இடத்தைப் பெற்றுள்ளன. அருமையான வண்ணங்களில் கான்ட்ராஸ்ட் பல்லுவுடன் வரும் இவ்வகைப் புடவைகளின் விலையோ இரண்டாயிரத்திற்குள் என்றால் நம்பவே முடியவில்லை. புடவையின் உடல் பகுதியில் ஆங்காங்கே நூல் புட்டாக்களுடன் கான்ட்ராஸ்ட் பார்டரில் வரும் வாழை நார் பட்டு காண்பவரை சுண்டி இழுக்கின்றது.

    இவை மட்டுமல்லாது மைசூர் கிரேப் புடவைகள், ராஜ்கோட் படோலா பட்டு புடவைகள், எளிமையான சில்க் காட்டன் புடவைகள், கலம்காரி காட்டன் புடவைகள், பாரம்பரிய காட்டன் புடவைகள், பனாரஸ் கோரா புடவைகள், பகல்புரி பிரிண்டட் புடவைகள், பியூர் பனாரஸ் காட்டன் புடவைகள், செட்டிநாடு காட்டன் புடவைகள், போச்சம்பள்ளி இக்கத் சில்க் புடவைகள், கைகளால் அச்சிடப்படும் பிரிண்டட் சில்க் புடவைகள், மதுரம் மென்பட்டு புடவைகள், சந்தேரி சில்க் புடவைகள் என அனைத்திலும் புது வரவுகள் கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளன.

    பெண்கள் அணியக்கூடிய பேண்ட்டுகளில் அழகிய மாற்றங்களுடன் வசதியாக அணிந்து கொள்ளும் விதத்தில் வந்தவைதான் பலாஸோ பேன்ட்டுகள். அதிலும் எத்தனையோ வகைகள் வந்துவிட்டன.
    பெல்ட் பலாஸோ:-

    இடுப்பிலிருந்து சிறிது சிறிதாக தளர்வாகத் தொடங்கி கால்களை நெருங்கும் பொழுது அதிகத் தளர்வாக இருக்கும் பலாஸோ பேன்ட்டுகளில் பெல்ட்டுகளானது அதுவும் அதே பேன்ட் துணியிலேயே விதவிதமான வடிவங்களில் வருவது பெல்ட் பலாஸோ என்று அழைக்கப்படுகின்றது.

    பார்டர் பலாஸோ

    இந்த பேன்ட்டுகளின் கீழ்ப்பகுதியில் பார்டர்கள் வைத்து வருபவை பார்டர் பலாஸோக்களாகும். இந்த பார்டர்கள் எம்பிராய்டரி செய்யப்பட்டவையாகவோ, பிரிண்டுகள் செய்யப்பட்டவையாகவோ, ஜரி, குந்தன் வேலைப்பாட்டுடனோ அல்லது பார்டர்கள் தனியாக வாங்கி இதன் மேல் வைத்து தைக்கப் பட்டவையாகவோ, லேஸ்கள் வைத்து தைக்கப்பட்டவையாகவோ இருக்கும். பார்டர்கள் மெல்லியதாகவும் கிடைக்கும் அதேபோல் முழுங்கால் வரை பார்டர்கள் இருப்பது போன்றும் கிடைக்கும்.

    ஸ்கர்ட் பலாஸோ

    அச்சு அசலாக பாவாடை போன்ற தோற்றத்துடன் இருக்கும் இவற்றை “லாங் ஸ்கர்ட் பலாஸோ” என்றும் அழைக்கிறார்கள். இடுப்புப் பட்டையிலிருந்தே சுருக்குப் பட்டைகள் துவங்குகின்றன. அதிக ஃப்ளேர்களுடன் வரும் இந்த ஸ்கர்ட் பலாஸோ ஷார்ட் குர்த்தியுடன் அணியும் பொழுது மிகவும் அழகாக இருக்கின்றது. ஸ்கர்ட் பலாஸோக்களின் பக்கவாட்டில் குஞ்சலம் மற்றும் சலங்கைகள் தொங்குவது போல் வருவது மிகவும் கவர்ச்சியான தோற்றத்தைத் தருகின்றது.

    பேன்ட் பலாஸோ

    பேன்ட் அமைப்பில் இருக்கும் இவ்வகை பலாஸோக்களை ஷர்ட்டுகள் மற்றும் குட்டை டாப்புகளுடன் அணியலாம். பெரும்பாலும் பிளெயின் மற்றும் கோடுகள் இருப்பது போன்றே இவை வடிவமைக்கப்படுகின்றன. கோடுகளுடன் வரும் பேன்ட்டிற்கு பிளெயின் நிறத்தில் டாப் அணிவதும், பிளெயினாக வரும் பேன்ட்டிற்கு கோடுகள் போட்ட டாப்பை அணிவரும் இப்பொழுது பிரபலமாக உள்ளது.

    ஃபிளீடட் பலாஸோ

    அதிக ஃபிளீட்டுகளுடன் வரும் இவ்வகை பலாஸோக்கள் குர்த்திகள் மற்றும் டாப்புகளுடன் அணிய ஏற்றவை. டாப்புகளை டக்இன் செய்து இவ்வகை பலாஸோவுடன் அணியும் பொழுது அவை ஒரு நேர்த்தியான தோற்றத்தைத் தருபவையாக இருக்கும்.

    சைட் ஸ்லிட் பலாஸோ

    கணுக்காலிலிருந்து முழங்கால் வரை பக்கவாட்டில் ஸ்லிட்டுகளுடன் வரும் பலாஸோக்கள் இப்பொழுது கல்லூரி மாணவிகளிடையே மிகவும் பிரபலம். குட்டை டாப்புகளுடன் இவற்றை அணியும் பொழுது இது நிச்சயமாக மிகவும் அழகான தோற்றத்தைத் தருவதாகவே இருக்கும். பக்கவாட்டில் வரும் ஸ்லிட்டானது சிலவற்றில் குறைந்த அளவு உடையதாகவும் வருகின்றது.

    மிக மிக மென்மையான மிங்க் ரகத்துணிகளால் வடிவமைக்கப்படும் போர்வைக்குள் இரண்டு அடுக்குகளாக வருவதால் குளிர் மற்றும் மழைக் காலத்திற்கு கதகதப்பாக போர்த்திக் கொள்ள ஏதுவானவையாக இருக்கும்.
    குழந்தைகளுக்குப் போர்வைகளைப் போர்த்தி கதகதப்பாக தூங்க வைத்தால் அவர்கள் நிம்மதியாகத் தூங்குவார்கள். மென்மையான போர்வைகள், மென்மையான க்வில்ட்டுகள் மற்றும் அவற்றில் பல்வேறு விதமான டிசைன்கள் மற்றும் மாடல்களில் எத்தனையோ வகைகள் வந்துவிட்டன.

    * குழந்தையின் தலை, காது மற்றும் உடம்பையும் சேர்த்து இறுக்கமாகப் போர்த்தி வைக்க போர்வையிலேயே தலையை மூடும் முக்காடு (ஹூடட்) பகுதியானது இணைக்கப்பட்டது போல் வருவது பார்க்க அழகாக இருக்கின்றது. அந்த முக்காட்டில் கரடித்தலை, பான்டா கரடித்தலை, ஆட்டுக்குட்டித்தலை என வருவது குழந்தைகளுக்கு அணிவிக்கும் பொழுது அவை குளிரிலிருந்து பாதுகாப்பதோடு பார்க்கவும் அவ்வளவு அழகாக இருக்கின்றது.

    * நூறு சதவீதம் பருத்தியால் செய்யப்பட்ட குறைந்த எடையுடைய மென்மையான போர்வைகளில் இரண்டு புறமும் வெவ்வேறு டிசைன்கள் கொடுக்கப்பட்டு இருபுறமும் மாற்றி மாற்றி உபயோகப்படுத்திக் கொள்வது போல் வந்திருக்கும் போர்வைகள் அட்டகாசம் என்று சொல்லலாம். குழந்தைகளுக்குப் பிடித்தாற் போல் டைனோசர், போக்கிமான், டோரா புஜ்ஜி, பவர் ரேன்ஜர்ஸ் மற்றும் விலங்குகள் பிரிண்ட் செய்யப்பட்டு வரும் போர்வைகள் குழந்தைகளுக்கு மட்டுமல்ல நமக்கும் மிகவும் பிடிக்கும்.

    * மிக மிக மென்மையான மிங்க் ரகத்துணிகளால் வடிவமைக்கப்படும் போர்வைக்குள் இரண்டு அடுக்குகளாக வருவதால் குளிர் மற்றும் மழைக் காலத்திற்கு கதகதப்பாக போர்த்திக் கொள்ள ஏதுவானவையாக இருக்கும்.
    கலம்காரி பிரிண்டட் புடவைகள் இப்பொழுது ஹாட் டிரெண்டில் உள்ள புடவையாக சொல்லலாம். வீட்டில் அன்றாடம் அணியவும், அலுவலகத்திற்கு அணிந்து செல்லவும் ஏற்றவையாக இவை உள்ளன.
    கலம்காரி என்பது ‘கலாம்’ - எழுதுகோல் மற்றும் ‘காரி’- கைவினைத்திறன் என்ற இரண்டு பாரசீக வார்த்தைகள் இணைந்த ஒரு சொல்லாகும். பேனாவால் வடிவங்களை வண்ணங்களில் தீட்டி உருவாக்கப்படும் கலையே ‘கலம்காரி’.

    கலம்காரி புடவைகள் இந்திய மாநிலமான ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பெருமளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதேபோல் கலம்காரி டிசைன்களை அச்சிடுவதற்கு அதிக அளவில் இயற்கை சாயங்களையே உபயோகப்படுத்துகிறார்கள்.

    கலம்காரி சில்க் புடவைகள்:- கலம்காரி சில்க் புடவைகள் நேர்த்தி மற்றும் க்ளாஸாக புடவை அணியும் பெண்களுக்கு ஏற்றவை. ப்ளாக் பிரிண்ட்டுகளுடன் வரும் இவ்வகை புடவைகள் அணிபவருக்கு எளிதாகவும், வசதியாகவும் இருக்கும், அனைத்து சந்தர்ப்பங்கள் மற்றும் பார்ட்டிகளுக்கு அணிந்து செல்ல ஏற்ற புடவைகள் என்று இவற்றைச் சொல்லலாம்.

    கலம்காரி காட்டன் புடவைகள்:- மதிப்புடைய காட்டன் ரகங்களில் கலம்காரி சாயமானது இடப்பட்டு அதில் அச்சுகளை புடவை முழுவதும் அல்லது புடவையின் பார்டர் மற்றும் பல்லுவில் இருப்பது போல் வடிவமைக்கிறார்கள். கையால் அச்சிடப்படும் இவ்வகைப் புடவைகள் பல்வேறு வடிவமைப்புகளுடன் அனைவராலும் வாங்கக் கூடிய விலையில் வருகின்றன. கலம்காரி டிசைன்களில் வரும் காட்டன் புடவைகளை பெரும்பாலான பெண்கள் உடுத்துவதை நாம் கண்கூடாகப் பார்க்க முடியும். இப்புடவைகள் தினசரி உடுத்திக் கொள்ள ஏற்றவை.

    கலம்காரி க்ரேப் புடவைகள்:- இலகுரக புடவைகளை விரும்புபவர்களின் சரியான தேர்வு இவ்வகை க்ரேப் புடவைகள் மிகவும் மெல்லிய துணியால் உருவாக்கப்படும் இவை அணிபவரின் உடலில் லேசான உணர்வைத் தருகின்றன. திறமையான கைத்தறி நிபுணர்களால் இவ்வகை புடவைகளில் டிசைன்கள் அச்சிடப்படுகின்றன. அலுவலகம் செல்லும் பெண்கள் தினசரி அணிய ஏற்றவை இவை.

    டிசைனர் கலம்காரி புடவைகள்:- ஆடம்பரமான தோற்றம், வாங்கக்கூடிய விலை இவையே இப்புடவைகள் அதிக அளவில் தேவையை ஏற்படுத்துவதற்குக் காரணம். பல்வேறு வடிவங்கள் மற்றும் வடிவமைப்புகளில் வரும் இவை தனித்தன்மையைக் கொண்டவையாக இருக்கின்றன. டிசைனர் கலம்காரி புடவைகள் கையால் நெய்யப்பட்ட மற்றும் கையால் அச்சிடப்பட்ட கைவினைத் திறன் சேர்ந்த கலவையாகும்.

    கலம்காரி பிரிண்டட் புடவைகள்:- இப்பொழுது ஹாட் டிரெண்டில் உள்ள புடவையாக இவற்றைச் சொல்லலாம். வீட்டில் அன்றாடம் அணியவும், அலுவலகத்திற்கு அணிந்து செல்லவும் ஏற்றவையாக இவை உள்ளன.

    கலம்காரி பார்டர் புடவைகள்:- உடல் முழுவதும் பிளையின் வண்ணத்தில் இருக்க புடவையின் பார்டர்கள் கலம்காரி டிசைனில் வருவது நேர்த்தியான தோற்றத்தைத் தருவதாக உள்ளது. கான்ட்ராஸ்ட் நிறங்களில் கலம்காரி பார்டர்கள் மற்றும் பல்லு இருப்பது போல் வரும் இவ்வகை புடவைகள் அருமையாக இருக்கின்றன.

    கலம்காரி பட்டுப் புடவைகள்: திருமண நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களுக்கு அணிய ஏற்ற புடவைகள் இவையாகும். ராசில்க் துணி வகைகளில் உற்பத்தி செய்யப்படும் இவ்வகை பட்டுப் புடவைகள் நேர்த்தியான தோற்றத்தைத் தருகின்றன. பரந்த அளவிலான பாரம்பரிய மற்றும் சமகாலப் பாணிகளுடன் வரும் இந்த பட்டுப் புடவைகள் அனைத்துப் பெண்களிடமும் இருக்க வேண்டிய ஒன்றாகும்.

    கையால் வண்ணம் தீட்டப்படும் கலம்காரி புடவைகள்:- திறமையான கைவினைஞர்களால் கைகளால் வரைந்து வண்ணம் தீட்டப்படும் இவ்வகைப் புடவைகளை வாங்குவதற்கென்றே தனியான ரசிகைகள் இருக்கிறார்கள். இப்புடவைகளில் பழங்கால புராண கதைகள் மற்றும் ஓவியங்களில் வரும் படங்களை வண்ணமயமாகவும் துடிப்பாகவும் சித்தரித்து உருவாக்குகிறார்கள்.

    கலம்காரி ஜியார்ஜெட் புடவைகள்:- உடலமைப்பை குறைத்துக் காட்டும் இவ்வகைப் புடவைகள் பெரும்பாலான பெண்களின் வரவேற்பை பெற்றுள்ள நவீனப் போக்கு சேலைகளாகும். இவற்றை அணிவதும், பராமரிப்பதும் எளிது.

    கலம்காரி ஷிஃபான்புடவைகள்:- உடல் முழுவதும் பூக்களால் அச்சிடப்பட்டு வரும் இவ்வகை புடவைகள் அணிவதற்கு இலகுவாகவும், வாங்கக்கூடிய விலையிலும் இருக்கின்றன.

    கலம்காரி பேட்ச் வொர்க் புடவைகள்:- காட்டன்
    புடவைகளில் வரும் கலம்காரி பேட்ச் வொர்க் புடவைகள் அபாரமாக இருக்கின்றன. அலுவலகம் மற்றும் தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற புடவைகள் இவை.

    ஹாஃப் அண்டு ஹாஃப் புடவைகள்:- புத்தம் புதிய போக்கில் வந்திருக்கும் இவை ஹாஃப் சேரி மாடலில் இருக்கின்றன. தனித்துவமான வடிவமைப்புடன் வரும் இவை பெண்களின் இளவயதில் பாவாடைத் தாவணி அணிந்த நாட்களை ஞாபகப்படுத்தும் விதத்தில் உள்ளன.

    சந்தேரி கலம்காரி புடவைகள்:- சந்தேரி காட்டன் சில்க் காட்டன் மற்றும் ப்யூர்சில்க் துணிகளில் இப்புடவைகள் தயாரிக்கப்படுகின்றன. இவ்வகைப் புடவைகளை அணியும்பொழுது கௌரவமான தோற்றம் ஏற்படுவதால் பெண்களுக்கு பிடித்த புடவைகளில் முதன்மையான இடத்தை இவை பெற்றிருக்கின்றன.

    இவை மட்டுமல்லாது பெத்தண்ணா (ஆந்திரா) கலம்காரி புடவைகள், கேரளா கலம்காரி புடவைகள் என கலம்காரி புடவைகளில் ஏராளமான வகைகள் உள்ளன. பிளெயின் புடவைகளுக்கு கலம்காரி பிளவுஸ்களை அணியும் பொழுது அவை மிகவும் துடிப்பாகவும், கவர்ச்சியாகவும் இருக்கின்றது. அதேபோல், பளிச்சென்றிருக்கும் கலம்காரி புடவைகளுக்கு கான்ட்ராஸ்ட் புரோகேட் பிளவுஸ்களை அணியும் பொழுது அவை அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக உள்ளன. கலம்காரி புடவைகளுக்கு கான்ட்ராஸ்ட் பூக்கள் பிரிண்ட் செய்யப்பட்ட பிளவுஸ்களை அணிவதும் இன்றைய போக்காக உள்ளது.

    பருமனைக் குறைப்பது பார்ப்பவர்களுக்கு சிக்கெனத் தெரிய வேண்டுமென்றால், வெறுமனே டயட் மட்டும் இருந்தால் போதாது. உங்கள் ஸ்டைலையும் கொஞ்சம் மாற்றிக் கொள்ள வேண்டும்.
    பருமனைக் குறைப்பது பார்ப்பவர்களுக்கு சிக்கெனத் தெரிய வேண்டுமென்றால், வெறுமனே டயட் மட்டும் இருந்தால் போதாது. உங்கள் ஸ்டைலையும் கொஞ்சம் மாற்றிக் கொள்ள வேண்டும். சில உடைகள், பருமனாகவே இருந்தாலும் அவர்களைக் கொஞ்சம் ஒல்லியாகக் காட்டும். நம்முடைய அழகு உடல்வாகில் மட்டுமே வெளிப்படுவதில்லை. அதனால் உடுத்தும் உடையிலும் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும்.

    என்ன மாதிரியான உடைகள் உடுத்தும் போது, பருமனான உடலை ஒல்லியாகக் காட்ட முடியும் என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டீர்களா? உங்களுக்காக ஆடை வடிவமைப்பு நிபுணர்கள் தரும் சில ஸ்டைல் டிப்ஸ்கள் இதோ…

    மிடி அணியும் பெண்கள் எப்போதுமே மற்ற பெண்களைவிட அழகில் கொஞ்சம் தூக்கலாகத்தான் தெரிவார்கள். கொஞ்சம் பருமனானவர்களும் மிடியைத் தேர்ந்தெடுக்கலாம்.

    அதேசமயம் தேர்ந்தெடுக்கும் மிடி முழு நீளமானதாக இருக்கக்கூடாது. முழங்காலை மறைக்கும் அளவுக்கு பாதியளவு இருக்கும் குட்டை மிடிகளைத் தேர்ந்தெடுங்கள். குட்டையான மிடி அணியும்போது, உங்கள் உடல்வாகு கொஞ்சம் ஒல்லியாகத் தெரியும்.

    மிகவும் இறுக்கமான ஆடைகளை அணியக்கூடாது. இறுக்கமான ஆடைகள், உங்கள் உடலில் அதிகமாக உள்ள சதைப்பகுதியை அப்படியே மற்றவர்களுக்கு காட்டிக்கொடுத்துவிடும்.

    சரியான அளவில் ஸ்லிம் ஃபிட் ஜீன்ஸ் அணியலாம். அந்த ஜீன்ஸ்க்குத் தகுந்தபடி, சரியான ஹீல்ஸ் அணிவது அவசியம். உயரமான ஹீல்ஸ் அணியும்போது,  உங்கள் உடலை இன்னும் கொஞ்சம் ஒல்லியாகக் காட்ட முடியும்.

    உள்ளாடைகளைத் தேர்வு செய்வதும் முக்கியம். பிரா வாங்கும்போது சரியான அளவும் உங்கள் உடல்வாகுக்குப் பொருத்தமாகவும் இருப்பது அவசியம். இல்லையென்றால், முதுகுப்பகுதியில் சதைகள் வெளியே பிதுங்கிக் கொண்டு இருக்கும். அது மற்றவர்களை ஈர்க்காது. முகம் சுளிக்கவே வைக்கும்.

    நல்ல டார்க் ரெட், கருப்பு ஆகி நிறங்கள் பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சியாக இருக்கும்.

    இடுப்புக்கு மேலே பேண்ட் அணியக்கூடாது. இடுப்புக்குக் கீழே, தொப்புள் பகுதியில் பேண்ட் அணிய வேண்டும்.

    கோடு போட்ட டிசைன்களாக இருக்கும்போது, செங்குத்தான கோடுகள் கொண்ட உடைகளை உடுத்த வேண்டும். அவை ஒல்லியாகக் காட்டும். கிடைமட்டமான கோடுகள் உள்ள ஆடைகளாக இருந்தால், அது உங்கள் எடையை இன்னும் கொஞ்சம் கூடுதலாகவே காட்டும்.
    தமிழகத்தில் காஞ்சீபுரம் பட்டு, ஆரணி பட்டு என பல்வேறு வகையான பட்டுகள் இருந்தாலும் திருபுவனம் பட்டுக்கு தனித்துவமான அடையாளம் உண்டு.
    தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றுவதில் பட்டுப்புடவைகளுக்கு தனித்துவமான இடம் உண்டு. சாதாரண உடையில் வருபவர்கள் கூட பட்டுச்சேலை உடுத்தி வந்தால் தனி மிடுக்குடன் தோற்றமளிப்பார்கள். தமிழகத்தில் காஞ்சீபுரம் பட்டு, ஆரணி பட்டு என பல்வேறு வகையான பட்டுகள் இருந்தாலும் திருபுவனம் பட்டுக்கு தனித்துவமான அடையாளம் உண்டு. மற்ற ஊர்களில் உற்பத்தி செய்யும் பட்டுப்புடவைகளை விட, திருப்புவனம் பட்டு கலைநுணுக்கம் மிக்கது. ஜவுளி கடைகளில் திருபுவனம் பட்டுப்புடவைகளை எளிதில் அடையாளம் கண்டுவிடலாம். அதற்கு காரணம், அதன் விசிறி மடிப்பு. அதுவே திருபுவனம் பட்டுக்கு கூடுதல் பெருமையும் சேர்க்கிறது. தற்போது திருபுவனம் பட்டுப்புடவைக்கு புவிசார் குறியீடும் வழங்கப்பட்டுள்ளது.

    கோவில் நகரமான கும்பகோணத்திற்கு அருகில் அமைந்திருக்கிறது திருபுவனம். இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர் நெசவுத்தொழில்தான் செய்து வருகிறார்கள். அவர்கள் கைதேர்ந்த நுணுக்கமான வேலைப்பாடுகள் உள்ள பட்டுப்புடவைகள் நெய்வதில் திறமை மிக்கவர்கள். ஒரு பட்டுப்புடவை உற்பத்தி செய்ய குறைந்தது 15 நாட்கள் வரை எடுத்துக்கொள்கிறார்கள். மாதத்திற்கு ஒரு குடும்பம் 2 சேலைகள் வரையே தயார் செய்கிறது. இதில் குடும்பத்தில் உள்ள அனைவருமே பங்கு பெறுகிறார்கள். இங்கு ஏராளமான பட்டு கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இதில் குறிப்பிடத்தக்கது திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் (திகோசில்க்ஸ்).

    இங்கு உற்பத்தி செய்யப்படும் பட்டுப்புடவைகளில் குறிப்பிடத்தக்கது, வனசிங்காரம். இது முழுவதும் ஜரிகை இழைகளினால் சிறந்த வேலைப்பாடுகளுடன் நெய்யப்பட்ட பட்டுப்புடவை. இந்த பட்டுப்புடவை திருபுவனம் நெசவாளர்களின் கைத்திறனுக்கு சான்றாகவும் விளங்குகிறது. இதில் மான், மயில், புலி ஆகிய உருவங்கள் மிகவும் தத்ரூபமாக இடம்பிடித்து கண்களுக்கு விருந்தளிக்கும். இதே போல் பலவண்ணங்களில் புதிய புதிய டிசைன்களை நெசவு தொழிலாளர்கள் உருவாக்குகிறார்கள். இந்த சங்கத்தின் கைதேர்ந்த நெசவாளர்களால் தயாரிக்கப்படும் ‘ஜாங்களா’ ரக கல்யாண பட்டுப்புடவைகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. ரஷிய முன்னாள் அதிபர் பிரஷ்னேவும், ராணி எலிசபெத்தும் இந்தியா வந்தபோது அவர்களுக்கு போர்த்தப்பட்ட பொன்னாடைகள் இங்குதான் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது.

    திருபுவனம் பட்டுச்சேலையில் இடம்பிடிக்கும் ஒரிஜினல் ஜரிகைகளும் அதற்கு கூடுதல் பெருமைத் தேடி தருகிறது. ஜரிகை எடையில் 40 சதவீதம் வரை வெள்ளியும், 0.50 சதவீதம் தங்கமும் உள்ளது. பட்டுப்புடவை ஒன்றின் எடை 400 கிராம் முதல் 1 கிலோ வரை இருக்கும். இதில் 475 கிராம் பட்டும், மீதமுள்ளது ஜரிகையின் எடையாகவும் அமைந்திருக்கும்.

    சாயமேற்றப்பட்ட பட்டுநூல் மற்றும் ஜரிகை போன்றவை சங்கத்தின் தனி கண்காணிப்பாளர்களின் கீழ் புடவையாக நெசவு செய்யப்படுகிறது. மக்கள் மத்தியில் சேலைகளின் எடையை பொறுத்தே அதன் வலு இருக்கும் என்று நம்பப்படுகிறது. ஆனால் உண்மையில் நெசவு செய்ய உபயோகப்படுத்தப்படும் பட்டுநூலின் வலு மற்றும் அடர்த்தியின் அடிப்படையிலேயே அதன் ஆயுள் நீடிக்கிறது. திருபுவனம் பட்டு ரக சேலைகள் உடுத்திக்கொள்வதற்கு அழகாகவும், உறுத்தாமலும் இருக்கும். சேலைகளுக்கு வெளிப்படையான முறையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு, தரம், ரசனைக்கேற்ற வண்ணம் மற்றும் புதிய வடிவமைப்புகளில் புடவைகளை உருவாக்குவதற்கு சங்கத்தில் 3 பேர் கொண்ட வடிவமைப்பு குழுவும் உள்ளது.


    இந்த கூட்டுறவு நிறுவனம் மூலம் 1992-ம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட வனசிங்காரம் என்ற பட்டுப்புடவை சிறந்த புடவை வடிவமைப்பிற்கான விருதை மத்திய அரசிடம் இருந்து பெற்றுள்ளது. தற்போது புவிசார் குறியீடு வழங்கப்பட்டிருப்பது குறித்து திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க இணை இயக்குனர் மகாலிங்கம், ‘‘2014-ம் ஆண்டு புவிசார் குறியீடு பெற விண்ணப்பித்தோம். தற்போது அதற்குரிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. இதன் மூலம் திருபுவனம் பட்டுச்சேலை என்ற சொல்லை வேறு யாரும் பயன்படுத்த முடியாது. பட்டுக்கு தனி மரியாதை கிடைப்பதுடன், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி அதிகரிக்கும். இதன் மூலம் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரம் மேலும் முன்னேற்றம் அடையும். பட்டு சேலை உற்பத்தி மூலம் பட்டு விவசாயிகள், தொழிலாளர்கள், நெசவாளர்கள் என 1 லட்சம் குடும்பங்கள் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர். தமிழ்நாடு பட்டு உற்பத்தி இணையத்தின் மூலம் பட்டு நூல் கொள்முதல் செய்து அதனை சாயம் போட்டு நெசவாளர்களுக்கு வினியோகிக்கிறோம். அவர்கள் அதை புடவையாக உற்பத்தி செய்து கொண்டு வந்து கொடுக்கிறார்கள். காஞ்சீபுரம் பட்டுச்சேலைகளுக்கு எடை அதிகம். இவற்றின் எடை குறைவு. தங்கம் மற்றும் வெள்ளி ஜரிகைகளை தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல்துறையில் இருந்து வாங்குகிறோம். கலை நயத்துடன் தயார் செய்வதால் பெண்களுக்கு இதை உடுத்த வேண்டும் என்ற எண்ணம் உருவாகும். அதனால் தான் திருபுவனம் பட்டுச்சேலையை தேடி வருகிறார்கள்.

    பருத்தி என்பது அரசன் என்றால் பட்டு, ராணி போன்றது. இதுவரை சாமுத்ரிகா, ஜாங்களா, வனசிங்காரம், கோகுலவந்தனா என 30-க்கும் மேற்பட்ட ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது பழங்கால மற்றும் நவீன கால ரகங்களை சேர்த்து புதிய ரகங்களை உருவாக்கி வருகிறோம்’’ என்றார்.
    சரியான ஆடைகளை தேர்வு செய்தால் கோடைக் காலத்திற்கான ஆடைகள் இதமானதாக இருப்பதோடு மட்டுமல்லாமல் ஃபேஷனாகவும் இருக்கும்.
    கோடைக்காலத்தில் உங்களை இதமாக வைத்திருக்க பல வகையான இந்திய காட்டன் உடைகள் கிடைக்கின்றன. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், கோடைக்காலத்தில் பெண்கள் அணிய சிறந்த துணி வகையாக விளங்குகிறது காதி. அதனை சேலையாக, சல்வார் கமீஸாக மற்றும் பாவாடையாக அணியலாம். வெப்பமான தட்ப வெப்பநிலைக்கு லூசான ஆடைகளையே அணிய வேண்டும். உடலை ஒட்டிய ஜீன்ஸ் மற்றும் இறுக்கமான பேன்ட் போன்றவைகளை கோடைக்காலத்திற்கு உகந்த ஆடைகள் கிடையாது.

    ஹாரெம் பேன்ட் மற்றும் ஜோத்பூரீஸ் போன்ற லூசான பேன்ட் வகைகளை அணிந்து உங்கள் கால்கள் மூச்சு விட அனுமதியுங்கள். பொதுவாக கோடைக்காலத்து ஃபேஷன் பளிச்சென வண்ணமயமாக இருக்கும். சரியான ஆடைகளை தேர்வு செய்தால் கோடைக் காலத்திற்கான ஆடைகள் இதமானதாக இருப்பதோடு மட்டுமல்லாமல் ஃபேஷனாகவும் இருக்கும். அப்படிப்பட்ட ஆடைகளைப் பற்றி பார்க்கலாமா?

    ஹாட் பேன்ட்:

    கோடைக்காலத்தில் அணிய மிகவும் இதமாக இருப்பது ஹாட் பேன்ட்கள். லேசாகவும் ஸ்ட்ரெச் செய்து கொள்ளும் வசதியுடனும் இருக்கும் இந்த பேண்ட் சட்டைகள், டி-ஷர்ட் அல்லது தியூனிக் சட்டைகளுடன் இந்த ஹாட் பேன்ட்டை அணியலாம்.

    பருத்தி சேலைகள்:

    பெண்களுக்கு கோடைக்காலத்தில் வசதியுடன் இருக்கும் ஆடை சேலை என்பதை நீங்கள் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டீர்கள். ஆனால் ஆச்சரியமாக, கோடைக்காலத்தில் பெண்களுக்கு பருத்தி சேலைகளே இதமாக இருக்கும்.

    நீளமான பாவாடைகள்:

    அதிகமான தட்ப வெப்பநிலையில் நீளமான பாவாடைகளே வசதியாக இருக்கும். காரணம் அவை உங்கள் கால்களை முழுவதுமாக மூடி காற்றோட்டமாக வைத்திருக்கும். முடிந்தால் பருத்தி பாவாடைகளை அணியுங்கள்.

    லூசான பேன்ட் :

    இப்போதெல்லாம் லூசான பேண்ட்கள் மிகவும் பிரபலம். இவ்வகை கோடைக்கால பேன்ட்களை வாங்கி அதற்கேற்ப சட்டைகளை அணிந்து கொள்ளுங்கள்

    பருத்தி ஆடைகள்:

    வெப்பமயமான கோடைக்காலத்தில் பருத்தி ஆடைகள் உங்களை இதமாகவும் காற்றோட்டமாகவும் வைத்திருக்கும். முழு கை சட்டைகளை அணிந்து கொண்டால், வெயிலினால் கருக்க மாட்டீர்கள்.

    சல்வார் கமீஸ்:

    சேலைகளை போல், லூசான சல்வார் கமீஸ் கூட கோடைக்காலத்திற்கு சிறந்த ஆடைகளாக விளங்கும். லக்னோ சிகான் வேலைப்பாடுமிக்க காட்டன் சல்வார் கமீஸ் இந்தியாவில் கோடைக்காலத்தில் புகழ் பெற்றதாகும்.

    குட்டையான ஆடைகள்:

    கோடைக்காலத்தில் நீண்ட நேரத்திற்கு அணிய வசதியாக இருக்கும் இந்த குட்டை ஆடைகள். ஒற்றை தோள்பட்டை ஆடை வகையான இது மிகவும் தோதாக இருக்கும்.

    காதி:

    கையால் முரட்டு பருத்தியை நூற்ற விசேஷ ஆடை வகை தான் காதி. இது அணிவதற்கு வசதியாக இருப்பதோடு மட்டுமல்லாமல் பேஷனாகவும் இருக்கும். சேலைகள், குர்தா, பாவாடை மற்றும் டாப்ஸ் வடிவத்தில் காதியை அணியலாம்.
    சுடிதார் என்றால் ஒரு டாப்சும், பேண்டும் சேர்ந்து அதனுடன் துப்பட்டாவும் இணைந்தது என்ற காலம் போய் தற்போது பல வகைகளில் சுடிதார்கள் தைக்கப்படுகின்றன.
    தீபாவ‌ளி‌க்கு து‌ணி எடு‌க்க‌ச் செ‌ன்றா‌ல் அ‌திக நேர‌ம் ஆகு‌ம் எ‌ன்பது எ‌ல்லோரு‌க்கு‌ம் தெ‌ரி‌ந்ததே. ஆனா‌ல் து‌ணியை‌த் தை‌க்க‌க் கொடு‌க்கவு‌ம் நேர‌ம் ஆ‌கிறது இ‌ப்போதெ‌ல்லா‌ம். ஏ‌ன் எ‌ன்றா‌ல் அ‌‌த்தனை மாட‌ல்க‌ள் வ‌ந்து‌வி‌ட்டன. எ‌ந்த மாட‌லி‌ல் சுடிதாரையோ, ஜா‌க்கெ‌ட்டையோ தை‌ப்பது எ‌ன்று முடிவெடு‌‌ப்பது எ‌ன்பது பெ‌ண்களு‌க்கு பெரு‌ம் ‌பிர‌ச்‌‌சினையா‌கிறது.

    சுடிதார் என்றால் ஒரு டாப்சும், பேண்டும் சேர்ந்து அதனுடன் துப்பட்டாவும் இணைந்தது என்ற காலம் போய் தற்போது பல வகைகளில் சுடிதார்கள் தைக்கப்படுகின்றன. பஞ்சாபி, குஜராத்தி, மார்வாடி, ஷாட் டாப்ஸ், சல்வார் கமிஸ், கேதரிங், காலர் டைப், கட் வைத்த டாப்ஸ், ‌ஸ்‌லீ‌ப் லெ‌ஸ் (கை‌யி‌ல் இ‌ல்லாத டா‌ப்‌ஸ்) என தையல் எந்திரங்கள் முழுத் திறனையும் வெளிப்படுத்துகின்றன சுடிதார்களில்.

    ஆயத்த ஆடைகளின் மோகம் மெல்ல மெல்ல குறைந்து, தற்போது சுடிதார் துணிகள் எடுக்கப்பட்டு தங்களுக்கு வேண்டிய வகையில் தைத்து அணிகின்றனர் இளசுகள். அதிலும் தையல் கடைக்குச் சென்றால் ஒரு சுடிதார் தைப்பதற்கு எத்தனை விஷயங்களை முடிவு செய்ய வேண்டி இருக்கிறது.

    முதலில் கழுத்து வடிவம். அதில் எத்தனை வடிவங்கள். எல்லாவற்றையும் பார்த்தால் நமக்கு மயக்கமே வருகிறது. அதில் ஏதாவது ஒன்றை முடிவு செய்த பின்னர் கட் வைத்ததா, இல்லையா என்ற கேள்வி. பேண்ட் மாடல் எப்படி என்று அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதில் சொல்லி முடிக்கும் போது நாம் எப்படிப்பட்ட உடையைத் தைக்கச் சொல்லியிருக்கிறோம் என்றே புரியாமல் போய் விடுகிறது.

    அத்தனை வகையில் மாடல்களும், வகைகளும் வந்துவிட்டன. பு‌திதாக வரு‌ம் மாட‌ல்களை‌த்தா‌ன் இளசுகளு‌ம் ‌விரு‌ம்பு‌கி‌ன்றன‌ர். அதனா‌ல் தா‌ங்க‌ள் தவறாக தை‌த்து ‌விடு‌ம் பே‌ன்டினை‌க் கூட மாட‌ல் எ‌ன்று அ‌றிமுக‌ப்படு‌த்‌தி ‌விடு‌கி‌ன்றன‌ர் தைய‌ல்கார‌ர்க‌ள்.

    தற்போது இளசுகள் விரும்பி அணியும் வகையில் பஞ்சா‌பி மாடல்தான் முன்னணியில் உள்ளது. அதாவது இறுக்கமான, நீளம் குறைந்த டாப்சும், தொள தொள வென்ற பேண்டும் தான் பேஷனாகிவிட்டது. அதற்கு அடுத்தபடியாக காலர் மாடல் அதிகரித்துள்ளது. காலர் வைத்த சுடிதாருக்கு என்ன விசேஷம் என்றால் துப்பட்டா அணியத் தேவையில்லை. மேலும் அதனை ஜீன்ஸிற்கும் போட்டுக் கொள்ளலாம்.

    கைகளிலும், கழுத்தின் முன் அல்லது பின் புறத்தில் முடிச்சுகள் போடும் புதிய வடிவம் தற்போது அதிகரித்துள்ளது. இந்த மோகம் சுடிதார்களையும் தாண்டி பெண்கள் அணியும் ஜாக்கெட்டுக்கும் சென்றுள்ளதுதான் கூடுதல் தகவல்.
    ×