என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இ ஸ்கூட்டர்"

    • தனது தோழியுடன் சேர்ந்து அறை முழுவதும் தேடி பார்த்தார். ஆனால் பணம் கிடைக்கவில்லை.
    • பணத்தை திரும்ப கொடுக்க நேரில் வருகிறேன் எனவும் தெரிவித்தார்.

    துபாய்:

    துபாயில் குடியேறுவதற்காக போலந்து நாட்டைச் சேர்ந்த கஜேதன் ஹப்னர் என்ற வாலிபர், பெண் தோழியுடன் வந்தார். புதிதாக வீடு தேடிக் கொண்டிருப்பதால், தற்காலிகமாக துபாய் மரினா பகுதியில் உள்ள ஓட்டலில் அறை எடுத்து இருவரும் தங்கினர். அவர்கள் அப்பகுதியில் உள்ள இடங்களை சுற்றி பார்க்கும் வகையில் இ-ஸ்கூட்டர் ஒன்றை வாங்க அந்த வாலிபர் திட்டமிட்டு, இணையதளத்தில் தேடினார்.

    அப்போது தனியார் நிறுவனம் ஒன்று 1,750 திர்ஹாமில் இ-ஸ்கூட்டரை விற்பனை செய்வதாக அறிவித்து இருந்தது. இதனை கஜேதன் ஹப்னர் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்தார். அதில், பொருளை டெலிவரி செய்யும் போது பணத்தை தருவதாக குறிப்பிட்டார்.

    இந்த இ-ஸ்கூட்டரை டெலிவரி செய்வதற்காக அவர் தங்கி இருந்த ஓட்டல் அறைக்கு பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த முகம்மது மோசின் நசிர் என்ற டெலிவரி ஊழியர் நேரில் சென்றார். அதனை பெற்றுக் கொண்ட கஜேதன் ஹப்னர் பணத்தை நசிரிடம் கொடுத்தார். அப்போது அவர் 1,750 திர்ஹாமுக்கு பதிலாக 17,050 திர்ஹாம் வழங்கினார். இதனை டெலிவரி ஊழியரும் எண்ணி பார்க்காமல் வாங்கி சென்றார். பின்னர் முகம்மது மோசின் நசிர் தினமும் பொருட்களை டெலிவரி செய்த பணத்தை எண்ணி பார்ப்பது வழக்கம். அன்று இரவில் அவர் பணத்தை எண்ணும் போது 15 ஆயிரம் திர்ஹாம் அதிகமாக இருப்பது தெரிந்தது.

    இந்நிலையில் முகம்மது மோசின் நசிரின் தாயார் பாகிஸ்தானில் இருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு மகனிடம் பேசினார். அப்போது இந்த விவரத்தை அவரிடம் தெரிவித்தார். அவரும் பணத்தை உடனடியாக கொடுத்தவரிடம் திருப்பி கொடுத்து விடு என தெரிவித்தார். இதற்கிடையே பொருளை வாங்கிய கஜேதன் ஹப்னர் தன்னிடம் இருந்த பணம் குறைந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் தனது தோழியுடன் சேர்ந்து அறை முழுவதும் தேடி பார்த்தார். ஆனால் பணம் கிடைக்கவில்லை.

    அப்போது கஜேதன் ஹப்னர் தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில், டெலிவரி ஊழியர் முகம்மது மோசின் நசிர் பேசினார். அப்போது, உங்களிடம் ஆன்லைன் பொருளுக்கு கூடுதலாக பணம் பெறப்பட்டது என விவரமாக கூறினார். அந்த பணத்தை திரும்ப கொடுக்க நேரில் வருகிறேன் எனவும் தெரிவித்தார். பின்னர் மறுநாள் 15 ஆயிரம் திர்ஹாம் பணத்தை எடுத்து கொண்டு டெலிவரி ஊழியர், வெளிநாட்டு வாலிபர் தங்கி இருந்த ஓட்டல் அறைக்கு சென்று நேரில் ஒப்படைத்தார்.

    டெலிவரி இளைஞரின் நேர்மையை பாராட்டி அவருக்கு 300 திர்ஹாம் பரிசாக கஜேதன் ஹப்னர் வழங்கினார். டெலிவரி ஊழியர் அனுமதியுடன் போலந்து இளைஞரின் தோழி அவரது நேர்மையை கவுரவிக்கும் வகையில் சமூக வலைத்தளத்தில் இந்த நிகழ்ச்சியை பதிவாக வெளியிட்டார்.

    தற்போது இது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை மெல்ல அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. இந்தியாவில் நீண்ட ரேன்ஜ் வழங்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள் எவை தெரியுமா?


    இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூ. 100-ஐ கடந்து விட்டன. பெட்ரோல், டீசல் விலை பிரச்சினை மட்டுமின்றி பலர் இந்த வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு கேடானது என்பதை புரிந்து கொண்டுள்ளனர். இந்த ஆண்டு துவக்கம் முதலே பல்வேறு எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்களும் தங்களின் எலெக்ட்ரிக் வாகன மாடல்களை அறிமுகம் செய்ய துவங்கி இருக்கின்றன.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை அடுத்து குறைந்த செலவில் அதிக தூரம் பயணிக்க எலெக்ட்ரிக் வாகனங்கள் சிறப்பானதா என ஆய்வு செய்ய துவங்கி உள்ளனர். மேலும் அதிக ரேன்ஜ் வழங்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கவே விரும்புகின்றனர். இந்தியாவில் அதிக ரேன்ஜ் வழங்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள் எவை என தொடர்ந்து பார்ப்போம்.

     ஹீரோ Nyx Hx

    இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் கிடைக்கும் குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களில் ஒன்றாக ஹீரோ Nyx Hx இருக்கிறது. இதன் விலை ரூ. 62 ஆயிரத்து 954 ஆகும். இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 165 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகிறது. மேலும் இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 42 கிலோமீட்டர் வேகத்தில் செல்கிறது.

    ஓலா நிறுவனத்தின் S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 181 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்கூட்டரில் 3.97 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் ஓலா S1 ப்ரோ விலை ரூ. 1 லட்சத்து 29 ஆயிரத்து 999 ஆகும்.

     சிம்பில் ஒன்

    பெங்களூரை சேர்ந்த சிம்பில் எனர்ஜி நிறுவனம் உருவாக்கி இருக்கும் சிம்பில் ஒன் ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 300-க்கும் அதிக கிலோமீட்டர்கள் வரை செல்லும். இந்த மாடலின் வினியோகம் அடுத்த மாதம் துவங்க இருந்த நிலையில், தற்போது வினியோகம் செப்டம்பர் மாதம் துவங்கும் என தெரிவித்து இருக்கிறது.

    கிராவ்டன் குவாண்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3 கிலோவாட் BLDC மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 320 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகிறது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு 70 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். இது இந்தியாவின் நீண்ட ரேன்ஜ் வழங்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும்.
    ×