என் மலர்
நீங்கள் தேடியது "tag 134648"
போக்ஸ்வேகன் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன சந்தையில் பல்வேறு புது மாடல்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளை துவங்கி, விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது.
போக்ஸ்வேகன் நிறுவனம் மிட்-லெவல் மற்றும் ஹை எண்ட் எலெக்ட்ரிக் வாகனங்களை பல்வேறு நாடுகளில் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில் போக்ஸ்வேகன் தற்போது எண்ட்ரி லெவல் எலெக்ட்ரிக் வாகன மாடல்களில் தனது கவனத்தை திருப்பி இருக்கிறது. முதற்கட்டமாக இந்த மாடல் ஐரோப்பியா மற்றும் வளர்ந்து வரும் நாடுகளில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

கடந்த ஆண்டு நடைபெற்ற முனிச் மோட்டார் விழாவில் போக்ஸ்வேகன் நிறுவனம் தனது குறைந்த விலை எலெக்ட்ரிக் கார் எப்படி காட்சியளிக்கும் என்ற விவரங்களை ID கான்செப்ட் வடிவில் அறிவித்து இருந்தது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் போக்ஸ்வேகன் நிறுவனம் தனது ID 4 மாடலின் ப்ரோடக்ஷன் வெர்ஷனை டிசைன் செய்ய துவங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் புது எலெக்ட்ரிக் கார் மெல்லிய தோற்றம், ஆங்குலர் முன்புறம் மற்றும் ID டிசைன் அம்சங்களை கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. ஒட்டுமொத்தத்தில் இந்த எலெக்ட்ரிக் கார் போலோ மாடல் அளவில் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இது போக்ஸ்வேகன் நிறுவனத்தின் எண்ட்ரி லெவல் எலெக்ட்ரிக் கார் மாடலாக அறிமுகம் செய்யப்படும் என்றும் தெரிகிறது.
24 மணி நேரத்துக்குள் கார் நிறுவனம் ரூ.100 கோடியை இடைக்கால தொகையாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு டெபாசிட் செய்ய வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. #NGT #Volkswagen #Deposit
புதுடெல்லி:
ஜெர்மனியை சேர்ந்த போக்ஸ்வேகன் மோட்டார் வாகன நிறுவனம் இந்தியாவில் தனது டீசல் கார்களில் மோசடியான கருவியை பயன்படுத்தியதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவித்ததாக புகார் எழுந்தது. இதனை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் ரூ.100 கோடியை இடைக்கால தொகையாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு டெபாசிட் செய்ய வேண்டும் என்று அந்நிறுவனத்துக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் ஆதர்ஷ்குமார் கோயல் தலைமையிலான அமர்வு, தனது உத்தரவை அமல்படுத்தாத அந்த நிறுவனத்துக்கு கண்டனம் தெரிவித்தது. அதோடு, ரூ.100 கோடியை 24 மணி நேரத்துக்குள் அதாவது இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்குள் டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது. #NGT #Volkswagen #Deposit
ஜெர்மனியை சேர்ந்த போக்ஸ்வேகன் மோட்டார் வாகன நிறுவனம் இந்தியாவில் தனது டீசல் கார்களில் மோசடியான கருவியை பயன்படுத்தியதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவித்ததாக புகார் எழுந்தது. இதனை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் ரூ.100 கோடியை இடைக்கால தொகையாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு டெபாசிட் செய்ய வேண்டும் என்று அந்நிறுவனத்துக்கு உத்தரவிட்டது.
