என் மலர்
நீங்கள் தேடியது "aravindhsami"
- அஜித் நடித்துள்ள 'துணிவு' திரைப்படம் வருகிற ஜனவரி 11-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
- இந்த படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே62-வது படத்தில் அஜித் இணைய உள்ளார்.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'துணிவு'. இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் வருகிற ஜனவரி 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

விக்னேஷ் சிவன் - அஜித்
இந்த படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே62-வது படத்தில் அஜித் இணைய உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மே மாதம் தொடங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

சந்தானம் - அரவிந்த் சாமி
இந்நிலையில், ஏகே 62 படத்தில் அஜித்துக்கு வில்லனாக அரவிந்த சாமி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், நடிகர் சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கயிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழில் முன்னணி நடிகராக திகழும் அரவிந்த் சாமி, தற்போது நடித்துள்ள படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
தமிழில் முன்னணி நடிகராக திகழும் அரவிந்த் சாமி, தளபதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். ரோஜா, என் சுவாசக்காற்றே, பம்பாய் போன்ற படங்கள் மூலம் ரசிகர் மத்தியில் நீங்கா இடம் பிடித்த இவர், சினிமாவில் இருந்து சிலகாலமாக விலகி இருந்தார். நீண்ட இடைவேளைக்கு பிறகு மணிரத்தினத்தின் ‘கடல்' படத்தின் மூலம் மீண்டும் அரவிந்த் சாமி நடிக்கத் தொடங்கினார். இவர் நடித்துள்ள 'ரெண்டகம்', 'சதுரங்க வேட்டை 2' போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது.

கள்ளபார்ட்
தற்போது, ராஜபாண்டி இயக்கத்தில் அரவிந்த் சாமி கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ‘கள்ளபார்ட்'. இப்படத்தில் ரெஜினா, ஆனந்த்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மூவிங் ஃபிரேம் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். இந்தப் படத்துக்கு, அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபது தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்நிலையில், ‘கள்ளபார்ட்' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் வருகிற ஜூன் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
2019-ஆம் ஆண்டு வெளியாக இருந்த இப்படம் சில காரணங்களால் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.