என் மலர்
நீங்கள் தேடியது "Special courts"
- நாடு முழுவதும் யூனியன் பிரதேசங்கள் உள்பட 30 மாநிலங்கள் சிறப்பு விரைவு கோர்ட்டுகளை அமைத்து உள்ளன.
- தமிழகத்தில் அமைக்கப்பட்ட 14 சிறப்பு விரைவு கோர்ட்டுகள் போக்சோ வழக்குகளை மட்டும் விசாரித்து வருகின்றன.
சென்னை:
'தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம்' என்பது சட்டத்தின் கோட்பாடு ஆகும். மக்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு, உரிய நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக ஜனநாயகத்தின் 3-வது தூணாக விளங்கும் நீதி தேவதையின் கதவை தட்டுகிறார்கள்.
அந்தவகையில், பாதிக்கப்பட்டவர்கள் தொடுக்கும் வழக்குகளை விசாரித்து, நீதியை நிலைநாட்டும் மகத்தான பணியை கோர்ட்டுகள் செய்துவருகின்றன.
இதற்கிடையே பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் 'போக்சோ' வழக்குகள், பாலியல் குற்றங்கள், நீண்டகாலமாக விசாரணை நடைபெற்று வரும் முக்கிய வழக்குகளை விரைவாக விசாரித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும் வகையில் 'போக்சோ' கோர்ட்டுகள் உள்பட சிறப்பு விரைவு கோர்ட்டுகள் மத்திய அரசின் நிதி உதவியுடன் மாநிலங்களில் அமைக்கப்பட்டு வருகின்றன.
நிலுவையில் உள்ள ஒவ்வொரு 65 முதல் 165 வழக்குகளுக்கும் ஒரு சிறப்பு விரைவு கோர்ட்டு அமைக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, நாடு முழுவதும் யூனியன் பிரதேசங்கள் உள்பட 30 மாநிலங்கள் சிறப்பு விரைவு கோர்ட்டுகளை அமைத்து உள்ளன. நிலுவையில் உள்ள வழக்குகளின் விகிதம் குறைவாக இருப்பதாக கூறி, அருணாசலபிரதேசம் இந்த திட்டத்தை செயல்படுத்தவில்லை. மேலும் அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள் சிறப்பு விரைவு கோர்ட்டுகள் அமைக்க இசைவு தெரிவித்திருந்தாலும், இன்னும் செயல்படுத்தவில்லை.
கடந்த டிசம்பர் மாதம் வரையிலான நிலவரப்படி நாடு முழுவதும் போக்சோ வழக்குகளை மட்டும் விசாரிக்கும் கோர்ட்டுகள் உள்பட 747 சிறப்பு விரைவு கோர்ட்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்த கோர்ட்டுகளில் 1 லட்சத்து 91 ஆயிரத்து 633 போக்சோ வழக்குகள் உள்பட 2 லட்சத்து 99 ஆயிரத்து 624 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு உள்ளன. அதிகபட்சமாக போக்சோ வழக்குகள் முடித்து வைக்கப்பட்டதில் 42 ஆயிரத்து 404 வழக்குகளுடன் உத்தரபிரதேசம் முதல் இடத்தில் உள்ளது.
தமிழகத்தில் அமைக்கப்பட்ட 14 சிறப்பு விரைவு கோர்ட்டுகள் போக்சோ வழக்குகளை மட்டும் விசாரித்து வருகின்றன. இந்த கோர்ட்டுகள் மூலமாக 8 ஆயிரத்து 898 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு உள்ளன. புதுச்சேரியில் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் முதல் செயல்பட்டு வரும் போக்சோ கோர்ட்டில் 122 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளன.
மத்திய அரசு 2019-20 முதல் 2024-25 நிதியாண்டு வரை (கடந்த மாதம் 3-ந்தேதி வரையிலான நிலவரப்படி) சிறப்பு விரைவு கோர்ட்டுகள் திட்டத்துக்காக மாநிலங்களுக்கு ரூ.1,008 கோடி விடுவித்து உள்ளது. இதில் அதிகபட்சமாக உத்தரபிரதேசத்துக்கு ரூ.281 கோடி, மத்தியபிரதேசத்துக்கு ரூ.105 கோடி, ராஜஸ்தானுக்கு ரூ.84 கோடி கொடுத்துள்ளது. தமிழகத்துக்கு ரூ.25 கோடியே 46 லட்சமும், புதுச்சேரிக்கு ரூ.55 லட்சமும் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்ட அரசியல் தலைவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்க கோரி, வழக்கறிஞரும் பா.ஜ.க. தலைவருமான அஸ்வினி உபாத்யாய் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
கிரிமினல் வழக்குகளில் விசாரணை முடிந்து தீர்ப்பு வெளியாகி தண்டனை அளிப்பதில் நீண்டகால இழுத்தடிப்பு நடந்து வருவதால் கிரிமினல்கள் மக்கள் பிரதிநிதிகளாக உலா வருகின்றனர். எனவே, இவர்கள் மீதான வழக்குகளில் விசாரணையை விரைவுப்படுத்தி, தண்டித்து அரசியலில் ஈடுபட தடை விதிக்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டுக்கு உதவுவதற்காக வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா ‘அமிகஸ் கியூரி’யாக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், இவ்வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா தனது அறிக்கையை தாக்கல் செய்தார். அதில், நாடு முழுவதிலும் பல்வேறு நீதிமன்றங்களில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக 4122 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் அதிகபட்சமான வழக்குகள் பீகார் மற்றும் கேரள மாநிலத்தில் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் நடந்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், பீகார், கேரள மாநில எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான கிரிமினல் வழக்குகளை விசாரிக்க மாவட்டம்தோறும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்குமாறு சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. தேவை ஏற்படும் மாவட்டங்களில் எத்தனை சிறப்பு நீதிமன்றங்களை வேண்டுமானாலும் அமைத்து கொள்ளலாம்.
தற்போது, மாநில ஐகோர்ட் மற்றும் சில சிறப்பு நீதிமன்றங்களில் நடைபெற்றுவரும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகள் அனைத்தும் புதிதாக அமைக்கப்படும் மாவட்ட சிறப்பு நீதிமன்றங்களுக்கு உடனடியாக மாற்றப்பட வேண்டும். இந்த நீதிமன்றங்களில் ஆயுள் தண்டனைக்கு வாய்ப்புள்ள குற்ற வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுத்து விசாரிக்கப்பட வேண்டும்.
இவ்வகையில், பீகார் மற்றும் கேரளாவில் மாவட்டங்கள்தோறும் அமைக்கப்படும் புதிய சிறப்பு நீதிமன்றங்களின் பட்டியலை பாட்னா மற்றும் கேரளா ஐகோர்ட்டுகள் வரும் 14-ம் தேதிக்குள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். #Criminalcases #casesagainstMPMLAs #specialcourts #Biharpecialcourts #Keralapecialcourts
புதுடெல்லி:
சுப்ரீம் கோர்ட்டில் மூத்த வக்கீல் அஸ்வினி குமார் உபத்யாய் என்பவர் ஒரு வழக்கு தொடர்ந்து இருந்தார்.
அவர் தாக்கல் செய்த மனுவில் ‘‘ஜெயில் தண்டனை முடிந்து திரும்பும் அரசியல்வாதிகளுக்கு தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகளுக்கு தடை விதிக்க வகை செய்யும் மக்கள் பிரதிநிதித்துவ சட்ட விதிகளை இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை விதிகளாக அறிவிக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த மனு மீது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட்டு எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான 1,581 வழக்குகளில் எத்தனை வழக்குகள் ஒரு ஆண்டு காலத்திற்குள் முடிக்கப்பட்டது என கேள்வி எழுப்பி இருந்தது.
சுப்ரீம் கோர்ட்டில் கடந்த டிசம்பர் மாதம் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் ரூ.7.8 கோடி செலவில் 12 சிறப்பு கோர்ட்டுகள் அமைக்க இருப்பதாக தெரிவித்து இருந்தது.
இந்தநிலையில் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க 11 மாநிலங்களில் 12 தனிக்கோர்ட்டுகள் அமைக்க இருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது.
இதுதொடர்பாக மத்திய சட்டம் மற்றும் நிதி அமைச்சகம் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் கூறி இருப்பதாவது:-

எம்.பி., எம்.எல்.ஏ.க் களுக்கு எதிரான வழக்கு கைளை விசாரிக்க 12 சிறப்பு கோர்ட்டுகளை அமைப்பது தொடர்பாக 11 மாநிலங்கள் அறிவிக்கைகள் வெளியிட்டு உள்ளன.
இதன்படி டெல்லியில் 2 சிறப்பு கோர்ட்டுகள், தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, உத்தரபிரதேசம், பீகார், மராட்டியம், மேற்கு வங்காளம், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு தனிக் கோர்ட்டுகளையும் அமைக்க உள்ளன.
இந்த 12 சிறப்பு கோர்ட்டுகளில் 6 செசன்ஸ் நீதிமன்றங்கள் ஆகும். 5 மாஜிஸ்திரேட் கோர்ட்டுகள் ஆகும். தமிழ்நாட்டில் அமைக்கப்பட இருக்கும் சிறப்பு கோர்ட்டு குறித்து தெரிவிக்கப்படவில்லை.
ஒட்டுமொத்த மாநிலமும் இந்த சிறப்பு கோர்ட்டுகளின் அதிகார வரம்புக்குள் வரும்.
மத்திய அரசு புள்ளி விவரங்களின்படி இந்த சிறப்பு கோர்ட்டுகளுக்கு 1,233 வழக்குகள் மாற்றப்பட உள்ளன. இதில் 136 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன. 1097 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #CentralGovernment #SupremeCourt