search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈசுவரப்பா"

    கொரோனா தடுப்பூசி வந்தபோது, அதுகுறித்து காங்கிரசார் தவறான பிரசாரம் செய்தனர். அதை போட்டுக் கொண்டால் ஆண்மை போய்விடும் என்றெல்லாம் கூறினர். இன்று அந்த தடுப்பூசி போட்டுக்கொள்ள போட்டி போடுகிறார்கள்
    மண்டியா :

    கர்நாடக மேல்-சபை தேர்தலையொட்டி பா.ஜனதா சார்பில் கிராம ஸ்வராஜ் யாத்திரை என்ற பெயரில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த பிரசார கூட்டம் மண்டியாவில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய விவசாயத்துறை இணை மந்திரி ஷோபா கலந்து கொண்டு பேசியதாவது:-

    பிரதமர் மோடி உலக தலைவராக வளர்ந்துவிட்டார். அத்துடன் பா.ஜனதாவையும் பெரிய கட்சியாக வளர்த்துள்ளார். சீனாவின் கம்யூனிஸ்டு கட்சியை விட பா.ஜனதா பெரிய கட்சியாக வளர்ந்து வருகிறது. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பிரதமராக இருந்த மன்மோகன்சிங், ஊழலில் உலகிலேயே முதல் இடத்தில் இருந்தார். ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக மோடி மீது ஒரு ஊழல் புகார் கூட இல்லை. மன்மோகன்சிங் பிரதமராக வெளிநாடுகளுக்கு பயணம் செய்தபோது அவருக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை. அவரை யாரும் வரவேற்கவில்லை. அவரை எங்கே ஒரு மூலையில் நிறுத்தி வைத்தனர்.

    ஆனால் மோடி வெளிநாடுகளுக்கு சென்றால், அதை ஒட்டுமொத்த உலகமும் உற்று நோக்குகிறது. கடந்த 2014-ம் ஆண்டு மோடி, ஊழலற்ற ஆட்சி நிர்வாகத்தை வழங்குவதாக உறுதியளித்தார். அதன்படி அவர் நடந்து கொண்டுள்ளார். இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தில் ஆயுதப்படைகளுக்கு உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஆயுதங்கள் வழங்கப்படுகின்றன.

    இவ்வாறு ஷோபா பேசினார்.

    இதில் கிராம வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் மந்திரி ஈசுவரப்பா பேசுகையில், "காங்கிரஸ் தலைவர்கள் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் பொய் பேசுவதில் போட்டி போட்டு செயல்படுகிறார்கள். பொய் பேசுவதற்கு என்று நோபல் பரிசு வழங்கப்பட்டால், அதை சித்தராமையாவுக்கு வழங்கலாம். கொரோனா தடுப்பூசி வந்தபோது, அதுகுறித்து காங்கிரசார் தவறான பிரசாரம் செய்தனர். அதை போட்டுக் கொண்டால் ஆண்மை போய்விடும் என்றெல்லாம் கூறினர். இன்று அந்த தடுப்பூசி போட்டுக்கொள்ள போட்டி போடுகிறார்கள்" என்றார்.

    பாராளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் 25 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெறும் என்று ஈசுவரப்பா கூறியுள்ளார். #Eshwarappa #BJP
    பெங்களூரு :

    கர்நாடக பா.ஜனதா மூத்த தலைவர் ஈசுவரப்பா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    தேவேகவுடா பிரதமராக இருந்தவர். தான் வகித்த பதவிக்கு ஏற்ப பேச வேண்டும். இந்த தேர்தலில் பாஜக, இரட்டை இலக்க எண்ணிக்கையில் வெற்றிபெற விடமாட்டோம் என்று அவர் சொல்வது சரியல்ல.

    நீங்கள் முன்பு வெற்றி பெற்ற 2 தொகுதிகளை தக்க வைத்துக்கொள்ள முடியுமா? என்று பாருங்கள். அதன் பிறகு எங்கள் கட்சி பற்றி அவர் பேசுங்கள். தங்களின் அங்கீகாரத்தை காப்பாற்றிக் கொள்ளவே, காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக 17 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 9 தொகுதிகள் மற்றும் ஜனதா தளம்(எஸ்) 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது என்பதை காங்கிரஸ் கூட்டணி கட்சி தலைவர்கள் மறக்கக்கூடாது.

    இந்த தேர்தலில் பாஜக 20 முதல் 25 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி. கூட்டணி அமைக்கப்பட்டவுடன் அதை மக்கள் ஒப்புக்கொள்வது இல்லை. பல்வேறு தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் தகராறு போட்டுக் கொள்கிறார்கள்.

    இத்தகையவர்களுக்கு எங்கள் கட்சியை பற்றி பேச தகுதி இல்லை. காங்கிரஸ் கட்சியை ஜனதா தளம்(எஸ்) கட்சியினரும், ஜனதா தளம்(எஸ்) கட்சியை காங்கிரசாரும் தோற்கடிப்பார்கள். இதை பொறுத்திருந்து பாருங்கள்.

    அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கர்நாடகத்தில் போட்டியிட்டால், அதை பற்றி நாங்கள் கவலைப்படமாட்டோம். இதன் மூலம் காங்கிரஸ் எந்த நிலைக்கு வந்துள்ளது என்பதை அறிய முடியும்.

    பாஜகவினருக்கு மானம், மரியாதை இல்லை என்று சித்தராமையா அடிக்கடி சொல்கிறார். முதலில் அவருக்கு அது இருக்கிறதா? என்பதை நினைத்து பார்க்க வேண்டும்.

    இவ்வாறு ஈசுவரப்பா கூறினார். #Eshwarappa #BJP
    சித்தராமையா மட்டுமின்றி, சோனியா காந்தி வந்தாலும் நாங்கள் பா.ஜனதாவில் சோ்த்துக் கொள்வோம் என்று பா.ஜனதா மூத்த தலைவர் ஈசுவரப்பா பெங்களூருவில் தெரிவித்துள்ளார். #Eshwarappa #Siddaramaiah
    பெங்களூரு :

    பா.ஜனதா மூத்த தலைவர் ஈசுவரப்பா பெங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    எங்கள் கட்சிக்கு சித்தராமையா வருவதாக சொல்லப்படுகிறது. சித்தராமையா மட்டுமின்றி, சோனியா காந்தி வந்தாலும் நாங்கள் பா.ஜனதாவில் சோ்த்துக் கொள்வோம். சித்தராமையா அவ்வப்போது தனது பேச்சை மாற்றிக்கொள்கிறார். முன்பு, தேர்தலில் போட்டியிடுவது இல்லை என்று அவர் சொன்னார். அந்த முடிவை மாற்றிக்கொண்டு தேர்தலில் போட்டியிட்டார்.

    முதல்-மந்திரி பதவிக்கு போட்டியிட மாட்டேன் என்று சொன்னார். சில நாட்களுக்கு முன்பு, மீண்டும் முதல்-மந்திரி ஆவேன் என்று கூறுகிறார்.

    இவ்வாறு ஈசுவரப்பா கூறினார்.

    ஆர்.அசோக் எம்.எல்.ஏ. கூறுகையில், “சித்தராமையா பா.ஜனதாவுக்கு வருகிறாரா? இல்லையா? என தெரியவில்லை. ஆனால் அரசியலில் யாரும் நிரந்தர நண்பர்கள் இல்லை, நிரந்தர எதிரிகளும் இல்லை. கடும் எதிரிகளாக இருந்த சித்தராமையாவும், தேவேகவுடாவும் ஒன்று சேர வில்லையா?” என்றார். #Eshwarappa #Siddaramaiah
    ஜனார்த்தனரெட்டிக்கும், பா.ஜனதாவுக்கும் தொடர்பு இல்லை என்று கர்நாடக பா.ஜனதா மூத்த தலைவர் ஈசுவரப்பா கூறியுள்ளார். #Eshwarappa #TipuJayanti
    பெங்களூரு :

    கர்நாடக பா.ஜனதா மூத்த தலைவர் ஈசுவரப்பா பாகல்கோட்டையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    எங்கள் கட்சியினரின் யாருடைய உடலிலும் திப்பு சுல்தானின் ரத்தம் ஓடவில்லை. பாரத மாதா, சுதந்திர போராட்டக்காரர்களின் ரத்தம் தான் ஓடுகிறது. இந்த திப்பு ஜெயந்தி விழாவை மாநில அரசு எதற்காக இவ்வளவு தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது என்பது தெரியவில்லை. திப்பு ஜெயந்தி விழாவை கொண்டாட தொடங்கியதில் இருந்து இந்துமத அமைப்புகளின் தொண்டர்கள் கொலை செய்யப்பட்டு வருகிறார்கள். திப்பு ஜெயந்தி விழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தின்போது, குடகில் குட்டப்பா என்பவர் மரணம் அடைந்தார்.

    அப்போது அவரது வீட்டுக்கு குமாரசாமி நேரில் சென்று ஆறுதல் கூறினார். தான் முதல்-மந்திரியானால் திப்பு ஜெயந்தி விழாவை நடத்த அனுமதிக்க மாட்டேன் என்று கூறினார்.



    ஆனால் இப்போது குமாரசாமி திடீரென முதல்-மந்திரி ஆகி இருக்கிறார். கர்நாடகத்தில் இந்து-முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக இருந்தனர். ஆனால் இப்போது இந்த அரசு திப்பு ஜெயந்தி விழாவை நடத்தி, இந்து, முஸ்லிம் மக்களிடையே அமைதியை குலைக்கிறது. மக்கள் இறந்தால், காங்கிரசாருக்கு மகிழ்ச்சியாக இருக்குமோ என்னவோ தெரியவில்லை.

    கர்நாடக பா.ஜனதா ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நாளை(அதாவது இன்று) பெங்களூருவில் நடக்கிறது. கூட்டத்தில் திப்பு ஜெயந்தி விழாவுக்கு எதிராக போராடுவது குறித்து முடிவு எடுக்கப்படும். அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் போராட்டம் நடத்துவோம். திப்பு ஜெயந்தி விழா விஷயத்தில் குமாரசாமிக்கு எந்த நிலைப்பாடும் இல்லை. ஜனார்த்தனரெட்டிக்கும், பா.ஜனதாவுக்கும் தொடர்பு இல்லை. அவரை பற்றி என்னிடம் கேள்வி கேட்க வேண்டாம்.

    இவ்வாறு ஈசுவரப்பா கூறினார்.  #Eshwarappa #TipuJayanti
    இடைத்தேர்தலில் 5 தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி பெறும் என்று பா.ஜனதா மூத்த தலைவர் ஈசுவரப்பா கூறியுள்ளார். #Eshwarappa #BJP
    பெங்களூரு :

    சிவமொக்கா, பல்லாரி, மண்டியா ஆகிய 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், ராமநகர், ஜமகண்டி ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வருகிற 3-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தலில் 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. சிவமொக்கா, மண்டியா, ராமநகர் ஆகிய தொகுதிகளில் ஜனதா தளம்(எஸ்) கட்சியும், பல்லாரி, ஜமகண்டி ஆகிய 2 தொகுதிகளில் காங்கிரசும் போட்டியிட்டுள்ளன.

    இந்த இடைத்தேர்தலில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் பல்லாரியில் பா.ஜனதா வேட்பாளர் சாந்தாவை ஆதரித்து அக்கட்சியின் மூத்த தலைவர் ஈசுவரப்பா நேற்று பிரசாரம் மேற்கொண்டார். அதற்கு முன்பு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் சித்தராமையா, முதல்-மந்திரியை போல் சுற்றிக்கொண்டிருக்கிறார். அவரை கேள்வி கேட்க யாரும் இல்லை. அவருக்கு இந்த நிலை வந்திருக்கக்கூடாது. வேட்பாளர்களை தேர்வு செய்ததில் காங்கிரசார் கவனம் செலுத்தவில்லை. கர்நாடக காங்கிரஸ் தலைவராக உள்ள தினேஷ் குண்டுராவ், காகித புலியை போன்றவர். அவரை பார்த்தால் யாருக்கும் பயம் இல்லை.



    அவரை காங்கிரசார் கண்டுகொள்வது இல்லை. கர்நாடக அரசியலில் ஒரு தொங்குநிலை நிலவுகிறது. இடைத்தேர்தல் முடிவு வெளியான பிறகு இந்த நிலைக்கு முடிவு வரும். கடந்த சட்டமன்ற தேர்தல் வரை, காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் பாம்பும், கீரியுமாக இருந்தனர். குமாரசாமி அவரது தந்தை மீது ஆணையாக முதல்-மந்திரியாக முடியாது என்று சித்தராமையா சொன்னார்.

    சித்தராமையாவை போன்ற ஒரு மோசமான முதல்-மந்திரியை நான் பார்த்ததே இல்லை. இப்போது அந்த கட்சியினர் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைத்துள்ளனர். இடைத்தேர்தலிலும் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறார்கள். மனதுக்கு வந்தபடி பேசும் சித்தராமையாவை போன்ற ஒரு மோசமான அரசியல்வாதியை நான் பார்த்தது இல்லை.

    தேர்தலில் பெரும்பான்மை பலம் கிடைக்காவிட்டால், எந்த கட்சியுடனும் கூட்டு சேர மாட்டோம் என்று ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் கூறினர். ஆனால் காங்கிரசுடன் அந்த கட்சி கூட்டணி சேர்ந்துள்ளது. காங்கிரசுக்கு வந்துள்ள மோசமான நிலை வேறு எந்த கட்சிக்கும் வரக்கூடாது. இந்த இடைத்தேர்தலில் 5 தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி பெறும்.

    இவ்வாறு ஈசுவரப்பா கூறினார். #Eshwarappa #BJP
    ×