என் மலர்
நீங்கள் தேடியது "slug 96711"
ஆப்பிள் நிறுவனத்தின் 2019 ஐபோன் மாடல்களில் நிச்சயம் இந்த அம்சங்கள் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரிபாகங்களை உற்பத்தி செய்து வழங்கும் தாய்வான் நாட்டு நிறுவனம் புதிய ஐபோன்களில் வழங்குவதற்கான சிப்செட்களை உற்பத்தி செய்ய துவங்கி விட்டதாக தெரிவித்துள்ளது. ஆப்பிள் ஏ13 என்ற பெயரில் அறிமுகமாக இருக்கும் புதிய சிப்செட்கள் உற்பத்தியானதும் அவை சோதனைக்கு உட்படுத்தப்பட இருக்கிறது.
புதிய சிப்செட்கள் இம்மாத துவக்கத்தில் அதிகளவில் உற்பத்தி செய்யப்படும் என தெரிகிறது. ஆப்பிள் ஏ13 சிப்செட் 2019 ஐபோன் மாடல்களில் வழங்கப்பட இருக்கிறது. புதிய 2019 ஐபோன் மாடல்கள் ஐபோன் 11 என்ற பெயரில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சோதனையில் எவ்வித பிரச்சனையும் ஏற்படாத பட்சத்தில் இம்மாத இறுதியில் புதிய சிப்செட்கள் அதிகளவு உற்பத்தி பணிகள் துவங்கலாம்.
ஆப்பிள் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் தனது ஐபோன்களில் புதிய சிப்செட்களை வழங்குவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது. இதன் மூலம் புதிய ஐபோன்களின் வேகம் மற்றும் பேட்டரி பயன்பாட்டை மேம்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு ஐபோன்கள் D43 மற்றும் D44 என்ற குறியீட்டு பெயரில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் 2019 ஐபோன் XR N104 என்ற பெயரில் உருவாகிறது.

புதிய 2019 ஐபோன்களின் வடிவமைப்பில் அதிகளவு மாற்றங்கள் இருக்காது என்ற வகையில், புதிய ஐபோன் XS மற்றும் ஐபோன் XS மேக்ஸ் மாடல்களில் மொத்தம் மூன்று பிரைமரி கேமராக்கள் வழங்கப்படலாம் என தெரிகிறது. ஐபோன் XR மாடலின் 2019 வெர்ஷனில் டூயல் பிரைமரி கேமரா வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
அந்த வகையில் 2019 ஐபோன்களில் கேமரா அம்சம் அதிகளவு மாற்றங்களை பெற இருக்கிறது. இத்துடன் புகைப்படங்களை மிக தெளிவாக படம்பிடிக்க அல்ட்ரா-வைடு-ஆங்கிள் லென்ஸ் வழங்கப்படலாம் என தெரிகிறது. ஐபோன் XR மாடலின் மேம்பட்ட மாடலில் கூடுதல் சென்சார் சூம் வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
புகைப்படம் நன்றி
புதிய சிப்செட்கள் இம்மாத துவக்கத்தில் அதிகளவில் உற்பத்தி செய்யப்படும் என தெரிகிறது. ஆப்பிள் ஏ13 சிப்செட் 2019 ஐபோன் மாடல்களில் வழங்கப்பட இருக்கிறது. புதிய 2019 ஐபோன் மாடல்கள் ஐபோன் 11 என்ற பெயரில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சோதனையில் எவ்வித பிரச்சனையும் ஏற்படாத பட்சத்தில் இம்மாத இறுதியில் புதிய சிப்செட்கள் அதிகளவு உற்பத்தி பணிகள் துவங்கலாம்.
ஆப்பிள் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் தனது ஐபோன்களில் புதிய சிப்செட்களை வழங்குவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது. இதன் மூலம் புதிய ஐபோன்களின் வேகம் மற்றும் பேட்டரி பயன்பாட்டை மேம்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு ஐபோன்கள் D43 மற்றும் D44 என்ற குறியீட்டு பெயரில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் 2019 ஐபோன் XR N104 என்ற பெயரில் உருவாகிறது.

புதிய 2019 ஐபோன்களின் வடிவமைப்பில் அதிகளவு மாற்றங்கள் இருக்காது என்ற வகையில், புதிய ஐபோன் XS மற்றும் ஐபோன் XS மேக்ஸ் மாடல்களில் மொத்தம் மூன்று பிரைமரி கேமராக்கள் வழங்கப்படலாம் என தெரிகிறது. ஐபோன் XR மாடலின் 2019 வெர்ஷனில் டூயல் பிரைமரி கேமரா வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
அந்த வகையில் 2019 ஐபோன்களில் கேமரா அம்சம் அதிகளவு மாற்றங்களை பெற இருக்கிறது. இத்துடன் புகைப்படங்களை மிக தெளிவாக படம்பிடிக்க அல்ட்ரா-வைடு-ஆங்கிள் லென்ஸ் வழங்கப்படலாம் என தெரிகிறது. ஐபோன் XR மாடலின் மேம்பட்ட மாடலில் கூடுதல் சென்சார் சூம் வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
புகைப்படம் நன்றி
கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஆப்பிள் நிறுவனத்தை சீண்டும் வகையில் தனியுரிமை பற்றி தகவல் தெரிவித்திருக்கிறார். #Google
தனியுரிமை என்பது விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்கக் கூடியவர்களுக்கு மட்டுமே கிடைக்கக்கூடியதாக இருக்கக் கூடாது கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்திருக்கிறார். இது விலை உயர்ந்த சேவைகளை வழங்கும் ஆப்பிள் நிறுவனத்தை சீண்டும் வகையில் இருப்பதாக பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் கிடைக்கும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் எழுதியிருக்கும் அறிக்கையில், பயனர் விவரம் மற்றும் தனியுரிமை விவகாரத்தில் கூகுள் நிறுவனத்தின் நிலைப்பாடு பற்றி விளக்கமளித்து இருக்கிறார்.
"தனியுரிமை உலகவாசிகள் அனைவருக்கும் பொதுவான ஒன்றாக கிடைக்க வேண்டும். கூகுளின் நிலைப்பாடு தனியுரிமையை அனைவருக்கும் சமமானதாக மாற்றுவது தான். மக்கள் தங்களது தகவல்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது, அவை எவ்வாறு பகிர்ந்து கொள்ளப்படுகிறது என்பது பற்றி வருத்தம் தெரிவிக்கின்றனர். உலகம் முழுக்க நான் சந்திப்பவர்கள் இதுபற்றி என்னிடம் கேட்கின்றனர்.

"தனியுரிமை தனித்துவமானது. இதனால் நிறுவனங்கள் மக்களுக்கு அவர்களின் தகவல்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது பற்றி தனிப்பட்ட விருப்பங்களை வழங்க வேண்டும். கூகுள் நிறுவனத்தை பொருத்தவரை அனைவருக்குமான சேவைகளை உருவாக்குவதே எங்களின் முக்கிய குறிக்கோள் ஆகும்.
இதன் காரணமாகவே கூகுள் பதில்கள் உலகம் முழுக்க சமமாக ஒரே மாதிரி வழங்கப்படுகிறது. கூகுள் தேடல்களில் அனைவரும் சமமாக பயன்படுத்தக் கூடியதாக இருக்கிறது." இவ்வாறு சுந்தர் தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக கூகுள் நிறுவனம் தனது IO2019 டெவலப்பர்கள் நிகழ்வில் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு சார்ந்த பல்வேறு சேவைகள் மற்றும் புதிய அம்சங்களை அறிமுகம் செய்தது.
ஆப்பிள் நிறுவனத்தின் 2019 ஐபோன் XR கேமரா அம்சங்கள் பற்றிய தகவல் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. #Apple
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் பற்றிய விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகிறது. சமீபத்தில் வெளியான தகவல்களில் புதிய ஐபோன்களில் மூன்று பிரைமரி கேமரா வழங்கப்படும் என்றும் இத்துடன் சிறிய ஐபோன் மாடல் பற்றிய விவரங்களும் வெளியாகின.
அந்த வரிசையில் தற்சமயம் வெளியாகியிருக்கும் தகவல்களில் 2019 ஐபோன் XR மாடலில் டூயல் பிரைமரி கேமரா வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. புதிய ஐபோன் XR மாடலின் பின்புறம் பெரிய சதுரத்தினுள் செங்குத்தாக பொருத்தப்பட்ட டூயல் பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் 150.9 x 76.1 x 7.8 எம்.எம். அளவு கொண்டிருக்கும் என்றும் இதன் கேமரா பம்ப் 8.5 எம்.எம். அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2019 ஐபோன்களின் நாட்ச் அளவில் எவ்வித மாற்றமும் செய்யப்படாது என கூறப்படுகிறது. அந்த வகையில் புதிய ஐபோனும் கடந்த ஆண்டு வழங்கப்பட்டதை போன்ற நாட்ச் கொண்டிருக்கும் என தெரிகிறது.

புதிய ஐபோன் XR மாடலில் ஆப்பிள் ஏ13 பிராசஸர் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் மேம்பட்ட ஃபேஸ் ஐ.டி. தொழில்நுட்பம் வழங்கப்பட்டு, முன்புறம் டெப்த் கேமரா சிஸ்டத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம் என கூறப்படுகிறது. இதுதவிர 2019 ஐபோன் XS மற்றும் ஐபோன் XS மேக்ஸ் மாடல்களில் மூன்று பிரைமரி கேமரா அமைப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
2019 ஐபோன்களில் முன்புறம் 12 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு வெளியான ஐபோன்களில் 7 எம்.பி. கேமரா வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு செப்டம்பரில் ஆப்பிள் நிறுவனம் மூன்று புதிய ஐபோன்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புகைப்படம் நன்றி: @OnLeaks @Pricebaba
ஆப்பிள் நிறுவனம் இன்டெல் நிறுவனத்தின் ஒரு பிரிவை கைப்பற்ற திட்டம் தீட்டியிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. #Apple
ஆப்பிள் நிறுவனம் இன்டெல் ஸ்மார்ட்போன் மோடெம் சிப் வியாபாரத்தை கைப்பற்ற திட்டமிட்டதாகவும், இதுபற்றி இரு நிறுவனங்களிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதன்மூலம் ஐபோன்களுக்கான வயர்லெஸ் தொழில்நுட்பத்தை மேம்படுத்த ஆப்பிள் திட்டமிட்டிருந்ததாக தெரிகிறது. இதுகுறித்து வெளியாகியிருக்கும் தகவல்களில் இருநிறுவனங்களிடையே கடந்த ஆண்டு வரை பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், தற்சமயம் இது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் சொந்தமாக சிப்செட்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தது. இன்டெல் தொழில்நுட்பத்தை கைப்பற்றுவதன் மூலம் ஆப்பிள் நிறுவனம் இதனை சாத்தியப்படுத்திக் கொள்ள முடியும் என நினைத்திருந்தது. தற்சமயம் இன்டெல் நிறுவனம் வியாபாரத்தை விற்பனை செய்வதற்கு மாற்றாக புதிய வழிகளை கண்டறிந்து இருப்பதாக கூறப்படுகிறது.

குவால்காம் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களிடையே சமீபத்தில் கையெழுத்தாகி இருக்கும் சுவாரஸ்ய சமாதான ஒப்பந்தம் காரணமாக இன்டெல் நிறுவனம் மொபைல் 5ஜி போட்டியில் இருந்து விலகுவதாக தெரிவித்தது. இரு நிறுவனங்களின் அறிவிப்பு காரணமாக இந்த தொழில்நுட்பத்தை விநியோகம் செய்து லாபம் ஈட்டுவது தற்சமயம் சரியாக இருக்காது என இன்டெல் நிறுவன தலைமை செயல் அதிகாரி தெரிவித்தார்.
ஏப்ரல் 16 ஆம் தேதி இன்டெல் நிறுவனம் 5ஜி மொபைல் மோடெம் தொழில்நுட்ப வியாபாரத்தை ரத்து செய்வதாக அறிவித்தது. முன்னதாக குவால்காம் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களிடையே கையெழுத்தான ஒப்பந்தம் பற்றிய செய்தி வெளியானது.
இதுதவிர இன்டெல் நிறுவனம் ஐபோன்களுக்கென சிப்செட்களை உருவாக்கி வந்தது. இன்டெல் சிப்செட் கொண்ட ஐபோன்கள் 2020 ஆம் ஆண்டு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆப்பிள் நிறுவனம் இரண்டு புதிய இயர்போன்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #AirPods
ஆப்பிள் நிறுவனம் இரண்டு புதிய ஏர்பாட்ஸ் வேரியண்ட்களை இந்த ஆண்டின் நான்காவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இவற்றில் ஒரு வேரியண்ட் தற்போதைய ஏர்பாட்ஸ் மாடலுக்கு மாற்றாக இருக்கும் என என்றும் இவை புதிய வடிவமைப்பு கொண்டிருக்கும் என தெரிகிறது.
இதுகுறித்து மிங் சி கியூ வெளியிட்டிருக்கும் தகவல்களில் மேம்படுத்தப்பட்ட மாடலின் விலை இரண்டாம் தலைமுறை ஏர்பாட்ஸ் போன்று நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் வயர்லெஸ் சார்ஜிங் கேஸ் ஒன்றும் வழங்கப்படும் என கூறப்படுகிறது. புதிய ஏர்பாட்ஸ் சிறப்பம்சங்கள் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
எனினும், இதுவரை வெளியாகியிருக்கும் தகவல்கள் உண்மையாகும் பட்சத்தில் மேம்பட்ட ஏர்பாட்ஸ் மாடலில் நாய்ஸ் கேன்சலேஷன் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் சார்ந்து மேம்படுத்தப்படும் என கூறப்படுகிறது. 2019 ஆம் ஆண்டு ஆப்பிள் ஏர்பாட்ஸ் விநியோகம் 5.2 கோடிகளை கடக்கும் என தெரிகிறது. இது 2020 ஆம் ஆண்டில் 7.5 கோடியை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர ஆப்பிள் நிறுவனம் பவர்பீட்ஸ் ப்ரோ எனும் புதிய வயர்லெஸ் இயர்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இதில் 9 மணி நேரத்திற்கான பேக்கப், ஸ்வெட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் காதுகளில் கச்சிதமாக பொருந்தும் செக்யூர்-ஃபிட் இயர்ஹூக்கள் வழங்கப்பட்டுள்ளது.
புதிய பவர்பீட்ஸ் ப்ரோ ஐவரி, பிளாக், மாஸ் மற்றும் நேவி உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 249.95 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.17,260) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அமெரிக்கா மற்றும் 20 நாடுகளில் விரைவில் துவங்க இருக்கிறது.
ஆப்பிள் மற்றும் குவால்காம் நிறுவனங்களிடையே நடைபெற்ற பிரச்சனை சுமூகமாக ஆப்பிள் நிறுவனம் செலவிட்ட தொகை விவரம் வெளியாகியுள்ளது. #Apple
ஆப்பிள் மற்றும் குவால்காம் நிறுவனங்களிடையே நடைபெற்ற வழக்குகளை இருதரப்பும் திரும்பப் பெற ஆப்பிள் நிறுவனம் குவால்காமிற்கு ரூ.34,700 கோடி முதல் ரூ.41,600 கோடி வரை வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து வெளியான தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் ஒரு ஐபோனிற்கு 8 முதல் 9 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.550 முதல் ரூ.620) வரை இழப்பீடாக வழங்க ஒப்புக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளில் இருநிறுவனங்களும் வழக்குகளை எதிர்கொண்டிருந்த நிலையில், ஆப்பிள் நிறுவனத்தின் 5ஜி ஐபோன் வெளியீடு கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டது. இதனை தவிர்க்கும் நோக்கில் ஆப்பிள் நிறுவனம் உயர் தொகையை செலவிட்டு சட்ட பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ள முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

ஆப்பிள் மற்றும் குவால்காம் இதுபற்றி இதுவரை எவ்வித தகவலும் வழங்கவில்லை. இருநிறுவனங்களிடையே கையெழுத்தாகி இருக்கும் புதிய ஒப்பந்தம் 5ஜி ஐபோன் வெளியீட்டை வேகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சட்ட பிரச்சனைகளுக்கான தீர்வு நடவடிக்கையின் படி ஆப்பிள் நிறுவனம் குவால்காமிற்கு பணம் கொடுக்க வேண்டும். இரு நிறுவனங்களிடையே ஆறு ஆண்டுகளுக்கு வியாபாரம் செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தம் ஏப்ரல் 1, 2019 முதல் அமலுக்கு வந்தது. இந்த ஒப்பந்தத்தை இரண்டு ஆண்டுகளுக்கு கூடுதலாக நீட்டிக்க முடியும்.
இருநிறுவனங்களிடையே கையெழுத்தாகி இருக்கும் புதிய ஒப்பந்தத்தின் படி குவால்காம் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்திற்கு பல ஆண்டுகளுக்கு சிப்செட்களை விநியோகம் செய்ய இருக்கிறது. இந்த ஒப்பந்தம் குவால்காம் நிறுவனத்தின் வியாபாரம், தரம் மற்றும் நம்பகத்தன்மையை மேலும் அதிகப்படுத்தும் என குவால்காம் தெரிவித்தது.
2017 ஆம் ஆண்டு முதல் குவால்காம் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களிடையே காப்புரிமை சார்ந்த பல்வேறு பிரச்சனைகள் நடைபெற்று வந்தது.
இந்தியாவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது உண்மையில் பலன் தருமா என்ற கேள்விக்கு வல்லுநர்கள் பதில் அளித்துள்ளனர். #TikTok
இந்தியாவில் டிக்டாக் செயலியை ஏற்கனவே பல கோடி பேர் பயன்படுத்தி வரும் நிலையில், திடீரென இந்த செயலியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. தடையை தொடர்ந்து டிக்டாக் செயலி கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர்களில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டு விட்டது.
எனினும், செயலி நீக்கப்பட்டுவிட்டதால் மட்டும் எதிர்பார்த்த பலன் கிடைக்காது என வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இளைஞர்கள் மத்தியில் பிரபல வீடியோ தளமாக அறியப்படும் டிக்டாக் செயலியில் ஆபாசம் பரவுவதாக பலதரப்பினரும் குற்றஞ்சாட்டினர்.
இதன் காரணமாகவே அரசு கோரிக்கையை ஏற்று செயலிக்கு தடை விதிக்கப்பட்டது. செயலி தடை செய்யப்பட்டு விட்டதால் அது பலனளிக்கும் என கூறிவிட முடியாது.

ஏற்கனவே டிக்டாக் செயலியை பயன்படுத்துவோர் அதனை ஷேர் இட் போன்ற செயலியை கொண்டு மற்றவர்களுக்கு அனுப்ப முடியும். இதனை தரவிறக்கம் செய்து மற்றவரும் புதிய பயனராக பயன்படுத்தலாம்.
டிஜிட்டல் பிரச்சனையை எதிர்கொள்ள தெளிவான அணுகுமுறை அவசியமாகும், இதனை தொழில்நுட்பத்தாலோ அல்லது மற்ற சட்டங்களை கொண்டு சரி செய்து விட முடியாது என டெக் ஆர்க் எனும் சைபர் நிறுவன நிறுவனர் ஃபைசல் கவூசா தெரிவித்தார்.
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களிடம் டிக்டாக் செயலியை நீக்க உத்தரவிட்டது. டிக்டாக் செயலியை தடை செய்வதற்கான உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ஏப்ரல் 3 ஆம் தேதி பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆப்பிள் நிறுவனம் 4.7 இன்ச் அளவில் புதிய ஐபோன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #iPhone
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் ஸ்மார்ட்போன்களை செப்டம்பர் 2017 இல் அறிமுகம் செய்தது. சமீபத்தில் ஐபோன் 7 உற்பத்தி இந்தியாவின் பெங்களூருவில் அமைந்திருக்கும் விஸ்ட்ரன் ஆலையில் துவங்கியது. விரைவில் ஐபோன் X மாடல் சென்னையில் உள்ள ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்நிலையில், ஆப்பிள் ஐபோன் 8 மாடலின் புதிய வெர்ஷனை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தாய்வானில் இருந்து வெளியாகியிருக்கும் தகவல்களில் புதிய ஐபோன் 8 மாடலில் 4.7 இன்ச் LCD டிஸ்ப்ளே, ஏ13 சிப்செட், PCB வடிவமைப்பு கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகைப்படம் எடுக்க ஒற்றை பிரைமரி கேமரா, 128 ஜி.பி. மெமரி கொண்டிருக்கும் என தெரிகிறது. தற்சமயம் ஐபோன் 8 (64 ஜி.பி.) விலை இந்தியாவில் ரூ.41,500 என விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. அந்த வகையில் புதிய ஐபோனின் விலை சற்று குறைவாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் உற்பத்தியாகும் ஐபோன்களின் எண்ணிக்கை விரைவில் இரண்டு கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஐபோன் 8 மாடல் மார்ச் 2020 வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
ஆப்பிள் மற்றும் குவால்காம் நிறுவனங்களிடையே உலகம் முழுவதும் நடைபெற்று வரும் அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற இரு நிறுவனங்களும் முடிவு செய்துள்ளன. #Apple
ஆப்பிள் மற்றும் குவால்காம் நிறுவனங்களிடையே உலகம் முழுக்க பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. பல ஆண்டுகளாக இருநிறுவனங்களும் ஒருவரையொருவர் எதிர்த்து சட்டப்போராட்டம் நடத்தி வருகின்றன.
அந்த வகையில், ஆப்பிள் மற்றும் குவால்காம் நிறுவனங்கள் உலகம் முழுக்க இருநிறுவனங்கள் தொடர்பாக நடைபெற்று வரும் அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளன. புதிய முடிவில் ஆப்பிள் ஒப்பந்தம் செய்த உற்பத்தியாளர்களுக்கு எதிரான வழக்குகளையும் திரும்பப் பெறுவதாக குவால்காம் அறிவித்துள்ளது.
ஆப்பிள் மற்றும் குவால்காம் இடையேயான இந்த திடீர் முடிவிற்கு ஆப்பிள் நிறுவனம் குவால்காம் நிறுவனத்திற்கு ஒருமுறை செலுத்தக் கூடிய தொகை ஒன்றை வழங்க இருப்பதாக தெரிகிறது. எனினும், குவால்காம் நிறுவனத்திற்கு ஆப்பிள் எவ்வளவு தொகை வழங்குகிறது என்பது பற்றி எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.

வழக்குகளை திரும்பப் பெறுவதுடன் ஆப்பிள் மற்றும் குவால்காம் நிறுவனங்களிடையே ஆறு ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. இந்த ஒப்பந்தம் ஏப்ரல் 1, 2019 முதல் அமலானது. இந்த ஒப்பந்தத்தை இரண்டு ஆண்டுகளுக்கு கூடுதலாக நீட்டிக்க முடியும்.
இருநிறுவனங்களிடையே கையெழுத்தாகி இருக்கும் புதிய ஒப்பந்தத்தின் படி குவால்காம் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்திற்கு பல ஆண்டுகளுக்கு சிப்செட்களை விநியோகம் செய்ய இருக்கிறது. இந்த ஒப்பந்தம் குவால்காம் நிறுவனத்தின் வியாபாரம், தரம் மற்றும் நம்பகத்தன்மையை மேலும் அதிகப்படுத்தும் என குவால்காம் தெரிவித்துள்ளது.

2017 ஆம் ஆண்டு முதல் குவால்காம் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களிடையே காப்புரிமை சார்ந்த பல்வேறு பிரச்சனைகள் நடைபெற்று வந்தது. ஆப்பிள் நிறுவனம் குவால்காமிற்கு காப்புரிமை கட்டணங்களை செலுத்துவதை நிறுத்திவிட்டு, புதிய ஐபோன் மாடல்களில் குவால்காம் சிப்களை வழங்குவதை முற்றிலும் நிறுத்திவிட்டது.
இதைத் தொடர்ந்து குவால்காம் நிறுவனம் அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் சீனாவில் ஐபோன் இறக்குமதிக்கு தடை விதிக்க வழக்கு பதிவு செய்தது. தற்சமயம் இரு நிறுவனங்களிடையே கையெழுத்தாகியிருக்கும் புதிய ஒப்பந்தத்தின் மூலம் அடுத்த ஆண்டு ஐபோன்களில் குவால்காமின் 5ஜி மோடெம்களை எதிர்பார்க்கலாம்.
ஜெர்மனி நாட்டில் நிலை தடுமாறி கீழே விழுந்த 80 வயதான மூதாட்டியை ஆப்பிள் வாட்ச் 4 காப்பாற்றியிருக்கிறது. #AppleWatch4
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 மாடலில் பல்வேறு புதிய வசதிகள் சேர்க்கப்பட்டன. முற்றிலும் புதிய வடிவமைப்பு, வாட்ச் ஓ.எஸ். 5, ஃபால் டிடெக்ஷன் போன்றவற்றை ஆப்பிள் தனது புதிய ஸ்மார்ட்வாட்ச்சில் சேர்த்திருக்கிறது. இ.சி.ஜி. மற்றும் ஃபால் டிடெக்ஷன் போன்ற வசதிகள் மற்ற ஸ்மார்ட்வாட்ச் மாடல்களில் இதுவரை வழங்கப்படவில்லை.
இதில் இ.சி.ஜி. அம்சம் தேர்வு செய்யப்பட்ட சில நாடுகளில் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. ஃபால் டிடெக்ஷன் அம்சம் 65 வயதுக்கு மேற்பட்டோருக்கு தானாகவே செயல்படுத்தப்பட்டிருக்கிறது. இ.சி.ஜி. மற்றும் ஃபால் டிடெக்ஷன் அம்சம் ஆபத்து காலங்களில் பலருக்கு பயன்தரும் அம்சமாக இருக்கிறது.
அந்த வகையில் தற்சமயம் வெளியாகியிருக்கும் தகவல்களில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 ஜெர்மனியில் நிலை தடுமாறி கீழே விழுந்த 80 வயது மூதாட்டியை காப்பாற்ற அவசர உதவி எண்களுக்கு தொடர்பு கொண்டு ஆம்புலன்ஸ் உதவியை நாடியது. ஜெர்மனியில் அவசர உதவி எண் 112-ஐ அழைத்த ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட குரலில், ஒருவர் பலமாக கீழே விழுந்துவிட்டார் என தகவல் கொடுத்தது.

இதைத் தொடர்ந்து மூதாட்டியின் வீட்டு முகவரியை ஆப்பிள் வாட்ச் 4 அனுப்பியது. பின் இதே முகவரிக்கு ஆம்புலன்ஸ் வந்தது. எனினும், கதவு உள்புறத்தில் தாழிடப்பட்டிருந்ததால் உடனே தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின் தீயணைப்பு துறை உதவியுடன் கதவு திறக்கப்பட்டு மூதாட்டி மீட்கப்பட்டார்.
மீட்கப்பட்ட மூதாட்டிக்கு முதலுதவி செய்யப்பட்ட வேளையில் ஆப்பிள் வாட்ச் 4-இல் பதிவு செய்யப்பட்டிருந்த அவரது மகனுக்கு ஆப்பிள் வாட்ச் தகவல் கொடுத்தது. ஆப்பிள் வாட்ச் கொண்டு பயனர்கள் அவசர காலத்தில் காப்பாற்றப்பட்டது ஏற்கனவே நடந்திருக்கிறது.
முன்னதாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் 67 வயது முதியவர் குளியலறையில் கீழே விழுந்து, பின் ஆப்பிள் வாட்ச் கொடுத்த தகவலால் காப்பாற்றப்பட்டார். இந்தியாவில் வாட்ச் சீரிஸ் 4 மாடல் விலை ரூ.40,900 முதல் துவங்குகிறது.
ஆப்பிள் ஆப் ஸ்டோரில் அந்நிறுவன செயலிகளுக்கு மட்டும் விசேஷ சலுகைகள் வழங்கிய விவகாரத்தில் டச்சு அரசாங்கம் விசாரணையை துவங்கியுள்ளது. #Apple
ஆப்பிள் நிறுவனம் மீது ஐரோப்பிய யூனியன் ஏற்கனவே அதிருப்தி தெரிவித்திருக்கும் நிலையில், டச்சு அரசாங்கம் ஆப்பிள் மீது விசாரணையை துவங்கியுள்ளது.
ஆப்பிள் தனது ஆப் ஸ்டோரில் ஆப்பிள் செயலிகளுக்கு மட்டும் விசேஷ சலுகைகளை வழங்கியதை தொடர்ந்து டச்சு அரசு ஆப்பிள் நிறுவனத்தை விசாரணைக்கு அழைத்திருக்கிறது. டச்சு அரசாங்கத்தின் ஏ.சி.எம். நிறுவனம் விசாரணையை நடத்துகிறது.
இந்த விவகாரத்தில் ஆப்பிள் மட்டுமின்றி கூகுள் நிறுவனம் மீதும் எதிர்காலத்தில் விசாரணை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கூகுள் பிளே ஸ்டோரில் செயலிகளை பரிந்துரை செய்வதில் கூகுள் நிறுவனமும் பாரப்பட்சம் காட்டுவதாக கூறப்படுகிறது.
ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்களின் ஆப் ஸ்டோர்கள் இருநிறுவனங்களுக்கும் அதிகளவு வருவாய் ஈட்டித்தரும் தளங்களாக இருக்கின்றன. ஆப் ஸ்டோர்களில் டச்சு செய்தி நிறுவனங்கள் மேற்கொண்ட ஆய்வுகளில் ஆப்பிள் நிறுவனம் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளது.

ஆப் டெவலப்பர்கள் செயலியினுள் வாங்கும் சேவைகளுக்கென செலுத்தும் கட்டணம், ஐபோனின் அனைத்து அம்சங்களை பயன்படுத்துவதில் ஆப் டெவலப்பர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றியும் விசாரணை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் ஆப் ஸ்டோர் மட்டுமின்றி கூகுள் பிளே ஸ்டோரிலும் இதுபோன்ற பிரச்சனைகளை டெவலப்பர்கள் எதிர்கொள்ளும் பட்சத்தில் செயலிகளை உருவாக்குவோர் வெளிப்படையாக தகவல் தெரிவிக்கலாம் என ஏ.சி.எம். தெரிவித்துள்ளது. செயலிகளை உருவாக்குவோர் வழங்கும் விவரங்களை விசாரணையில் பயன்படுத்துவதாக ஏ.சி.எம். தெரிவித்துள்ளது.
ஆப்பிள் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளை ஆப்பிள் முழுமையாக மறுத்திருக்கிறது. மேலும் ஆப் ஸ்டோரில் அனைத்து செயலிகளுக்கும் சம அளவு வாய்ப்புகள் வழங்கப்படுவதை ஏ.சி.எம். உறுதிப்படுத்தும் என நம்புவதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் விலை உயர்ந்த ஐபோன் X ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #iPhoneX
ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் ஐபோன் 7 மாடலை இந்தியாவில் உற்பத்தி செய்ய துவங்கியது. பெங்களூருவில் உள்ள விஸ்ட்ரன் உற்பத்தி ஆலையில் ஐபோன் 7 உற்பத்தி நடைபெறுகிறது. இதே ஆலையில், ஏற்கனவே ஐபோன் 6எஸ் மற்றும் ஐபோன் எஸ்.இ. உள்ளிட்ட மாடல்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
அந்த வகையில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் X மாடலையும் இந்த ஆலையில் உற்பத்தி செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் ஐபோன் உற்பத்தி செய்தால் விற்பனை அதிகரிக்கும் என ஆப்பிள் நினைப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஐபோன் X உற்பத்தி ஜூலை 2019 இல் துவங்கலாம் என தெரிகிறது.
இந்தியாவில் ஐபோன் X மாடலை தாய்வான் நாட்டை சேர்ந்த ஃபாக்ஸ்கான் நிறுவனம் மேற்கொள்ளும் என கூறப்படுகிறது. ஃபாக்ஸ்கான் நிறுவனம் ஐபோன் X மாடலை உற்பத்தி செய்ய சென்னை அருகே அமைந்திருக்கும் ஆலையில் மேற்கொள்ளும் என கூறப்படுகிறது.

முதற்கட்டமாக ஐபோன் X உற்பத்தி துவங்கியதும் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் XR, ஐபோன் XS மற்றும் ஐபோன் XS மேக்ஸ் உள்ளிட்ட மாடல்களையும் இந்தியாவில் உற்பத்தி செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. எனினும், இந்திய பொது தேர்தலுக்கு பின் உருவாகும் மத்திய அரசு வழங்கும் சலுகைகளை பொருத்தே இவை எந்தளவு சாத்தியப்படும் என்பதை பார்க்க வேண்டும்.
இதுவரை விஸ்ட்ரண் நிறுவனம் 2018 ஆம் ஆண்டு மட்டும் சுமார் 29 கோடி ஐபோன்களை உற்பத்தி செய்ததாக இந்திய டெல்லுலார் மற்றும் மின்னணு அமைப்பு வெளியிட்டிருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 2014 ஆம் ஆண்டு இந்த நிறுவனம் 5.8 கோடி யூனிட்களை உற்பத்தி செய்திருந்தது.