search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97542"

    தமிழில் பல வெற்றி படங்களுக்கு இசை அமைத்து வரும் யுவன் ஷங்கர் ராஜா, தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் பிரபாஸ் படத்தில் ஒரு பாடலை பாடி இருக்கிறார்.
    யூவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் ராதே ஷியாம் திரைப்படத்திலிருந்து இதயத்தை தொடும் பாடல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

    தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ள இப்பாடலுக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார். அதே பொருள் தரும் வரிகள், ஆனால் முற்றிலும் வித்தியாசமான இசையில் உருவாகியுள்ள இதன் இந்தி பதிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.

    பிரபாஸ்

    சமீபத்தில் நடிகர் பிரபாஸின் பிறந்த நாளில் ராதே ஷியாமின் டீசர் வெளியிடப்பட்டது. ஜனவரி 14, 2022 பொங்கல் திருநாளை முன்னிட்டு பிரமாண்டமான முறையில் திரையரங்குகளில் வெளியாகிறது ராதே ஷியாம். பன்மொழிப் படமான ராதே ஷியாமை ராதா கிருஷ்ணகுமார் இயக்க யூவி கிரியேஷன்ஸ் நிறுவனத்திற்காக வம்சி மற்றும் பிரமோத் தயாரித்துள்ளனர். 
    சுஜித் இயக்கத்தில் பிரபாஸ் - ஷ்ரத்தா கபூர் நடிப்பில் உருவாகி வரும் ‘சாஹோ’ படத்தில் இசையமைக்கவிருந்த சங்கர்-எஹ்ஸான்-லாய் படத்தில் இருந்து விலகிய நிலையில், ஜிப்ரான் ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது.
    பாகுபலி வெற்றியை தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘சாஹோ’. இந்த படத்திற்கு இசையமைப்பாளர்களாக ஒப்பந்தமாகி இருந்த சங்கர்-எஹ்ஸான்-லாய் படத்தில் இருந்து சமீபத்தில் விலகினர். இதையடுத்து இந்த படத்திற்கு இசையமைக்க வேறு இசையமைப்பாளர்களை படக்குழு தேடி வந்தது.

    இந்த நிலையில், படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஜிப்ரான் பின்னணி இசையை மட்டும் கவனிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. பாடல்களுக்கு வேறு சில இசையமைப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது.



    சுஜீத் இயக்கும் இந்த படத்தில் பிரபாஸ் ஜோடியாக ‌ஷ்ரத்தா கபூர் நடிக்கிறார். நீல் நிதின் முகேஷ், அருண் விஜய், ஏமி ஜாக்சன், மந்த்ரா பேடி, ஜாக்கி ஷெராப், லால், மகேஷ் மஞ்ரேக்கர், சங்கி பாண்டே உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் குடியரசு தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15-ந் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    யுவி கிரியே‌ஷன்ஸ் சார்பில் வம்சி, பிரமோத் இணைந்து தயாரிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது. மதி ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு துபாயில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    சுஜித் இயக்கத்தில் பிரபாஸ் - ஷ்ரத்தா கபூர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சாஹோ’ படத்தில் இசையமைப்பதற்கு ஒப்பந்தமான சங்கர்-எஹ்ஸான்-லாய் படத்தில் இருந்து வெளியேறியுள்ளனர்.
    பாகுபலி வெற்றியைத் தொடர்ந்து பிரபாஸ் அடுத்ததாக ‘சாஹோ’ படத்தில் நடித்து வருகிறார். சுஜீத் இயக்கும் இந்த படத்தில் பிரபாஸ் ஜோடியாக ‌ஷ்ரத்தா கபூர் நடிக்கிறார். நீல் நிதின் முகேஷ் வில்லனாக நடிக்கிறார். அருண் விஜய், ஏமி ஜாக்சன், மந்த்ரா பேடி, ஜாக்கி ஷெராப், லால், மகேஷ் மஞ்ரேக்கர், சங்கி பாண்டே உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

    படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், இப்படம் ஆகஸ்ட் 15-ந் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த படத்திற்கு இசையமைக்க இருந்த மூவேந்தர்களான சங்கர்-எஹ்ஸான்-லாய் படத்தில் இருந்து விலகியுள்ளனர். படக்குழு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.



    அவர்களுக்கு மாற்றாக வேறு இசையமைப்பாளரை ஒப்பந்தம் செய்வது குறித்து படக்குழு ஆலோசித்து வருகிறது. யுவி கிரியே‌ஷன்ஸ் சார்பில் வம்சி, பிரமோத் இணைந்து தயாரிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் அதிரடி படமாக உருவாகிறது. மதி ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பை துபாயில் நடத்தியுள்ளனர்.

    சுஜித் இயக்கத்தில் பிரபாஸ் - ஷ்ரத்தா கபூர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சாஹோ’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
    பாகுபலி வெற்றியைத் தொடர்ந்து பிரபாஸ் அடுத்ததாக ‘சாஹோ’ படத்தில் நடித்து வருகிறார். சுஜீத் இயக்கும் இந்த படத்தில் பிரபாஸ் ஜோடியாக ‌ஷரத்தா கபூர் நடிக்கிறார். நீல் நிதின் முகேஷ் வில்லனாக நடிக்கிறார். அருண் விஜய், ஏமி ஜாக்சன், மந்த்ரா பேடி, ஜாக்கி ஷெராப், லால், மகேஷ் மஞ்ரேக்கர், சங்கி பாண்டே உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

    படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15-ந் தேதி ரிலீசாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.


    யுவி கிரியே‌ஷன்ஸ் சார்பில் வம்சி, பிரமோத் இணைந்து தயாரிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் அதிரடி படமாக உருவாகிறது. 

    இந்த படத்திற்கு சங்கர்-எஹ்ஸான்-லாய் இசையமைக்கின்றனர். மதி ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பை துபாயில் நடத்தியுள்ளனர்.

    இந்திய சினிமாவில் முக்கிய பிரபலமமாக வலம் வரும் பிரபாஸ், தற்போது முக்கிய சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் இணைந்திருக்கிறார். #Prabhas
    தெலுங்கில் முன்னணி நாயகனாக வலம் வந்த பிரபாஸ் பாகுபலி படத்திற்கு பிறகு இந்திய சினிமா ரசிகர்களால் அறியப்படும் முக்கிய நபராக விளங்குகிறார். அவர் தற்போது சுஜீத் இயக்கத்தில் சாஹோ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

    பொதுவாக சமூக வலைதளங்களில் அதிக விருப்பமில்லாமல் இருக்கும் பிரபாசுக்கு பேஸ்புக்கில் மட்டுமே கணக்கு உள்ளது. அதில் அவரை ஒரு கோடியே 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர்.



    பேஸ்புக் தவிர்த்து வேறு எந்த விதமான சமூக வலைதளங்களிலும் இல்லாத பிரபாஸ் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இன்ஸ்டாகிராமில் ஒரு கணக்கை தொடங்கியிருக்கிறார்.

    பிரபாஸின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழிலை பற்றி தெரிந்து கொள்ள விரும்பும் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, ரசிகர்களுடன் கொஞ்சம் நெருக்கமாக இன்ஸ்டாகிராமில் இணைந்திருக்கிறார். #Prabhas #Saaho #PrabhasOnInstagram

    சுஜித் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சாஹோ’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் அருண் விஜய், அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை நடித்து முடித்துவிட்டதாக தெரிவித்துள்ளார். #Saaho #Prabhas #ArunVijay
    பாகுபலி வெற்றியைத் தொடர்ந்து பிரபாஸ் அடுத்ததாக ‘சாஹோ’ படத்தில் நடித்து வருகிறார். சுஜீத் இயக்கும் இந்த படத்தில் பிரபாஸ் ஜோடியாக ‌ஷரத்தா கபூர் நடிக்கிறார். நீல் நிதின் முகேஷ் வில்லனாக நடிக்கிறார். அருண் விஜய், ஏமி ஜாக்சன், மந்த்ரா பேடி, ஜாக்கி ஷராப், லால், மகேஷ் மஞ்ரேக்கர், சங்கி பாண்டே உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

    படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், அருண் விஜய் அவரது காட்சிகளை நடித்து முடித்துவிட்டதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 


    யுவி கிரியே‌ஷன்ஸ் சார்பில் வம்சி, பிரமோத் இணைந்து தயாரிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் அதிரடி படமாக உருவாகிறது. இந்த படத்திற்கு சங்கர்-எஹ்ஸான்-லாய் இசையமைக்கின்றனர். மதி ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். 

    படம் குடியரசு தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15-ந் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Saaho #Prabhas #ArunVijay

    அனுஷ்காவுடன் நட்புடன் பழகி வருவதாக பிரபாஸ் கூறியுள்ள நிலையில், இருவரும் மீண்டும் நெருக்கமாகியுள்ளதாகவும், ஜோடியாக ஜப்பான் புறப்பட்டு செல்வதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. #Prabhas #AnushkaShetty
    அனுஷ்காவுக்கும், தெலுங்கு நடிகர் பிரபாசுக்கும் பாகுபலி படத்தில் ஜோடியாக நடித்த போது காதல் மலர்ந்ததாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு உள்ளனர் என்றும் தொடர்ந்து தகவல்கள் பரவின. பிரபாஸ் தற்போது மெகா பட்ஜெட்டில் தயாராகும் சாஹோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிந்ததும் திருமணம் நடக்கும் என்று கூறப்பட்டது.

    சமீபத்தில் இருவரும் ஜோடியாக தெலுங்கு டைரக்டர் ராஜமவுலி இல்ல திருமணத்தில் கலந்துகொண்டது காதலை உறுதிப்படுத்துவதாக இருந்தது என்று பட உலகில் கிசுகிசுத்தனர். அனுஷ்கா சமீபத்தில் வெளிநாடு சென்று உடல் எடையை குறைத்துவிட்டு வந்தார். மெலிந்த அவரது புதிய தோற்றத்தை சமூக வலைத்தளங்களில் பார்த்து ரசிகர்கள் வியந்தனர்.



    காதல் கிசுகிசுக்களை இருவரும் உறுதிப்படுத்தாமலேயே உள்ளனர். பிரபாஸ் கூறும்போது, “ஒன்றுக்கு மேற்பட்ட படங்களில் ஒரு நடிகரும், நடிகையும் இணைந்து நடித்தால் அவர்கள் காதலிப்பதாக பேசுவார்கள். நாங்கள் நட்பாகத்தான் பழகுகிறோம்” என்றார். இதன்மூலம் காதலில் விரிசல் ஏற்பட்டதாகவும் பேச்சு கிளம்பியது.

    இந்த நிலையில் பிரபாசும், அனுஷ்காவும் ஜோடியாக ஜப்பான் புறப்பட்டு செல்கிறார்கள். இருவரும் சேர்ந்து நடித்துள்ள படங்களை விளம்பரப்படுத்த அங்கு செல்கின்றனர். இதனால் இருவரும் காதலில் மீண்டும் நெருக்கமாகி இருப்பதாக தெலுங்கு பட உலகில் கிசுகிசுக்கள் பரவி உள்ளன. #Prabhas #AnushkaShetty

    எச்.வினோத் இயக்கத்தில் பிங்க படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வரும் அஜித்குமார், சமீபத்தில் மோகன்லால், பிரபாசை சந்தித்து பேசிய நிலையில், அவர்களுடன் இணைந்து நடிக்க ஆர்வமாக இருப்பதாக கூறினாராம். #AjithKumar
    விஸ்வாசம் படத்தை அடுத்து தனது 59-வது படத்தில் நடித்து வருகிறார் அஜித் குமார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. அதே ஸ்டுடியோவில் பல்வேறு படங்களின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

    மோகன்லால் நடிக்க பிரியதர்‌ஷன் இயக்கும் மராக்கர் அரபிக்கடலிண்ட சிம்ஹம் என்ற மலையாள படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், சில தினங்களுக்கு முன் அவர்களின் படப்பிடிப்பு அரங்கிற்கு திடீரென்று சென்ற அஜித் அங்கிருந்த மோகன்லால், பிரியதர்‌ஷன் இருவரையும் சந்தித்து பேசிக் கொண்டிருந்தார்.



    தொடர்ந்து பாகுபலி ஹீரோ பிரபாஸ் நடிக்கும் படப்பிடிப்பு நடப்பதை அறிந்து அவரது அரங்கிற்கும் சென்றுள்ளார். அஜித்தை கண்டதும் அன்புடன் வரவேற்றார் பிரபாஸ். ஆரம்பம் படத்தில் அஜித்துடன் ராணா நடித்தபோது ஏற்பட்ட அனுபவங்களை தன்னிடம் பாகுபலி படப்பிடிப்பின் போது ராணா பகிர்ந்துகொண்டதை பிரபாஸ் கூறி உள்ளார்.

    சுமார் ஒரு மணிநேரம் பிரபாசுடன் மனம்விட்டு பேசிக்கொண்டிருந்த அஜித் பின்னர் புறப்பட்டு சென்றார். முன்னதாக, மோகன்லால், பிரபாஸ் ஆகியோருடன் இணைந்து நடிக்க ஆர்வமாக இருப்பதாக அவர்களிடம் அஜித் தெரிவித்தாராம். #AjithKumar #Mohanlal #Prabhas

    பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தை கொடுத்த இயக்குனர் ராஜமவுலியின் மகன் திருமணத்தில் நடிகர் பிரபாஸ், நடிகை அனுஷ்கா குத்தாட்டம் போட்டுள்ளனர். #Rajamouli #Prabhas #Anushka
    பாகுபலி இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியின் மகன் எஸ்.எஸ்.கார்த்திகேயா. ‘ஷோயிங் பிசினஸ்’ என்ற தனது நிறுவனத்தின் மூலம் படங்களுக்கான விளம்பரங்களைச் செய்து வருகிறார். மனம், பாகுபலி உள்ளிட்ட படங்களின் டிரெய்லர்களை இவரது நிறுவனமே உருவாக்கியது.

    இவருக்கும் தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபுவின் உறவினர் பூஜா பிரசாத்துக்கும் இன்று ஜெய்ப்பூரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் திருமணம் நடந்தது. பூஜா பிரசாத் கர்நாடக இசைப்பாடகி ஆவார்.

    இதற்காக தெலுங்கு பட நடிகர்கள் நேற்று முன்தினமே ஜெய்ப்பூருக்குச் சென்றுள்ளனர். ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், ராணா டகுபதி ஆகியோர் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் இருந்து ஒன்றாகச் சென்றனர்.

    பிரபாஸ், அனுஷ்கா, சுஷ்மிதா சென், நாகார்ஜுனா ஆகியோரும் விமான நிலையத்திலிருந்து செல்லும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. மணமக்கள் கார்த்திகேயாவும் பூஜா பிரசாத்தும் விமான நிலையத்தில் சந்தித்துக் கொள்ளும் புகைப்படமும் வெளியாகியுள்ளது.



    இவர்களது திருமணம் தென்னிந்திய முறைப்படி இன்று நடைபெற்றது. திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சிகளான மெகந்தி, சங்கீத் ஆகியவை கடந்த 2 நாட்களாக நடந்தன. முன்னதாக நவம்பர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

    இந்த விழாவில் நடிகர்கள் ராணா, ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், பிரபாஸ், நடிகைகள் அனுஷ்கா உள்ளிட்ட பலர் நடனம் ஆடினார்கள். #Rajamouli #Prabhas #Anushka
    சரிப்பட்டு வராததால் திரிஷாவுடனான காதலை முறித்துக் கொண்டதாக ராணா கூறிய நிலையில், ராணாவையும், திரிஷாவையும் சேர்த்து வைப்பேன் என்று பிரபாஸ் கூறினார். #Prabhas #RanaDaggubati #Trisha #Rajamouli
    பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம் இணைந்த பிரபாசும், ராணாவும் அந்த படத்துக்கு பின்னர் நெருங்கிய நண்பர்களாகிவிட்டனர். தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான இருவரும் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் காலத்தை கடத்தி வருகிறார்கள்.

    பிரபாஸ் அனுஷ்காவுடனும், ராணா திரிஷாவுடனும் சிலகாலம் கிசுகிசுக்கப்பட்டவர்கள். இருவரில் யார் முதலில் திருமணம் செய்துகொள்வார் என்பது தெலுங்கு சினிமாவின் பெரிய கேள்வியாக இருந்து வந்தது.

    ராணாவும், திரிஷாவும் ஒரு படத்தில் இணைந்து நடித்த போது நெருக்கமானார்கள். பட விழாக்களுக்கு சேர்ந்தே வந்தார்கள். இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவின. திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்பட்டது. இதுகுறித்து திரிஷா கருத்து சொல்லாமல் இருந்தார். ராணாவிடம் கேட்டபோது நட்பாகத்தான் பழகுகிறோம் என்று மறுத்து வந்தார்.

    எனினும் இருவரையும் இணைத்து தொடர்ந்து கிசுகிசுக்கள் வந்த வண்ணமாகவே இருந்தது. இந்த நிலையில் நடிகர்கள் பிரபாஸ், ராணா, இயக்குனர்கள் ராஜமவுலி ஆகியோர் கரண் ஜோஹருடன் டி.வி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டனர். இதில் திரிஷாவுடனான காதல் பற்றி ராணாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.



    அதற்கு பதில் அளித்த ராணா, எனக்கு திரிஷா 10 வருடங்களுக்கு மேலாக தோழியாக இருந்தார். அவர் எனது நீண்ட நாள் தோழி. கொஞ்ச காலம் அவரை காதலிக்கவும் செய்தேன். பின்னர் சரிப்பட்டு வராது என்பதை உணர்ந்து காதலை முறித்துக் கொண்டேன்.’’ என்றார். 

    பிரபாஸ் பேசும்போது, ‘‘ராணாவையும் திரிஷாவையும் நான் சேர்த்து வைப்பேன் என்றார். அனுஷ்காவுடன் கிசுகிசுக்கப்படுவது பற்றி கேட்ட போது, எனக்கும் அனுஷ்காவுக்கும் காதல் என்று வெளியாகும் தகவலில் உண்மை இல்லை’’ என்றார்.

    இருவரில் யார் முதலில் திருமணம் செய்துகொள்வார் என்ற கேள்விக்கு, பிரபாசுக்கு முன்பே ராணா தான் திருமணம் செய்துகொள்வார் என்று ராஜமவுலி கூறி இருக்கிறார். #Prabhas #RanaDaggubati #Trisha #Rajamouli

    தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் பிரபாஸ் கட்டியிருந்த வீட்டிற்கு தெலுங்கானா அரசு அதிகாரிகள் சீல் வைத்திருக்கிறார்கள். #Prabhas
    பாகுபலி படத்தில் கதாநாயகனாக நடித்தவர் தெலுங்கு நடிகர் பிரபாஸ். இவருக்கு சொந்தமான விருந்தினர் இல்லம் ஒன்று தெலுங்கானா மாநிலம் ராயதுர்கா நகரில் அமைந்துள்ளது. 84 ஏக்கரில் அமைந்துள்ள இந்த வீடு அரசு நிலத்துக்கு சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டு இருப்பதாக புகார் கூறப்பட்டது.

    இது தொடர்பான வழக்கில் பிரபாசுக்கு எதிராக கடந்த திங்கள் அன்று தீர்ப்பு வெளியானது. இதை அடுத்து தெலுங்கானா அரசு அதிகாரிகள் பிரபாஸ் வீட்டை பூட்டி சீல் வைத்தனர். விரைவில் இடிக்கப்போவதாகவும் அறிவித்துள்ளனர்.



    பிரபாஸ் வீட்டிற்கு சீல் வைத்திருப்பது தெலுங்கு பட உலகில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. #Prabhas
    `பாகுபலி-2' படத்தை தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘சாஹோ’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. #Saaho #Prabhas #SaahoOnAug15th
    ‘பாகுபலி-2’ க்கு பிறகு பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சாஹோ’. சுஜித் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட 4 மொழிகளில் உருவாகும் இந்த படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி ரிலீசாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ரூ.150 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகும் இந்த படத்தில் பிரபாஸ் ஜோடியாக ஷரத்தா கபூர் நடிக்கிறார். நீல் நிதின் முகேஷ் வில்லனாக நடிக்க, அருண் விஜய், லால், மந்த்ரா பேடி, எவ்லின் ஷர்மா, மகேஷ் மஞ்ரேக்கர், சங்கி பாண்டே, ஜேக்கி ஷெராப், வெண்ணிலா கிஷோர், முரளி சர்மா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

    ஷங்கர் எசான் லாய், எஸ்.எஸ்.தமன் இணைந்து இசையமைக்க, ஆர்.மதி ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். யுவி கிரியேஷன்ஸ் தயாரித்து வருகிறது.



    பிரபாஸ் அவரது காட்சிகளை நடித்து முடித்துவிட்ட நிலையில், தற்போது ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் வரலாற்று படமொன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரபாஸ் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இந்த படம் 2020-ல் ரிலீசாக இருக்கிறது. #Saaho #Prabhas #SaahoOnAug15th 

    ×