என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாய்பல்லவி"

    • ரன்பீர் கபூரை ராமராக கற்பனை செய்வது மிகவும் கஷ்டமாக இருக்கிறது.
    • சாய்பல்லவி முகத்தில் சீதை சாயல் கொஞ்சமும் இல்லை.

    தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ள சாய்பல்லவி இந்தியில் தயாராகும் ராமாயணம் படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். இதில் ராமராக ரன்பீர் கபூர் நடிக்கிறார்.

    படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படப்பிடிப்பில் இருந்து சில புகைப்படங்கள் ஏற்கனவே வலைத்தளத்தில் கசிந்து வைரலாகிறது. சீதை கதாபாத்திரத்துக்கு சாய்பல்லவி பொருத்தமானவர் இல்லை என்று ஏற்கனவே விமர்சனங்கள் எழுந்த நிலையில் தற்போது மீண்டும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

    தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராமாயணம் தொடரில் லட்சுமணனாக நடித்துள்ள பிரபல இந்தி நடிகர் சுனில் லாஹ்ரி கூறும்போது,"அனிமல் படம் பார்த்த பிறகு அதில் நடித்திருந்த ரன்பீர் கபூரை ராமராக கற்பனை செய்வது மிகவும் கஷ்டமாக இருக்கிறது.

    சீதை வேடத்தில் சாய் பல்லவி நடிக்கிறார். ஆனால் அவரது முகத்தில் சீதை சாயல் கொஞ்சமும் இல்லை. எனவே சீதையாக அவர் எப்படி நடிக்கப் போகிறார் என்று எனக்கு புரியவில்லை. சாய்பல்லவி நடித்த படங்களை நான் இதுவரை பார்க்கவில்லை. அவர் முகத்தில் தேவதைக்குரிய லட்சணங்கள் இல்லை'' என்றார். சுனில் லாஹ்ரி கருத்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வித்தியாசமான ஒரு நல்ல காமெடிக்கு முக்கியத்துவம் இருக்கும்.
    • சாய்பல்லவிக்கு காமெடி படத்தில் நடிக்க ஆசை

    தமிழில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ள சாய்பல்லவி மலையாளம், தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது இந்தியில் தயாராகும் ராமாயண படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சாய்பல்லவிக்கு காமெடி படத்தில் நடிக்க ஆசை உள்ளதாம்.

    இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், 'நான் தெலுங்கில் நடித்த பிதா, லவ் ஸ்டோரி, சியாம் சிங்கராய், விராட்ட பருவம், எம்சிஏ இப்படி எந்த படத்தை எடுத்துக்கொண்டாலும் எல்லாமே கதைக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்கள் தான்.

    நடனத்தின் மூலமும் எனக்கு நல்ல பெயர் பெற்றுக்கொடுத்த படங்கள் இவை. ஆனால் நான் இந்த படங்களை எல்லாம்விட வித்தியாசமான ஒரு நல்ல காமெடிக்கு முக்கியத்துவம் இருக்கும் படத்தில் நடிக்கும் வாய்ப்புக்காக எதிர்பார்த்து காத்து இருக்கிறேன்.

    அந்த படத்தில் எனக்கென்று முழு அளவிலான காமெடி கதாபாத்திரம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அப்படிப்பட்ட வாய்ப்பு எந்த மொழியில் கிடைத்தாலும் உடனே நடிக்க சம்மதிப்பேன்' என்றார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ‘தண்டேல்’ என்ற படத்தில் மீனவ பெண்ணாக நடித்து வருகிறார்.
    • மகாபாரதம் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.

    'பிரேமம்' என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சாய்பல்லவி. படத்தில் இவரது மலர் டீச்சர் கதாபாத்திரம் பெரிய வரவேற்பை பெற்றது.

    தொடர்ந்து தனுசுடன் மாரி-2 மற்றும் தியா, என்.ஜி.கே ஆகிய தமிழ் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமடைந்தார்.

    தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்து வந்த சாய்பல்லவி இந்தி மொழியில் தயாராகி வரும் ராமாயணம் என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூரும், சீதா கதாபாத்திரத்தில் சாய் பல்லவியும் நடித்துள்ளனர். அதிக பொருட்செலவில் தயாராகி வரும் இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    நாகசைதன்யாவுடன் 'தண்டேல்' என்ற படத்தில் மீனவ பெண்ணாக நடித்து வருகிறார். இந்நிலையில் சாய்பல்லவி அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-

    மகாபாரதம் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அர்ஜூனனின் மகன் அபிமன்யூவை எனக்கு மிகவும் பிடிக்கும். கடந்த 10 வருடங்களாக அபிமன்யூவை பற்றி நிறைய படித்துள்ளேன். அவரை கடந்த 10 வருடங்களாக காதலித்து வருகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அமரன், ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பால் உலகளவில் ரூ.300 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.
    • அமரன் நாளை பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் வெளியாவுள்ளது.

    ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் அமரன். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    தீபாவளி பண்டிகையில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

    மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கையைத் தழுவி இப்படம் உருவாகியுள்ளது. இதில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தாகவும், முகுந்தின் மனைவி இந்துவாக சாய் பல்லவியும் நடித்துள்ளனர். இப்படத்தில் இடம்பெற்ற சண்டை மற்றும் காதல் காட்சிகள் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன.

    ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பால் இப்படம் உலகளவில் ரூ.300 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.

    இதைதொடர்ந்து, அமரன் நாளை பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் வெளியாவுள்ளது.

    இந்நிலையில், அமரன் படத்தில் தனது செல்போன் எண்ணை பயன்படுத்தியதால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த படத்தை ஓடிடியில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் மாணவர் வாகீசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    இதுதொடர்பான மனுவில், " சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படத்தில் தன்னுடயை மொபைல் எண்ணை பயன்படுத்தியதால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.1.10 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் அந்த மனுவில், மொபைல் எண் வரும் காட்சியை நீக்கக் கோரி ஏற்கனவே தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பியும், அவர்கள் தவறை திருத்தவில்லை.

    அதனால், படத்தை ஒடிடி தளத்தில் வெளியிட தடை விதிக்கவும், தணிக்கை சான்றை ரத்து செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

    ×