என் மலர்
நீங்கள் தேடியது "inferiority complex"
- உடை தேர்வு மற்றும் அலங்கார விஷயங்களில் கவனமாக இருங்கள்.
- ஆடம்பரமான மேக்கப்பை தவிர்த்துவிடுங்கள்.
தமிழ்நாட்டின் பல்வேறு கிராமங்களில் வளர்ந்த பெண்களும், படித்து முன்னேறி பெருநகரங்களுக்கு வேலைக்கு செல்கிறார்கள். அப்படி உங்களுக்கும், பெருநகர ஐ.டி. நிறுவனங்களில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தால், உடை தேர்வு மற்றும் அலங்கார விஷயங்களில் கவனமாக இருங்கள்.
அதுநாள் வரை, மேக்கப் விஷயங்களில் ஆர்வம் இல்லாமல் உங்களுக்கு என ஒரு பிரத்யேக 'ஸ்டைல்'-ஐ கடைப்பிடித்திருக்கலாம். ஆனால் அது பெருநகர வாழ்க்கைக்கு பொருந்தாது. முடிந்தவரை, நகர சூழலுக்கு ஏற்ப சின்னச்சின்ன மேக்கப் மற்றும் உடை அலங்கார நுணுக்கங்களை கற்றுக்கொள்ளுங்கள். பணிச்சூழல், உடன் பணிபுரிபவர்களை பற்றி அறிந்த பிறகு, அலுவலகத்திற்கு அணிந்து செல்லக்கூடிய ஆடை, அலங்கார பொருட்களை வாங்கலாம்.
எல்லோருடைய கவனத்தையும் சட்டென ஈர்க்கும் நிறங்களிலான உடைகளையும், உதட்டு சாயங்களையும், அலங்கார பொருட்களையும் தவிர்ப்பது நல்லது. ஆடம்பரமான மேக்கப்பை தவிர்த்துவிடுங்கள். அதற்காக மேக்கப் இல்லாமலும், பணிக்கு செல்லாதீர்கள். அதேபோல, அணியும் உடைக்கு ஏற்ற காலணி அல்லது ஷூ தேர்வும் முக்கியம்.
சுடிதார், குர்த்தி, ஜீன்ஸ், லெக்கின்ஸ், பலாசோ, பிளேசர்ஸ்... இவை எல்லாம் ஐ.டி. கலாசாரத்தில் பொதுவானவை. அதனால் இத்தகைய உடைகளை தேர்ந்தெடுத்து உடுத்தலாம். பணியிடம் பழக்கமானதற்கு பிறகு, உங்களுக்கான 'ஸ்டைலை' மேம்படுத்திக் கொள்ளுங்கள்.
உங்களுக்கு மேக்கப் விஷயங்களில் ஈடுபாடு இல்லை என்றாலும் பரவாயில்லை, ஆனால் முகப்பொலிவை தக்க வைக்கும் சிறுசிறு விஷயங்களிலாவது ஆர்வம் செலுத்துங்கள். அதாவது, முகத்தை சுத்தமாக பராமரிப்பது; நக பூச்சு பூசவில்லை என்றாலும் நகங்களை சுத்தமாக பராமரிப்பது, முகம் கருக்காமல் இருக்க 'சன்ஸ்கிரீன்' போடுவது, யாரும் குறை சொல்லாதபடி தலை முடிகளை பராமரிப்பது போன்ற சின்னச் சின்ன விஷயங்களில் கவனமாக இருங்கள்.
- தகுதியான நபர்கள் மூலம் இலக்குகளை அடைவதே சிறந்த தலைமைப்பண்பாகும்.
- தன்னம்பிக்கை மற்றும் தலைமை பண்புடன் உழைப்பவர்கள் வெற்றியை பரிசாக பெறுகிறார்கள்.
சுயதொழில் அல்லது வியாபாரத்தை தொடங்கும் இளம் பெண் தொழிலதிபர்கள் அதை வெற்றிகரமாக நடத்தி செல்வதில் பல்வேறு நடைமுறை சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கிறது. ஒரு கட்டத்தில் அவர்கள் மன அழுத்தத்திற்கும் ஆளாகி விடுவதுண்டு. அதுபோன்ற சந்தர்ப்பத்தில் சூழ்நிலையை புரிந்து கொண்டு தமக்குள் இருக்கும் தலைமை பண்பை வெளிப்படுத்தி எவ்வாறு வெற்றி அடைவது என்பது இக்கட்டுரை விளக்குகிறது.
தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் அனைத்து துறை சார்ந்த செய்திகளும் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன. ஆனால் வெற்றி பெறுவதற்கான அடிப்படை தகவல்கள் என்பது அனுபவம் வாய்ந்த மனிதர்களிடம் தான் உள்ளது. அப்படிப்பட்டவர்களை தொழில் அல்லது வர்த்தகத்தில் ஒருங்கிணைந்து வழிநடத்தி செல்வது தான் தொழில் முனைவோர்களுக்கான அடிப்படை தகுதியாக உள்ளது. அதாவது குறைந்த ஆற்றலை பயன்படுத்தி குறுகிய காலகட்டத்தில் தகுதியான நபர்கள் மூலம் இலக்குகளை அடைவதே சிறந்த தலைமைப்பண்பாகும்.
தனது பலம் மற்றும் பலவீனம் ஆகியவை பற்றி தலைமை பொறுப்பில் உள்ளோர் நன்றாக அறிந்திருக்க வேண்டும். அப்போது தான் எந்த சூழ்நிலையிலும் தொழிலை நடத்தி செல்வதற்கான மனத்தெளிவு கிடைக்கும். தம்மைப்பற்றி பெருமையாகவோ அல்லது தாழ்வாகவோ நினைப்பவர்கள் எளிதாக சூழ்நிலை கைதிகளாக மாறுகிறார்கள். எனவே தம்முடைய பலம் மற்றும் பலவீனம் குறித்த விழிப்புணர்வு கொண்டவர்கள் ஒரு செயலை செய்ய முடியுமா அல்லது முடியாதா என்பதில்லை தெளிவாக சொல்வதன் மூலம் மற்றவர்களது நம்பிக்கையை எளிதாக பெறுகிறார்கள்.
தொழில் முனைவோர்கள் எப்போதுமே தன்னம்பிக்கையுடன் முடிவுகளை எடுத்து அதை செயல்படுத்தும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பது அவசியம். அதற்கு தொழில் அல்லது வர்த்தகத்தில் தங்களுக்குரிய இடத்தை கச்சிதமாக அறிந்திருப்பதுடன் சக போட்டியாளர்கள் பற்றியும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்போது தான் முடிவெடுக்கும் திறன் மேம்படும்.
திறமையான தொழில் முனைவோர்கள் தங்கள் செயல் திட்டங்களை சரியாக திட்டமிடுகிறார்கள். அவற்றில் மிக முக்கியமானவை, உடனடியாக செய்ய வேண்டியவை, தவிர்க்க வேண்டியவை ஆகிய தகவல்களை தெளிவாக அட்டவணைப்படுத்தி வைத்திருப்பார்கள். குறிப்பாக தினமும் டைரியில் எழுதி வைத்துக்கொள்ளப்படும் குறிப்புகள் கூட வெற்றிக்கு அடிப்படையாக அமையக்கூடும். மேலும் எண்ணங்கள் குறிப்புகளாக எழுதப்படும் போது அவை ஒருவரது நிறை குறைகளை வெளிக்காட்டும் கண்ணாடியாக அமைகிறது. தினமும் டைரியில் அன்றைய தினத்தில் நடந்தவை பற்றி குறிப்பாக எழுதுவதன் மூலம் ஒருவரது நினைவாற்றல் மேம்படுகிறது. வெற்றிக்கு அது அவசியம்.
தலைமை பண்பை வளர்த்துக்கொள்ள வேண்டுமானால் சொந்த அனுபவங்கள் மூலமாகவும், சரியான நபர்களிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ளும் திறனை பெற வேண்டும். தன்னம்பிக்கை மற்றும் தலைமை பண்புடன் உழைக்கும் பெண்கள் வெற்றியை பரிசாக பெறுகிறார்கள்.
- தொழிலில் வெற்றி பெற உழைப்பு மட்டுமே போதாது.
- திறமையான கணிப்பும், யூகங்களும் மிக மிக அவசியம்.
எந்த ஒரு தொழிலில் ஈடுபட விரும்பினாலும் கண்டிப்பாக யோசனை செய்ய வேண்டியது தான். யோசனையே இன்றி கண்ணை மூடிக்கொண்டு காரியத்தில் இறங்கினோம் என்றால் அதில் எந்தவிதமான நியாயமும் இல்லை. ஆனால் நமது எண்ணம் வெறும் யோசனையாகவே இருந்து விட்டால் எந்தவித பயனும் இல்லை.
தொழிலில் ஈடுபடுவதற்கு முன்பு நன்றாக யோசனை செய்த பின்னர் அதை ஆக்கபூர்வமாக செயல்படும் முயற்சியில் ஈடுபட வேண்டும். அபரிமிதமான ஆர்வத்தை முன்வைத்து களத்தில் இறங்க வேண்டும்.
சாதாரணமாக எந்த ஒரு செயலோ அல்லது தொழிலோ புரிய வேண்டுமானால், அதில் நிறையவே சிரமங்கள் உண்டு. கஷ்டப்படாமல் எதிலும் வெற்றி பெறவும் இயலாது. ஏன், செயல்படவும் இயலாது.
எனவே மிக அதிக அளவு யோசனை மற்றும் ஆராய்ச்சியில் இறங்கினால் அதில் ஏராளமான பிரச்சினைகள், கஷ்டங்கள், பாதகங்கள் தென்படும். முடிவில் அந்த முயற்சியை கைவிட வேண்டிய நிலை ஏற்படும். ஆகையால் பெண்கள் ஓரளவு சிந்தித்து விட்டு தொழில்முனைவில் ஈடுபடவேண்டும். பிறகு அதில் வரும் சவால்களை எதிர்கொண்டு, அவற்றை சாதுர்யமாக சமாளிக்க வேண்டும். சாதாரணமாக மாத வருமானம் பெறுபவர்களுக்கும், தொழில் மூலம் சம்பாதிப்பவர்களுக்கும் தூரத்தில் இடைவெளி உண்டு.
சமான்யமானவர்கள், மிகவும் கஷ்டப்பட்டு ஒரு வீடு, ஒரு வாகனம் என்ற அளவிலேயே இருப்பது கண்கூடாக காணும் உண்மை. ஆனால் தொழில் மூலம் சம்பாதித்து பல வீடுகள், பல வாகனங்கள், ஏராளமான பணியாட்கள் என பொருளாதாரத்தில் மிகவும் மேன்மையுடன் திகழ்கின்றனர்.
இது தானாகவோ, வெகு எளிதாகவோ வந்ததாக நிச்சயம் இராது. இரவு, பகல் பாராது உழைத்து எண்ணற்ற சிரமங்களை சமாளித்து அவற்றை தக்க வைப்பது மிகவும் கடினமான காரியம். தொழிலில் வெற்றி பெற உழைப்பு மட்டுமே போதாது. திறமையான கணிப்பும், யூகங்களும் மிக மிக அவசியம். யோசனை ஆக்கப்பூர்வமாக இருத்தல் வேண்டும். தடைக்கல்லாக இருத்தல் கூடாது.
ஒரு ஆற்றை கடக்க வேண்டுமானால் அதன் பரப்பளவு முழுவதிலும் உள்ள ஆழத்தை எப்படி கண்டறிவது? ஆற்றில் இறங்கி மெதுவாக தடவித்தடவி செல்ல வேண்டியது தான்! கடக்க இயலாத அளவு ஆழம் இருப்பின் மாற்று வழி தேட வேண்டியது தான். இல்லாவிடில் ஆற்றையே பார்த்துக்கொண்டு கரையிலேயே உட்கார வேண்டியது தான்.
தன்னால் அவரை போல் வாழ முடியவில்லையே? என்ற ஏக்கத்தை வெளிப்படுத்திக்கொண்டிருப்பார்கள். அதன் காரணமாக மன அமைதியை இழந்து தவிப்பார்கள். பிறருடன் ஒப்பிட்டுப்பார்க்கும் பழக்கத்தை அடிக்கடி பின்பற்றுவது நாளடைவில் நோயாகவே மாறிவிடும். நிம்மதியின்மை, பாதுகாப்பின்மையை உணரக்கூடும்.
பிரபல அமெரிக்க எழுத்தாளர், பாடலாசிரியர் ஸ்டீவன் பர்டிக், ‘‘ஒவ்வொருவரும் தங்களுக்குள் முகத்திரை இட்டுக்கொள்கிறார்கள். அந்த திரைக்குள் இருந்து மற்றவர்களுடன் தங்களை ஒப்பிட்டு பார்க்கிறார்கள். அதுவே நாம் வாழ்க்கையில் போராடிக்கொண்டிருப்பதற்கு காரணமாக இருக்கிறது’’ என்றார்.
மற்றவர்களுடன் நம்மை ஒப்பிடுவது சிறந்ததல்ல என்பதை புரிந்துகொள்ள உதவும் வீடியோ ஒன்றும் சமூகவலைத்தளங்களில் பகிரப்படுகிறது. அந்த அனிமேஷன் வீடியோவில், மற்ற பறவைகள் தன்னை விட சிறந்தவை என்று நினைக்கும் காகம், அவற்றுடன் பேசி படிப்படியாக உண்மை நிலையை கண்டறிகிறது. அந்த காணொளியின் தொடக்க காட்சியாக காகம் ஒன்று ஏரிக்கரையின் ஓரத்தில் இருக்கும் மரத்தின் கிளையில் அமர்ந்திருக்கிறது. அப்போது ஏரியில் நீந்திக்கொண்டிருக்கும் அன்னப்பறவையை காகம் அழைக்கிறது. உடனே காகத்தை நாடி அன்னப்பறவை நீந்தி வருகிறது. அதனிடம் காகம், ‘‘உலகில் நீதான் மிகவும் மகிழ்ச்சியான பறவையா?’’ என்று கேட்கிறது.
அதற்கு அதற்கு அன்னப்பறவை, ‘‘நான் மகிழ்ச்சியாக இருக்கிறேனா? நீங்கள் கிளிகளை பார்த்ததில்லையா. ஒன்றல்ல.. இரண்டு கிளிகளை பார்க்கவே ரொம்ப அழகாக இருக்கும்’’ என்கிறது. ஏரிக்கரையில் உள்ள மற்றொரு மரத்தின் கிளையில் அமர்ந்திருக்கும் கிளியோ அதற்கு மறுப்பு தெரிவிக்கிறது. தன்னை விட மயில்தான் அதிக வண்ணம் கொண்டிருக்கிறது.
பார்க்க அழகாகவும் இருக்கிறது என்று சொல்கிறது. இதையடுத்து மூன்று பறவைகளின் கவனமும் மயிலை நோக்கி திரும்புகிறது. ஆனால் மயிலோ கூண்டுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறது. ‘‘தான் அழகாக இருப்பதால்தான் கூண்டில் அடைக்கப்பட்டு வியாபாரத்திற்காக விற்கப்படுவதாக’’ வேதனை கொள்கிறது. அத்துடன் ‘‘யாருடைய பேச்சையும் கேட்காமல் எங்கு வேண்டுமானாலும் சுதந்திரமாக பறந்து செல்லக்கூடிய காகமாக நான் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்’’ என்கிறது.
மற்றவர்கள் நம்மை விட சிறந்தவர்கள், மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று நினைத்து அவர்களுடன் நம்மை ஒப்பிட்டுப் பார்க்கிறோம். ஆனால் அவர்கள் படும் கஷ்டங்கள் நமக்கு தெரியாது என்பதை இந்த வீடியோ விளக்கும் விதமாக அமைந்திருக்கிறது. யாரும், யாருடனும் ஒப்பிட்டு பார்க்காமல் இருந்தாலே மகிழ்ச்சியாக வாழலாம் என்றும் சுட்டிக்காட்டுகிறது.
மற்றவர்கள் நம்மை விட சிறந்தவர்கள், மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று நினைத்து அவர்களுடன் நம்மை ஒப்பிட்டுப் பார்க்கிறோம். ஆனால் அவர்கள் படும் கஷ்டங்கள் நமக்கு தெரியாது என்பதை இந்த வீடியோ விளக்கும் விதமாக அமைந்திருக்கிறது.