search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Special Grievance Day Meeting"

    • பிப்ரவரி மாதம் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்.
    • மாவட்ட கலெக்டர் அவர்களின் தலைமையில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட உள்ளது.

    காஞ்சிபுரம் மாவட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கு இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மாவட்ட கலெக்டர் தலைமையில் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுகிறது.

    மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து பிப்ரவரி மாதம் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 12.02.2025 அன்று மாலை 3 மணிக்கு மாவட்ட கலெக்டர் அவர்களின் தலைமையில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட உள்ளது.

    இம்முகாமில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளிக்கலாம்.

    • நெல்லை மாவட்ட முன்னாள் படைவீரர்கள், படைவீரர்களை சார்ந்தோர்கள் நலனை கருத்தில் கொண்டு முன்னாள் படைவீரர் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 27-ந்தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது.
    • நெல்லை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், அவரை சார்ந்தோர்கள் தங்களுக்கு குறைகள் இருப்பின் தெரிவிக்கலாம்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட முன்னாள் படைவீரர்கள், படைவீரர்களை சார்ந்தோர்கள் நலனை கருத்தில் கொண்டு முன்னாள் படைவீரர் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 27-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது.

    எனவே நெல்லை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், அவரை சார்ந்தோர்கள் தங்களுக்கு குறைகள் இருப்பின் மாவட்ட கலெக்டரால் நடத்தப்படும் இச்சிறப்பு முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தங்களது அசல் படை விலகல் சான்று மற்றும் அடையாள அட்டையுடன் கலந்து கொண்டு தங்களது குறைகளை இரட்டை பிரதியில் விண்ணப்பம் மூலம் தெரிவித்து பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

    ×