search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98432"

    • எடப்பாடி பழனிசாமிக்கு நடிகர் அஜித்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    • இந்த உரையாடல் தொலைப்பேசியின் வாயிலாக நடந்துள்ளது.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் உடலநலக்குறைவால் கடந்த 24-ந் தேதி காலமானார். அஜித் தந்தையின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரையுலகினர் இரங்கல் மற்றும் ஆறுதல் கூறினர்.

    இந்த நிலையில், தந்தை மறைவுக்கு நடிகர் அஜித்குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு எடப்பாடி பழனிசாமி இன்று ஆறுதல் கூறினார். அதனை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு நடிகர் அஜித்குமார் வாழ்த்து கூறியுள்ளார். 

    • செல்வா இயக்கத்தில் வெளியான அமராவதி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானாவர் அஜித்.
    • 30 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இப்படம் வெளியாகவுள்ளது.

    1993 ஆம் ஆண்டு செல்வா இயக்கத்தில் வெளியான அமராவதி படத்தின் மூலம் தமிழ் திரையுகிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் அஜித். சோழா கிரியேஷன்ஸ் சார்பில் சோழா பொன்னுரங்கம் தயாரித்திருந்த இப்படத்தில் சங்கவி கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் கவிதா, நாசர், தலைவாசல் விஜய், சார்லி, நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.


    அமராவதி
    அமராவதி


    இந்நிலையில் 30 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அமராவதி திரைப்படம் வெளியாகவுள்ளது. அதன்படி இப்படம் அஜித் பிறந்தநாளை முன்னிட்டு வருகிற மே மாதம் டிஜிட்டலில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் மீண்டும் வெளியாகவுள்ளதால் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என்று பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

    • அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் கடந்த 24ம் தேதி அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானார்.
    • நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி நேரில் சந்தித்து அஜித்துக்கு ஆறுதல் கூறியுள்ளனர்.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் கடந்த மார்ச் 24ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். சில ஆண்டுகளாக பக்கவாத பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவுக்கு திரையுலகினர், பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். இவரது உடல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.



    தந்தையின் மறைவுக்கு பிறகு அஜித்தை நேரில் சந்தித்து விஜய் ஆறுதல் கூறினார். இந்நிலையில் அஜித்தை நேரில் சந்தித்து நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆறுதல் கூறினர். சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித்தின் வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

    • அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் நேற்று அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானார்.
    • இவரது மறைவுக்கு திரையுலகினர், பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் நேற்று அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானார். சில ஆண்டுகளாக பக்கவாத பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர், பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். இவரது உடல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.


    ஏ.வி.எம்.நிறுவனம் அறிக்கை

    இந்நிலையில், பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏ.வி.எம் நிறுவனம் அஜித் தந்தை மறைவிற்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "அஜித் சார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள். அவர் தன் தந்தையின் மறைவை சமாளிக்கும் வலிமையை பெற பிரார்த்திக்கிறோம். அஜித்தின் தந்தை ஆன்மா சாந்தியடையட்டும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.


    • நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் நேற்று அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானார்.
    • இவரது உடல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் நேற்று அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானார். சில ஆண்டுகளாக பக்கவாத பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர், பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். இவரது உடல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.


    குடும்பத்தாருடன் அஜித்

    இந்நிலையில், நடிகர் அஜித்தின் பண்பை பாராட்டி இயக்குனர் பார்த்திபன் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "தந்தையின் மறைவின் போது,நண்பர் அஜீத் உள்ளூரில் இருந்தது நல்லது.சோகத்தை புதைத்துக் கொண்டு வந்தவர்க்கு நன்றி சொன்னார்.மயானம் செல்ல தயாரானபோது காரில் அமர்ந்தவர் என்னருகில் சோழா பொன்னுரங்கம் (அமராவதி தயாரிப்பாளர்)நிற்பதை கண்டு இறங்கி வந்து நன்றி சொல்லிச் சென்ற பண்பு அவருக்கானது" என்று குறிப்பிட்டுள்ளார்.


    • நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் இன்று அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானார்.
    • இவரது உடல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் இன்று அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானார். சில ஆண்டுகளாக பக்கவாத பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர், பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். இவரது உடல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

    இந்நிலையில் அஜித் தந்தையின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நடிகர் கமல்ஹாசன் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், தம்பி அஜித்குமாரின் அப்பா திரு. சுப்பிரமணியம் மறைந்த செய்தி கேட்டு வருத்தமடைந்தேன். தந்தையை இழந்து வாடும் அஜித் குமாருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.


    • நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் இன்று அதிகாலை உயிரிழந்தார்.
    • இவரின் மறைவுக்கு திரையுலகினர், பிரபலங்கள் என பலரும் நேரிலும், சமூக வலைத்தளத்தின் வாயிலாகவும் இரங்கல் தெரிவித்தனர்.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் இன்று அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானார். சில ஆண்டுகளாக பக்கவாத பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர், பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். இவரது உடல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.



    இந்நிலையில் அஜித் தந்தையின் மறைவுக்கு சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித்தின் வீட்டிற்கு நேரில் சென்று நடிகர் விஜய் ஆறுதல் கூறினார். 

    • நடிகர் அஜித்தின் தந்தை மறைவுக்கு இயக்குனரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
    • எவ்வளவு வயசானாலும் அப்பா, அப்பா தான் என்று உருக்கமாக பகிர்ந்துக் கொண்டார்.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் இன்று அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானார். சில ஆண்டுகளாக பக்கவாத பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர், பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். இவரது உடல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.



    இந்நிலையில் அஜித் தந்தையின் மறைவுக்கு இயக்குனரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் இரங்கல் தெரிவித்தார். அவர் கூறும்போது, நடிகர் அஜித்குமாருடைய தந்தை மறைவு செய்தி கேட்டு வருத்தமடைகிறேன். எவ்வளவு வயசானாலும் அப்பா, அப்பா தான். அந்த இழப்பு ஒரு மகனுக்கு எந்த அளவுக்கு இழப்பாக இருக்கும் என்பது அனைத்து பிள்ளைகளுக்கும் தெரியும். அப்படி அந்த தந்தையை இழந்து தவித்து கொண்டிருக்கும் அஜித்துக்கு மன ஆறுதலை தரவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என்றார்.

    • அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.
    • இவரது உடல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

    நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் இன்று அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானார். இவரின் மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். இவரது இறுதி ஊர்வலம் சென்னை ஈஞ்சம்பாக்கம் வீட்டில் இருந்து பெசன்ட் நகர் மின்மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.


    அஜித் தந்தையின் இறுதி ஊர்வலம்
    அஜித் தந்தையின் இறுதி ஊர்வலம்

    தந்தையின் இறுதி ஊர்வலத்தில் நடிகர் அஜித்குமாரும், அவரது குடும்பத்தினரும் பங்கேற்றனர். தந்தை உடலை சுமந்து செல்லும் வாகனத்தை பின்தொடர்ந்து நடிகர் அஜித் குமார் சென்றார். மின்மயானத்தை சென்றடைந்த சுப்பிரமணியத்தின் உடலை அஜித் தூக்கி சென்றார். பின்னர் அவரின் உடலுக்கு அஜித்தின் குடும்பத்தினர் சார்பில் குடும்ப வழக்கப்படி இறுதி சடங்கு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சுப்பிரமணியத்தின் உடல் தகனம் செய்யப்பட்டது.

    • அஜித் குமாரின் தந்தை மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
    • அஜித்தின் தந்தை உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்ததாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    நடிகர் அஜித் குமாரின் தந்தை இன்று அதிகாலை உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவரின் உடலுக்கு திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளத்தின் வாயிலாக இரங்கல் தெரிவித்தும் வருகின்றனர்.

    இந்நிலையில் அஜித் தந்தையின் மறைவுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சமூக வலைத்தளத்தின் வாயிலாக இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், பிரபல தமிழ்த் திரைப்பட நடிகர் திரு.அஜித்குமார் அவர்களின் தந்தை திரு.பி.சுப்ரமணியம் அவர்கள் உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். தமது தந்தையை இழந்து தவிக்கும் திரு.அஜித் குமார் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

    • நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் இன்று அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானார்.
    • இறுதி சடங்குகளுக்கு ஒத்துழைப்பு தரும்படி அஜித் தரப்பில் இருந்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    கடந்த சில ஆண்டுகளாக பக்கவாத பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். இவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பிரபலங்கள் மற்றும் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் அஜித்தின் தந்தை உடலுக்கு நடிகர் சிவா, இயக்குனர் ஏ.எல்.விஜய், முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

    • நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் இன்று அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானார்.
    • இறுதி சடங்குகளுக்கு ஒத்துழைப்பு தரும்படி அஜித் தரப்பில் இருந்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    கடந்த சில ஆண்டுகளாக பக்கவாத பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். இவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பிரபலங்கள் மற்றும் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் அஜித்தின் தந்தை இறுதிச்சடங்குக்கு ஒத்துழைப்பு தரும்படி அஜித் தரப்பிலிருந்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், "எங்களது தந்தையார் திரு. பி.எஸ்.மணி(85 வயது) அவர்கள் பல நாட்களாக உடல்நலமின்றி படுக்கையில் இருந்து வந்தார். இன்று அதிகாலை தன்னுடைய தூக்கத்தில் உயிர் நீத்தார்.


    அஜித்தின் அறிக்கை
    அஜித்தின் அறிக்கை

    கடந்த நான்கு ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த எங்கள் தந்தையை அன்போடும், அக்கறையோடும் கவனித்து வந்தும், எங்கள் குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்த அனைத்து மருத்துவர்களுக்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். எங்கள் தந்தையார் சுமார் அறுபது ஆண்டு காலமாக எங்கள் தாயின் அன்போடும், அற்பணிப்போடும் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்.

    இந்த துயர நேரத்தில், பலர் எங்கள் தந்தையாரின் இறப்பு செய்தியை பற்றி விசாரிக்கவும், எங்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதற்காகவும் எங்களை தொலைபேசியிலோ, கைபேசியிலோ அழைப்பு விடுத்தோ அல்லது குறுந்தகவல் அனுப்பியோ விசாரித்து வருகின்றனர். தற்போதுள்ள சூழலில் எங்களால் உங்கள் அழைப்பை மேற்கொள்வதற்கோ அல்லது பதில் தகவல் அனுப்ப இயலாதமையை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறோம்.

    எங்கள் தந்தையாரின் இறுதி சடங்குகள் ஒரு குடும்ப நிகழ்வாகவே இருக்க கருதுகிறோம். எனவே இந்த இறப்பு தகவலை அறிந்த அனைவரும் எங்களுடைய துயரத்தையும், இழப்பையும் புரிந்துகொண்டு, குடும்பத்தினர் துக்கத்தை அனுசரிக்கவும், இறுதி சடங்குகளை தனிபட்ட முறையில் செய்யவும் ஒத்துழைக்கும்படி வேண்டிக்கொள்கிறோம். அனுப் குமார்.. அஜித் குமார்.. அனில் குமார் " என்று அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளனர்.

    ×