search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98522"

    ஷாம்பு பயன்படுத்தும்போது உச்சந்தலையில் மட்டும் பயன்படுத்த வேண்டும். சூரியனின் கடுமையான தாக்குதல், நரை, மற்றும் இதர மாசுக்களால் பாதிக்கப்படுவது உச்சந்தலை தான்.
    முடியின் இயற்கையான கருமை குறையும்போது முடியின் மேல்தோல் மெலிதாகும். இதனால் முடி சொரசொரப்பாக மாறி உடைய நேரிடும். முடியை மென்மையாக்க சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

    ஈரப்பதம் உள்ள ஷாம்புக்களை பயன்படுத்துங்கள். இதனால் முடி மென்மையாகும்.

    ஷாம்பு பயன்படுத்தும்போது உச்சந்தலையில் மட்டும் பயன்படுத்த வேண்டும். சூரியனின் கடுமையான தாக்குதல், நரை, மற்றும் இதர மாசுக்களால் பாதிக்கப்படுவது உச்சந்தலை தான்.

    மென்மையான கண்டிஷனர் பயன்படுத்துங்கள். டிரையர் பயன்படுத்தும்போது அதிகமான வெப்ப நிலையில் பயன்படுத்த வேண்டாம்.

    தலையில் ஏற்படும் பிரச்னைகளுக்கு வேப்பிலை சிறந்த தீர்வாக உள்ளது. வேப்பிலையை ஹேர்பேக்காக நாம் தலைமுடியில் அப்ளை செய்யும் பட்சத்தில் தலையில் உள்ள பொடுகு, அழுக்கு என அனைத்தையும் நீக்கி தலைமுடி உதிர்வைக் கட்டுக்குள் கொண்டுவரும். வேப்பிலைகளை கொதிக்கும் நீரில் போட்டு அது ஆறியதும், அதனை கொண்டு தலைமுடியை அலசவும். இதிலுள்ள பாக்டீரியா எதிர்ப்பு சக்தி கூந்தலில் உள்ள பேன்கள், பொடுகு, உச்சந்தலை காய்ந்து போதல், முடியுதிர்தல் மற்றும் வறண்ட கூந்தல் ஆகிய பிரச்சினைகள் குணமாகும். அது உங்களது கூந்தலை மென்மையாக்கி பளபளப்பாக்கும்.

    வேப்பிலையை நன்கு பேஸ்ட் போல் அரைத்து, அதில் சிறிது தேன் கலந்து, தலைக்கு தடவி, ஷாம்பு போட்டு குளித்தால், பொடுகு நீங்கி, கூந்தல் பட்டுப் போன்று மின்னும். இந்த முறை ஹேர் கண்டிஷனர் போன்றது.
    உறுதியான, நீளமான கூந்தலுக்கு தேவையான ஊட்டச்சத்தினை இயற்கையான பொருட்களை கொண்டு எப்படி பெறலாம் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    உங்களின் கூந்தலுக்கான ஊட்டச்சத்தினை சத்தான காய்கறிகளின் மூலமாக மட்டுமே கொடுக்க முடியும். கேரட் மற்றும் வெங்காயம் முடி உதிர்வைக் குறைத்து வளர்ச்சியை ஊக்குவிக்கும். உறுதியான கூந்தலுக்கு தேவையான ஊட்டச்சத்தினை இயற்கையான பொருட்களை கொண்டு எப்படி பெறலாம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.  

    சின்ன வெங்காயம்

    சின்ன வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். இரண்டு தேக்கரண்டி தேன் சேர்க்கவும். வெங்காய வாசனையை போக்க சிறிதளவு ரோஸ் வாட்டரை கலந்து கொள்ளலாம். இந்தக் கலவையை தலை முடியில் தடவி 40 முதல் 50 நிமிடம் வரை வைத்திருந்து கழுவவும்.

    உருளைக் கிழங்கு

    இரண்டு மூன்று உருளைக் கிழங்கினை துருவி சாறு எடுக்கவும். அதனுடன் ஒரு தேக்கரண்டி தேன், முட்டையின் மஞ்சள் கரு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கிளறவும். 30 நிமிடங்கள் தலையில் தேய்த்து ஊறவைத்துப் பின் முடியை அலசவும்.

    பூண்டு

    முடி வளர்ச்சிக்கு பூண்டுச்சாறினை முடியின் வேர்க்கால்களில் படும்விதமாக தேய்த்து குளித்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.

    கொத்தமல்லி

    புதிதாக நறுக்கப்பட்ட கொத்தமல்லி இலைகளை அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். அதை தலையில் தேய்த்து ஒரு மணி நேர ஊறவைத்துப் பின் முடியை அலசவும்.

    கேரட்


    கேரட் சிலவற்றை வேக வைத்து அரைத்து அதில் வேக வைத்த தண்ணீரைக் கலந்து தலை முடியில் தேய்க்கவும் 30 நிமிடத்திற்கு பின் முடியை அலசவும். 
    வீட்டிலே ஹோம்மேட் ஹெர்பல் ஹேர் டை செய்து கொண்டு, அதைப் பயன்படுத்தினால் எந்த வித பாதிப்பும் ஏற்படாமல் தவிர்க்கப்படும். இதைப் பற்றி விளக்கமாக பார்க்கலாம்.
    வீட்டிலே ஹோம்மேட் ஹெர்பல் ஹேர் டை செய்து கொண்டு, அதைப் பயன்படுத்தினால் எந்த வித பாதிப்பும் ஏற்படாமல் தவிர்க்கப்படும். இதைப் பற்றி விளக்கமாக பார்க்கலாம்.

    ஹோம்மேட் ஹேர் டை தயாரிப்பது எப்படி?

    * தேவையான பொருட்கள்


    மருதாணி பவுடர் - 1 கப்
    அவுரி இலை பவுடர் - 1 கப்

    செய்முறை

    முன்னாள் இரவே மருதாணி பவுடரை தண்ணீரில் கரைத்து பேஸ்டாக கலக்கி வைக்கவும். மறுநாள், எண்ணெய் இல்லாத முடியில் மருதாணி பேஸ்டை பூசி கொள்ளவும். ஒரு மணி நேரம் கழித்து வெறும் தண்ணீரில் அலசி விடுங்கள்.

    முடியை நன்கு உலர்த்திய பிறகு, அவுரி இலை பொடியை தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல செய்து, அதை உடனே தலை முடியில் பூசி விடுங்கள். மீண்டும் ஒரு மணி நேரம் ஊறவிட்டு பின்னர், முடியை வெறும் தண்ணீரில் அலசி விடுங்கள்.

    இந்த முறையில் முடிக்கோ மண்டைக்கோ எந்த பாதிப்பும் கிடையாது. 100% இயற்கையானது. ஒரு மாதம் வரை முடி கருப்பாக இருக்கும். பிறகு மீண்டும் வெள்ளையானால் மீண்டும் இதேபோல செய்து தலை முடியில் பூசிக்கொள்ளுங்கள்.

    * தேவையான பொருட்கள்

    உலர்ந்த நெல்லி - 100 கி

    செய்முறை

    உலர்ந்த நெல்லியில் கொட்டைகள் இருந்தால் நீக்கி கொள்ளவும். சிறிது சிறிதாக அறிந்து அதை இரும்பு வாணலியில் போட்டு வறுக்கவும். வறுக்க, வறுக்க நெல்லி பெரிதாகும்; கருப்பாகும். பின்னர் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு 10 நிமிடங்கள் மிதமான தீயில் வேக விடவும். நெல்லி வெந்ததும் அடுப்பை நிறுத்தி விடவும்.



    கருப்பான தண்ணீரில், இரும்பு வாணலியில் நெல்லி இரவு முழுவதும் ஊறட்டும். மறுநாள் காலை நெல்லியை மட்டும் எடுத்து மிக்ஸியில் போட்டு மையாக அரைக்கவும். இதில் ஊறவைத்த நெல்லி தண்ணீரே கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துக் கொள்ளவும்.

    சுத்தமான, இயற்கையான நெல்லி ஹேர் டை தயார். எண்ணெய் இல்லாத தலைமுடியில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்த பின், வெறும் தண்ணீரில் அலசி விடுங்கள். அவரவர் உடல்நலத்துக்கு ஏற்ப கருமை நிறம், தலை முடியில் நீடிக்கும். அவரவர் பயன்படுத்தும் ஷாம்பு மற்றும் எத்தனை முறை தலைக்கு குளிக்கிறார்கள் என்பது பொறுத்து கருமை நீடிக்கும்.

    * தேவையான பொருட்கள்

    மருதாணி பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்
    அவுரி இலை பவுடர் - 3 டேபிள் ஸ்பூன்
    நெல்லி பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
    டீ தூள் - 1 டேபிள் ஸ்பூன்
    தயிர் - 2 டேபிள் ஸ்பூன்

    செய்முறை

    ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி, டீ தூள் போட்டு நன்றாக கொதிக்க விடவும். பின் வடிகட்டி டிகாஷனை வைத்திருக்கவும். ஒரு பவுலில் மேற்சொன்ன 3 பவுடர்களையும் போட்டு நன்றாகக் கலக்கவும். இதில் தயிரை ஊற்றி கலக்கவும். பின் சிறிது சிறிதாக டீ டிகாஷனையும் கலந்து கலக்கவும். பேஸ்டாக வரும் வரை கலக்கவும்.

    பின்னர் ஒரு வெள்ளை துணி போட்டு மூடி ஒரு மணி நேரம் ஊற வைத்து விடுங்கள். அவ்வளவுதான். நேச்சுரல் ஹேர் டை தயார். எண்ணெய் இல்லாத முடியில் பூசி, 1 மணி நேரம் கழித்து மிதமான ஷாம்புவால் அலசிவிடுங்கள். ஒரு மாதம் வரை இந்த நிறம் நீடிக்கும்.
    பிடித்த நிறத்தில் தலைமுடியை மாற்றி கொள்கிறோம். ஹேர் கலரை நீங்கள் விரும்பாதபோது அதனை எப்படி நீக்குவதென்பது தெரியாமல் இருப்பவர்களுக்காகவே இந்த குறிப்புகள்.
    தலைமுடியை நாம் இஷ்டப்பட்டதை போல் எப்படி எப்படியோ அலங்கரித்து கொள்கிறோம். நமக்கு பிடித்தவாறு முடி வெட்டி கொள்கிறோம். பிடித்த நிறத்தில் தலைமுடியை மாற்றி கொள்கிறோம். பல ஷேட்களில் இருக்கும் நிறங்களை தலைமுடியில் ஏற்றும்போது கூந்தல் வலுவிழந்து போகும். ஹேர் கலரை நீங்கள் விரும்பாதபோது அதனை எப்படி நீக்குவதென்பது தெரியாமல் இருப்பவர்களுக்காகவே இந்த குறிப்புகள்.

    * ஒரு பௌலில் எலுமிச்சை சாறு மற்றும் பேக்கிங் சோடா இரண்டையும் சேர்த்து கலக்கவும். இதனை தலைமுடிக்கு தடவி 10 முதல் 15 நிமிடங்கள் வரை வைத்திருந்து தலைமுடியை அலசி விடவும். எலுமிச்சை தலைமுடியில் உள்ள செயற்கை நிறத்தை அகற்றி கூந்தலை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும். பேக்கிங் சோடா கூந்தலை வலுவலுப்பாகவும் மென்மையாகவும் வைத்திருக்கும். இந்த கலவையை தலைமுடியில் தடவி அலசியது, மீண்டும் ஷாம்பு மற்றும் கண்டிஷனர் கொண்டு தலைமுடியை பராமரிக்கவும்.

    * எப்சம் சால்ட் மற்றும் பேக்கிங் சோடா இரண்டையும் கலந்து தலைமுடியில் தடவினால், செயற்கை நிறம் நீங்கிவிடும். இந்த கலவையை 20 நிமிடங்கள் வைத்திருந்து தலைமுடியை அலசவும். பின் ஷாம்பு மற்றும் கண்டிஷனர் பயன்படுத்தவும்.

    * நீங்கள் ஹேர் கலர் செய்ததும் ஒருவேளை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், 24 மணிநேரத்திற்குள் வினிகரை பயன்படுத்தி அந்த செயற்கை நிறத்தை நீக்கிவிட முடியும். தலைமுடியில் தடவி 10 நிமிடங்கள் வைத்திருந்து அலசிவிடவும். இதுபோன்று தொடர்ச்சியாக செய்து வருவதனால் அந்த நிறத்தின் அடர்த்தி குறைய வாய்ப்பு இருக்கிறது.

    இயற்கை உணவுகள் உங்கள் சருமத்தை இளமை தோற்றத்துடனும், ஈரப்பதத்துடனும் வைத்திருக்கும். நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்களோ என்ன அருந்துகிறீர்களோ அதை பொருத்துதான் உங்கள் சருமம் பிரகாசிக்கும்.
    நம் முன்னோர்கள் இயற்கை உணவுகளையே உண்டனர் என்பதாலேயே ஆரோக்கியமாக இருந்தார்கள். பழங்கள், சாலட், முளைக்கட்டிய தானியங்கள், பருப்புகள், விதைகள், கொட்டைகள் மற்றும் தயிர் ஆகியவை இயற்கையான உணவுகள். உடலுக்கு உடனடியாக ஆற்றல் தரக்கூடியவை. இவையே நம் தினசரி உணவில் அதிகளவு இருக்க வேண்டும். கொழுப்பு மற்றும் இனிப்பு உணவுகளை தவிர்ப்பது நல்லது.

    இந்த இயற்கை உணவுகள் உங்கள் சருமத்தை இளமை தோற்றத்துடனும், ஈரப்பதத்துடனும் வைத்திருக்கும். நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்களோ என்ன அருந்துகிறீர்களோ அதை பொருத்துதான் உங்கள் சருமம் பிரகாசிக்கும். கொழுப்பு, சர்க்கரை மற்றும் இறைச்சி ஆகியவற்றை குறைத்து, பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை அதிகம் சாப்பிடலாம். சரும ஆரோக்கியத்திற்கு யோகர்ட், ஸ்கிம்டு மில்க் மற்றும் பன்னீர் ஆகியவை சிறந்தது. காய்கறிகளை எப்போது முழுமையாக வேக வைக்கக்கூடாது. கீரைகள் மற்றும் லீட்யூஸ், சூப் ஆகியவற்றை சாப்பிடலாம்.

    அந்தந்த பருவநிலை மாற்றத்தின்போது விளையும் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவது சிறந்தது. கோடை காலத்தின்போது உடலில் நீரிழப்பு ஏற்படும் என்பதால் தர்பூசணி, முலாம்பழம் மற்றும் வெள்ளரி ஆகியவற்றை சாப்பிடலாம். நீராகாரம் அதிகம் உட்கொண்டால் மட்டுமே, இரத்த ஓட்டம் சீராக இருக்கும். உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி சருமம் ஈரப்பதத்துடன் இருக்கும். உடலில் கழிவுகள் தேங்கும்போது சருமம் தன் பொலிவை இழந்துவிடும். மேலும் உப்பு சுவை குறைந்த உணவை சாப்பிட வேண்டும். அப்படியில்லாவிட்டால், சருமம் அதன் இளமை தோற்றத்தை இழந்துவிடும்.

    காலை எழுந்தவுடன் தினமும் ஒரு கிளாஸ் தண்ணீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடித்து வரலாம். இதனால் சருமம் பிரகாசமாகவும் ஈரப்பதத்துடனும் இருக்கும். குளிர்பானங்கள் குடிப்பதை குறைத்துவிட்டு, பழச்சாறுகளை அடிக்கடி குடிக்கலாம். கோடை காலத்தில் டீ, காபி குடிப்பதை தவிர்த்து லெமன் ஐஸ்டு டீ, ஜல்ஜீரா, லஸ்ஸி, மோர், தேன் சேர்க்கப்பட்ட யோகர்ட் அல்லது பழச்சாறுகளை குடிக்கலாம்.

    சரும பிரச்சனைகளை உடனடியாக சரிசெய்திட வேண்டும். ஆர்கானிக் உணவுகளை சாப்பிட்டால் தான் சருமம் ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருக்கும். அழகு பராமரிப்பின் ஆயுர்வேதத்திற்கு முக்கிய பங்கு உண்டு. நம் பாரம்பரியத்தை பின்பற்றினாலே போதும். ஆரோக்கியமாக வாழலாம்.
    வெயில் காலத்தில் எண்ணெய் வைப்பதற்கான சில ஆயுர்வேத குறிப்புகளை காண்போம். இதன் மூலம் மயிர்க்கால்கள் தூண்டப்பட்டு தலைமுடி “பிசுபிசுப்பின்றி” காணப்படுவதுடன் கூந்தலின் வேருக்கு தேவையான ஊட்டச்சத்தும் கிடைக்கும்.
    வெயில் காலத்தில் கூந்தல் பிசுபிசுப்பாக இருக்கும். வெயிலாகவும் காற்றில் ஈரப்பதம் நிறைந்தும் இருக்கும் காலங்களில் தலைக்கு எண்ணெய் வைத்தால் அது கூந்தலை மேலும் பிசுபிசுப்பாகவும் தொட்டால் ஒட்டும் அளவுக்கு ஒரு தோற்றத்தையும் ஏற்படுத்திவிடும்! ஆனால் அதற்காக நாம் வெயில் காலத்தில் தலையில் எண்ணெய் வைக்காமல் இருக்க வேண்டுமா?

    “அழகான கூந்தலை ஒருவர் பெற வேண்டுமென்றால் கூந்தலுக்கு ரெகுலராக எண்ணெய் வைக்க வேண்டும் கூடவே சத்துணவுகளை டயட்டில் சேர்க்க வேண்டும். வலுவான பளபளப்பான கூந்தல், ஒருவரின் உடல் போஷாக்காகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதை குறிக்கும் ” பழமையான ஆயுர்வேத அறிவியலின்படி, இயற்கையான பொருட்கள் அடங்கிய தைலங்களை கொண்டு கூந்தலுக்கு தொடர்ச்சியாக எண்ணெய் வைப்பதே உங்களது கூந்தலின் தரத்தை உயர்த்துவதற்கான ஒரே வழி. அத்தகைய கூந்தல் தைலங்கள் முடியை வேரிலிருந்து உறுதியாக்கி பளபளப்பாக்குகின்றன !

    வெயில் காலத்தில் எண்ணெய் வைப்பதற்கான சில ஆயுர்வேத டிப்ஸ்களை இப்போது நாம் காண்போம். இதன் மூலம் உங்கள் மயிர்க்கால்கள் தூண்டப்பட்டு தலைமுடி “பிசுபிசுப்பின்றி” காணப்படுவதுடன் கூந்தலின் வேருக்கு தேவையான ஊட்டச்சத்தினையும் அது வழங்குகிறது.

    * கூந்தலுக்கு குறைவான அளவு எண்ணெய் பூசுவதால் வெயில் காலத்தில் சூரியனின் கடுமையான அல்ட்ரா-வயலெட் கதிர்களிடமிருந்து கூந்தலை காக்கலாம். எனவே, வெயில் காலத்தில் தலைக்கு எண்ணெய் வைப்பதை முழுவதும் தவிர்க்க வேண்டாம். சிறிது பூசிக் கொள்ளலாம்.

    * தலைக்கு எண்ணெய் தேய்த்து இரவு முழுவதும் அதனை ஊறவிடுவதால் ஷாம்பூ தேய்த்தாலும் கூட உங்களது தலை சருமம் எண்ணெய் பிசுபிசுப்புடன் காணப்படும். இதனை நீக்க அதிகளவு ஷாம்பூ பயன்படுத்த வேண்டியிருக்கும். இதனால் கூந்தல் வேர்களில் கெமிக்கல்கள் படியக்கூடும். அதற்கு பதிலாக கூந்தலில் சிறிது தைலம் தடவி இரண்டு மணி நேரங்களுக்குள் தலைக்கு குளித்துவிடவும். ஆயுர்வேதத்தில் கூந்தலில் எண்ணெய் வைத்து இரவு முழுக்க ஊற விடுவது பற்றி சிறப்பாக கூறப்படவில்லை.

    * மருத்துவ குணங்கள் நிறைந்த எண்ணெயை கூந்தலில் பூசுவது அவசியமாகும். இதனால் தலையில் பூஞ்சை வளர்ச்சி தவிர்க்கப்பட்டு தலை சருமம் ஆரோக்கியமாகிறது. ஆனால் சரியான முறையில் பூசுவதும் பின்னர் வாஷ் செய்வதும் அவசியமாகும். மேலும் அது மயிற்கால்களுக்கிடையே உள்ள இடைவெளியை நிரப்பி தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் மயிற்கால்களுக்குள் ஊடுறுவாமல் காக்கிறது. அதிக சக்தியுடைய ஆன்டி-டான்ட்ரஃப் ஷாம்பூக்களை பயன்படுத்துவதால் கூந்தல் பாதிக்கப்படுவதையும் அது தடுக்கிறது. 
    தலைமுடி ஆரோக்கியத்திற்கு, வேம்புவில் இருக்கும் கொழுப்பு அமிலங்கள் மிகவும் பயனுடையதாக உள்ளன. முடி கொட்டும் பிரச்சனைகளுக்கும், வழுக்கை பிரச்சனைகளுக்கும் வேப்பம் சரியான சிகிச்சை அளிக்க கூடியது.
    வேப்ப மரங்கள், மருத்துவ குணங்கள் கொண்டவை. "வேப்ப எண்ணெய் பொடுகுப் பிரச்சனையை குணப்படுத்தும். அந்தக் காலத்தில், வேப்பங் குச்சிகளை பல் துலக்கப் பயன்படுத்தினர். வேப்ப மரத்தின் இலைகள், பழங்கள், ஆகியவை காய்ச்சல், நீரிழிவு நோய்க்கு பயன்படுத்தலாம். மேலும், வலி நிவாரணியாகவும் செயல்படுகிறது. ஆயூர்வேதத்தின்படி, வேப்பம், சீகைக்காய், நெல்லி, ஆகியவை தலைமுடி சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்க கூடியவை.
     
    தலைமுடி ஆரோக்கியத்திற்கு, வேம்புவில் இருக்கும் கொழுப்பு அமிலங்கள் மிகவும் பயனுடையதாக உள்ளன. முடி கொட்டும் பிரச்சனைகளுக்கும், வழுக்கை பிரச்சனைகளுக்கும் வேப்பம் சரியான சிகிச்சை அளிக்க கூடியது ஆகும். தலைமுடி சரும பிரச்சனைகளால், முடி வேரிலும் பாதிப்பு அடையும். வேப்ப நீர் உபயோகித்து தலை அலசுவதினால், சுத்தம் ஆகும். முடி வளர்ச்சிக்கும் வேம்பு பயன்படும்.

    வேப்ப எண்ணெயை தலைமுடிக்குப் பயன்படுத்துவதனால், தலைப் பகுதியில் உள்ள இரத்த ஓட்டம் சீராக அமைந்து முடி வளர்ச்சிக்கும் உதவியாக அமையும். வேப்ப எண்ணெயுடன், தேங்காய் எண்ணெய் அல்லது ஆலீவ் எண்ணெய் கலந்து பயன்படுத்தினால், இன்னும் ஆரோக்கியமானது. வேப்ப பொடியுடன், நீர் சேர்த்து கலவையான பின்பு, அதனை தலையில் தேய்த்துவிட்டு, 30 நிமிடங்களுக்கு பிறகு கழுவினால், முடி வளர்ச்சி பெருகும்.

    மால்ஸ்சேசியா என்ற பூஞ்சையல் ஏற்படும் பொடுகு பிரச்சனையால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். பொடுகு, தலையில் இருக்கும் பிசுப்பிசுப்பான எண்ணெய் தேகத்தில் இருக்கும். பொடுகு பிரச்சனைகளால் அரிப்பு ஏற்படும்.

    வேப்ப எண்ணெய் உபயோகித்து, பொடுகுப் பிரச்சனையை போக்கலாம். தேங்காய் எண்ணெயுடன் வேப்ப இலைகள் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். அதன் பின், சில எலுமிச்சை சாறு துளிகள் சேர்க்க வேண்டும். இந்தக் கலவையை தலைமுடியில் தேய்த்து, இரவு முழுவதும் ஊறவிட்டு, காலையில் கழுவ வேண்டும். இன்னொரு முறையாக, வேப்ப பொடி மற்றும் இலை சேர்த்த கலவையை பயன்படுத்தி வந்தால், பொடுகு நீங்கும். 
    முடி கொட்டுவதற்கு முக்கியமான காரணம் போதுமான சத்தில்லாத உணவுப்பழக்கம் மற்றும் நமது பழக்கவழக்கங்களும் தான். இதற்கான தீர்வை அறிந்து கொள்ளலாம்.
    பள்ளிக் குழந்தை முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் தலைமுடி உதிர்வு பிரச்சனை இருக்கிறது. உடல் உஷ்ணத்தால் முடிஉதிர்வு மட்டுமல்லாமல், முடி வறட்சி, பொடுகு, புண்கள், வியர்வைத் திட்டுகள் போன்ற பாதிப்புகளும் ஏற்படுகின்றன.

    பெண்கள் தலைக்குக் குளித்ததும் ஈரம் காய்வதற்குள் தலைமுடியைப் பின்னிக்கொண்டு ஈரத்துடன் இருப்பதும் முடி உதிர்வுக்குக் காரணமாகிறது. நாம் பயன்படுத்தும் சீப்புக்கும் இதில் பெரும்பங்கு உண்டு.

    பொதுவாக பிளாஸ்டிக் சீப்பையே பெரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர்.பிளாஸ்டிக் சீப்பால் தலையில் அழுத்தம் கொடுக்கும்போது மயிர்க்கால்கள் வறண்டு, உஷ்ணமாகி முடி உதிர்வு ஏற்படுகிறது. மன உளைச்சல், மனச்சோர்வு, அதிக நேரம் கணினியில் வேலைசெய்வதால் உண்டாகும் வெப்பம் போன்றவையும் முடி உதிர்வை ஏற்படுத்தும்.'

    இன்றைக்குத் தரமில்லாத உணவுகளும், ரசாயன நச்சுகள் கலந்த உணவுகளின் பயன்பாடும் அதிகரித்துள்ளது. அந்த உணவுகளில் போதுமான அளவு இரும்புச்சத்து, வைட்டமின்  சத்துகள் இல்லாததும் முடி உதிர்வுக்கு வழிவகுக்கிறது. இதுதவிர, தைராய்டு போன்ற ஹார்மோன் குறைபாடுகள், தைராய்டு மற்றும் கருப்பை பிரச்சனைகளுக்கு உட்கொள்ளும் மாத்திரைகளும் இதற்குக் காரணமாகிறது.

    ஆனாலும் முடி உதிர்வைத் தடுக்க எளிய வழிகள் உள்ளன.

    ரசாயனக் கலப்பில்லாத உணவுகள் உட்கொள்வது உடலில் சத்துகள் பற்றாக்குறையைச் சீராக்குவதுடன் ஹார்மோன் சுரப்பையும் சீராக்கும். உணவில் இந்துப்பு பயன்படுத்துவதால் ஹார்மோன் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், தைராய்டு குறைபாடுகள் சீராகும். துவர்ப்புச் சுவையுள்ள உணவுகளை வாரத்துக்கு நான்கு முறை உட்கொண்டால் கருப்பை ஆரோக்கியமடைவதுடன், முடி உதிர்வும் குறையும்.

    யோகா, தியானம் போன்றவை மனஅழுத்தத்தைக் குறைத்து, உடல் உஷ்ணத்தைக் கட்டுப்படுத்தும். தினந்தோறும் பச்சைக் காய்கறிகள், பழங்களைக் கட்டாயம் எடுத்துக் கொள்ளவேண்டும். செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயை தலைக்குத் தேய்ப்பது, வாரம் ஒருமுறை செக்கில் ஆட்டிய நல்லெண்ணெயை உடல் முழுவதும் தேய்த்துக் குளிப்பது அவசியம்.

    காலையில் இளஞ்சூடான நீரில் குளிப்பதால் உடல் உஷ்ணம் கட்டுப்படுவதுடன் மயிர்க்கால்களுக்குத் தேவையான சத்துகளும் எளிதாகக் கிடைக்கும். இதனால் முடி உதிர்வையும் பெருமளவில் கட்டுப்படுத்தலாம். புரதச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வதால் உடலுக்குத் தேவையான அமினோ அமிலம் உற்பத்தியாகி முடி உதிர்தல் குறையும்.

    தலைமுடிக்கு ஷாம்பு, கண்டிஷனர் போடுவதற்குப் பதிலாக கற்றாழை, செம்பருத்தி, நெல்லிக்காய் போன்றவற்றைக் கொண்டு தயாரித்த சீயக்காயைப் பயன்படுத்துவது நல்லது. தலைக்கு ரசாயனங்கள் நிறைந்த வர்ணங்கள் பூசுவதைத் தவிர்க்கவேண்டும். `ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங்' எனப்படும் முடி அமைப்பை மாற்றும் பல நவீன சிகிச்சைகள் முடி உதிர்வுக்கு காரணமாக அமைகிறது என்பதால், அவற்றைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

    எண்ணெய்ப் பதார்த்தங்களை உண்ண விரும்புபவர்கள் செக்கில் ஆட்டிய எண்ணெயில் தயாரித்த உணவுகளை உண்பது சிறந்தது. கடைகளில் கிடைக்கும்  உணவுகளைத் தவிர்ப்பதும் அவசியம். இத்தகைய பழக்கவழக்கங்களை தொடர்ந்து கடைப்பிடித்தால் முடி உதிர்வைக் கட்டுப்படுத்துவதுடன் உடல் அழகை அதிகரிக்கலாம்.
    கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த வழிமுறைகளை பின்பற்றி வந்தால் முடி உதிர்வது குறைந்து முடி அடர்த்தியாகவும், ஆரோக்கியமாகவும் நல்ல பளபளப்பாகவும் மாறும்.
    வாரத்திற்கு இரண்டு முறை தலைக்கு பாதாம், ஆலிவ் அல்லது தேங்காய் எண்ணெய்களைக் கொண்டு நன்கு தலைக்கு மசாஜ் செய்து, ஊற வைத்து குளிப்பதுதான். இதனால் முடிக்கு தேவையான சத்துக்கள் கிடைத்து, முடி நன்கு ஆரோக்கியமாக இருக்கும்.

    தேங்காய் பால், முடியின் வளர்ச்சியை அதிகரிப்பதோடு, முடியில் ஏற்படும் வறட்சியை தடுக்கும். எனவே தேங்காய் பாலை தலைக்கு தடவி ஊற வைத்து குளிக்க வேண்டும். குறிப்பாக இந்த முறையால் முடி நன்கு மென்மையாகும்.

    முடி வலிமையோடு வளர வேண்டுமெனில், கற்றாழை ஜெல்லைக் கொண்டு ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். அதிலும் இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால், முடி உதிர்தல் குறைந்து, ஸ்கால்ப்பில் ஏற்படும் பிரச்சனையை தடுக்கலாம்.

    முடி பராமரிப்பில் முடிக்கு புரோட்டீன் சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம். முடி நன்கு வலுவோடும், அடர்த்தியாகவும் வளர வேண்டுமெனில், இந்த புரோட்டீன் சிகிச்சையை வாரத்திற்கு 3 அல்லது 4 முறை மேற்கொள்ள வேண்டும். அதற்கு செய்ய வேண்டியதெல்லாம், முட்டை உடைத்து பவுலில் ஊற்றி நன்கு அடித்து, ஈரப்பதமுள்ள முடியில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் முடியை அலச வேண்டும்.

    4 ஸ்பூன் வெந்தயத்தை நீரில் 8-10 மணி நேரம் ஊற வைத்து, அரைத்து ஸ்கால்ப்பில் தடவி ஊற வைத்து குளித்தால், முடி உதிர்வது குறைவது மட்டுமின்றி, முடியின் வளர்ச்சியும் அதிகரித்து, பொடுகுத் தொல்லையும் நீங்கும்.

    அவகேடோ மற்றும் வாழைப்பழத்தை நன்கு மசித்து, ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து, 1/2 மணிநேரம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் அலசினால், முடி ஆரோக்கியமாகவும், அடர்த்தியாகவும் வளரும்.

    ஸ்கால்ப்பில் அதிகப்படியான எண்ணெய் மற்றும் பொடுகு இருந்தால், அதனை போக்குவதற்கு, ஆரஞ்சு பழத்தின் தோலை அரைத்து பேஸ்ட் செய்து, ஸ்கால்ப் மற்றும் முடியில் தடவி ஊற வைத்து, குளிக்க வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால், நல்ல பலனைப் பெறலாம். 
    அழகான, நீண்ட கூந்தலை விரும்பும் பெண்கள் சில எளியவழிமுறைகளை தொடர்ந்து பின்பற்றி வந்தால் நல்ல பலனை காணலாம்.
    1. சாதம் வடித்த நீருடன் (வடிகஞ்சி) சிகைக்காய் பவுடரைக் கலந்து தேய்து வாரம் இருமுறை குளித்துவர, முடி அடர்த்தியாக வளரும்.

    2. ஆலிவ் எண்ணெய் சிறிது சூடாக்கி, தினசரி தேய்த்து 6 மணி நேரம் கழித்து குளித்துவிடவும். முடி பளபளப்பாகவும் அடர்த்தியாகவும் வளரும்.

    3. கூந்தல் வளர்ச்சிக்கு உடல் போஷாக்கு மிகமிக முக்கியம். விதவிதமான கூந்தல் தைலங்களை உபயோகிப்பதைவிட சத்தான ஆகாரங்கள் கூந்தல் வளர்ச்சிக்கு மிகவும் ஏற்றது.

    4. கறிவேப்பிலை உணவில் தாராளமாய் சேர்த்துக்கொள்ளுங்கள் தலைமுடி செழிப்பாய் வளரும்.

    5. சப்பாத்திக் கள்ளிப் பூவை சேகரித்து விழுதாய் அரைத்து தேங்காய் எண்ணெயிலிட்டுக் காய்ச்சி உபயோகித்து வர முடி அடர்த்தியாய் வளரும். முடி கொட்டுதல் நீங்கும்.

    6. செம்பருத்திப்பூவை கசக்கிச் சாறு எடுத்து முடி உதிர்ந்து சொட்டையாகியுள்ள இடத்தில் தேய்த்துவர முடி வளர ஆரம்பிக்கும்.

    7. ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயில் மூன்று ஸ்பூன் தேயிலையை கலந்து சூடாக்கி, தைலப் பதத்தில் இறக்கிவிடவும்,. இதனை தினசரி பயன்படுத்திட முடி கருமையாய் செழித்து வளரும்.

    8. வேப்பம்பூவை அடுப்பில் சிறிது வதக்கி, கசக்கி இளஞ்சூட்டுடன் உச்சந்தலையில் தேய்த்துவர முடி தாராளமாய் வளரும்.

    9. மருதாணி இலையை தேங்காய் எண்ணெயிலிட்டு காய்ச்சி வடிகட்டி வைத்துகொள்ளுங்கள். இதனை தினசரி தலைக்குத் தடவிவர செம்பட்டை மாறி முடி கருமையாகும்.

    10. வெந்தயத்தை தண்ணீர்விட்டு விழுதாய் அரைத்து தலையில் தேய்த்து, அரைமணிநேரம் வைத்திருந்து குளித்துவிடுங்கள். அடிக்கடி பயன்படுத்திவர, முடி வளரும், முடி கொட்டுதல் நீங்கும்.

    11. பாதாம் எண்ணெய்யினால் தினசரி தலையில் வேர்க்காலில் (scalp) குறைந்தது 15 நிமிடங்கள் மசாஜ் செய்துவர முடி வளர்ச்சி அதிகமாகும்.

    14. பச்சைக் காய்கறிகளை நிறைய சாப்பிடுவதும் பால், பழங்கள், முளைக்கட்டிய தானியங்கள், வெண்ணெய், கோதுமை உணவுகள், சோயாபீன்ஸ், பருப்பு வகைகளை நிறைய உணவாகக் கொள்வதும் முடியை நன்கு வளர்த்திட ஏதுவாகும்.

    15. தலைமுடியை நெல்லிக்காய் பொடி அல்லது சிகைக்காய் கொண்டு மசாஜ் செய்து அலசிவாருங்கள். முடி வளர்ச்சி உண்டாகும்.

    16. அடிக்கடி ஆயில் மசாஜ், முடியின் வேர்க்காலுக்கு (scalp) செய்து வாருங்கள்.

    17. உடம்பில் மலச்சிக்கல் உண்டானால், உடல் உஷ்ணம் அதிகமாகி, உடம்பில் பித்தம் அதிகரித்து, தலைமுடி கொட்ட ஆரம்பித்துவிடும். எனவே மலசிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.

    18. தினசரி செய்துவரும் எளிய உடற்பயிற்சியும் தலைமுடி வளர துணை செய்யும்.

    19. கீரைசூப், காய்கறி சூப், கேரட் சாறு இவைகளை அடிக்கடி சாப்பிடுவர தலைமுடி நன்கு வளரும்.

    20. தேங்காய் எண்ணெய்யுடன் சிறிது எலுமிச்சைச்சாறு கலந்து தலையில் மசாஜ் செய்துவர, முடி நன்கு வளரும்.
    பெண்கள் அதிகளவு சந்திக்கும் ஓர் பிரச்சனை தான் தலைமுடி உதிர்வது. கோடையில் தலைமுடி உதிர்வதற்கான காரணங்களையும் அதற்கான தீர்வையும் காண்போம்.
    தலைமுடி உதிர்வதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. அதில் பரம்பரை முதுமை, காயங்கள், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் போன்றவை குறிப்பிடத்தக்கவை. சில சமயங்களில் காலநிலை மாறுதல்களாலும் தலைமுடி உதிர்வது என்பது அதிகமாக இருக்கும். இதற்கு வேறு சில காரணங்களும் உள்ளன. இப்போது கோடையில் தலைமுடி உதிர்வதற்கான காரணங்களையும் அதற்கான தீர்வையும் காண்போம்.

    கோடையில் முடி எப்படி அதிகம் உதிருமோ, அதேபோல முடியின் வளர்ச்சியும் அதிகமாக இருக்கும். மற்ற காலங்களை விட கோடையில் உடலில் இரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும். இதற்கு வெப்பமான காலநிலையில் உடலின் வெப்பம் அதிகமாக இருக்கும். இதனால் உடலில் இரத்த ஓட்டமும் அதிகமாக இருக்கும். ஆகவே இக்காலத்தில் முடி வளர்வதற்கு தேவையான பராமரிப்புகளை மேற்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

    கோடையில் தலைமுடி உதிர்வதற்கு முக்கிய காரணம் வியர்வை. கோடையில் அதிகம் வியர்ப்பதால் முடியின் கால்கள் வலிமையின்றி இருக்கும். இந்த சமயத்தில் சீப்பு கொண்டு அளவுக்கு அதிகமாக சீவினால், தலைமுடியை வேரோடு கையில் பெறவேண்டியது தான். கோடையில் தினமும் தலைக்கு குளிப்பதனால் தலையில் வியர்வையினால் சேர்ந்த அழுக்குகள் முழுமையாக வெளியேற்றப்படும்.

    ஆனால் தினமும் தலைக்கு ஷாம்பு போடாதீர்கள் இல்லாவிட்டால் தலைமுடி அதிகம் உதிர்வதோடு, ஸ்கால்ப்பில் உள்ள இயற்கை எண்ணெய்களும் நீங்கிவிடும். முக்கியமாக கோடையில் சூரியக்கதிர்கள் நேரடியாக தலைமுடியைத் தாக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு வெளியே செல்லும் போது தலைக்கு ஏதேனும் துணியை சுற்றிக்கொண்டோ அல்லது தொப்பி அணிந்து கொண்டோ, குடைபிடித்துக்கொண்டோ செல்லலாம்.

    கூந்தலின் வளர்ச்சி என்பது உங்கள் ஆரோக்கியத்துடன் நேரடியாகத் தொடர்புடையது. இன்று கூந்தல் பற்றிய சந்தேகங்களையும் அதற்கான தீர்வையும் பார்க்கலாம்.
    அடிக்கடி ஷாம்பு குளியல் எடுப்பது கூந்தலை பாதிக்குமா?

    நிச்சயம் இல்லை. இன்னும் சொல்லப் போனால் அடிக்கடி ஷாம்பு குளியல் எடுப்பதன் மூலம் கூந்தலில் உள்ள அழுக்குகளும் தூசும் நீங்கி, மண்டைப் பகுதி சுத்தமாகும். ஆனால், ஷாம்பு குளியல் எடுக்கும் போது அது முற்றிலும் நீங்குமாறு நிறைய தண்ணீர் விட்டு அலச வேண்டும். ஷாம்புவின் மிச்சம் இருந்தால் அது கூந்தலை பாதிக்கும்.

    அடிக்கடி எண்ணெய் மசாஜ் செய்வதன் மூலம் கூந்தல் வளருமா?

    எண்ணெய் உபயோகத்துக்கும் கூந்தல் வளர்ச்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எண்ணெய் என்பது கூந்தலுக்கு ஊட்டம் அளிப்பதில்லை. வளர்ச்சிக்கும் உதவுவதில்லை. அது கூந்தலை கண்டிஷன் செய்கிறது. கூந்தலுக்குத் தற்காலிகமாக ஒரு வழுவழுப்புத் தன்மையைக் கொடுக்கிறது. எண்ணெய் மசாஜ் செய்கிற போது ஒருவித ஓய்வான மனநிலை கிடைக்கும். மண்டைப் பகுதியானது எண்ணெயை உள்ளே உறிஞ்சிக் கொள்வதில்லை. எண்ணெய் உபயோகிப்பது என்பது வெளிப்புறக் கூந்தலுக்கானது மட்டுமே.

    அடிக்கடி ஹேர் கட் செய்து கொண்டால் கூந்தல் வளர்ச்சி அதிகரிக்குமா?


    கூந்தலை வெட்டினால் அது அடர்த்தியாகவும் அதிகமாகவும் வளரும் என்பது தவறான நம்பிக்கை. ஹேர் கட் என்பது கூந்தலுக்கு ஒரு அழகிய தோற்றத்தைத் தரும். முறையாக ஹேர் கட் செய்வதன் மூலம் கூந்தல் நுனிகள் வெடிப்பதைத் தடுக்கலாம். மற்றபடி கூந்தல் வளர்ச்சி என்பது மண்டைப் பகுதியின் உள்ளிருந்து வருவது.

    கூந்தல் வளர்ச்சிக்கும் உணவுக்கும் தொடர்புண்டா?

    காஸ்ட்லியான எண்ணெய் மற்றும் ஷாம்பு உபயோகிப்பதன் மூலம்தான் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க முடியும்... மற்றபடி உணவுக்கும் அதற்கும் தொடர்பில்லை என்பது பலரது எண்ணம். கூந்தலின் வளர்ச்சி என்பது உங்கள் ஆரோக்கியத்துடன் நேரடியாகத் தொடர்புடையது. எனவே, உங்கள் உணவுக்கு அதில் மிகப் பெரிய பங்குண்டு. சரிவிகித, சத்தான உணவு உண்டால் நிச்சயம் உங்கள் கூந்தலும் ஆரோக்கியமாக, அழகாக காட்சியளிக்கும். காய்கறிகள், பழங்கள், புரதம் நிறைந்த உணவுகள், நிறைய தண்ணீர் போன்றவற்றை உணவுப் பழக்கத்தில் முறைப்படுத்திக் கொண்டால் கூந்தல் ஆரோக்கியம் கூடும்.

    கூந்தல் வறட்சியும் பொடுகுப் பிரச்சனையும் ஒன்றுதானா?

    இல்லை. இரண்டும் வேறு வேறு பிரச்னைகள். இரண்டிலுமே வறண்ட செதில் போன்ற பகுதிகள் உதிர்வது பொதுவான அறிகுறியாகக் காணப்பட்டாலும், இரண்டும் ஒன்றல்ல. இரண்டுக்கும் வேறு வேறு சிகிச்சைகள் தேவைப்படும். தரமான ஷாம்பு மற்றும் கண்டிஷனர் உபயோகிப்பதன் மூலம் வறண்ட கூந்தல் பிரச்சனையை சரி செய்யலாம். அதுவே பொடுகு பாதித்த கூந்தலில் கண்டிஷனர் உபயோகித்தால் அது பொடுகை இன்னும் தீவிரப்படுத்தும்.
    ×