என் மலர்
நீங்கள் தேடியது "சட்னி"
- இந்த சட்னி 2 ,3 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.
- இந்த சட்னி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் - 75 கிராம்
தக்காளி - 2
பூண்டு - 6 பற்கள்
வர மிளகாய்- 12
புளி - எலுமிச்சை அளவு
கடுகு - 1/4 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பூண்டு, சின்ன வெங்காயத்தை தோல் உரித்து வைக்கவும்.
தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
மிக்சி ஜாரில் வெங்காயம், பூண்டு, மிளகாய் ஆகியவற்றை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து கொரகொரவென அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதே ஜாரில் பழுத்த தக்காளியுடன் புளியையும் சேர்த்து அதனை அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்த பின் அரைத்து வைத்துள்ள வெங்காய பேஸ்ட் சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கி விட வேண்டும்.
அடுத்தாக அதில் தக்காளி பேஸ்ட் சேர்த்து அதன் பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி விட வேண்டும். சட்னியின் காரத் தன்மை போகும் வரை அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.
சட்னியில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க வைத்து விட்டு, பின் அடுப்பில் இருந்து இறக்கினால் சட்னி ரெடி!
சுட சுட இட்லிக்கு இந்த கடப்பா சட்னி வைத்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்! இந்த சட்னி 2 ,3 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.
- இந்த சட்னி இட்லி, தோசைக்கு சூப்பராக இருக்கும்.
- இன்று இந்த சட்னி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வறுத்த வேர்க்கடலை - 1/4 கப்
தேங்காய் துருவல் - சிறிதளவு
புதினா - 1 கப்
கொத்தமல்லி - 1/2 கப்
பச்சை மிளகாய் - 5
இஞ்சி - சிறிய துண்டு
புளி - நெல்லிக்காய் அளவு
உப்பு - சுவைக்கு
தாளிக்க
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
உளுந்தம் பருப்பு - டீஸ்பூன்
செய்முறை :
புதினா, கொத்தமல்லியை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி கொத்தமல்லி, புதினாவை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி ஆறவைக்கவும்.
மிக்சி ஜாரில் வதக்கிய கொத்தமல்லி, புதினாவை போட்டு அதனுடன் வேர்க்கடலை, தேங்காய் துருவல், ப.மிளகாய், இஞ்சி, புளி, உப்பு சேர்த்து மைய அரைத்துக்கொள்ளுங்கள்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களைக் கொண்டு தாளித்து அரைத்த சட்னியில் ஊற்றி கிளறுங்கள்.
அவ்வளவுதான் வேர்க்கடலை புதினா சட்னி தயார்.
இதை இட்லி , தோசைக்கு தொட்டுக்கொள்ளலாம்.
- இந்த துவையல் தோசை, சப்பாத்திக்கு சிறந்த காம்பினேஷன்.
- சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும்.
தேவையான பொருட்கள் :
சின்ன வெங்காயம் - 200 கிராம்,
காய்ந்த மிளகாய் - 3,
உளுத்தம்பருப்பு - 4 டீஸ்பூன்,
புளி - ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு,
எண்ணெய் - 4 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பை தனித்தனியா போட்டு வறுக்கவும்
அடுத்து வெங்காயத்தை சேர்த்து வதக்கி ஆறவைக்கவும்.
பிறகு, எல்லாவற்றையும் ஒன்றுசேர்த்து, உப்பு, புளி சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
இப்போது ருசியான வெங்காய துவையல் ரெடி.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
தேவையான பொருட்கள்:
எள்ளு - 1/4 கப்
துருவிய தேங்காய் - 1/2 கப்
பூண்டு - 4 பற்கள்
இஞ்சி - 1 துண்டு
வரமிளகாய் - 7
புளி - 1 எலுமிச்சை அளவு
கடுகு-1 /2 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு-1 ஸ்பூன்
கறிவேப்பிலை-1 கொத்து
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை:
இஞ்சி மற்றும் பூண்டு பற்களை பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் எள்ளு விதைகளை சேர்த்து தீயினை சிம்மில் வைத்து வதக்கி விட வேண்டும்.
எள் வதங்கி நன்றாக வாசனை வந்த பிறகு, அதில் பொடியாக அரிந்து வைத்துள்ள இஞ்சி மற்றும் பூண்டு பற்களை சேர்த்து அதன் பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி விட வேண்டும். இஞ்சி பூண்டின் பச்சை வாசனை சென்ற பிறகு,புளி சேர்த்து வதக்கி விட வேண்டும்.
இப்போது இதில் வரமிளகாய் மற்றும் துருவிய தேங்காயை சேர்த்து வதக்கவும். பின்னர் வதக்கிய பொருட்களை நன்றாக ஆறியதும் அதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து கொஞ்சம் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் கடாய் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் சேர்த்து பரிமாறினால் ருசியான எள்ளு தேங்காய் சட்னி ரெடி!
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.
- இந்த சட்னி குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
தேவையான பொருட்கள் :
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு,
காய்ந்த மிளகாய் - 10 (அல்லது தேவைக்கேற்ப),
கறிவேப்பிலை - கால் கப்,
தனியா - 2 டேபிள்ஸ்பூன்,
கருப்பட்டி - சிறிய துண்டு,
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப.
தாளிக்க
கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன்,
கறிவேப்பிலை
செய்முறை:
கடாயில் சிறிது 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, தனியா சேர்த்து வாசனை வரும் வரை வதக்கி ஆற விடவும்.
ஆறியதும் மிக்சியில் போட்டு அதனுடன் புளி, கருப்பட்டி, உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து 1 டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்து அதில் அரைத்த விழுதைச் சேர்த்து சுருள வதக்கினால்... புளிப்பு, காரம், இனிப்புச் சுவையுடன் வித்தியாசமான சட்னி தயார்!
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- வாய்க்கசப்பு, பித்தம் குறைய உதவும் இந்த சட்னி.
- இந்த சட்னி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
தனியா - கால் கப்,
காய்ந்த மிளகாய் - 8 (அல்லது தேவைக்கேற்ப),
பூண்டு - 2 பல்,
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு,
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு,
கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன்,
தேங்காய் துருவல் - 4 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:
வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் தனியாவை போட்டு வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.
பின்னர் சிறிதளவு எண்ணெய் ஊற்றி... காய்ந்த மிளகாய், பூண்டு, புளி, கறிவேப்பிலை, தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக வறுத்து ஆறவைக்கவும்.
எல்லா பொருட்களும் நன்றாக ஆறியபின் மிக்சியில் போட்டு அதனுடன் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும்.
மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, அரைத்த சட்னியில் சேர்க்கவும்.
இப்போது சூப்பரான தனியா சட்னி ரெடி.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- ஊளைச்சதையை குறைக்கும் சக்தி கொள்ளுக்கு உண்டு.
- அடிக்கடி உணவில் கொள்ளு சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்க உதவும்.
தேவையான பொருட்கள்:
கொள்ளு - 1 கைப்பிடி
தேங்காய் - கால் மூடி
சிவப்பு மிளகாய் - 7
பூண்டு - 6 பல்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
தேங்காயினை துருவி வைத்துக் கொள்ளவும்.
ஒரு அடி கனமான பாத்திரத்தில் கொள்ளினைப் போட்டு அடுப்பினை இளந்தீயில் வைத்து, நன்கு வாசனை வரும் வரை வறுக்கவும்.
தேங்காய் துருவல், கொள்ளு, உப்பு, சிவப்பு மிளகாய், பூண்டு இவற்றை மிக்ஸியில் தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்.
கொள்ளு துவையல் தயார்.
கொள்ளு தானியத்தை நம் உணவில் அடுக்கடி சேர்த்துக் கொள்வதால் நமக்கு ஏற்படும் தொண்டை வலி, ஆஸ்துமா போன்ற பிரச்சினைகள் தீரும் என சொல்லப்படுகிறது. சாப்பாட்டில் கொள்ளு சேர்ப்பதால் நல்ல கண் பார்வை கிடைக்கும் என்றும், ஜுரம் அதிகமாக இருக்கும்போது கொள்ளு ரசம் வைத்து சாப்பிட்டால் ஜுரம் சரியாகும் என்றும் கூறப்படுகிறது. வாதப் பிரச்சினைகளும், வயிற்று வலியும் குணமாகும். கொள்ளினை உணவில் சேர்ப்பதால் இரத்தம் சுத்திகரிக்கப் படுகிறது.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- மாங்காயில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
- இன்று மாங்காய் வைத்து சட்னி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
துருவிய தேங்காய் - ஒரு கப்,
தோல் நீக்கி வெட்டிய மாங்காய் - 4 துண்டுகள்,
பச்சை மிளகாய் - 2,
கடுகு - கால் டீஸ்பூன்,
தேங்காய் எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
மாங்காய், தேங்காய், பச்சை மிளகாய், உப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் அரைத்து வழித்தெடுக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து சட்னியில் ஊற்றி கலந்து பரிமாறவும்.
இப்போது சூப்பரான தேங்காய் மாங்காய் சட்னி ரெடி.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- இந்த சட்னி செய்ய 15 நிமிடங்களே போதுமானது.
- இன்று இந்த சட்னி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வெங்காயம் - 1
தக்காளி - 1
பூண்டு - 4 பற்கள்
காய்ந்த மிளகாய் -5
இஞ்சி - சிறிய துண்டு
கறிவேப்பிலை - 2 ஆர்க்கு
புதினா - சிறிதளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
புளி - 1/2 தேக்கரண்டி
துருவிய தேங்காய் - 1/4 கப்
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - 2 தேக்கரண்டி
தாளிக்க
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
செய்முறை
வெங்காயம், தக்காளியை நறுக்கி வைக்கவும்.
இஞ்சியை தோல் நீக்கி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிகப்பு மிளகாயை போட்டு வறுத்த பின்னர் வெங்காயம், தக்காளி, பூண்டு, இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, புளி என்று ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் துருவிய தேங்காய் சேர்த்து 5 நிமிடம் வதக்கி பின் இறக்கி ஆற வைக்கவும்.
அனைத்து நன்றாக ஆறிய பின்னர் மிக்சியில் போட்டு உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்க்கலாம்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து, அரைத்த சட்னியில் சேர்த்து கலந்து பரிமாறவும்.
சூப்பரான கதம்ப சட்னி ரெடி.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- இந்த கீரையை பச்சையாக உண்ணுதல் மிகவும் நல்லது.
- வல்லாரைக் கீரை சமைக்கும்போது புளி சேர்த்தால், அதன் பலன் முழுமையாக கிடைக்காது.
தேவையான பொருட்கள் :
வல்லாரைக்கீரை - அரை கட்டு,
தக்காளி, வெங்காயம் - தலா ஒன்று,
இஞ்சி - சிறிய துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்),
தேங்காய் துருவல், - கால் கப்,
பச்சை மிளகாய் - 5,
கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:
வல்லாரைக்கீரையை முள் நீக்கி விட்டு நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் வல்லாரைக்கீரை, நறுக்கிய தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, தேங்காய் துருவல் என ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கவும்.
ஆறியபின் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும்.
மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் தாளித்து, அரைத்த விழுதில் சேர்க்கவும்.
சத்தான சுவையான வல்லாரை சட்னி ரெடி.
குறிப்பு: வல்லாரைக் கீரை மூளையை சுறுசுறுப்பாக்கும். நினைவாற்றலை வளர்க்கும். வல்லாரைக் கீரை சமைக்கும்போது புளி சேர்த்தால், அதன் பலன் முழுமையாக கிடைக்காது.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- கேரட்டை அதிகமாக சாப்பிட்டால் இரத்தக் கொழுப்பு குறையும்.
- வேர்க்கடலையில் அதிகமான புரோட்டீன்கள் நிறைந்துள்ளது.
தேவையான பொருட்கள் :
வேர்க்கடலை - 1/4 கப்
கேரட் துருவல் - ஒரு கப்
காய்ந்த மிளகாய் - 6
கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 ஸ்பூன்
எண்ணெய் - 1 ஸ்பூன்
கடுகு - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
வேர்க்கடலையை நன்கு வறுத்துக் கொள்ளுங்கள்.
கடாயில் எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை போட்டு சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
இந்த எண்ணெயில் கேரட்டை போட்டு நன்கு வதக்கி வைத்துக் கொள்ளவும்.
மிக்சியில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, மிளகாய், வேர்க்கடலையை சேர்த்து அரைக்கவும்.
இந்த கலவையுடன் பெருங்காயத்தூள், வதக்கிய கேரட், உப்பு சேர்த்து கெட்டியான துவையலாக அரைத்தெடுக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து சட்னி சேர்த்து கலந்து எடுத்து உங்களுக்கு பிடித்த காலை உணவுடன் வைத்து பரிமாறுங்க.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- இந்த சட்னி இட்லி, தோசைக்கு சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
- இந்த சட்னி 4-6 மணிநேரம் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.
தேவையான பொருட்கள்:
துருவிய தேங்காய் - 1 கப்
உளுத்தம் பருப்பு - 3 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் - 2
புளி - 2 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவைக்கு ஏற்ப
தாளிக்க
கடுகு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை
செய்முறை:
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுத்தம் பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
* பின்பு அதில் துருவிய தேங்காய் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும்.
* தேங்காய் பொன்னிறமானதும், வரமிளகாய், புளி சேர்த்து 2 நிமிடம் வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* வறுத்த பொருட்கள் ஆறியதும் மிக்சர் ஜாரில் போட்டு, சுவைக்கேற்ப உப்பு மற்றும் தேவையான அளவு நீர் சேர்த்து நன்கு மென்மையாக அரைக்க வேண்டும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்து சட்னியில் சேர்த்து பரிமாறவும்.
* இப்போது சுவையான தேங்காய் புளி சட்னி தயார்.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health