என் மலர்
நீங்கள் தேடியது "stunt"
- அஜித்தின் 62 - வது படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.
- இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் ஒரு ஸ்டண்ட் காட்சியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
பிரபல நடிகர் அஜித்குமார்- திரிஷா நடிக்கும் புதிய படம் 'விடாமுயற்சி' . இதனை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்குகிறார். அஜித்தின் 62 - வது படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.
இப்படத்தில் வில்லனாக ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் ஆரவ் நடிக்கின்றனர். மேலும் நடிகை ரெஜினா கசெண்ட்ரா நடிக்கின்றனர். இப்படத்தை 'லைகா' நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.
இதன் படப்பிடிப்புகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அஜர்பைஜானில் தொடங்கியது. படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் அங்கு நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டது. தொடர்ந்து 3 மாதம் அங்கு ஷூட்டிங் நடந்தது.
ஷூட்டிங் நடைப்பெற்ற போது ஆரவ் எடுத்த புகைப்படம் இன்ஸ்டாகிராமில் வைராலிகியது. பின் அஜித்திற்கு உடலில் சிறிய பிரச்சனை இருந்ததால் அதற்கு அறுவை சிகிச்சை செய்தார்.
அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் ஒரு ஸ்டண்ட் காட்சியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அக்காட்சியில் ஆரவ் சீட்டில் கட்டப்பட்டு இருக்கிறார். அஜித் ஜீப்பை ஓட்டுகிறார். சில நிமிடங்களில் அந்த ஜீப் கவிழ்கிறது. இக்காட்சியை ஸ்டண்ட் டூப் உதவி இல்லாமல் அவரே நடித்து இருப்பது பிரமிக்க வைக்கிறது. இக்காட்சி இப்பொழுது இணையதளத்தில் வைரலாகியது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பர்தா அணிந்த நபர் பைக் ஸ்டண்ட்களில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
- அந்த வீடியோவில், 2 நபர்கள் பைக்கில் அமர்ந்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பர்தா அணிந்தபடி ஒருவர் ஆபத்தான பைக் ஸ்டண்ட்களில் ஈடுபட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது.
அந்த வீடியோவில், 2 நபர்கள் பைக்கில் அமர்ந்துள்ளனர். அதில் பர்தா அணிந்த நபர் பைக்கை ஓட்டுகிறார். பர்தா அணிந்தவர் பைக் ஸ்டண்ட்களில் ஈடுபடுவதை சுற்றி உள்ளவர்கள் ஆச்சரியமாக பார்க்கிறார்கள்.
இந்த வீடியோ வைரலானதை அடுத்து, பர்தா அணிந்து பைக் ஒட்டிய இளைஞரை போலீசார் கைது செய்தனர். பைக்கின் பின்னர் உட்கார்ந்து வந்த இளைஞர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- பள்ளி மைதானத்தில் BMW காரில் 2 இளைஞர்கள் புழுதிபறக்க சாகசத்தில் ஈடுபட்டுள்ளனர்.
- இதனை பார்த்த ஆசிரியர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
கேரளாவில் 10ம் வகுப்பு மாணவர்கள் BMW காரை வாடகைக்கு எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் பத்தனம்திட்டாவில், பள்ளியில் பொதுத்தேர்வுக்கு முந்தைய பிரிவு உபச்சார நிகழ்ச்சியில் ஸ்டண்ட் செய்வதற்காக 10ம் வகுப்பு மாணவர்கள் BMW காரை ரூ.2000 கொடுத்து வாடகைக்கு எடுத்துள்ளனர்.
இதனையடுத்து, பள்ளி மைதானத்தில் BMW காரில் 2 இளைஞர்கள் புழுதிபறக்க சாகசத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை பார்த்த ஆசிரியர் உடனே பள்ளியின் வாயிற்கதவை மூடிவிட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காரைப் பறிமுதல் செய்து காரை ஓட்டிய 2 இளைஞர்களை கைது செய்தனர். பின்னர் 2 இளைஞர்களை ஜாமினில் போலீசார் விடுவித்தனர்.