என் மலர்
நீங்கள் தேடியது "ssmb29"
- மகேஷ் பாபு நடிப்பில் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகவுள்ள படம் 'எஸ்எஸ்எம்பி29'.
- இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த வெளியாகியுள்ளது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனரான ராஜமவுலி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்று படத்தின் பாடலுக்காக ஆஸ்கர் விருதையும் வென்றது. இதைத்தொடர்ந்து ராஜமவுலி அடுத்ததாக நடிகர் மகேஷ் பாபு நடிக்கும் 'எஸ்எஸ்எம்பி29' படத்தை இயக்கவுள்ளார்.

ராஜமவுலி - மகேஷ் பாபு
மகேஷ் பாபு தற்போது எஸ்.எஸ்.எம்.பி. 28 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததும் ராஜமவுலி படத்தின் படப்பிடிப்பு துவங்கப்படவுள்ளது. இந்த படம் ஆக்ஷன், அட்வென்ச்சர் ஜானரில் இருக்கும் என்றும் இந்த படத்தின் கதை உலகம் முழுவதும் வெவ்வேறு இடங்களில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது என்றும் ராஜமவுலி தெரிவித்திருந்தார். மேலும் இப்படம் மூன்று பாகங்களாக உருவாக்க ராஜமவுலி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மகேஷ் பாபு
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் படப்பிடிப்பு மகேஷ் பாபுவின் பிறந்தநாளான ஆகஸ்ட் 9ம் தேதி தொடங்கவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
- மலையாள பட உலகில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் பிரித்விராஜ்
- இந்த படத்தை அதிக பட்ஜெட்டில் ஹாலிவுட் தரத்துடன் எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.
மலையாள பட உலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் பிரித்விராஜ் தமிழ் படங்களிலும் நடித்து இருக்கிறார். சில மாதங்களுக்கு முன் வெளியான ஆடுஜீவிதம் திரைப்படத்தில் பிரம்மிக்கும் அளவு நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் பிரித்விராஜ். அதைத்தொடர்ந்து மலையாளத்தில் குருவாயூர் அம்பலநடையில் திரைப்படத்தில் நடித்து இருந்தார். இப்படம் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் ராஜமவுலி இயக்கும் SSMB29 படத்தில் வில்லனாக நடிக்க பிரித்விராஜ் ஒப்பந்தமாகி உள்ளார்.
இதில் நாயகனாக மகேஷ்பாபு நடிக்கிறார். இந்த படத்தை அதிக பட்ஜெட்டில் ஹாலிவுட் தரத்துடன் எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. அனைத்து மொழிகளில் இருந்தும் முன்னணி நடிகர் நடிகைகள் இதில் நடிக்க உள்ளனர்.
உலகத்தை சுற்றும் ஒரு சாகச பயணத்தை பின்னணியாக கொண்டு தயாராகும் படம் இது என்றும் பெரும் பகுதி படப்பிடிப்பு அமேசான் காடுகளில் நடத்தப்படும் என்றும் ராஜமவுலி ஏற்கனவே அறிவித்துள்ளார்.
மகேஷ் பாபுவுக்கு வில்லனாக பிரித்விராஜ் நடிக்க இருப்பது படத்துக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இப்படம் இரண்டு பாகங்களாக உருவாக உள்ளது.
- இப்படத்திற்கு தற்காலிகமாக SSMB29 என தலைப்பிட்டுள்ளனர்.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களுல் இருப்பவர் மகேஷ் பாபு. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான குண்டூர் காரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக அமைந்தது.
அடுத்ததாக மகேஷ் பாபு இந்திய சினிமாவின் பெருமை மிக்க இயக்குனரான ராஜமௌலி இயக்கத்தில் திரைப்படம் நடிக்கவுள்ளார். இந்த படத்தை அதிக பட்ஜெட்டில் ஹாலிவுட் தரத்துடன் எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. அனைத்து மொழிகளில் இருந்தும் முன்னணி நடிகர் நடிகைகள் இதில் நடிக்க உள்ளனர். இப்படம் இரண்டு பாகங்களாக உருவாக உள்ளது. இப்படத்திற்கு தற்காலிகமாக SSMB29 என தலைப்பிட்டுள்ளனர்.
உலகத்தை சுற்றும் ஒரு சாகச பயணத்தை பின்னணியாக கொண்டு தயாராகும் படம் இது என்றும் பெரும் பகுதி படப்பிடிப்பு அமேசான் காடுகளில் நடத்தப்படும் என்றும் ராஜமவுலி ஏற்கனவே அறிவித்துள்ளார். இந்நிலையில் படத்தின் நாயகியாக பிரியங்கா சோப்ராவும் வில்லன் கதாப்பாத்திரத்திற்கு மலையாள அநடிகர் பிரித்விராஜ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

திரைப்படத்தின் இசையை எம்.எம் கீரவானி மேற்கொள்கிறார். ஒளிப்பதிவை பிஎஸ் வினோத் மேற்கொள்ளவுள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் வரும் ஜனவரி மாதத்தில் இருந்து தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.