என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 105618"

    எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், ஆரம்பத்தில் கண்டறிந்தால் எளிதில் தீர்க்க முடியும். வாழ்க்கைத் துணைக்கு எப்போதும் தனிப்பட்ட சுதந்திரத்தை அளித்தால் வாழ்க்கை சோலைவனமாக மாறும்.
    கணவன்-மனைவி இருவரும் இணைந்து வாழ்ந்தாலும், தனிமையான நேரங்கள், தனிப்பட்ட விருப்பங்கள் போன்றவை முக்கியமானவை. இருவரில், ஒருவரது தனிப்பட்ட சுதந்திரத்தில் இடையூறு ஏற்பட்டாலும், உறவில் விரிசல் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆரம்பத்திலேயே சிக்கலை கண்டுபிடித்து சீர்செய்வதன் மூலம், உறவை மகிழ்ச்சியாக நீட்டிக்கலாம். எத்தகைய நேரங்களில் தனிமை தேவைப்படும் என்பதை இங்கே காண்போம்.

    விரக்தியாக இருத்தல்:

    உங்கள் வாழ்க்கைத்துணை இறுக்கமாக இருக்கும் தருணங்களில், யாருடனும் பேசாமல் தனிமையில் இருக்கவே தோன்றும். ஏதோ ஒரு பொருளை இழந்ததுபோல், விரக்தியுடனே இருப்பார்கள். எந்த விஷயத்திலும் கவனம் செலுத்தாமல் இருப்பது போலத் தோன்றும். எதைக் கேட்டாலும், எரிச்சலுடன் கோபமடைவார்கள். இத்தகைய சமயங்களில் அவர்களோடு வாதிடாமல், சற்று அமைதியாக இருப்பது அவசியம்.

    மகிழ்ச்சியான தருணங்களை ஒதுக்குதல்:

    இதுநாள் வரை வாழ்க்கைத் துணையுடன் இணைந்து, வார இறுதி நாட்களில், வெளியிடங்களுக்கு செல்லவோ, மகிழ்ச்சியாக பொழுதைக் கழிக்கவோ திட்டமிட்டிருக்கலாம். ஆனால், உங்கள் வாழ்க்கைத் துணை, அவரின் தனிப்பட்ட சுதந்திரம் பறிபோவதாக உணரும்போதோ அல்லது, அவருக்கான ஆசை, விருப்பம் நிறைவேறாமல் பறிபோவதாக நினைத்தாலோ அதற்கு ஏற்ப நடந்து கொள்வது அவசியம். வழக்கமாக நீங்கள் போடும் திட்டங்களைத் திடீரென பொய்க்காரணம் கூறி ரத்து செய்யலாம். இது ஒரு முறை நடக்கும்போது, பெரிது படுத்த தேவையில்லை. அதுவே, தொடரும்போது, கட்டாயம் அதில் கவனம் செலுத்தி பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முயற்சிக்க வேண்டும்.

    எதையும் விவாதிக்க மாட்டார்:

    அலுவலகத்தில் நடப்பவை, குடும்பத்தில் நடப்பவை என அனைத்து விஷயங்களையும் தினமும் உங்களுடன் பகிர்ந்து கொள்வது உங்கள் வாழ்க்கைத்துணையின் வழக்கமாக இருக்கலாம். ஆனால், அவரின் தனிப்பட்ட விருப்பங்கள் மறுக்கப்படும்போது, அவருக்குள் ஏற்படும் மாறுபாட்டால், அதை உங்களிடம் விவாதிக்க விரும்பாமல் மறுக்கலாம். அவ்வாறு இருக்கும்போது அவரிடம், மேற்கொண்டு எதையும் கேட்டு சங்கடத்தை ஏற்படுத்தாமல், இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை அமைதியாய் இருப்பது நல்லது.

    காரணமின்றி சண்டை போடுதல்:

    வாழ்க்கைத் துணையிடம் சண்டையிடுவது இயல்புதான். ஆனால், அதற்கும் நியாயமான காரணம் இருக்க வேண்டும். எந்தக் காரணமும் இல்லாமல், அனைத்து விஷயங்களுக்கும் எப்போதும் சண்டையிட்டு, பிரச்சினையைப் பெரிதாக்க முயல்வதாகத் தெரிந்தால், வாழ்க்கைத் துணைக்குச் சற்று அமைதி தேவை என புரிந்து கொள்ளுங்கள். அப்போது, அங்கிருந்து விலகி சில மகிழ்ச்சியான தருணங்களை உருவாக்க முயலுங்கள். மேலும், துணைக்கு எந்த வகையில், சுதந்திரம் தேவை என்பதைக் கேட்டுத் தெளிவடைவது சிறந்தது.

    எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், ஆரம்பத்தில் கண்டறிந்தால் எளிதில் தீர்க்க முடியும். வாழ்க்கைத் துணைக்கு எப்போதும் தனிப்பட்ட சுதந்திரத்தை அளித்தால் வாழ்க்கை சோலைவனமாக மாறும்.
    வாழ்க்கையில் எத்தகைய நெருக்கடிகளை எதிர்கொண்டாலும் மகிழ்ச்சியை விதைக்கும் புன்னகையை தக்கவைத்து கொள்ள வேண்டியது அவசியமானது.
    கணவன்-மனைவி இடையே சச்சரவுகள், சண்டைகள், வாக்குவாதங்கள் ஏற்படும்போது இருவரும் நிதானம் இழந்துவிடுவது உறவில் விரிசல் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்துவிடுகிறது. இருவரில் யாராவது ஒருவர் சட்டென்று கோபம் கொள்வது பிரச்சினையை அதிகப்படுத்திவிடுகிறது. வாழ்க்கையில் எத்தகைய நெருக்கடிகளை எதிர்கொண்டாலும் மகிழ்ச்சியை விதைக்கும் புன்னகையை தக்கவைத்து கொள்ள வேண்டியது அவசியமானது. எத்தகைய பிரச்சினைகள் எழுந்தாலும் அன்றைய நாளின் இறுதிக்குள் இருவரும் சமாதானமாகி மகிழ்ச்சியுடனும், மன நிறைவுடனும் தூங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். அதற்கு செய்ய வேண்டிய சில விஷயங்கள்:

    * உண்மையிலேயே வாழ்க்கை துணையை நேசிக்கிறீர்கள் என்றால், அவரை காயப்படுத்தி அழ வைக்கக்கூடிய எதையும் செய்ய மாட்டீர்கள். அதற்கு பதிலாக, ஒவ்வொரு நாளும் அவரை உற்சாகப்படுத்தும் விஷயங்களை செய்ய வேண்டும். மனைவியை மகிழ்விப்பதற்கான முதல்படி, உங்களுக்குள் மகிழ்ச்சியை தக்கவைத்துக்கொள்வதுதான். ஏனெனில் கணவர் சந்தோஷமான மனநிலையில் இல்லாவிட்டால் அவரால் மனைவியை மகிழ்விக்க முடியாது. அதனால் ஜாலியான நபராக இருப்பதற்கு முயற்சி செய்யுங்கள். நேர்மறையான சிந்தனை, நகைச்சுவை உணர்வு மிக்க நபராக இருங்கள்.

    * மனைவியின் மனநிலையை கவனத்தில் கொள்ளுங்கள். அவர் சோர்வுடனோ, சலிப்புடனோ இருந்தால் அதற்கான காரணத்தை கண்டறிந்து இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு முயற்சியுங்கள். வீட்டுவேலைகள்தான் பெரும்பாலும் மனைவியை நெருக்கடிக்குள்ளாக்கும். அவருடன் இணைந்து சின்ன சின்ன வேலைகளை செய்து முடிக்கலாம்.

    * மனைவியின் ஆடை, அலங்கார நேர்த்தியை எப்போதும் பாராட்டுங்கள். அதனை அவர் எதிர்பார்ப்பார். குறிப்பாக வெளி இடங்களுக்கு செல்லும்போது தனது ஆடை தேர்வு எப்படி அமைந்திருக்கிறது என்பது பற்றி கணவர் கருத்து கூற வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டுவார். அவருடைய உணர்வுகளை புரிந்து கொண்டு செயல்படுங்கள். ஏதேனும் குறை இருந்தால் தயங்காமல் சொல்லுங்கள். அதற்காக கோபப்பட மாட்டார். அதனை திருத்திக்கொள்வதற்குத்தான் முயற்சி செய்வார்.

    * மனைவியிடம் பொய் பேசுவதை தவிர்த்துவிடுங்கள். அது உங்கள் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கையை சிதைத்துவிடும். எந்தவொரு சூழலிலும் உண்மையை பேசுங்கள். அது உங்கள் மீதான மதிப்பை உயர்த்தும்.

    * மனைவி செய்யும் சிறு சிறு தவறுகளை மனம் நோகாமல் சுட்டிக்காட்டுங்கள். அதே தவறை திரும்ப செய்தாலும் கடிந்து கொள்ளாமலும், வாய்க்கு வந்தபடி திட்டாமலும் நிதானமாக தவறுகளை சரி செய்வதற்கு ஆலோசனை வழங்குங்கள்.

    * மனைவி ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் கோபமாக இருந்தால், கணவரும் பதிலுக்கு கோபப்படுவதோ, எரிச்சல் கொள்வதோ அழகல்ல. அது இருவருக்கும் இடையே இடைவெளியை அதிகப்படுத்திவிடும். மனைவி கோபமாக இருந்தாலும் புன்னகையுடன் கடந்து செல்லுங்கள்.

    * மனைவி ஏதேனும் முக்கிய வேலையில் இருந்தால் அவரது கவனத்தை திசை திருப்பும் விதத்தில் பேச்சு கொடுக்காதீர்கள். அவருக்கு உதவி செய்வதற்கு முயற்சி செய்யுங்கள். அதைவிடுத்து அவரிடம் ஏதேனும் வேலை சொல்லிக்கொண்டிருந்தால் அவர் கோபம் அடையக்கூடும். இருவருக்கும் இடையே சச்சரவுகள் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.

    * வேலைக்கு செல்லும் மனைவியாக இருந்தால், வேலை முடிந்து வீடு திரும்பியதும் அன்றைய நாளில் நடந்த சம்பவங்களை கணவரிடம் கூறுவதற்கு ஆர்வம் காட்டுவார். அதனை புரிந்து கொண்டு அவர் பேசுவதை காது கொடுத்து கேளுங்கள். அதுபோல் அன்றைய நாளில் நடந்த உங்களின் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    * வேலைக்கு செல்லாத மனைவியாக இருந்தால், அவருடைய விருப்பங்களை கேட்டறிந்து ஓய்வு நாளில் அதனை நிறைவேற்றுவதற்கு மறக்காதீர்கள்.

    * மனைவி ஏதாவது ஒரு பொருளை விரும்பி கேட்கும் போது, கையில் பணம் இல்லாதபட்சத்தில் அடுத்த மாதம் வாங்கி தருவதாக கூறலாம். அதைவிடுத்து ‘கையிருப்பில் பணம் இல்லாததை சுட்டிக்காட்டி’ அவர் மனம் நோகும்படி வார்த்தைகளை உச்சரித்துவிடக்கூடாது. அந்த பொருள் அவசியம் தேவையில்லாத பட்சத்தில் நிதானமாக பேசி புரியவைக்கலாம்.

    * மனைவி ஏதேனும் தவறு செய்திருந்தால் அதனை மனதில் வைத்திருந்து, தக்க சமயத்தில் சுட்டிக்காட்டி பேசி மனம் நோகச்செய்யக்கூடாது. தேவையில்லாமல் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களை பற்றி பேசவும் கூடாது. அது மனைவி மனதில் வெறுப்புணர்வை விதைத்துவிடும்.

    * தம்பதியர் இருவரும் பேசும்போது வாக்குவாதம் ஏற்படும் சூழல் உருவானால் யாராவது ஒருவர் விட்டுக்கொடுத்து பேசுவதுதான் சரியானது. மற்றவர்கள் முன்பும் துணையை விட்டுக்கொடுத்து பேசக்கூடாது.

    * மனைவி செய்யும் வீட்டு வேலைகளில் குறை கண்டுபிடிப்பதையே வாடிக்கையாக கொள்ளக்கூடாது. தவறு இருக்கும் பட்சத்தில் அவருடன் சேர்ந்து அந்த தவறை திருத்துவதற்கு முயற்சிக்க வேண்டும். சிறு சிறு உதவிகள் செய்வதன் மூலம், இருவருக்கும் இடையே உறவும் பலப்படும், அன்பும் பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் குடிகொள்ளும்.
    குடும்பத்தின் ஆணி வேராக விளங்கும் குடும்ப தலைவி சந்தோஷமாக இருந்தால் இல்லற வாழ்க்கையும் இனிமையாக அமையும். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்:
    கணவன்-மனைவி இடையேயான உறவு பந்தம் பாசப்பிணைப்புடன் பின் தொடர்வதற்கு ஒருவரையொருவர் நன்கு புரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு சில விஷயங்களில் விட்டுக்கொடுத்து செல்வது உறவை வலுவாக்கும். நிம்மதியையும், மகிழ்ச்சியையும் நிலைத்தோங்க செய்யும். குடும்பத்தின் ஆணி வேராக விளங்கும் குடும்ப தலைவி சந்தோஷமாக இருந்தால் இல்லற வாழ்க்கையும் இனிமையாக அமையும். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்:

    1. கருத்து: ஒரு சில விஷயங்களில் கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். அந்த சமயத்தில் ஒருவரின் கருத்துக்கு மற்றொருவர் மதிப்பு கொடுக்க வேண்டும். அதில் இருக்கும் நல்ல விஷயத்தை பின்பற்றுவதற்கு தயங்க கூடாது. ஈகோவுக்கு இடம் கொடுக்காமல் நல்ல கருத்துக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். இருவரில் ஒருவரின் கருத்து ஆட்சேபனைக்குரியதாக இருந்தாலும் சகிப்பு தன்மையுடன் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வேண்டும். பின்பு அதில் இருக்கும் சாதக, பாதகங்களை பக்குவமாக சொல்லி புரிய வைக்க வேண்டும்.

    2. கர்வம்: கணவர் மட்டுமே சம்பாதிக்கும் நபராக இருக்கும் பட்சத்தில் ஆணாதிக்க மனோபாவத்தை வெளிப்படுத்தக்கூடாது. குடும்ப நிதி நிலைமை, வரவு-செலவு விஷயத்தில் மனைவியின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தன் வருமானத்தை எப்படி வேண்டுமானாலும் செலவிடுவேன் என்ற கர்வம் மனதில் எழுந்துவிடக்கூடாது. குடும்பத்தை வழிநடத்தும் மனைவிக்கு குடும்ப பொருளாதாரம் பற்றி தெரிந்திருக்க வேண்டும். மனைவியும் வேலைக்கு செல்லும் பட்சத்தில் தனது வரவு-செலவு கணக்குகளை கணவரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். குடும்பத்தில் தனக்கான முக்கியத்துவம் குறையவில்லை என்ற எண்ணம் மனைவியிடத்தில் நிலைத்திருக்க வேண்டும். அப்போதுதான் இல்லற வாழ்க்கை மகிழ்ச்சியாக நகரும்.

    3. புரிதல்: சின்னச்சின்ன விஷயங்களையெல்லாம் பெரிது படுத்தக்கூடாது. கணவரின் பார்வையில் சாதாரணமாக தெரியும் ஒரு விஷயம் மனைவிக்கு பெரியதாக தெரியலாம். அதை கணவர் புரிந்து கொள்ள வேண்டும். மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து அந்த விஷயத்தை அணுக வேண்டும். அதை விடுத்து ‘சின்ன சின்ன விஷயங்களையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்கிறாள்’ என்று கூறினால் பிரச்சினைதான் அதிகரிக்கும். உறவில் விரிசல் ஏற்படக்கூடும்.

    4. மரியாதை: கணவன் - மனைவி இடையே வாக்குவாதம், கருத்து மோதல் ஏற்படும் சமயத்தில் ஒருவர் அமைதி காக்க வேண்டும். இருவரும் வார்த்தை மோதலில் ஈடுபடும்போது குடும்பத்திலுள்ள மற்ற உறுப்பினர்களை பற்றி பேசுவதை தவிர்க்க வேண்டும். அவர்களை திட்டுதல், அவதூறாக பேசுதல் போன்றவை பிரச்சினையை பல மடங்கு அதிகரிக்க செய்துவிடும்.

    5. அணுகுமுறை: கணவர் தனது குடும்ப உறுப்பினர்களை போலவே மனைவியின் வீட்டினரையும் மதிக்க வேண்டும். அவர்களுக்கு உரிய மரியாதையை கொடுக்க வேண்டும். அதை விடுத்து தன் வீட்டினருக்கு மட்டும் மதிப்பளித்துவிட்டு மனைவியிடம் அதே மரியாதையை கொடுக்கும்படி எதிர்பார்க்கக் கூடாது.

    6. சுதந்திரம்: கணவன் - மனைவி இருவரிடத்திலும் கருத்து சுதந்திரம் பேணி பாதுகாக்கப்பட வேண்டும். ஒருவர், மற்றொருவர் சுதந்திரத்திற்கு தடையாக இருக்க கூடாது. ‘நான் மட்டும் எப்போது வேண்டுமானாலும் நண்பர்களுடன் ஊர் சுற்றிவிட்டு வருவேன். ஆனால், நீ கூண்டுக்கிளியாக மட்டுமே இருக்க வேண்டும்’ என்று கூறுவது தவறானது.

    7. நேர மேலாண்மை: கணவன் - மனைவி இருவரும் வேலைக்கு செல்பவர்களாக இருந்தால் காலை வேளையில் அலுவலகத்திற்கு பரபரப்பாக கிளம்ப வேண்டியிருக்கும். அப்போது நேர மேலாண்மையை கடைப்பிடித்தால் மட்டுமே டென்ஷன் இல்லாமல் புறப்பட முடியும். எல்லா வேலைகளையும் மனைவி பார்த்துக்கொள்வார் என்று கருதக்கூடாது. கணவரும் சின்ன சின்ன உதவிகளை செய்வது மனைவிக்கு ஆறுதல் அளிக்கும். வேலைகளை விரைவாக முடிக்க ஏதுவாகும்.
    காலை முதல் மாலை வரை நடந்த விஷயங்களை துணையிடம் பேசாவிட்டால் தூக்கமே வராது என்ற மன நிலை கொண்டவர்களும் இருக்கிறார்கள்.
    கோபத்தில் பேசும்போது கொட்டும் வார்த்தைகளை நினைவில் வைத்துக்கொள்ளும் ஆற்றலும் பெண்களிடம் உண்டு. எனவே வார்த்தைகளை கவனமாக கையாள வேண்டும். கோபத்தில் இருக்கும் சமயத்தில் அந்தரங்க விஷயங்களை பற்றி பேசுவதை தவிர்க்க வேண்டும்.

    திருமணமான புதிதில் கணவன் - மனைவி இருவரும் மனம் விட்டு பேசுவதற்கு முனைப்பு காட்டுவார்கள். தங்கள் வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான விஷயங்களை துணையிடம் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்வார்கள். குடும்ப விஷயங்களை போலவே நாட்டு நடப்புகளையும் பகிர்ந்து கொள்பவர்கள் இருக்கிறார்கள்.

    அன்றைய நாளில் காலை முதல் மாலை வரை நடந்த விஷயங்களை துணையிடம் பேசாவிட்டால் தூக்கமே வராது என்ற மன நிலை கொண்டவர்களும் இருக்கிறார்கள். சில சமயங்களில் தான் பேசுவதை துணை காது கொடுத்து கேட்கிறாரா? என்பதை கூட கவனத்தில் கொள்ளாமல் பேசிக்கொண்டிருப்பார்கள். ஒருகட்டத்தில் பேச்சை ரசித்து கேட்க முடியாமல் அவஸ்தைபடுவதை உடல் மொழியால் வெளிப்படுத்தினாலும் கூட அதை பற்றி கவலை கொள்ளாமல் சொல்ல விரும்பிய விஷயத்தை கூறி விடுவதிலேயே குறியாய் இருப்பவர்களும் இருக்கிறார்கள்.

    எந்தெந்த விஷயங்களையெல்லாம் துணையிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்ற வரைமுறை இருக்கிறது. தங்கள் கடந்த கால வாழ்க்கையில் நடந்த அத்தனை விஷயங்களையும் ஒளிவு மறைவின்றி துணையிடம் கூறியாக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அப்படி வெளிப்படையாக பேசும் விஷயங்களே சில சமயங்களில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்திவிடக்கூடும்.

    குடும்ப நிம்மதியை குலைத்துவிடவும் வாய்ப்பிருக்கிறது. காதல் விஷயங்களை துணையிடம் பேச வேண்டியதில்லை என்ற கருத்தை மன நல ஆலோசகர்கள் முன்வைக்கிறார்கள். அதுவே பெரும்பாலானவர்களின் மன நிம்மதியை சீர்குலைக்கக்கூடியதாக இருக்கிறது. ஒரு பெண் தன் பழைய காதல் கதையை கணவரிடம் கூற வேண்டியதில்லை என்பது போலவே, கணவரும் தன் காதல் அனுபவத்தை பகிரக்கூடாது.

    இப்படித்தான் திருமணமான புதிதில் ஒருவர் தன் மனைவியிடம் கல்லூரி காலத்தில் தொடர்ந்த நட்பு காதலாக மாறிய கதையை சொல்லி இருக்கிறார். தனக்கு அந்த பெண் எழுதிய கடிதங்களையும் மனைவியிடம் காட்டியிருக்கிறார். அதை பார்த்ததும் மனைவிக்கு சட்டென்று கோபம் வந்துவிட்டது. அந்த கடிதங்களை கிழித்து எறிந்தவர் கணவருடன் கடுமையாக சண்டை போட்டுவிட்டார். இப்போதும் அந்த பெண்ணுடன் தொடர்பில் இருப்பாரோ என்ற சந்தேகம் மனைவிக்கு தலைதூக்க, பிரச்சினை பெரிதானது. கணவரிடம் கோபித்துக்கொண்டு தன் பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். பின்னர் கணவர் சிரமப்பட்டு சமாதானப்படுத்தி அழைத்து வந்திருக்கிறார்.

    எனவே யாரிடம் எந்த விஷயத்தைப் பேச வேண்டும் என்பதை அறிந்து அதற்குத் தக்கபடி பேச வேண்டும். எந்த விஷயத்தை எந்த நேரத்தில் பேச வேண்டும் என்ற வரைமுறையும் இருக்கிறது. அந்த சமயத்தில் பேசினால்தான் அதற்கு மதிப்பு கூடும். துணையின் மீது நல்ல அபிப்ராயம் உண்டாகும். கோபத்தில் ஒருபோதும் வார்த்தைகளை கொட்டிவிடக்கூடாது.

    சிலர் யார் பக்கம் நியாயம் இருக்கிறது என்பதை அறியாமல் அவசரப்பட்டு வார்த்தைகளை வீசிவிடுவார்கள். கோபம் குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னர்தான் அதை நினைத்து வருந்து வார்கள். அதற்கு இடம் கொடுக்காமல், கோபமாக இருக்கும் சமயத்தில் வார்த்தைகளை கவனமாக உச்சரிக்க வேண்டும். சிலரோ, எதை பற்றியும் கவலைப்படாமல் தான் நினைத்ததை அப்படியே அருவி போல் கொட்டித் தீர்த்து விடுவார்கள். இதனால் இருவருக்கும் இடையில் மனஸ்தாபம் ஏற்பட்டு காலாகாலத்துக்கும் அவர்கள் உறவில் விரிசல் விழுந்து விடும்.

    பெண்களை கற்பூர புத்தி கொண்டவர்கள் என்று சொல்வதுண்டு. எதையும் ‘கப்’பெனப் பிடித்துக் கொள்வார்கள். கோபத்தில் பேசும்போது கொட்டும் வார்த்தைகளை நினைவில் வைத்துக்கொள்ளும் ஆற்றல் பெண்களிடம் உண்டு. எனவே வார்த்தைகளை கவனமாக கையாள வேண்டும். கோபத்தில் இருக்கும் சமயத்தில் அந்தரங்க விஷயங்களை பற்றி பேசுவதை தவிர்க்க வேண்டும்.

    துணை கோபமாக இருக்கும்போது, உங்கள் மீது தவறு இல்லாத பட்சத்தில் பொறுமையாக அவரிடம் எடுத்து சொல்லுங்கள். அவரை போலவே நீங்களும் கோபப்பட்டால் பாதிப்பு உங்களுக்குத்தான். எனவே துணையிடம் பேசும்போது வார்த்தைகளை கவனமாக பயன்படுத்துங்கள்.
    அதிக நேரம் செல்போன் பயன்படுத்தினால் கணவன், மனைவி தொடர்பில் விரிசல் வரலாம் அல்லது மன நோய் ஏற்படலாம். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    இரு நாடுகளுக்கிடையே உள்ள பிரச்சினைகளை எளிதில் தீர்த்து விடலாம். ஆனால் இரு மனங்களுக்கிடையே ஏற்படும் முரண்பாடுகளைத் தீர்ப்பது அவ்வளவு எளிதல்ல. மேலை நாடுகளுடன் ஒப்பிடும் போது, இங்குள்ள வாழ்வியல் முறையும், கலாசாரமும் வேறு வேறு. இங்கே பல்வேறு இனங்கள், பல்வேறு வாழ்க்கை முறையைக் கையாளுகிறார்கள்.

    இவர்கள் பேசும் மொழிகளும் தனித்தனியாக வழங்கி வருகிறது. இந்தியாவில் விடுதலைக்கு முன்பு பலதார மணம் வழக்கமாக இருந்தது. ஒரு ஆண் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் மணம் செய்துகொள்ளவும், சொத்திற்காக வயதானவருக்கு சிறுமியைப் பூப்பெய்தும் முன்பே திருமணம் செய்யும் வழக்கமும் இருந்தது. அதை தவிர்க்க அரசாங்கம் பெண்களுக்குத் திருமண வயதை பதிநான்காகவும், ஆண்களுக்கு பதினெட்டாகவும் இருந்து நாளடைவில் பெண்ணுக்கு திருமண வயது பதினெட்டாகவும், ஆணுக்கு இருபத்தொன்றாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    சமூக அமைப்பைப் பொறுத்தவரை விடுதலைக்கு முன்பு பெண்களுக்கு சமூக உரிமைகள், ஓட்டுரிமை எதுவும் கிடையாது. அதைப்போல கல்வியும் அவர்களுக்கு மறுக்கப் பட்டது. ஆனால் படிப்பிலும், வேலையிலும் பெண்கள் வெகுவாக முன்னேறி சம நிலையை எட்டும் நிலையில் இருக்கிறார்கள். அதனால் திருமணத்தில் சம படிப்பும், வேலையும் பெண்களுக்கு முக்கியத்துவம் பெற்றுவிடுகிறது. உலகமயமாக்கல் கொள்கை மூலம் அன்னிய வியாபாரிகளை நுழைய வழி கொடுத்துவிட்டதால், மேலை நாட்டுக் கலாசாரத்தை இந்திய கலாசாரம் சுவீகரிக்க ஆரம்பித்தது. தவிரவும் கல்வி கற்று வெளிநாட்டில் வேலை செய்யும் ஆண்களும், பெண்களும் அந்தக் கலாசாரத்தால் ஈர்க்கப்பட்டு சுயமிழக்கின்றனர்.

    ஆனால் திருமணம் என்று வரும்போது மட்டும் தாய் நாடு, குடும்பம் ஆகியவற்றை முன்னிறுத்தி மணமகளையோ, மணமகனையோ தேர்வு செய்கின்றனர். மணமான தம்பதியினர் மேலை நாட்டுக் கலாசாரத்தை விரும்ப, இடையே ஏற்படும் முரண் பிரச்சினையாகிறது. பெண்களைச் சமமாக ஏற்க தயங்கும் சமூகத்தில் அவர்கள் படித்ததால் சுயமாக சிந்திக்கவும், செயல்படவும், உரிமை கோருகிறார்கள் அல்லது எடுத்துக்கொள்கிறார்கள். இந்தப் போக்கு பழமையில் இருந்து மாறுவதால் வாழ்வில் நெருடலை உண்டாக்குகிறது. அதனால் மணமக்கள் சட்டப்படி பிரிய நினைக்கிறார்கள்.

    விவாகரத்து சட்டத்தின்படி விருப்பமில்லா தம்பதியரை பிரிக்க வழிவகை செய்யப்பட்டிருந்தாலும், அவர்கள் சேர்ந்து வாழ சாத்தியக்கூறு இருக்கிறதா என்று ஆராயக் கால அவகாசமும், உளவியல் கலந்தாய்வும், சமரச தீர்வு மையமும் அனுப்பி தீர்வாகாத பட்சத்தில் இருவரும் சம்மதித்தால் சேர்ந்து வாழவும், விருப்பமில்லா விட்டால் பிரியவும் தீர்வு செய்யப்படுகிறது. மற்ற சட்டங்களைப் போல விவாகரத்தை கடுமையாக பின்பற்ற இயலாது. காரணம், இதில் மனம் சம்பந்தப்பட்டதால், உறவு சம்பந்தப்பட்ட பந்தமும் தொடர்கிறது குழந்தைகள் வடிவில். குழந்தைகளின் எதிர்காலம், பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பின்னரே மனப்பிரிவை மேற்கொள்ள இயலும்.



    தம்பதியினரிடையே மனப் பிரிவு ஏற்பட நிறைய காரணங்கள் இருக்கின்றன. மன நோய், பால் வினை நோய், ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம், முறையற்ற தொடர்பு எனப் பலவகை இருந்தாலும் அண்மைக் காலமாக செல்போன்களின் அசுர வளர்ச்சியும் ஒரு காரணமாக அமைந்து விடுகிறது.

    செல்போன் மூலம் உலகின் எந்த நாட்டில் இருந்தாலும் அதில் வாட்ஸ் அப், முகநூல், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், மெசஞ்சர் போன்ற தகவல் பரிமாற்ற ஊடகங்கள் வழியே எளிதாகப் பயன்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. இவையெல்லாமே முகமறியா மனிதர்களுடன் தொடர்புகொள்ளவும் நட்புகொள்ளவும் வசதி இருக்கிறது. அதில் நிறைய போலி கணக்குகளைத் தொடங்கி நட்பு ஏற்படுத்தி தவறான எண்ணத்துடன் வர வாய்ப்புண்டு. சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் தம்பதியர் கவனக்குறைவு ஏற்பட்டால் மூன்றாவது நபர் இடையில் புகுந்து தம்பதியருக்கு குறுக்குச் சுவராய் அமையலாம். அதிக நேரம் செல்போன் பயன்படுத்தினால் கணவன், மனைவி தொடர்பில் விரிசல் வரலாம் அல்லது மன நோய் ஏற்படலாம்.

    கணவன், மனைவிக்கு இடையே சமூக ஊடகங்கள் நேரிடையாகவும், மறைமுகமாகவும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். போலி முகங்களால் பிரச்சினை வரலாம். தம்பதிகள் இருவரும் பணிபுரிபவராக இருந்தால் கேட்கவே வேண்டாம். செல்போனை எடுத்துக்கொண்டு தனித்தனியாக அமர்ந்து கனவுலகில் சஞ்சரிக்கிறார்கள். மனதாலும், உடலாலும் இணையும் வாய்ப்பு மிகமிகக் குறைவே.

    ‘செல்பி’ போட்டோ எடுத்து, பகிர்ந்து அதை எத்தனை பேர் விருப்பம் தெரிவிக்கிறார்கள் என்ற சுயமோகம் தம்பதியினரிடையே பிணக்கை ஏற்படுத்தும். ஒருவருக்கொருவர் ஐயம் ஏற்பட்டுவிட்டால் உள்ள பிணைப்பில் தளர்வு ஏற்பட்டு, ஒருவர் மற்றவரை வேவு பார்க்க ஆரம்பிக்க அது முற்றி ‘பாரநோயா’ என்ற மன நோய்க்கு ஆளாகி விவாகரத்து மட்டுமல்ல, தற்கொலை, கொலை செய்யும் அளவுக்குப்போகும். இதற்கான தீர்வை அந்த தம்பதிகளே தான் காணவேண்டும்.

    மனக்கசப்பிற்கான காரணத்தைக் கண்டறிந்து அவர்களுக்குள்ளாகவே பேசித் தீர்த்துக்கொள்ளலாம். வழக்கு என்பது ஒரு சட்டபூர்வமான விடுவிப்பு. சமூக பந்தங்களிலிருந்தும், சொத்துரிமை போன்ற உரிமைகளில் இருந்து தற்காத்துக்கொள்ளவே பயன்படும். அதனால் மருந்து நம் கைவசமே உள்ளது. அதை அளவாகப் பயன்படுத்தினால் வாழ்க்கை ருசிக்கும்; இல்லையெனில் கசக்கும்.

    வாழ்க்கையென்பது நம் கலாசாரப்படி ஒரு வாழும் கலை. அதைச் சிதறாது கட்டுக்கோப்பாக கொண்டு செல்வது தம்பதியினரின் கடமை. குடும்ப வாழ்வில் ஒளிவுமறைவின்றி மனம்விட்டுப் பேசுவதும், ஒருவருக்கொருவர் புரிந்து வாழ்வதும் தான் வாழ்க்கை எனத் தெளிந்து குடும்பங்களைப் பராமரிப்போம், நற்செல்வங்களைப் பெற்றெடுப்போம்.

    கே.சுப்ரமணியன், வக்கீல், சென்னை உயர்நீதிமன்றம்.

    எந்த உறவிலும் பாசமும், பரிவும், அன்பும் ஒருவழிப் பாதை அல்ல! நீங்கள் என்ன கொடுக்கிறீர்களோ அதையே பெறுவீர்கள். ஆகவே, நிறைய அன்பைக் கொடுங்கள்.
    நாளை (மே 15-ந்தேதி) உலக குடும்ப தினம்.

    குடும்பம் என்பது அதிகாரம் தூள்பறக்கும் நிறுவனமல்ல. அன்பும், அருளும் தவழும் கோவில். குடும்பம் என்பது உருவங்கள் நடமாடும் இடம் அல்ல, உள்ளங்கள் உறவாடும் இடம். வீடு என்பது தங்குமிடமல்ல. இன்பம் பொங்குமிடம். எல்லா நாடுகளுக்கும் ஒவ்வொரு வகையான பெருமை உண்டு என்றால் இந்தியாவின் பெருமை இனிய குடும்பம்.

    தமிழ்நாட்டுக்கு சுற்றுலா வந்திருந்த ஒரு வெளிநாட்டு தம்பதியிடம் ஒரு நிருபர் பேட்டி எடுத்தார். “இங்குள்ள கோவில்களையெல்லாம் பார்த்தீர்களா?” “பார்த்தோம். அதிசயமாக இருந்தது. அதைவிட அதிசயம் இங்குள்ள குடும்பங்களெல்லாம் கோவிலாக இருப்பது” இதுதான் நமக்குப் பெருமை. அந்தப் பெருமையைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும். கால ஓட்டத்தில் நிலைமை மாறி வருவதாகச் சொல்லப்படுகிறது. முன்பெல்லாம் உடைந்த வீடுகள் உடையாத உள்ளங்கள்.

    இப்போது உடையாத வீடுகள் ஆனால் உடைந்த உள்ளங்கள். இல்லறத்தில் மகிழ்ச்சி எப்போது வரும்? புடவை, பட்டுக் கொடுத்தால் வருமா? நகை நட்டு கொடுத்தால் வருமா? பணக்கட்டு கொடுத்தால் வருமா? சீர்வரிசை தட்டு கொடுத்தால் வருமா? அப்போதெல்லாம் விட ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தால் வரும். விட்டுக் கொடுப்பதென்பது வீழ்ச்சியல்ல விதைப்பது. உலகின் மிக உன்னதமானது கணவன் மனைவி உறவு. முன்பின் அறிமுகம் இல்லாத, ரத்த உறவாகப் பிறந்திடாத இரண்டு பேருக்கு இடையே அறிமுகம் முளைத்து, அது நட்பாக வளர்ந்து, இனிய அன்பாகப் பிரவாகம் எடுத்து, இரண்டு உடல்களில் ஓர் உயிர் இருப்பது போல நெருக்கமாகி, ஆயுள் முழுவதும் இணைந்திருக்கும் இனிய பந்தம். அது அழகாக இருக்க சில உறுதிமொழிகளை எடுத்துக்கொள்வது அவசியம்.

    கணவனுக்கும், மனைவிக்கும் நடக்கும் விவாதங்களில் ஜெயிப்பதற்கு ஆர்வம் காட்டாதீர்கள். யார் ஜெயித்தாலும், தோற்றவர் வாழ்க்கைத் துணைதானே. ஒருவர் தோல்வியின் விரக்தியில் இருக்கும்போது, மற்றவர் வெற்றியைக் கொண்டாட முடியுமா? விட்டுக்கொடுங்கள். அன்பை வெளிப்படுத்தவும், ஆறுதல் சொல்லவும் அவ்வப்போது அரவணைப்பையும் அன்பான வார்த்தைகளையும் பயன்படுத்துங்கள். நெடுநாள் இனிமையாக உறவு நீடிக்க இந்த “மந்திரச் செயல்” அவசியம்.

    பணம்தான் பல குடும்பங்களில் உறவை உடைக்கும் கருவியாக இருக்கிறது. வருமானம், கடன், செலவுகள், வீடு வாங்குவது போன்ற உங்கள் பொருளாதார இலக்குகள் என எதையும் வாழ்க்கைத்துணையிடம் மறைக்காதீர்கள். வாழ்க்கையில் யாராவது ஒருவரிடமாவது ஒளிவு மறைவின்றி உண்மையாக நடந்து கொள்ள வேண்டும். அது உங்களது வாழ்க்கைத்துணையாக இருக்கட்டும்.

    எந்த உறவிலும் பாசமும், பரிவும், அன்பும் ஒருவழிப் பாதை அல்ல! நீங்கள் என்ன கொடுக்கிறீர்களோ அதையே பெறுவீர்கள். ஆகவே, நிறைய அன்பைக் கொடுங்கள். வாழ்க்கைத்துணை கச்சிதமான நபரான, எல்லாவற்றையும் ஒழுங்காகச் செய்பவராக, நூறு சதவீதம் உங்கள் எதிர்பார்ப்பை நிறைவு செய்பவராக இருக்க வேண்டும் என நினைக்காதீர்கள். பலங்களும், பலவீனங்களும் இணைந்தவர்களே ஒவ்வொருவரும். நீங்களும் அப்படித்தானே. வாழ்க்கைத் துணையிடம் மட்டும் நூறு சதவீத கச்சிதத்தை எதிர்பார்ப்பது நியாயமா?

    யாரோடும் உங்களை ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். ஒப்பிட்டால் அந்த நிமிடத்தில் இருந்து நிம்மதியைத் தொலைத்துவிடுவீர்கள். ஒவ்வொரு தனிநபரும் தனிப்பட்ட குணங்களின், திறமைகளின், விருப்பங்களின் கலவை. அந்தத் தனித் திறமையைக் கண்டறிந்து, அதை வளர்த்துக் கொள்ளுங்கள். ஒரே நேரத்தில் பல சிந்தனைகளில் மூழ்காதீர்கள். “டைனிங் டேபிளில்” அமர்ந்து சாப்பிட்டபடி அலுவலகத்தில் முடிக்க வேண்டிய வேலையை மனதில் நினைத்துக்கொண்டு, உதட்டளவில் வாழ்க்கைத் துணையிடம் பேசாதீர்கள். நீங்கள் உதிர்க்கும் வார்த்தைகளில் அக்கறை குறைவதை, வேறு யாரையும்விட வாழ்க்கைத் துணையால் நன்றாகப் புரிந்துகொள்ள முடியும்.

    வாழ்க்கைத்துணையின் உறவினரோ, நண்பரோ, உங்களை ஏமாற்றி இருக்கலாம்; ஏதாவது நஷ்டத்துக்கு ஆளாக்கி இருக்கலாம். அதை மனதில் வைத்துக்கொண்டு உங்கள் வாழ்க்கைத்துணையை விமர்சிக்காதீர்கள். யாரோ செய்த தவறுக்கு அவர் எப்படி பொறுப்பாக முடியும்? உங்கள் உடன்பிறந்தவர்களே கூட உங்களைப் போல இருக்க முடியாது என்கிறபோது, யாரோ ஒருவர் எப்படி உங்களின் வாழ்க்கைத் துணைபோல அக்கறையாக இருப்பார்?

    வாழ்க்கைத்துணை மீது கோபமோ, வருத்தமோ ஏற்படும்போது என்ன செய்யலாம்? எதுவுமே செய்யாமல் அமைதியாக இருப்பதுதான் நல்லவழி. கோபத்தில் திட்டுவதோ, போனில் கத்துவதோ பிரச்சினைகளைத் தீர்க்காது. அவசரத்தில் உதிர்க்கும் வார்த்தைகள், இன்னொரு புது பிரச்சினையை உருவாக்கிவிடும். உணர்ச்சிவசப்பட்டு மனதால் முடிவு எடுக்காதீர்கள்; நிதானமாக யோசித்து அறிவால் முடிவெடுங்கள். இன்றைய கோபத்தை இன்றே மறந்துவிடுங்கள். அதை சுமந்துகொண்டு படுக்கைக்குப் போகாதீர்கள். மனதில் போட்டுக் குழப்பிக் கொண்டிருக்காதீர்கள். கோபத்தில் வரும் யோசனைகள், பலூன் மாதிரி பிரச்சினைகளை ஊதிப் பெரிதாக்கிவிடும். அன்பு எனும் ஊசியால் அதை உடைத்துவிடுங்கள். கருத்து வேறுபாடுகளும், விவாதங்களும் பிரச்சினையை பெரிதாக்காமல் தீர்க்கும் போக்கில் அமைய வேண்டும். சின்ன நூல்கண்டா நம்மை சிறைப்படுத்துவது?

    ஒருவர், தன் மகள் திருமணத்துக்காக ஒரு ஜோசியரைப் பார்த்து, இரண்டு ஜாதகங்களைக் கொடுத்து பொருத்தம் பார்க்கச் சொன்னார். இரண்டும் பெண்களின் ஜாதகமாயிருந்தால் அதிர்ச்சியடைந்த ஜோசியர் காரணம் கேட்டார். “ஒன்று என் மகள் ஜாதகம், இன்னொன்று அவளுக்கு மாமியாராக வரப்போறவங்க ஜாதகம். இரண்டும், பொருந்தி வருதா பாருங்க”.

    இந்த நிலைமை ஏன்? தன்னுடைய மகள் கட்டிக்கொடுத்த இடத்தில் கண்கலங்காமல் இருக்க வேண்டும் என்று நினைக்கிற தாய், தன்னை நம்பி வந்திருக்கும் ஒரு பெண்ணை கண்கலங்காமல் காப்பாற்ற வேண்டாமா? தன் அம்மாவை நேசிக்கும் ஒரு பெண், தனது மாமியாரும் தாய்மாதிரித்தான் என்று எண்ணத் தொடங்கினால் குடும்பம் கோவிலாகி விடும். மாமியாரின் அனுபவத்தை மருமகளும், படித்த மருமகளின் அறிவாற்றலை மாமியாரும் மதிக்கத் தொடங்கிவிட்டால் பிரச்சினை தீர்ந்து விடும்.

    நமது குடும்பத்தின் வலிமையே கூட்டுக்குடும்பம்தான். அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, அக்கா, தங்கை, அண்ணன், தம்பி, அத்தை, மாமா, சித்தப்பா, சித்தி, பெரியப்பா, பெரியம்மா அடடா? எத்தனை உறவுமுறைகள். தாய்மாமன் உறவு என்பது தனித்துவமானது. தாத்தா சரித்திரம் சொல்ல, பாட்டி கதைகள் சொல்ல, அத்தையும், மாமாவும் அரவணைக்க அந்த வளர்ப்பின் அனுபவமே அற்புதமானது. நட்ட நடுநிசியில் தொட்டில் குழந்தை, நிதானத்துக்கு அதிகமாக அழுது துடித்தால் எந்த டாக்டரிடம் கொண்டு செல்வது? இருக்கவே இருக்கிறது பாட்டி வைத்தியம்.

    இப்போது அவசர உலகத்தில் இந்த கூட்டுக்குடும்ப தத்துவம் தகர்ந்து கொண்டிருக்கிறது. தனிக்குடித்தனம் என்ற சுயநலத் தேவை அதிகரித்துவிட்டது. வேலை நிமித்தம் தவிர்க்க முடியாத சூழ்நிலை தவிர, மற்ற காலகட்டத்தில் ஒன்றாக வாழ்வதே நல்லது. அப்போதும் இல்லறங்கள் வேறாக இருந்தாலும் இதயங்கள் நெருங்கியிருந்தால் உறவுகள் மேம்படும். “வீட்டுக்குப் பெயர் அன்னை இல்லம். அன்னை இருப்பதோ முதியோர் இல்லம்” என்ற நிலையும் உள்ளது. ஒரு பெரியவர் சொன்னார்: எனக்கு ஐந்து சன்ஸ் உண்டு. ஆனால் நான் பெற்றெடுக்காத இன்னொரு சன்தான் என்னைக் காப்பாற்றுகிறான். அவன்தான் பென்சன்.

    பெரியவர்கள் வீட்டில் இருந்தால் பெருமை என்று கருதுவோம். அவர்களை வழிபடுவதே சிறந்த ஆன்மிகம் என்ற நிலை வந்தால் குடும்பம் கோவிலாகிவிடும். குடும்ப தினத்தில் அதைப்பற்றி அதிகம் யோசிப்போம்.

    முனைவர் இளசை சுந்தரம், வானொலி நிலைய முன்னாள் இயக்குனர், மதுரை.
    துணைக்கு தகாத உறவு இருக்கலாம் என்கிற சந்தேகம் கிளம்பியதும், அதை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டியது மிக முக்கியம்.
    துணையின் தகாத உறவு தெரிய வருவதும், அதை எதிர்கொள்வதும் படு பயங்கரமான அனுபவம். உணர்ச்சிகளைக் கொந்தளிக்கச் செய்கிற அனுபவமும் கூட துணைக்கு அப்படியொரு தகாத உறவு இருக்கலாம் என்கிற சந்தேகம் கிளம்பியதும், அதை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டியது மிக முக்கியம். அது உண்மையா, பொய்யா என்கிற மனப்போராட்டத்துக்கு விடை காண்பதே மிகப்பெரிய மன உளைச்சலைத் தரும்.

    சிலரது தகாத உறவானது ஆரம்பித்தவுடனேயே தெரிந்து விடும். அதை உறுதிப்படுத்துகிற ஆதாரங்களும் கிடைத்துவிடும். சில நேரங்களில் அந்த உறவானது துணைக்குத் தெரியாமலே ரகசியமாகத் தொடரும். பத்து, பதினைந்து வருடங்கள் கடந்தும் கூட அது தெரியாமல் வைத்திருக்கப்படுகிற குடும்பங்களும் உள்ளன. அதை நாம் எப்படிக் கையாள்கிறோம் என்பதைப் பொறுத்தே நம் எதிர்காலம் அமையும். நாம் ஏற்கனவே பார்த்த மாதிரி துணையிடம் காணப்படுகிற திடீர் நடத்தை மாறுபாடுகள், அவரது பழக்க வழக்கங்களில் தென்படுகிற திடீர் மாற்றங்கள் மற்றும் உறவுகளிடமிருந்தும், விட்டுச் சூழலில் இருந்தும் தனித்து விலகி இருக்கிற மனப்பான்மை போன்றவையே தகாத உறவுக்கான முதல் அறிகுறிகளாக அமையும்.

    கணவன் - மனைவி இருவருமே பிஸியான வேலையில் இருப்பார்கள் என்றாலோ, வேலை அல்லது பிசினஸீக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருந்தாலோ ஒருவருக்கு ஏற்பட்ட தகாத உறவை இன்னோருவரால் அத்தனை சுலபத்தில் கண்டுபிடிக்க முடியாது.

    ஒரு சில பெண்களுக்கு கல்யாணமாகி, குழந்தைகள் பிறந்ததும், கணவனுக்கான நேரமும் கவனிப்பும் குறைந்து, மொத்த கவனமும் குழந்தைகள் பக்கம் திரும்பும். குழந்தைகளைக் கண்ணும் கருத்துமாக வளர்க்க வேண்டிய பொறுப்பில், கணவரின் மீதான கவனம் சற்றே பின்னுக்குப் போவதும் இயல்புதான். அந்த மாதிரியான
    சந்தர்ப்பங்களிலும் அவர்களால் கணவருக்குத் திடீரென முளைத்த தேவையற்ற உறவு பற்றி அறிய வாய்ப்பில்லாமல் போகலாம்.

    பல நேரங்களில் அக்கம்பக்கத்து வீட்டார், நண்பர்கள், உடன் வேலை செய்கிறவர்கள், முன்பின் அறிமுகம் இல்லாதவர்கள் என மூன்றாம் நபர்கள் மூலமும் துணையின் தகாத உறவு தெரிய வரும். இதெல்லாம் இருந்தாலும் துணையின் தப்பான உறவைக் காட்டிக் கொடுப்பதில் கணவரின் பேன்ட், ஷர்ட் பாக்கெட்டுகளுக்கும், மனைவியின் ஹேண்ட்பேகுக்குமே முதலிடம் என்கிறது ஒரு ஆய்வுத் தகவல். இ மெயில், அழிக்கப்படாத செல்போன் எஸ்.எம்.எஸ்.., அடிக்கடி ஒரே எண்ணிலிருந்து வந்த போன தொலைபேசி எண்கள் போன்றவையும் இந்த விஷயத்தில் முக்கிய சாட்சிகளாக அமைகின்றன.
    வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு நிதிச் சேவைகளை வழங்கும் வங்கிகள், அதற்கேற்ப பல கட்டணங்களை விதிக்கின்றன. அவை பற்றித் தெரிந்து கொள்வோம்...
    வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு நிதிச் சேவைகளை வழங்கும் வங்கிகள், அதற்கேற்ப பல கட்டணங்களை விதிக்கின்றன. அவை பற்றித் தெரிந்து கொள்வோம்...

    குறைந்தபட்ச இருப்பு இல்லாமைக்கான கட்டணம்:

    சேமிப்புக் கணக்கு களுக்கு ரூ. ஐநூறு முதல் ரூ. 10 ஆயிரம் வரை குறைந்தபட்ச இருப்புத் தொகையாக வங்கிகள் நிர்ணயம் செய்துள்ளன. நிர்ணயம் செய்யப்பட்ட குறைந்தபட்ச இருப்புத்தொகையைப் பராமரிக்காவிட்டால் வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் இருந்து அபராதக் கட்டணத்தை வசூலிக்கின்றன. எனவே, செயல்படாத அல்லது குறைந்தபட்ச இருப்புத் தொகையைப் பராமரிக்க இயலாத வங்கிக் கணக்கு களின் இயக்கத்தை நிறுத்திவிடுவது நல்லது.

    பணம் எடுத்தல்:

    நம் கணக்கு உள்ள வங்கியைச் சாராத பிற ஏ.டி.எம்.களில் பணம் எடுத்தல், நாம் கணக்கு வைத்துள்ள வங்கியின் ஏ.டி.எம்.களில் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் பணம் எடுத்தல் ஆகியவற்றின்போது வங்கிகள் நம்மிடம் சேவைக் கட்டணம் வசூலிக்கின்றன.

    பணம் டெபாசிட் செய்தல்:

    வங்கிக் கணக்கு வைத்துள்ள கிளை அல்லாத பிற கிளை வங்கிகளில் பணம் டெபாசிட் செய்யும்போது அதற்குக் கட்டணம் விதிக்கப்படுகிறது.

    காசோலைகள்:

    ஒரு மாதத்துக்கு ஒரு காசோலைக்கும் மேலான பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் விதிக்கப்படும். வெளியூர் வங்கிகளைச் சேர்ந்த காசோலைப் பரிவர்த்தனைகளுக்குத் தனியான சேவைக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    குறுஞ்செய்தி சேவைக் கட்டணம்:


    நம்முடைய வங்கிப் பரிவர்த்தனைகள் தொடர்பாக கைபேசிகளுக்கு அனுப்பப்படும் குறுஞ்செய்திகளுக்குக் கட்டணம் விதிக்கப்படுகிறது.

    டெபிட் கார்டு வழங்கும்போது:

    தொலைந்துபோன அல்லது திருட்டுப்போன டெபிட் கார்டுகளுக்குப் பதிலாக புதிய கார்டுகளுக்கு விண்ணப்பித்தால் அதற்கென தனியான அபராதக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    வணிகப் பரிவர்த்தனைகளுக்கான கட்டணங்கள்:

    இணையம் வழியான வணிகப் பரிவர்த்தனைகளின்போது பொதுவாக கட்டணங்கள் விதிக்கப்படுவது இல்லை. ஆனால், நம்முடைய வங்கி அல்லாத பிற முகமை நிறுவனங்கள் மூலமாக வணிக நிறுவனங்களுக்குப் பணம் செலுத்தப்படும்போது சேவைக் கட்டணம் விதிக்கப்படுகிறது. உதாரணமாக ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலமாக ரெயில் டிக்கெட்டுகளுக்கு பணம் செலுத்தும்போது, குறைந்தபட்சக் கட்டணம் அல்லது செலுத்தப்படும் தொகைக்கு ஏற்ப குறிப்பிட்ட சதவீதத்தில் சேவைக் கட்டணம் வசூலிக்கப்படும்.

    வெளிநாட்டுப் பண மாற்றப் பரிவர்த்தனைகள்:

    கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலமாக வெளிநாட்டு பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டால் 2 முதல் 4 சதவீதம் வரை சேவைக் கட்டணம் விதிக்கப்படுகிறது.
    திருமணத்துக்குப் பிறகு கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் நன்றாகப் புரிந்துகொண்டு, அன்பு செலுத்தினாலே இல்லற வாழ்வு சிறக்கும். ஆனால், அந்தப் புரிதல் ஏற்படச் சிறிது காலம் தேவை.
    கணவன் -மனைவி இடையேயான பிரச்சனைகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, இளம் தம்பதிகள் விவாகரத்து கேட்டு நீதிமன்றப் படியேறுவதும் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்து வருகிறது. தம்பதிகளிடையே சரியான புரிதல் இல்லாததே இதற்கெல்லாம் காரணமாகச் சொல்லப்படுகிறது. திருமணத்துக்குப் பிறகு கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் நன்றாகப் புரிந்துகொண்டு, அன்பு செலுத்தினாலே இல்லற வாழ்வு சிறக்கும். ஆனால், அந்தப் புரிதல் ஏற்படச் சிறிது காலம் தேவை.

    திருமணமான புதிதில் தம்பதிகளுக்கு இடையே பிரச்சனைகள் வருவது இயல்பு. காரணம், இருவருக்குமான எதிர்பார்ப்புகள் வெவ்வேறாக இருக்கும். அவர்கள் இருவரது கனவுகளும் மாறுபட்டதாக இருக்கும். மேலும், வயது குறைவு என்பதால் அனுபவமற்றவர்களாக இருப்பார்கள். இத்தகைய காலகட்டத்தில் இருவரது ஆசையும், எதிர்பார்ப்பும் முழுமையாகப் பூர்த்தியாகும் என்று சொல்லமுடியாது.

    தம்பதிகள் 40 வயதை அடைந்தால் அவர்கள் முதிர்ச்சியடைவதுடன் பக்குவத்துக்கும் வந்துவிடுவார்கள். அதனால், அவர்களிடையே எழும் சிக்கல்களும் குறைந்துபோகும். அதன்பிறகு குழந்தை வளர்ப்பு போன்ற புதிய பொறுப்பு உணர்ச்சிகள் வந்துவிடும். பொறுப்புகள் அதிகமாகும்போது சகிப்புத் தன்மை குறைய ஆரம்பிக்கும். அதனால், அந்த நேரத்தில் எழும் பிரச்னைகள் ஆரம்பகாலத்தைவிட ஆழமானதாக இருக்கும்.

    அதன் விளைவாக ஒருவர் மீது ஒருவர் பழி சொல்வது அதிகரிக்கும். இந்த மனப்பான்மையால் சிக்கல்கள் இன்னும் தீவிரமாக மாற வாய்ப்பிருக்கிறது. இந்தச் சூழலில் இருவருக்கும் இடையேயான பரஸ்பர புரிதலும், அன்பும் அவசியமாகிறது. அது இல்லாதபோது இதுபோன்ற சிக்கல்கள் தீர்க்க முடியாததாக மாறிவிடும். இதுபோன்ற சூழலில் உளவியல் ஆலோசனை பெறுவதில் தவறில்லை.  

    திருமணமான புதிதில் தம்பதிக்குள் ஆரம்பத்தில் ஓர் ஈர்ப்பு இருக்கும். அங்கே தாம்பத்தியம் என்பது முக்கியமான ஒன்றாக இருக்கும். அப்போது பிரச்னைகள் இருந்தாலும் தாம்பத்தியம் அதைத் தீர்த்துவிடும். ஆனால், 40 வயதுக்குமேல் முதிர்ச்சி பெற்றுவிடுவதால் தாம்பத்தியம் அதைச் சரிசெய்துவிடும் என்று சொல்லமுடியாது. பலருக்குத் தீவிர சிக்கலை ஏற்படுத்தி விடுகிறது. இப்போதைய சூழலில் மனநல மருத்துவரின் ஆலோசனைகள் அவசியம் தேவைப்படும்.

    இல்லறத்தில் சிக்கல் ஏதும் ஏற்படாமலிருக்கத் தம்பதியருக்கான சில ஆலோசனைகள் அவசியமாகும். அவை என்னென்ன என்று பார்ப்போம்.

    * தம்பதிக்கிடையே சிக்கல் வந்தால், ஒருவர் மற்றவர் மீது பழிபோட்டு, திருப்தியடையக் கூடாது.  

    *  எந்தவொரு பிரச்னையையும் தம்பதிகள் உணர்வுபூர்வமாக அணுகக்கூடாது. அதை அறிவுபூர்வமாக அணுகும் பக்குவத்தையே இருவரும் வளர்த்துக் கொள்ளவேண்டும்.

    * ஒரு சிக்கல் மற்றொருவரால்தான் வருகிறது என்ற மனப்பான்மை வரக்கூடாது. அதற்கு இருவருமே காரணமாக இருக்கலாம் என்பதை அறியவேண்டியது அவசியம்.

    * சிக்கல்கள் வரும்போது, தான் எந்த வகையில் காரணம் என்பதையும், அதைச் சரிசெய்ய என்ன செய்ய வேண்டும் என்பதை இருவருமே திறந்த மனதுடன் அணுகவேண்டும்.

    * தம்பதிக்கிடையே எத்தகைய பிரச்னைகள் ஏற்பட்டாலும் இருவருக்குமிடையே அன்பும், புரிதலும் இருக்கவேண்டும். அப்படியிருந்தால் பிரச்னையை எளிதில் தீர்த்துவிடலாம்.

    * இன்றைய சூழலில் இப்படியொரு சம்பவம் நடந்துவிட்டது. இதற்கு அவரது (கணவனோ/மனைவியோ) கேரக்டர் காரணமல்ல, சூழல் காரணமாக அது நடந்திருக்கிறது என்பதை அறிந்துகொள்ளவேண்டும். பிரச்னையைப் பொதுமைப்படுத்திப் பேசக்கூடாது. இவற்றையெல்லாம் கடைப்பிடிக்கும்போது தம்பதியர் மகிழ்ச்சியுடன் வாழலாம்.
    பரஸ்பர நிதி எனப்படும் மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய ஆர்வமாக இருக்கிறீர்களா? அதற்குமுன், சில விஷயங்களில் தெளிவு பெறுவது அவசியம்.
    பரஸ்பர நிதி எனப்படும் மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய ஆர்வமாக இருக்கிறீர்களா? அதற்குமுன், சில விஷயங்களில் தெளிவு பெறுவது அவசியம்.

    நிதி முதலீடுகள் செய்யும்போது வரும் லாப, நஷ்டங்கள் தனிமனிதனின் பொருளாதாரத் தளங்களில் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியவை. எனவே அது தொடர்பான அச்சமும் முதலீட்டாளர்களுக்கு இருக்கவே செய்யும். மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் பல்வேறு பரிணாமங்களில் கிடைப்பதால் அவற்றை லாவகமாகத் தேர்வு செய்யத் தெரிந்திருக்க வேண்டும்.

    நாம் அனுபவம் வாய்ந்த முதலீட்டாளர்களாகக் கருதுபவர்களும்கூட தமது முந்தைய தவறுகளில் இருந்துதான் பாடம் கற்றுக்கொள்கிறார்கள். ஏனென்றால் ஒன்றையொன்று ஒப்பிடுவதில் ஏற்படும் தடுமாற்றங்கள் தவிர்க்க முடியாததாகி விடுகிறது. ஆனாலும் சரியான மியூச்சுவல் பண்ட் திட்டத்தைப் பிரித்தெடுக்கச் சில அளவுகோல்கள் உள்ளன.

    மியூச்சுவல் பண்டில் பண்ட் மானேஜரின் பின்புலம் பற்றித் தெரிந்துகொள்வது அவசியமாகும். பண்ட் மானேஜரின் கடந்த காலச் செயல்பாடுகளை மதிப்பிட வேண்டும். அவர்கள் நிர்வகித்த பண்ட்கள் வெற்றிகரமாகச் செயல்பட்டுள்ளதா என்பதையும், பெஞ்ச் மார்க் என்கிற நிலைக்குறிகளை அடைந்துள்ளதா என்பதையும் கவனிக்க வேண்டும். எத்தனை விதமான முதலீட்டுத் திட்டங்களைக் கையாண்டுள்ளார் என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும்.

    மியூச்சுவல் பண்ட்டில் ஒவ்வொரு முதலீட்டுக்கும் ஒரு தனித்துவமான அடையாளம் உண்டு. வளர்ச்சி, விலை உள்ளிட்டவை குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். ‘வேல்யூ இன்வெஸ்டிங்’ எனப்படும் மதிப்பு முதலீடு, ‘குரோத் ஸ்டிராட்டர்ஜி’ எனப்படும் வளர்ச்சி வழி மற்றும் ‘பிளெண்டட் ஸ்டிராட்டர்ஜி’ எனப்படும் கலப்பு உபாயம் போன்ற நுட்பங்கள் முதலீட்டுத் திட்டங்களில் உள்ளன.

    நாம் தேர்வு செய்யும் மியூச்சுவல் பண்ட் கடந்த காலத்தில் வருவாயை ஈட்டுவதில் சரியாகச் செயல்பட்டுள்ளதா என்பதைக் கவனிக்க வேண்டும். அதேநேரம், கடந்த காலத்தில் வெற்றிகரமாகச் செயல்படாத ஒரு பண்ட், எதிர்காலத்திலும் அதேபோல் நீடிக்கும் என்ற முடிவுக்கு வரக்கூடாது. ஆக, மியூச்சுவல் பண்டில் எப்போதும் ஒரே அளவுகோலைப் பயன்படுத்தக்கூடாது.

    ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் மியூச்சுவல் பண்ட் திட்டத்திலிருந்து கிடைக்கும் வருவாயில் ஏற்படும் ஏற்ற இறக்கம் ‘ஸ்டாண்டர்டு டீவியேஷன்’ எனப்படுகிறது. இதைப்போல பல பிரத்யேக பதங்கள் உள்ளன. அவற்றை அறிந்துகொள்ள வேண்டும்.

    பல்வேறு முகமைகள் வழங்கும் தரவரிசைகளைச் சரியான அளவுகோலுடன் ஆராய்ந்து ஒன்றை தேர்வு செய்துகொள்ளலாம். கொடுக்கப்பட்ட மதிப்பீடுகள், தர வரிசைகளை ஆராய்ந்து, ஒரு திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும்.
    மனைவியிடம் தேவையற்ற சண்டை, சச்சரவுகள் உண்டாகாமல் இருப்பதற்கு எக்காரணம் கொண்டும் காதலி / மனைவியிடம் இந்த விஷயங்களை கேட்கவே கூடாது...
    மனைவியிடம் தேவையற்ற சண்டை, சச்சரவுகள் உண்டாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதில் கவனமாக இருக்க வேண்டும். அதற்கு, எக்காரணம் கொண்டும் காதலி / மனைவியிடம் இந்த விஷயங்களை கேட்கவே கூடாது...

    சைலன்ஸ் என்பது இருமுனை கத்தி போல. சில சமயம் பல சண்டைகள் உண்டாகாமல் தடுக்க காரணமும் சைலன்ஸ் தான். பல சமயம் சண்டைகள் பெரிதாக காரணமாக இருப்பதும் சைலன்ஸ் தான்.

    பெண்கள் வெளியே செல்லும் வேலைகளில் ரெடியாக சற்று கூடுதல் நேரம் எடுத்துக்கொள்வார்கள். எனவே, அவர்கள் ரெடியாகிக் கொண்டிருக்கும் போது ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை சென்று முடிஞ்சதா? இன்னுமா ரெடி ஆகுற? லேட் ஆகுது என்று கேட்டுக் கொண்டே இருக்க வேண்டாம். காரணம், நீங்கள் கேள்வி, கேட்க, கேட்க பெண்கள் ரெடியாகும் நேரம் மட்டுமல்ல, உங்கள் மீதான க்ரைம் ரெட் கூடிக் கொண்டே போகும்.

    முடிந்த வரை உங்கள் துணையின் அந்த மூன்று நாட்கள் மாதத்தின் எந்த நாளில் வர சாத்தியம் என்பதை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். இதுவும் புருஷ லட்சணம் தான். அல்லது, சென்ற மாதத்தில் உங்கள் மனைவிக்கு எந்த நாளில் பீரியட் ஸ்டார்ட் ஆனது என்பதையாவது மறக்காமல் இருக்க வேண்டும். சிலசமயம் அவர்களே இதை மறக்க வாய்ப்பிருக்கிறது. இது எதுவும் தெரிந்துக் வைத்துக் கொள்ளாமல், திடீரென ஒரு நாள் சென்று அந்த நாள் குறித்த குழப்பமான கேள்விகள் கேட்டால்... நிச்சயம் ஒரு ருத்ரதாண்டவதை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகலாம்.



    எக்காரணம் கொண்டும்... தெரிந்தோ தெரியாமலோ மற்றொரு பெண்ணின் உடல் வாகினை பற்றி புகழ்ந்து பேசுவதோ, விமர்சிப்பதோ வேண்டாம். அது வேறு பெண்களாக தான் இருக்க வேண்டும் என்றில்லை... உங்கள் துணையின் தோழி, சகோதரி என யாராக இருந்தாலும் சரி... அதனால் வெளிப்படும் கோபம், தாக்கம், விளைவுகள் ஒரே மாதிரியானதாக தான் இருக்கும்.

    உங்கள் துணைக்கு பிடித்த உணவு உங்களுக்கு பிடிக்காது என்றாலோ, அல்லது அவர் சாப்பிட போகும் உணவில் அதிக கொலஸ்ட்ரால் இருக்கிறது..., அது அதிகம் சாப்பிட்டால் அது வரும், என்று அவர்கள் ஆசையாக சாப்பிட செல்லும் போது சொல்ல வேண்டாம். சாப்பிட்டு முடித்த பின்னர் அதனால் ஏற்படும் பக்கவிளைவுகளை எடுத்துக் கூறுங்கள்.

    சில சமயம் ஆண்களிடம் வெளிப்படும் கெட்ட பழக்கமே ஒப்பிடுவது தான். ஏதாவது ஆசையாக சமைத்து கொண்டு வந்து கொடுத்தால் நன்றி கூறி சாப்பிட்டு விடுங்கள். அதைவிட்டு... என் அத்தை பொண்ணு நல்லா பண்ணுவா... அம்மா சூப்பரா சமைப்பாங்க... அந்த பிரெண்ட் இதுல எக்ஸ்பர்ட் என்றெல்லாம் வேறு யாருடனாவது ஒப்பீடு செய்தால்.. நாளப்பின்ன உங்களுக்கு எதுவுமே கிடைக்காது. ஒருசில நாள் இரவும் பட்டினி போடப்படலாம்.

    கணவன் - மனைவி உறவுல நிச்சயம் எதிர்பார்ப்பு இருக்கும். அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்பு தவறு தான். ஆனா, சின்ன சின்ன எதிர்பார்ப்புகள கூட, இதெல்லாம் நீயே பண்ணிக்க மாட்டியா என்று தட்டி கழிப்பது... அதைவிட பெரும் தவறு. பிறகு எதற்கு காதலன் - காதலி ; கணவன் - மனைவி என்ற உறவு. உண்மையில் நமது உறவினை இணைத்து வைத்திருக்கும் பாலத்தின் ஆரோக்கியம் இந்த சின்ன சின்ன எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதில் தான் அடங்கி இருக்கிறது. இதை நாம் செய்ய மறந்துவிட்டால், தவறிவிட்டால்.. அந்த பாலத்தில் நிச்சயம் விரிசல் விழ வாய்ப்புகள் உண்டு.
    உங்களது கணவர் உங்களுடன் அதிக நேரம் செலவிடாமல் ஒதுங்கிப் போகிறாரா...அதற்கான காரணங்கள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    உங்களது கணவர் இப்போதெல்லாம் முன்பு போல உங்களிடம் நெருங்கி வருவதில்லையா…உங்களுடன் அதிக நேரம் செலவிடாமல் ஒதுங்கிப் போகிறாரா… முத்தமிடுவதில்லையே, அன்பு காட்டுவதில்லையா, உங்களை விட்டு விலகிப் போவது போல உணர்கிறீர்களா… இது பல குடும்பங்களில் இன்று அரங்கேறிக் கொண்டிருக்கும் விஷயம்தான்..ஆனால் இதை நீங்கள் தைரியமாக சந்திக்க முன்வர வேண்டும்.

    மீண்டும் உங்கள் பக்கம் உங்களது கணவரைத் திருப்ப முடியும். அதற்கு நம்பிக்கையும், சில மெனக்கெடல்களும் மட்டுமே தேவை.

    முதலில் ஆண்கள் ஏன் மனைவியரை விட்டு விலகிப் போக ஆரம்பிக்கிறார்கள் என்பதற்கான காரணத்தைப் பார்ப்போம்…

    படுக்கை அறை விளையாட்டில் மனைவியிடமிருந்து போதிய ஈடுபாடு வராமல் போகும்போது ஆண்களுக்கு மனைவி மீதான ஈர்ப்பு குறையலாம். மனைவி தனக்கு ஒத்துழைப்புத் தருவதில்லை என்ற ஏமாற்றம் அவர்களை மனைவியிடமிருந்து விலகிப் போக உந்தலாம்.

    திருமணத்திற்குப் பிறகு, குழந்தை பெற்ற பிறகு பெரும்பாலான பெண்கள் ஏகத்துக்கும் குண்டடித்து விடுகிறார்கள். இதுவும் கணவர்கள், மனைவியரை விட்டு விலக ஒரு முக்கியக் காரணமாம். பல பேர் அப்படி இல்லை என்றாலும் மெஜாரிட்டி ஆண்களுக்கு மனைவி எப்போதும் ஸ்லிம்மாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறதாம். இப்படி குண்டாக இருக்கும் பெண்களிடம் செக்ஸ் அப்பீல் குறைவதால்தான் அவர்கள் கணவர்கள் பார்வையில் சற்று சலிப்பை ஏற்படுத்துவதாக உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

    குழந்தை பிறப்புக்குப் பின்னர் பெரும்பாலான பெண்களுக்கு பிறப்புறுப்பு தளர்ந்து, பெரிதாகி விடும். இதனால் உடல் உறவின்போது போதுமான சந்தோஷம் ஆண்களுக்குக் கிடைப்பதில்லை. ஆரம்பத்தில் இருந்ததைப் போல பெண்ணுறுப்பு இறுக்கமாக இல்லாதது பல ஆண்களுக்கு சோர்வைத் தருகிறதாம்.

    கணவர் மோகத்துடன் நெருங்கி வரும்போது பெண்கள் விலகிப் போக ஆரம்பித்தால் அது கணவர்களை அப்செட் ஆக்கி விடுமாம். இதுவும் கூட மனைவியரிடமிருந்து ஆண்கள் நழுவிச் செல்ல ஒரு காரணமாம்.

    பல கணவர்களுக்கு அலுவலக வேலை மண்டையைப் பிய்ப்பதாக இருக்கும். மாங்கு மாங்கென்று வேலை பார்த்து ஆய்ந்து ஓய்ந்து வீடு திரும்புபோதும் பிழியப்பட்ட கரும்பு போல மாறியிருப்பார்கள். எனவே செக்ஸ் மூடு அவர்களை அண்டுவது கடினம். இதுபோன்ற ஆண்களுக்கு செக்ஸ் மீதே ஒரு வெறுப்பு வந்து மனைவியரிடம் நெருங்காமல் தள்ளிப் போக ஆரம்பிப்பார்கள், உறவுகளை தள்ளிப் போடவும் செய்வார்கள்.

    இது சில காரணம்தான், இதையும் தாண்டி பல காரணங்கள் இருக்கலாம். இப்படிப்பட்ட காரணங்களால்தான் கணவர்கள், பெரும்பாலும் மனைவியரை விட்டு விலகிச் செல்ல ஆரம்பிக்கிறார்களாம். உங்க வீட்டுக்காரர் இந்த லிஸ்ட்டில் வருகிறாரா என்று பாருங்கள், வந்தால் உடனே சரி செய்யப் பாருங்கள்…
    ×