என் மலர்
நீங்கள் தேடியது "sobitha"
- ’பொன்னியின் செல்வன் -2’ திரைப்படம் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
- இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியான படம் பொன்னியின் செல்வன்-1. இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று சில விருதுகளையும் குவித்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

பொன்னியின் செல்வன் படக்குழு
இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படம் தென்னிந்திய சினிமாவில் முதல்முறையாக 4DX தொழில்நுட்பத்தில் வெளியாகவுள்ள திரைப்படமாகும். இந்தப் படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. முதல் பாகத்தைப் போல இந்தப் பாகத்தின் புரொமோஷனுக்கும் படக்குழுவினர் இந்தியா முழுவதும் செல்ல இருக்கின்றனர்.

பொன்னியின் செல்வன் படக்குழு
பொன்னியின் செல்வன் படத்தின் புரொமோஷனுக்காக படக்குழு நேற்று முன்தினம் கோயம்பத்தூருக்கு சென்றிருந்தனர். அதன்பின்னர் நேற்று சென்னையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டனர். இந்நிலையில் பொன்னியின் செல்வன் படக்குழு இன்று இந்தியாவின் தலைநகரான டெல்லிக்கு படையெடுத்துள்ளது. அப்போது விமானத்தின் முன்பு கார்த்தி, ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம், திரிஷா, சோபிதா மற்றும் ஜெயம் ரவி எடுத்துக் கொண்ட புகைப்படத்தை படக்குழு பகிர்ந்துள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.
Majestic and stylish! Embodying the spirit of the Cholas in the 21st century.
— Lyca Productions (@LycaProductions) April 18, 2023
Here we come Delhi. Get ready! #CholaTour#CholasAreBack#PS2 #PonniyinSelvan2 #ManiRatnam @arrahman @madrastalkies_ @LycaProductions @RedGiantMovies_ @Tipsofficial @tipsmusicsouth @IMAX… pic.twitter.com/vLD6861V2V
- ’பொன்னியின் செல்வன் -2’ திரைப்படம் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
- இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்-2 திரைப்படம் வருகிற 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. முதல் பாகத்தின் வரவேற்பால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பொன்னியின் செல்வன் படக்குழு
மேலு இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இப்படம் தென்னிந்திய சினிமாவில் முதல்முறையாக 4DX தொழில்நுட்பத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்தப் படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. பொன்னியின் செல்வன் படக்குழு நேற்று சென்னையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் பொழுது தஞ்சாவூருக்கு படக்குழு செல்லாதது தொடர்பாக கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு கார்த்தி அளித்த பதில், "பொன்னியின் செல்வன்-1 படத்தின் டீசர் லாஞ்ச் தஞ்சாவூரில்தான் வெளியிட திட்டமிட்டிருந்தோம். ஆனால் கொரொனா மூன்றாவது அலை ஆரம்பித்ததால் அங்கு நடத்த முடியவில்லை. மேலும் புரோமோஷனுக்கும் செல்ல முடியவில்லை. பொன்னியின் செல்வன் 2 புரோமோஷனுக்கு நிச்சயம் நாங்கள் தஞ்சாவூருக்கு செல்வோம். அந்தத் திட்டம் எங்களிடம் இருக்கிறது" என்றார்.
- அன்னபூர்ணா ஸ்டுடியோவில் 8 மணிநேர திருமண விழா நடைபெறவுள்ளது.
- சடங்கில் நலங்கு வைத்து மஞ்சள் தேய்த்து சோபிதா துலிபாலா குளித்த புகைப்படங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கும் நாகார்ஜுனாவின் மூத்த மகன் நாக சைதன்யாவுக்கு நடிகை சோபிதா துலிபாலாவுடன் திருமணம் நடக்க உள்ளது. திருமணம் அடுத்த மாதம் 4-ஆம் தேதி நடைபெற உள்ளது. ஹைதராபாத்தில் நாகர்ஜூனாவுக்கு சொந்தமான அன்னபூர்ணா ஸ்டுடியோவில் 8 மணிநேர திருமண விழா நடைபெறவுள்ளது.

இந்நிலையில் தற்போது திருமணத்துக்கு முந்தைய வைபவங்கள் பாரம்பரிய முறைப்படி கோலாகலமாக நடந்து வருகிறது. அதன்படி வட இந்தியாவில் மணமகள் வீட்டில் நடக்கும் திருமணத்துக்கு முந்தைய வைபவமான ஹல்தி சடங்கு நடைபெற்றுள்ளது.

அதன் புகைப்படங்களை சோபிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த மங்களாசாசனம் எனும் நலங்கு சடங்கை அப்பா மற்றும் அம்மா இணைந்து சோபிதா துலிபாலாவுக்கு நடத்தியுள்ளனர். சடங்கில் நலங்கு வைத்து மஞ்சள் தேய்த்து சோபிதா துலிபாலா குளித்த புகைப்படங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.