என் மலர்
நீங்கள் தேடியது "tag 101351"
கேஜிஎஃப்-2 திரைப்படம் கடந்த மாதம் 14-ம் தேதி வெளியான நிலையில் திரைப்படத்திற்கு தடை விதிக்கக்கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ், ஸ்ரீநிதி நடிப்பில் கடந்த மாதம் 14-ம் தேதி கேஜிஎஃப்-2 திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. உலகம் முழுவதும் கேஜிஎஃப்-2 திரைப்படம் 1,500 கோடி ரூபாயை தாண்டி வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இதற்கிடையில், படத்தில் டிரைலரில் புகைப்பிடித்தலை ஊக்குவிக்கும் வகையிலும், புகைப்பிடித்தல் ஆரோக்கியமான சமூக பழக்கம் என்றும், புகைப்பிடித்தல் ஒரு ஸ்டைல் என்பது போலவும், புகைப்பிடித்தலை ஊக்குவிப்பது போலவும் உள்ளது என மனுவில் தெரிவிக்கப்பட்டது.

கேஜிஎஃப்-2
இதனால், கேஜிஎஃப் 2 திரைப்படத்தை திரையிடக்கூடாது என்று கர்நாடக மாநில ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நேற்று விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், கேஜிஎஃப்-2 திரைப்படம் ஏற்கனவே திரையரங்குகளில் வெளியாகிவிட்டதால் திரைப்படத்தை வெளியிட தடைவிதிக்க முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்தது.
கே.ஜி.எப்.-2 படத்தில் வரும் ராக்கி பாய் வேடத்தில் ஈர்க்கப்பட்டு, சிறுவன் செய்த விபரீத செயலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறான்.
கே.ஜி.எப். என்ற தங்க வயல் கோட்டையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம் கே.ஜி.எப். இதன் 2ம் பாகம் கே.ஜி.எப். சேப்டர் 2 என்ற பெயரில் புது வருட தினத்தில் வெளியானது. அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த, நடிகர் யஷ் நடிப்பில், பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான இந்த படம் வசூலில் பல நூறு கோடிகளை கடந்து சாதனை படைத்தது. வேகமும், விறுவிறுப்பும் கலந்து சண்டை பிரியர்களுக்கு தீனி போட்டது. அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. படம் வெளிவந்து ஒரு மாதத்திற்கு மேலான நிலையில், அதில் வரும் காட்சிகள் ரசிகர்களிடம் பெரும் தாக்கம் ஏற்படுத்தி உள்ளது. அவர்களது மனதில் இருந்து நீங்காத இடம் பெற்றுள்ளது.

கே.ஜி.எப்.-2
இந்த படத்தினை தெலுங்கானாவின் ஐதராபாத்தில் உள்ள 15 வயது சிறுவன் 2 நாட்களில் 3 முறை பார்த்திருக்கிறான். அதில் ராக்கி பாய் வேடத்தில் வரும் நடிகர் யஷின் நடிப்பில் ஈர்க்கப்பட்டு உள்ளான். இதனால், ஒரு முழு சிகரெட் பேக்கையும் ஒரே மூச்சில் புகைத்துள்ளான். இதன் விளைவாக, அந்த சிறுவனுக்கு கடுமையான தொண்டை வலி மற்றும் இருமலும் ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுவனை ஐதராபாத்தில் உள்ள செஞ்சுரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதன்பின்பு மருத்துவர்கள் போராடி சிகிச்சை அளித்து சிறுவனை மீட்டுள்ளனர். அவனுக்கு கவுன்சிலிங்கும் நடத்தப்பட்டு உள்ளது.

கே.ஜி.எப்.-2
இது பற்றி நுரையீரல் துறை மருத்துவர் ரோகித் ரெட்டி பாதுரி கூறும்போது, ராக்கி பாய் போன்ற வேடங்களை பார்த்து டீன்-ஏஜ் சிறுவர்கள் எளிதில் ஈர்க்கப்பட்டு விடுகின்றனர். இந்த இளஞ்சிறுவன், ஒரு முழு சிகரெட் பேக்கையும் புகைத்ததில் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளான். நமது சமூகத்தில் திரைப்படங்கள் அதிக தாக்கம் ஏற்படுத்த கூடிய ஒன்றாக உள்ளது. சிகரெட் புகைத்தல், புகையிலை போடுதல் அல்லது மதுபானம் குடித்தல் போன்ற செயல்களை, கவர்ந்திழுக்கும் விசயம் ஆக்காமல் பார்த்து கொள்ளும் அறநெறி பொறுப்பு தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்களுக்கு உள்ளது. பெற்றோர்களும், தங்களுடைய குழந்தைகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள். தங்களது குழந்தைகளின் செயல்களில் எந்த காரணிகளெல்லாம் தாக்கம் ஏற்படுத்துகிறது என கண்காணிக்க வேண்டும். பின்னர் வருந்துவதற்கு பதில், முன்பே அவர்களுக்கு புகைபிடித்தல், மதுபானம் அருந்துதல் போன்றவற்றின் தீய விளைவுகளை பற்றி எடுத்து கூறி, அதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் பெற்றோர்கள் முக்கிய பங்காற்றுவது மிக அவசியம் என கூறியுள்ளார்.
முன்னணி ரசிகர்களின் படங்களை பின்னுக்கு தள்ளி வசூலில் சாதனை படைத்த திரைப்படத்தின் டீசர் வெளியானது.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் கடந்த 13-ம் தேதி வெளியான படம் 'கேஜிஎப்-2'. இதில் சஞ்சய் தத், ரவீணா தாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ரசிகர்களின் மாபெரும் எதிர்ப்பார்ப்பில் வெளியான இப்படம் பல முன்னணி ரசிகர்களின் படங்களை பின்னுக்கு தள்ளி வசூல் ரீதியாக சாதனை படைத்தது. மேலும், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேள்விகளை எழுப்பிய நிலையில், அமேசான் பிரைமில் 'கேஜிஎப் 2' படத்தை காண ரூ.199 தனியாக கட்டணம் செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பு வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

கேஜிஎப்2
இந்நிலையில், தற்போது ஜூன் 3-ஆம் தேதி அமேசான் பிரைமில் ஐந்து மொழிகளில் 'கேஜிஎப் 2' வெளியாகவுள்ளது. இப்படத்தினை அமேசான் சந்தாதாரர்கள் இலவசமாக காணலாம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'கேஜிஎப் 2' படத்தின் டீசரை படக்குழு நேற்று வெளியிட்டு ரசிகர்களை கவந்துள்ளது.
யஷ் கதாநாயகனாக நடிக்கும் கே.ஜி.எப் படத்தின் இரண்டாம் பாகத்தில் இந்திரா காந்தி வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.
கன்னடத்தில் உருவாகி தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழிகளில் கடந்த ஆண்டு வெளியான படம் கேஜிஎப். யஷ் கதாநாயகனாக நடித்து இருந்த இந்த படம் பெரிய வெற்றி பெற்றது. இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.
படம் 1970 -1980களில் நடக்கும் கதை என்பதால் படத்தில் பிரதமர் இந்திரா காந்தியின் கதாபாத்திரமும் வருகிறது. இதில் நடிப்பதற்கு பொருத்தமான நடிகையை தேடி வந்தனர். தற்போது இந்த வேடத்தில் பிரபல இந்தி நடிகை ரவீணா டாண்டன் நடித்து வருகிறார்.

ரவீணா டாண்டன் தமிழில் அர்ஜூனுடன் ‘சாது’, கமலுடன் ‘ஆளவந்தான்’ படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிராஷாந்த் நீல் இயக்கத்தில் யஷ் - ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கும் கே.ஜி.எஃப் படத்தின் இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது. #KGF #Yash
பிராஷாந்த் நீல் இயக்கத்தில் ராக் ஸ்டார் யஷ் நடிப்பில் கே.ஜி.எஃப் படம் இரண்டு பாகங்களாக உருவாகுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கே.ஜி.எஃப் முதல் பாகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கன்னட சினிமா மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளிலும் படம் வசூல் குவித்துள்ளது.
கன்னடத்தில் ரூ.100 கோடி வசூலை தாண்டிய முதல் படம் என்ற பெருமை கே.ஜி.எஃப் படத்திற்கு கிடைத்துள்ளது. இந்த படத்தின் தமிழ் பதிப்பை நடிகர் விஷால் தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் வெளியிட்டார்.

இந்த நிலையில், கே.ஜி.எஃப் படத்தின் இரண்டாவது பாகத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியிருக்கிறது. பூஜையில் பிரசாந்த் நீல், யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். #KGF #Yash #SrinidhiShetty
கே.ஜி.எஃப் படத்தில் நடித்த நடிகர் யஷ் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறப்படும் நிலையில், யஷ் சமீபத்தில் அளித்த பேட்டியில், கொலை செய்யும் அளவுக்கு தனக்கு எதிரிகள் யாரும் இல்லை என்று கூறினார். #Yash
கன்னட நடிகர் யஷ் நடிப்பில் சமீபத்தில் கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியான கேஜிஎப் படம் பெரிய வெற்றி பெற்றது. விஷால், ஆர்யா உள்ளிட்டவர்களுக்கும் யஷ் நண்பர் ஆவார். கேஜிஎப் படத்தை விஷால் தமிழில் ரிலீஸ் செய்தார்.
2 ஆண்டுகளுக்கு முன்பு, தனக்கு ஒரு மர்மக் கும்பலிடமிருந்து தொடர் கொலை மிரட்டல்கள் வருவதாக யஷ் போலீசில் புகார் அளித்தார். கடந்த ஆண்டு மற்றொரு கன்னட நடிகரான அர்ஜுன் தேவ், தனக்கும் கொலை மிரட்டல்கள் வருவதாகப் புகார் அளித்திருந்தார். அதைத் தொடர்ந்து, அந்த புகார்கள் விசாரிக்கப்பட்டன.
கடந்த 7-ந் தேதி கர்நாடக போலீசாரால், பாரத் என்கிற ‘ஸ்லம்‘ பாரத் என்ற ரவுடி உள்பட நான்கு ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். ஒரு வழக்கில் கைதான இவர்களை, 3 நாள்களாக போலீசார் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து விசாரித்து வருகிறார்கள். விசாரணையின் போது பாரத், தனது கும்பல் விரைவில் ஒரு கன்னட நடிகரைக் கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக வாக்குமூலம் கொடுத்துள்ளான்.

இந்தத் தகவல் வெளியானதும், பழைய வழக்குகளைக் கருத்தில் கொண்டு, அது யஷ் அல்லது அர்ஜுன் தேவாக இருக்கலாம் என போலீசார் யூகித்தனர். இந்தச் செய்தி வெளியானதும், கன்னட சினிமா துறையினரும், யஷ் ரசிகர் மன்ற உறுப்பினர்களும் கொந்தளித்தனர்.
ரசிகர்களில் சிலர், யஷுக்கு திரையுலகில் போட்டியாக இருக்கும் நடிகர்களைக் குற்றம்சாட்டத் தொடங்கினர். இதுகுறித்து யஷ், சமீபத்தில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியபோது, “எனக்கு இதுவரை எந்தக் கொலை மிரட்டலும் வரவில்லை. நான் பாதுகாப்பாக உள்ளேன்,” என்றார். மேலும், “திரையுலகில் யாரும் எனக்கு எதிரி கிடையாது. இங்கே இருப்பது ஆரோக்கியமான போட்டி. கொலை செய்யும் அளவுக்கு கீழ்த்தரமாக யாரும் நடந்து கொள்ளப் போவதில்லை. அதனால், என் ரசிகர்கள் பிற நடிகர்களைக் குறைசொல்வதை உடனடியாக நிறுத்த வேண்டும்,” என்றும் அவர் கேட்டுக்கொண்டார். #Yash
பிராஷாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற கே.ஜி.எஃப் படத்தின் இரண்டாவது பாகத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சஞ்சய் தத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. #KGF #Yash #SanjayDutt
பிராஷாந்த் நீல் இயக்கத்தில் ராக் ஸ்டார் யஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான கே.ஜி.எஃப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கன்னட சினிமா மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளிலும் படம் வசூல் குவித்துள்ளது.
கன்னடத்தில் ரூ.100 கோடி வசூலை தாண்டிய முதல் படம் என்ற பெருமை கே.ஜி.எஃப் படத்திற்கு கிடைத்துள்ளது. இந்த படத்தின் தமிழ் பதிப்பை நடிகர் விஷால் தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் வெளியிட்டார்.

இந்த நிலையில், கே.ஜி.எஃப் படத்தின் இரண்டாவது பாகத்திற்கான படப்பிடிப்பை விரைவில் துவங்கவிருக்கின்றனர். இந்த பாகத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்திடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. முன்னதாக கே.ஜி.எஃப் படத்தின் முதல் பாகத்தில் நடிக்கவே சஞ்சய் தத்திடம் பேசினார்கள். தேதி ஒதுக்க முடியாத காரணத்தால் முதல் பாகத்தில் சஞ்சய் தத்தால் நடிக்க முடியவில்லை.
இப்படி இருக்க இரண்டாவது பாகத்தில் ஒப்பந்தமாகிறாரா என்பது விரைவில் தெரிய வரும். சஞ்சய் ஒப்பந்தமாகும் பட்சத்தில் தென்னிந்திய சினிமாவில் அவர் அறிமுகமாகும் முதல் படமாக இது அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. #KGF #Yash #SanjayDutt
பிராஷாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற கே.ஜி.எஃப் படத்தை பார்த்த நடிகர் விஜய், படக்குழுவுக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். #KGF #Yash #Vijay
பிராஷாந்த் நீல் இயக்கத்தில் ராக் ஸ்டார் யஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான கே.ஜி.எஃப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கன்னட சினிமா மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளிலும் படம் வசூல் குவித்துள்ளது.
கன்னடத்தில் ரூ.100 கோடி வசூலை குவித்த படம் என்ற பெருமை கே.ஜி.எஃப் படத்திற்கு கிடைத்துள்ளது. இந்த படத்தின் தமிழ் பதிப்பை நடிகர் விஷால் தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் வெளியிட்டார்.

படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருந்த நிலையில், படத்தை பார்த்த நடிகர் விஜய் படக்குழுவை பாராட்டியுள்ளார். கே.ஜி.எஃப் படம் எடுக்கப்பட்ட விதம் பிரம்மாண்டமாகவும், நடிகர்களின் நடிப்பு நேர்த்தியாக அமைந்துள்ளதாகவும் விஜய் பாராட்டிய]ள்ளார். விஜய்யின் பாராட்டால், கே.ஜி.எஃப் படக்குழுவினர் மகிழ்ச்சியின் உள்ளனர். #KGF #Yash #Vijay
பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யஷ் - ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் வெளியாகி இருக்கும் `கே.ஜி.எஃப்' படத்தின் விமர்சனம். #KGFTamil #KGF #KGFTamilReview #Yash #SrinidhiShetty
கர்நாடகாவில் தனது நோய்வாய்ப்பட்ட தாயுடன் வசித்து வருகிறார் யஷ். சிகிச்சை செய்ய பணமில்லாமல் யஷ்ஷின் தாய் இறந்துவிடுகிறார். இறக்கும் தருவாயில், நீ சாகும் போது பணக்காரனாக தான் சாக வேண்டும் என்று சொல்லிவிட்டு சாகிறார்.
தனது தாய்யின் கட்டளையை நிறைவேற்ற என்ன செய்வது என்று தெரியாமல் மும்பை செல்லும் யஷ்ஷிடம் பிச்சைக்காரர் ஒருவர் சில்லறை கொடுக்க, நோட்டாக தரச் சொல்லி யஷ் கேட்கிறார். கையேந்தினால் சில்லறை தான் கிடைக்கும், கையை ஓங்கினால் தான் நிறைய கிடைக்கும் என்று அந்த பிச்சைக்காரர் சொல்கிறார்.

இனி தனக்கான பாதை என்னவென்பதை யஷ் தீர்மானிக்கிறார். இந்த நிலையில், மும்பையில் அட்டகாசம் செய்து வந்த போலீஸை ஒருவரை அடித்து தனக்கென்று ஒரு பிராண்ட்-ஐ உருவாக்குகிறார். தொடர்ந்து மும்பையில் அட்டூழியம் செய்து வரும் பெரிய தலைகளை குறிவைக்கும் யஷ், வேகமாக மும்பையில் ஒரு மான்ஸ்டராக உருவாகிறார்.
இந்த நிலையில், கர்நாடகாவில் இருக்கும் தங்கச் சுரங்கமான கே.ஜி.எஃப்.பின் தலைவரை கொலை செய்ய நிறைய பேர் முயன்றும் முடியாததால், யாராலும் நெருங்க முடியாத அவரை தான் எதிர்ப்பதாக யஷ் கர்நாடகாவுக்கு செல்கிறார். அங்கு நாயகி ஸ்ரீநிதி ஷெட்டியை பார்த்த உடனே காதல் வர, தனது காதலையும் ஸ்ரீநிதியிடம் சொல்லிவிடுகிறார்.

சாதாரணமாக பின்னர், யாராலும் எளிதில் நுழைய முடியாத கே.ஜி.எஃப். சுரங்கத்திற்குள் செல்லும் யஷ் கே.ஜி.எஃப். தலைவரை கொன்றாரா? தான் ஒரு மான்ஸ்டர் என்பதை நிரூபித்தாரா? ஸ்ரீநிதியுடன் இணைந்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
யஷ் தனி ஒருவனாக படத்தை தன் தோள் மேல் சுமந்து செல்கிறார். யாருக்கும் பயப்படாத மான்ஸ்டராக, மாஸ் ஹீரோவாக படத்தின் ஓட்டத்தை வேகப்படுத்துகிறார். ஸ்ரீநிதி ஷெட்டி அழகான தேவதையாக வந்து ரசிக்க வைக்கிறார். அச்சுகுமார், அனந்த் நாக், அர்ச்சனா ஜோஸ், அய்யப்பா ஷர்மா உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் திரைக்கதையின் ஓட்டத்திற்கு உதவியிருக்கிறார்கள்.

ஒரு சிறிய குழுவை வைத்து ஒரு மாஸ் படத்தை பிரம்மாண்டமாக உருவாக்கியிருக்கிறார் பிரஷாந்த் நீல். தனக்கென்று யாருமே இல்லாத ஒருவன், தனது தாயின் சொல்லிற்காக பணக்காரனாக அவன் எடுக்கும் முடிவுகளும், அதன்மூலம் என்னவாகிறான் என்பதையே படமாக உருவாக்கி இருக்கிறார். கதை பெரிதும் நாயகனையே மையப்படுத்தியே நகர்கிறது. படத்தின் கதை விறுவிறுப்பாக நகர்ந்தாலும், ஆங்காங்கு இடம்பெறும் சில காட்சிகள் படத்திற்கு முட்டுக்கட்டை போடும்படியாக இருக்கிறது. மற்றபடி கன்னட சினிமாவில் இது ஒரு நல்ல முயற்சி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. படத்தின் கலை பணிகளில் ஷிவ குமார் மெனக்கிட்டிருக்கிறார். படத்தின் மிகப்பெரிய பலமான சண்டைக்காட்சிகளில் அன்பறிவ் மாஸ் காட்டியிருக்கின்றனர். வசனங்கள் படத்திற்கு பெரிய பலம்.
ரவி பஸ்ரூரின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் தான். பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். புவன் கவுடாவின் ஒளிப்பதிவு அபாரம். கர்நாடகா, மும்பை, கே.ஜி.எஃப் சுரங்கம் என சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
மொத்தத்தில் `கே.ஜி.எஃப்' பார்க்க வேண்டிய இ(ப)டம். #KGFTamil #KGF #KGFTamilReview #Yash #SrinidhiShetty