என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூஜா ஹெக்டே"

    • இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் பீஸ்ட்.
    • இப்படத்தில் இடம்பெற்ற அரபிக் குத்து பாடல் அனைவரையும் கவர்ந்து உலக அளவில் ஹிட் அடித்தது.

    நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் பீஸ்ட். இப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இப்படம் வெளியாவதற்கு முன்பே பீஸ்ட் படத்தின் பாடல்கள் அனைவரையும் கவர்ந்து ஹிட் அடித்தது. குறிப்பாக அரபிக் குத்து பாடல் அனைவரையும் தாளம் போட வைத்து உலக அளவில் அனைவரின் கவனத்தை ஈர்த்து இணையத்தில் வைரலானது.


    அரபிக்குத்து - பீஸ்ட்

    அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் வரிகளில் அனிருத் மற்றும் ஜோனிட்டா காந்தி இருவரும் இணைந்து பாடியிருந்த அரபிக் குத்து பாடலின் லிரிக் வீடியோ யூடியூபில் 500 மில்லியன் பார்வையாளர்களைக்கு மேல் கடந்துள்ளது. இதையடுத்து இப்பாடல் வெளியாகி ஓராண்டு ஆனதை நினைவு கூர்ந்து படக்குழு வீடியோ ஒன்றி வெளியிட்டது.


    அரபிக்குத்து - பீஸ்ட்

    இந்நிலையில், நடிகை பூஜா ஹெக்டே அரப்பிக்குத்து பாடலின் புதிய வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்து ட்ரெண்டாகி வருகிறது.


    • பூஜா ஹெக்டே, சல்மான்கானுடன் 'கிசி கா பாய் கிசி கா ஜான்' என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.
    • இந்த படத்தில் நடிக்கும் போதே சல்மான் கானுடன் பூஜா டேட்டிங் செய்வதாக பலவாறு வதந்திகள் பரவி வந்தன.

    நடிகை பூஜா ஹெக்டே, சல்மான்கானுடன் 'கிசி கா பாய் கிசி கா ஜான்' என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். விரைவில் வெளியாக இருக்கும் இந்த படத்தில் நடிக்கும் போதே சல்மான் கானுடன் பூஜா டேட்டிங் செய்வதாக பலவாறு வதந்திகள் பரவி வந்தன. இதற்கு பதில் ஏதும் சொல்லாமல் இருந்த பூஜா நேற்று இது குறித்து பேசியிருக்கிறார். அவர் கூறியதாவது, நான் ரன்வீர் சிங்குடன் நடித்த சர்க்கஸ் திரைப்படத்தை பெரிய அளவில் எதிர்பார்த்தேன். ஆனால் அது தோல்வியில் முடிந்ததை நினைத்து நான் மிகவும் வருத்தத்தில் இருந்தேன்.


    சல்மான் கான் -பூஜா ஹெக்டே

    தற்போது சல்மான் கானுடன் நடித்த படம் இப்போதே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் கூடவே எங்கள் இருவரை பற்றியும் கிசுகிசுக்களும் சேர்ந்து பரவி வருகிறது. ஆனால் நான் இப்போதும் தனியாகத்தான் இருக்கிறேன். தனியாக இருக்கத்தான் விரும்புகிறேன். சல்மான் கானுடன் என்னை டேட்டிங் செய்வதாக வந்த செய்திகளை நானும் படித்தேன். ஆனால் அது உண்மையில்லை என்று கூறியிருக்கிறார். 

    • சூர்யாவின் 44வது படமான 'ரெட்ரோ' திரைப்படத்தை பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார்.
    • இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

    சூர்யாவின் 44வது படமான 'ரெட்ரோ' திரைப்படத்தை பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

    இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடிகை ஸ்ரேயா சிறப்பு நடனம் ஆடியுள்ளார். ரெட்ரோ படம் வரும் மே 1 வெளியாகவுள்ளது.

    படத்தின் ஆடியோ உரிமையை டி சீரிஸ் பெற்றுள்ளது. படத்தின் முதல் பாடலான கண்ணாடி பூவே பாடல் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் பிடி.எஸ் காட்சிகளை காமிக் வடிவத்தில் படக்குழு வாரந்தோறும் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த வார, பூஜா ஹெக்டே அவரது வசங்களை தமிழில் தானே டப்பிங் செய்துள்ளதாகவும். படத்தின் நடிக்கும் போதுக் கூட முழுப்பக்க வசனமாக இருந்தாலும் பூஜா ஹெக்டே மிகவும் கடின உழைப்பை போட்டு தமிழ் பேசியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. பூஜா ஹெக்டே தான் நடித்த படங்களில் தமிழில் டப் செய்வது இதுவே முதல்முறையாகும்.

    இதனால் படத்தின் மீது ரசிகர்களுக்கு கூடுதல் எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது. படத்தின் இரண்டாம் சிங்கிள் விரைவில் வெளியாகுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர் மகேஷ்பாபு தற்போது ‘குண்டுர் காரம்’ என்ற திரைப்படத்தில் நடிக்கிறார்.
    • இப்படத்தை இயக்குனர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்குகிறார்.

    தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ்பாபு தற்போது 'குண்டுர் காரம்' என்ற திரைப்படத்தில் நடிக்கிறார். இப்படத்தை 'ஆலா வைகுந்தபுரமுலோ' படத்தை இயக்கிய த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்குகிறார். ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, ஸ்ரீலீலா, ஜெகபதி பாபு, ஜெயராம், சுனில், ரம்யா கிருஷ்ணன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 'குண்டுர் காரம்' திரைப்படம் அடுத்த ஆண்டு சங்கராந்திக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


    இந்நிலையில், இந்த படத்திலிருந்து நடிகை பூஜா ஹெக்டே விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, பூஜா ஹெக்டேவிற்கு போதிய கால்சீட் இல்லாததால் அவர் இந்த படத்தில் இருந்து விலகியுள்ளதாகவும் அவருக்கு பதில் 'வாத்தி' பட நடிகை சம்யுக்தா இப்படத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.


    பூஜா ஹெக்டே- சம்யுக்தா

    சமீபத்தில் 'குண்டுர் காரம்' திரைப்படத்தில் இருந்து தமன் விலகியுள்ளதாகவும் அவருக்கு பதில் இப்படத்திற்கு அனிருத் இசையமைப்பார் என்றும் தகவல் பரவியது குறிப்பிடத்தக்கது.

    • நடிகர் விஜய் நேற்று தனது 49-வது பிறந்த நாளை கொண்டாடினார்.
    • இவருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

    நாளைய தீர்ப்பு, பூவே உனக்காக, லவ் டுடே, ஒன்ஸ் மோர், பிரியமுடன், கில்லி, பிகில், மாஸ்டர், வாரிசு உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த விஜய், நேற்று தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு திரைபிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதுமட்டுமல்லாமல், விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் ரத்ததான முகாம்கள், இலவச உணவு என பல முன்னெடுப்புகளை செய்தனர். மேலும் போஸ்டர்கள் ஒட்டி தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


    இந்நிலையில், நடிகை பூஜா ஹெக்டே 'பீஸ்ட்' படப்பிடிப்பு தளத்தில் விஜய் குழந்தைகளுடன் 'புட்ட பொம்மா' பாடலுக்கு கியூட்டாக நடனமாடும் வீடியோவை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.



    • நடிகை பூஜா ஹெக்டே முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்துள்ளார்.
    • இவர் நடித்த பல படங்கள் தோல்வியையும் சந்தித்தது.

    தமிழில் 'முகமூடி' படத்தில் அறிமுகமான பூஜா ஹெக்டே 'பீஸ்ட்' படத்தில் விஜய் ஜோடியாக நடித்து பிரபலமானார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான 'ராதே ஷியாம்' தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகி தோல்வி கண்டது. தொடர்ந்து சிரஞ்சீவியுடன் நடித்த 'ஆச்சார்யா' படமும் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.


    தொடர்ந்து பூஜா ஹெக்டே நடிக்கும் படங்கள் சரிவை சந்தித்து வருவதால் அவரை முன்னணி கதாநாயகர்கள் ஓரம் கட்டுகிறார்கள் என்றும் இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலைக்கு முயன்றை அவரது குடும்பத்தினர் காப்பாற்றியதாகவும் மும்பையை சேர்ந்த ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார்.

    இதனால் கடுப்பான பூஜா ஹெக்டே இணையத்தில் தன்னை பற்றி அவதூறாக பதிவிட்டதாக அந்த நபருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • நடிகை பூஜா ஹெக்டே பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.
    • இவர் கடைசியாக 'கிசி கா பாய் கிசி கி ஜான்' திரைப்படத்தில் நடித்தார்.

    தமிழில் வெளியான 'முகமூடி' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இவர் தனது இரண்டாவது படமான 'பீஸ்ட்' படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார். பாலிவுட்டில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் பூஜா ஹெக்டே கடைசியாக சல்மான் நடிப்பில் வெளியான 'கிசி கா பாய் கிசி கி ஜான்' திரைப்படத்தில் நடித்தார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.



    பூஜா ஹெக்டே சமீபத்தில் கர்நாடகா கிரிக்கெட் வீரரை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது மீண்டும் இவரின் காதல் குறித்து இணையத்தில் வதந்தி பரவி வருகிறது. அதாவது, மும்பையைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரருக்கும், பூஜா ஹெக்டேவுக்கும் இடையில் காதல் மலர்ந்துள்ளதாகவும் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.

    ஆனால், இதுவரை அந்த கிரிக்கெட் வீரர் யார் என்ற தகவல் வெளியாகவில்லை. மேலும், இந்த தகவலுக்கு பூஜா ஹெக்டே மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அடுத்த மாதம் 2-ம் தேதி சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பு அந்தமானில் துவங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
    • இந்த படத்தினை சூர்யாவும், கார்த்திக் சுப்புராஜும் இணைந்து தயாரிக்கின்றனர்.

    நடிகர் சூர்யா கங்குவா திரைப்படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 44 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தினை சூர்யாவும், கார்த்திக் சுப்புராஜும் இணைந்து தயாரிக்கின்றனர்.

    இந்த படத்தின் ரிலீஸுக்கு பின்னர் வரும் லாபத்தில் சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் இருவருக்கும் பங்கு இருப்பதனால் சம்பளமே வாங்காமல் சூர்யா நடிக்கப் போகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. சூர்யா மட்டும் இல்லாமல் கார்த்திக் சுப்புராஜும் சம்பளம் வாங்கவில்லை என்று சொல்லப்படுகிறது. சமீபத்தில், இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், சூர்யா 44 படத்தில் நடிகை பூஜா ஹெக்டே இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் முன்னதாக விஜய்க்கு ஜோடியாக 'பீஸ்ட்' படத்தில் நடித்திருந்தார். அல்லு அர்ஜூன் நடித்த அல வைகுண்டபுரமுலோ படத்தின் மூலம் பிரபலமானார் பூஜா ஹெக்டே. அடுத்த மாதம் 2-ம் தேதி சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பு அந்தமானில் துவங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. முதல்கட்ட படப்பிடிப்பு அந்தமானில் 40 நாட்கள் நடைப்பெறவுள்ளது. அதற்கு அடுத்து ஊட்டியில் நடைப்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இத்திரைப்படம் சுற்று சூழல் பாதிப்பை பற்றி பேசக்கூடிய திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

     

    மேலும், இப்படத்தில் நடிகர் ஜோஜு ஜார்ஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியது. ஆனால் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இவர் முன்னதாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளிவந்த 'ஜகமே தந்திரம்' படத்தில் நடித்திருந்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர் சூர்யாவின் 44 ஆவது படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார்.
    • இந்த படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    நடிகர் சூர்யாவின் 44 ஆவது படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார். இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

    இந்த படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சூர்யா 44 படத்திற்கு ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள ஷஃபீக் முகமது அலி படத்தொகுப்பு செய்கிறார்.

    சண்டை பயிற்சி பணிகளை கெச்சா கம்பக்தீ மேற்கொள்கிறார், கலை இயக்க பணிகளை ஜாக்கியும், ஆடை வடிவமைப்பு பணிகளை பிரவீன் ராஜா மேற்கொள்கின்றனர்.

    சூர்யா 44 படத்தில் மலையாள நடிகரான ஜோஜு ஜார்ஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இதைதொடர்ந்து உறியடி விஜயகுமார் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார் எனவும், மலையாள நடிகர் ஜெயராம் இப்படத்தில் நடிக்கவுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
    • முதற்கட்ட படப்பிடிப்பு அந்தமானில் நடைபெற உள்ளது.

    நடிகர் சூர்யாவின் 44 ஆவது படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார். இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் காரத்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

    இந்த படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் துவங்குவதாகவும் அறிவிக்கப்பட்டது. இத்துடன் படக்குழு வெளியிட்ட வீடியோவில் முதற்கட்ட படப்பிடிப்பு அந்தமானில் நடைபெற உள்ளது.

     


    இந்த நிலையில், சூர்யா 44 படத்தில் பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் புதிய போஸ்டரை பகிர்ந்துள்ளார். இப்படம் குறித்த இதர அப்டேட்கள் தொடர்ந்து வெளியிடப்படும் என்று தெரிகிறது.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சூர்யா 44 படத்தில் பூஜா ஹெக்டே நடிக்கிறார்.
    • இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

    நடிகர் சூர்யாவின் 44 ஆவது படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார். இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் காரத்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

    இந்த படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் துவங்குவதாகவும் அறிவிக்கப்பட்டது. இத்துடன் படக்குழு வெளியிட்ட வீடியோவில் முதற்கட்ட படப்பிடிப்பு அந்தமானில் நடைபெற உள்ளது.

     


    இந்த நிலையில், சூர்யா 44 படத்தில் பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து சூர்யா 44 படத்தில் ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் ஆகியோரும் நடிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அடுத்தடுத்து போஸ்டர்களை வெளியிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அந்தமானில் வைத்து சூர்யா - பூஜா ஹெக்டேவின் இரண்டு டூயட் பாடல்கள் படமாக்கபட உள்ளன
    • இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

    சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தை நடித்து முடித்துள்ள சூர்யா தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது 44 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை சூர்யாவின் 2D நிறுவனமும் , கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. படத்தின் கதாநாயகியாக பீஸ்ட் நாயகி பூஜா ஹெக்டே இணைத்துள்ளார்.

     

    இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளராக ஷ்ரேயாஷ் கிருஷ்ணா, சண்டைப் பயிற்சியாளராக கேச்சா கம்பக், கலை இயக்குநராக ஜாக்கி, எடிட்டராக ஷபீக் முகமது அலி, ஆகியோர் இணைத்துள்ளனர். படத்தின் ரிலீஸுக்கு பின்னர் வரும் லாபத்தில் சூர்யா, கார்த்திக் சுப்பராஜ் இருவருக்கும் பங்கு இருப்பதனால் சம்பளமே வாங்காமல் சூர்யா நடிக்கப் போகிறார் என்று தகவல் வெளியானது.

     

    தற்போது சூர்யா 44 படப்பிடிப்பு அந்தமானில் துவங்கி நடைபெற்று வருகிறது.  அங்குவைத்து சூர்யா - பூஜா ஹெக்டேவின் இரண்டு டூயட் பாடல்கள் படமாக்கபட உள்ளன அடுத்தாக ஊட்டியில் படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் படத்தின் புதிய அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதாவது வரும் ஜூலை 23 சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டைட்டில் போஸ்டரும் பர்ஸ்ட் லுக்கும் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×