என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 211749"

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் நடிப்பில் நாளை வெளியாக இருக்கும் படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி நாளை (03.06.2022) வெளியாக இருக்கும் திரைப்படம் 'விக்ரம்'. கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதில் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

    பொம்மை
    பொம்மை

    விக்ரம் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் நடித்துள்ள ‘பொம்மை’ படத்தின் டிரைலரை உலகம் முழுக்க 600 திரை அரங்குகளில் 'விக்ரம்' படத்துடன் வெளியாகிறது என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    ‘பொம்மை’ படத்தின் டிரைலரை நேற்று சிவகார்த்திகேயன் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
    இன்றைய காலச்சூழலில் தனிமையில் வளரும் பிள்ளைகளுக்கு பொம்மைகள்தான் தோழி, ஆசிரியர், என அனைத்துமாக இருக்கிறது என்றால் மிகையாகாது.
    குழந்தைகள் மட்டுமல்ல மேஜிக், சமய சடங்குகள், கல்வியின் செய்முறை விளக்கம், மாதிரி உருவாக்கம் என அனைத்திற்கும் பொம்மைகள் உபயோகிக்கிறோம்.

    பொம்மைகளை குழந்தைகள் தேர்ந்தெடுக்கும் நிறம், அது வெளிப்படுத்தும் சப்தம், அதன் தன்மையை வைத்து அவர்களின் மனோ நிலையை அறிய முடியும் என குழந்தை உளவியலாளர்கள் கூறுகிறார்கள். இந்த பொம்மைகள் பெரியவர்களை குழந்தைகளின் உலகத்தை புரிந்து கொள்ளவும் அவர்களோடு நம்மை இணைக்கவும் பாலமாக உள்ளது.

    ஒரு உளவியல் புள்ளியியல் ஆய்வின் முடிவின்படி மேல் தட்டு நிலையில் இருக்கும் பிள்ளைகள் பொம்மைகள் மேல் மிகவும் சொந்தம் கொண்டாடும் தன்மையுடன் இருப்பதாகவும் கீழ் தட்டில் இருக்கும் பிள்ளைகள் பிறரிடம் பகிர்ந்து விளையாடுவதாகவும் பதிவு செய்கிறது.

    பொம்மைகள் பிள்ளைகளின் கை, கண் மூளை சேர்ந்து வேலை செய்ய உதவுவதாகவும் கணக்கு மற்றும் அறிவியல் தகுதியை வளர்க்க உதவுவதாகவும் நிரூபித்துள்ளனர்.

    இன்றைய காலச்சூழலில் தனிமையில் வளரும் பிள்ளைகளுக்கு பொம்மைகள்தான் தோழி, ஆசிரியர், என அனைத்துமாக இருக்கிறது என்றால் மிகையாகாது.

    பெற்றோர்களுக்கு பிள்ளைகளின் உலகத்தை புரியவைக்க, ஆசிரியர்களுக்கு, மருத்துவர்களுக்கு குழந்தைகளின் எண்ணப்போக்கை பிரதிபலிக்க வைக்க, பிள்ளைகளுக்கு அவர்களின் உலகத்தில் அவர்களோடு பயணிக்கும் சக உயிராக உற்ற தோழமையாக மனித வரலாற்றின் பண்பாட்டை பறைசாற்றும் வண்ணமாக மனித வாழ்வோடு இணைந்த பொம்மைகளோடு நாமும் பொம்மைகள் தினத்தை கொண்டாடுவோம். 
    ×