என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 98804"

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தலைமையில் தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கி நேற்று பேரணி நடைபெற்றது.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் பாராளுமன்றத்தில் கடந்த மாதம் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதால் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இதையடுத்து, எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஷபாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

    தனது ஆட்சி கவிழ்ந்ததில் வெளிநாட்டு சதி இருக்கிறது எனக்கூறிய இம்ரான் கான், ஷபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக பொறுப்பேற்றதை ஏற்க மறுத்து வருகிறார். பாகிஸ்தான் தெஹ்ரிக்-ஐ-இன்சாப் கட்சியின் ஆதரவாளர்களை திரட்டி இம்ரான்கான் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    இதற்கிடையே, பாகிஸ்தான் தெஹ்ரிக் - ஐ - இன்சாஃப் கட்சி ஆதரவாளர்களுடன் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கி நேற்று பேரணியாகச் சென்றார். பேரணியை தடுத்து நிறுத்த இஸ்லாமாபாத்தில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டிருந்தனர். 

    தடுப்புகளை மீறி இம்ரான்கான் ஆதரவாளர்கள் தலைநகர் நோக்கி பேரணியாகச் செல்ல முற்பட்டதால் போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இம்ரான்கான் ஆதரவாளர்கள் பலர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தால் பாகிஸ்தானில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவியது.

    இந்நிலையில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சட்டம் ஒழுங்கைக் காக்கும் வகையில் ராணுவ படைகளை நிலைநிறுத்துவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

    இம்ரான்கான் கட்சியினர் சென்ற பேரணி வன்முறையாக மாறியதை அடுத்து, பாகிஸ்தான் அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பாகிஸ்தானில் பெட்ரோல் விலை ரூ.179.86க்கும், டீசல் ரூ.174.15க்கும், மண்ணெண்ணெய் விலை ரூ.155.56க்கும் விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இம்ரான்கான் பிரதமராக இருந்தபோது பாகிஸ்தானுக்கு கடன் வழங்குவதாக கடந்த 2019-ம் ஆண்டு சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எப்.) அறிவித்தது. ஆனால், இந்த ஆண்டு தொடக்கத்தில், இம்ரான்கான் பெட்ரோல், டீசல் விலையை குறைத்தார். அதனால் அவற்றுக்கான மானியமாக அரசுக்கு மாதத்துக்கு 60 கோடி டாலர் செலவானது. இதனால், சர்வதேச நிதியம், கடன் திட்டத்தில் மீதி தொகையான 300 கோடி டாலரை நிறுத்தி வைத்து விட்டது.

    தற்போதைய சூழலில் சர்வதேச நிதியத்தின் நிபந்தனையால் பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா ரூ.30 அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமராக பதவி ஏற்ற பிறகு முதன்முறையாக நாட்டு மக்களுக்கு ஷபாஸ் ஷெரீப் உரையாற்றினார். அப்போது, பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்கள் விலை உயர்த்தப்பட்டது குறித்து பேசியதாவது:

    நாட்டிற்கு மிகப் பெரிய கடனை வைத்ததுடன் சர்வதேச நாணய நிதியத்துடன் பாதகமான உடன்படிக்கையையும் இம்ரான் கான் அரசு மேற்கொண்டது. உண்மைகளை அப்பட்டமாகப் புறந்தள்ளிவிட்டு இம்ரான் கான் அரசு செயல்பட்டது.

    நாட்டின் பொருளாதார நலன் கருதி பெட்ரோலியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டன. கனத்த இதயத்துடன் வேறு வழியின்றியே இந்த உயர்வு அமல்படுத்தப்பட்டது.

    எரிபொருட்கள் மீதான விலை உயர்வால் ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், அதை சரிகட்ட வரும் பட்ஜெட் அறிக்கையில் அவர்களுக்கு மாதம்தோறும் ரூ.2,000 வழங்குவதற்கு ஏற்ப ரூ.7,211 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவித்தார்.
    பாகிஸ்தான் நாட்டில் பெட்ரோல் விலை சமீபத்தில் உயர்த்தப்பட்டது. அதன்படி அங்கு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.145.82 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் தற்போது கூடுதல் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. சமீபத்தில் அங்கு பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது.

    பெட்ரோல் விலை உயர்வு அறிவிப்புக்கு முன் உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் இமரான்கான், இந்தியாவில் பெட்ரோல் விலை பாகிஸ்தான் ரூபாய் மதிப்பின் படி ரூ.250க்கு விற்கப்படுகிறது. வங்காளதேசத்தில் பாகிஸ்தான் ரூபாய் மதிப்பின் படி ரூ.200க்கு விற்கப்படுகிறது என அண்டைநாடுகளுடன் ஒப்பிட்டுக் கூறினார்.

    இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டின் தேசிய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின்சாரத்தின் விலையை திடீரென உயர்த்தியுள்ளது. அதன்படி மின் கட்டணத்தை  யூனிட்டுக்கு 1.68  ரூபாயாக உயர்த்தியுள்ளது. ஒரு யூனிட் மின்சாரத்தின் விலையை அடிப்படை கட்டணத்தின் கீழ் உள்நாட்டு நுகர்வோருக்குரூ.1.68 ஆக உயர்த்தியுள்ளது. புதிய கட்டணங்கள் நவம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.

    இந்த புதிய கட்டண உயர்வால் மாதம் 200 யூனிட் வரை மட்டுமே மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என கூறப்பட்டுள்ளது.

    உள்நாட்டு அரசியல் சூழ்நிலையில் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு பிரதமர் இம்ரான்கானுக்கு அழைப்பிதழ் அனுப்ப முடியாத நிலை உள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி ஷா முகமது குரோஷி தெரிவித்துள்ளார்.
    இஸ்லாமாபாத்:

    பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற நரேந்திர மோடி நாளை (30-ந்தேதி) 2-வது முறை பிரதமராக பதவி ஏற்கிறார்.

    இந்த விழாவில் வங்காள தேசம், மியான்மர், இலங்கை, தாய்லாந்து, நோபளம், பூடான், கிர்கிஸ்தான், மொரீசியஸ் உள்ளிட்ட 14 நாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    ஆனால் அண்டை நாடான பாகிஸ்தானுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி ஷா முகமது குரோஷி இஸ்லாமாபாத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலின்போது பா.ஜனதா கட்சியின் தேர்தல் பிரசாரம் முழுவதும் பாகிஸ்தானை அடிப்படையாக கொண்டே நடைபெற்றது. இத்தகைய உள்நாட்டு அரசியல் சூழ்நிலையில் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு அழைப்பிதழ் அனுப்ப முடியாத நிலை உள்ளது.



    இது எதிர்பாராதது. இத்தகைய பிரச்சனையில் இருந்து இந்தியா விரைவில் விடுபடும். இந்தியாவும் பாகிஸ்தானும் பரஸ்பர நட்புறவுடன் திகழ வேண்டும் என பிரதமர் இம்ரான்கான் விரும்புகிறார். எனவே தான் பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பா.ஜனதா கட்சிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

    இப்பிராந்தியம் வளர்ச்சி பெற காஷ்மீர், சியாசின் மற்றும் சர்கிரீக் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இதன் மூலம் பிரச்சனைகளை தீர்க்க முடியும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வீடு அருகே அரை கிலோ மீட்டர் தூரத்தில் துப்பாக்கி குண்டுகள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. #ImranKhan

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் இஸ்லாமாபாத் புறநகரில் பிரதமர் இம்ரான்கானின் ‘பான்காலா’ என்ற அவரது வீடு உள்ளது. பிரதமராவதற்கு முன்பு அந்த வீட்டில்தான் அவர் தங்கியிருந்தார்.

    அவரது இந்த வீட்டிற்கு அருகே அரை கிலோ மீட்டர் தூரத்தில் 18 துப்பாக்கி குண்டுகள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதை தொடர்ந்து பயங்கரவாத எதிர்ப்பு படை, குற்றப்புலனாய்வு பிரிவு, வெடிகுண்டு செயல் இழப்பு பிரிவு என பல்வேறு பிரிவு போலீசார் வந்து குவிந்தனர்.

    அந்த குண்டுகள் சோதனை செய்யப்பட்டன. அவை விமானங்களை சுட்டு வீழ்த்தி அழிக்க கூடிய துப்பாக்கி குண்டுகள் என தெரிய வந்தது. அவை ஒவ்வொன்றும் 30 மி. மீட்டர் நீளம் கொண்டவை. அவை செயல்படும் நிலையில் இருந்தன. உடனே அவை அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டன.

    இவற்றை சிலர் கடத்தி வந்து இங்கு பதுக்கி இருக்கலாம். பின்னர் அவற்றை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றம் செய்த போது குண்டுகள் சிதறி இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இதற்கு இதுவரை யாரும் பொறுப்பு ஏற்கவில்லை. #ImranKhan

    இந்தியா குண்டுவீச்சில் இருந்து பயங்கரவாதிகளை இம்ரான்கான் அரசு பாதுகாக்கிறது என்று பெனாசிர் மகன் குற்றம் சாட்டியுள்ளார். #ImranKhan

    இஸ்லாமாபாத்:

    புல்வாமா தாக்குதலை தொடர்ந்து சர்வதேச நாடுகளின் நெருக்கடியால் பல பயங்கரவாத அமைப்புகளை பாகிஸ்தான் அரசு தடை செய்துள்ளது.

    இதுகுறித்து மறைந்த பெனாசிர் பூட்டோவின் மகனும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவருமான பிலாவல் பூட்டோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பயங்கரவாதிகளை கைது செய்து இருப்பதாக இம்ரான் கான் அரசு சொல்கிறது. இதை நம்ப நான் தயாராக இல்லை. பயங்கரவாதிகள் கைது செய்யப்படவில்லை. மாறாக இந்திய போர் விமானங்களின் குண்டு வீச்சில் இருந்து பாதுகாக்க அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    மேலும், பயங்கரவாதிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். அது எந்த விதத்தில் முடக்கப்பட்டுள்ளது. மு‌ஷரப்பின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. ஆனால் நடந்தது என்ன? அவர் பணத்துக்காக வெளிநாட்டுக்கு ஓடிவிட்டார்.

    பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பு கொடுப்பது இந்தியாவுடன் நடத்திய பேச்வார்த்தைக்கு துரோகம் இழைப்பதாகும் என்றார்.

    முன்னதாக டுவிட்டரில் பிலாவல் பூட்டோ செய்தி வெளியிட்டார். அதில் இம்ரான் கானுக்கு சரமாரியாக கேள்வி விடுத்தார்.

    தேர்தல் நேரத்தில் ஆதரவு அளித்த பயங்கரவாதிகளுக்கு இம்ரான்கான் அமைச்சரவையில் உள்ள மந்திரிகள் ஆதரவாக செயல்படுகின்றனர். அவர்களை அமைச்சரவையில் இருந்து வெளியேற்ற தயாரா? என சரமாரியாக கேள்வி எழுப்பி இருந்தார். #ImranKhan

    தேசிய தினம் கொண்டாடும் பாகிஸ்தான் மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார். #PakistanNationalDay #PMModi
    இஸ்லாமாபாத்:

    லாகூர் ஒப்பந்தத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் மார்ச் 23-ந்தேதி பாகிஸ்தான் தேசியதினம் கொண்டாடப்படுகிறது.

    அதைதொடர்ந்து பிரதமர் நரேந்திரமோடி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளார். அதில், ‘‘தேசிய தினம் கொண்டாடும் பாகிஸ்தான் மக்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

    துணை கண்டத்தில் பயங்கரவாதம் மற்றும் வன்முறை இன்றி ஜனநாயகம், அமைதி மற்றும் செல்வசெழிப்புடன் மக்கள் இணைந்து வாழும் நேரம் இது’’ என தெரிவித்துள்ளார்.



    அதற்காக பிரதமர் மோடிக்கும் இம்ரான்கான் நன்றி தெரிவித்தார். அதிலும் ‘‘இந்தியாவுடன் பேச்சு தொடங்க இது ஒரு நல்ல தருணமாக கருதுகிறேன். அதன்மூலம் அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்படும். இருநாட்டு மக்களுக்கும் இடையே அமைதி, வளமையுடன் கூடிய புதிய உறவு தேவை’’ என்று தெரிவித்துள்ளார்.

    பாகிஸ்தான் தேசியதினம் இஸ்லாமாபாத்தில் கொண்டாடப்பட்டது. நேற்று டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் விழா கொண்டாடப்பட்டது. அதில் பங்கேற்க காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களுக்கு பாகிஸ்தான் அழைப்பு அனுப்பி இருந்தது.

    அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா தனது பிரதிநிதிகளை அனுப்பவில்லை. அதேபோன்று இன்று இஸ்லாமாபாத்தில் நடந்த விழாவிலும் இந்திய தூதரக அதிகாரிகள் பங்கேற்கவில்லை.  #PakistanNationalDay #PMModi
    இம்ரான்கான் பாகிஸ்தான் ராணுவத்தின் கைப்பாவையாக செயல்படுவதாக அவரது முன்னாள் மனைவி ரெகம்கான் தெரிவித்துள்ளார். #Pakistan #ImranKhan #RehamKhan
    இஸ்லாமாபாத்:

    காஷ்மீர் மாநிலம் புலவாமா மாவட்டத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதையொட்டி இந்தியா மட்டும் இன்றி அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளும் பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்தன. எனினும் பாகிஸ்தான் அரசு இது குறித்து கருத்து தெரிவிக்காமல் மவுனம் காத்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இதுபற்றி பேசிய அந்த நாட்டின் பிரதமர் இம்ரான்கான் புலவாமா தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக கூறும் இந்தியா அதற்கான ஆதாரத்தை வழங்க வேண்டும் என ஆவேசமாக கூறினார். தாக்குதல் நடந்த 5 நாட்களுக்கு பிறகு வாய் திறந்ததற்காக இம்ரான்கான் விமர்சனங்களுக்கு உள்ளாகினார்.

    இந்த நிலையில், இம்ரான்கான் பாகிஸ்தான் ராணுவத்தின் கைப்பாவையாக செயல்படுவதாகவும், புலவாமா தாக்குதல் குறித்து பேச ராணுவத்தின் உத்தரவுக்காக காத்திருந்ததாகவும் அவரது முன்னாள் மனைவி ரெகம்கான் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறுகையில், “அவர் ஒரு நாளும் தனக்கு கற்பித்த பாடங்களில் இருந்து மீறுவதில்லை. ராணுவம் எதற்கு அனுமதி அளித்ததோ அந்த அளவே அவர் பேசி உள்ளார்” என கூறினார்.

    மேலும் அவர், “இந்தியாவிலோ அல்லது உலகின் பிற நாடுகளிலோ இதுபோன்ற பெரிய தாக்குதல்கள் எங்கு நடந்தாலும் பாகிஸ்தான் பிரதமர் அதற்கு உடனடியாக கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து” என்றார்.

    ரெகம்கானை திருமணம் செய்துகொண்டதை 2015-ம் ஆண்டு ஜனவரி 6-ந் தேதி உறுதி செய்த இம்ரான்கான், அதே ஆண்டு அக்டோபர் மாதம் 30-ந் தேதி அவரை விவாகரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    பாகிஸ்தான், பயங்கரவாதத்தின் நரம்பு மண்டலம் என்பதை சர்வதேச சமூகம் நன்கு அறியும் என இம்ரான்கானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. #Pakistan #NerveCentre #ImranKhan #PulwamaAttack
    புதுடெல்லி:

    புலவாமா தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளது என்பது இந்தியாவின் குற்றச்சாட்டு. இதை விமர்சிக்கிற வகையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பேசி உள்ளார்.

    அவருக்கு உடனடியாக இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    புலவாமாவில் நமது பாதுகாப்பு படையினர் மீதான தாக்குதலை பயங்கரவாத செயல் என்பதை பாகிஸ்தான் பிரதமர் ஏற்க மறுப்பதில் ஆச்சரியம் இல்லை.

    இந்த கொடூரமான செயலுக்கு அவர் கண்டனமும் தெரிவிக்கவில்லை. வீரர்களை இழந்து தவிக்கிற குடும்பங்களுக்கு இரங்கலும் தெரிவிக்கவில்லை. பயங்கரவாத தாக்குதலுக்கும், பாகிஸ்தானுக்கும் தொடர்பு கிடையாது என்பது அடிக்கடி திரும்ப திரும்ப சொல்லப்படுகிற ஒன்றுதான்.

    ஜெய்ஷ் இ முகமது இயக்கமும், இந்த கொடூர தாக்குதலுக்கு சதி செய்த பயங்கரவாதியும் ஒப்புக்கொண்டுள்ளதை பாகிஸ்தான் பிரதமர் கண்டுகொள்ளவில்லை. ஜெய்ஷ் இ முகமது இயக்கமும் சரி, மசூத் அசாரும் சரி இவர்கள் பாகிஸ்தானை அடிப்படையாக கொண்டவர்கள் என்பது நன்கு அறியப்பட்ட உண்மை. பாகிஸ்தான் நடவடிக்கை எடுப்பதற்கு இதுவே போதுமான ஆதாரம்.



    இந்தியா ஆதாரம் அளித்தால் விசாரணை நடத்த தயார் என பாகிஸ்தான் பிரதமர் கூறி உள்ளார். இது நொண்டிச்சாக்கு மட்டும்தான். மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதி நடந்த கொடிய தாக்குதலுக்கு பாகிஸ்தானிடம் ஆதாரம் கொடுத்தோம். 10 ஆண்டுகளாகியும் அங்கு நடக்கிற வழக்கு விசாரணையில் முன்னேற்றம் இல்லை. பதன்கோட் விமானப்படை தளம் தாக்குதலிலும், முன்னேற்றம் இல்லை. உறுதியான நடவடிக்கைக்கு அளிக்கப்படுகிற வாக்குறுதிகள், எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்பது கடந்த கால வரலாறு.

    புதிய பாகிஸ்தான், புதிய சிந்தனை என்று பாகிஸ்தான் பிரதமர் கூறுகிறார். ஆனால் ஐ.நா. சபையால் சர்வதேச பயங்கரவாதி என அறிவிக்கப்பட்டுள்ள ஹபீஸ் சயீத் போன்ற பயங்கரவாதிகளுடன் தற்போதைய அரசின் மந்திரிகள் ஒரே மேடையில் ஒன்றாக தோன்றுகிறார்கள்.

    பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார். பயங்கரவாதம் பற்றி பேச தயார் என்று சொல்லி இருக்கிறார். பயங்கரவாதமும், வன்முறையும் இல்லாத சூழலில் முழுமையான இரு தரப்பு பேச்சு வார்த்தைக்கு தயார் என்று இந்தியா மீண்டும் மீண்டும் கூறி இருக்கிறது.

    பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கு மிகப்பெரிய களப்பலி என சொல்லி இருக்கிறது. இதெல்லாம் உண்மைக்கு வெகு தூரமானது. பாகிஸ்தான் பயங்கரவாதத்தின் நரம்பு மண்டலம் என்பதை சர்வதேச சமூகம் நன்கு அறிந்திருக்கிறது.

    பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியாவின் குற்றச்சாட்டு, வரவுள்ள தேர்தலை வைத்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று பாகிஸ்தான் பிரதமர் கூறி இருப்பது வருந்தத்தக்கது. இந்த தவறான குற்றச்சாட்டை இந்தியா நிராகரிக்கிறது.

    இந்தியாவின் ஜனநாயகம் உலகத்துக்கே முன்மாதிரி. அது ஒருபோதும் பாகிஸ்தானுக்கு புரியாது.

    சர்வதேச சமூகத்தை தவறாக வழிநடத்துவதை பாகிஸ்தான் நிறுத்திக்கொள்ள வேண்டும். புலவாமா பயங்கரவாத தாக்குதல் சதிகாரர்கள், பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருக்கிற பிற பயங்கரவாதிகள், பயங்கரவாத இயக்கங்கள் மீது நம்பத்தகுந்த, காணத்தகுந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    எல்லைப்பகுதிகளில் கண்காணிப்பு பணிக்காக ரஷியாவில் இருந்து 600 அதிநவீன பீரங்கி டாங்கிகளை கொள்முதல் செய்ய பாகிஸ்தான் தீர்மானித்துள்ளது. #Pakistanprocuringtanks #Indiaborder #600tanks
    இஸ்லாமாபாத்:

    பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அரசு வரும் 2025-ம் ஆண்டுக்குள் போர் ஆயுதங்களை மேம்படுத்தி எல்லைப்பகுதிகளில் கண்காணிப்பு பணிகளை பலப்படுத்த முடிவு செய்தது.

    இதில் இருகட்டமாக ரஷியாவிடம் இருந்து T-90  உள்ளிட்ட சுமார் 600 பீரங்கி டாங்கி வாகனங்களை வாங்க பாகிஸ்தான் ராணுவம் திட்டமிட்டுள்ளதாக இந்தியாவின் ராணுவ உளவுத்துறை அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். 

    இந்த பீரங்கிகள் 3 முதல் 4 கிலோமீட்டர் தூரமுள்ள இலக்குகள் மீது துல்லியமான தாக்குதல் நடத்தும் திறன் கொண்டவை. இவை ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லையோரப் பகுதிகளில் நிறுத்தப்படலாம் என கருதப்படுகிறது.

    மேலும், இத்தாலியில் இருந்து ‘எஸ்.பி. மைக்’ ரகத்தை சேர்ந்த 245 அதிநவீன துப்பாக்கிகளை பாகிஸ்தான் வாங்கியுள்ளதாகவும் அவற்றில் 120 துப்பாக்கிகள் வந்து சேர்ந்து விட்டதாகவும் தெரியவந்துள்ளது. #Pakistanprocuringtanks #Indiaborder #600tanks 
    சிறுபான்மையினரை நடத்தும் விதம் குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறிய கருத்துக்கு இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கயிப் பதிலடி கொடுத்துள்ளார். #ImransRemarks #MohammadKaif
    புதுடெல்லி:

    சிறுபான்மையின மக்களை எப்படி நடத்துவது என்பதை மோடி அரசுக்கு காட்டுவோம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சமீபத்தில் பேசினார். அவரது பேச்சுக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

    பாகிஸ்தான் போன்ற பயங்கரவாத நாடு சிறுபான்மையின மக்களை எப்படி நடத்துவது என்று இந்தியாவுக்கு இப்போது பாடம் நடத்துகிறது என்று மத்திய மந்திரி கிரிராஜ் சிங் கூறினார். பாகிஸ்தானை டெரரிஸ்தான் (பயங்கரவாத நாடு) என பாஜக செய்தித் தொடர்பாளர் ஒருவர் விமர்சித்தார்.

    அந்த வகையில் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கயிப்பும் இம்ரான் கான் கருத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சிறுபான்மையின மக்களை எப்படி நடத்தவேண்டும்? என வேறெந்த நாட்டிற்கும் உபதேசம் செய்யும் தகுதி படைத்த கடைசி நாடு பாகிஸ்தான்.


    பாகிஸ்தானை தனியாக பிரித்தபோது அங்கு 20 சதவீத சிறுபான்மையின மக்கள் இருந்தனர். இப்போது 2 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளனர். அதேசமயம், இந்தியாவில் சுதந்திரத்திற்குப் பிறகு சிறுபான்மையின மக்கள் தொகை கணிசமாக அதிகரித்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

    அலகாபாத்தைச் சேர்ந்த கயிப் (வயது 38), இந்தியாவுக்காக 125 ஒருநாள் போட்டிகளிலும், 13 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். கடந்த ஜூலை மாதம் அனைத்து வகை போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார். #ImransRemarks #MohammadKaif
    நரேந்திர மோடி அரசு பற்றிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் கருத்துக்கு, மத்திய மந்திரிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். #ImranKhan #PMModi
    புதுடெல்லி:

    இந்தி நடிகர் நஸ்ருதீன்ஷா, இந்தியாவில் இப்போது மதரீதியான வெறுப்பு அதிகரித்துவருகிறது. போலீஸ்காரரின் உயிரைவிட பசுக்களின் உயிருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்று கூறியிருந்தார்.

    இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், “நரேந்திர மோடி அரசு மதரீதியான சிறுபான்மையினரை எப்படி நடத்துகிறது என்பதை இது காட்டுகிறது” என்று கூறியிருந்தார்.

    இம்ரான்கானின் இந்த கருத்துக்கு மத்திய மந்திரிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சிறுபான்மை நலத்துறை மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி கூறியதாவது:-

    1947-ம் ஆண்டு பாகிஸ்தான் உருவானதில் இருந்து அங்குள்ள இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் போன்ற பல சிறுபான்மையினர் 90 சதவீதம் குறைந்துவிட்டனர். பாகிஸ்தானில் சிறுபான்மையினர் 2 அல்லது 3 சதவீதம் தான் உள்ளனர்.

    சிறுபான்மையினர் கொல்லப்படுவது, மதமாற்றத்துக்கு கட்டாயப்படுத்துவது, துன்புறுத்தப்படுவது என பாகிஸ்தான் போலன்றி, இந்தியாவில் அவர்கள் வளர்ந்து, நாட்டின் வளர்ச்சியில் சமமான பங்குதாரர்களாக உள்ளனர். நடிகர்கள் யூசுப்கான் என்கிற அனைவராலும் அறியப்படும் திலீப்குமார், அமீர்கான், சல்மான்கான், ஷாருக்கான் ஆகியோர் பல தலைமுறைகளாக இந்தியர்களால் போற்றப்படுகிறார்கள்.



    இவர்களைப்போல பாகிஸ்தானில் சிறுபான்மை சமுதாயத்தில் இருந்து வந்த ஒரு நடிகரின் பெயரையாவது இம்ரான்கானால் கூறமுடியுமா? சிறுபான்மையினர் மீதான அட்டூழியங்கள் நடைபெறும் நிலம் பாகிஸ்தான். பல தலைமுறைகளாக சிறுபான்மையினரின் ரத்தம் அந்த நிலம் முழுவதும் சிந்தப்பட்டுள்ளது.

    சிறுபான்மையினரின் உரிமைகள் பற்றிய அவர்களின் அறிவுரை, 100 எலிகளை தின்ற பூனை ஆன்மிக யாத்திரை சென்றது போல் உள்ளது. இந்தியாவில் சிறுபான்மையினரின் அரசியல்சாசன, சமூக, ஜனநாயக உரிமைகள் எப்போதும் பாதுகாப்பானதாகவே உள்ளது.

    இவ்வாறு முக்தார் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார்.

    அவர் மேலும், இதுபோன்ற பொதுவான கருத்து தெரிவிக்கும்போது அது பல தீமைகளையும், நமது நாட்டை இலக்காக கொண்டிருக்கும் இந்தியாவுக்கு எதிரானவர்கள் பயன்படுத்துவதற்கும் வாய்ப்பு ஏற்படுகிறது என்பதை நடிகர் நஸ்ருதீன்ஷா கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

    மற்றொரு மத்திய மந்திரி கிரிராஜ் சிங் கூறும்போது, “இப்போது பாகிஸ்தான் போன்ற ஒரு பயங்கரவாத நாடு சிறுபான்மையினரை எப்படி நடத்த வேண்டும் என்று இந்தியாவுக்கு பாடம் நடத்துகிறது. பாகிஸ்தானில் 23 சதவீதமாக இருந்த இந்துக்கள் இப்போது 2 சதவீதமாக குறைந்துள்ளனர். இந்தியாவில் ஒவ்வொருவரும் அவர்கள் விருப்பத்துக்கேற்ப வளர்ந்து வருகிறார்கள்” என்றார்.

    வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் ரவேஷ் குமார் கூறும்போது, “அவர்கள் தங்கள் வேலையை மட்டும் கவனித்தால் நல்லது என நான் கருதுகிறேன். அவர்களது உள்நாட்டு பிரச்சினைகளே இப்போது மிகவும் குழப்பத்தில் உள்ளது” என்றார். #ImranKhan #PMModi
    ×