என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 100657"

    இந்த இரு வீரர்களும் பிரெஞ்ச் ஓபன் போடிட்யில் 10வது முறையாக மோதுகின்றனர். மொத்த டென்னிஸ் தொடர் வரலாற்றிலும் 59-வது முறையாக மோதுகின்றனர்.
    பாரிஸ்:

    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர், பிரான்ஸில் உள்ள பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் ஆண்கள் ஒன்றையர் பிரிவின் 4வது சுற்று போட்டிகள் நேற்று நடைபெற்றது.

    இதில் ஒரு போட்டியில் நடப்பு சாம்பியனும், 'நம்பர் ஒன்' வீரருமான செர்பியோவைச் சேர்ந்த நோவக் ஜோகோவிச், அர்ஜென்டினாவின் டியாகோ ஸ்வாட்ஸ்மேனை எதிர்கொண்டார். இந்த போட்டியில் ஜோகோவிச் 6-1, 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ஸ்வாட்ஸ்மேனை  வீழ்த்தி வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

    மற்றொரு போட்டியில் கனடா வீரர் ஃபெலிக்ஸ் ஆகர்- அலியாசிம்மை, ஸ்பெயின் வீரர் நடால் எதிர்கொண்டார். இந்த போட்டியில் 3-6, 6-3, 6-2, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் நடால் ஃபெலிக்ஸ் ஆகரை தோற்கடித்து காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.

    இதன்மூலம் காலிறுதி போட்டியில் ஜோகோவிச்சை, நடால் எதிர்கொள்கிறார்.

    இந்த இரு வீரர்களும் பிரெஞ்ச் ஓபன் போடிட்யில் 10வது முறையாக மோதுகின்றனர். மொத்த டென்னிஸ் தொடர் வரலாற்றிலும் 59-வது முறையாக மோதுகின்றனர்.

    ஏற்கனவே 13 முறை பிரெஞ்ச் ஓபன் தொடரை வென்ற நடால், ஜோகோவிச்சை எதிர்கொள்ளும்போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
    பிரெஞ்சு ஓபன் தொடரை 13 முறை வென்ற ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ரபெல் நடாலும், உலகின் 'நம்பர் 1' வீரரும், நடப்பு சாம்பியனுமான செர்பியாவை சேர்ந்த நோவக் ஜோகோவிச்சும் மோதினர்.
    பாரிஸ்:

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இந்நிலையில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் முதல் காலிறுதி ஆட்டத்தில் பிரெஞ்சு ஓபன் தொடரை 13 முறை வென்ற ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ரபெல் நடாலும், உலகின் 'நம்பர் 1' வீரரும், நடப்பு சாம்பியனுமான செர்பியாவை சேர்ந்த நோவக் ஜோகோவிச்சும் மோதினர். 

    டென்னிஸ் உலகின் இரு பெரும் நட்சத்திரங்கள் மோதுவதால் இந்த போட்டிக்கு ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இருவரும் சம பலத்துடன் விளையாடினர். விறுவிறுப்பான நடைபெற்ற ஆட்டத்தில் 6-2, 4-6, 6-2, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் ரபேல் நடால் வெற்றி பெற்று பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
    36 வயதான நடால் ஒட்டுமொத்தமாக 21 கிராண்ட்சிலாம் பட்டம் வென்று (ஆஸ்திரேலிய ஓபன் 2, பிரெஞ்சு ஓபன் 13, விம்பிள்டன் 2, அமெரிக்க ஓபன் 4) முதல் இடத்தில் இருக்கிறார்.
    பாரீஸ்:

    கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

    நேற்று நடந்த அரை இறுதி ஆட்டம் ஒன்றில் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை 13 முறை வென்றவரும், 5-வது வரிசையில் உள்ளவருமான ரபெல் நடால் (ஸ்பெயின்) - மூன்றாம் நிலை வீரரான அலெக்சாண்டர் ஸ்வரேவ் (ஜெர்மனி) மோதினார்கள்.

    முதல் செட்டை நடால் 7-6 (10-8) என்ற கணக்கில் போராடி வென்றார். 2-வது செட் 6-6 என்ற சமநிலை இருந்த போது ஸ்வரேவ் காயத்தால் விலகினார். இதனால் நடால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    அவர் 30-வது முறையாக கிராண்ட்சிலாம் இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளார்.

    2-வது அரை இறுதியில் 8-வது வரிசையில் உள்ள கேஸ்பர் ரூட் (நார்வே)-2014-ம் ஆண்டு அமெரிக்க ஓபன் சாம்பியனான சிலிச் (குரோஷியா) மோதினார்கள்.

    இதில் கேஸ்பர்ரூட் 3-6, 6-4, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் 20-வது வரிசையில் உள்ள சிலிச்சை தோற்கடித்து முதல் முறையாக கிராண்ட்சிலாம் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

    23 வயதான கேஸ்பர் ரூட் இதற்கு முன்பு கடந்த ஆஸ்திரேலிய ஓபனில் 4-வது சுற்று வரை நுழைந்ததே சிறந்ததாக இருந்தது.

    நார்வேயை சேர்ந்த ஒருவர் கிராண்ட்சிலாம் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவது இதுவே முதல் முறையாகும். அந்த பெருமையை கேஸ்பர் ரூட் பெற்றார்.

    இந்திய நேரப்படி நாளை மாலை 6.30 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் ரபெல் நடால்-கேஸ்பர் ரூட் மோதுகிறார்கள்.

    களிமண் தரையான பிரெஞ்சு ஓபன் போட்டியில் விளையாடுவதில் நடால் வல்லவர். அவர் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை 13 முறை வென்று சாதனை படைத்துள்ளார். அவர் 2005, 2006, 2007, 2008, 2010, 2011, 2012, 2013, 2014, 2017, 2018, 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் பட்டம் வென்று இருந்தார். அவர் பிரெஞ்சு ஓபன் போட்டியில் 2009-ல் 4-வது சுற்றிலும், 2015-ல் கால் இறுதியிலும், 2016-ல் 3-வது ரவுண்டிலும், 2021-ல் அரை இறுதியிலும் தோற்று இருந்தார்.

    36 வயதான நடால் ஒட்டுமொத்தமாக 21 கிராண்ட்சிலாம் பட்டம் வென்று (ஆஸ்திரேலிய ஓபன் 2, பிரெஞ்சு ஓபன் 13, விம்பிள்டன் 2, அமெரிக்க ஓபன் 4) முதல் இடத்தில் இருக்கிறார்.

    அவருக்கு அடுத்தபடியாக பெடரர் (சுவிட்சர்லாந்து), ஜோகோவிச் (செர்பியா) தலா 20 கிராண்ட்சிலாம் பட்டங்களுடன் 2-வது இடத்தில் உள்ளனர். நடால் ஒட்டுமொத்தமாக 22-வது பட்டத்தையும், பிரெஞ்சு ஓபன் பட்டத்தை 14-வது முறையாகவும் நாளை வெல்வாரா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    நார்வே வீரர் கேஸ்பர் ரூட் முதல் தடவையாக கிராண்ட்சிலாம் பட்டம் வென்று சாதிப்பாரா என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.

    இந்திய நேரப்படி இன்று 6.30 மணிக்கு நடைபெறும் பெண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் நம்பர் ஒன் வீராங்கனையான இகா ஸ்வியாடெக் (போலந்து)-பதினெட்டாம் வரிசையில் இருக்கும் கோகோ கவூப் (அமெரிக்கா) மோதுகிறார்கள்.

    நடப்பு சாம்பியன் ஸ்வியா டெக் 2-வது கிராண்ட்சிலாம் பட்டம் வெல்லும் ஆர்வத்தில் உள்ளார். 18 வயதான கோகோ முதல் கிராண்ட்சிலாம் பட்டத்துக்காக காத்திருக்கிறார். 
    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியன் நடால், ரோஜர் பெடரர் 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.
    பாரீஸ்:

    கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டங்கள் நடந்தன.

    ஆண்கள் பிரிவில் 11 முறை சாம்பியனும், 2-ம் நிலை வீரருமான ரபெல் நடால் (ஸ்பெயின்), ஜெர்மனி தகுதி நிலை வீரர் யானிக் மடெனை எதிர்கொண்டார். ‘களிமண் தரை’ போட்டியின் ராஜா என்று வர்ணிக்கப்படும் நடால் வழக்கம் போல் ஆதிக்கம் செலுத்தியதோடு 6-1, 6-2, 6-4 என்ற நேர் செட்டில் யானிக்கை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார். 32 வயதான நடால் அடுத்து பெல்ஜியம் வீரர் டேவிட் கோபினுடன் மோதுகிறார்.

    மற்றொரு ஆட்டத்தில் 6-ம் நிலை வீரர் சிட்சிபாஸ் (கிரீஸ்) 4-6, 6-0, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் ஹூகோ டெலியனை (பொலிவியா) தோற்கடித்தார். இதே போல் முன்னாள் நம்பர் ஒன் வீரர் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 6-4, 6-3, 6-4 என்ற நேர் செட்டில் ஆஸ்கர் ஓட்டியை (ஜெர்மனி) வீழ்த்தி 3-வது சுற்றை எட்டினார். வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து), நிஷிகோரி (ஜப்பான்) ஆகியோரும் 2-வது சுற்றை வெற்றிகரமாக கடந்தனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2016-ம் ஆண்டு சாம்பியனான கார்பின் முகுருஜா (ஸ்பெயின்) 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் ஜோஹன்னா லார்சனை (சுவீடன்) சாய்த்து 3-வது சுற்றை எட்டினார். தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) தன்னை எதிர்த்த கிறிஸ்டினா குகோவை (சுலோவக்கியா) 6-2, 6-2 என்ற நேர் செட்டில் விரட்டியடித்தார். பிளிஸ்கோவா வெறும் 56 நிமிடங்களில் இந்த வெற்றியை சுவைத்தார். மற்றொரு முன்னணி வீராங்கனை எலினா ஸ்விடோலினா (உக்ரைன்) விளையாடாமலேயே 3-வது சுற்றுக்கு முன்னேறினார். அவருடன் மோத இருந்த சக நாட்டவரான கத்ரினா கோஸ்லோவா உடல் நலக்குறைவால் விலகியதால் ஸ்விடோலினா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    முதல் சுற்றில் ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பருக்கு அதிர்ச்சி அளித்த ரஷிய வீராங்கனை அனஸ்டசியா பொட்டாபோவா 2-வது சுற்றில் 4-6, 0-6 என்ற நேர் செட்டில் செக்குடியரசின் வோன்டோரோசோவாவிடம் வீழ்ந்தார். அதே சமயம் ஸ்லோனே ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா), செவஸ்தோவா (லாத்வியா), கனேபி (எஸ்தோனியா), சுவாரஸ் நவரோ (ஸ்பெயின்) உள்ளிட்டோர் 2-வது சுற்றில் வெற்றி கண்டனர்.

    ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர் திவிஜ் சரண், பிரேசில் வீரர் மார்செலோ டெமோலினருடன் கைகோர்த்து களம் இறங்கினார். இவர்கள் தங்களது முதலாவது சுற்றில் 6-3, 4-6, 6-2 என்ற செட் கணக்கில் ராபர்ட் லின்ஸ்டெட் (சுவீடன்)- மார்டோன் புசோவிக்ஸ் (ஹங்கேரி) இணையை தோற்கடித்தனர்.
    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்று நடால் 12-வது பட்டத்தை பெறுவாரா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
    பாரீஸ்:

    உலகின் முன்னணி டென்னிஸ் வீரர்களில் ஒருவர் ரபெல் நடால். உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் அவர் களிமண் தரையில் விளையாடுவதில் வல்லவர்.

    இதன் காரணமாக 32 வயதான நடால் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை 11 முறை வென்று சாதனை படைத்துள்ளார்.

    அவர் 2005, 2006, 2007, 2008, 2010, 2011, 2012, 2013, 2014, 2017, 2018 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் ஆகி இருந்தார்.

    வேறு எந்த வீரரும் ஒரு கிராண்ட் சிலாமில் இதுவரை அதிகமான பட்டம் வென்றது கிடையாது.

    வருகிற 26-ந்தேதி தொடங்க இருக்கும் பிரெஞ்சு ஓபன் டென்னிசிலும் வெற்றி பெற்று நடால் 12-வது பட்டத்தை பெறுவாரா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    சமீபத்தில் நடந்த இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் அவர் முதல்நிலை வீரர் ஜோகோச்சை (செர்பியா) வீழ்த்தினார். இதன் மூலம் அவரது நம்பிக்கை அதிகரித்துள்ளது.

    களிமண் தரையில் (கிளே) விளையாடுவதிலும் மன்னரான அவர் தனது ஆதிக்கத்தை அதிகரித்துக் கொள்ள கடுமையாக போராடுவார். நடால் ஒட்டு மொத்தமாக 17 கிராண்ட் சிலாம் பட்டம் வென்று 2-வது இடத்தில் உள்ளார். அமெரிக்க ஓபன் பட்டத்தை 3 முறையும், விம்பிள்டனை 2 தடவையும், ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை 1 முறையும் வென்றுள்ளார்.

    சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் 20 கிராண்ட் சிலாம் பட்டத்துடன் (ஆஸ்திரேலிய ஓபன் 6+, பிரெஞ்சு ஓபன் 1+, விம்பிள்டன் 8+ அமெரிக்க ஓபன் 5) முதல் இடத்தில் உள்ளார். ஜோகோவிச் 15 கிராண்ட் சிலாமை பட்டத்துடன் (ஆஸ்திரேலிய ஓபன் 7+, பிரெஞ்சு ஓபன் 1+, விம்பிள்டன் 4+, அமெரிக்க ஓபன் 3) மூன்றாவது இடத்தில் உள்ளார்.

    நடாலின் பிரெஞ்சு ஓபன் ஆதிக்கத்தை இந்த முறை தகர்க்க வேண்டும் என்ற வேகத்தில் ஜோகோவிச், பெடரர் உள்ளனர்.

    இதேபோல் டொமினிக் தீயம் (ஆஸ்திரியா), அலெக்சாண்டர் சுவரேவ் (ஜெர் மனி), டிஸ்டிபயாஸ் (கிரீஸ்), நிஷிகோரி (ஜப்பான்), டெல்போட்ரோ (அர்ஜென் டினா) போன்ற வீரர்களும் நடாலுக்கு சவாலாக விளங்கலாம்.
    இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் பிரிவில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ரபெல் நடாலும், பெண்கள் பிரிவில் கரோலினா பிளிஸ்கோவா சாம்பியன் பட்டம் பெற்றனர்.
    ரோம்:

    பிரெஞ்ச் ஓபனுக்கு முன்னோட்டமாக இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடந்தது. களிமண் தரை போட்டியான இதில் ஆண்கள் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ வீரர் நோவக் ஜோகோவிச்சும் (செர்பியா), 2-ம் நிலை வீரர் ரபெல் நடாலும் (ஸ்பெயின்) பலப்பரீட்சை நடத்தினர். விறுவிறுப்பான இந்த மோதலில் நடால் 6-0, 4-6, 6-1 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி 9-வது முறையாக இந்த பட்டத்தை வசப்படுத்தினார். இந்த ஆட்டம் 2 மணி 25 நிமிடங்கள் நீடித்தது. ஆயிரம் தரவரிசை புள்ளிகளை வழங்கும் இத்தகைய மாஸ்டர்ஸ் பட்டத்தை நடால் வெல்வது இது 34-வது முறையாகும். வெற்றி பெற்ற நடாலுக்கு ரூ.7½ கோடியும், 2-வது இடம் பிடித்த ஜோகோவிச்சுக்கு ரூ.3¾ கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.



    பெண்கள் பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில் கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் ஜோஹன்னா கோன்டாவை (இங்கிலாந்து) தோற்கடித்து வாகை சூடினார். 1978-ம் ஆண்டுக்கு பிறகு செக்குடியரசு வீராங்கனை ஒருவர் இந்த பட்டத்தை உச்சிமுகர்வது இதுவே முதல் முறையாகும். மொத்தத்தில் பிளிஸ்கோவா கைப்பற்றிய 13-வது சர்வதேச பட்டமாக இது அமைந்தது.
    மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரில், ஸ்பெயின் நாட்டின் முன்னணி வீரர் ரபேல் நடால் அரையிறுதிக்கு முன்னேறினார்.
    மாட்ரிட்:

    ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், ஆடவர் ஒற்றையர் காலிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் நாட்டின் முன்னணி வீரரான ரபேல் நடால், ஸ்டான் வாரிங்காவை எதிர்கொண்டார். துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய நடால், 6-1, 6-2 என்ற நேர்செட்களில் எளிதில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    இதன்மூலம் ஏடிபி மாஸ்டர்ஸ் போட்டித் தொடர்களில் 70 முறை அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார்.  இன்று நடைபெற உள்ள அரையிறுதி ஆட்டத்தில் நடால், ஸ்டெபானிசை எதிர்கொள்கிறார்.

    மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஐந்தாம் தரநிலைவீரர் டொமினிக் தீமிடம் 3-6, 7-6(11), 6-4 என்ற செட்கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார். வெற்றி பெற்ற டொமினிக் தீம், அரையிறுதியில் நோவக் ஜோகோவிச்சுடன் மோதுகிறார். 
    இன்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ரபேல் நடால், ரோஜர் பெடரர் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறினார்கள். #IndianWellstennis #Federer #Nadal
    இன்டியன்வெல்ஸ்:

    இன்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2-வது இடம் வகிப்பவரும், 3 முறை சாம்பியனுமான ரபேல் நடால் (ஸ்பெயின்) 6-3, 6-4 என்ற நேர்செட்டில் கிராஜ்னோவிச்சை (செர்பியா) தோற்கடித்து கடந்த 3 ஆண்டுகளில் முதல்முறையாக காலிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் ரஷிய வீரர் கரன் கச்சனோவ் 6-4, 7-6 (7-1) என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் ஜான் இஸ்னரை சாய்த்து காலிறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். காலிறுதியில் கரன் கச்சனோவ், ரபேல் நடாலை சந்திக்கிறார்.

    இன்னொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 6-1, 6-4 என்ற நேர்செட்டில் 23-ம் நிலை வீரரான கைல் எட்முன்டை (இங்கிலாந்து) விரட்டியடித்து காலிறுதிக்குள் நுழைந்தார். இந்த வெற்றியை பெற அவருக்கு ஒரு மணி நேரமே தேவைப்பட்டது.

    மற்ற ஆட்டங்களில் பிரான்ஸ் வீரர் மான்பில்ஸ் 6-0, 6-2 என்ற நேர்செட்டில் கோல்ஸ்கிரீபரையும் (ஜெர்மனி), ஆஸ்திரியா வீரர் டொமினிக் திம் 6-4, 6-3 என்ற நேர்செட்டில் கார்லோவிச்சையும் (குரோஷியா), கனடாவின் மிலோஸ் ராவ்னிக் 6-4, 6-3 என்ற செட்டில் ஜான் லினார்ட் ஸ்டிரப்பையும் (ஜெர்மனி), போலந்து வீரர் ஹூபர்ட் ஹர்காக்ஸ் 7-6 (7-3), 2-6, 6-3 என்ற செட் கணக்கில் டேனிஸ் ஷபலோவையும் (கனடா) தோற்கடித்து காலிறுதியை எட்டினர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ளவரும், 2 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான கார்பின் முகுருஜா (ஸ்பெயின்) 0-6, 1-6 என்ற நேர்செட்டில் 20 வயதான கனடா வீராங்கனை பியான்கா ஆன்ட்ரீஸ்குவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். இந்த ஆட்டம் 52 நிமிடம் நடந்தது.

    மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் எலினா ஸ்விடோலினா (உக்ரைன்) 4-6, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் மார்கெடா வோன்ட்ரோசோவாவை (செக் குடியரசு) வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.  #IndianWellstennis #Federer #Nadal


    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசின் இறுதிப்போட்டியில் ரபேல் நடாலை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச். #AUSOpen #NovakDjokovic #RafaelNadal
    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் செர்பியாவின் நம்பர் ஒன் வீரரான நோவக் ஜோகோவிச்சும், ஸ்பெயின் வீரரான 2ம் நிலை வீரரான ரபேல் நடாலும் மோதினர்.



    ஜோகோவிச் ஆட்டத்திற்கு நடாலினால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் ஜோகோவிச் 6-3, 6-2, 6-3 என நேர்செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். ஆஸ்திரேலிய ஓபனில் ஜோகோவிச் ஏழாவது முறையாக பட்டம்  வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #AUSOpen #NovakDjokovic #RafaelNadal
    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் ஜோகோவிச் லூகாஸ் பவுலியை நேர்செட் கணக்கில் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். #AUSOpen
    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரரான நோவக் ஜோகோவிச் பிரான்சின் லூகாஸ் பவுலியை எதிர்கொண்டார். நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச் ஆட்டத்திற்கு 28-ம் நிலை வீரரான லூகாஸ் பவுலியால் ஈடுகொடுக்க முடியவில்லை.



    இதனால் ஜோகோவிச் 6-0, 6-2, 6-2 என நேர்செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் ஜோகோவிச் 2-ம் நிலை வீரரான நடாலை எதிர்கொள்கிறார்.
    அடிலெய்டு ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற சந்தோசத்தோடு ரோகித் சர்மா மற்றும் தினேஷ் கார்த்திக் நடால் ஆட்டத்தை கண்டு ரசித்துள்ளனர். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.  2-வது போட்டி அடிலெய்டில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    தற்போது மெல்போர்ன் நகரில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. அடிலெய்டு ஆட்டம் முடிந்த பின்னர் இந்திய அணி மெல்போர்ன் வந்தடைந்தது. அப்போது ஓய்வு நேரத்தில் ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக் ஆகியோர் நடால் - மேத்யூ எப்டன் மோதிய 2-வது சுற்று ஆட்டத்தை பார்த்து ரசித்தனர். இதில் நடால் 6-3, 6-2, 6-2 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

    நடால் போட்டியை பார்த்த போட்டோவை ரோகித் சர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
    பிரிஸ்பேன் டென்னிஸ் தொடரில் காயம் காரணமாக ரபேல் நடால் விலகிய நிலையில், முர்னே 2-வது சுற்றில் ஆட்டமிழந்து வெளியேறினார். #Nadal #Murray
    பிரிஸ்பேன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவின் பரிஸ்பேன் நகரில் நடைபெற்று வருகிறது. உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ரபேல் நடால் நேரடியாக 2-வது சுற்றுக்கு முன்னேறினார். இன்று 2-வது சுற்றில் ஜோ-வில்பிரைட் டிசோங்காவை எதிர்கொள்ள இருந்தார். கடைசி நேரத்தில் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

    கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் விளையாடும்போது நடாலுக்கு காயம் ஏற்பட்டது. அதன்பின் தற்போதுதான் களம் இறங்க தயாரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அதேபோல் முர்ரேயும் காயத்திற்குப்பின் பிரிஸ்பேன் தொடரில் களம் இறங்கினார். முதல் சுற்றில் வெற்றி பெற்ற முர்ரே 2-வது சுற்றில் 4-வது இடத்தில் இருக்கும் டேனில் மெட்வேதேவ்-ஐ எதிர்கொண்டார். இதில் முர்ரே 5-7, 2-6 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்தார்.
    ×