என் மலர்
நீங்கள் தேடியது "Sowmiya Anbumani"
- அன்புமணியின் கருத்தை கேட்பதற்காக கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள அன்புமணியின் வீட்டில் நிருபர்கள் குவிந்துள்ளனர்.
- காரில் வெளியே புறப்பட்ட அன்புமணியின் மனைவி சவுமியாவிடம், பா.ம.க.வில் ஏற்பட்டுள்ள மோதல் பற்றி நிருபர்கள் கருத்து கேட்டனர்.
சென்னை:
பா.ம.க. தலைவர் யார்? என்பது தொடர்பாக அந்த கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கும், தலைவர் அன்புமணி ராமதாசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பா.ம.க. தலைவர் பதவியை நானே எடுத்துக் கொள்கிறேன். அன்புமணி செயல் தலைவராக இருப்பார் என்று ராமதாஸ் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலடி அளிக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ள அன்புமணி ராமதாஸ், பா.ம.க. தலைவராக நான் நீடிக்கிறேன் என்றும் கூறியுள்ளார். இந்த மோதல் தொடர்பாக அன்புமணியின் கருத்தை கேட்பதற்காக கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள அன்புமணியின் வீட்டில் நிருபர்கள் குவிந்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று காலையில் வீட்டில் இருந்து காரில் வெளியே புறப்பட்ட அன்புமணியின் மனைவி சவுமியாவிடம், பா.ம.க.வில் ஏற்பட்டுள்ள மோதல் பற்றி நிருபர்கள் கருத்து கேட்டனர். இதற்கு அவர் பதில் அளிக்க மறுத்து விட்டார்.
- பெண்கள் துணிவு மிக்கவர்களாக செயல்பட வேண்டும்.
- பெண்கள் அனைவரும் வாட்ஸ்அப் குழுக்கள் அமைத்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
சென்னை:
சென்னை ராணி மேரி கல்லூரியில் "பெண்களின் ஆரோக்கியம்" குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கு இன்று நடந்தது. கல்லூரி முதல்வர் உமா மகேஸ்வரி தலைமை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பசுமைத்தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி பேசியதாவது:-
பெண்களுக்கு பேறுகால பிரசவம் மிகவும் சவால் மிக்கதாகும். கிராமங்களில் இரவு நேரங்களில் பெண்களுக்கு பிரசவவலி ஏற்படும்போது கர்ப்பிணிகள் துயரம் அடைவார்கள். அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு செல்ல மிகவும் கஷ்டப்படுவார்கள்.
இந்த வேதனையை போக்குவதற்காக தான் 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது. அதனை எனது கணவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான அன்புமணி ராமதாஸ் சுகாதார மந்திரியாக இருந்தபோது தொடங்கி வைத்தார்.
இப்போது கர்ப்பிணி பெண்களின் பிரசவ மரணங்கள் குறைந்து வருகின்றன. இரவு நேரங்களில் எப்போது வேண்டுமானாலும் 108 ஆம்புலன்சை அழைத்தால் உடனே வருகிறார்கள். இதனால் பிரசவங்கள் எளிதாக நடைபெற்று வருகின்றன. இதனால் நாடு முழுவதும் கர்ப்பிணி தாய்மார்கள் மரண விகிதம் குறைந்துள்ளது.
கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக நேரிடும் போது உடனடியாக அது குறித்து தைரியமாக புகார் செய்ய வேண்டும். பெண்கள் துணிவு மிக்கவர்களாக செயல்பட வேண்டும். பெண்கள் அனைவரும் வாட்ஸ்அப் குழுக்கள் அமைத்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அப்போது தான் பிரச்சினைகளை தீர்க்க முடியும்.
மகளிர் சத்து மிகுந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். உடல்நலம் பேண வேண்டும். மனநல பாதிப்புகளில் இருந்து விடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- வள்ளுவர் கோட்டம் அருகே இன்று காலையிலேயே போலீசார் குவிக்கப்பட்டனர்.
- அரசை கண்டித்தும், பெண்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்கக் கோரியும் பா.ம.க. மகளிர் அணியினர் கோஷம் எழுப்பினார்கள்.
சென்னை:
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், என்ஜினீயரிங் 2-ம் ஆண்டு படித்து வரும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இது தொடர்பாக சென்னை கோட்டூர்புரத்தில் பிரியாணி கடை நடத்தி வந்த ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து அண்ணா பல்கலைக்கழகம் அருகே கடந்த 26-ந்தேதி அ.தி.மு.க.வினர் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ய திரண்டனர்.
அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் அண்ணா பல்கலைக்கழகம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், பா.வளர்மதி உள்பட 1000-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
அதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் கடந்த 30-ந்தேதி அ.தி.மு.க. சார்பில் மாவட்ட தலை நகரங்களில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.
இதேபோல் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து பா.ஜ.க. சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் கடந்த 26-ந்தேதி தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதில் முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
அதன்பிறகு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக கட்சி நிர்வாகிகள் கடந்த 31-ந்தேதி வள்ளுவர் கோட்டம் அருகே திரண்டனர். இதையடுத்து சீமான் உள்பட நிர்வாகிகள் 200 பேரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து 4-வது கட்சியாக பா.ம.க. இன்று போராட்டம் நடத்தியது. பா.ம.க. மகளிர் சங்கம் சார்பில் இன்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. பசுமை தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி தலைமையில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.
இதையடுத்து போலீஸ் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக பா.ம.க.வினர் அறிவித்தனர். எனவே போராட்டம் நடத்த வரும் பா.ம.க.வினரை கைது செய்வதற்காக சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே இன்று காலையிலேயே போலீசார் குவிக்கப்பட்டனர். சுமார் 350-க்கும் மேற்பட்ட போலீ சார் அங்கு குவிக்கப்பட்டனர்.
இதற்கிடையே 10.45 மணி அளவில் சவுமியா அன்புமணி தலைமையில் பா.ம.க. மகளிர் அணியினர் வள்ளுவர் கோட்டம் அருகே திரண்டனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்தனர். போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனர்
என்றாலும், தடையை மீறி சவுமியா அன்புமணி உள்பட பா.ம.க. மகளிர் அணி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட முயற்சி செய்தனர். இதையடுத்து சவுமியா அன்புமணி உள்பட பா.ம.க. மகளிர் அணியினர் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் அனைவரும் போலீஸ் வேனில் ஏற்றி அழைத்து செல்லப்பட்டனர். அப்போது அரசை கண்டித்தும், பெண்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்கக் கோரியும் பா.ம.க. மகளிர் அணியினர் கோஷம் எழுப்பினார்கள்.
- இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலங்களில் பட்டியலில் தமிழ்நாடு 4வது இடத்தில் உள்ளது.
- மதுவும் போதையும்தான் பாலியல் வன்கொடுமை நடக்க காரணம் என்றார் சவுமியா அன்புமணி.
சென்னை:
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து பா.ம.க. சார்பில் சவுமியா அன்புமணி தலைமையில் 300க்கும் மேற்பட்ட மகளிர் அணியினர் நேற்று போராட்டம் நடத்தினர். அவர்களை கைதுசெய்த போலீசார் திருவல்லிக்கேணியில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் அடைத்து வைத்தனர். மாலை 6 மணிக்கு சவுமியா மற்றும் அவரோடு கைது செய்யப்பட்ட 300க்கும் மேற்பட்டோரை போலீசார் விடுவித்தனர்.
இந்நிலையில், சவுமியா அன்புமணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
எங்களை கைது செய்ய முதல் ஆளாக வருகிறார்கள். எங்களை கைது செய்ய வந்த காவல்துறை பெண் குழந்தைகளைக் காப்பாற்றி இருக்கலாமே.
பெண்களுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை. கடந்த இரு ஆண்டுகளில் பாலியல் வன்கொடுமை இரு மடங்கு அதிகரித்துள்ளது.
வட இந்தியாவைப் போல தமிழ்நாட்டிலும் பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளது. எங்கள் குழந்தைகளை எப்படி வெளியே அனுப்புவது? உங்களுக்கும் பெண் குழந்தை உள்ளது.
இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலங்களில் பட்டியலில் தமிழ்நாடு 4வது இடத்தில் உள்ளது.
எங்கள் போராட்டத்தால் தான் ஞானசேகரன் கைது செய்யப்பட்டுள்ளார். மறுபடி மறுபடியும் குற்றம் செய்யக்கூடிய மனநோயாளி ஞானசேகரன். இதுவரை ஏன் குண்டர் சட்டத்தில் அவரை அடைக்க வில்லை.
மதுவும் போதையும்தான் பாலியல் வன்கொடுமை நடக்க காரணம் என தெரிவித்தார்.
- போராட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.
- போராட்டத்தில் பங்கேற்பவர்களை கைது செய்து அழைத்து செல்வதற்காக பஸ்களும் முன்னேற்பாடாக அங்கு நிறுத்தப்பட்டு இருந்தன.
சென்னை:
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து பா.ம.க. மகளிர் சங்கம் சார்பில் பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், போராட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.
எனினும், தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்வதற்காக பா.ம.க.வினர் நேற்று காலை 10 மணியளவில் வள்ளுவர் கோட்டம் அருகே குவிந்தனர். போராட்டத்திற்கு வந்திருந்தவர்களை விட 2 மடங்கு போலீசார் அங்கு குவிக்கப்பட்டு இருந்தனர். மேலும், போராட்டத்தில் பங்கேற்பவர்களை கைது செய்து அழைத்து செல்வதற்காக பஸ்களும் முன்னேற்பாடாக அங்கு நிறுத்தப்பட்டு இருந்தன.
இதற்கிடையே ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்திற்கு சவுமியா அன்புமணி காலை 10.45 மணியளவில் காரில் வந்தார். அவர் காரைவிட்டு இறங்கியவுடன் போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். பின்னர் போலீஸ் வேனில் ஏற்றப்பட்டார். போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க. வடக்கு மண்டல இணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, மாநில பொருளாளர் திலகபாமா உள்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட பா.ம.க.வினர் நுங்கம்பாக்கத்தில் ஒரு சமுதாயநலக் கூடத்திலும், திருவல்லிக்கேணியில் ஒரு சமுதாயநலக் கூடத்திலும் வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் வள்ளுவர் கோட்டத்தில் தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற சவுமியா அன்புமணி உள்ளிட்ட 297 பேர் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.