search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98345"

    20 ஓவர் போட்டியில் கேப்டன் பதவிக்கு ரோகித் சர்மா பொறுத்தமானவர் என்று முன்னாள் கேப்டனும், டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் இந்திய அணியின் புதிய கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். விராட் கோலி பதவி விலகியதால் அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது.

    இந்த நிலையில் 20 ஓவர் போட்டியில் கேப்டன் பதவிக்கு ரோகித் சர்மா பொறுத்தமானவர் என்று முன்னாள் கேப்டனும், டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    20 ஓவர் கேப்டன் பதவிக்கு ரோகித் சர்மா சிறந்தவர். அடுத்த உலக கோப்பைக்கு இன்னும் 10 முதல் 12 மாதங்களே உள்ளன. ரோகித் சர்மா ஐ.பி.எல். போட்டியில் மும்பை அணியை சிறப்பாக வழி நடத்தியுள்ளார். எனவே ரோகித் சர்மாவுக்கு இந்திய அணியின் கேப்டன் பொறுப்பு கொடுத்தது சரியே.

    இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.

    உலக கோப்பையை வெல்ல இந்தியாவை விட இங்கிலாந்து அணிக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.

    லண்டன்:

    உலக கோப்பை போட்டி குறித்து இந்திய அணி முன்னாள் கேப்டனும் டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் கூறியதாவது:-

    உலக கோப்பையை வெல்ல இந்தியாவை விட இங்கிலாந்து அணிக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. உள்ளூரில் விளையாடுவது அந்த அணிக்கு கூடுதல் பலமே.

    கடந்த சில ஆண்டுகளாக இங்கிலாந்து அணி மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறது. அந்த அணியை சொந்த மண்ணில் வீழ்த்துவது மிகவும் கடினமானது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இங்கிலாந்து அணி இதுவரை உலக கோப்பையை வென்றது இல்லை. 3 முறை இறுதிப்போட்டியில் தோற்று உள்ளது. 1979-ல் வெஸ்ட்இண்டீசிடமும், 1987-ல் ஆஸ்ரேலியாவிடமும், 1992-ல் பாகிஸ்தானிடமும் தோற்று கோப்பையை இழந்தது.

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் இடம் பெறாதது ஆச்சரியம் அளிக்கிறது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். #WorldCup2019 #RishabhPant
    புதுடெல்லி:

    12-வது உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் மே 30-ந் தேதி முதல் ஜூலை 14-ந் தேதி வரை நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா உள்பட 10 நாடுகள் பங்கேற்கின்றன. இந்த போட்டிக்கான நியூசிலாந்து அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.

    இந்த நிலையில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியை தேர்வு செய்வதற்கான இந்திய கிரிக்கெட் வாரிய தேர்வு குழு கூட்டம் அதன் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையில் மும்பையில் நேற்று பிற்பகலில் நடந்தது. முன்னதாக தேர்வு குழு தலைவரை, கேப்டன் விராட்கோலி சந்தித்து பேசினார்.

    தேர்வு குழு கூட்டம் முடிவில் உலக கோப்பை போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டது.

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் இடம் பெறவில்லை.



    இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் இது தொடர்பாக கூறுகையில், ‘ரிஷப் பந்த் நல்ல பார்மில் இருக்கிறார். ஐ.பி.எல். போட்டியில் மட்டுமின்றி அதற்கு முந்தைய போட்டிகளிலும் பேட்டிங்கில் அவர் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அத்துடன் விக்கெட் கீப்பிங்கிலும் நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறார். அவரை உலக கோப்பைக்கான இந்திய அணியில் சேர்க்காதது ஆச்சரியம் அளிக்கிறது’ என்றார். #WorldCup2019 #RishabhPant
    இங்கிலாந்தில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடப்பதால், போட்டியை நடத்தும் இங்கிலாந்து சாம்பியன் பட்டத்தை வெல்ல வாய்ப்புள்ளது என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
    உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி மே மாதம் 3-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது. இந்த உலகக்கோப்பையை இங்கிலாந்து கைப்பற்ற அதிகமான வாய்ப்பு இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    வரலாறுபடி பார்த்தால் இங்கிலாந்து உலகக்கோப்பையை வெல்லும். 2011-ம் ஆண்டு உலக கோப்பையை இந்தியா நடத்தி கோப்பையை வென்றது. 2015-ம் ஆண்டு உலக கோப்பையை நடத்தி ஆஸ்திரேலியா பட்டம் வென்றது. 2019-ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியை இங்கிலாந்து நடத்துகிறது. அந்த அணி உலகக்கோப்பையை வெல்ல நல்ல வாய்ப்பு இருக்கிறது. மேலும் இங்கிலாந்து அணி தற்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

    இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.



    உலகக்கோப்பையை ஆஸ்திரேலியா அதிகபட்சமாக 5 முறை வென்றுள்ளது. அந்த அணி 1987, 1999, 2003, 2007, 2015 ஆகிய ஆண்டுகளில் வென்றுள்ளது.

    இந்தியா (1983, 2011), வெஸ்ட் இண்டீஸ் (1975, 1979) அணிகள் தலா 2 முறையும், பாகிஸ்தான் (1992), இலங்கை (1996) அணிகள் தலா ஒருமுறையும் உலகக்கோப்பையை கைப்பற்றி உள்ளன.
    உலகக் கோப்பைக்கான இந்திய அணிக்கு தினேஷ் கார்த்திக் தேவை என்று முன்னாள் கேப்டனும், வர்ணனையாளருமான கவாஸ்கர் தெரிவித்துள்ளார். #WorldCup2019
    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு 20 ஓவர் போட்டி மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. 20 ஓவர் தொடர் 24-ந்தேதியும், ஒரு நாள் தொடர் மார்ச் 2-ந்தேதியும் தொடங்குகிறது.

    உலகக் கோப்பை போட்டிக்கு முன்பு இந்திய அணி விளையாடும் கடைசி ஒரு நாள் தொடர் என்பதால் ஆஸ்திரேலிய தொடர் மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கிறது.

    இந்த தொடருக்கான இந்திய அணியில் இருந்து தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டுள்ளார். 20 ஓவர் போட்டியில் இடம்பெற்ற அவர் ஒரு நாள் போட்டியில் இருந்து கழற்றி விடப்பட்டுள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக ஒரு நாள் போட்டியில் நிலையாக விளையாடி வரும் அவர் நீக்கப்பட்டது அதிர்ச்சியான ஒன்றே.

    ஆஸ்திரேலிய தொடரில் நீக்கப்பட்டதால் அவர் உலகக் கோப்பை அணியிலும் இடம் பெறுவதற்கான வாய்ப்பு குறைவே.

    இந்த நிலையில் உலக கோப்பை அணியில் தினேஷ் கார்த்திக் தேவை என்று முன்னாள் கேப்டனும், டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக லோகேஷ் ராகுல், ரகானே, ரி‌ஷப் பந்த் என யாரையும் களம் இறக்க தேவையில்லை. தினேஷ் கார்த்திக்கை களம் இறக்கலாம். இங்கிலாந்தில் நடைபெறும் உலக கோப்பையில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் குறித்து எனக்கு ஒரு கண்ணோட்டம் இருக்கிறது.

    என்னுடைய கணிப்பில் 13 வீரர்களுக்கு நிச்சயம் இடம் கிடைக்கும். அதில் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி, அம்பதி ராயுடு, டோனி, கேதர் ஜாதவ், ஹர்த்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமார், சாஹல், பும்ரா, முகமது‌ ஷமி, குல்தீப் யாதவ் ஆகியோருக்கு வாய்ப்பு உண்டு.

    மற்ற வகையில் ராகுல், ரகானே, ரி‌ஷப் பந்ட் ஆகியோரை காட்டிலும் உலகக் கோப்பைக்கு தினேஷ் கார்த்திக் தேவை. அணியில் எப்போதும் நெகிழ்வு தன்மை இருக்க வேண்டும். தொடக்க வீரராக தினேஷ் கார்த்திக்கை மாற்றி களம் இறக்கும்போது நல்ல முடிவு கிடைக்கும். டெஸ்ட் போட்டியில் களம் இறங்கிய அனுபவம் இருப்பதால் அவரால் ஒரு நாள் போட்டியில் ஜொலிக்க முடியும்.

    14-வது வீரராக விஜய் சங்கர் இருக்கலாம். ஏனென்றால் இங்கிலாந்து மைதானத்தில் பந்து நன்றாக ‘சுவிங்’ ஆகும். அப்போது ஹர்த்திக் பாண்டியா, விஜய் சங்கர் ஆகிய இரண்டு ஆல் ரவுண்டர்களுடன் களம் இறங்கலாம்.

    கலீல் அகமது, முகமது சிராஜ் ஆகியோர் எதிர்பார்த்த அளவுக்கு பந்து வீசவில்லை. உமேஷ் யாதவை மாற்று வீரராக மட்டுமே வைத்து இருக்கலாம். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்தியா 5-0 என்ற கணக்கில் வெல்லும் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.

    தினேஷ் கார்த்திக் நிலை குறித்து முன்னாள் வீரரும், டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியதாவது:-

    இந்திய அணி நிர்வாகம் தினேஷ் கார்த்திக்கை 20 ஓவர் வீரராக மட்டுமே பார்க்க தொடங்கி விட்டது என்பது புரிந்துவிட்டது. அவருக்கு உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் கிடைப்பதும், வாய்ப்புக்கான கதவுகள் திறப்பதும் என்னை பொறுத்தவரை இல்லை. அதற்காக அவரின் ரசிகர்களிடம் வருத்தத்தை தெரிவிக்கிறேன்.

    நியூசிலாந்தில் அம்பதி ராயுடு பொறுமையாக, நிதானமாக ஆடிய விதம் கார்த்திக்கை விட சிறப்பாக இருந்தது என்று நிர்வாகம் கருதலாம். நீண்ட நேரம் விளையாடும் போட்டியில் தினேஷ் கார்த்திக் நிலைத்து ஆடும் பொறுமையில்லை என்று கருதுகிறார்கள்.

    டோனி, ரிசப் பந்த் ஆகியோருடன் ஒப்பிடுகையில் தினேஷ் கார்த்திக், டோனியை காட்டிலும் கீப்பிங்கில் சற்று குறைவாகவும், ரி‌ஷப் பந்த்-ஐ காட்டிலும் சற்று சிறப்பாகவும் செயல்படுகிறார்.

    ஆனால் ரி‌ஷப் பந்த் சமீப காலமாக பேட்டிங் செய்யும் விதம் தேர்வாளர்களை கவர்ந்துள்ளது. நம்பிக்கை அளித்துள்ளது. நான் ரி‌ஷப் பந்த் ஆதரவாளர் இல்லை. ஆனால் அவர் ஒரு நாள் போட்டியில் தனக்கான இடத்தை தக்க வைக்க முயன்று வருகிறார்.

    பல போட்டிகளில் தனக்கு கிடைத்த வாய்ப்பை தினேஷ் கார்த்திக் சரியாக பயன்படுத்தியும் தேர்வு செய்யவில்லை எனும்போது அவரது ஒரு நாள் கிரிக்கெட் வாழ்க்கை ஏறக்குறைய முடிந்துவிட்டது என்றே கருதுகிறேன். 20 ஓவர் வீரராக மட்டுமே அவர் தொடர முடியும் என்று கிரிக்கெட் வாரியம் விரும்புகிறது.

    இவ்வாறு சஞ்சய் மஞ்ரேக்கர் கூறினார்.
    ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி புதிய சகாப்தம் படைத்துள்ளது என்று தெண்டுல்கர் மற்றும் கவாஸ்கர் புகழாரம் சூட்டியுள்ளனர். #AUSvIND

    மும்பை:

    விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இதன் மூலம் இந்திய அணி புதிய வரலாறு படைத்தது. ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி புதிய சகாப்தம் படைத்தது. 72 ஆண்டு கால வரலாற்றில் புதிய சரித்திரத்தை வீராட்கோலி படைத்தார். ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய கேப்டன் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.

    அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் 31 ரன் வித்தியாசத்திலும், மெல்போர்னில் நடந்த 3-வது டெஸ்டில் 137 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்று இருந்தது. பெர்த்தில் நடந்த 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 146 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிட்னியில் நடந்த 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் மழையால் ‘டிரா’ ஆனது.

    இந்தியா தொடரை வெல்ல புஜாராவும் (521 ரன் குவிப்பு), பும்ராவும் (21 விக்கெட்) முக்கிய பங்கு வகித்தனர்.

    ஆஸ்திரேலியாவில் சாதித்த இந்திய அணியை முன்னாள் கேப்டன்கள், முன்னாள் வீரர்கள் பாராட்டி உள்ளனர். அதன் விவரம்:-

    தெண்டுல்கர்: ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றது இந்திய கிரிக்கெட்டுக்கு அற்புதமான நாள் ஆகும். இதை பொக்கி‌ஷமாக கருதுகிறேன். இந்திய வீரர்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன்.

    பேட்டிங்கில் புஜாரா மாறுபட்ட நிலையில் சிறப்பாக செயல்பட்டார். சீனியர் வீரர்களும், ஜூனியர் வீரர்களும் இணைந்து இந்த வெற்றியை பெற்றுக்கொடுத்தனர். ரிசப்பன்ட், குல்தீப் யாதவ் அணிக்கு மேலும் பலம் சேர்க்க கூடியவர்கள்.

    கவாஸ்கர்: இந்திய கிரிக்கெட்டை வீரர்கள் பெருமை அடைய செய்து விட்டனர். வெஸ்ட்இண்டீஸ், இங்கிலாந்தில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றபோது நானும் அணியில் இருந்தேன். அந்த தருணங்கள் மிகவும் சிறப்பானது. தற்போதைய இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சாதித்தபோது என் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது.

    விராட்கோலி தலைமையிலான இந்திய அணி முற்றிலும் மாறுபட்டது. உடல் தகுதியிலும் சிறப்பாக உள்ளது. இதை கேப்டன் நிரூபித்து விட்டார். ஆஸ்திரேலிய அணியில் சுமித், வார்னர் இல்லாதது இந்தியாவின் தவறு அல்ல. ஆஸ்திரேலிய அணி தான் அவர்கள் இல்லாமல் களம் இறங்கியது. இருவரது தடை காலத்தை குறைத்து இருக்கலாம்.

    கங்குலி: இது ஒரு வெறித்தனமான வெற்றியாகும். இந்திய வீரர்கள் சிறப்பான கிரிக்கெட்டை வெளிப்படுத்தினார்கள். 400 முதல் 600 ரன்கள் வரை குவித்தது மிகவும் முக்கியமானது. புஜாரா, பும்ரா அபாரமாக செயல்பட்டு தொடரை வெல்ல காரணமாக இருந்தார்கள்.

    ரிசப்பன்ட் நன்றாக விளையாடினார். அவருக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது. 2003-04-ல் இருந்த எனது அணியுடன், தற்போதுள்ள வீராட்கோலி அணியை ஓப்பீட்டு கேட்கப்படுகிறது. நான் எப்போதுமே ஒப்ரீஜீடமாட்டேன். அதனால் தான் இது மாதிரியான கேள்விக்கு பதில் அளிக்க முடியாது.

    வி.வி.எஸ்.லட்சுமண்: ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணி பாராட்டு மழையில் நனைகிறது. வீரர்களின் கூட்டு முயற்சியால் இந்த வரலாறு படைக்க முடிந்தது. ஒவ்வொரு வீரரின் செயல்பாடும் சிறப்பாக இருந்தது.

    பி‌ஷன்சிங் பெடி: தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, மண்ணில் தோல்வியை சந்தித்த பிறகு ஆஸ்திரேலியாவில் பெற்ற இந்த வெற்றி வியக்கத்தக்கது. ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் இந்திய வீரர்கள் வீழ்த்தியது சிறப்பானது. புஜாராவும், பும்ராவும் நிலையான ஆட்டத்திறனை வெளிப்படுத்தினார்கள்.

    ஷேவாக்: இந்திய வீரர்களை நினைத்து ஒவ்வொருவரும் பெருமைப்படுகிறோம். அணியில் உள்ள ஒவ்வொரு வீரரும் வெற்றிக்காக முழு திறமையை வெளிப்படுத்தினார்கள். இந்திய அணிக்கு எனது வாழ்த்துக்கள். #AUSvIND

    ஆஸ்திரேலிய அணிக்காக ஸ்மித் மற்றும் வார்னர் விளையாடாதது இந்தியாவின் தவறல்ல என்று கவாஸ்கர் காட்டமான வகையில் பதில் அளித்துள்ளார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்றுடன் முடிவடைந்தது. சிட்னி டெஸ்டில் இரண்டு நாட்கள் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் டிராவில் முடிந்தது. இதனால் இந்தியா 2-1 எனத் தொடரை கைப்பற்றியது.

    இந்திய அணி சிறப்பான பேட்டிங் மற்றும் பந்து வீச்சால் முதன்முறையாக ஆஸ்திரேலியா மண்ணில் தொடரை வென்று சாதனைப் படைத்துள்ளது. சிலர் இந்திய அணியை பாராட்டுவதைவிட, ஆஸ்திரேலியா அணியில் ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாததுதான் அந்த அணியின் தோல்விக்கு காரணம் என்று கூறி வருகின்றனர்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ‘‘இருவரும் ஆஸ்திரேலிய அணியில் விளையாடாதது இந்தியாவின் தவறல்ல’’ என்று கவாஸ்கார் கடுமையான வகையில் பதிலடி கொடுத்துள்ளார்.

    இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில் ‘‘ஆஸ்திரேலிய அணி டேவிட் வார்னர் மற்றும் ஸ்மித் இல்லாமல் விளையாடியது இந்தியாவின் தவறல்ல. இருவரின் தடையை அவர்களால் குறைத்திருக்க முடியும். ஆனால் ஒரு வருடத்தடை ஆஸ்திரேலியா கிரிக்கெட்டிற்கு நல்லது என்று நினைத்துள்ளனர். கிரிக்கெட் போட்டியை தவறான வழிக்கு இழுத்துச் செல்லும் வீரர்களுக்கு இது உதாரணமாக இருக்கும் என்பதால் இதை எடுத்திருக்கலாம். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாதனையைப் படைத்துள்ளது.’’ என்றார்.
    இந்திய முன்னாள் கேப்டன் கபில்தேவ் இப்போது ஐ.பி.எல். ஏலத்தில் இடம்பெற்று இருந்தால் ரூ.25 கோடிக்கு ஏலம் போயிருப்பார் என கவாஸ்கர் கூறியுள்ளார். #KapilDev #Gavaskar #IPLAuction2019
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி. அவரது தலைமையில் 2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை மற்றும் 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பை கைப்பற்றப்பட்டது.

    2014-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக டோனி திடீரென அறிவித்தார். சமீபத்தில் அவர் 20 ஓவர் போட்டி அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை. தற்போது ஒருநாள் போட்டியில் மட்டும் விளையாடி வருகிறார்.

    இந்த நிலையில் டோனி இந்திய வீரர்களில் சிறந்தவர் என்று முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறி உள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    இந்தியா உற்பத்தி செய்துள்ள கிரிக்கெட் வீரர்களில் டோனி தான் சிறந்த வீரர். அவர் 90 டெஸ்ட் போட்டியில் விளையாடி உள்ளார். அதன்பின் இளம் வீரர்களுக்கு வழிவிடுவதாக கூறி டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றார். தன்னை விட நாடுதான் முக்கியம் என்று கருதும் டோனிக்கு தலை வணங்குகிறேன்.



    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கூறும்போது, “சிறந்த ஆல்ரவுண்டரான கபில்தேவ் இப்போது ஐ.பி.எல். ஏலத்தில் இடம்பெற்று இருந்தால் ரூ.25 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டு இருப்பார்” என்று புகழ்ந்துள்ளார். #KapilDev #Gavaskar #IPLAuction2019
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான எஞ்சிய 2 டெஸ்டில் லோகேஸ் ராகுல் ஆடக்கூடாது என்றும், அவர் நாடு திரும்ப வேண்டும் என்றும் கவாஸ்கர் கூறியுள்ளார். #AUSvIND #SunilGavaskar #KLRahul
    புதுடெல்லி:

    விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    அடிலெய்டில் நடந்த பரபரப்பான முதல் டெஸ்டில் இந்திய அணி 31 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால் பெர்த்தில் நடந்த 2-வது டெஸ்டில் இந்திய அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை தழுவியது. இதனால் 4 டெஸ்ட் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

    பெர்த் டெஸ்டில் கேப்டன் விராட்கோலி மற்றும் அணி நிர்வாகத்தின் முடிவு கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. முதன்மை சுழற்பந்து வீரரான ஜடேஜாவை சேர்க்காமல் 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாடியது. அதனால் ஆஸ்திரேலியா ரன்களை வாரி குவித்தது. இது இந்தியாவுக்கு பாதகமாக அமைந்தது.



    மேலும் ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்ற சுழற்பந்து வீரர் லயன் சிறப்பாக பந்து வீசி 8 விக்கெட் கைப்பற்றி மிகுந்த நெருக்கடியை கொடுத்தார்.

    இந்த நிலையில் வீரர்கள் தேர்வு குறித்து முன்னாள் கேப்டனும், டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் கடுமையாக சாடியுள்ளர். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற தொடரில் இருந்து வீரர்கள் தேர்வில் தொடர்ந்து தவறுகள் நடக்கிறது. இதனால் அணிக்கு தான் பாதிப்பு ஏற்படுகிறது.

    அணி வெற்றி பெற வேண்டுமானால் வீரர்கள் தேர்வு முறை சரியாக இருக்க வேண்டும்.

    அணியின் செயல்பாட்டில் உள்ள ஓட்டைகளை அடைக்கும் வழிமுறைகளை நிர்வாகம் அறிய வேண்டும். சுமித், வார்னே இல்லாத ஆஸ்திரேலிய அணியை வெல்ல இயலவில்லை என்றால் இதுகுறித்து சிந்திக்க வேண்டும். தேர்வு குழு தனது பொறுப்பை உணர்ந்து செயல்படவில்லை.

    பணக்கார அமைப்பான பி.சி.சி.ஐ.யால் 40 பேர் கொண்ட அணியை கூட அனுப்ப முடியும். ஏராளமான வீரர்கள் மீண்டும் வந்து உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும்.

    முதலில் திருப்பி அனுப்பப்பட வேண்டிய வீரர் லோகேஷ்ராகுல். எஞ்சிய 2 டெஸ்டில் அவர் விளையாடக் கூடாது. ரஞ்சி கோப்பைக்கான கர்நாடக அணிக்கு வந்து ஆட வேண்டும்.



    எஞ்சிய 2 டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெறாவிட்டால் கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பங்களிப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

    இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார். #AUSvIND #SunilGavaskar #KLRahul
    மும்பை வீரர்களுக்கு எதிராக மிகப்பெரிய ஓரவஞ்சனை நடைபெற்றுக் கொண்டிருப்பதாக தேசிய தேர்வுக்குழு மீது கவாஸ்கர் கடுமையாக தாக்கியுள்ளார். #Gavaskar
    இந்திய தேசிய அணியில் சமீப காலமாக மும்பையைச் சேர்ந்த வீரர்களுக்கு இடம் கிடைப்பதில்லை. தேசிய தேர்வுக்குழு மிகப்பெரிய ஓரவஞ்சனை செய்கிறது என்று முன்னாள் இந்திய அணி கேப்டனும், தற்போதைய வர்ணனையாளரும் ஆன கவாஸ்கர் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில் ‘‘மும்பையைச் சேர்ந்த சித்தேஷ் லாட் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த போதிலும், இந்தியா ஏ அணியில் கூட இடம் கிடைக்கவில்லை. மும்பை வீரர்களுக்கு எதிராக மிகப்பெரிய ஓரவஞ்சனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

    ஒரு தொடரில் ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட புதுமுக வீரர்கள் மற்ற மாநிலத்தில் இருந்து தேர்வு செய்யப்படுகிறார்கள். அமோல் முசும்தார் முதல்தர கிரிக்கெட்டில் 11 ஆயிரம் ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். ஆனால் இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. அதேபோல் சித்தேஷ் லாட்டிற்கு நடக்காது என்று நம்புகிறேன்.

    ஆனால், இதுவரை இந்திய அணியில் இடம்கிடைக்கவில்லை. இது சித்தேஷ் லாட்டிற்கு மட்டுமல்ல, கிரிக்கெட் கிரிக்கெட் இதுபோன்ற ஓரவஞ்சனை மற்றும் முட்டாள் தனமான முடிவுகளால் பாதிக்கப்பட்டு வருகிறது. 2019-ம் ஆண்டாவது இது மாறுமா? நாம் பொறுத்திருந்து பார்ப்போம்’’ என்று தெரிவித்துள்ளார்.
    பெண்கள் உலகக்கோப்பை அரையிறுதியின்போது நடைபெற்ற விவகாரத்தில் மிதாலி ராஜிற்காக நான் வருந்துகிறேன் என்று கவாஸ்கர் தனது கவலையை தெரிவித்துள்ளார். #MithaliRaj
    பெண்கள் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றது. லீக் சுற்றில் இந்திய வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரையிறுதிக்கு முன்னேறினார்கள். இரண்டு போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மிதாலி ராஜ் அரையிறுதிக்கான அணியில் சேர்க்கப்படவில்லை. இந்த போட்டியில் இந்தியா தோல்வியை சந்தித்தது.

    மிதாலி ராஜ் அணியில் இடம்பெறாததற்கு கேப்டன்தான் காரணம் என்று கூறப்பட்டது. பின்னர் பயிற்சியாளர் ரமேஷ் பவார் - மிதாலி ராஜ் இடையே ஏற்பட்ட மோதல்தான் காரணம் என்று தெரியவந்தது.

    இந்நிலையில் மிதாலி ராஜிற்காக தான் வருந்துகிறேன் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில் ‘‘நான் மிதாலி ராஜிற்கான வருந்துகிறேன். அவர் சிறந்த வீராங்கனை. கடந்த 20 ஆண்டுகளாக அவர் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். உலகக்கோப்பையில் அதிக ரன்கள் குவித்தார். இரண்டு போட்டியிலும் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

    அவர் ஒரு போட்டியில் காயம் அடைந்த போதிலும், அடுத்த போட்டிக்கு தகுதி பெற்றார். இதை அப்படியே ஆண்கள் அணியுடன் ஒப்பிட்டு பார்த்தோம் என்றால், விராட் கோலி ஒரு போட்டியில் காயம் அடைந்து, அதன்பின் உடற்தகுதி பெற்று அடுத்த போட்டிக்கு தயாரானா், அவரை நீங்கள் நீக்கி விடுவீர்களா?.



    நாக்அவுட் போட்டியில் நீங்கள் சிறந்த வீரர்களை களம் இறக்க வேண்டும். அனுபவம் வாய்ந்த மிதாலி ராஜ் ஆட்டம் அணிக்கு முக்கியமானது. ரமேஷ் பவார் உடன் என்ன நிகழ்ந்தது என்பது குறித்து இங்கிருந்து கருத்து கூறுவது மிகக்கடினம். ஆனார், எந்தவொரு காரணமாக இருந்தாலும் அவரை நீக்கியதை ஏற்றுக் கொள்ள முடியாது.

    மிதாலி ராஜ் இல்லாத 11 பேர் கொண்ட அணியில் உறுதியாக இருந்ததாக கூறப்படுகிறது. இது சரியான காரணம் என்று என்னால் நினைக்க இயலவில்லை. மிதாலி ராஜ் போன்ற ஒருவரை நீக்கக்கூடாது’’  என்றார்.
    இந்திய அணி கேப்டன் விராட் கோலி 40 வயது வரை விளையாடினால் அனைத்து சாதனைகளையும் முறியடிப்பார என்ற கவாஸ்கர் தெரிவித்துள்ளார். #ViratKohli
    இந்திய அணி கேப்டன் விராட் கோலி உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்கிறார். அவர் தற்போது ஒவ்வொரு சாதனையாக முறியடித்து வருகிறார். வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் தொடரின்போது 10 ஆயிரம் ரன்னை அதிக வேகத்தில் கடந்து சாதனை படைத்தார். இந்த ஆண்டில் அவர் ஒருநாள் போட்டியில் 14 ஆட்டத்தில் விளையாடி 1,202 ரன் எடுத்துள்ளார். சராசரி 133.55 ஆகும்.

    இந்த நிலையில் விராட் கோலி 40 வயது வரை விளையாடினால் பேட்டிங்கில் அனைத்து சாதனைகளையும் முறியடிப்பார் என்று முன்னாள் கேப்டனும், டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் கூறியுள்ளார்.

    இது தொடர் பாக அவர் கூறியதாவது:-

    விராட் கோலியின் பேட்டிங் நாளுக்குநாள் மிகவும் அபாரமாக இருக்கிறது. அவரது இந்த திறமை வாய்ந்த ஆட்டத்தால் எந்த ஒரு சாதனைக்கும் உத்தரவாதம் இல்லை. அவரால் அதிக ரன், அதிக சதம் என பேட்டிங்கில் அனைத்து சாதனைகளையும் முறியடிக்க முடியும்.

    விராட் கோலியின் உடல் தகுதியும் நன்றாக இருக்கிறது. அவரால் இன்னும் 5 முதல் 7 ஆண்டுகள் இல்லாமல் 10 வருடங்களுக்கு மேல் ஆட இயலும். சச்சின் தெண்டுல்கர் 40 வயது வரை விளையாடினார். இதேபோல் கோலியும் 40 வயது வரை ஆடினால் டெஸ்ட் சாதனை, ஒருநாள் போட்டி சாதனைகள் அனைத்தையும் முறியடிக்க இயலும். கிரிக்கெட்டில் அனைத்து சாதனைகளும் அவர் பெயரில் இருக்கும்.

    இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.
    ×