என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pakistan"

    • இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை.
    • தீவிரவாதிகளிடம் இருந்து வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

    இஸ்லாமாபாத்:

    ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினார்கள். அன்றில் இருந்து பாகிஸ்தானுக்கு அவர்கள் தலைவலியாக மாறி உள்ளனர்.

    ஆப்கானிஸ்தானை சேர்ந்த பயங்கர வாதிகள் பாகிஸ்தானின் சைபர் பக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தான் மாகாண எல்லைப்பகுதியில் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் பொதுமக்கள், பாதுகாப்பு படை வீரர்கள் பலர் பலியாகி வருகின்றனர்.

    தீவிரவாதிகள் தாக்குதல் அதிகரித்து வருவதைதொடர்ந்து அவர்களை ஒழிக்கும் நடவடிக்கையில் பாகிஸ்தான் அரசு இறங்கி உள்ளது. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    இந்த நிலையில் கைபர் பக்துன்க்வா தேரா இஸ்மாயில்கான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாகிஸ்தான் உளவு துறைக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதையடுத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் அந்த பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைந்து இருந்த தீவிரவாதிகள் ராணுவ வீரர்கள் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.

    பாகிஸ்தான் ராணுவத்தினரும் திருப்பி சுட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 10 தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். ராணுவ அதிகாரி ஒருவரும் உயிர் இழந்தார்.

    தீவிரவாதிகளிடம் இருந்து ஏராளமான வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது.

    • அமிர்தசரசின் சஹர்பூர் கிராமத்திற்கு அருகே பாகிஸ்தானில் இருந்து மற்றொரு ஆளில்லா விமானம் பறந்து வந்துள்ளது.
    • சம்பவ இடத்திற்கு உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் எல்லை வழியாக ஊடுருவதை தடுக்க காஷ்மீர், பஞ்சாப் எல்லைகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் சர்வதேச எல்லையையொட்டி கடந்த 26ம் தேதி பாகிஸ்தானில் இருந்து பறந்து வந்த ஆளில்லா விமானம் (டிரோன்) ஒன்றை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.

    இதைத்தொடர்ந்து அங்கு கூடுதல் கண்காணிப்பு போடப்பட்டிருந்தது. அமிர்தசரசின் சஹர்பூர் கிராமத்திற்கு அருகே பாகிஸ்தானில் இருந்து மற்றொரு ஆளில்லா விமானம் (டிரோன்) பறந்து வந்துள்ளது.

    அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் டிரோன் சத்தத்தை கேட்டதும் உஷாராகினர். உடனே அவர்கள் டிரோன் மீது துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர்.

    சம்பவ இடத்திற்கு உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்ட இடத்தில் வெள்ளை நிற பாலீத்தின் பொருட்கள் கிடந்தது. அவற்றை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×