என் மலர்
நீங்கள் தேடியது "tag 97567"
மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய பொலிரோ சிட்டி பிக் அப் டிரக் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
மஹிந்திரா நிறுவனத்தின் புதிய பொலிரோ பிக் அப் டிரக் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய பொலிரோ சிட்டி பிக் அப் டிரக் விலை ரூ. 7 லட்சத்து 97 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பொலிரோ சிட்டி பிக்அப் மாடலில் 1500 கிலோ எடையை சுமந்து செல்லும் திறன் கொண்டுள்ளது.

இதன் முந்தைய மாடலை விட புதிய பொரிலோ சிட்டி பிக்அப் டிரக் மாடலில் சிறிய பொனெட் வழங்கப்பட்டு இருக்கிறது. இதனால் பிக்அப் டிரக்-ஐ குறுகிய பகுதிகளிலும் சிறப்பாக கொண்டு செல்ல முடியும். புதிய பொலிரோ சிட்டி மாடலில் 2.5 லிட்டர் m2Di டீசல் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 65 பி.ஹெச்.பி. பவர், 195 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த பிக்அப் டிரக் லிட்டருக்கு 17.2 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது.
மஹிந்திரா பொலிரோ சிட்டி பிக்அப் டிரக் மாடலின் ஓட்டுனர் இருக்கை அருகில் அகலமான இருக்கை வழங்கப்பட்டு உள்ளது. இந்த மாடலுக்கு மூன்று ஆண்டுகள் அல்லது ஒரு கிலோமீட்டர் வரையிலான வாரண்டி கொண்டிருக்கிறது.
மஹிந்திரா நிறுவனத்தின் eXUV300 எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடல் வெளியீடு பற்றி அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஏற்கனவே இந்த மாடல் ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது.
மஹிந்திரா நிறுவனம் தனது முழு எலெக்ட்ரிக் மாடலான eXUV300 இந்தியாவில் தற்போதைய நிதியாண்டின் மூன்று அல்லது நான்காவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என அறிவித்து இருக்கிறது. அதன்படி மஹிந்திரா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஆல் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடல் 2023 முதல் காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
முன்னதாக மஹிந்திரா தனது ஆல் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடலை 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் பிரீ-ப்ரோடக்ஷன் வடிவில் காட்சிப்படுத்தி இருந்தது. மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்ட எலெக்ட்ரிக் வாகனங்கள் பட்டியலில் eXUV300 அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அடுத்த ஏழு ஆண்டுகளில் மஹிந்திரா நிறுவனம் 16 புது எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கடந்த ஆண்டு அறிவித்து இருந்தது.

புது வாகனங்களில் எட்டு எலெக்ட்ரிக் எஸ்.யு.வி.க்கள், எட்டு இலகு ரக வர்த்தக வாகனங்கள் இடம்பெற்று இருக்கிறது. இதுதவிர மேலும் மூன்று எலெக்ட்ரிக் எஸ்.யு.வி.க்களை இந்த ஆண்டு அறிமுகம் செய்ய இருப்பதாக மஹிந்திரா சமீபத்திய டீசரில் அறிவித்து இருந்தது. இத்துடன் போக்ஸ்வேகன் நிறுவனத்தின் MEB பிளாட்பார்ம் உபகரணங்களை தனது வாகனங்களில் பயனபடுத்த மஹிந்திரா நிறுவனம் ஒப்பந்தம் போட்டுள்ளது.
முந்தைய கான்செப்ட் மாடல்களின் படி மஹிந்திரா eXUV300 மாடல் அதன் பெட்ரோல், டீசல் வேரியண்ட்களுடன் ஒப்பிடும் போது காஸ்மெடிக் மாற்றங்களை மட்டுமே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
மஹிந்திரா நிறுவனம் புதிய ஸ்கார்பியோ N மாடலை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மாடலுக்கான டீசர்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
மஹிந்திரா நிறுவனம் புதிய ஸ்கார்பியோ N மாடலுக்கான உற்பத்தி பணிகள் ஜூன் மாதத்தில் துவங்கும் என அறிவித்து இருக்கிறது. தற்போது பிரீ-ப்ரோடக்ஷன் யூனிட்கள் ஆலையில் இருந்து வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், இதன் ப்ரோடக்ஷன் ரெடி வெர்ஷன் ஜூன் 27 ஆம் தேதி வெளியிடப்பட இருக்கிறது.

முற்றிலும் புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ N மாடல் அம்சங்கள் மற்றும் விலை விவரங்கள் ஜூன் 20 ஆம் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. புதிய ஸ்கார்பியோ N அறிமுகம் செய்யப்பட்டாலும், பழைய மாடல், ஸ்கார்பியோ கிளாசிக் எனும் பெயரில் விற்பனை செய்யப்படும் என மஹிந்திரா அறிவித்து உள்ளது.
புதிய 2022 மஹிந்திரா ஸ்கார்பியோ N மாடலில் 2.0 லிட்டர் M-ஸ்டேலியன் டர்போ பெட்ரோல் என்ஜின், 2.2 லிட்டர் M-ஹாக் டீசல் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்பட இருக்கிறது. இதன் டாப் எண்ட் மாடல்களில் 4x4 வெர்ஷனும் வழங்கப்படலாம்.
மஹிந்திரா நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு அசத்தலான சலுகை மற்றும் தள்ளுபடி வழங்குகிறது.
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் நவம்பர் மாதத்திற்கான சலுகை விவரங்களை அறிவித்து இருக்கிறது. அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தின் படி மஹிந்திராவின் எஸ்.யு.வி. மாடல்களுக்கு அதிகபட்சம் ரூ. 81,500 வரையிலான சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இவை தள்ளுபடி, எக்சேன்ஜ் பலன்கள், கார்ப்பரேட் தள்ளுபடி மற்றும் கூடுதல் சலுகை வடிவில் வழங்கப்படுகின்றன. இந்த சலுகைகள் நவம்பர் 30 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது. சலுகை பலன்கள் ஒவ்வொரு விற்பனை மையத்திற்கு ஏற்ப வேறுபடும். மஹிந்திரா தார், பொலிரோ நியோ மற்றும் எக்ஸ்.யு.வி.700 மாடல்களுக்கு எந்த பலன்களும் வழங்கப்படவில்லை.

கே.யு.வி.100 என்.எக்ஸ்.டி. மாடலுக்கு ரூ. 61,055, மஹிந்திரா ஸ்கார்பியோவிற்கு ரூ. 32,320, அல்டுராஸ் ஜி4 மாடலுக்கு ரூ. 81,500, எக்ஸ்.யு.வி.300 மாடலுக்கு ரூ. 49 ஆயிரம், மஹிந்திரா மராசோ மாடலுக்கு ரூ. 40,200, பொலிரோ மாடலுக்கு ரூ. 13 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன.
மஹிந்திரா நிறுவனத்தின் புதிய எக்ஸ்.யு.வி.700 மாடல் இந்திய சந்தையில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான மஹிந்திரா தனது புதிய எக்ஸ்.யு.வி.700 மாடல் முன்பதிவில் புது மைல்கல் எட்டியதாக அறிவித்தது. இந்தியாவில் அறிமுகமான ஒரே மாதத்தில் புதிய எக்ஸ்.யு.வி.700 மாடல் முன்பதிவில் 70 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்களை கடந்துள்ளது.
முன்னதாக மஹிந்திரா எக்ஸ்.யு.வி.700 மாடலின் முதல் யூனிட் பாராலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற சுனில் அன்டிலுக்கு வினியோகம் செய்யப்பட்டது. தற்போது மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்.யு.வி.700 பெட்ரோல் வேரியண்ட்களை மட்டும் வினியோகம் செய்து வருகிறது. இம்மாத இறுதியில் டீசல் வேரியண்ட்களின் வினியோகம் துவங்குகிறது.

மஹிந்திரா நிறுவனம் அடுத்த ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதிக்குள் நாடு முழுக்க 14 ஆயிரம் எக்ஸ்.யு.வி.700 யூனிட்களை வினியோகம் செய்ய இலக்கு நிர்ணயித்து இருப்பதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் புதிய மஹிந்திரா எக்ஸ்.யு.வி.700 நான்கு வேரியண்ட்கள், இரண்டு என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
மஹிந்திரா நிறுவனத்தின் புதிய தலைமுறை பொலேரோ கார் ஏர் பேக் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்களுடன் உருவாகி வருகிறது.
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் பிரபலமான எஸ்.யு.வி. மாடல் பொலேரோ. மஹிந்திரா நிறுவனத் தயாரிப்புகளில் அதிகம் விற்பனையாகிய மாடலும் இதுவே. நகர் பகுதிகள் மட்டுமின்றி கிராமப்பகுதிகளிலும், நீண்ட தூர பயணம் மேற்கொள்வோரின் பிரதான தேர்வாக இருந்தது பொலேரோ.
பொலேரோ மாடலில் மஹிந்திரா தற்போது பல்வேறு மேம்பட்ட அம்சங்களை புகுத்தி வருகிறது. குறிப்பாக 2020-ம் ஆண்டு ஏப்ரலில் அமலுக்கு வர உள்ள பாரத் புகை விதி 6-க்கு ஏற்ப இதன் என்ஜினில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது தவிர ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் வசதியும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. இவை தவிர பாதுகாப்பு அம்சமாக டிரைவர் பக்கத்தில் ஏர் பேக் வசதி இணைக்கப்பட்டுள்ளது. மேலும் ரியர் பார்க்கிங் சென்சார் வசதியும் இதில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
டிரைவர் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஏர் பேக் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதால் முந்தைய மாடல் ஸ்டீரிங் வீலை விட இதில் மாறுதல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக டி.யு.வி. 300 மாடலில் உள்ள ஸ்டீரிங் வீல் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. சீட் பெல்ட் மாட்டுவதை உணர்த்தும் கருவி, வேகக் கட்டுப்பாட்டு அமைப்பு உள்ளிட்டவையும் இதில் கூடுதலாக இடம்பெற்றுள்ள தனி அம்சங்களாகும்.

பின்புற பயணிகளும் சீட் பெல்ட் அணிவதை வலியுறுத்தும் வகையில் பின் இருக்கை பயணிகளுக்கான சீட் பெல்ட் ரிமைண்டர் வசதியும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு மிகப் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்படாதது போலிருந்தாலும் விபத்து சோதனையில் பக்கவாட்டு சோதனை அவசியம் என விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இதனால் இதன் வடிவமைப்பு மேலும் உறுதியாக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், சிறப்பான ஆடியோ சிஸ்டம், மஹிந்திரா நிறுவனத்தின் 1.5 லிட்டர் எம்.ஹாக். டி.70 டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 70 பி.ஹெச்.பி. திறன் மற்றும் 195 என்.எம். டார்க் செயல்திறனை வெளிப்படுத்தக் கூடியது. சமீபகாலமாக பல்வேறு மாடல் எஸ்.யு.வி.க்கள் வந்துள்ளதால், சந்தையில் பொலேரோ விற்பனை சற்று பின்னடைவை சந்தித்துள்ளது. புதிய மாற்றங்களுடன் வரும் இந்த எஸ்.யு.வி. மீண்டும் தனது முன்னிலையைத் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் மேம்பட்ட டி.யு.வி.300 கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் தனது டி.யு.வி.300 மாடல் காரின் மேம்படுத்தப்பட்ட மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ.8.38 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேம்பட்ட டி.யு.வி.300 காரில் புதிய கிரில் முன்பக்க அமைப்பு, ஸ்மோக்டு முகப்பு விளக்கு, பகலில் ஒளிரும் விளக்கு (டி.ஆர்.எல்.), ஸ்கிட் பிளேட், துல்லியமாக தெரியும் பின்புற விளக்கு, எக்ஸ் வடிவிலான பின்புற ஸ்பேர் சக்கர கவர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

இதில் ஏ.பி.எஸ். (ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம்), ரியர் பார்க்கிங் சென்சார், முன்புறத்தில் 2 ஏர் பேக்குகள் ஆகியன இதன் கூடுதல் சிறப்பம்சங்களாக இருக்கின்றன. சீட் பெல்ட் எச்சரிக்கை, வேகக்கட்டுப்பாட்டு எச்சரிக்கை ஆகியன மேம்படுத்தப்பட்ட மாடலின் சிறப்பு அம்சமாகும்.
புதிய காரிலும் 100 ஹெச்.பி. திறன், 1.5 லிட்டர் 3 சிலிண்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 5 கியர்களுடன் மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டிருக்கிறது. இதில் 5 மாடல்கள் உள்ளன. இதில் டாப்-எண்ட் பிரீமியம் மாடலின் விலை ரூ.10.17 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்.யு.வி.300 காரை வாங்க இதுவரை சுமார் 26,000 பேர் முன்பதிவு செய்திருக்கின்றனர். #Mahindra
மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்.யு.வி.300 கார் இந்தியாவில் பிப்ரவரி மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. முன்பதிவு துவங்கிய முதல் மாதத்திலேயே இந்த காரை வாங்க சுமார் 13,000 பேர் முன்பதிவு செய்திருந்தனர். இந்நிலையில், காரை வாங்க இதுவரை சுமார் 26,000 பேர் முன்பதிவு செய்திருப்பதாக மஹிந்திரா அறிவித்துள்ளது.
முன்பதிவு துவங்கிய இரண்டறை மாதங்களில் காரை வாங்க 26,000 பேர் முன்பதிவு செய்திருக்கின்றனர். இதுதவிர காரை முன்பதிவு செய்தவர்களில் 70 சதவிதகிதம் பேர் டாப்-எண்ட் மாடலையே முன்பதிவு செய்திருக்கின்றனர் என மஹிந்திரா தெரிவித்துள்ளது. எஸ்.யு.வி. காரின் ஒட்டுமொத்த விற்பனையில் பெட்ரோல் என்ஜின் மாடல்களே ஆதிக்கம் செலுத்தியிருக்கின்றன.

பிப்ரவரி முதல் மார்ச் 2019 வரையிலான காலக்கட்டத்தில் மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 முன்பதிவு செய்தவர்களில் 40 சதவிகிதம் பேர் பெட்ரோல் என்ஜின் மாடலை தேர்வு செய்துள்ளனர். எக்ஸ்.யு.வி.300 கார் நான்கு வேரியண்ட்களில் இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
அதன்படி 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் என்ஜின், 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது. இதுவரை எக்ஸ்.யு.வி.300 காரில் ஆட்டோமேடிக் வேரியண்ட்கள் வழங்கப்படவில்லை. எனினும், விரைவில் AMT வேரியண்ட் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 விலை ரூ.7.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ.11.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதிநவீன பாதுகாப்பு அம்சங்களுடன் சந்தையில் களமிறங்கியிருக்கும் மஹி்ந்திரா தார் ஸ்பெஷல் எடிஷன் கார் விவரங்களை பார்ப்போம். #Mahindra
சாகச பயண வாகனமான தார், இந்தியாவில் ஏ.பி.எஸ். (ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம்) வசதியோடு ஸ்பெஷல் எடிஷன் காராக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் இந்த ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அனைத்து வாகனங்களும் விபத்து சோதனை (கிராஷ் டெஸ்ட்) சான்று பெற்றிருக்க வேண்டும் என்பதை மத்திய அரசு கட்டாயமாக்கி உள்ளது. முந்தைய தலைமுறை மாடல்கள் அனைத்துமே இத்தகைய சோதனைக்கு உள்படுத்தப்படாதவை.
இதனால் முந்தைய மாடல்கள் உற்பத்தியை முற்றிலுமாக நிறுத்திவிட மஹிந்திரா நிறுவனம் முடிவு செய்துள்ளது. தற்போது அறிமுகமாகும் ஸ்பெஷல் எடிஷனையே தொடர்ந்து உற்பத்தி செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த காரில் கூடுதல் சிறப்பம்சமாக ஏ.பி.எஸ். வசதி சேர்க்கப்பட்டுள்ளது.

ஸ்டாண்டர்டு மாடலைக் காட்டிலும் வெளிப்புறத் தோற்றத்திலும் மாறுதல் கொண்டதாக ஸ்பெஷல் எடிஷன் உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் தேவைப்பட்டால் சி.ஆர்.டி.இ. என்ஜினை தேர்வு செய்யும் வசதியும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஸ்பெஷல் எடிஷனில் அலாய் வீல்கள் கூடுதல் சிறப்பம்சமாக இருக்கின்றன.
இது முந்தைய மாடலை விட அளவில் பெரியதாகவும், அதிக திறன் கொண்டதாகவும், எரிபொருள் சிக்கனமானதாகவும் இருக்கும் என்று தெரிகிறது. அத்துடன் இது பி.எஸ். VI புகை சோதனை விதிகளை பூர்த்தி செய்யும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிமுறை 2020-ம் ஆண்டிலிருந்து அமலுக்கு வருவதாக இருந்தாலும் தனது மாடலில் இந்த வசதியை முன்கூட்டியே வாடிக்கையாளர்களுக்கு அளிக்க மஹிந்திரா திட்டமிட்டு அதை செயல்படுத்தியுள்ளது.
இந்த காரில் 140 பி.ஹெச்.பி. திறன் வழங்கும் 2.0 லிட்டர் என்ஜின் மற்றும் 6 கியர்களைக் கொண்ட மேனுவல் கியர்பாக்ஸ் உள்ளது. இத்துடன் ஏர்பேக், பின்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ஸ்பீடு வார்னிங் உள்ளிட்ட வசதிகளும் வழங்கப்படுகிறது.
இந்திய மக்கள் பயணங்களில் சந்திக்கும் பிரச்சனையை சரி செய்ய ஆனந்த் மஹிந்திராவுக்கு 11 வயது சிறுமி அட்வைஸ் கொடுத்திருக்கிறார். #AnandMahindra
மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா 11 வயது சிறுமிக்கு ட்விட்டரில் தனது பாராட்டுக்களை தெரிவித்திருக்கிறார். ஆனந்த் மஹிந்திரா ட்விட்டர் பதிவில் 11 வயது சிறுமி தனக்கு எழுதியிருந்த கடிதத்தின் புகைப்படத்தையும் இணைத்திருந்தார்.
இந்திய சாலைகளில் பயணிக்கும் போது அனைவரும் எதிர்கொள்ளும் பிரச்சனையை சரி செய்ய மிக எளிய வழிமுறையை மும்பையில் வசிக்கும் 11 வயது சிறுமி ஆனந்த் மஹிந்திராவுக்கு தெரிவித்திருக்கிறார். சாலைகளில் செல்லும் வாகனங்களில் ஹாரன் எழுப்பப்படும் போது பெரும்பாலான நேரங்களில் நம்மில் பலரும் பாதிக்கப்பட்டிருப்போம்.

இதற்கு தீர்வு காண 11 வயதான மஹிகா மிஸ்ரா ஆனந்த் மஹிந்திராவுக்கு கோரிக்கையாக வைத்திருந்தார். சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளில் பலர் தேவையற்ற நிலைகளில் ஹாரன் எழுப்புவதை தடுக்கும் நோக்கில், பத்து நிமிடங்களில் ஐந்து முறை மட்டும் ஹாரன் வேலை செய்யும் படி மாற்றம் கொண்டு வரவேண்டும் என அவர் தெரிவித்திருக்கிறார்.
இத்துடன் ஹாரன் ஒலிக்கும் நேரம் வெறும் மூன்று நொடிகள் மட்டுமே இருக்க வேண்டும் என மிஸ்ரா தெரிவித்திருக்கிறார். இதுபோன்று மாறும் போது ஹாரன் மூலம் ஏற்படும் ஒலி மாசு பெருமளவு குறைக்கப்படும் என அவர் தனது கடிதத்தில் எழுதியிருக்கிறார்.
சிறுமியின் கடித்ததை மின்னஞ்சலில் பார்த்த ஆனந்த் மஹிந்திரா கடிதத்தின் புகைப்படத்துடன், சிறுமியின் செயலை பாராட்டி தனது ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். நாள் முழுக்க உழைத்து திரும்பும் போது, இதுபோன்ற மின்னஞ்சலை பார்க்கும் போது களைப்பு முழுமையாக நீங்கிவிடுகிறது. இந்த உலகம் சிறப்பாகவும், அமைதியாகவும் இருக்க நினைக்கும் இச்சிறுமி போன்ற மக்களுக்காக நான் பணியாற்றுகிறேன் என்று எனக்கு தெரியும் என சிறுமியின் செயல் பற்றி தனது ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார். #AnandMahindra
இந்திய சாலைகளில் பயணிக்கும் போது அனைவரும் எதிர்கொள்ளும் பிரச்சனையை சரி செய்ய மிக எளிய வழிமுறையை மும்பையில் வசிக்கும் 11 வயது சிறுமி ஆனந்த் மஹிந்திராவுக்கு தெரிவித்திருக்கிறார். சாலைகளில் செல்லும் வாகனங்களில் ஹாரன் எழுப்பப்படும் போது பெரும்பாலான நேரங்களில் நம்மில் பலரும் பாதிக்கப்பட்டிருப்போம்.

இதற்கு தீர்வு காண 11 வயதான மஹிகா மிஸ்ரா ஆனந்த் மஹிந்திராவுக்கு கோரிக்கையாக வைத்திருந்தார். சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளில் பலர் தேவையற்ற நிலைகளில் ஹாரன் எழுப்புவதை தடுக்கும் நோக்கில், பத்து நிமிடங்களில் ஐந்து முறை மட்டும் ஹாரன் வேலை செய்யும் படி மாற்றம் கொண்டு வரவேண்டும் என அவர் தெரிவித்திருக்கிறார்.
இத்துடன் ஹாரன் ஒலிக்கும் நேரம் வெறும் மூன்று நொடிகள் மட்டுமே இருக்க வேண்டும் என மிஸ்ரா தெரிவித்திருக்கிறார். இதுபோன்று மாறும் போது ஹாரன் மூலம் ஏற்படும் ஒலி மாசு பெருமளவு குறைக்கப்படும் என அவர் தனது கடிதத்தில் எழுதியிருக்கிறார்.
At the end of a tiring day, when you see something like this in the mail..the weariness vanishes...I know I’m working for people like her, who want a better—and quieter world! 😊 pic.twitter.com/lXsGLcrqlf
— anand mahindra (@anandmahindra) April 3, 2019
சிறுமியின் கடித்ததை மின்னஞ்சலில் பார்த்த ஆனந்த் மஹிந்திரா கடிதத்தின் புகைப்படத்துடன், சிறுமியின் செயலை பாராட்டி தனது ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். நாள் முழுக்க உழைத்து திரும்பும் போது, இதுபோன்ற மின்னஞ்சலை பார்க்கும் போது களைப்பு முழுமையாக நீங்கிவிடுகிறது. இந்த உலகம் சிறப்பாகவும், அமைதியாகவும் இருக்க நினைக்கும் இச்சிறுமி போன்ற மக்களுக்காக நான் பணியாற்றுகிறேன் என்று எனக்கு தெரியும் என சிறுமியின் செயல் பற்றி தனது ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார். #AnandMahindra
மஹிந்திரா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கே.யு.வி. 100 காரின் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Mahindra
இந்தியாவில் பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக மின்சாரத்தில் ஓடும் கார்களை தயாரிக்க கார் கம்பெனிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன. இதை ஏற்று, மஹிந்திரா நிறுவனம் புதிய மின்சார காரை வடிவமைத்துள்ளது.
மஹிந்திரா இ.கே.யு.வி. 100 என அழைக்கப்படும் இந்தக்கார் இந்த ஆண்டு மத்தியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியானது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய எலெக்ட்ரிக் கார் அறிமுகம் மேலும் இரு மாதங்கள் தள்ளிப்போகும் என தெரிகிறது.

எலெக்ட்ரிக் கார் என்பதால் என்ஜினிற்கு மாற்றாக லித்தியம் அயன் பேட்டரி மூலம் இயங்கும் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்தக்காரை ஒருமுறை சார்ஜ் செய்தால் 140 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும் என கூறப்படுகிறது. இந்த பேட்டரியை ஒரு மணி நேரத்தில் 80 சதவீதம் பேட்டரி சார்ஜ் ஆகி விடும் வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
இந்தியாவில் இ.கே.யு.வி. 100 மாடலை தொடர்ந்து மஹிந்திரா நிறுவனம் எஸ்.யூ.வி., எக்ஸ்.யூ.வி. 300 உள்ளிட்ட மாடல்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்.யு.வி.300 கார் ஒரே மாதத்தில் சுமார் 13,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். #MahindraXUV300
மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த எக்ஸ்.யு.வி.300 காரை வாங்க ஒரே மாதத்தில் சுமார் 13,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இந்தியாவில் மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 பிப்ரவரி 14 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இதன் துவக்க விலை ரூ.7.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதிகமானோர் முன்பதிவு செய்திருக்கும் புதிய எக்ஸ்.யு.வி. 300 காரை வாங்க பயனர்கள் மூன்று வாரங்களுக்கு காத்திருக்க வேண்டி இருக்கும் என மஹிந்திரா தெரிவித்துள்ளது. மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 W4, W6, W8 மற்றும் W8 OPT நான்கு வேரியண்ட்களில் இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 காரில் 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 1.5-லிட்டர் டீசல் என்ஜின் யூனிட்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் 1.2 லிட்டர் யூனிட் 110 பி.ஹெச்.பி., 200 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதன் 1.5 லிட்டர் என்ஜின் 115 பி.ஹெச்.பி., 300 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இருவித என்ஜின்களும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது.
புதிய எக்ஸ்.யு.வி.300 காரின் ஆட்டோமேடிக் வெர்ஷனை சோதனை செய்யும் பணிகளில் மஹிந்திரா ஈடுபட்டுள்ளது. இந்த வெர்ஷன் வரும் மாதங்களில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கலாம். இந்தியாவில் விற்பனையாகும் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல்களில் மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 முன்னணி இடம் பிடித்திருக்கிறது.
புதிய மஹிந்திரா காம்பேக்ட் எக்ஸ்.யு.வி. கார் இந்தியாவில் விற்பனையாகும் மொத்தம் எஸ்.யு.வி. கார்களில் 40 சதவிகித பங்கு வகிப்பதாக மஹிந்திரா தெரிவித்திருக்கிறது.