search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96364"

    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ராகுல் காந்தி பிரதமராவார் என்று முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார். #RahulGandhi #Siddaramaiah
    பெங்களூரு :

    முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா உப்பள்ளியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சியான ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை. அக்கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி இறுதி முடிவு எடுக்கப்படும்.

    தனித்து போட்டியிடுவதாக மந்திரி எச்.டி.ரேவண்ணா கூறி இருப்பதை கவனித்தேன். நாங்கள் அனைவரும் உட்கார்ந்து பேசி தொகுதிகளை இறுதி செய்வோம். தேவேகவுடா, மைசூரு தொகுதியில் போட்டியிடுவது பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

    பாராளுமன்ற தேர்தலுக்கு நாங்கள் தீவிரமாக தயாராகி வருகிறோம். மறைந்த அம்பரீசின் மனைவி சுமலதா என்னை நேரில் சந்தித்து பேசினார். அவருக்கு மண்டியா தொகுதியில் டிக்கெட் வழங்குவது குறித்து முடிவு எடுக்கவில்லை. எங்கள் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது, பிரதமர் மோடி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இதனால் பா.ஜனதா மீது மக்கள் கோபத்தில் உள்ளனர். வருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி அதிக தொகுதிகளில் வெற்றி பெறும். ராகுல் காந்தி பிரதமராவார். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.

    இவ்வாறு சித்தராமையா கூறினார்.

    காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொள்ளாத எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சித்தராமையா அறிவித்து உள்ளார். #Siddaramaiah

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் ஜே.டி.எஸ்.-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

    கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா தொடர்ந்து சதி செய்து வருவதாக 2 கட்சி தலைவர்களும் குற்றம் சாட்டி இருந்தனர்.

    காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலரை விலைக்கு வாங்க பா.ஜனதா திட்டமிட்டு உள்ளதாகவும், இதற்காக மிக உயர்ந்த பரிசை அவர்களுக்கு தர பா.ஜனதா காத்திருப்பதாகவும் முதல் மந்திரி குமாரசாமி, கூட்டணி அரசின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல் மந்திரியுமான சித்தராமையா ஆகியோர் கூறி இருந்தனர்.

    கடந்த முறை நடத்திய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க் கள் கூட்டத்தில் முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கி ஹோளி, எம்.எல்.ஏ.க்கள் உமேஷ் ஜாதவ், நாகேந்திரா, மகேஷ் கும்டஹள்ளி ஆகிய 4 பேர் கலந்து கொள்ளவில்லை. இவர்கள் மும்பையில் பா.ஜனதா கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

    இவர்களிடம் விளக்கம் கேட்டு காங்கிரஸ் சார்பில் 2 முறை நோட்டீஸ் அனுப்பப்பட்டும் அவர்கள் பதில் அளிக்கவில்லை. இதனால் அவர்களை தமிழக அரசியல் பாணியில் தகுதிநீக்கம் செய்ய காங்கிரசார் முடிவு செய்து உள்ளனர்.


    காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு 4 பேரும் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து காங்கிரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க அவர்கள் முடிவு செய்து உள்ளதாக கூறப்படுகிறது.

    தற்போது கர்நாடக சட்டசபை கூட்டம் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தை காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் மட்டுமல்ல பி.சி.பாட்டில், நாராயணகவுடா உள்ளிட்ட மேலும் 5 எம்.எல்.ஏ.க்கள் புறக்கணித்தனர்.

    நேற்று நடந்த சட்டசபை கூட்டத்திற்கும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 4 பேரும் வரவில்லை. இந்த நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் விதான் சவுதா வளாகத்தில் இன்று நடக்கிறது.

    இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாத எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சித்தராமையா அறிவித்து உள்ளார். இதன்படி அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 4 பேரும் இன்று நடைபெறும் கூட்டத்தையும் புறக்கணிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அப்படி கூட்டத்தை புறக்கணித்தால் அவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு அவர்களின் எம்.எல்.ஏ பதவி பறிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ. உமேஷ் ஜாதவ் உணவு கிடங்கு வாரிய தலைவராக பதவி வகித்து வந்தார். அவரது வாரிய தலைவர் பதவியை முதல் மந்திரி குமாரசாமி பறித்து உள்ளார். புதிய வாரிய தலைவராக பிரதாப் கவுடா பாட்டில் நியமிக்கப்பட்டு உள்ளார்.

    பெரும்பான்மை இல்லாத குமாரசாமி அரசு பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 2 நாட்களாக நடந்த சட்டசபை கூட்டத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டம் நடத்தினார்கள். இன்று சட்டசபையில் பட்ஜெட்டை முதல் மந்திரி குமாரசாமி தாக்கல் செய்கிறார். அப்போதும் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் தர்ணாவில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தர்ணா நடத்தி ஆட்சிக்கு இடையூறு ஏற்படுத்தி வருவதாக பா.ஜனதா மீது முதல் மந்திரி குமாரசாமி குற்றம் சாட்டி உள்ளார்.

    சட்டசபை நடவடிக்கைகளுக்கு குறுக்கீடு செய்யும் வகையில் பா.ஜனதா கட்சியினர் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்கள். சபை சுமூகமாக நடைபெற அவர்கள் ஒத்துழைக்க வேண்டும். அவர்கள் நினைத்தால் அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை கொண்டு வரலாம். நாங்கள் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க தயாராக இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பா.ஜனதாவின் தர்ணா போராட்டத்திற்கு சித்தராமையாவும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    காங்கிரஸ்-ஜே.டி.எஸ். கூட்டணி அரசுக்கு பெரும்பாண்மை இல்லை என்று பா.ஜனதா கூறி வருகிறது. அப்படி கூறும் அவர்கள் அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத தீர்மானத்தை கொண்டுவர வேண்டியது தானே. அவர்களை கொண்டு வராமல் தடுப்பது யார்?

    இவ்வாறு அவர் கூறினார். #Siddaramaiah

    காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் என்னுடன் தொடர்பில் உள்ளதால், எனது தலைமையிலான கூட்டணி அரசுக்கு அச்சுறுத்தல் இல்லை என்று குமாரசாமி கூறினார். #Kumaraswamy #Congress
    பெங்களூரு :

    கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    எனது கூட்டணி அரசுக்கு எந்த மிரட்டலும் இல்லை. எனது தலைமையிலான காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு பாராளுமன்ற தேர்தல் வரை மட்டுமல்ல, தனது 5 ஆண்டுகள் ஆட்சி காலத்தை முழுமையாக பூர்த்தி செய்யும். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் நான் தொடர்ந்து தொடர்பில் உள்ளேன்.

    சில ஊடகங்கள், அரசின் நிலையற்ற தன்மையில் இருப்பதாக தவறான தகவல்களை பரப்புகின்றன. காங்கிரசை சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதா தொடர்பில் இருப்பதாக செய்திகள் வெளியிடப்படுகின்றன. நான் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் இன்று கூட பேசினேன். சட்டசபை கூட்டத்தில் அவர்கள் கலந்து கொள்வார்கள்.

    இந்த கூட்டணி அரசு தனது ஆட்சி காலத்தை பூர்த்தி செய்ய என்ன செய்ய வேண்டுமோ அதை நான் செய்வேன். இந்த அரசுக்கு காலக்கெடு குறித்து வருகிறார்கள். பிரச்சினைகளை எவ்வாறு சரிசெய்ய வேண்டும் என்பது எனக்கு தெரியும்.

    எனது கூட்டணி அரசுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், அதை பாதுகாக்க பா.ஜனதாவில் எனக்கு ஆதரவு உள்ளது. எனது செயல்பாட்டில் காங்கிரசின் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் மகிழ்ச்சியாக உள்ளனர். கூட்டணி அரசு நீடிக்காது என்று தவறான தகவல்களை சிலர் வேண்டுமென்றே பரப்புகிறார்கள்.

    கூட்டணி அரசு என்றாலே சில பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். இதை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும் என்பதை நான் செய்கிறேன். சித்தராமையா மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்களை கையாளுவதில் எந்த பிரச்சினையும் இல்லை.

    முதல்-மந்திரி பதவி காலி இல்லை என்று சித்தராமையாவே கூறி இருக்கிறார். பெரும்பான்மை எண்ணிக்கையில் எம்.எல்.ஏ.க்கள் இருந்தால், யார் வேண்டுமானாலும் முதல்-மந்திரியாக முடியும். இதுபற்றி நான் எதற்காக கவலைப்பட வேண்டும்.

    சித்தராமையா முதல்-மந்திரியாக வேண்டும் என்று அவருடைய ஆதரவாளர்கள் பேசுகிறார்கள். இதில் தவறு ஒன்றும் இல்லை. பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் தொகுதி பங்கீடு குறித்து தேவேகவுடா பேசுவார்.

    நிதி ஆதாரங்களை திரட்டுவதில் பிரச்சினை உள்ளது. அதனால் கர்நாடகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த சாத்தியமில்லை. ஆனால் பெண்கள், மதுவிலக்கை அமல்படுத்துமாறு கோரிக்கை விடுக்கிறார்கள். குஜராத்தில் மதுவிலக்கு அமலில் இருந்தாலும், மதுபானம் தாராளமாக கிடைக்கிறது. மதுவிலக்கை அமல்படுத்துவது குறித்து ஆழமாக ஆலோசிக்க வேண்டும்.

    இவ்வாறு குமாரசாமி கூறினார். #Kumaraswamy #Congress
    கர்நாடகத்தில் கூட்டணி அரசை கலைக்க முயற்சி செய்து வரும் பா.ஜனதா, காங்கிரசை சேர்ந்த 20 எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.50 கோடி தருவதாக பேரம் பேசுகிறது என்று சித்தராமையா பரபரப்பு குற்றச்சாட்டை கூறி இருக்கிறார். #Siddaramaiah #BJP
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

    இதில் கூட்டணி கட்சியான காங்கிரசை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்கு மந்திரி பதவி கிடைக்காததால் அதிருப்தியில் இருந்து வருகிறார்கள். அவர்களை ‘ஆபரேஷன்’ தாமரை திட்டத்தின் மூலம் தங்கள் பக்கம் இழுத்து ஆட்சி அமைக்க அவ்வப்போது பா.ஜனதா முயற்சி செய்து வருகிறது. இதனால் கூட்டணி ஆட்சிக்கு அடிக்கடி சிக்கல் ஏற்பட்டு வருகிறது.

    இதற்கிடையே கூட்டணி ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை சுயேச்சை எம்.எல்.ஏ.க்களான நாகேஷ், சங்கர் ஆகியோர் திரும்ப பெற்றனர். அத்துடன் மந்திரி சபையில் இருந்து நீக்கப்பட்ட ரமேஷ் ஜார்கிகோளி உள்ளிட்ட சில காங்கிரஸ் எம்.எல். ஏ.க்கள் பா.ஜனதாவில் இணைய முயற்சி செய்தனர்.

    இதனால் கூட்டணி ஆட்சியில் சலசலப்பு உருவானது. இதைதொடர்ந்து சட்டமன்ற காங்கிரஸ் கட்சி கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில் காங்கிரசை சேர்ந்த ரமேஷ் ஜார்கிகோளி, உமேஷ் ஜாதவ், மகேஷ் கமடள்ளி, நாகேந்திரா ஆகிய 4 பேர் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தனர். இதனால் அவர்கள் 4 பேருக்கும் விளக்கம் கேட்டு காங்கிரஸ் கட்சி நோட்டீசு அனுப்பியது. அதற்கு 4 பேரும் அளித்த பதில் திருப்திகரமாக இல்லை எனக் கூறி அவர்களை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க காங்கிரஸ் கட்சி உத்தரவிட்டது.

    ஆனால் அவர்கள் நேரில் ஆஜராகியும் விளக்கம் அளிக்கவில்லை. இதனால் 4 எம்.எல்.ஏ.க்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், சபாநாயகர் மூலம் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யவும் காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.

    இத்தகைய பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கர்நாடக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை(புதன்கிழமை) பெங்களூருவில் உள்ள விதானசவுதா கட்டிடத்தில் தொடங்குகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் நாளை தொடங்கும் சட்டசபை கூட்டத்தில் கவர்னர் வஜூபாய் வாலா உரையாற்றுகிறார்.



    இந்த கூட்டத்தொடரில் கூட்டணி அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவர பா.ஜனதா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக காங்கிரசை சேர்ந்த 20 எம்.எல். ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்கவும், பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்காமல் இருக்க செய்யவும் பா.ஜனதா முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் கூட்டணி அரசை கவிழ்க்க பா.ஜனதா திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் 20 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இழுத்து கூட்டணி ஆட்சியை கலைக்க பா.ஜனதா தலா ரூ.50 கோடி பேரம் பேசி வருவதாக கூட்டணி ஆட்சியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்-மந்திரியுமான சித்தராமையா பரபரப்பான குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

    இதுகுறித்து அவர் கொப்பலில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    பா.ஜனதாவினருக்கு ஆட்சி அதிகார பைத்தியம் பிடித்துவிட்டது. கூட்டணி அரசை கவிழ்க்க பா.ஜனதா முயற்சி செய்கிறது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 20 பேரை தங்கள் பக்கம் இழுக்க பா.ஜனதா தலா ரூ.50 கோடி(மொத்தம் ரூ.1,000 கோடி) தருவதாக பேரம் பேசுகிறது. இந்த பணம் அவர்களுக்கு எங்கிருந்து வருகிறது?. ஒரு வாரம் அரியானாவில் நட்சத்திர ஓட்டலில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் தங்கி இருந்தனர். அதற்கு எங்கிருந்து பணம் வந்தது?.

    பொதுமக்கள் வரியாக செலுத்திய பணத்தை பா.ஜனதாவினர் கொள்ளையடித்து உள்ளனர். மீண்டும் கொள்ளையடிக்க ஆட்சி அதிகாரம் வேண்டும். அதற்காகத்தான் அவர்கள் ஆட்சிக்கு வர முயற்சித்து வருகிறார்கள்.

    இவ்வாறு சித்தராமையா கூறினார். #Siddaramaiah #BJP
    இனி காங்கிரசாரின் விமர்சனத்தை சகித்துக்கொள்ள மாட்டேன் என்று ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா எச்சரிக்கை விடுத்துள்ளார். #Devegowda #Congress
    பெங்களூரு :

    ஜனதா தளம்(எஸ்) கட்சியின் பொதுக்கூட்டம் பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா கலந்து கொண்டு பேசியதாவது:-

    காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களால் முதல்-மந்திரி குமாரசாமியை தொடர்புகொள்ள முடியவில்லை என்று சொல்கிறார்கள். இதுபோல் அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் தினமும் பேசுகிறார்கள். காங்கிரஸ் கொடுத்த பட்டியலில் ஒரு வாரியத்தை தவிர மற்ற வாரியங்களுக்கு தலைவர்களை நியமனம் செய்துள்ளோம்.

    ஆட்சி நிர்வாகத்தை எப்படி நடத்துவது என்று எங்களுக்கு தெரியவில்லை. எத்தனை நாட்கள் தான் இவ்வாறு நடந்து கொள்வீர்கள்?. ஒவ்வொரு எம்.எல்.ஏ.வும் ஒவ்ெவான்று பேசுகிறார்கள். நாங்கள் இப்போது இறுதிக்கட்டத்தில் வந்து நிற்கிறோம்.

    நாட்டில் சில கூட்டணி அரசுகள் அமைந்துள்ளன. நானும் காங்கிரசின் ஆதரவில் பிரதமரானேன். தரம்சிங் ஆட்சியில் கூட்டணி நிபந்தனைகள் விதிக்கப்படவில்லை. தரம்சிங் அரசு கவிழ நானோ அல்லது குமாரசாமியோ காரணமல்ல. இப்போது காங்கிரஸ் ஆதரவில் குமாரசாமி முதல்-மந்திரி ஆகி இருக்கிறார்.

    தனக்கு ஏற்பட்ட வேதனை காரணமாக, முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாக குமாரசாமி கூறினார். எங்கள் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் தான்(சித்தராமையா) எந்த பணிகளையும் செய்யவில்லை. அப்போது எனக்கு ஏற்பட்ட வலி, கடவுளுக்கு மட்டுமே தெரியும்.



    சோனியா காந்திக்கு அழுத்தம் கொடுத்திருந்தால், நான் முதல்-மந்திரி ஆகி இருப்பேன் என்று அவர் (சித்தராமையா) அடிக்கடி சொன்னார். கூட்டணி ஏற்பட்டபோதும், என்னையே மீண்டும் முதல்-மந்திரியாக்கி இருக்கலாம் என்று அவர் கூறினார்.

    அப்போது காங்கிரசில் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. யார் ஆட்சியை நடத்துவது என்ற கேள்வி எழுந்தது. சோனியா காந்தியின் பிரதிநிதிகள் வந்து, குமாரசாமியை முதல்-மந்திரியாக்கினால் ஆதரவு வழங்குவதாக கூறினார்கள். இதனால் காங்கிரஸ் மேலிடத்தின் விருப்பப்படி குமாரசாமி முதல்-மந்திரியானார்.

    கூட்டணி அரசு பற்றி யாராவது விமர்சனம் செய்தால் அதை நான் சாதாரணமாக எடுத்துக்கொள்ள மாட்டேன். அதற்கு தக்க பதில் கொடுப்பேன். காங்கிரசார் தொடா்ந்து எங்களை விமர்சித்து பேசினால், நிலைமை கைமீறி போய்விடும்.

    இனி காங்கிரசாரின் விமர்சனத்தை நான் சகித்துக்கொள்ள மாட்டேன். சித்தராமையா 5 ஆண்டுகள் முதல்-மந்திரியாக இருந்து ஆட்சி நிர்வாகத்தை நடத்தினார். அவரை பற்றி நாங்கள் எந்த விமர்சனமும் செய்யவில்லை. குமாரசாமி இதுவரை எல்லை மீறி பேசியது இல்லை.

    ஒரு முறை மட்டும், நான் குமாஸ்தாவை போல் பணியாற்றுவதாக கூறினார். அது உண்மை. ஆனால் அது, ஜனதா தளம்(எஸ்) கட்சி எம்.எல்.ஏ.க்களிடம் அவர் தனிப்பட்ட முறையில் கூறியது. கூட்டணி அரசை நடத்துவது எவ்வளவு கடினமானது என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என தெரிவிக்கவே அவர் அவ்வாறு கூறினார். அந்த வார்த்தையின் பின்னணியில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை.

    இவ்வாறு தேவேகவுடா கூறினார். #Devegowda #Congress
    பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் டெல்லி சென்ற முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து கூட்டணியில் எழுந்துள்ள குழப்பம் குறித்து பேசியுள்ளார். #Siddaramaiah #RahulGandhi
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு நடக்கிறது. குமாரசாமி பற்றி காங்கிரசை சேர்ந்த எஸ்.டி.சோமசேகர் எம்.எல்.ஏ., விமர்சனம் செய்தார். இதே நிலை தொடர்ந்தால், முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்வேன் என்று குமாரசாமி எச்சரிக்கை விடுத்தார்.

    இதையடுத்து எஸ்.டி.சோமசேகர் எம்.எல்.ஏ., தான் கூறிய கருத்துக்காக வருத்தம் தெரிவித்தார். இந்த நிலையில் ஜனதா தளம்(எஸ்) கட்சி பொதுக்கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய தேவேகவுடா மற்றும் குமாரசாமி, சித்தராமையாவை விமர்சனம் செய்துள்ளனர். காங்கிரசுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளனர். இதன் காரணமாக கூட்டணியில் குழப்பம் எழுந்துள்ளது.

    இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் டெல்லி சென்ற முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து பேசினார். அப்போது கர்நாடக அரசியல் நிலவரம் மற்றும் கூட்டணியில் எழுந்துள்ள குழப்பம் குறித்து சில தகவல்களை ராகுல் காந்திக்கு சித்தராமையா தெரிவித்தார். #Siddaramaiah #RahulGandhi
    கர்நாடக முன்னாள் முதல் மந்திரி சித்தராமையா தவறாக நடந்துகொண்டதாக ஊடகங்கள் குறிப்பிடும் மைசூரு பெண், நான் மேஜையை தட்டிப் பேசியதால் தான் அவர் கோபப்பட்டார் என தெரிவித்துள்ளார். #Mysuruwoman #Siddaramaiah
    பெங்களுரு:

    மைசூருவில் தனது பிரச்சனையை தெரிவிக்க வந்த பெண்ணை கர்நாடக மாநில முன்னாள் முதல் மந்திரி அவமதித்த சம்பவம் தொடர்பாக விசாரித்து அறிக்கை அனுப்புமாறு கர்நாடக மாநில காவல்துறை டி.ஜி.பி.க்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    இந்நிலையில், இந்த சர்ச்சையில் தொடர்புடைய பெண்ணான ஜமாலா இன்று மாலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

    ‘முன்னாள் முதல் மந்திரி சித்தராமையாவுக்கும் எனக்கும் இடையில் எந்த சச்சரவும் கிடையாது. அவர் இந்த மாநிலத்தின் மிக சிறந்த முதல் மந்திரியாக ஆட்சி செய்தவர். நான் சில குறைகளை தெரிவித்து மூர்க்கத்தனமாக பேசினேன்.

    ஒரு முன்னாள் முதல் மந்திரியிடம் நான் அப்படி பேசியிருக்க கூடாது. மேஜையை தட்டியபடி நான் பேசிய முறையை கண்டுதான் அவர் கோபப்பட நேர்ந்தது’ என ஜமாலா தெரிவித்துள்ளார். #Mysuruwoman #Siddaramaiah 
    மைசூருவில் தனது பிரச்சனையை தெரிவிக்க வந்த பெண்ணை கர்நாடக மாநில முன்னாள் முதல் மந்திரி அவமதித்த சம்பவத்துக்கு மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கண்டனம் தெரிவித்துள்ளார். #PrakashJavadekar #Siddaramaiah
    புதுடெல்லி:

    கர்நாடக மாநில முன்னாள் முதல் மந்திரியும் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு உறுப்பினருமான சித்தராமையா இன்று மைசூரு நகரில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

    அவர் முன்னர் எம்.எல்.ஏ.வாக பதவி வகித்த மைசூரு சாமுண்டீஸ்வரி தொகுதியை சேர்ந்த ஒருபெண் ஒலிபெருக்கி மூலம் தனது பிரச்சனையை சித்தராமையாவுக்கு தெரியப்படுத்தினார். 

    அந்தப் பெண் ஆவேசமாக பேசியதை கேட்டு ஒருகட்டத்தில் பொறுமையை இழந்த சித்தராமையா, அவரது கையில் இருந்த மைக்கை பறிக்க முயன்றார். அப்போது, சித்தராமையாவின் கை அந்தப் பெண்ணின் துப்பட்டா மீது பட்டதால் மேலாடை லேசாக நழுவியது.

    ஒலிபெருக்கி பறிபோன நிலையிலும் சித்தராமையாவிடம் தனது குறைகளை அந்தப் பெண் ஆவேசமாக தெரிவித்தார். அவரது தோள்மீது கை வைத்து அமருமாறு சித்தராமையா எச்சரித்தார். 

    இந்த காட்சிகள் அனைத்தும் செய்தி நிறுவனங்கள் மூலம் பல்வேறு தலைப்புகளுடன் வீடியோவாக பதிவேற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த சம்பவத்துக்கு பா.ஜ.க.வை சேர்ந்த மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக கருத்து தெரிவித்த பிரகாஷ் ஜவடேகர், ‘ அந்தப் பெண்ணை சித்தராமையா அவமதித்தது குற்றம். சித்தராமையாவை என்ன செய்யப் போகிறார்? என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திதான் தெளிவுப்படுத்த வேண்டும்.

    அவர்கள் பெண்களை அப்படித்தான் பார்க்கிறார்கள். ஒரு குடும்பத்தை சேர்ந்த பெண்ணைத்தவிர (சோனியா) வேறு பெண்களுக்கு காங்கிரசார் மதிப்பளிப்பதில்லை’ என குறிப்பிட்டுள்ளார். #PrakashJavadekar #Siddaramaiah 
    ஆபரேசன் தாமரை திட்டத்தை பா.ஜனதா கைவிடவில்லை. இன்னும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது என்று கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார். #kumarasamy #bjp #congressmlas #yeddyurappa

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதாதள ஆட்சியை கவிழ்க்க பாரதீய ஜனதா சதி செய்து வருவதாக கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி கூட்டணி ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல் மந்திரியுமான சித்தராமையா ஆகியோர் கூறி இருந்தனர்.

    ஏற்கனவே 2 முறை ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்ததாகவும், தற்போது 3-வது முறையாக இந்த முயற்சியை மேற்கொண்டு வருவதாகவும் சித்தராமையா மற்றும் துணை முதல்மந்திரி பரமேஸ்வர் ஆகியோர் குற்றம் சாட்டி இருந்தனர்.

    இதைத்தொடர்ந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்க காங்கிரசார் நடவடிக்கை எடுத்தாலும் பாரதீய ஜனதா தொடர்ந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் போனில் பேசி அவர்களை இழுக்க முயற்சி செய்து வருவதாக கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி குற்றம் சாட்டி உள்ளார்.

    இதுகுறித்து அவர் பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கர்நாடக மாநிலத்தில் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா முயற்சிக்க வில்லை என்று எடியூரப்பா கூறி இருக்கிறார். ஆபரேசன் தாமரை நடைபெறவில்லை என்றும் அவர் கூறி இருக்கிறார். ஆனால் உண்மையில் ஆபரேசன் தாமரை திட்டத்தை பா.ஜனதா கைவிடவில்லை. இன்னும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது.

    எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியில் பா.ஜனதா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

    கடந்த வியாழக்கிழமை இரவு கூட காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவருடன் பா.ஜனதாவினர் தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார்கள். அப்போது பா.ஜனதாவுக்கு வரும்படி அந்த எம்.எல்.ஏ.வை அழைத்து இருக்கிறார்கள்.

    அதற்காக மிகப்பெரிய பரிசை கொடுப்பதாக அந்த எம்.எல்.ஏ.விடம் சொல்லி இருக்கிறார்கள். அந்த மிகப்பெரிய பரிசு நீங்கள் நினைப்பது போல் மிகக்குறைவான பரிசு அல்ல. அது மிகப்பெரிய பரிசு.

    அந்த மிகப்பெரிய பரிசு என்னவென்று நான் சொன்னால் அனைவரும் வியப்படைவீர்கள். மிகப்பெரிய பரிசு மட்டுமல்ல பணமும் கொடுப்பதாக அந்த எம்.எல்.ஏ.விடம் பா.ஜனதாவினர் பேரம் பேசி இருக்கின்றனர்.

    ஆனால் அந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. பா.ஜனதாவுக்கு வரமாட்டேன் என்று கூறி இருக்கிறார். தற்போது தான் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், தன்னை தொடர்பு கொள்வதை விட்டுவிடும்படியும் அந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. பா.ஜனதாவிடம் கூறி இருக்கிறார். இந்த தகவலை அந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.வே என்னிடம் கூறினார்.

    அந்த எம்.எல்.ஏ.வுக்கு பா.ஜனதா கொடுக்கும் மிகப்பெரிய பரிசு என்ன என்பதை நான் கூறமாட்டேன். அதுகுறித்து அந்த எம்.எல்.ஏ.வை தொடர்பு கொண்டு நீங்கள் கேட்டுக்கொள்ளுங்கள்.


    கடந்த 2008-ம் ஆண்டு எம்.எல்.ஏ.க்களை பேரம் பேசி இழுத்து முதல் மந்திரி பதவியை எடியூரப்பா தக்க வைத்துக்கொண்டார். அதுபோலத்தான் தற்போதும் எம்.எல்.ஏ.க் களை இழுக்கும் பணியை பா.ஜனதா மேற்கொண்டு வருகிறது.

    எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜனதா முயற்சித்து வருவதை நான் ஒன்றும் செய்ய முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார். #kumarasamy #bjp #congressmlas #yeddyurappa

    கர்நாடகாவில் நிலவும் அரசியல் குழப்பம் நீடிக்கும் நிலையில், இன்று மீண்டும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார். #KarnatakaCrisis #CLPMeeting #Siddaramaiah
    பெங்களூரு:

    கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சி கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பாரதீய ஜனதா கட்சி முயற்சிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராம்நகர் அருகேயுள்ள தனியார் சொகுசு ஓட்டலில் (ரெசார்ட்) தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    பாரதீய ஜனதாவின் குதிரை பேரத்தில் இருந்து பாதுகாக்கும் வகையில்தான் இப்படி செய்திருப்பதாக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்தார். முன்னதாக சித்தராமையா தலைமையில் எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது.



    இந்நிலையில், பெங்களூரில் இன்று காலை 11 மணிக்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார். அனைத்து எம்எல்ஏக்களும் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே நடத்தப்பட்ட எம்எல்ஏக்கள் கூட்டத்தை புறக்கணித்த  அதிருப்தி எம்எல்ஏக்கள் 4 பேரிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    இதற்கிடையே சொகுசு விடுதியில் தங்கியிருந்த எம்.எல்.ஏ.க்களுக்கிடையே ஏற்பட்ட சண்டையில், ஆனந்த் சிங் எம்எல்ஏ காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சூழ்நிலையில், இன்று மீண்டும் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. #KarnatakaCrisis #CLPMeeting #Siddaramaiah 
    கர்நாடகாவில், ஆட்சியை தக்க வைக்க, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் சொகுசு விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால், குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசுக்கு, ஆபத்து நீடிக்கிறது. #OperationLotus #CLP #KarnatakaPolitics #Congress
    பெங்களூரு:

    கர்நாடகாவில், முதல்வர் குமாரசாமி தலைமையிலான, மதச் சார்பற்ற ஜனதா தளம் - காங்.,கூட்டணி ஆட்சி நடக்கிறது. அமைச்சரவை விஸ்தரிப்புக்கு பின், காங்கிரசில் அதிகரித்த அதிருப்தி, இன்னும் ஓயவில்லை.

    அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட, ரமேஷ் ஜார்கிஹோளி, தன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்களுடன் டெல்லி சென்றிருந்தார். பா.ஜ., மேலிட தலைவர்களை சந்திக்க முயற்சித்தார். இதற்கிடையில், கார்ப்பரேஷன் மற்றும் வாரிய நியமனத்துக்கு பின், காங்கிரசில் சில, எம்.எல்.ஏ.,க்கள் அதிருப்தியில் கொதித்தனர். இவர்கள், ரமேஷ் ஜார்கிஹோளி கோஷ்டியில் இணைந்தனர். சிலர், அதிருப்தி கொடியேந்தி, மஹாராஷ்டிர மாநிலம், மும்பைக்கு பறந்தனர்.

    இந்த அதிருப்தியை சாதகமாக்கி, கர்நாடகாவில் ஆட்சியமைக்க, பா.ஜனதா தலைவர்கள், களமிறங்கியதாக தகவல் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்த விவகாரத்தில், காங்கிரஸ் மேலிடம் தலையிட்டு, அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்த முயற்சி எடுத்து வருகிறது.

    இந்த பரபரப்பான நிலையில், காங், எம்.எல்.ஏ.,க்கள் சிறப்பு கூட்டம், சித்தராமையா தலைமையில் பெங்களூரில் நேற்று நடந்தது. எம்.எல்.ஏ.,க்கள் ஒவ்வொருவராக வந்ததால், கூட்டம் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இறுதியில், 76 எம்.எல்.ஏ.,க்கள் வந்தனர். நாகேந்திரா, மகேஷ் கமடள்ளி, உமேஷ் ஜாதவ், ரமேஷ் ஜார்கிஹோளி வரவில்லை.



    கூட்டத்தின் முடிவில், மேலிட தலைவர்கள் கூறியதாவது:

    பா.ஜ.,வின்,ஆப்பரேஷன் தாமரை' முயற்சி இன்னும் முடிவுக்கு வரவில்லை. எனவே, எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், சில நாட்கள் கட்டாயமாக சொகுசு விடுதியில் தங்க வேண்டும். எந்த விளக்கமும் தேவையில்லை. வீட்டுக்கு செல்ல வாய்ப்பு அளிக்க முடியாது. தொலைபேசி மூலம் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு, விடுதிக்கு செல்லும் விஷயத்தை கூறி, உங்களுக்கு தேவையான பொருட்களை வரவழைத்துக் கொள்ளுங்கள்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்.

    இதையடுத்து, காங்கிரஸ், எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், பிடதியில் உள்ள சொகுசு விடுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால், குமாரசாமி தலைமையிலான அரசுக்கு ஆபத்து நீடிக்கிறது. குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியினர், கடும் கலக்கத்தில் உள்ளனர்.  #OperationLotus #CLP #KarnatakaPolitics #Congress 
    காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.60 கோடி வழங்க பா.ஜனதா பேரம் பேசியதாக சித்தராமையா பரபரப்பு குற்றச்சாட்டை கூறி இருக்கிறார். #Siddaramaiah #Congress
    பெங்களூரு :

    கர்நாடக சட்டமன்ற காங்கிரஸ் குழு கூட்டம் பெங்களூரு விதானசவுதாவில் நடந்தது. இந்த கூட்டம் முடிவடைந்த பிறகு அதன் தலைவர் சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    சட்டமன்ற காங்கிரஸ் குழு சிறப்பு கூட்டத்திற்கு இன்று (அதாவதுநேற்று) அழைப்பு விடுத்திருந்தோம். இந்த கூட்டத்தில் மேலிட பொறுப்பாளர் வேணுகோபால், நாடாளுமன்ற காங்கிரஸ் குழு தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் மற்றும் எங்கள் கட்சி மந்திரிகள், எம்.பி.க்கள், எம்.எல்.சி.க்கள் கலந்துகொண்டனர்.

    80 எம்.எல்.ஏ.க்களில் 4 பேர் மட்டும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. உமேஷ் ஜாதவ் எம்.எல்.ஏ., கடிதம் மூலம் தனக்கு உடல்நிலை சரி இல்லை என்று காரணம் தெரிவித்துள்ளார்.

    நாகேந்திரா, எங்கள் மேலிட பொறுப்பாளரை தொடர்பு கொண்டு, கோர்ட்டு வழக்கில் விசாரணையில் பங்கேற்க உள்ளதால் ஆஜராக இயலவில்லை என்று கூறி இருக்கிறார்.

    மற்ற 2 எம்.எல்.ஏ.க்கள் ரமேஷ் ஜார்கிகோளி (கோகாக்), மகேஷ் குமடள்ளி (அதானி) ஆகியோர் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. நாகேந்திரா மற்றும் உமேஷ் ஜாதவ் ஆகியோர் கூறிய காரணங்கள் உண்மையானதா? என்பதை நாங்கள் ஆய்வு செய்வோம்.

    கூட்டத்தை புறக்கணித்த 4 பேருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்புவோம். அவர்கள் விளக்கம் அளித்த பிறகு அதுபற்றி கட்சி மேலிட தலைவர்களுடன் கலந்து ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம்.

    காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பலர் ராஜினாமா செய்வதாக ஊடகங்களில் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன. அது வெறும் வதந்தி தான். அதனால் நாங்கள் சிறப்பு கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினோம்.

    எங்கள் கட்சியை சேர்ந்த யாரும் பா.ஜனதாவுக்கு செல்ல மாட்டார்கள். 80 எம்.எல்.ஏ.க்களில் 76 பேர் கூட்டத்தில் கலந்துகொண்டனர். இதில் ஒரு நியமன உறுப்பினரும் அடங்குவார். கூட்டணி அரசை கவிழ்க்க பா.ஜனதா சதி செய்கிறது. 2 முறை முயற்சி செய்து, தோல்வி அடைந்தனர். இப்போது மீண்டும் அந்த முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள்.



    ஜனநாயக கொள்கைகளுக்கு எதிராக பா.ஜனதாவினர் செயல்படுகிறார்கள். நாடாளுமன்ற தேர்தல் குறித்து விவாதிக்க கர்நாடக பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் டெல்லி சென்றனர். இன்னும் அவர்கள் அங்கே என்ன செய்கிறார்கள்?.

    கர்நாடக கூட்டணி அரசை கவிழ்க்க, பிரதமர் மோடி, பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, மற்ற முன்னணி தலைவர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஏனென்றால், தென்இந்தியாவில் கர்நாடகத்தில் மட்டுமே பா.ஜனதா சற்று பலமாக உள்ளது.

    கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 17 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால் அக்கட்சி நடத்திய ஆய்வில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என தகவல் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக வெட்கம் இல்லாமல், பிரதமர் மோடியே கூட்டணி அரசை கவிழ்க்க தூண்டிவிட்டுள்ளார்.

    இன்று(நேற்று) நடந்த கூட்டத்தில் நாங்கள் எங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளோம். எங்களிடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை. எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களிடம் பா.ஜனதாவினர் பேரம் பேசிய ஆதாரம் உள்ளது.

    அதில் எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.60 கோடி வரை வழங்க பா.ஜனதாவினர் முன்வந்துள்ளனர். மேலும் மந்திரி பதவியை வழங்குவதாகவும் உறுதியளித்து உள்ளனர். மோடி தன்னை இந்த நாட்டின் காவல்காரர் என்று கூறிக்கொள்கிறார். இது தான் காவல்காரரின் வேலையா?.

    பா.ஜனதாவின் சதி வேலையை முறியடிக்க காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் ஒரே இடத்தில் தங்க வைக்க முடிவு செய்துள்ளோம்.

    எங்களுக்கு எந்த பயமும் இல்லை. ஆனாலும் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக நாங்கள் ஒரே இடத்தில் தங்க முடிவு செய்துள்ளோம்.

    இவ்வாறு சித்தராமையா கூறினார். #Siddaramaiah #Congress
    ×