என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Spritual"

    • மகா சிவராத்திரி அன்று இரவு கோவில்களில் நான்கு ஜாமப் பூஜைகள் நடைபெறும்.
    • சிவனை “அபிஷேகப்பிரியன்” என்றும் சொல்வார்கள்.

    சிவனுக்குரிய எட்டு முக்கிய விரதங்கள்

    அபிஷேகப் பிரியனான சிவனுக்காக எட்டு விதமான விரதங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன.

    அவையாவன:

    1 சோமாவார விரதம் - திங்கள்,

    2 உமாமகேஸ்வரர் விரதம் - கார்த்திகை பவுர்ணமி,

    3 திருவாதிரை விரதம் - மார்கழி,

    4 சிவராத்திரி விரதம் - மாசி,

    5 கல்யாண விரதம் - பங்குனி உத்திரம்,

    6 பாசுபத விரதம் - தைப்பூசம்,

    7 அஷ்டமி விரதம் - வைகாசி பூர்வபட்ச அஷ்டமி,

    8 கேதார விரதம் - தீபாவளி அமாவாசை.

    சிவராத்திரி-நைவேத்தியங்கள்

    மகா சிவராத்திரி அன்று இரவு கோவில்களில் நான்கு ஜாமப் பூஜைகள் நடைபெறும்.

    முதல் ஜாமத்தில் பஞ்ச கவ்விய அபிஷேகமும், பொங்கல் நிவேதனமும் செய்து வில்வத்தினால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

    இரண்டாம் ஜாமத்தில் பஞ்சாமிர்த அபிஷேகமும், பாயச நிவேதனமும் செய்து தாமரை மலரால் அர்ச்சிக்க வேண்டும்.

    மூன்றாம் ஜாமத்தில் தேன் அபிஷேகமும், நெய்யும் மாவும் கலந்து நிவேதனமும் செய்து நந்தியாவட்டை மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

    நான்காம் ஜாமத்தில் கரும்புச்சாறு அபிஷேகமும், வெண் பொங்கல் நிவேதனமும் செய்து நந்தியாவட்டை மலர்களால் அர்ச்சிக்க வேண்டும்.

    அதிசயிக்க வைக்கும் "அபிஷேகப்பிரியன்"

    சிவராத்திரி அன்றுதான் அன்னை உமாதேவி சிவபெருமானை பூஜித்து வழிபட்டார். அதனால், நாமும் அந்த தினத்தில் பூஜை செய்து சிவபெருமானை வழிபடுவது சிறந்த பலனைத்தரும்.

    சிவனை "அபிஷேகப்பிரியன்" என்றும் சொல்வார்கள்.

    அதனால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய செய்ய நமது துன்பம் அகலும். உடல் நோய்கள் நீங்கும். மனம் தெளியும். சகல நன்மைகளும் உண்டாகும்.

    சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய முடியாதவர்கள் அந்த அபிஷேக காட்சியை தரிசனம் செய்யலாம்.

    • லிங்கம் என்பது அங்கமே இல்லாத அரும் பொருள் வடிவம்
    • அர்த்தநாரீஸ்வரர் தன் இடது பாகத்திலிருந்த பாரசக்தியைத் தோற்றுவித்து,

    அர்த்தநாரீஸ்வரர்

    அர்த்தநாரீஸ்வரன் என்பதற்கு தன் உடலில் பாதி பெண்ணுருவாகிய இறைவன் என்று பொருள்.

    தூயதமிழில் பெண்ணொரு பாகன். மாது பாதியின், தோடுடைய செவியன், அம்மையப்பன் என்று அழைக்கப்படுகிறார்.

    இது பரம்பொருளை சுட்டிக்காட்ட முடியாத அலிவடிவம் என்று கூடச் சொல்லலாம்.

    இன்னது என அறிய முடியாத பிறப்பு வளர்ப்பைக் கடந்த சிறந்ததான தூய செம்பொருளே பரமசிவம்.

    பரமாத்மா, ஜிவாத்மா, போன்ற ஆன்மாக்களது நன்மைக்காக பல வடிவங்களில் வெளிப்பட்டு அருள்கின்றது.

    இவற்றில் சிவன் என்பது ஆண் வடிவம் எனவும், தாயுமானவன் என்பது பெண் வடிவம், அர்த்தநாரீவரர் என்பது ஆண்பெண் கலந்த அலி வடிவம், லிங்கம் என்பது அங்கமே இல்லாத அரும் பொருள் வடிவம் என்றும் அழைக்கப்படுகிறது.

    மாணிக்க வாசக சுவாமிகள் பரமசிவனின் அத்தனை வடிவங்களையும்,

    பெண் ஆண் அலி எனும் பெற்றியன்

    பெண்டிர் ஆண் அலி என்று அறியன்கிலை என்று போற்றுகிறார்.

    பாகம் பெண்ணுக்கு ஆனாய் போற்றி என்று பாடிப்பரவுகிறார்.

    மாதொரு பாகனாம் அர்த்தநாரீவரர் தோலும் உடையும் உடைய இறைவன்.

    திருநீறும் சந்தனமும் பூசி, சூலமும் மாமுவும் கிளியும் வளையலும் கொண்டவர்.

    ஆண் பாகம், பெண் பாகங்களில் தலா இரண்டு கரங்களாகி நான்கு திருக்கரங்களோடு நந்தி வாகனத்துடன் ஏட்டி நின்றவராய் ஆண் பெண் அன்பினை உணர்த்துகிறார்.

    இந்த உருவங்கள் யாவும் காவிரிக் கரைத்தலங்களில் லிங்க உருவில் எழுந்தருளும் இறைவன் அருகே கருவறைச்சுற்றில் பின்புறம் அர்த்தநாரீஸ்வரர் தோன்றுகிறார்.

    தொண்டை நாட்டுத்தலங்களில் லிங்கோற்பவரைப் போன்று சோழ நாட்டுத் திருத்தலங்களில் மாதொரு பாகன் விளங்குகிறார்.

    அர்த்தநாரீஸ்வரர் தன் இடது பாகத்திலிருந்த பாரசக்தியைத் தோற்றுவித்து வீரத்திற்கு அதிதேவதையாக ஆக்கி விட்டார்.

    அவர் தோற்றத்தில் மயங்கிய தேவி அம்மையப்பனின் பெண் உருவைப்போன்று இடப்பாகத்தில் இடம் பெற விரும்பினார்.

    ஒரு காலகட்டத்தில் தட்சனுக்கு மகளாகப் பிறந்து வளர்ந்த பின், பரமனை மணம்புரிந்த பிறகும், பிறந்த வீட்டுப்பாசத்தினால் கட்டுண்டு இறைவனை விட்டுப்பிரிய நேர்ந்தது.

    தந்தை நடத்திய யாகத்தின் தீயில் விழுந்து மாண்டு போன பிறகு மறுபிறவி எடுத்து வந்த தேவி மீண்டும் பரம்பொருளையே திருமணம் செய்து கொண்டு பல தலங்களில் தவமும் சிவபூஜையும் செய்து ஆசார நியமங்களோடு பரமனை துதித்தாள்.

    இதனால் பரமேஸ்வரன் தன் இடது பாகத்தில் ஏற்றுக்கொண்டு அருள்புரிந்தார்.

    பராசக்தியைத் தனது பாதித்திருமேனியில் ஏற்றுக்கொண்ட இறைத்திருமேனியருக்கே உமைபாகன், சக்திபாகன், அர்த்த சக்தீஸ்வரர், தேவிபாகன், காயாரோகண ஈஸ்வரர் என்ற திருப்பெயர்கள் பூலோக பக்தர்களால் மட்டுமின்றி, தேவன் பெருமக்களாலும் கூறப்பட்டன.

    உமையரு பாகர் என்பவர் வளப்பாகத்தில் சிவந்த நிறமும், இடது பாகத்தில் நீலநிறமும், நான்கு திருக்கரங்களும் கொண்டவர்.


    • பட்டினத்தடிகன் இந்தத்திருக்கோலத்தை மிக விளக்கத்துடன் பாடிப்போற்றி உள்ளார்.
    • ஆண், பெண் கருத்து வேறுபாட்டைக் களைந்து பரஸ்பரம் அன்பு பாராட்ட வேண்டும்

    சங்க நூல்களில் அர்த்தநாரீஸ்வரர்!

    அர்த்தநாரீஸ்வரர்பராசக்தியைத் தனது பாதித்திருமேனியில் ஏற்றுக்கொண்ட இறைத்திருமேனியருக்கே உமைபாகன், சக்திபாகன், அர்த்த சக்தீஸ்வரர், தேவிபாகன், காயாரோகண ஈஸ்வரர் என்ற திருப்பெயர்கள் பூலோக பக்தர்களால் மட்டுமின்றி, தேவன் பெருமக்களாலும் கூறப்பட்டன.

    உமையரு பாகர் என்பவர் வளப்பாகத்தில் சிவந்த நிறமும், இடது பாகத்தில் நீலநிறமும், நான்கு திருக்கரங்களும் கொண்டவர்.

    நந்தி தேவரது அம்சமாக விளங்கும் மாணிக்க வாசகப்பெருமான் இந்த உருவத்தைக் கண்டு.

    உமையரு பாகம் ஆதாய எங்கள் பிராட்டியும்

    எம்கோனும் போற்றிசைந்த என ஆனந்தம் அடைகிறார்.

    ஞான சம்மந்தப்பெருமான்.

    தோடுடைய செவியன் என்று அர்த்தநாரீஸ்வரையும், வேயுறு தோனியங்கள் என்று உமையோரு பாகனையும் பாடி உள்ளார்.

    ஆச்சான்புரத்து மண்ணில் திருஞான சம்மந்தருக்குக் தங்கக் கிண்ணித்தில் பால் சாதம் அளித்து ஆட்கொண்ட அருட்தன்மையை சம்மந்தர் தேவாரம் மிக அருமையாகத் தமிழ்ச்சுவையோடு காட்டுவதைப் பாருங்கள்.

    தோடுடைய செவியென் விடையேறி

    பொற்கிண்ணத்து அழகில் பொல்லாது எனத்

    தாதையர் முனிவிறத்தான் என்ன ஆண்டவன்

    தோலும் துகிலும் காட்டித்தொண்டு ஆண்பீர்.

    இறைவனைக் கண்டுபாடிய முழு முதல் தெய்வப்புலவராகிய மாணிக்கவாசகர் அர்த்தநாரீச உருவைக் காஞ்சிபுரத்தில்தான் கண்டு தரிசித்தார்.

    பட்டினத்தடிகன் இந்தத்திருக்கோலத்தை மிக விளக்கத்துடன் பாடிப்போற்றி உள்ளார்.

    திருமுறைப்பாடல்கள் யாவும் அர்த்தநாரீஸ்வரரையும், உமைபாகனையும் அழகுற வேறுபடுத்தி காட்டுவதை அறியலாம்.

    பாதித்திருமேனி பெண்ணுருவாக விளங்கும் அர்த்தநாரீஸ்வரருக்கும் பாதித்திருமேனிய பராசக்தியைக் கொண்டு அருள்புரிந்த உருவிற்கும் வேறுபாடுகள் உண்டு.

    உமையை அருகில் நிறுத்தி ஆட்கொண்டவர் உமையருபாகன், பரப்பிரம்மாகத் தெரியும் அர்த்தநாரீஸ்வரக் கோலத்தின் திருஉருவங்கள் பக்தர்களது மனதில் மெய்யான கடவுள் பற்றிய மெய்ஞானத்தையும்,

    முழுமையான விஞ்ஞானத்தையும், ஆண், பெண் வேறுபாடு இல்லாத சீரிய சமுதாயத்தையும் சிறந்த நாகரீகம் கொண்ட அரிய கலை உணர்வையும், மறுபடியும் வந்து பிறவாமல் கடவுளோடு சேர்ந்து வாழும் முதிர்ந்த முக்தி நிலையையும் தெளிவுபடுத்தும் அற்புத வடிவமாக உள்ளன என்பது உண்மையே.

    துப்பில்லாத இத்திருமேனிகள் ஸ்ரீசைவம் மல்லிகார்ஜுனர் திருக்கோவில், திருக்கண்டியூர் வீரட்டேஸ்வரர் கோவில் திருவையாறு, திருவேதிக்குடி ஆகிய தலங்களில் உள்ளன. திருமந்திரத்தில் குண்டலக்காதி என்று பாதி பெண் வடிவை இறைவன் ஏற்ற முறையைத் திருமூலர் குறிப்பிட்டுள்ளார்.

    ஆண், பெண் கருத்து வேறுபாட்டைக் களைந்து பரஸ்பரம் அன்பு பாராட்ட வேண்டும் என்ற இல்லாத தத்துவத்தை எடுத்துரைக்கும் இந்த அரிதான வடிவை திருச்செங்கோடு சிவஸ்தலத்தில் காணமுடியும்.

    இதைத்தான் மாணிக்க வாசகர் இறைவனது தொன்மைக் கோலம் என்றார். முதல்வர் என்றார் சைவர் அருணந்தி சிவாச்சாரியார்.

    பெண்ணை துரு திறன் ஆகின்றது.

    அவ்ஷருவத்தன்னுள் அடக்கி சாக்கினும் சுரக்கும் என்று புறநானூறு எடுத்துரைக்கின்றது.

    நீலமேனி வாலிழை பாகத்து

    ஒருவன் இருதான் நிழற்கீழ்

    முவகை உலகும் முகழ்த்தன முறையே என ஐங்குறு நூறு சிறப்பிக்கின்றது.

    சங்க இலக்கியங்களிலிருந்து சந்தப்பாடல், வடநூலாரின் துதிகள் போற்றும் மாதொருபாகனை மகாசிவராத்திரி நாளில் நினைப்போம் நலம் பெருக வாழ்வோம்.

    • ஆனால் இன்றைய இளைய சமுதாயத்திடம் இந்த குணங்களைப் பார்ப்பது அரிதாகி விட்டது.
    • பல நல்ல செயல்கள் ஆங்காங்கே நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

    வாழும் தெய்வங்கள்!

    சிறு வயதில் நாம் வளர்க்கப்படும் விதம், வாழும் சூழ்நிலை கொண்டே ஒருவரது மன இயல்பு அமையும்.

    இதனை நன்கு அறிந்தவர்கள் நம் முன்னோர்கள்.

    எனவே தான் விடியற்காலையில் எழ வேண்டும். குளித்து இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும். ஸ்லோகம், பக்திப் பாடல்களை மனப்பாடம் செய்ய வேண்டும்.

    அதனை காலை, மாலை சொல்ல வேண்டும். நல்லதையே நினைக்க வேண்டும். தீயதினை ஒதுக்க வேண்டும் என வாழ்க்கை முறைகளை கட்டுப்பாடு என்ற பெயரில் கெடு பிடியாய் வைத்திருந்தனர்.

    இன்றைக்கு நாம் பார்க்கிற பெரியோர்களிடம் நிதானம், பண்பு இருக்கின்றது. எதிலும் ஒரு நியாயம் இருக்கின்றது.

    ஆனால் இன்றைய இளைய சமுதாயத்திடம் இந்த குணங்களைப் பார்ப்பது அரிதாகி விடுமோ என்ற அச்சம் இருக்கின்றது.

    மாதா, பிதா, குரு, தெய்வம் என, ஒருவர் இவர்களிடம் கட்டுப்பட்டால் தான் வாழ்க்கை சிதறி அழியாமல் ஒருவழிப்படும், ஒழுக்கம் வரும்.

    தனி மனித ஒழுக்கமே சமுதாய ஒழுக்கமாக மாறும். ஒழுக்கமான சமுதாயம் என்பது பூமியில் சொர்க்கம். இன்று சமுதாயம் வன்முறையாய் மாறி இருப்பதன் காரணமே தனி மனித ஒழுக்கமின்மைதான்.

    நாட்டில் வன்முறைகளும், பொய்களும், தவறுகளும் கூடிக் கொண்டே தான் இருக்கின்றது. ஆயினும் உலகம் நன்கு இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றது.

    பல நல்ல செயல்கள் ஆங்காங்கே நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. காரணம் ஆங்காங்கே கண்ணுக்குத் தெரியாத நல்ல சக்திகளும், கண்ணுக்குத் தெரியும் நல்ல சக்திகளும் ஒவ்வொரு தனி மனிதனையும் அதன் மூலம் சமுதாயத்தினையும் நல்வழி படுத்திக் கொண்டிருக்கின்றன.

    இச்சக்திகளை நாம் சித்தர்கள் எனலாம், மகான்கள் எனலாம், அவதார பிறப்புகள் எனலாம், யோகிகள் எனலாம், வாழும் தெய்வங்கள் எனலாம்.

    எந்த ஆரவாரமும் இன்றி இவர்கள் மக்களுக்கு நன்மை செய்து கொண்டே இருக்கின்றார்கள். பதிலுக்கு இவர்களுக்கு நம்மிடமிருந்து எதுவுமே தேவையில்லை.

    அத்தகு கருணையும், அன்பும் மனித சமுதாயத்தின் மீது இவர்களுக்கு உண்டு. இதுவே இன்றும் நாம் இந்த அளவாவது வாழ்ந்து கொண்டிருப்பதன் ரகசியம்.

    'தெய்வங்கள் மனிதர்களாகத் தோன்றி அவ்வப்போது நிலை தடுமாறும் மக்களை நல்வழிப்படுத்துவார்கள். இதற்கு உதாரணம் தான் ராம அவதாரமும், கிருஷ்ண அவதாரமும்'

    சாமி, மகான்கள், சித்தர்கள் எல்லோரும் நாம் முழு முனைப்பாய் முறையான வேண்டுதல்களை வைத்தால் சரியானவற்றைச் செய்து கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் நல்வழியில் நற்சிந்தனையில் செயல்படுவோம்.

    • வலம்புரிசங்கு இருக்கும் வீட்டில் துர்தேவதைகள் நெருங்காது.
    • ஒரு சங்கின் சுருள்பகுதி அதன் வாய்பகுதியில் இருந்து இடதுபுறம் வந்தால் அது இடம்புரிசங்கு.

    செல்வம் தரும் வலம்புரி சங்கு

    கடலில் வாழும் உயிரினங்களில் கிளிஞ்சல் வகை புழுக்கள் தனக்கு பாதுகாப்பிற்காக கட்டிக் கொள்ளும் மேல் கவசம்தான் சங்கு.

    சிறியதாக குறுகிய அளவானவை பெண் சங்குகள். சற்றுபருத்த திடசங்குகள் ஆண் சங்குகள்.

    சங்குகளின்மேல் உள்ள வரிகளை (கோடுகள்) வைத்து வலம்புரிச்சங்கு, இடம்புரிச்சங்கு என்று கூறுவார்கள்.

    ஒரு சங்கின் சுருள்பகுதி அதனுடைய வாய்பகுதியில் ஆரம்பித்து சுருள் முனைக்கு வலது புறமாக சுற்றி வந்தால் அது வலம்புரி சங்கு எனப்படும்.

    ஒரு சங்கின் சுருள்பகுதி அதன் வாய்பகுதியில் இருந்து இடதுபுறம் வந்தால் அது இடம்புரி சங்கு.

    வலம்புரி சங்கு, இடம்புரி சங்கு அகியவற்றில் வலம் புரிச்சங்குதான் அபூர்வமானதும், சிறப்பானதும் ஆகும்.

    இந்த வலம்புரி சங்கு பொங்கும் கடலில் இருந்து எடுக்கப்படுகிறது. எனவே இதற்கு அரிய தெய்வீக சக்தி உண்டு.

    தூய்மையான வெண்ணிறத்துடன் நீண்டு மூன்றில் ஒருபங்கு நீளத்தில் வாலும், தலைப்பாகத்தில் ஏழு சுற்றும் அமைந்து சங்கின் சுற்றளவு அடிமுடி நீளத்திற்கு சமமாக இருப்பது சிறப்பு நீளம் அதிகமாக இருந்தால் மிகச் சிறப்பு.

    ஸ்ரீ மகாவிஷ்ணுவின் இடது கையில் உள்ளது வலம்புரி சங்கு. இந்தச்சங்கை காதில் வைத்துக்கேட்டால் "ஓம்" என்ற சப்தம் கேட்கும்.

    வலம்புரிச்சங்கை வீட்டில், வியாபார இடங்களில் சுத்தமாக வைத்து பூஜை செய்தால் செல்வம் பெருகும் மற்றும்பலவித நன்மைகள் கிடைக்கும்.

    மாமிசம் சாப்பிட்ட அன்றும், பெண்கள் மாதவிலக்கான நாட்களிலும் வலம்புரிச்சங்கைத்தொடக்கூடாது.

    சங்கினை தரையில் வைக்கக்கூடாது. சங்கிற்கு சந்தனம், குங்குமம் வைத்து பித்தளை அல்லது வெள்ளி தாம்பாளத்தில் வைக்க வேண்டும். எவர்சில்வர் தட்டில் வைக்கக்கூடாது.

    செல்வத்திற்கு அதி தெய்வமான மகாலட்சுமி பிறந்த ஆடிமாதம் பூர நட்சத்திரலும், இந்திரன் லட்சுமியை வணங்குகிற புரட்டாசி பவுர்ணமியிலும், ஆனி மாதம் சுக்லபட்சம் கூடிய அஷ்டமியிலும், சித்ரா பவுர்ணமியிலும்

    வலம்புரிச்சங்கில் பசும்பால் வைத்து மலர்களால் சங்கினையும், லட்சுமியையும் அலங்கரித்து, சந்தனம் குங்குமம் இட்டு அதிரசம், லட்டு ஆகியவைகளை பசு நெய்யில் செய்துபால்பாயசம் செய்துபசு நெய் ஊற்றி விளக்கேற்றி இரவு 10.00 மணியிலிருந்து 1.00 மணிக்குள் பூஜை செய்ய வேண்டும்.

    இப்படி செய்தால் எல்லாவித செல்வங்களும் வந்து சேரும். இது தவிர செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சங்கிற்கு பூஜை செய்யலாம்.

    ஒவ்வொரு நாளும் சங்கில் தண்ணீர் விட்டு அதில் துளசி, வில்வக்கட்டை, ஏலக்காய்,பச்சைக்கற்பூரம், குங்குமம், பூ சேர்த்து பூஜை செய்துவிட்டு அதில் சிறிது நீரைக்குடித்துவிட்டு, சிறிது நீரை விட்டு வாசற்படியில் தெளிக்கவும்.

    இப்படி 90 நாள் செய்தால் திருஷ்டி, போட்டி பொறாமை நீங்கும்.

    ஆண், பெண் ஆகியோருக்கு இருக்கும் திருமண தோஷம், செவ்வாய் தோஷம் நீங்க சங்கில்பசும்பால் விட்டு 27 செவ்வாய்கிழமை அம்மனை பூஜித்து வந்தால் தோஷம் நீங்கி திருமணம் நடைபெறும்.

    குழந்தைகளுக்கு இதில்பசும்பால் ஊற்றி வைத்துப்பாலாடையாகப் புகட்ட நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.

    வலம்புரிசங்கு இருக்கும் வீட்டில் துர்தேவதைகள் நெருங்காது.

    இச்சங்கில் தண்ணீர் விட்டு பூஜை செய்து அதை அருந்தினால் வியாதிகள் குணமடையும்.

    • கோவிலின் சன்னதிகள், கிட்டத்தட்ட தெருவோர கோயில்களின் அளவுக்கு பெரிய அளவில் இருக்கிறது.
    • திருவாரூரில் மூலவரை வன்மீகநாதர் என்ற திருப்பெயரிட்டு அழைக்கின்றனர்.

    முப்பெருந்தேவியின் அம்சமாக விளங்கும் திருவாரூர் கமலாம்பிகை!

    திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலை சுற்றிப் பார்க்க வேண்டுமானால், முழுமையாக ஒருநாள் ஆகும் அவ்வளவு பெரிய கோவில்.

    பெரும்பாலான கோயில்களின் சுற்றுப்பிரகாரத்தில் சிறிய சன்னதிகள்தான் இருக்கும்.

    ஆனால், திருவாரூர் கோயிலின் உள்ளே இருக்கும் சன்னதிகள், கிட்டத்தட்ட தெருவோர கோயில்களின் அளவுக்கு பெரிய அளவில் இருக்கிறது.

    இத்தலத்தில் உள்ள பக்தர்கள் ராகு கால துர்க்கையை வழிபட்டு பதவி உயர்வு பணிமாற்றம் உள்ளிட்ட பல காரியங்கள் வெற்றியடையப் பெறுகிறார்கள்.

    இத்தலத்து சண்முகரை வழிபட்டால் பகை விலகும் நீலோத்பலாம்பாளை வழிபட்டால் அர்த்தஜாமத்தில் நைவேத்தியம் செய்து பால் சாப்பிட்டால் குழந்தை வரம் கிடைக்கிறது.

    பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவதும் நிகழ்கிறது. ருணவிமோசனப் பெருமானை வழிபட்டால் கடன் தொல்லை, உடற்பிணிகள் ஆகியன விட்டு விலகும்.

    மேலும் பிரதான மூர்த்தியான தியாகேசரை வணங்கினால் திருமண வரம், குழந்தை வரம், கல்வி மேன்மை, வேலை வாய்பபு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு ஆகியவை நிறைவேறுகிறது.

    மூலவர் வன்மீகி நாதரை வழிபட்டால் எண்ணற்ற வரங்களும், செல்வ செழிப்பும் கிடைக்கும், பாவங்கள் நீங்கும், ஆணவம் மறையும். அம்மன் சன்னதியில் உள்ள அட்சர பீடத்தை வணங்கினால் கல்வியறிவு பெருகும்.

    திருவாரூரில் மூலவரை வன்மீகநாதர் என்ற திருப்பெயரிட்டு அழைக்கின்றனர்.

    இவர் தலையில் பிறைச்சந்திரனை சூடியுள்ளதைப் போல, இத்தலத்து நாயகி கமலாம்பிகையும் சந்திரனை நெற்றியில் சூடியிருக்கிறாள். க-கலைமகள், ம-மலைமகள், ல-அலைமகள் ஆகிய முப்பெரும் தேவியரின் அம்சமாக விளங்குகிறாள்.

    வலக்கரத்தில் மலர் ஏந்தியும், இடது கரத்தை இடையில் வைத்தும், கால்களை யோகாசன நிலையில் அமைத்தும் ராணி போல் காட்சி தருகிறாள்.

    சிவன் கோயில்களில் தேவாரம் பாடியதும், "திருச்சிற்றம்பலம்' எனக் கூறி முடிப்பார்கள்.

    சிதம்பரம் நடராஜர் கோயிலே முதல் கோவில் என்ற அடிப்படையில், அங்கு நடராஜர் நடனமாடும் சிற்றம்பலத்தை இப்படி சொல்வதுண்டு.

    ஆனால், சிதம்பரம் கோவிலுக்கும் முந்தைய கோயில் திருவாரூர் எனக் கருதப்படுவதால், இந்தக் கோவிலில் மட்டும் தேவாரம் பாடி முடித்ததும், "திருச்சிற்றம்பலம்' என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதில்லை.

    தமிழகத்திலுள்ள தேர்களிலேயே திருவாரூர் தேர் தான் மிகவும் பெரியதாகவும், அழகாகவும் இருக்கும்.

    இதனால் தான் "திருவாரூர் தேரழகு' என்பார்கள்.

    சிவபெருமான் இத்தலத்தில் மட்டும் 364 திருவிளையாடல்கள் நிகழ்த்தியுள்ளார்.

    திருவாரூரில் பிறந்தால் முக்தி என்பதால், எமனுக்கு வேலை இல்லாமல் போனது.

    எனவே இங்கு எமனே, சண்டிகேஸ்வரராக இருந்து இறைவனை வேண்டி தன் வேலையை காப்பாற்றிக் கொண்டார். எமபயம் உள்ளவர்கள் இங்கு வழிபடுவது சிறப்பு.

    திருவாரூரில் தியாகராஜரின் முக தரிசனம் காண்பவர்கள், 3 கி.மீ. தொலைவிலுள்ள விளமல் சிவாலயத்தில் பாத தரிசனம் காண்பது சிறப்பு.

    சிதம்பர ரகசியம் போல, தியாகராஜ ரகசியம் இந்த கோவிலின் தனிச்சிறப்பு. தியாகராஜருக்கு பின்னுள்ள மூலஸ்தானத்தில் அந்த ரகசியம் உள்ளதாக கூறப்படுகிறது.

    லலிதா சகஸ்ரநாமத்தின் மொத்த வடிவமாக, இத்தலத்து நாயகி கமலாம்பிகை விளங்குகிறாள். எனவே இங்குள்ள தீர்த்தம் "கமலாலயம்' எனப்படுகிறது.

    பங்குனி உத்திரத்தில் இங்கு நீராடினால், கும்பகோணத்தில் 12 மகாமகம் நீராடிய பலன் உண்டு என்பது ஐதீகம். குளத்தின் நடுவே நாகநாதர் சன்னதி உள்ளது. நாகதோஷம் உள்ளவர்கள் இங்கு வழிபடுகின்றனர்.

    பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை தான் சிவாலயங்களில் பிரதோஷ பூஜை நடத்தப்படும். ஆனால், திருவாரூர் தியாகராஜர் கோவிலில் தினமும் மாலை 4.30 முதல் 6 மணி வரை பிரதோஷ பூஜை நடத்தப்படுகிறது.

    இதை "நித்திய பிரதோஷம்' என்பார்கள். இந்த நேரத்தில் தியாகராஜரை முப்பத்து முக்கோடி தேவர் களும் தரிசிப்பதாக ஐதீகம்.

    எனவே, இந்தக் கோவிலுக்கு மாலை வேளையில் சென்றால், எல்லா தேவர்களின் அருளையும் பெற்ற புண்ணியம் கிடைக்கும்.

    • வளர்பிறை அஷ்டமியில் இந்த பூஜையை செய்வதால் நிம்மதியாக வாழலாம்.
    • பைரவருக்கு ஏலக்காய் மாலை செலுத்தலாம்.

    பிரச்சனைகளை தீர்க்கும் ஞாயிற்றுக்கிழமை காலபைரவர் வழிபாடு

    ஞாயிற்றுக்கிழமை மாலை வேளையில் அல்லது ராகு காலத்தில் ருத்திர அபிஷேகம், மிளகு வடை மாலை சாற்றி ஒரு பூசணி மிளகு தீபம் அல்லது மற்ற பழங்களில் மிளகு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணம் பாக்கியம் கிட்டும்.

    ஜாதக கர்ம வினைகள் அகலும், காரியத்தடைகள் நீங்கும், நினைத்தது கைகூடும், எதிரி வசியமாவார், மறைமுக எதிரிகளும் பைரவரை பூஜிப்பதால் மறைந்து விடுவார்கள்.

    கடன் தொல்லை தீர

    கடன் வாங்கி வட்டி, அசல் கட்ட இயலாதவர்கள் ஞாயிறு ராகு காலத்தில் காலபைரவருக்கு முந்திரி பருப்பு மாலை கட்டி, செந்தாமரை பூ அணிவித்து, கேரட் அல்வா, கோதுமை அரிசி பலகாரம், அவல், கேசரி, சிவப்பு ஆப்பிள் படையலிட்டு, புனுகு சாற்றி வெண்பொங்கல் நைவேத்யமிடவும்.

    ஒரு தலைவாழை இலை வைத்து அதன் மீது நெல் 1 படி பிரப்பி அதன் மீது ஒரு தலைவாழை இலை வைத்து பச்சரிசி 1 படி குங்குமம் சிறிதளவு மஞ்சள்பொடி, நெய் கலந்து பரப்பி அதைச்சுற்றிலும் ஐந்து எண்ணெய், சிறிதளவு மஞ்சள்தூள் கலந்து முப்பது பழங்களில் மிளகு தீபம் ஏற்றி ஸ்ரீ சொர்ண பரைவரை வழிபடலாம்.

    இந்த வழிபாட்டை செய்யும் போதுபைரவி தேவி காயத்ரி மந்திரத்தை 108 முறை ஜபித்து, ஸ்ரீபைரவரை ஒன்பது வாரம் தொடர்ந்து அஷ்டோத்திர அர்ச்சனை செய்து வழிபட செல்வ செழிப்பைப்பெறலாம்.

    பணம் குவியும், அஷ்ட ஐஸ்வர்யமும் பெறலாம்.

    பெரிய பழங்களில் தீபம் ஏற்ற முடியவில்லை என்றால் சிறிய பழங்களில் ஏற்றலாம். அல்லது சிறிய வெங்கல கிண்ணத்தில் முப்பது மிளகைத்தூள் செய்து தீபம் ஏற்றலாம் அல்லது ஒரு பூசணியில் மிளகு தீபம் ஏற்றலாம்.

    இந்த விசேஷ பரிகாரத்தை மாதம் ஒரு முறை வரும் ஜனம அல்லது த்ரிஜன்ம நஷத்திரம் அன்றும் செய்வது சாலச்சிறந்தது.

    மற்றும் பவுர்ணமியும், வளர்பிறை அஷ்டமி நாளிலும் இந்தப் பூஜையை செய்வதால் நிம்மதியாக வாழலாம்.

    நமது கவலைகள் பிரச்சினைகள், ஏக்கங்கள், சோகங்கள், இப்படி அனைத்தையும் போக்குவதற்கு ஓர் அரிய உபாயம் இந்த பூஜை.

    ஸ்ரீ ஸ்வர்ணபைரவர் மந்திரம் ஜபிக்கும்போது, ஏலக்காய் சிறிதளவு குங்குமம், மஞ்சள், நெய் கலந்து முத்துக்களால்பைரவர் திருவடியில் அர்ச்சனை செய்யலாம்.

    பைரவருக்கு ஏலக்காய் மாலை செலுத்தலாம். ஒரு பிடி ஏலக்காயை பைரவர் பாதத்தில் வெற்றிலை மேல் வைக்கலாம் கடன் தீர்ந்து பலன் உடனே கைகூடும்.

    • பைரவர் வழிபாடு செய்வது பயத்தைப் போக்கி, வாழ்வில் தன்னம்பிக்கையைத் தரும்.
    • மாலை 4.30- 6 மணிக்குள் திருவிளக்கேற்றி வீட்டிலேயே இந்த போற்றியை சொல்லலாம்.

    ஸ்ரீ பைரவர் 108 போற்றி

    ஓம் பைரவனே போற்றி

    ஓம் பயநாசகனே போற்றி

    ஓம் அஷ்டரூபனே போற்றி

    ஓம் அஷ்டமித் தோன்றலே போற்றி

    ஓம் அயன்குருவே போற்றி

    ஓம் அறக்காவலனே போற்றி

    ஓம் அகந்தையழிப்பவனே போற்றி

    ஓம் அடங்காரின் அழிவே போற்றி

    ஓம் அற்புதனே போற்றி

    ஓம் அசிதாங்க பைரவனே போற்றி

    ஓம் ஆனந்த பைரவனே போற்றி

    ஓம் ஆலயக்காவலனே போற்றி

    ஓம் இன்னல் பொடிப்பவனே போற்றி

    ஓம் இடுகாட்டில் இருப்பவனே போற்றி

    ஓம் உக்ர பைரவனே போற்றி

    ஓம் உடுக்கை ஏந்தியவனே போற்றி

    ஓம் உதிரம் குடித்தவனே போற்றி

    ஓம் உன்மத்த பைரவனே போற்றி

    ஓம் உறங்கையில் காப்பவனே போற்றி

    ஓம் ஊழ்வினை தீர்ப்பவனே போற்றி

    ஓம் எல்லை தேவனே போற்றி

    ஓம் எளிதில் இரங்குபவனே போற்றி

    ஓம் கபாலதாரியே போற்றி

    ஓம் கங்காளமூர்த்தியே போற்றி

    ஓம் கர்வ பங்கனே போற்றி

    ஓம் கல்பாந்த பைரவனே போற்றி

    ஓம் கதாயுதனே போற்றி

    ஓம் கனல்வீசும் கண்ணனே போற்றி

    ஓம் கருமேக நிறனே போற்றி

    ஓம் கட்வாங்க தாரியே போற்றி

    ஓம் களவைக் குலைப்போனே போற்றி

    ஓம் கருணாமூர்த்தியே போற்றி

    ஓம் கால பைரவனே போற்றி

    ஓம் காபாலிகர் தேவனே போற்றி

    ஓம் கார்த்திகையில் பிறந்தவனே போற்றி

    ஓம் காளாஷ்டமிநாதனே போற்றி

    ஓம் காசிநாதனே போற்றி

    ஓம் காவல்தெய்வமே போற்றி

    ஓம் கிரோத பைரவனே போற்றி

    ஓம் கொன்றைப்பிரியனே போற்றி

    ஓம் சண்ட பைரவனே போற்றி

    ஓம் சட்டை நாதனே போற்றி

    ஓம் சம்ஹார பைரவனே போற்றி

    ஓம் சங்கடம் தீர்ப்பவனே போற்றி

    ஓம் சிவத்தோன்றலே போற்றி

    ஓம் சிவாலயத்து இருப்போனே போற்றி

    ஓம் சிக்ஷகனே போற்றி

    ஓம் சீர்காழித்தேவனே போற்றி

    ஓம் சுடர்ச்சடையனே போற்றி

    ஓம் சுதந்திர பைரவனே போற்றி

    ஓம் சிவ அம்சனே போற்றி

    ஓம் சுவேச்சா பைரவனே போற்றி

    ஓம் சூலதாரியே போற்றி

    ஓம் சூழ்வினை அறுப்பவனேபோற்றி

    ஓம் செம்மேனியனே போற்றி

    ஓம் ளக்ஷத்ரபாலனே போற்றி

    ஓம் தட்சனை அழித்தவனே போற்றி

    ஓம் தலங்களின் காவலனே போற்றி

    ஓம் தீது அழிப்பவனே போற்றி

    ஓம் துர்சொப்பன நாசகனே போற்றி

    ஓம் தெற்கு நோக்கனே போற்றி

    ஓம் தைரியமளிப்பவனே போற்றி

    ஓம் நவரச ரூபனே போற்றி

    ஓம் நரசிம்ம சாந்தனே போற்றி

    ஓம் நள்ளிரவு நாயகனே போற்றி

    ஓம் நரகம் நீக்குபவனே போற்றி

    ஓம் நாய் வாகனனே போற்றி

    ஓம் நாடியருள்வோனே போற்றி

    ஓம் நிமலனே போற்றி

    ஓம் நிர்வாணனே போற்றி

    ஓம் நிறைவளிப்பவனே போற்றி

    ஓம் நின்றருள்வோனே போற்றி

    ஓம் பயங்கர ஆயுதனே போற்றி

    ஓம் பகையளிப்பவனே போற்றி

    ஓம் பரசு ஏந்தியவனே போற்றி

    ஓம் பலிபீடத்து உறைவோனே போற்றி

    ஓம் பாபம் தீர்ப்பவனே போற்றி

    ஓம் பால பைரவனே போற்றி

    ஓம் பாம்பணிந்த தெய்வமே போற்றி

    ஓம் பிரளயகாலனே போற்றி

    ஓம் பிரம்ம சிரச்சேதனே போற்றி

    ஓம் பூஷண பைரவனே போற்றி

    ஓம் பூதங்களின் நாதனே போற்றி

    ஓம் பெரியவனே போற்றி

    ஓம் பைராகியர் நாதனே போற்றி

    ஓம் மல நாசகனே போற்றி

    ஓம் மகோதரனே போற்றி

    ஓம் மகா பைரவனே போற்றி

    ஓம் மலையாய் உயர்ந்தவனே போற்றி

    ஓம் மகா குண்டலனே போற்றி

    ஓம் மார்த்தாண்ட பைரவனே போற்றி

    ஓம் முக்கண்ணனே போற்றி

    ஓம் முக்தியருள்வோனே போற்றி

    ஓம் முனீஸ்வரனே போற்றி

    ஓம் மூலமூர்த்தியே போற்றி

    ஓம் யமவாதனை நீக்குபவனே போற்றி

    ஓம் யாவர்க்கும் எளியவனே போற்றி

    ஓம் ருத்ரனே போற்றி

    ஓம் ருத்ராட்சதாரியே போற்றி

    ஓம் வடுக பைரவனே போற்றி

    ஓம் வடுகூர் நாதனே போற்றி

    ஓம் வடகிழக்கு அருள்வோனே போற்றி

    ஓம் வடைமாலைப் பிரியனே போற்றி

    ஓம் வாரணாசி வேந்தே போற்றி

    ஓம் வாமனர்க்கு அருளியவனே போற்றி

    ஓம் விரும்பியதை அருள்வோனே போற்றி

    ஓம் விபீஷண பைரவனே போற்றி

    ஓம் வீழாமல் காப்பவனே போற்றி போற்றி!

    • பித்ரு தோஷத்தைப் போக்கவல்லது பைரவர் வழிபாடு
    • குற்றாலத்தில் குடி இருப்பவர் கால பைரவர். ஆறகழூரில் அஷ்ட பைரவர்கள்.

    பதவி, புகழ் தரும் பைரவ தரிசனம்

    குலதெய்வ கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செலுத்த முடியாதவர்களை, ஏதேனும் காரணத்தினால் தீர்த்த யாத்திரை, விரதம் போன்ற அனுஷ்டானங்களை கடைபிடிக்க முடியாதவர்களை, பித்ருக்களுக்கு உரிய நீத்தார் கடனை நிறைவேற்ற இயலாதவர்களை சில தோஷங்கள் பீடிக்கும் என்பார்கள்.

    இதற்கு பரிகாரமாக சித்தர்கள் சில வழிமுறைகளை கூறியுள்ளனர்.

    அந்த வகையில், அகத்தியர், ''சிதைந்திட்ட சிரார் தமது பெரும் பிணியீயுமப்பா பிண்டமதனை காலத்தீயாது விடின் வரும் வாட்டம் வம்சத்தையும் அழிக்குமாதலின் ஆதி சிவனவன் பைரவ வடிவேந்தி விளங்க யவரை யுரிய காலத்திலாராதித்து விமோசனங் காண்பீரே'' என்கிறார்.

    பித்ரு தோஷத்தைப் போக்கவல்லது பைரவர் வழிபாடு என்று சொன்ன அகத்தியர் அந்த பைரவர் கோயில் கொண்டிருக்கும் தலங்களையும் விவரிக்கிறார்.

    ''அஞ்சருவி சலத்தருகு யடுத்தே வரகலூராம் காரையான் பட்டியிலுமே நின்ற சோழ மண்டலத்துக் கோட்டை செங்கனூராம் முழு மண்டலமே.

    தோணியப்பனருள் கொண்ட விக்கிரமனும் சுங்காஸ்தமனத்தில் வந்திருந்து அருள் செய்ய சித்தங் கண்டோமே. ஈலுக்குடிவடம் பின்னே சட்டநாதனை கண்டோமே: குறுங்குடி பைரவனை அயனுந்தொழப் பார்த்தோமிது சத்தியமே'' என்கிறார்.

    இப்பாடலின் பொருள்:

    குற்றாலத்தில் குடி இருப்பவர் கால பைரவர். ஆறகழூரில் அஷ்ட பைரவர்கள். காரைக்குடியில் பைரவர்.

    சோழபுரத்தில் பைரவ சேசுவரர். அதியமான் கோட்டையில் கால பைரவர், திருச்செங்கோட்டில் பைரவ நாத மூர்த்தி, இலுப்பை குடியில் பைரவ மூர்த்தி, குண்டடத்தில் கொங்கு வடுகநாதன், சீர்காழியில் சட்டநாதர் என்று பக்தர்களுக்கு அருள்பரிபாலிக்கிறார் பைரவ மூர்த்தி.

    திருக்குறுங்குடி பைரவரை விஷ்ணுவும் பிரம்மனும் இந்திரனும் மற்றும் நவகோள் நாயகர்களும் பூஜித்து வருகின்றனர்.

    அனுதினமும் & கலியுகம் முற்றும் காலம் வரையிலும் வாயுபகவான் இந்த திருக்குறுங்குடி பைரவரை உபாசனை செய்து வருவார் என்கிறது சித்தர் வாக்கு.

    வெள்ளிக்கிழமை இரவு பைரவரை தொழுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

    அதுவும் சீர்காழியில், ஆடி வெள்ளி இரவு பைரவரை தொழுதால் பில்லி, சூனிய, ஏவல் பாதிப்புகள் அகலும்; தீராத பிணி போகும் என்கிறார் சிவவாக்கியர்.

    பைரவ பூஜை மகத்தானது. மகிமை வாய்ந்தது. பெரிய பதவிகளையும் புகழையும் அளிக்கவல்லது.

    செவ்வரளி அல்லது சிவப்பு நிற பூக்களினால் ஞாயிற்றுக்கிழமை ராகு காலங்களில் பைரவரை ஆராதனை செய்வதும் பைரவருக்குப் பிடித்த கோதுமை பாயசம் படைத்து, வினியோகம் செய்வதும், இழந்த பொருளை மீட்டுத்தரும் என்கிறது அகத்தியர் நாடி.

    ''போன பொருள் கை கூடும். பகையான உறவும் நட்பாகும்.

    பைரவர் படத்தை வீட்டில் வடக்குப்புறம் வைத்தால் & வாஸ்து தோஷத்தினால் வரக்கூடிய பீடை அகலும் என்கிறார் காக புஜண்டர்

    • சர்வேஸ்வரனின் திருவடிவமான பைரவர் மாதம் ஒரு பைரவராகக் காட்சி தருகிறார்.
    • ஆவணி விஸ்வான் -ஸ்வர்ணாகர்ஷண பைரவர்

    ஒவ்வொரு மாதமும் வழிபட வேண்டிய பைரவர்கள்

    சர்வேஸ்வரனின் திருவடிவமான பைரவர் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பைரவராகக் காட்சி தருகிறார்.

    எந்தெந்த மாதத்தில் எந்த பைரவர் ஆட்சி புரிகிறாரோ அந்த பைரவரை வழிபட்டு நன்மை அடையலாம்.

    சித்திரை அம்சுமான் - சண்ட பைரவர்

    வைகாசி தாதா - ருரு பைரவர்

    ஆனி ஸவிதா - உன்மத்த பைரவர்

    ஆடி அரியமான் - கபால பைரவர்

    ஆவணி விஸ்வான் - ஸ்வர்ணாகர்ஷண பைரவர்

    புரட்டாசி பகன் - வடுக பைரவர்

    ஐப்பசி பர்ஜன்யன் - க்ஷத்ரபால பைரவர்

    கார்த்திகை துவஷ்டா - பீஷண பைரவர்

    மார்கழி மித்திரன் -அசிதாங்க பைரவர்

    தை விஷ்ணு - குரோதன பைரவர்

    மாசி வருணன் - ஸம்ஹார பைரவர்

    பங்குனி பூஷா - சட்டநாத பைரவர்.

    • அனைத்து சிவாலயங்களில் பரிகார தெய்வமாக பைரவ வழிபாடு உள்ளது.
    • இந்த வழிபாடு உயரிய ஆற்றலையும் சக்தியையும் கொடுக்க வல்லது.

    பைரவருக்குரிய வழிபாட்டு நேரம்

    படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் ஆற்றும் பைரவரின் வழிபாடு வடக்கேயிருந்து வந்த கபாலிக வழிபாட்டின் ஒரு பகுதியாகும்.

    அனைத்து சிவாலயங்களில் பரிவார தெய்வமாக பைரவ வழிபாடு உள்ளது.

    இல்லங்களில் திரிசூல வழிபாடாக போற்றப்படுகிறது.

    வீடுகளில் காவல் தெய்வமான பைரவர் வடிவங்களை சிலைகளாகவோ படமாகவோ வைத்து வழிபடுவதற்கு பதில் வீட்டின் சுவரில் திரிசூலத்தை வரைந்து அதன் அருகில் திருவிளக்கேற்றி வழிபடுகின்றனர்.

    அனைத்து சிவாலயங்களிலும் வழிபாடு சூரியனிடம் இருந்து ஆரம்பித்து அர்த்தஜாமப் பூஜையாக பைரவருடன் முடிவடைகிறது.

    இரவு அர்த்தஜாமப் பூஜை முடிந்ததும் பைரவருக்கான சிறப்பு வழிபாடுகள் செய்து ஆலயத்தின் கதவுகளை மூடி ஆலய சாவிக்கொத்தை அவரின் காலடியில் வைப்பது வழக்கம்.

    பாதுகாப்பற்ற இந்நாளில் இப்படி சாவிகளை வைப்பதை தவிர்த்து பூஜை முடிந்ததன் அடையாளமாக கைமணியையும் அபிஷேக கலசம் அல்லது கைச்செம்பையும் வைக்கின்றனர்.

    ஆலயங்களில் நடைபெறும் வருடாந்திர பிரமோற்சவத்திற்கு முன்னும் பின்னும் பைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

    விசேஷ தினங்களில் இவருக்கு நெய் அபிஷேகம் செய்யப்படுகிறது.

    அந்த விசேஷ தின பூசையில் எட்டுவித பட்சணங்களும், எட்டுவித அன்னங்களும், நைவேத்திய பொருட்களாக நிவேதிக்கப்படுகின்றன.

    மேலும் பைரவருக்கு எட்டு வித மலர்களால் அர்ச்சனை செய்து எட்டுவித ஆரத்திகளும் செய்யப்படுகின்றன.

    பைரவருக்குரிய வழிபாட்டு நேரம் நள்ளிரவாகும். இந்த அகால நேரத்தில் பராசக்தியானவள் பைரவி என்னும் பெயரில் நடமாடுகின்றாராம்.

    அவளுடன் இறைவனும் பைரவராக தலத்தை வலம் வருவாராம். அதனால் சித்தர்கள் அந்த நள்ளிரவு நேரத்தில் திரிபுர பைரவியையும் பைரவரையும் தியானிக்கின்றார்கள்

    இந்த வழிபாடு உயரிய ஆற்றலையும் சக்தியையும் கொடுக்க வல்லது. பைரவரை மனம் உருகி வழிபடுவர்களுக்கும், உரிய முறைப்படி தீபம் ஏற்றி வழிபடுபவர்களுக்கும் இந்த சக்தி கிடைக்கும்.

    • ஆதிபைரவரிடம் இருந்து எட்டு பைரவர்கள் தோன்றினர்.
    • பைரவரின் கட்டளைப்படியே காலச்சக்கரம் சுழல்கிறது.

    கிரக தோஷத்தை நீக்கும் பைரவர்!

    ஆதிபைரவரிடம் இருந்துதான் முதலில் அசிதாங்க பைரவர், உருபைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், கால பைரவர், பீஷண பைரவர், சம்ஹார பைரவர் எனும் அஷ்ட பைரவர்கள் தோன்றினர்.

    பின்னர் இந்த எட்டு பைரவர் திருமேனி ஒவ்வொன்றிலிருந்தும் எட்டு எட்டாக,

    ஒவ்வொரு காரணத்திற்கேற்ப 64 திருக்கோலங்களில் பைரவர்கள் வாகனத்துடனும், வாகனம் இல்லாமலும் எல்லாக் கோவில்களிலும் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்கள்.

    பைரவரை ஜோதிட நூல்கள் காலமே உருவாய் கொண்ட காலபுருஷனாக கூறுகின்றன.

    பன்னிரெண்டு ராசிகளும் அவரது உருவின் பகுதிகளாகின்றன.

    மேஷம்-சிரசு, ரிஷபம்-வாய், மிதுனம்-இரு கரங்கள், கடகம்-மார்பு, சிம்மம்-வயிறு, கன்னி-இடை, விருச்சிகம்-லிங்கம், தனுசு-தொடைகள், மகரம்-முழந்தாள், கும்பம்-கால்களின் கீழ்பகுதி, மீனம்-அடித்தளங்கள்.

    பைரவர் அரசர் என்றால், அவர் இட்ட கட்டளைகளை நிறைவேற்றும் சேவகர்களே கிரகங்கள்.

    பைரவரின் கட்டளைப்படியே காலச்சக்கரம் சுழல்கிறது.

    அவர் கட்டளைப்படியே எல்லா கிரகங்களும் செயல்படுகின்றன.

    அவரைச் சரணடைந்து நெஞ்சம் உருக வழிபட்டால் காலத்தின் கட்டுப்பாட்டையும் மீறி கிரக தோஷங்களை அகற்றி நன்மை புரிவார்.'

    ×