என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sona"

    • ஒரு வருடத்திற்கு முன்பு என் படத்தின் படப்பிடிப்பை நிறுத்தி என்னை ஒரு மானேஜர் ஏமாற்றி விட்டார்.
    • வேறு வழியில்லாமல் பெப்சி யூனியனில் வந்து அமர்ந்து உள்ளேன்.

    நடிகை சோனா தனது வாழ்க்கை வரலாற்றை 'ஸ்மோக்' என்ற பெயரில் தொடராக எடுத்து வருகிறார்.

    படப்பிடிப்பின் போது பெப்சி தொழிலாளர்களுக்கும், சோனாவுக்கும் பிரச்சனை ஏற்பட்டு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி பெப்சி யூனியனில் புகார் அளித்திருப்பதாக நடிகை சோனா சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் சோனா வடபழனியில் உள்ள பெப்சி அலுவலக வளாகத்தில் திடீரென தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்.

    இது பற்றி அவர் கூறுகையில், வேறு வழியில்லாமல் பெப்சி முன்னால் வந்து உட்கார்ந்திருக்கிறேன். ஒரு வருடத்திற்கு முன்பு என் படத்தின் படப்பிடிப்பை நிறுத்தி என்னை ஒரு மானேஜர் ஏமாற்றி விட்டார். அதனால் நானே படத்தை தொடங்கி விடலாம் என்று பார்த்தேன். முடியவில்லை. பெப்சிக்கு வந்தேன். மாற்றி மாற்றி இங்கும் அங்கும் அலைய விட்டார்கள். என்னை ஏமாற்றிய சங்கர் என்பவர் எல்லா டெக்னீசியன்களுக்கும் அட்ரசை கொடுத்து வீட்டுக்கு அனுப்புறது. இரவு வந்து கதவ தட்டுறது, மிரட்டுவது என தொடர்ந்து நடத்தி கொண்டிருந்தார்.

    இதை எல்லாம் தாண்டி படத்தை ரிலீஸ் பண்ணலாம் என்று நினைக்கும் போது ஹார்ட் டிஸ்க்கை வைத்துக் கொண்டு தர மாட்டேன் என்று சொல்கிறார்கள். கொடுத்த பணத்தை மீண்டும் தருமாறு மிரட்டி வருகிறார்கள்.

    இதையடுத்து வேறு வழியில்லாமல் பெப்சி யூனியனில் வந்து அமர்ந்து உள்ளேன். இங்கு சங்கர் வந்தாக வேண்டும். என் படத்தின் ஹார்ட்டிஸ்கும் என் பணமும் எனக்கு வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • எனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மையமாக வைத்து இந்த வெப் தொடரை எடுத்து இருக்கிறேன்.
    • வெப் தொடரை எடுக்கக்கூடாது என்று சிலர் மிரட்டினார்கள்.

    தமிழ் திரையுலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த சோனா தனது வாழ்க்கையை 'ஸ்மோக்' என்ற பெயரில் வெப் தொடராக எடுத்து இருக்கிறார். அவரே இயக்கியும் உள்ளார். சோனா அளித்துள்ள பேட்டியில், ''நடிகையான பிறகு எனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மையமாக வைத்து இந்த வெப் தொடரை எடுத்து இருக்கிறேன்.

    வெப் தொடரை எடுக்கக்கூடாது என்று சிலர் மிரட்டினார்கள். எனது வீட்டிலும் சிலர் சுவர் ஏறி குதித்தனர். இதனால் பயந்து கதறி அழுதேன். பிரச்சினையில் இருந்து ஓடி ஒளிந்து கொண்டேன். ஆனாலும் தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்தன.

    ஒரு கட்டத்தில் துணிந்து இறங்கி வெப் தொடரை எடுத்து முடித்தேன். முகேஷ், ஆஸ்தா, இளவரசு, ஜீவா ரவி, சர்மிளா, சோனியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த தொடரை படமாக்கியபோதும் சிலர் என்னை ஏமாற்றி பண மோசடி செய்தனர். தொடர் சிறப்பாக வந்துள்ளது. வாழ்க்கையை 8 எபிசோடுகளாக எடுத்துள்ளேன். யாரையும் பழிவாங்க இந்த தொடரை எடுக்கவில்லை.

    தனி ஆளாக போராடி வருகிறேன். கவர்ச்சி வேடங்களில் நடிக்க எனக்கு அழைப்பு வருகிறது. இனிமேல் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன். குணசித்திர வேடங்களில் மட்டுமே நடிப்பேன்'' என்றார்.

    கவர்ச்சியாக நடிக்க மறுத்ததால் பட வாய்ப்பை இழந்ததாகவும், அதனால் கவலை இல்லை என்றும் நடிகை சோனா கூறியிருக்கிறார். #Sona
    தமிழ் பட உலகில் முன்னணி கவர்ச்சி நடிகையாக இருப்பவர் சோனா. இவர் மிருகம், குசேலன், குரு என் ஆளு, அழகர் மலை, ஒன்பதுல குரு, யாமிருக்க பயமே உள்பட பல படங்களில் நடித்துள்ளார். சமீபகாலமாக அவருக்கு புதிய படங்கள் இல்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது அவதார வேட்டை படத்தில் நடித்துள்ளார்.

    இதுகுறித்து சோனா அளித்த பேட்டி வருமாறு:- “எனக்கு கவர்ச்சியாக நடித்து சலிப்பு ஏற்பட்டு விட்டது. ரசிகர்களும் என்னை கவர்ச்சியாக பார்த்து சலிப்படைந்து இருப்பார்கள். இதனால் இனிமேல் கவர்ச்சியாக நடிப்பதில்லை என்றும் குணச்சித்திர வேடங்களில் நடிப்பது என்றும் முடிவு செய்தேன். நான் கவர்ச்சியாக நடிக்க மறுத்த பிறகு புதிய படங்களில் நடிக்க யாரும் அழைக்கவில்லை.



    இதனால் 2 வருடங்கள் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தேன். அதுபற்றி கவலைப்படவில்லை. இப்போது மலையாள படங்களில் அதிகமாக நடித்து வருகிறேன். மலையாள படம் என்றதும் தவறாக நினைக்க வேண்டாம். அங்கு நல்ல கதையம்சம் உள்ள படங்கள் அமைகின்றன. குணச்சித்திர வேடங்களில்தான் நடிக்கிறேன். நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் அவதார வேட்டை படத்தில் வில்லியாக நடித்து இருக்கிறேன். இந்த படத்துக்கு பிறகு வில்லியாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடிக்க அழைக்கின்றனர். தொடர்ந்து வில்லியாக நடிக்க ஆசை இருக்கிறது.” இவ்வாறு சோனா கூறினார்.
    ஸ்டார் குஞ்சுமோன் இயக்கத்தில் வி.ஆர்.விநாயக் - மீரா நாயர் நடிப்பில் வெளியாகி இருக்கும் `அவதார வேட்டை' படத்தின் விமர்சனம். #AvatharaVettai #AvatharaVettaiReview #VRVinayak
    தமிழகத்தில் குழந்தைகள் கடத்தப்பட்டு உடல் உறுப்புகள் திருடப்படுகிறது. இதனை கண்டுபிடிக்க காவல்துறை சார்பில் சிறப்பு குழு ஒன்று உருவாக்கப்படுகிறது.

    இதுஒருபுறம் இருக்க, நாயகன் வி.ஆர்.விநாயக் ராதாரவியை ஏமாற்றி பணத்தை கொள்ளையடித்து தப்பிக்கிறார். பின்னர் வேறு ஊருக்கும் செல்லும் விநாயக் அங்கு சோனாவிடம் நற்பெயர் பெற்று அவரிடம் வேலைக்கு சேர்கிறார். விநாயக்குக்கும், அதே ஊரில் போலீசாக இருக்கும் நாயகி மீரா நாயரை பார்க்கும் விநாயக்குக்கு அவர் மீது காதல் வருகிறது. மீரா நாயர் மூலமாக ராதாரவி தன்னை ஏமாற்றிய விநாயக்கை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார். இதற்கிடையே சோனாவையும் ஏமாற்றி பணத்தை கொள்ளையடிக்கிறார் விநாயக்.



    கடைசியில், மீரா நாயர் விநாயக்கை பிடித்தாரா? விநாயக் யார்? ராதாரவி, சோனாவை ஏமாற்றி ஏன் பணம் பறித்தார்? குழந்தை கடத்தலை போலீசார் கண்டுபிடித்தார்களா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    விநாயக், மீரா நாயர், ராதாரவி, ரியாஸ் கான், சோனா, பவர் ஸ்டார் சீனிவாசன், சம்பத், மகாநதி சங்கர் என படத்தில் இடம்பெற்றிருக்கும் கதாபாத்திரங்கள் அவர்களது வேலையை ஓரளவுக்கு திருப்திபடுத்தியிருக்கிறார்கள்.



    உடல் உறுப்புகள் கடத்தலை மையப்படுத்தி இந்த படத்தை இயக்கியிருக்கிறார் ஸ்டார் குஞ்சுமோன். படத்திற்காக இன்னும் கொஞ்சம் உழைத்திருக்கலாம். படத்தில் காட்சிகள் வலுவானதாக அமையவில்லை என்று தான் கூற வேண்டும்.

    மைக்கேலின் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான். ஏ.காசி விஸ்வாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் ஓரளவுக்கு திருப்திகரமாக வந்திருக்கிறது. 

    மொத்தத்தில் `அவதார வேட்டை' கோட்டைவிட்டது. #AvatharaVettai #AvatharaVettaiReview #VRVinayak #RadhaRavi #MeeraNayar #Sona

    ×