என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கமல்"

    • தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் இன்று தனது 68-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
    • இவருக்கு திரைத்துறையினர் ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசனுக்கு இன்று 68-வது பிறந்த நாள் ஆகும். இதையொட்டி இன்று மக்கள் நீதிமய்யம் கட்சியினர் தமிழகம் முழுவதும் நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

     

    கமல் - மு.க. ஸ்டாலின்

    கமல் - மு.க. ஸ்டாலின்

    இந்நிலையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சமூக வலைத்தளத்தில் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது, தீராக் கலை தாகத்துடன் தன்னை இன்னும் இன்னும் பண்படுத்தி மிளிரும் சீரிளம் கலைஞானியும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரு மான அன்புத்தோழர் கமல் ஹாசனுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலைத்தாய் பெற்றெடுத்த வருங்கலைஞனே வாழிய நின் கலைத்திறம் என்று பதிவிட்டுள்ளார்.

    • உடல்நலக் குறைவு காரணமாக நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
    • தற்போது கமல் நலமாக உள்ளதாக மருத்துவ நிர்வாகம் தகவல்.

    நடிகர் கமல்ஹாசன் இந்தியன்-2 படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதற்கிடையில் தனியார் டி.வி. தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் பங்கு பெற்று வருகிறார். இதுமட்டுமல்லாமல், கட்சி பணியிலும் தொடர்ந்து ஈடுபடுகிறார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஐதராபாத் சென்ற நடிகர் கமல்ஹாசன், அங்கு இயக்குனர் விஸ்வநாத்தை சந்தித்தார். மேலும் அங்கு சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, நேற்று மதியம் சென்னை திரும்பினார்.

     

    கமல்

    கமல்

    நேற்று இரவு அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இந்நிலையில் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வரும் கமல் நலமாக உள்ளார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. 

    • உடல்நலக் குறைவு காரணமாக நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
    • கமல் மருத்துவமனையில் இருந்து ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்று அறிக்கை வெளியிடப்படுள்ளது.

    நடிகர் கமல்ஹாசன் இந்தியன்-2 படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதற்கிடையில் தனியார் டி.வி. தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் பங்கு பெற்று வருகிறார். இதுமட்டுமல்லாமல், கட்சி பணியிலும் தொடர்ந்து ஈடுபடுகிறார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஐதராபாத் சென்ற நடிகர் கமல்ஹாசன், அங்கு இயக்குனர் விஸ்வநாத்தை சந்தித்தார். மேலும் அங்கு சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, நேற்று மதியம் சென்னை திரும்பினார்.

    நேற்று இரவு அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    கமல்

    கமல்

     

    இந்நிலையில் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வரும் கமல்ஹாசன் நலமாக உள்ளதாகவும், ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளது. அதில், "23.11.2022 அன்று லேசான காய்ச்சல், இருமல் மற்றும் சளியுடன் கமல் அனுமதிக்கப்பட்டார். அவர் நன்றாக குணமடைந்து ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவார்" என்று குறிப்பிட்டுள்ளது.

    • தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும் கமலை வரவேற்றுள்ளார்.
    • கமல் காங்கிரஸ் கூட்டணியை விரும்புவதாக கூறப்படுகிறது.

    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வருகிற பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி சேருவதில் உறுதியாகிவிட்ட நிலையில் எந்த கூட்டணியில் இடம் பெறுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் வருகிற 24-ந்தேதி டெல்லியில் ராகுல் நடத்தும் பாதயாத்திரையில் கமல் 50-க்கும் மேற்பட்ட தொண்டர்களுடன் கலந்து கொள்கிறார். கமலின் இந்த திடீர் மனமாற்றம் காங்கிரசார் மத்தியில் மனமகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும் கமலை வரவேற்றுள்ளார். கமலின் இந்த திடீர் முடிவுக்கு காரணம், பாராளுமன்ற தேர்தல் என்பதால் கூட்டணி தேசிய கட்சிகளுடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்.

    அதுவும் காங்கிரஸ் இருக்கும் அணி பலமான அணியாகவும், பா.ஜனதாவுக்கு மாற்றாகவும் இருக்கும் என்று நம்புகிறார். எனவே தான் காங்கிரசுடன் கைகோர்க்க விரும்புவதாக கூறப்படுகிறது.

    கொள்கை ரீதியாக பா.ஜனதாவுடன் உடன்பாடு வைத்துக்கொள்ள இயலாது என்பதால் காங்கிரசுடன் பயணிக்க முடிவுசெய்து விட்டார். கமலின் வருகை காங்கிரசுக்கு பலம் கொடுக்கும் என்று காங்கிரசும் எதிர்பார்க்கிறது.

    ஒருவேளை ஹேஸ்யமாக சொல்லப்படுவது உறுதியாகிவிட்டால் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கவும் மக்கள் நீதி மய்யம் தயாராகி விட்டது. இது ஒருவகையில் காங்கிரசுக்கும் வாய்ப்புதான். ஏனெனில் தி.மு.க. கூட்டணி மெகா கூட்டணியாக உருவாகும் பட்சத்தில் தேவையான எண்ணிக்கையில் தி.மு.க.விடம் இருந்து சீட் பெறுவது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும்.

    அதை தவிர்க்கவே கமல் காங்கிரஸ் கூட்டணியை விரும்புவதாக கூறப்படுகிறது.

    இதுபற்றி காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளிடம் கேட்ட போது, 'ஜனநாயகத்தை விரும்புபவர் கமல். மதத்தின் பெயரால் மக்களை பிரிப்பதை ஏற்றுக்கொள்ளமாட்டார். எனவே தான் காங்கிரசுடன் கூட்டணி அமைக்க அவர் விரும்புகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கமல் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.
    • ராஜமவுலி இயக்கத்தில் கமல் நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக இணையதளங்களில் தகவல் பரவி உள்ளது.

    'மகதீரா, நான் ஈ, பாகுபலி, ஆர்.ஆர்.ஆர்.' போன்ற பிரமாண்ட படங்கள் எடுத்து இந்தியா முழுவதும் புகழ்பெற்ற இயக்குனராக இருப்பவர் ராஜமவுலி. இவரது இயக்கத்தில் நடிக்க முன்னணி நடிகர்-நடிகைகள் ஆர்வம் காட்டுகின்றனர். 'பாகுபலி'யில் நடித்த பிறகே பிரபாசின் திரையுலக மார்க்கெட் உயர்ந்தது. 'ஆர்.ஆர்.ஆர்.' படம் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் ஆகியோரை சர்வதேச அளவில் கவனம் பெற வைத்துள்ளது. தற்போது மகேஷ்பாபுவை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். இது சூப்பர் மேன் கதை சாயலில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

     


    இந்நிலையில் ராஜமவுலி இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக இணையதளங்களில் தகவல் பரவி உள்ளது. சமீபத்தில் கமல்ஹாசனும், ராஜமவுலியும் சந்தித்தனர். அப்போது இருவரும் இணைந்து பணியாற்றுவது குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் இருவர் தரப்பிலும் இதனை உறுதிப்படுத்தவில்லை. தற்போது கமல்ஹாசன் 'இந்தியன்-2' படத்தில் நடித்து வருகிறார். மணிரத்னம், பா.இரஞ்சித் இயக்கும் படங்களிலும் கமல் நடிக்க உள்ளார். மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கும் படமும் கமலின் கைவசம் உள்ளது.

    • இயக்குனர் லிங்குசாமி தயாரிப்பில் கமல்ஹாசன் நடித்த உத்தமவில்லன் படம் 2015-ல் வெளியாகி வருமான ரீதியாக சரிவை சந்தித்தது.
    • இப்படத்தின் சரிவை சந்திப்பதற்காக தற்போது கமல் நடித்து உதவுள்ளதாக லிங்குசாமி தெரிவித்துள்ளார்.

    இயக்குனர் லிங்குசாமி தயாரிப்பில் கமல்ஹாசன் நடித்த உத்தமவில்லன் படம் 2015-ல் வெளியாகி வருமான ரீதியாக சரிவை சந்தித்தது. இப்படத்தின் நஷ்டத்தை ஈடுகட்ட மீண்டும் லிங்குசாமி தயாரிக்கும் படத்தில் கமல்ஹாசன் நடித்து உதவ இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

     

    உத்தமவில்லன்

    உத்தமவில்லன்

    இதுகுறித்து லிங்குசாமி கூறும்போது, ''உத்தமவில்லன் படத்தை திறமையாக, கடின உழைப்போடுதான் எடுத்தார்கள். ஆனால், அப்படத்தினால் மிகப்பெரிய பொருளாதார பின்னடைவை சந்தித்தது உண்மைதான். முதலில் நாங்கள் 'பாபநாசம்' படத்தை தயாரிக்கத்தான் முடிவு எடுத்தோம். ஆனால், கமல்ஹாசன் ஆசைப்பட்டதால் 'உத்தமவில்லன்' படத்தை எடுத்தோம். அது அவருக்கும் தெரியும். உத்தமவில்லன் படத்தின் நஷ்டத்தை ஈடுசெய்ய கமல்ஹாசன் ஒரு படத்தில் நடித்து தருகிறேன் என்று கூறியிருக்கிறார்.

     

    கமல்

    கமல்

    நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜெகன் விஜயா இயக்கியுள்ள 'பிகினிங்' படத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். 'பிகினிங்' படம் புதிய அனுபவத்தை கொடுக்கும். இனிமேல் திரைப்பட பணிகளில் தொடர்ந்து ஈடுபடுவோம். புதிய திரைக்கதை தயார் செய்துள்ளேன். இரண்டு மூன்று மாதங்களில் அந்த படத்தை இயக்குவேன்'' என்றார்.




    • இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமல் நடித்த திரைப்படம் ‘ஆளவந்தான்’.
    • இப்படம் விரைவில் ரீ - ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    கடந்த 2001-ஆம் ஆண்டு இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து வெளியான திரைப்படம் 'ஆளவந்தான்'. தயாரிப்பாளர் தாணுவின் 'வி கிரியேஷன்ஸ்' தயாரித்திருந்த இப்படத்தில் ரவீனா டாண்டன், மனிஷா கொய்ராலா, சரத்பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.


    ஆளவந்தான் போஸ்டர்

    இப்படம் தமிழ் மற்றும் இந்தியில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில், 22 வருடத்திற்கு பிறகு 'ஆளவந்தான்' திரைப்படம் டிஜிட்டல் வெர்ஷனில் ரீ- ரிலீஸுக்கு தயாராகியுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் 1000 திரையரங்குகளில் இப்படம் வெளியிடப்படவுள்ளது. இந்த படத்தின் ரீ-ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என தயாரிப்பாளர் தாணு தனது சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார்.

    சமீபத்தில் நடிகர் ரஜினியின் 'பாபா' திரைப்படம் மறு வெளியீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


    • நடிகர் சிம்பு தற்போது ஒபிலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்திற்கு பிறகு சிம்பு நடிக்கும் அடுத்த படத்தின் இயக்குனர் குறித்த பேச்சு எழுந்துள்ளது.

    கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது சிம்பு சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் சிம்புவுடன் இணைந்து கவுதம் மேனன், கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

     


    இந்நிலையில் சிம்பு நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என்ற கேள்வி இணையத்தில் எழுந்துள்ளது. அதன்படி இப்படத்தை துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ளதாகவும் அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தை கமல் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்குமுன்பு தேசிங்கு பெரியசாமி ரஜினியை வைத்து படம் இயக்கப்போவதாக வலைத்தளங்களில் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு கல்பாக்கம் அருகில் சதுரங்கப்பட்டிணத்தில் நடந்து வருகிறது.

    கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு கல்பாக்கம் அருகில் சதுரங்கப்பட்டிணத்தில் நடந்து வருகிறது. இங்குள்ள பழமையான டச்சுக் கோட்டையில் சண்டைக்காட்சிகளை படக்குழு எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த 5 நாட்களாக நடந்து வரும் படப்பிடிப்பை வேடிக்கைப் பார்க்க கிராமத்து மக்கள் வந்து செல்கிறார்கள்.

     

    இந்தியன் 2

    இந்தியன் 2

    இந்நிலையில் நேற்று நடந்த படப்பிடிப்பில் அருகில் இருந்த ஊரில் கோவிலுக்கு நிதி கேட்டு சிலர் வந்ததாகவும் இது தொடர்பான பேச்சு வார்த்தையில் வாக்குவாதம் ஏற்பட்டு படப்பிடிப்பை கிராமத்து மக்கள் முற்றுகையிட்டனர். பின்னர் காவல் துறையினர் விரைந்து வந்து ஊர் மக்களுடன் பேசி சமாதானம் செய்து வைத்தனர். இதன் பிறகு படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியிருக்கிறது. இந்த சண்டைகாட்சிக்காக கமல்ஹாசன் சிறப்பு பயிற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • போடா போடி, நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் விக்னேஷ் சிவன்.
    • தற்போது இவர் இயக்கவுள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

    2012ம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதன்பின்னர் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரவுடி தான் படத்தை இயக்கி தனக்கான ரசிகர்களை பிடித்தார். இதனை தொடர்ந்து தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.

     

    பிரதீப் ரங்கநாதன் - விக்னேஷ் சிவன் 

    பிரதீப் ரங்கநாதன் - விக்னேஷ் சிவன் 

    இந்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி லவ் டுடே படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த இயக்குனர் மற்றும் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை நடிகர் கமல்ஹாசன் தயாரிக்கவுள்ளதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    அஜித் நடிக்கும் ஏகே 62 படத்தை இயக்க விக்னேஷ் சிவன் ஒப்பந்தமாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • 'பொன்னியின் செல்வன் -2' படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியிட்டு விழா வருகிற 29ம் தேதி நடைபெறவுள்ளது.
    • இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கமல் கலந்து கொள்ளவுள்ளார்.

    மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்-2 திரைப்படம் வருகிற ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் முதல் பாகம் ரசிகர்களை கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்றதால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

     

    பொன்னியின் செல்வன்-2

    பொன்னியின் செல்வன்-2


    பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா வருகிற 29ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளவுள்ள பிரபலங்கள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில் இதில் கலந்துக் கொள்ளும் விருந்தினர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.


    சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் கமல்
    சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் கமல்

    அதன்படி இந்நிகழ்ச்சியில் நடிகர் கமல் கலந்து கொள்ளவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி, கமல் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

    • 'பொன்னியின் செல்வன் -2' படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியிட்டு விழா இன்று நடைபெறவுள்ளது.
    • இதில் நடிகர் சிம்பு கலந்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்-2 திரைப்படம் வருகிற ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் முதல் பாகம் ரசிகர்களை கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்றதால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

     

    கமல்

    கமல்


    பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று (29.03.2023) நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளவுள்ள பிரபலங்கள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இதில் நடிகர் கமல் கலந்து கொள்ளவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிம்பு கலந்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    ×