search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97865"

    டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
    துபாய்:

    ஒருநாள் போட்டி, டி 20 கிரிக்கெட் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகியவை ஐசிசி சார்பில் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் 
    ஆஸ்திரேலியா அணி ஐசிசி நடத்திய 8 கோப்பைகளை வென்று அபார சாதனை படைத்துள்ளது. அதன் விவரம் வருமாறு:

    1987, 1999, 2003, 2007, 2015 என ஆஸ்திரேலியா அணி 5 முறை ஒருநாள் போட்டிக்கான உலக கோப்பையை வென்று சாதித்துள்ளது. 

    2006 மற்றும் 2009ம் ஆண்டில் சாம்பியன் டிராபி கோப்பையையும் ஆஸ்திரேலியா அணி கைப்பற்றி அசத்தியுள்ளது.

    நியூசிலாந்து அணியை வீழ்த்தி முதல் முறையாக இந்த ஆண்டு டி20 உலக கோப்பையை ஆஸ்திரேலியா வென்றுள்ளது.

    நியூசிலாந்து சிறிய நாடு என்றாலும் கூட திறமையான பல வீரர்களைக் கொண்டுள்ளதாக கங்குலி தெரிவித்துள்ளார்.

    டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி துபாயில் இன்று மாலை நடைபெறுகிறது. இதில், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன. இப்போட்டியில்,  வெல்லப் போவது யார் என்று சமூக வலைதளங்ளில் பலர் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

    இதுகுறித்து, பிசிசிஐ தலைவர் கங்குலி கூறுகையில் ‘சர்வதேச அரங்கில் நியூசிலாந்து தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. ஆஸ்திரேலியாவும் சிறந்த அணிதான். இருப்பினும், அவர்கள் தற்போது கடினமான சூழ்நிலையில் உள்ளனர். 

    நியூசிலாந்து அணியினர் தீவிரமாக பயிற்சி எடுத்திருப்பது ஆட்டத்தில் நன்றாக தெரிகிறது. நியூசிலாந்து அணிக்கு போராடும் குணமும் இருப்பது நன்றாகவே தெரிகிறது. அவர்கள் சில மாதங்களுக்கு முன்பு தான் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்றனர். நியூசிலாந்து சிறிய நாடு தான் என்றாலும் கூட திறமையான பல வீரர்களைக் கொண்டுள்ளது. இது நியூசிலாந்திற்கான நேரம் என்பதே எனது கருத்து" என்று தெரிவித்தார்.
    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று ஆட்டங்களில் முன்னணி வீராங்கனைகள் நவோமி ஒசாகா, ஹாலெப் ஆகியோர் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
    பாரீஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

    3-வது நாளான நேற்று பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.

    இதில், ஜப்பான் நாட்டை சேர்ந்த நம்பர் ஒன் புயல் நவோமி ஒசாகா, சுலோவாக்கியா வீராங்கனை அன்ன கரோலினா சிமிட்லோவாவை எதிர்கொண்டார். 

    ஒசாகா 0-6, 7-6 (7-4), 6-1 என்ற செட் கணக்கில் சிமிட்லோவாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். 



    இதேபோல், ருமேனியா நாட்டை சேர்ந்த நடப்பு சாம்பியனான சிமோனா ஹாலெப், ஆஸ்திரேலியா நாட்டின் டோம்ஜனோவிச்சை எதிர்கொண்டார். ஹாலெப், 6-2, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் டோம்ஜனோவிச்சை தோற்கடித்து இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
    உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான நேற்றைய பயிற்சி ஆட்டத்தில் இலங்கையை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா.
    லண்டன்:

    10 அணிகள் பங்கேற்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 30-ம் தேதி தொடங்குகிறது. தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    சவுதம்டனில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா இலங்கை அணியை எதிர்கொண்டது.

    டாஸ் ஜெயித்த இலங்கை அணி கேப்டன் கருணாரத்னே பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி, அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் சேர்த்தது. திரிமன்னே 56 ரன்னும், தனஞ்ஜெயா டி சில்வா 43 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.



    ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஆடம் ஜம்பா 2 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க், கம்மின்ஸ், கேன் ரிச்சர்ட்சன், மேக்ஸ்வெல், நாதன் லயன், ஸ்டீவன் சுமித் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா, 44.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. உஸ்மான் கவாஜா 89 ரன்னும், மேக்ஸ்வெல் 36 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். 
    முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்திய ஆஸ்திரேலியா, தொடர்ச்சியாக பெற்ற 2-வது வெற்றி இது. முதல் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவிடம் வீழ்ந்த இலங்கை, இதில் ஆஸ்திரேலியாவிடமும் தோல்வியை சந்தித்துள்ளது. 
    சவுதாம்ப்டனில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் ஸ்டீவன் ஸ்மித்தின் சதத்தால் உலக சாம்பியன் ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்தை 12 ரன்னில் வீழ்த்தியது.
    சவுதாம்ப்டன்:

    சவுதாம்ப்டனில் நடைபெற்ற மற்றொரு உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் உலக சாம்பியன் ஆஸ்திரேலிய அணியும் இங்கிலாந்தும் மோதியது.

    காயம் காரணமாக இங்கிலாந்து கேப்டன் மோர்கன் ஆடவில்லை. அவருக்கு பதில் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் அணியை வழிநடத்தினார். டாஸ்வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணியில் டேவிட் வார்னர் 43 ரன்னும், ஷான் மார்ஷ் 30 ரன்னும், உஸ்மான் கவாஜா 31 ரன்னும் எடுத்தனர்.

    ஓராண்டு தடைக்கு பிறகு அணிக்கு திரும்பிய ஸ்டீவன் சுமித் அபாரமாக விளையாடி சதமடித்தார். அவர் 116 ரன் எடுத்து அவுட்டானார். இறுதியில் ஆஸ்திரேலியா அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 297 ரன்கள் குவித்தது.



    தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜேம்ஸ் வின்ஸ் 64 ரன்களும், பொறுப்பு கேப்டன் ஜோஸ் பட்லர் 52 ரன்களும் எடுத்தனர்.

    கடைசி வரை போராடிய இங்கிலாந்து அணி 49.3 ஓவர்களில் 285 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதையடுத்து ஆஸ்திரேலியா 12 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    ஆஸ்திரேலியாவில் வரும் மே மாதம் 18-ம் தேதி பொதுத்தேர்தல் நடத்தப்படும் என பிரதமர் ஸ்காட் மாரிசன் அறிவித்துள்ளார். #AustralianElections #ScottMorrison
    சிட்னி:

    ஆஸ்திரேலியாவில் ஆளும் லிபரல் கட்சியில் தொடர்ந்து உட்கட்சி பூசல் ஏற்பட்டதால், அடிக்கடி பிரதமர்கள் மாற்றப்பட்டனர்.
    கடந்த ஆண்டு மால்கோல்ம் டர்ன்புல் பிரதமராக பதவி வகித்தபோதும் உள்கட்சி பூசல் தொடர்ந்தது. முதலில் நடந்த ஓட்டெடுப்பில் தப்பிய அவருக்கு, மீண்டும் எதிர்ப்பு வலுத்ததால் மீண்டும் ஓட்டெடுப்பை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

    அப்போது பிரதமருக்கான  போட்டியில் இருந்து டர்ன்புல் விலகினார். ஸ்காட் மாரிசன் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். 10 ஆண்டுகளில் 6 முறை பிரதமர்கள் மாறி உள்ளனர். ஸ்காட் மாரிசனுக்கு பெரிய அளவில் எதிர்ப்பு இல்லாததால், பாராளுமன்ற தேர்தல் வரை அவருக்கு சிக்கல் இல்லை.

    இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் வரும் மே மாதம் 18-ம் தேதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும் என பிரதமர் ஸ்காட் மாரிசன் இன்று அறிவித்துள்ளார்.



    இந்த தேர்தலில் லிபரல் கட்சியின் தேர்தல் பிரசார யுக்தி மற்றும் தேர்தல் வாக்குறுதிகளைப் பொருத்து அந்த கட்சி ஆட்சியை தக்க வைக்குமா? அல்லது பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடிக்குமா? என்பது தெரியவரும். பருவநிலை மாற்றம், பொருளாதார வளர்ச்சி ஆகியவை இந்த தேர்தலில் முக்கிய பிரச்சினைகளாக எதிரொலிக்கும்.

    “அடுத்த மூன்று ஆண்டுகள் மட்டுமல்லாமல் அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஆஸ்திரேலியர்கள் வளமாக வாழும் வகையில் நாட்டின் வலுவான பொருளாதாரத்தை இந்த தேர்தல் தீர்மானிக்கும். உலகின் மிகச்சிறந்த நாட்டில் நாம் வாழ்கிறோம். ஆனால், உங்களின் வருங்கால பாதுகாப்பு வலுவான பொருளாதாரத்தையே சார்ந்துள்ளது” என பிரதமர் ஸ்காட் மாரிசன் கூறியுள்ளார்.

    ஆஸ்திரேலியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வாக்களிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஓட்டு போடாவிட்டால் அபராதம் விதிக்கப்படும். இதன் காரணமாக ஆஸ்திரேலியாவில் ஒருசில வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்க வருவதில்லை. கடைசியாக நடந்த பொதுத்தேர்தலில் 95 சதவீத வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது. #AustralianElections #ScottMorrison

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் 2 பேர் சதம் அடித்தும் 6 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணி தோல்வியை தழுவியது. #PAKvsAUS
    துபாய்:

    ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகள் மோதிய 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி துபாயில் பகல்- இரவாக நேற்று நடந்தது.

    முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 277 ரன் குவித்தது.

    மேக்ஸ்வெல் 82 பந்தில் 98 ரன்னும் (9 பவுண்டரி, 3 சிக்சர்), உஸ்மான் கவாஜா 62 ரன்னும், அலெக்ஸ் கேரி 55 ரன்னும் எடுத்தனர். இமாத்வாசிம், முகமது ஹஸ்னர், யாஷீர்ஷா தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.

    278 ரன் இலக்குடன் பாகிஸ்தான் ஆடியது.

    16.3 ஓவர்களில் 74 ரன்னில் அந்த அணி 2 விக்கெட்டை இழந்தது. 3-வது விக்கெட்டான ஆபித் அலி- முகமது ரிஸ்வான் ஜோடி சிறப்பாக விளையாடியது. இருவரும் அபாரமாக ஆடி சதம் அடித்தனர்.

    ஆபித் அலி 112 ரன் எடுத்தார். ஆட்டத்தின் கடைசி ஓவரில் பாகிஸ்தான் வெற்றிக்கு 22 ரன் தேவைப்பட்டது. 2-வது பந்தில் 104 ரன் எடுத்த முகமது ரிஸ்வான் ஆட்டம் இழந்தார்.

    பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 271 ரன்னே எடுத்தது. இதனால் அந்த அணி 6 ரன்னில் தோற்றது.

    ஆபித் அலி, முகமது ரிஸ்வான் அடித்த சதம் பலன் இல்லாமல் போனது. நாதன் கோல்ட்டர் 3 விக்கெட்டும், ஸ்டோனிஸ் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    ஆஸ்திரேலியா 4-வது போட்டியிலும் வெற்றி பெற்று 4-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் ஆட்டம் நாளை நடக்கிறது. #PAKvsAUS
    பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா 80 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. #PAKvsAUS
    அபுதாபி:

    ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகள் மோதிய 3-வது ஒருநாள் போட்டி அபுதாபியில் நேற்று பகல்-இரவாக நடந்தது.

    முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 266 ரன் குவித்தது.

    கேப்டன் ஆரோன் பிஞ்ச் ‘ஹாட்ரிக்‘ சாதனை வாய்ப்பை தவற விட்டார். முதல் ஆட்டத்தில் 116 ரன்னும், 2-வது ஆட்டத்தில் 153 ரன்னும் குவித்த அவர் இந்த ஆட்டத்தில் 90 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

    மேக்ஸ்வெல் 55 பந்தில் 71 ரன்னும் (8 பவுண்டரி, 1 சிக்சர்), ஹேண்ட்ஸ் ஹோம் 47 ரன்னும் எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய பாகிஸ்தான் அணி 44.4 ஓவரில் 186 ரன்னில் சுருண்டது. இதனால் ஆஸ்திரேலியா 80 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இமாம்-உல்- ஸ்ரீக் 46 ரன்னும், இமாத் வாசிம் 43 ரன்னும் எடுத்தனர். ஆடம் ஜம்பா 4 விக்கெட்டும், கும்மின்ஸ் 3 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    ஆஸ்திரேலியா ‘ஹாட்ரிக்’ வெற்றியை பெற்று தொடரை வென்றது. அந்த அணி முதல் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று இருந்தது.

    ஏற்கனவே டெஸ்ட் தொடரையும் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. 20-20 தொடரை பாகிஸ்தான் 3-0 என்ற கணக்கில் வென்று இருந்தது.

    ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் 4-வது ஒருநாள் போட்டி துபாயில் நாளை நடக்கிறது. #PAKvsAUS
    பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. #PAKvAUS
    சார்ஜா:

    ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகள் மோதிய 2-வது ஒருநாள் போட்டி சார்ஜாவில் நேற்று பகல்- இரவாக நடந்தது.

    முதலில் விளையாடிய பாகிஸ்தான் 7 விக்கெட் இழப்புக்கு 284 ரன் குவித்தது. முகமது ரிஸ்வான் சதம் அடித்தார். அவர் 126 பந்தில் 115 ரன்னும் (11 பவுண்டரி) கேப்டன் சோயிப் மாலிக் 60 ரன்னும் எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா 47.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 285 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் ஆரோன் பிஞ்ச் மீண்டும் சதம் அடித்தார். அவர் 143 பந்தில் 153 ரன்னும் (11 பவுண்டரி, 6 சிக்சர்), உஸ்மான் கவாஜா 88 ரன்னும் எடுத்தனர். இருவரும் தொடக்க விக்கெட்டுக்கு 209 ரன் எடுத்தனர். ஆரோன் பிஞ்ச் முதல் ஆட்டத்தில் 116 ரன்களை எடுத்து இருந்தார்.



    இந்த வெற்றி மூலம் ஆஸ்திரேலியா 5 போட்டிக் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது.

    முதல் ஆட்டத்திலும் 8 விக்கெட்டில் வெற்றி பெற்று இருந்தது. 3-வது போட்டி வருகிற 27-ந்தேதி அபுதாபியில் நடக்கிறது. #PAKvAUS
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்திய மண்ணில் ஆஸ்திரேலியா அணி முதல் முறையாக ஒருநாள் தொடரை கைப்பற்றியது #INDvAUS
    இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடைபெற்றது. ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.

    அந்த அணியின் உஸ்மான் கவாஜா, ஆரோன் பிஞ்ச் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் 76 ரன்னாக இருக்கும்போது ஆரோன் பிஞ்ச் 27 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

    அடுத்து கவாஜா உடன் ஹேண்ட்ஸ்காம்ப் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமாக விளையாடியது. 102 பந்தில் 10 பவுண்டரி, 2 சிக்சருடன் கவாஜா சதம் அடித்தார். இந்தத் தொடரில் அவரின் 2-வது சதம் இதுவாகும். அவர் 104 ரன்னில் ஆட்டமிழந்தார். ஹேண்ஸ்ட்காம்ப் 52 ரன்னில் வெளியேறினார். இறுதியில், ஆஸ்திரேலியா 9 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் சேர்த்தது. 

    இந்திய அணி சார்பில் புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்டும், முகமது ஷமி மற்றும் ஜடேஜா தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 273 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு இந்தியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் இறங்கினர்.

    தவான் 12 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். அடுத்து இறங்கிய விராட் கோலி 20 ரன்னில் அவுட்டானார். ரிஷப் பந்த் 16 ரன்னிலும், விஜயசங்கர் 16 ரன்னிலும் வெளியேறினர்.



    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலு ரோகித் சர்மா நிதானமாக ஆடி அரை சதமடித்தார். அவர் 56 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து இறங்கிய கேதார் ஜாதவும்,  7வது விக்கெட்டுக்கு இறங்கிய புவனேஸ்வர் குமாரும் நிலைத்து நின்று ஆடினர். இந்த ஜோடி 91 ரன்கள் சேர்த்தது. புவனேஸ்வர் குமார் 46 ரன்னிலும், கேதார் ஜாதவ் 44 ரன்னிலும் வெளியேற இந்தியாவின் தோல்வி உறுதியானது.

    இறுதியில், இந்தியா 237 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, ஆஸ்திரேலிய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா சார்பில் சம்பா 3 விக்கெட்டும், கம்மின்ஸ், ரிச்சர்ட்சன், ஸ்டோனிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதன்மூலம், ஆஸ்திரேலிய அணி ஒருநாள் தொடரை 3 - 2 என்ற கணக்கில் கைப்பற்றியது. #INDvAUS
    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி டெல்லியில் இன்று நடக்கிறது. #INDvsAUS
    புதுடெல்லி:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ஐதராபாத், நாக்பூரில் நடந்த முதல் 2 ஆட்டங்களில் இந்தியாவும், ராஞ்சி, மொகாலியில் நடந்த அடுத்த இரு ஆட்டங்களில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. இதனால் இந்த தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இவ்விரு அணிகளில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தலைநகர் டெல்லியில் உள்ள பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது.

    தொடக்க இரு ஆட்டங்களில் வெற்றி பெற்ற நிலையில், அடுத்த இரு ஆட்டங்களில் இந்தியா சறுக்கி விட்டது. குறிப்பாக மொகாலியில் நடந்த முந்தைய ஆட்டத்தில் இந்திய அணி 358 ரன்கள் குவித்த போதிலும் மோசமான பந்து வீச்சு மற்றும் பீல்டிங்கால் தோல்வியை சந்திக்க நேரிட்டது. இதே போல் விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்டும் சில வாய்ப்புகளை வீணடித்தார். முதலில் பேட் செய்து இந்தியா 350 ரன்களுக்கு மேல் எடுத்தும் தோற்றது அது தான் முதல் தடவையாகும். பனிப்பொழிவால் பவுலர்களுக்கு பந்து வீசுவதற்கு சரியான ‘கிரிப்’ கிடைக்கவில்லை என்று கேப்டன் கோலி காரணம் சொல்லி நழுவினார். தற்போது, தவறுக்கு பரிகாரம் தேட வேண்டிய நேரமாகும்.

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்பாக இந்திய அணி களம் இறங்கும் கடைசி சர்வதேச போட்டி இதுவாகும். உலக கோப்பைக்கு நம்பிக்கையான மனநிலையுடன் புறப்படுவதற்கு இந்த தொடரை வெல்வது அவசியமாகும்.

    கடந்த ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரர்கள் ஷிகர் தவானும், ரோகித் சர்மாவும் முதல் விக்கெட்டுக்கு 193 ரன்கள் சேர்த்து வலுவான அஸ்திவாரம் அமைத்து தந்தனர். அதே போன்று இன்றைய ஆட்டத்திலும் விளையாடினால், மறுபடியும் பெரிய ஸ்கோரை எட்ட முடியும். இது, கேப்டன் விராட் கோலியின் சொந்த ஊர் ஆகும். இந்த தொடரில் ஏற்கனவே 2 செஞ்சுரி அடித்துள்ள கோலி சொந்த ஊரிலும் அசத்துவாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    டெல்லி ஆடுகளம் எப்போதும் வேகமின்றி (ஸ்லோ) காணப்படும். அதனால் இந்த ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சின் தாக்கம் முக்கிய பங்கு வகிக்கும். இதையொட்டி இந்திய பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண் அளித்த பேட்டியில், ‘4-வது ஒரு நாள் போட்டியில் ஆஷ்டன் டர்னருக்கு எதிராக நாங்கள் திட்டமிட்டபடி துல்லியமாக பந்து வீசவில்லை. ஆனால் மீண்டும் அதே போன்ற சூழ்நிலை எழுந்தால், நிச்சயம் சிறப்பாக செயல்படுவோம். பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் மூன்று துறைகளிலும் சில பகுதிகளில் முன்னேற்றம் காண வேண்டியது அவசியமாகும்’ என்றார்.

    ‘இந்த ஆஸ்திரேலிய தொடரில் பயன்படுத்திய இந்திய ஆடும் லெவன் அணியை அப்படியே உலக கோப்பை போட்டியிலும் தொடர வேண்டிய அவசியம் கிடையாது. உலக கோப்பை தொடரில் எந்த மாதிரியான கலவையில் வீரர்களை இடம் பெறச்செய்வோம் என்பது ஏறக்குறைய தெரிந்து விட்டது. ஆனாலும் அதற்கு முன்பாக எல்லாவிதமான பரிசோதனை முயற்சிகளையும் செய்து பார்க்க விரும்புகிறோம்’ என்றும் பரத் அருண் குறிப்பிட்டார்.

    ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை சரிவில் இருந்து எழுச்சி பெற்று அடுத்தடுத்து கிடைத்த வெற்றியால் புது தெம்பு அடைந்துள்ளது. உஸ்மான் கவாஜாவின் நிலையான ஆட்டம் அந்த அணியின் பேட்டிங்குக்கு வலு சேர்க்கிறது. முந்தைய ஆட்டத்தில் இமாலய இலக்கை எட்ட வைத்த பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப் (117 ரன்), ஆஷ்டன் டர்னர் (43 பந்தில் 84 ரன்) ஆகியோரும் இன்றைய ஆட்டத்தில் கவனிக்கத்தக்க வீரர்களாக இருப்பார்கள். 2009-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக இந்திய மண்ணில் தொடரை வெல்லும் முனைப்புடன் ஆஸ்திரேலிய அணியினர் வியூகங்களை வகுத்துள்ளனர்.

    ஆஸ்திரேலிய துணை கேப்டனும், விக்கெட் கீப்பருமான அலெக்ஸ் காரி அளித்த பேட்டியில், ‘நாங்கள் சில இந்திய உள்ளூர் பவுலர்களை கொண்டு வலை பயிற்சியில் ஈடுபட்டோம். இது உண்மையிலேயே நல்ல அனுபவமாக இருந்தது. அது மட்டுமின்றி கடந்த 12-18 மாதங்களாக சுழற்பந்து வீச்சை திறம்பட சமாளிப்பதில் கடினமாக உழைத்து வருகிறோம். அதற்குரிய பலனையும் பார்த்துள்ளோம். மீண்டும் இந்திய சுழற்பந்து வீச்சை அடித்து நொறுக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எங்களது வீரர்கள் நாளைய (இன்று) போட்டியில் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்வதில் மிகுந்த நம்பிக்கையோடு இருக்கிறார்கள். இது தொடரை முடிவு செய்யும் ஆட்டம் என்பதால் சுவாரஸ்யமாக இருக்கும்’ என்றார். ஆஸ்திரேலிய அணி, இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் 0-2 என்ற கணக்கில் பின்தங்கி அதன் பிறகு தொடரை வென்றதாக வரலாறு கிடையாது. அந்த பெருமையை இந்தியா தக்க வைத்துக் கொள்ளுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    டெல்லி மைதானத்தில் இந்திய அணி இதுவரை 19 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி அதில் 12-ல் வெற்றியும், 6-ல் தோல்வியும் கண்டுள்ளது. ஒரு ஆட்டத்தில் முடிவு கிடைக்கவில்லை. ஆஸ்திரேலிய அணி இங்கு 5 ஆட்டங்களில் ஆடி 2-ல் வெற்றியும், 3-ல் தோல்வியும் சந்தித்துள்ளது. இவற்றில் இந்தியாவை எதிர்கொண்ட 4 ஆட்டங்களில் 3-ல் தோல்வி கண்டிருக்கிறது.

    2011-ம் ஆண்டு நெதர்லாந்துக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணி 330 ரன்கள் குவித்தது, இங்கு ஒரு அணியின் சிறந்த ஸ்கோராகும். 1987-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 289 ரன்கள் எடுத்தது இந்தியாவின் அதிகபட்சமாகும்.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), லோகேஷ் ராகுல் அல்லது அம்பத்தி ராயுடு, ரிஷாப் பான்ட், கேதர் ஜாதவ், விஜய் சங்கர், புவனேஷ்வர்குமார், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரித் பும்ரா.

    ஆஸ்திரேலியா: உஸ்மான் கவாஜா, ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), ஷான் மார்ஷ், பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப், மேக்ஸ்வெல், ஆஷ்டன் டர்னர், அலெக்ஸ் காரி, கம்மின்ஸ், நாதன் லயன், ஜெயே ரிச்சர்ட்சன், ஆடம் ஜம்பா.

    பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை தூர்தர்ஷன் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. #INDvsAUS

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் நாளை நடக்கிறது. #INDvsAUS
    புதுடெல்லி:

    ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 2 போட்டிக் கொண்ட 20 ஓவர் தொடரை ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    5 ஒருநாள் தொடரில் இதுவரை நடந்த 4 ஆட்டத்தின் முடிவில் 2-2 என்ற சமநிலை ஏற்பட்டுள்ளது. ஐதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், நாக்பூரில் நடந்த 2-வது ஆட்டத்தில் 8 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றிபெற்றது. ராஞ்சியில் நடந்த 3-வது போட்டியில் 32 ரன் வித்தியாசத்திலும், மொகாலியில் நடைபெற்ற 4-வது ஆட்டத்தில் 4 விக்கெட்டிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் நாளை (புதன்கிழமை) நடக்கிறது.

    இரு அணிகளும் சமபலத்துடன் திகழ்வதால் ஒருநாள் தொடரை வெல்வது இந்தியாவா? ஆஸ்திரேலியாவா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த ஆட்டத்தில் வென்று இந்திய அணி தொடரை வெல்ல நல்ல வாய்ப்பு இருந்தது. மோசமான பீல்டிங்கால் வாய்ப்பு பறிபோனது. 358 ரன் குவித்தும் தோற்றது மிகுந்த ஏமாற்றமே. இதை சரி செய்யும் வகையில் இந்திய வீரர்கள் நாளை முழு திறமையை வெளிப்படுத்தி தொடரை வெல்லும் ஆர்வத்தில் உள்ளனர்.

    தொடக்க வீரர் தவான் மீண்டும் நல்ல நிலைக்கு திரும்பி இருப்பது சாதகமானதே. கடந்த பேட்டிங்கில் அவர் 143 ரன்கள் குவித்தார். ஆனால் அது பலன் இல்லாமல் போனது. இதேபோல ரோகித்சர்மா, கேப்டன் விராட்கோலி, விஜய்சங்கர் ஆகியோரும் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர்.

    கடந்த ஆட்டத்தில் அணியில் மாற்றம் செய்தும் பலன் இல்லை. இதனால் நாளைய ஆட்டத்தில் பந்துவீச்சில் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2 பேட்டிங்கிலும் பனிப்பொழிவு வெற்றி- தோல்வியை முடிவு செய்தது. கேப்டன் கோலி இதை சரியாக கணிக்காமல் தவறான முடிவை எடுத்தார். இதனால் டெல்லி போட்டியில் அவர் ஆடுகளத்தின் தன்மையை சரியாக கணிக்க வேண்டிய நிலையில் உள்ளார்.

    20 ஓவர் தொடரை வென்றது போல ஒருநாள் தொடரையும் கைப்பற்றும் வேட்கையில் ஆஸ்திரேலியா உள்ளது.

    கடந்த பேட்டிங்கில் டர்னரின் அபாரமான ஆட்டம் அந்த அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தது. மேலும் உஸ்மான் கவாஜா, ஹேண்ட்ஸ் ஆகியோரும் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். பந்துவீச்சில் கம்மின்ஸ், ரிச்சர்ட்சன் சிறப்பாக உள்ளனர். பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சம பலத்துடன் திகழும் ஆஸ்திரேலிய அணி சொந்த மண்ணில் தொடரை இழந்ததற்கு பழிதீர்க்கும் வேட்கையில் உள்ளது.

    இரு அணிகளும் நாளை மோதுவது 136-வது போட்டி ஆகும் இதுவரை நடந்த 135 பேட்டிங்கில் இந்தியா 49-ல் ஆஸ்திரேலியா 76-ல் வெற்றிபெற்று உள்ளன. 10 ஆட்டம் முடிவு இல்லை.

    பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவி‌ஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. #INDvAUS
    ×