என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சைவம்"

    • வெற்றிலையில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது.
    • இட்லி, தோசை, தயிர் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

    தேவையான பொருட்கள் :

    வெற்றிலை - 10

    காய்ந்த மிளகாய் - 4

    வெங்காயம் - ஒன்று

    தேங்காய் துருவல் - சிறிதளவு

    பூண்டுப் பல் - 3

    புளி - கோலிக்குண்டு அளவு

    உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்

    கடுகு - அரை டீஸ்பூன்

    பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்

    எண்ணெய் - 2 டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    வெற்றிலைத் துவையல்

    வெற்றிலைத் துவையல்

    செய்முறை:

    வெற்றிலையில் காம்பு, நடு நரம்பை நீக்கி விட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளிக்கவும்.

    அதனுடன் காய்ந்த மிளகாய், வெங்காயம், பூண்டு, தேங்காய் துருவல், வெற்றிலை சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் புளி, உப்பு சேர்த்துச் சிறிது நேரம் வதக்கி இறக்கவும்.

    ஆறியதும் மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்த துவையலாக அரைத்து எடுக்கவும்.

    இப்போது சத்தான சுவையான வெற்றிலைத் துவையல் ரெடி.

    • அதிக நார்ச்சத்து உள்ள வாழைப்பூ மலச்சிக்கலுக்கு ஒரு நல்ல மருந்தாக உள்ளது.
    • மூலநோய், மூல புண்கள், இரத்தம் வெளியேறுதல் பிரச்சனைகளுக்கு வாழைப்பூ சிறந்த மருந்தாகும்.

    தேவையான பொருட்கள்:

    வாழைப்பூ - 1

    கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்

    உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

    புளி - எலுமிச்சை அளவு

    காய்ந்த மிளகாய் - 4

    துருவிய தேங்காய் - கால் கப்

    எண்ணெய் - 3 டீஸ்பூன்

    கடுகு - 1 டீஸ்பூன்

    கறிவேப்பிலை - சிறிதளவு

    உப்பு - தேவையான அளவு

    பெருங்காயத்தூள் - சிறிதளவு

    செய்முறை:

    வாழைப்பூவின் தேவையற்ற காம்புகளை நீக்கி சுத்தம் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

    சமைப்பதற்கு முன் அதை மோரில் ஊற வையுங்கள்.

    அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, பெருங்காயத்தூள், புளி மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். பின் அதனை ஆற வையுங்கள்.

    அதே கடாயில் வாழைப்பூவையும் வதக்கிக்கொள்ளுங்கள்.

    மிக்சியில் முதலில் ஆற வைத்த கடலைப் பருப்பை அரைத்துக்கொள்ளுங்கள்.

    அடுத்து தேங்காய் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள்.

    கடைசியாக பின் வாழைப்பூ, சிறிது தண்ணீர், உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

    கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்து வைத்துள்ள துவையலில் கொட்டி கலந்து விடவும்.

    இப்போது சுவையான வாழைப்பூ துவையல் தயார்.

    • மோமோஸ் உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கும் ஒரு மாலை நேர சிற்றுண்டி.
    • உணவு பிரியர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் இதற்கென ஒரு தனி மவுசு உண்டு.

    தேவையான பொருட்கள்:

    கோதுமை மாவு - ஒரு கப்

    வெங்காயம் - 1

    கேரட் - 2

    முட்டைகோஸ் - அரை கப்

    குடைமிளகாய் - 1

    சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன்

    சில்லி சாஸ் - ஒரு டீஸ்பூன்

    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    வெங்காயம், கேரட், முட்டைகோஸ், குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு அதனுடன் உப்பு, எண்ணெய், கொஞ்சமாக தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 30 நிமிடங்களுக்கு ஊறவிடவும்.

    வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடானதும் வெங்காயம் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

    வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் பொடியாக நறுக்கிய குடைமிளகாய், கேரட், முட்டைக்கோஸ் சேர்த்து நன்றாக வதக்கவும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.

    இறுதியாக, சோயா சாஸ், சில்லி சாஸ் சேர்த்து கலந்து 2 நிமிடங்கள் வேகவைத்து இறக்கி வைக்கவும்.

    பிசைந்து மாவில் இருந்து சிறிய உருண்டைகளாக எடுத்து பூரி அளவிற்கு தேய்த்து கொள்ளவும்.

    இதன் நடுவில், வேகவைத்த காய்களை மசாலாவை வைத்து, அனைத்து பக்கமும் சேர்த்து மூடிவிடவும்.

    இதனை, இட்லி குக்கரில் வைத்து 15 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.

    சுவையான வெஜ் மோமோஸ் ரெடி..!

    • இந்த தோசையை குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.
    • இந்த தோசை செய்ய 10 நிமிடங்களே போதுமானது.

    தேவையான பொருட்கள்

    தோசை மாவு - 1 கரண்டி

    ஸ்வீட் கார்ன் - தேவையான அளவு

    குடைமிளகாய் - சிறியது 1

    வெண்ணெய் - தேவையான அளவு

    மிளகுப் பொடி - 1/2 மேசைக் கரண்டி

    சீஸ் - விருப்பத்திற்கு ஏற்ப

    புதினா சட்னி அல்லது தக்காளி சாஸ் - 1 மேசைக் கரண்டி

    செய்முறை

    குடைமிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை மெல்லிய தோசையாக ஊற்றி சுற்றி வெண்ணெய் ஊற்ற அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.

    பின்னர் தோசை மேல் புதினா சட்னி அல்லது தக்காளி சாஸை தேய்க்கவும்.

    அடுத்து அதன் மேல் ஸ்வீட் கார்ன், குடைமிளகாயை மேலே தூவி கொள்ளவும்.

    அடுத்து அதன் மேல் மிளகு தூள், சிறிது உப்பு தூவவும்.

    கடைசியாக தோசை மேல் சீஸை துருவி விடவும்.

    சீஸ் உருகியதும் எடுத்து பரிமாறவும்.

    இப்போது சீஸ் கார்ன் கேப்சிகம் தோசை ரெடி.

    • வெண்டைக்காயின் வழவழப்புத் தன்மையில் அதிக மருத்துவப் பலன்கள் மறைந்துள்ளது.
    • நீரிழிவு நோயாளிகளின் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை குறைக்கும்.

    தேவையான பொருட்கள்

    வெண்டைக்காய் - 250 கிராம்

    கடலைமாவு - நான்கு மேசைக்கரண்டி

    துருவிய தேங்காய் - கொஞ்சம்

    கொத்தமல்லி - கொஞ்சம்

    பச்சைமிளகாய் - இரண்டு

    பூண்டு - 2 பல்

    வெங்காயம் - ஒன்று

    இஞ்சி - ஒரு துண்டு

    தனியாப்பொடி - ஒரு மேசைக்கரண்டி

    எண்ணெய் - 6 மேசைக்கரண்டி

    சீரகப்பொடி - ஒரு தேக்கரண்டி

    மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி

    மிளகாய்ப் பொடி - ஒரு தேக்கரண்டி

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    கொத்தமல்லி, ப.மிளகாய், வெங்காயம், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெண்டைக்காய் காம்பை நறுக்கிய பிறகு காயைக் கீறி வைத்துக் கொள்ள வேண்டும். சற்று நீளமாக ஒரு பக்கமாக கீறவும்.

    பூண்டு, தேங்காய், கொத்தமல்லி, இஞ்சி, மிளகாய், இவற்றை அரைத்து கடலை மாவுடன் நன்றாகக் கலக்கவும்.

    உப்பு, மஞ்சள் பொடி, சீரகப்பொடி, மிளகாய்ப்பொடி, உப்பு முதலியவற்றையும் சேர்த்து கலந்து விடவும்.

    வெண்டைக்காய்குள் இக்கலவையை பிளந்துவிடாத படி அடைக்கவும். விதைகள் உள்ளே முற்றியிருந்தால் எடுத்துவிடலாம்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் செய்து வைத்த வெண்டைக்காயைப் போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து பொன்னிறமாக வதக்கி எடுக்கவும். கரகரப்பாக இருக்கும்படியும் எடுக்கலாம்.

    இப்போது சூப்பரான ஸ்டஃப்டு வெண்டைக்காய் ரெடி.

    • குழந்தைகளுக்கு பாஸ்தா மிகவும் பிடிக்கும்.
    • இன்று வெஜிடபிள் பாஸ்தா பிரியாணி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    பென்னே பாஸ்தா - 200 கிராம்

    குடைமிளகாய் - 1

    கேரட், பீன்ஸ் - விருப்பத்திற்கேற்ப

    வெங்காயம் - 2

    தக்காளி - 2

    கொத்தமல்லி - அரை கட்டு

    புதினா - அரை கட்டு

    தயிர் - 2 கப்

    உப்பு - தேவைக்கு

    மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்

    கரம் மசாலா தூள் - 2 டீஸ்பூன்

    தனியா தூள் - 2 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

    இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன்.

    தாளிக்க…

    எண்ணெய் - தேவையான அளவு

    வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

    சோம்பு - 2 டீஸ்பூன்

    பட்டை - 2

    கிராம்பு - 2

    பிரிஞ்சி இலை - 2.

    செய்முறை :

    குடைமிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கொத்தமல்லி, காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாஸ்தாவை கொதிக்கும் நீரில் போட்டு அரை பாகம் வெந்தவுடன் ஒரு வடிதட்டில் கொட்டி குளிர்ந்த நீரில் அலசி ஒரு தட்டில் சிறிது எண்ணெய் ஊற்றி நன்றாக கலந்து வைக்கவும். அப்போது தான் பாஸ்தா ஒன்றுடன் ஒன்று ஒட்டாது.

    கடாயில் எண்ணெய், வெண்ணெய் ஊற்றி காய வைத்து முதலில் தாளிக்கக் கொடுத்த பொருட்களை போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கிய பின்னர் காய்கறிகள், உப்பு, கொத்தமல்லி, புதினா, குடைமிளகாயை போட்டு வதக்கவும்.

    அடுத்து மிளகாய்த் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் போட்டு வதக்கவும்.

    காய்கள் வதங்கிய பின் தயாராக வைத்துள்ள தயிரைப் போட்டு மூடி வைக்கவும்.

    மசாலாப் பொருட்கள், காய்கறிகள் எல்லாம் சேர்ந்து வெந்து ஓரத்தில் எண்ணெய் பிரிந்து வரும் போது பாஸ்தாவைச் சேர்த்துக் கலந்த பின்னர் இறக்கி சுடச்சுட பரிமாறவும்.

    இப்போது சூப்பரான வெஜிடபிள் பாஸ்தா பிரியாணி ரெடி.

    சிப்ஸ், தயிர் பச்சடியுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.

    • மழைக்காலத்தில் சுடச்சுட ஸ்நாக்ஸ் சாப்பிட பிடிக்கும்.
    • இன்று சுடச்சுட மசாலா ஸ்டஃப்டு மிளகாய் பஜ்ஜி செய்யலாம் வாங்க....

    தேவையான பொருட்கள் :

    கடலை மாவு - 1 கப்

    பஜ்ஜி மிளகாய் - 6

    வெங்காயம் - 2

    வரமிளகாய் - 2

    புளி - சிறிது

    பூண்டு - 4 பல்

    அரிசி மாவு - 1/2 கப்

    மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்

    சோடா உப்பு - 1 சிட்டிகை

    பெருங்காயத் தூள் - சிறிது

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை :

    * வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * மிளகாயை இரண்டாக கீறி விதையை எடுத்து விடவும்.

    * ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, மிளகாய் தூள், சோடா உப்பு, பெருங்காயத் தூள், உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி, பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    * மிக்ஸியில் நறுக்கிய வெங்காயம், வரமிளகாய், புளி, பூண்டு மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

    * அரைத்த கலவையை கீறிய மிளகாய்களின் நடுவில் வைக்கவும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெயை ஊற்றி, எண்ணெயை சூடானதும் இதில் மசாலா பிரட்டிய மிளகாயை பஜ்ஜி மாவில் தோய்த்து எண்ணெயில் போட்டு நன்கு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    * இதேப்போல் அனைத்து மிளகாயையும் செய்ய வேண்டும்.

    * இப்போது சூப்பரான மசாலா ஸ்டஃப்டு மிளகாய் பஜ்ஜி ரெடி!!!

    • குழந்தைகளுக்கு இந்த சப்பாத்தி மிகவும் பிடிக்கும்.
    • இந்த ரெசிபி செய்ய 15 நிமிடங்களே போதுமானது.

    தேவையான பொருட்கள்:

    பிரெட் துண்டுகள் - 10,

    கோதுமை மாவு - 150 கிராம்,

    வெண்ணெய் - 2 டீஸ்பூன்,

    பால் - 100 மில்லி,

    சர்க்கரை - ஒரு டீஸ்பூன்,

    நெய் - 4 டீஸ்பூன்.

    செய்முறை:

    பிரெட் துண்டுகளை மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.

    கோது மாவுடன் வெண்ணெய், பால், சர்க்கரை, பொடித்த பிரெட் சேர்த்துப் பிசைந்து, பதினைந்து நிமிடம் மூடி வைக்கவும்.

    இதை சப்பாத்திகளாக இட்டு, தோசைக் கல்லில் போட்டு இருபுறமும் லேசாக நெய் தடவி சுட்டு எடுக்கவும்.

    இந்த சப்பாத்தியை அப்படியே சாப்பிடலாம்.

    பிரெட், சர்க்கரை பால் சேர்ப்பதால் சுவை அருமையாக இருக்கும்.

    • உருளைக்கிழங்கில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
    • இன்று உருளைக்கிழங்கு சமோசா செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    மைதா மாவு - 200 கிராம்

    உருளைக்கிழங்கு - 2

    வெங்காயம் - 2

    சீரகம் - ஒரு தேக்கரண்டி

    மிளகாய்த் தூள் - தேவைக்கேற்ப

    எண்ணெய் - தேவையான அளவு

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    மைதா மாவில் உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவிற்கு பிசைவது போல் பிசைந்து 30 நிமிடங்கள் தனியாக மூடி வைக்கவும்.

    உருளைக் கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம் போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    அடுத்து அதில் உருளைக்கிழங்கைச் சேர்த்து மிளகாய்த் தூள் மற்றும் உப்பு சேர்த்து மூடி போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து வேக விடவும். உருளைக்கிழங்கு வெந்ததும் இறக்கி தனியாக வைக்கவும்.

    பிசைந்து வைத்த மாவை சப்பாத்திக்கு திரட்டுவது போல் திரட்டி அரை வட்டங்களாக வெட்டிக் கொள்ளவும்.

    வெட்டிய துண்டில் ஒன்றை எடுத்து, அதன் ஒரு பாதி விளிம்பில் தண்ணீர் தொட்டுக் கொண்டு, மறுபாதி விளிம்பின் மேல் வைத்து ஒட்டி கூம்பு போல் செய்து கொள்ளவும்.

    அதனுள்ளே தயாரித்த உருளைக்கிழங்கு மசாலா சிறிது வைத்து ஓரங்களில் தண்ணீர் தடவி ஒட்டி விடவும்.

    இதே போல் மீதமுள்ள மாவிலும் மசாலாவை வைத்து சமோசா செய்து வைக்கவும்.

    ஒரு அடிகனமாக கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்துள்ள சமோசாவை போட்டு பொரித்தெடுக்கவும்.

    இப்போது சுவையான உருளைக்கிழங்கு சமோசா தயார்.

    • குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு சிப்ஸ் மிகவும் பிடிக்கும்.
    • இன்று வீட்டிலேயே உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    உருளைக்கிழங்கு - 1/2 கிலோ

    உப்பு - 1/2 டீஸ்பூன்

    தனி மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்

    எண்ணெய் - 150 கிராம்

    செய்முறை :

    உருளைக்கிழங்கை நன்றாக கழுவி அதனை மெல்லியதாக சீவி வைத்துக் கொள்ளவும்.

    ஒரு கப்பில் தேவைக்கேற்ப உப்பு, மிளகாய்த்தூள் ஆகியவற்றைக் கலந்து தனியாக வைத்து கொள்ளவும்.

    வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றி சூடானதும் அதில் சீவிய உருளைக்கிழங்கைப் போட்டு பொரித்து எடுக்கவும்.

    பொரித்த உருளைக்கிழங்கு சிப்ஸை ஒரு பாத்திரத்தில் போட்டு அதன் மேல் மிளகாய் தூள் கலவையைத் தூவி எல்லா சிப்ஸிலும் நன்றாகப் படும்படி குலுக்கி வைக்கவும்.

    இதோ சுவையான மொறு மொறு சிப்ஸ் ரெடி!!!

    காற்று புகாத டப்பாவில் போட்டு 1 வாரம் வரை பயன்படுத்தலாம்.

    குறிப்பு :

    உருளைக்கிழங்கை சீவி நீண்ட நேரம் வைத்தால் நிறம் மாறி போகும், ஆகவே சீவியதும் அதனை ஒரு துணி மேல் பரப்பி உடனே பொரித்து விட வேண்டும். துணி மேல் போடுவதால் உருளையில் ஈரம் இல்லாமல், நல்ல மொறு மொறுப்பாக இருக்கும்.

    மிளகாய் தூள் பிடிக்காதவர்கள் மிளகு தூள், உப்பு சேர்த்தும் செய்யலாம்.

    • மாலையில் காபி, டீயுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
    • இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    உருளைக்கிழங்கு - 4,

    மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்,

    மிளகாய் தூள் - தேவையான அளவு

    அரிசி மாவு - 3 டீஸ்பூன்

    பொரிக்க எண்ணெய், உப்பு - தேவைக்கு.

    செய்முறை

    நீளமான உருளைக்கிழங்கை கழுவி தோல் சீவி விரல்களைப் போல மெல்லிய தடிமனான துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். அல்லது கட்டர் கொண்டு நறுக்கவும்.

    நறுக்கிய உருளைக்கிழங்கில் உப்பு, மிளகாய் தூள், அரிசி மாவு, மிளகு தூள் கலந்து நன்றாக கலந்து வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கலந்து வைத்த உருளைக்கிழங்கை சிறிது சிறிதாக போட்டு பொன்னிறமாக பொரித்தெடுத்து தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

    சூப்பரான உருளைக்கிழங்கு ஃபிங்கர் சிப்ஸ் ரெடி.

    • முட்டை கிரேவி மஞ்சூரியன் செய்வதற்கும் மிகவும் எளிமையானது.
    • இது சப்பாத்தி, நாண், பிரைடு ரைஸ்க்கு அசத்தலான சைடிஷ் .

    தேவையான பொருட்கள்

    முட்டை - 3

    மைதா மாவு - 3 டீஸ்பூன்

    சோள மாவு - 2 டீஸ்பூன்

    மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்

    கரம் மசாலா தூள் - ½ டீஸ்பூன்

    மிளகு சீரகப்பொடி - 1 டீஸ்பூன்

    ஆனியன், குடைமிளகாய் - தலா 1

    சிவப்பு மிளகாய் சாஸ் - 1 டீஸ்பூன்

    பச்சைமிளகாய் சாஸ் - 1 டீஸ்பூன்

    சோயா சாஸ் - 1 டீஸ்பூன்

    தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன்

    இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

    ஸ்பிரிங் ஆனியன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    வெங்காயம், குடைமிளகாயை பெரிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    சோள மாவை சிறிதளவு தண்ணீரில் கரைத்து வைத்து கொள்ளவும்.

    ஸ்பிரிங் ஆனியனை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு கிண்ணத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி அதில் மிளகு சீரகப்பொடி, மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக அடித்து கொள்ளவும்..

    ஒருகிண்ணத்தில் எண்ணெய் தடவி முட்டையை ஊற்றிக் கொள்ளவும். இதனை இட்லி குக்கரில் தண்ணீர் ஊற்றி அதன்மேல் கிண்ணத்தை வைத்து 10 முதல் 12 நிமிடம் வரை வேக வைக்கவும்.

    முட்டை வெந்ததும் சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, சோள மாவு, மிளகாய் தூள், உப்பு போட்டு தண்ணீர் சேர்த்து கெட்டியான இட்லி மாவு பதத்தில் கலந்துகொள்ளவும்.

    ஒரு கடாயில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் துண்டுகளாக நறுக்கிய முட்டைகளை மாவில் முக்கி எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    பின்பு மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி பூண்டு விழுதை போட்டு வதக்கவும்.

    அடுத்து அதில் நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து அரை பாகம் வேகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் சிறிதளவு மிளகாய் தூள், கரம் மசாலா தூள், சிவப்பு மிளகாய் சாஸ், பச்சைமிளகாய் சாஸ், சோயா சாஸ், தக்காளி சாஸ், கரைத்து வைத்த சோள மாவு தண்ணீரை ஊற்றவேண்டும்.

    அத்துடன் உப்பு சேர்த்து கலவையை நன்றாக கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்ததும் பொரித்து வைத்துள்ள முட்டையை சேர்த்து கிளறவும்.

    கிரேவி நன்கு திக்கான பதம் வதக்கியதும், மேலே ஸ்பிரிங் ஆனியன் தூவி இறக்கினால் சூப்பரான முட்டை மஞ்சூரியன் கிரேவி ரெடி.

    ×