search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்நாடகா"

    • கர்ப்பிணி பசு வதை நடந்ததையொட்டி எழுந்த சர்ச்சைக்கு அமைச்சர் பதிலளித்துள்ளார்.
    • அது நாம் பாசத்துடனும் அன்புடனும் பார்க்கும் ஒரு விலங்கு.

    பசு கடத்தலில் ஈடுபடுபவர்களை பார்த்த இடத்திலேயே சுட்டுத் தள்ள போலீஸுக்கு உத்தரவிட உள்ளதாக கர்நாடக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    உத்தர கன்னடா மாவட்டத்தில் கால்நடை கடத்தல் மற்றும் பசு வதை அதிகரித்து வருவதைத் தடுக்க, கால்நடை கடத்தல்காரர்களுக்கு எதிராக கண்டதும் சுடும் உத்தரவை பிறப்பிக்க அரசாங்கம் தயாராக உள்ளது என மீன்வளத்  துறை அமைச்சர் மங்கலா சுப்ப வைத்யா தெரிவித்துள்ளார்.

    சமீபத்தில் ஹொன்னாவர் அருகே கர்ப்பிணி பசு வதை நடந்ததையொட்டி எழுந்த சர்ச்சைக்கு அமைச்சர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

    உத்தர கன்னடா மாவட்டத்துக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சர் வைத்யா நேற்று செய்தியாளர் சந்திப்பின் போது பேசியதாவது, பணம் சம்பாதிக்க பல வழிகள் உள்ளன. பசு கடத்தல் நிறுத்தப்பட வேண்டும்.

    சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் கால்நடை கடத்தல்காரர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை செயல்படுத்த நிர்வாகம் காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது. பசுக்களைப் பாதுகாக்க தேவைப்பட்டால் துப்பாக்கியை பயன்படுத்த காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது.

    நாம் தினமும் பசுவின் பால் குடிக்கிறோம். அது நாம் பாசத்துடனும் அன்புடனும் பார்க்கும் ஒரு விலங்கு. பசு கடத்தல் மற்றும் வதை தொடர்ந்தால் அத்தகைய செயல்களில் ஈடுபடுவோரை பார்த்த இடத்தில் சுட்டுக் தள்ள உத்தரவிடுவேன் என்று தெரிவித்துள்ளார்.

    • கோலார் மாவட்டம் தியாகர் ரெயில் நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
    • விபத்து ஏற்படுத்திய ராகேஷ் என்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

    கர்நாடக மாநிலம் கோலாரில் ஓட்டுநர் ஒருவர் மதுபோதையில் காரை ரெயில் தண்டவாளத்தில் பார்க் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கோலார் மாவட்டம் தியாகர் ரெயில் நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மதுபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய ராகேஷ் என்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

    இதனிடையே கிரேன் மூலம் காரை வெளியே எடுத்து ரெயில் போக்குவரத்தை அதிகாரிகள் சரி செய்தனர்.

    காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜமீர் அஹமது கான், தலித் தலைவருக்கு இனிப்பை ஊட்டிவிட்டு, அவர் வாயில் இருந்து இனிப்பை எடுத்து உண்பது போன்ற வீடியோ சமுக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
    பெங்களூர்:

    கர்நாடகாவின் பெங்களூர், சாம்ராஜ்பேட்டை சட்டமன்ற உறுப்பினராக ஜமீர் அஹமது கான் உள்ளார். இவர் அம்பேத்கர்  ஜெயந்தி மற்றும் ஈத் மிலன் நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்டார். 

    அப்போது, ஜமீர் அஹமது கான், தலித் அமைப்பின் தலைவர் ஒருவருக்கு இனிப்பை ஊட்டி விட்டார். பதிலுக்கு தலித் தலைவர் இனிப்பை ஊட்டி விட முற்பட்ட போது, அவரது வாயில் உள்ள இனிப்பை எடுத்து ஊட்டி விட சொல்லி ஜமீர் அஹமது கான் சாப்பிட்டார். 

    இந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகியுள்ளது.

    சகோதரத்துவத்தை மேம்படுத்துவதற்காக இவ்வாறு செய்ததாக கூறிய அவர், சிலர் பயங்கரவாதத்தை வைத்து சமுதாயத்தினருக்கு இடையே பிளவுகளை ஏற்படுத்த முயற்சிப்பதாக கூறினார்.


    வாலிபர் ஒருவர் கர்நாடகாவில் உள்ள ஸ்ரீநிவாச சாகர் அணையில் ஏற முயன்ற போது தடுமாறி கீழே விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    பெங்களூர்:

    கர்நாடகா மாநிலம், சிக்கபல்லாபூரில் ஸ்ரீநிவாச சாகர் அணை உள்ளது. இந்த அணையானது 50 அடி உயரம் கொண்டது. 

    கோடைகாலம்  என்பதால் ஸ்ரீநிவாச சாகர் அணையில் குளிப்பதற்காக மக்களின் அதிகமாக குவிந்து வருகின்றனர்.

    இந்நிலையில், 20 வயதான வாலிபர் ஒருவர் அணையின் சுவர் மீது ஏறி சாகசத்தில் ஈடுபட முயன்றுள்ளார். இதனை அங்குள்ள பலரும் வீடியோ எடுத்துள்ளனர். 

    அணையில் 25 அடி உயரம் வரை ஏறிய வாலிபர் அதற்கு மேல் ஏற முயன்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் வலைபருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    காயமடைந்த வாலிபர் பெங்களூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், மாவட்ட நிர்வாகத்தின் எச்சரிக்கையும் மீறி  அணையின் சுவரில் ஏற முயன்றதால் வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


    ×