என் மலர்
நீங்கள் தேடியது "Janhvi Kapoor"
- ராப் மார்ஷல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'தி லிட்டில் மெர்மெய்ட்’.
- இந்த திரைப்படம் வருகிற 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
ராப் மார்ஷல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'தி லிட்டில் மெர்மெய்ட்'. இப்படத்தில் ஏரியல் வேடத்தில் ஹாலே பெய்லி, உர்சுலாவாக மெலிசா மெக்கார்த்தி, இளவரசர் எரிக்காக ஜோனா ஹவுர்-கிங், கிங் ட்ரைட்டனாக ஜேவியர் பார்டெம், செபாஸ்டியனாக டேவிட் டிக்ஸ், ப்ளோண்டராக ஜேக்கப் ட்ரெம்ப்ளே, ஸ்கட்டிளாக அவ்குவாபினா, நோமாவாக டுமேஸ்வேனி ஆகியோர் நடித்துள்ளனர்.

தி லிட்டில் மெர்மெய்ட்
ஏரியல் என்ற கடல் கன்னி நிலத்தில் வசிக்கும் இளவரசர் எரிக்கிடம் காதல் வசப்படுகிறாள். இவள் கடல் சூனியக்காரி உர்சுலாவுடன் ஒப்பந்தம் செய்து நிலத்தில் வாழும் வாய்ப்பைப் பெறுகிறாள். இதன் பின்னர் இவள் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த திரைப்படம் வருகிற 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ஜான்வி கபூர்
இந்நிலையில், நடிகை ஜான்வி கபூர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு மாயாஜால வீடியோ அவரது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இளவரசி ஏரியலின் மாயாஜால உலகில் ஒரு ரசிகராக ஜான்வி கபூர் காலடி எடுத்து வைத்து ஏரியலாக மாறி தனது இளம் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
- ஜான்வி கபூர் திருப்பதி வந்தது முதல் விமானத்தில் கேக் வெட்டி கொண்டாடியது வரை அவரது காதலன் ஷிகா பஹிரியா தனது செல்போனில் வீடியோ போட்டோக்களாக பதிவு செய்து இருந்தார்.
- ஜான்வி கபூர் தனது காதலனுடன் முட்டி போட்டபடி மலை பாதையில் உள்ள படிக்கட்டில் 3 மணி நேரம் ஏறி சென்றார்.
நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். இவர் தற்போது இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
ஜான்வி கபூர் தனது தாயைப் போலவே அடிக்கடி ஆன்மீக சுற்றுலாவாக கோவில்களுக்கு சென்று வருகிறார்.
அதன்படி ஜான்வி கபூர் தனது பிறந்த நாளை முன்னிட்டு அவரது காதலன் என கூறப்படும் ஷிகா பஹாரியா மற்றும் அவரது நண்பர் ஓரியுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றார்.
ஜான்வி கபூர் மற்றும் அவரது காதலன் இருவரும் வெள்ளை நிற பேண்ட், வெளிர் நிறத்தில் குர்தாவும் அணிந்து இருந்தனர்.
பின்னர்ஜான்வி கபூர் தனது காதலனுடன் முட்டி போட்டபடி மலை பாதையில் உள்ள படிக்கட்டில் 3 மணி நேரம் ஏறி சென்றார். அதன் பிறகு முட்டி போட்டபடி செல்ல சிரமம் அடைந்ததால் நடந்து சென்றார்.
ஜான்வி கபூரை அடையாளம் கண்ட பக்தர்கள் அவருடன் சேர்ந்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
திருப்பதியில் ஏழுமலையானை தரிசித்த பிறகு விமானத்தில் புறப்பட்டு சென்றார்.


விமானத்திலேயே கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினார். ஜான்வி கபூர் திருப்பதி வந்தது முதல் விமானத்தில் கேக் வெட்டி கொண்டாடியது வரை அவரது காதலன் ஷிகா பஹிரியா தனது செல்போனில் வீடியோ போட்டோக்களாக பதிவு செய்து இருந்தார். அவரது செல்போன் பதிவுகளை தற்போது சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்ரீதேவி மூத்த மகள் ஜான்வி கபூர் சில நாட்கள் இந்த வீட்டில் தங்கி இருந்தார்.
- இந்த ஆடம்பர பங்களா பொதுமக்கள் தங்குவதற்கு வாடகைக்கு விடப்படுகிறது.
மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு சொந்தமான ஆடம்பர பங்களா கடற்கரை சாலையில் உள்ளது. பல்வேறு ஆடம்பர வசதிகளுடன் கூடிய இந்த வீடு அவரது மறைவுக்கு பின்பு போதிய பராமரிப்பின்றி இருந்து வந்தது.
சென்னை வரும்போது ஸ்ரீதேவி அடிக்கடி இந்த வீட்டில் தங்கி செல்வார். அவர் வாங்கிய முதல் ஆடம்பர மாளிகையான இந்த வீட்டை உலகம் முழுவதும் உள்ள கலைப் பொருள்கள் மற்றும் ஓவியங்களால் அலங்கரித்து வைத்திருந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்ரீதேவி மூத்த மகள் ஜான்வி கபூர் சில நாட்கள் இந்த வீட்டில் தங்கி இருந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஜான்வி கபூர் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த ஆடம்பர பங்களா பொதுமக்கள் தங்குவதற்கு வாடகைக்கு விடப்படுகிறது.
மே 12-ந் தேதி முதல் இதற்கான முன்பதிவு தொடங்க இருக்கிறது. இந்த ஆடம்பர வீட்டில் தென்னிந்திய உணவுகள் மற்றும் நெய் பொடி சாதம், பால்கோவா மற்றும் விருப்பமான சுவையான உணவு வசதிகள் தங்கும் விருந்தினர்களுக்கு கிடைக்கும்.
இதுபற்றி ஜான்வி கபூர் கூறியதாவது:-
எனது மிகவும் நேசத்துக்குரிய குழந்தை பருவ நினைவுகள் சென்னையில் உள்ள கடற்கரை சாலையில் எனது குடும்பத்துடன் கோடை காலத்தை கழித்தது என இந்த வீட்டை ஒரு சரணாலயம் போல் உணர்கிறேன். அந்த உணர்வை எனது ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
அதனால்தான் முதன் முறையாக சில விருந்தினர்களுக்கு எங்கள் வீட்டை திறக்கிறேன். 4 ஏக்கரில் உள்ள இந்த வீட்டில் நீச்சல் குளம் வசதியும் உள்ளது. எங்கள் கடலோர வீட்டுக்கு தனிப்பட்ட சுற்றுலாவுக்கு உங்களை அழைத்து செல்கிறேன்.
காலையில் யோகா மற்றும் அற்புதமான உணவை நீங்கள் அனுபவிப்பீர்கள் என்று கூறினார். ஜான்வி கப்பூர் நடித்த Mr & Mrs மஹி வரும் மே 31 வெளியாகவுள்ளது. தெலுங்கு மொழியில் ஜுனியர் என்.டி.ஆர் மற்றும் சைஃப் அலி கான் இணைந்து நடித்துள்ள தேவாரா படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தேவரா படம் முதல் நாளில் உலகளவில் 172 கோடி ரூபாய் வசூல் செய்தது.
- விரைவில் இப்படம் 500 கோடி வசூலை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூனியர் என்.டி.ஆர். கொரட்டலா சிவா இயக்கத்தில் நடித்திருக்கும் படம் தேவரா- பகுதி 1. பான் இந்தியா படமான தேவரா நேற்று உலகளவில் ரிலீஸ் ஆனது. இந்தியாவில் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ளது.
இந்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆர்.-க்கு ஜோடியாக மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடித்துள்ளார். தென்இந்தியாவில் ஜான்வி கபூர் அறிமுகமாகும் படம் இதுவாகும்.
இந்த படம் முதல் நாளில் உலகளவில் 172 கோடி ரூபாய் வசூல் செய்ததாக படக்குழு அதிரகாரபூர்வமாக அறிவித்தது.
இந்நிலையில் 2-ம் நாள் முடிவில் இப்படம் 243 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. விரைவில் இப்படம் 500 கோடி வசூலை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான கோட் படத்தின் முதல் 2 நாள் வசூலை விட தேவரா திரைப்படம் அதிக வசூலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- புஷ்பா முதல் பாகத்தில் இடம் பெற்ற ஊ சொல்றியா மாமா பாடலில் நடிகை சமந்தா நடனமாடினார்.
- புஷ்பா 2 படத்தில் கிஸ்ஸிக் பாடலுக்கு நடிகை ஸ்ரீ லீலா நடனம் ஆடி ரசிகர்களை கொண்டாட வைத்தார்.
அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா 2 படம் திரைக்கு வந்து மாபெரும் வெற்றி பெற்றிருப்பதுடன் வசூலையும் வாரி குவித்துள்ளது. படத்தின் வெற்றிக்கு படத்தில் இடம் பெற்ற பாடல்களும் பெரிய காரணம்.
புஷ்பா முதல் பாகத்தில் இடம் பெற்ற ஊ சொல்றியா மாமா பாடலில் நடிகை சமந்தா நடனம் பட்டி தொட்டி எங்கும் பிரதிபலித்தது. புஷ்பா 2 படத்தில் கிஸ்ஸிக் பாடலுக்கு நடிகை ஸ்ரீ லீலா நடனம் ஆடி ரசிகர்களை கொண்டாட வைத்தார்.

இந்நிலையில் புஷ்பா 3 என்ற பெயரில் படத்தின் 3-ம் பாகம் உருவாக உள்ளது. படத்தில் இடம்பெற்றுள்ள ஐட்டம் பாடல்களின் வரவேற்பு பற்றி இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் கூறுகையில், "ஐட்டம் பாடலில் எந்த நடிகை நடனம் சர்வதேச அளவில் பாடல் பிரபலமாகும் என்பது எங்களுக்கு ஆரம்பத்திலேயே தெரியும். ஸ்ரீலீலா அற்புதமான நடன கலைஞர். என் இசையில் ஒரு பாடலுக்கு பூஜா ஹெக்டே, சமந்தா, காஜல் அகர்வால் ஆகியோர் நடனம் ஆடி இருக்கின்றனர். அந்த வகையில் புஷ்பா 3 உருவாகி வரும் நிலையில் படத்தில் இடம்பெறும் பாடலுக்கு ஜான்வி கபூர் பொருத்தமாக இருப்பார் என நான் விரும்புகிறேன். ஜான்வி கபூர் ஓர் அற்புதமான நடன கலைஞர்" என்றார்.
- திருமணத்துக்கு பிறகு கணவருடன் திருப்பதியில் குடியேற வேண்டும் என்ற முடிவில் இருக்கிறேன்.
- மூன்று குழந்தைகளை பெற்றுக்கொண்டு அங்கேயே அமைதியாக வாழவும் விரும்புகிறேன்.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் இந்தி படங்களில் நடித்து வருகிறார். ஜூனியர் என்.டி.ஆருடன் 'தேவாரா' படத்தில் நடித்து தெலுங்கிலும் அறிமுகமானார். தமிழ் படங்களில் நடிக்கவும் கதை கேட்டு வருகிறார்.
ஜான்வி கபூர் அடிக்கடி திருப்பதி கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு வருகிறார். தனது தாயாரின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாட்களிலும் திருப்பதிக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். திருப்பதி ஏழுமலையானை பற்றி யார் பேசினாலும் அவரது முகம் பிரகாசமாகி விடுகிறது. ஏழுமலையான் மீதான பக்தியால் திருப்பதியிலேயே குடியேறவும் விருப்பம் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து ஜான்வி கபூர் கூறும்போது, ''திருமணத்துக்கு பிறகு கணவருடன் திருப்பதியில் குடியேற வேண்டும் என்ற முடிவில் இருக்கிறேன். திருப்பதியில் சாதாரணமான பெண்ணாக வாழ்க்கையை கழிக்க வேண்டும் என்பது எனது விருப்பம்.

திருப்பதியில் வாழை இலையில் உணவை சாப்பிட்டு தினமும் கோவிந்த நாம சங்கீர்த்தனத்தை கேட்டுக் கொண்டு காலத்தை கழிக்கவும், மூன்று குழந்தைகளை பெற்றுக்கொண்டு அங்கேயே அமைதியாக வாழவும் விரும்புகிறேன். ஏழுமலையான் கோவிலில் கடைபிடிக்கும் சம்பிரதாயத்துக்கு ஏற்ற மாதிரி எனது கணவரை வேட்டி அணியும்படியும் சொல்வேன்'' என்றார்.